Normal view

Received today — 7 June 2025

நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!   – இலக்குவனார் திருவள்ளுவன்


(நாலடி நல்கும் நன்னெறி :10  வழி வழியே இறந்தோரைத் தொடர்ந்து செல்வதே இயற்கை –  தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி : 11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்! எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா(து)எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர். நாலடியார், அறிவுடைமை, 243 சொற்பொருள் : கொன்னாளர் = கரிசாளர் (பாவிகள்) ; காழ் = விதை; எனவே, காஞ்சிரங்காயின் /காஞ்சரங்காயின் விதை எனலாம். காஞ்சரஞ்காய் என்பது பூவரச மரத்தைப்போல் தோற்றமளிக்கும் நச்சுமரத்தின் காய். இதனை எட்டி...

The post நாலடி நல்கும் நன்னெறி :11.  நல்லன புரிந்து நற்கதி/நன்மை அடைவோம்!   – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்; ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! (திருவருட்பா- 3471) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.   (திருக்குறள் – 226) பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது...

The post ? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன்


(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 3/3 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1                                                                                                         சிந்துவெளி, மொகஞ்சதாரோ மூலம் அறியக்கிடக்கும் தமிழர் நாகரிகச் சிறப்பு நம் முன்னைத் தமிழர்களின் கட்டுமான அறிவியலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். அவற்றின் தொடர்ச்சியாக இன்றைக்கும் காட்சியளிக்கும் கோபுரங்கள், சிதலமாகிப்போன சுரங்கப் பாதைகள் முதலியனவும் முந்தைச் சிறப்பை நமக்கு விளக்குவனவாக இருக்கின்றன. மலையே இல்லாத தஞ்சாவூர் மாநகரில் பெரிய கோயில் மட்டுமல்ல  எண்ணற்ற கோயில்கள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன. கரிகால(ன்)...

The post கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1: அன்றே சொன்னார்கள் 41- இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

என்னுடைய சிறுகதை ஆங்கிலத்தில்

 என்னுடைய "மாடிப்படிகள்" சிறுகதை பேராசிரியர் ப. மங்களம் அவர்களால் நேர்த்தியாக ஆங்கிலமாக்கப்பட்டு Literary and Cultural Disability Studies: A Primer எனும் தொகைநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய புனைவெழுத்து குறித்த அலசலும் மங்களம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றியும் அன்பும்.







பள்ளி திறந்தாச்சு!

7 June 2025 at 09:23

கேள்வி: விடுமுறை முடிந்து என் குழந்தை பள்ளிக்குச் செல்கிறாள். பெற்றோர் என்ற முறையில் செய்யவேண்டியது என்ன? பதில்: என்னம்மா! பள்ளிக்கூடம் நடைமுறைகளுக்கு ரெடியாகிவிட்டீர்களா? குழந்தை தானே பள்ளிக்கு போகணும்? அப்பா அம்மாவுக்கு என்ன என்று...

The post பள்ளி திறந்தாச்சு! first appeared on Her Stories.

மிஸ்ஸியம்மா 

7 June 2025 at 07:17

மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே....

The post மிஸ்ஸியம்மா  first appeared on Her Stories.

நான் தொலைத்தேன்


இன்னும் விடியாத

கருங்குமென்ற

இருட்டு.

வைகாசி விசாக நாளில்

கோடாகத் துலங்கத் தொடங்கி

தாமிரபரணி

மெலிந்து

குறுக்குத்துறை படித்துறையில் ஓடிக்கொண்டிருந்தாள்.

தங்கச்சிப் பாப்பாவுக்கு

என்னைக் காவலிருக்க வைத்துவிட்டு

பாலுக்கும் காலை டிபனுக்கும்

சில்லறைக் காசுகளை

எனது டிரவுசர் பையில் நிரப்பி

பத்திரமென்று சொல்லி

அம்மா குளிக்கப் போனாள்.

வெள்ளென விடியத் தொடங்க

அவள் இட்ட கட்டளையை

மீறி

கரையில் துணிவிரித்து

படுக்கவைக்கப்பட்டிருந்த

தங்கையை விட்டுவிட்டு

ஆற்றுக்குள் இறங்கித் திளைத்து

டிரவுசரில் உள்ள காசுகளை எல்லாம்

தொலைத்தேன்.

