Normal view

Received before yesterday

இன்னொரு மகாபாரதச் சிறுகதை

குவிகம் இதழில் என் இன்னொரு மகாபாரதச் சிறுகதை – குழலினிது – வெளியாகி இருக்கிறது. சுந்தரராஜன் சாருக்கும் கிருபானந்தன் சாருக்கும் என் நன்றிகள்!

இந்தக் கதையின் கரு பல வருஷங்களுக்கு முன் ஆர்.பி. ராஜநாயஹம் மு.க. முத்து பற்றி எழுதிய ஒரு குறிப்பிலிருந்து கிடைத்தது. முத்து ஒரு முறை கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து பெரிய சண்டை போட்டு கத்திவிட்டுப் போனாராம். முத்து போன பிறகு கலைஞர் “எத்தனை வருஷம் ஆயிற்று முத்துவின் குரலைக் கேட்டு!” என்றாராம். அதைத்தான் என் வழக்கம் போல பாரதத்தில் பொருத்திவிட்டேன்…

எனக்கு மகாபாரதத்தைப் பற்றிய பல குருட்டு சிந்தனைகள் உண்டு. பாண்டவர்களின் குருதித் தந்தை யாராக இருக்கக் கூடும் என்பது அவற்றில் ஒன்று.

ஐராவதி கார்வே தன் யுகாந்தா புத்தகத்தில் விதுரர்தான் யுதிஷ்டிரனின் தந்தை என்பதை ஏறக்குறைய நிறுவிவிட்டார். அதைப் படித்த நாளிலிருந்தே ஆயிரம் யோசனைகள் ஓடுகின்றன.

கர்ணனின் தந்தை சூரியனாக இருப்பதை விட துர்வாசராக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். ஜெயுமோகன் வெண்முரசில் சல்யரை கர்ணனின் அப்பாவாக கற்பனை செய்திருப்பது பல நல்ல சாத்தியக் கூறுகளைத் தருகிறது.

எழுத முயற்சிப்பதற்கு முன்பே – முப்பது முப்பதைந்து வருஷத்திற்கு முன்பு – திருதராஷ்டிரர்தான் பீமனின் தந்தையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். என் கண்ணில் ஜராசந்தன், கம்சனும் சாத்தியக்கூறுகள். ஆனால் ஜெயமோகன் என்னை முந்திக் கொண்டார், அந்தக் கருவை வைத்து (என்னை விட அழகாக) ஒரு கதையை நாடகமாக – பதுமை – எழுதி இருக்கிறார். தோசையை கனமாகப் போட்டால் ஊத்தப்பம் என்ற கணக்கில்தான் இந்தக் கதையை எழுதினேன்.

அர்ஜுனனுக்கு? கிருபராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கிருபர் தன் ரத்தத்தில் பிறந்த தன் பேரக் குழந்தைகளை (அர்ஜுனனின் மகனான சுருதகீர்த்தி உள்ளிட்ட உபபாண்டவர்கள், அபிமன்யு) கொல்லத் துணிந்திருப்பாரா என்ற ஐயத்தினால் அதை என்னால் ஒரு கதையாக உருவாக்க முடியவில்லை. கிருபரின் அப்பாவான சரத்வான்? கிருபருக்கே அப்பா என்றால் முதியவராயிற்றே? பரசுராமரை தந்தையாக்கினால் அவர் ஏன் கர்ணனை சபித்தார் என்பதற்கு ஒரு காரணம் கண்டுபிடிக்கலாம், ஆனால் அது பரசுராமரின் பிரம்மச்சாரி பிம்பத்தை உடைக்கிறது. பரசுராமர் என்பவர் ஒருவரல்ல, ஒரு குருகுலத்தின் தொடரும் தலைவர் என்று வைத்துக் கொண்டால் சரியாக வரும்தான். இருந்தாலும் இந்திரனோடு எப்படியாவது தொடர்புபடுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

நகுல சகதேவருக்கு சகுனிதான் தந்தை என்று ஒரு கதை எழுதிவிட்டேன்.

உங்களுக்கு ஏதாவது இந்த மாதிரி எண்ணங்கள் இருந்தால் எழுதுங்களேன்!


குவிகம் இதழில் என் இன்னொரு மகாபாரதச் சிறுகதையை போன அக்டோபர் மாதத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். நடுவர் திரு. ராமமூர்த்திக்கு நன்றி! அவர் வார்த்தைகளில்:

10) இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன்

மகாபாரதத்துக் கதை – ஒரு புதிய பார்வை. கர்ணனின் சிதைக்கருகில் ஒரு காட்சி. புதிய கற்பனை. புதிய தர்க்கங்கள். துரியோதனன் குந்தியிடம் பேசும் கற்பனை வசனம் சிந்தனையைத் தூண்டுகிறது. தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?”

சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுத்தது :

இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன் – சொல்வனம்

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், மகாபாரதப் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

 

இன்னொரு மகாபாரதச் சிறுகதை

குவிகம் இதழில் என் இன்னொரு மகாபாரதச் சிறுகதை – குழலினிது – வெளியாகி இருக்கிறது. சுந்தரராஜன் சாருக்கும் கிருபானந்தன் சாருக்கும் என் நன்றிகள்!