நல்ல நாளன்று பிச்சையெடுக்க

விட்டு விட்டாயே

அம்மா திட்டியபடி

ஆத்திரம் தீர

என்னை வழியெங்கும்

அழ அழ

திருவிழாக் கூட்டத்தினூடாக

வீட்டுக்கு அழைத்துவந்தாள்.

ஆற்றின் அலாதி அழகைப் பார்த்து

என்னை மறந்து

கடமையை மறந்து

அன்று காசுகளைத் தொலைத்தேன்

மந்திராலய பிராகாரத்தின் ஏகாந்த அழகில் லயித்து

என் குட்டிமகளை ஒருநாள் தொலைக்க இருந்தேன்

ஆர்ப்பரித்து மடிந்து பாதங்களில் வந்து விளையாடிய

கடல் அலைகளில் திளைத்து

வீட்டின் சாவியை இன்று தொலைத்தேன்

நடுவே நண்பர்களை

காதலியை மனைவியை தொலைத்து விட்டேன்.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

Received yesterday — 6 June 2025

ஒரு பழைய நாவல்

ய. மஹாலிங்க சாஸ்திரி எழுதிய நாமொன்று நினைக்க (1950) என்ற நாவல் இணையத்தில் கிடைக்கிறது.

மிஸ்டர் வேதாந்தம் பாணி நாவல். பணக்காரக் குடும்பத்து வாரிசு ராமநாதன். அவன் உயிர் நண்பன் சீதாராமன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். ராமநாதனின் அப்பாதான் அவனையும் படிக்க வைக்கிறார். ராமநாதனின் மாமாவுக்கு இது பிடிக்கவில்லை. தன் மகளை ராமநாதனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். பல ஜோடிகள், கடைசியில் எல்லாருக்கும் திருமணம் ஆகிறது.

இந்த நாவலைப் படிக்கும்போதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி போன்றவர்களின் அருமை புரிகிறது. கட்டுக்கோப்பாக ஒரு தொடர்கதை எழுதுவது கஷ்டம்தான். அதை சாதித்ததால்தான் அன்று இவர்கள் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். சாஸ்திரியும் முயன்றிருக்கிறார்தான், ஆனால் அவர்கள் தரத்தை எட்ட முடியவில்லை.

இந்தப் பதிவை எழுத நாவலின் ஒரு பாராதான் தூண்டுகோல். ராமநாதனின் மாமா சிவராமன் தன் மகள் செல்லத்தை ராமநாதனுக்கு மணம் முடிக்க விழைகிறார். ஆனால் ராமநாதனுக்கு உஷா மீது காதல். உஷா யார்? அதே சிவராமன் மாமாவின் வைப்பாட்டி மகள், தாசிக்கு பிறந்தவள். இது சிவராமனுக்கு தெரிய வரும்போது அவர் ராமநாதனுக்கு அறிவுரை சொல்கிறார் – நீ உஷாவை மணந்து கொள்ள விரும்புகிறாயே, வீட்டில் டிபன் சரியில்லை என்றால் கிளப்புக்கு போகலாம், ஆனால் வீடு என்று ஒன்று இருக்க வேண்டும், எனக்கு முறையாகப் பிறந்த பெண் செல்லத்தையே மணந்துகொள், செல்லம் வேண்டாமென்றால் வேறு “நல்ல குலப்பெண்ணாக” மணந்து கொள் என்கிறார்! விழுமியங்கள் எத்தனை மாறி இருக்கின்றன!

சாஸ்திரி எழுதிய டூவா சேர்த்தியா என்ற எளிய கதை புன்னகை வர வைக்கிறது.  ஒப்பந்தக் கல்யாணம் (1945) என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது.

சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர். தி.ஜா. இவர் போன்ற திறமைசாலி அபூர்வம் என்கிறாராம்.

முப்பது நாற்பதுகளுக்கான வணிக எழுத்து என்று மதிப்பிடுகிறேன். இந்த நாவலே கூட கலைமகளில் நாற்பதுகளில் தொடர்கதையாக வந்ததுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:

IVNP 08- மிஸ்டர் ஆரவள்ளி - விமர்சனங்கள்

IVNP 08 மிஸ்டர் ஆரவள்ளி

வைரவேல் பட்டி என்ற ஊரில் உள்ள, பெரிய குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை உறவுகளை மையமாக வைத்து புனையப் பட்ட குடும்ப நாவல்.

கதையின் ஆரம்பம் முதலே முருகன் ஆட்சி தான். முருகன் துதிகளும், மலையும், கோவிலும் கதையூடே பயணிக்கின்றன.

கதையின் ஆரம்பமே, ஆரவள்ளி, ஆடை வடிவமைப்பாளராக, மும்பை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில் தொடங்குகிறது.
அவள் தாத்தா செந்தில்நாதனும், அவரை பெற்ற வடிவாம்பாளும் அவள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர்.

ஆரவள்ளி, கல்லூரி இரண்டாம்...


Read more

VVT -22

அத்தியாயம் -22


ஹாசினியின் தந்தை பாண்டியன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தான் உதயன்.

“எ.. என்ன சார் சொல்றீங்க? ஹாசினி வீட்டை விட்டுப் போயிட்டாளா?”

“ஆமா தம்பி. இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்ததுக்கு அப்புறம், அவ இங்கே இருந்தா, அவளைப் பேசிப் பேசியே இவ தினம் சித்திரவதை பண்ணுவா தம்பி. அதை நினைச்சுத் தாங்க முடியாம தான் நானும் அவளை போயிட்டு வாம்மான்னு சொல்லி அனுப்பி வச்சேன். அவ கையிலே வேலை இருக்கு. தைரியம் இருக்கு என் பொண்ணுக்கு. இங்கே இருக்கிறதை விட வெளியே இருந்தா தான் அவ நல்லா இருப்பான்னு...


Read more

பெண்களும் சமூக அங்கீகாரமும்

6 June 2025 at 16:35

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்...

The post பெண்களும் சமூக அங்கீகாரமும் first appeared on Her Stories.

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 35

சேவல் கூவும் சத்தம் கேட்டும் தன்னவளை விட்டு விலக மனமில்லாமல் அணைத்துக்கொண்டே படுத்திருந்தான். இருவரின் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்சியது சில நொடிகள் முன்னே கூடல் முடிந்து அவன் மார்பில் படுத்திருந்தவள் உறக்கத்தை தழுவியிருந்தாள்.

நதியாவை விட்டு பிரிய மனமில்லாமல் அவளின் தூக்கம் கலையாமல் தலையணையில் படுக்க வைத்துவிட்டு கீழே கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்கச் சென்றான். அவனது முதுகில் தண்ணீர் படவும் அவள் நகம் பட்ட இடமெல்லாம் எரிந்தது.

“இராட்சசி எப்படி கீறி விட்டிருக்கா பாரு” என்று காதல் மனைவியை வசைப்பாடிக்கொண்டு குளித்து வெளியே வந்த போது நதியா மீன்குஞ்சு போல இதழ் பிளந்து உறங்குவதை கண்டு மென்நகை புரிந்தவன் வேஷ்டியை கட்டிக்கொண்டு கதவு திறந்து வெளியே போனவன் அதிர்ச்சியில் கண்ணை விரித்தான்.

ராயன் காரில் சாய்ந்து நின்றான். மாட்டுப் பண்ணையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பான் போலும் பால்கறந்து முடித்து கேனில் நிரப்பி வைத்திருந்தனர். கோவிந்தன் கணக்கு நோட்டில் பால் அளவுகளை எழுதிக்கொண்டிருந்தான்.

“என்ன அதுக்குள்ள எழுந்துட்ட ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு டயர்ட்ல தூங்கியிருப்பனு நினைச்சு உனக்கு உதவி பண்ண வந்தேன்டா” என்று கொட்டாவி விட்டு தலைக்கு மேல் கையை தூக்கினான் ராயன்.

“என் மேல உனக்கு இத்தனை பாசமாடா மச்சான்” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டான் பாலாஜி.

“என்னடா பண்ணறது தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன் தங்கச்சி சந்தோசமா இருக்கணும்ல அதுக்காகத்தான்” என்றான் உதட்டு மடிப்பு சிரிப்புடன்.