இந்தக் கதையின் கரு பல வருஷங்களுக்கு முன் ஆர்.பி. ராஜநாயஹம் மு.க. முத்து பற்றி எழுதிய ஒரு குறிப்பிலிருந்து கிடைத்தது. முத்து ஒரு முறை கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து பெரிய சண்டை போட்டு கத்திவிட்டுப் போனாராம். முத்து போன பிறகு கலைஞர் “எத்தனை வருஷம் ஆயிற்று முத்துவின் குரலைக் கேட்டு!” என்றாராம். அதைத்தான் என் வழக்கம் போல பாரதத்தில் பொருத்திவிட்டேன்…

எனக்கு மகாபாரதத்தைப் பற்றிய பல குருட்டு சிந்தனைகள் உண்டு. பாண்டவர்களின் குருதித் தந்தை யாராக இருக்கக் கூடும் என்பது அவற்றில் ஒன்று.

ஐராவதி கார்வே தன் யுகாந்தா புத்தகத்தில் விதுரர்தான் யுதிஷ்டிரனின் தந்தை என்பதை ஏறக்குறைய நிறுவிவிட்டார். அதைப் படித்த நாளிலிருந்தே ஆயிரம் யோசனைகள் ஓடுகின்றன.

கர்ணனின் தந்தை சூரியனாக இருப்பதை விட துர்வாசராக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். ஜெயுமோகன் வெண்முரசில் சல்யரை கர்ணனின் அப்பாவாக கற்பனை செய்திருப்பது பல நல்ல சாத்தியக் கூறுகளைத் தருகிறது.

எழுத முயற்சிப்பதற்கு முன்பே – முப்பது முப்பதைந்து வருஷத்திற்கு முன்பு – திருதராஷ்டிரர்தான் பீமனின் தந்தையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். என் கண்ணில் ஜராசந்தன், கம்சனும் சாத்தியக்கூறுகள். ஆனால் ஜெயமோகன் என்னை முந்திக் கொண்டார், அந்தக் கருவை வைத்து (என்னை விட அழகாக) ஒரு கதையை நாடகமாக – பதுமை – எழுதி இருக்கிறார். தோசையை கனமாகப் போட்டால் ஊத்தப்பம் என்ற கணக்கில்தான் இந்தக் கதையை எழுதினேன்.

அர்ஜுனனுக்கு? கிருபராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கிருபர் தன் ரத்தத்தில் பிறந்த தன் பேரக் குழந்தைகளை (அர்ஜுனனின் மகனான சுருதகீர்த்தி உள்ளிட்ட உபபாண்டவர்கள், அபிமன்யு) கொல்லத் துணிந்திருப்பாரா என்ற ஐயத்தினால் அதை என்னால் ஒரு கதையாக உருவாக்க முடியவில்லை. கிருபரின் அப்பாவான சரத்வான்? கிருபருக்கே அப்பா என்றால் முதியவராயிற்றே? பரசுராமரை தந்தையாக்கினால் அவர் ஏன் கர்ணனை சபித்தார் என்பதற்கு ஒரு காரணம் கண்டுபிடிக்கலாம், ஆனால் அது பரசுராமரின் பிரம்மச்சாரி பிம்பத்தை உடைக்கிறது. பரசுராமர் என்பவர் ஒருவரல்ல, ஒரு குருகுலத்தின் தொடரும் தலைவர் என்று வைத்துக் கொண்டால் சரியாக வரும்தான். இருந்தாலும் இந்திரனோடு எப்படியாவது தொடர்புபடுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

நகுல சகதேவருக்கு சகுனிதான் தந்தை என்று ஒரு கதை எழுதிவிட்டேன்.

உங்களுக்கு ஏதாவது இந்த மாதிரி எண்ணங்கள் இருந்தால் எழுதுங்களேன்!


குவிகம் இதழில் என் இன்னொரு மகாபாரதச் சிறுகதையை போன அக்டோபர் மாதத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். நடுவர் திரு. ராமமூர்த்திக்கு நன்றி! அவர் வார்த்தைகளில்:

10) இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன்

மகாபாரதத்துக் கதை – ஒரு புதிய பார்வை. கர்ணனின் சிதைக்கருகில் ஒரு காட்சி. புதிய கற்பனை. புதிய தர்க்கங்கள். துரியோதனன் குந்தியிடம் பேசும் கற்பனை வசனம் சிந்தனையைத் தூண்டுகிறது. தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“நீ என் மகன், உன் சகோதரர்களோடு போரிடாதே என்று அவனிடம் சொன்னீர்களே, ஏன் இந்தப் பார்த்தனிடம் கர்ணன் உங்கள் தமையன், அவனோடு போரிடாதே என்று சொல்லவில்லை? கர்ணன் தன் தம்பிகளுடன் போரிடுகிறான் என்பதை உணர வேண்டும், தம்பி ஆயிற்றே என்று அவன் வில் ஒரு கணமாவது தயங்கும், பார்த்தனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது, அவன் கர்ணனை இரக்கமில்லாமல் கொல்ல வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம்?”

சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுத்தது :

இங்கிவனை யான் பெறவே – ஆர் வி சுப்பிரமணியன் – சொல்வனம்

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், மகாபாரதப் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

 

❌