“டேய் நீ இருக்கியே” என்று அவன் தோளில் போலியாக அடித்தான் பாலாஜி. பால்காரர்கள் வரவும் அவர்களுக்கு பாலை சப்ளை செய்து விட்டு ராயன் பக்கம் வந்தவன் “வாடா டீ குடிச்சிட்டு போகலாம்” என ராயனின் கையை பிடித்தான்.

“உன் கையால டீ குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு வரேன்டா” என்று நண்பனுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

குளித்து விட்டு வெளியே வந்த நதியாவோ ராயனை கண்டதும் “அண்ணா எப்போ வந்தீங்க?” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டாள்.

“இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்மா நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு அழைப்பு சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்டா இரண்டு பேரும் நேரமே வந்துடணும் இந்த முறை மாவிளக்கு மட்டும்தான் குழந்தை பிறந்ததும் கிடா வெட்டிக்கலாம்” என்றவனிடம்

“நான் நம்ம வீட்டுக்கு வந்தா அம்மா முகத்தை தூக்கி வச்சிப்பாங்க அண்ணா நான் கோவிலுக்கு மட்டும் வரேன்”

“நீ இந்த முறை வரும்போது அம்மா உங்களை வரவேற்பாங்க பாரேன்” என்று தங்கையை சமாதானம் செய்ய பார்த்தான்.

“அது நடக்காது அண்ணா இருங்க காபி போட்டு கொண்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டாள்.

காபியுடன் வந்த நதியாவை கண்ணெடுக்காமல் பார்த்தான் ராயன்.

“என்ன அண்ணா அப்படி பார்க்குறீங்க என்னடா இவ சமையல்கட்டு பக்கம் கூட போனதில்லை எப்படி காபி போடுறானா எல்லாம் உங்க மாப்பிள்ளை சொல்லிக்கொடுத்தாரு அண்ணா” என்றாள் பாலாஜியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

காபியை வாங்கி குடித்த ராயனோ “காபி சூப்பர் பாப்பா” என்றவனோ “டேய் மச்சான் நீ போடுற காபியை விட என் தங்கச்சி பிரமாதமா காபி போட்டிருக்கா” என்று கண்ணைச்சிமிட்டி சிரித்தான்.

அவனோ “உன் தங்கச்சிக்கு காபி போட சொல்லிக்கொடுக்கறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்” என்றான் சலிப்பாக.

“அண்ணா சாப்பிட்டுத்தான் போகணும்” என்றாள் பிடிவாதமாக.

“இல்லம்மா முல்லையை ஹாஸ்பிட்டல் செக்கப் அழைச்சிட்டு போகணும் நான் கிளம்புறேன் மாப்பிள்ளை திருவிழாவுக்கு நேரமே வந்துடு” என்று பாலாஜியின் தோளை தட்டிவிட்டு “பாப்பா போய்ட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான்.

தீபாவிற்கு வாமிட் அதிகம் இல்லை. அமுதாவிற்கு காய்கறிகள் நறுக்கிக்கொடுத்துவிடுவாள். பணக்காரி என்று திமிர்தனம் அவளை விட்டு காணாமல் போயிருந்தது. தோட்ட வேலைக்காரர்களிடம் சுள்லென்று விழுவதில்லை. கண்ணன் தன் மனைவியா இவள் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிவிட்டாள் தீபா.

கோமளமோ பிறக்க போகும் பேரன் சிவப்பாக பிறக்கவேண்டுமென இரவில் தீபாவுக்கு பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்தார்.

“என்னம்மா உங்க மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷலா பாலுல குங்குமப் பூ போட்டு கொடுக்குறீங்க எனக்கு இல்லையா?” என்றவனிடம்

“பையன் உன்னை போல கருப்பா பொறந்துட்டா அதான் குங்குமப்பூ கலந்து கொடுக்குறேன் என் பேரன் சிவப்பா பிறக்கட்டும்னு” என பெரும்மூச்சு விட்டார்.

“ஏன்மா பொண்ணு பொறந்தா ஏத்துக்க மாட்டீங்களா! எனக்கு பொண்ணு மேலதான் பிரியம்” என்றவனை

“வாயை பினாயில் போட்டு கழுவுடா அறிவுக்கெட்டவனே! உனக்கு பையன் பிறப்பான் ராயனுக்கு பொண்ணு பிறக்கும் நான் சொல்றது சத்தியவாக்கு மகனே” என்றார் அழுத்தமாக வார்த்தைகளுடன்.

தையல்நாயகியும் அழகம்மையும் சிரித்துக்கொண்டனர்.

“என்னங்கடி ரெண்டு பேரும் சிரிக்குறீங்க நான் சொல்றதுதான் நடக்கும்” என்றார் தெனாவெட்டாக.

அழகம்மையோ “புள்ளைபேரும் மழைபேரும் மகாதேவனுக்கு கூட தெரியாதாம் அண்ணி” என்றார் ராகமாக.

“பார்க்கலாம்டி” என்று முந்தானையை உதறிவிட்டுச் சென்றார்.

தென்னரசுவோ ஆர்கானிக் தோட்டத்தை பெரிதளவில் உருவாக்கி விட்டான். காய்கறிகள் வெளியூர்களுக்கு சப்ளை பண்ண திட்டம் போட்டிருந்தான். ஆர்டர்களும் குவிந்து விட்டது. பிஸினஸ்மேன் ஆகிவிட்டான் தென்னரசு.

பூங்கொடி மறுபடியும் கர்ப்பம் தரித்து விட்டாள்.

நீலகண்டனும் அழகம்மையும் மகளை பார்த்துவிட்டு “நீ வேணா நம்ம வீட்டுல வந்து இரேன்டி” என்றார் அழகம்மை.

“அத்தை இருக்காங்க பார்த்துப்பாங்க. அரசிக்கிட்டயும் தியா நல்லா ஒட்டிக்கிட்டாமா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் சந்தோசமாக இருக்கேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

முல்லைக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியது.

முல்லையால் வயிற்றை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை.

“கோமளம் அண்ணி சொன்னது போலவே பொண்ணாத்தான் இருக்கும் போலங்க” என்றார் அழகம்மை நீலகண்டனிடம்.

“என்ன குழந்தையா இருந்தா என்னடி நல்ல விதமா தாயும் பிள்ளையும் வந்தா போதும்” என்று அங்கலாய்த்தார் நீலகண்டன்.

“நீங்க சொல்றது சரிதான்ங்க” என பெரும்மூச்சு விட்டார் அழகம்மை.

“அழகு பூங்கொடி ஏழுமாசத்துலதான் நம்ம வீட்டுக்கு வந்தா ஆனா முல்லை கரு உண்டானது முதல் இப்ப வரை உன்கூடவே வச்சு பார்த்துக்கிற உன் மனசு தங்கம்டி நீ பொண்டாட்டியா கிடைக்க நான் தவன் பண்ணியிருக்கணும்டி” என்று அழகம்மையின் கையை பிடித்துக்கொண்டார் நீலகண்டன்.

“எனக்கு எல்லாம் தெரியும்ங்க” என்றதும் ஒரு நிமிசம் ஆடிப்போனார் நீலகண்டன்.

“என்ன அப்படி பார்க்குறீங்க நம்ம அமுதாவோட வீட்டுக்காரன் குழந்தை உருவானதும் வியாபாரத்துக்கு போனவரு திரும்பி வரவேயில்லையாம்ங்க அவனெல்லாம் மனுசனாங்க அமுதாவை பார்க்கும்போது பாவமாய் இருக்கு… நம்ம முல்லைக்கு அப்பா இல்லைங்கற வருத்தம் வரவே கூடாது அதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன் உங்களையும் அப்பானு கூப்பிட அனுமதி கொடுத்தேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

“ஆமாடி அமுதாவை பாதியில விட்டுப்போனவன் மனுசன் கிடையாது” என்றவருக்கு மனதில் பாரம் ஏறியது.

“அப்பா இடுப்பு வலிக்குது மச்சானை வரச்சொல்லுங்க” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் வந்தாள் முல்லை.

“இன்னும் நாள் இருக்கு முல்லை இது பொய் வலி கசாயம் வச்சு தரேன் குடி வலி நின்னுடும்” என்று அவளின் கையை பிடித்து நீலகண்டன் பக்கத்தில் உட்கார வைத்து “புள்ளையை பார்த்துக்கோங்க” என்று ஜாடை காண்பித்துச் சென்றார்.

“அப்பா அமுதா அம்மாவை விட அழகு அம்மா என்னை ரெண்டு மடங்கு பார்த்துக்குறாங்கப்பா இவங்க கிட்ட உண்மையை மறைக்கிறோம்னு குற்ற உணர்வா இருக்கு” என்றாள் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு.

“சில உண்மைகளை இரகசியமா வச்சிருக்கறதுல தப்பில்லடா கொஞ்ச நாள் முன்னாடி உண்மை தெரிஞ்ச உனக்கே இவ்ளோ கஷ்டம்னா என்னைய நினைச்சி பாரு கண்ணு நானெல்லாம் பாவம் செய்த மனுசன் எனக்கெல்லாம் நரகம்தான் கிடைக்கும்டா” என்றவரின் குரலில் அத்தனை வலி இருந்தது.

“நீங்க வேணும்னு எதையும் பண்ணலையேப்பா விடுங்க” அழகம்மையின் தலை தெரிந்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்.

“இந்த கசாயத்தை குடிமா” என்று முல்லையிடம் கசாயத்தை கொடுத்தார். கசாயத்தை குடித்ததும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு வலி குறைந்திருந்து.

தையல்நாயகியோ இரவு ராயன் சாப்பிடும் நேரம் “ராயா திருவிழாவுக்கு நம்ம நதியா பாப்பாவுக்கு அழைப்பு சொல்லிட்டதானே?” என்றபடியே தோசையை தட்டில் வைத்தார்.

கோமளமோ “அவளுக்கு அழைப்பு சொல்லலைனு யார் அழுதாங்க அன்னிக்கு சும்மா அழுது கரைஞ்சு நகையை ஆட்டைய போட்டுட்டு போய்ட்டா இப்ப திருவிழாவுக்கு வந்தானா சும்மாவா போகப்போறா இல்ல நீங்கதான் அவளுக்கு சீர் கொடுக்காம அனுப்ப போறீங்களா!” என்றார் இழுவையாக.

“ஒத்த தங்கச்சியை வச்சிருக்கோம் அவளுக்கு நியாயமா சேர வேண்டியதை கொடுத்துடணும் இல்லனா அண்ணனுங்களுக்குத்தான் தோஷம் வருமாம் பெரியம்மா… நம்ம வீட்டு மருமகளுங்க ரெண்டு பேரும் மாசமா இருக்காங்க பிறக்க போற குழந்தைகளும் தோஷத்துல பிறக்கணுமா?” என சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவியவன் கோமளத்தின் பக்கம் வந்து உட்கார்ந்தான்.

“நான் இதை யோசிக்காம போயிட்டேன் ராயா அவளுக்கு கொடுக்க வேண்டிய பங்கை திருவிழா முடிஞ்சு போற அன்னிக்கு கொடுத்திறலாம் நம்ம பேரன்களுக்கு தோஷம் வரவேணாம்” என்றார் அச்சத்துடனே.

கோமளம் தன் மகன் வயிற்று பேரப்பிள்ளைக்குதான் மரியாதை கிடைக்கணும் பின் வரும் சந்ததியர் தன் பேரனை வழி தொடரணும்னு என்று சுயநலமாக ஆசைப்பட்டாரே தவிர மொத்த குடும்பத்துக்கு சாபம் வந்துவிடுமென்று அவர் யோசிக்கவில்லை.

“நீங்க சொன்னா அப்பீல் இல்லை பெரியம்மா நதியா பாப்பாவுக்கு என்ன என்ன கொடுக்கணும்னு நானே முடிவு எடுக்கட்டுமா இல்ல நீங்க முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?” என்றான் கோமளத்தின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

“நீ உன் தங்கச்சிக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருப்பியே என்கிட்ட சும்மா ஒப்புக்குத்தான் கேட்ப உன் மனசுக்கு என்ன படுதோ அதை பண்ணிடு” எழுந்து சாப்பிடச் சென்றார் கோமளம்.

ராயன் சாப்பிட்டு நீலகண்டன் வீட்டு கேட்டை திறந்து உள்ளே போக முல்லையோ வயிற்றை பிடித்துக்கொண்டு போர்ட்டிக்கோவில் நடந்துக் கொண்டிருந்தாள்.

“என்ன புள்ள வாக்கிங்கா?”

“ஆமா நார்மல் டெலிவரி ஆகணும்னா நடக்கணும்னு டாக்டர் சொன்னது மறந்துட்டீங்களா மச்சான்” என்று நடக்கும் போது பேசமுடியாமல் மூச்சு வாங்கினாள்.

“புள்ள நின்னு பேசு” அவளது கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான்.

“நான் நடக்கணும் விடுங்க மச்சான்” என்று சிணுங்கியவளின் கையை விட்டு “போடி” என்று முகத்தை உர்ரென்று வைத்தான்.

“அச்சோ மச்சானுக்கு ரொம்பதான் கோபம் வருது” என்று அவனது மீசையை பிடித்து இழுத்து யாரும் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்துவிட்டு ராயனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் “இதுக்குதானே என்னை உட்கார வச்சீங்க மச்சான்” அவனது தோளில் சாய்ந்தாள்.

அவள் எங்கே தடுமாறி விழுந்துவிடுவாளோ என்று அச்சத்தில் அவளை தன் கை வளைவில் நிறுத்தி வைத்து “உன் அறைக்குள் வந்தாவே அழகு அத்தை ராயா வெளிய வானு மிரட்டுறாங்க என் பொண்டாட்டிக்கிட்ட ஒரு முத்தம் கூட வாங்க முடியலை” என்றான் வருத்தமாக.

“நமக்குள்ள ஏதாவது கசமுசா நடந்து எனக்கு ஆபத்து வந்துடும்னு பயப்படுறாங்க அழகு அம்மா” என்றாள் முல்லை நமட்டுச் சிரிப்புடன்.

“ஏன் டி எனக்கு என் பொண்டாட்டி மேல அக்கறை இல்லையா பார்த்து நடந்துக்க மாட்டேனா மாமியார்னாவே கொடுமைக்காரவங்களா இருக்காங்க நம்ம அறையில உன்கூட வந்து படுத்துக்குறாங்க நான் சோபாவுல படுத்துக்குறேன் என் மேல நம்பிக்கை இல்லையாடி” என்று பொருமினான் ராயன்.

“ஆமாடா நான் கொடுமைக்காரி தான்” என்று இடுப்பில் கையை வைத்து நின்றார் ராயன் முன்னே.

“அ.அத்தை நா.நான் சும்மா விளையாடினேன்” என்று மழுப்பினான்.

“சரி சரி மாசமா இருக்கற புள்ள ரொம்ப நேரம் முழிச்சிருக்க கூடாது போய் நீ படு முல்லை” என்றார் அதிகாரமாக.

“என் பொண்டாட்டியை என்னை விட்டு துரத்துறதுலயே குறியா இருக்காங்கப்பா” என்று சடைத்துக் கொண்டான்.

முல்லையோ “நான் தூங்கப்போறேன் மச்சான்” என்று அறைக்குள் சென்றாள்.

ராயனும் முல்லையின் பின்னே செல்ல “டேய் டேய் நில்லுடா நானும் வரேன்” என்று மருமகனின் பின்னால் சென்றார் அழகு.

“மாமா எல்லாம் என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசுறாங்க நீ என்னடானா மருமகனை வாடா போடா ராயானு பேசுற அத்தை” என்று அழகம்மையை முறைத்தான்.

“நான் தூக்கி வளர்த்த பையன் நீ! உன்னை வாங்க போங்கனு கூப்பிடணுமா நான் முல்லை அறைக்குள்ள போகாம நீ போகக்கூடாது சோபாவுல உங்க மாமா கூட உட்கார்ந்து டிவி பாரு நான் அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ராயனுக்கு கட்டளை போட்டுச் சென்றார்.

நீலகண்டனோ “மாப்பிள்ளை நீங்க உள்ள போங்க உங்க அத்தை வந்து கேட்டா உனக்கு தூக்கம் வருதுனு போய்ட்டனு சொல்லிடறேன்” என்று கண்ணைச் சிமிட்டினார்.

“தேங்க்ஸ் மாமா” என்று அடுத்த நொடி முல்லையின் அறைக்குள் இருந்தான்.

“அச்சோ மச்சான் அழகு அம்மா வரதுக்குள்ள நீங்க ஏன் வந்தீங்க திட்டப்போறாங்க முதல் நாள் உங்களை தெரியாம உள்ளே விட்டு எனக்கு அடுத்தநாள் இடுப்பு வலி வந்துடுச்சுல அதான் உங்களை உள்ள விட பயப்படுறாங்க ஆனா எனக்கு உங்க மேல சாய்ஞ்சு படுத்துக்கணும்னு இருக்கு” என்றாள் முகத்தை அப்பாவி பெண் போல வைத்து.

“அவ்ளோதானே புள்ள என் நெஞ்சுல தான் நீ தூங்கப்போற ஒரு நிமிசம் இரு வரேன்” என்று ஹாலுக்குச் சென்றவன் “மாமா அத்தையை உள்ளே வரவிடாம பார்த்துக்கோங்க என் பொண்டாட்டி கூட தனியா இருக்கணும் எனக்கு உதவி பண்ணுவீங்களா?”

“நீ போ மாப்பிள்ளை உங்கத்தை கிடக்குறா ஆனா பார்த்து இருக்கணும் முல்லைக்கு நிறைமாசம் கவனம்பா” என்று அழுத்தி கூறவும்

“என் மேல நம்பிக்கை இல்லையா மாமா?”

“உன் மேல நம்பிக்கை இல்லாமலா போயா உங்கத்தை வர்றதுக்குள்ள” என்றார் சமையல்கட்டை பார்த்துக்கொண்டே.

ராயனோ முல்லையின் அறைக்குள் வந்து கதவை அடைத்து ஒரு எட்டில் கட்டிலில் ஏறி அமர்ந்து முல்லையை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

முல்லையோ நெஞ்சில் சாய்ந்ததும் “மச்சான் பிரசவத்துல வலிக்குமாமே எனக்கு பயமா இருக்கு” என்றாள் அவனது நெஞ்சில் சுருள் முடியை விரலால் சுருட்டிக்கொண்டே.

“வலியில்லாம புள்ள பிறக்காதுடி அந்த நேரம் என்னை நினைச்சுக்கோ உனக்கு வலியே வராது புள்ள” என்றான் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து.

“மச்சான் பிரசவ அறைக்குள்ள நீங்க வந்துடுங்களேன் நீங்க பக்கம் இருந்தா எனக்கு வலி இருக்காதுல” என்றவளின் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது.

“கண்டிப்பா நான் உன்கூட இருக்கேன் புள்ள தூங்கு” என்று மனைவியின் தலையை வருடிக்கொடுக்க உறங்கிவிட்டாள் முல்லை.

அழகம்மையோ சமையல்கட்டை சுத்தம் செய்து விட்டு பூங்கொடிக்கு போன் போட்டார்.

“என்னம்மா இந்த நேரம் போன் போட்டிருக்க என் ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்று கிண்டலாக பேசினாள் பூங்கொடி.

“என்னடி இப்படி கேட்டுபுட்ட மாசமா இருக்காளே புள்ள எப்படி இருக்கானு ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசலாம்னு போன் போட்டேன் பொசுக்குனு உன் ஞாபகம் எப்படி வந்துச்சுனு கேட்ப இதுதான் பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லுனு சொல்லுவாங்க” என்றார் புலம்பலாக.

“ம்மா நான் சும்மா ஏதோ சொன்னேன்மா உன்கிட்ட வம்பிழுக்கலாம்னு என்னை கவனிக்க குமுதா அத்தை அரசி உங்க மருமகன் எல்லாரும் இருக்காங்க எனக்கு என்ன கவலை நான் ராணி போல இருக்கேன்” என்றாள் சந்தோசமாக.

“நீ பேசறதை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன்டி நேரம் நேரத்துக்கு சாப்பிடு குமுதா அம்மா இருக்காங்கனு தியாவை அவங்க கிட்ட கொடுத்துட்டு தூங்காதே அப்படியே வீட்டுக்குள்ள சின்ன சின்ன வேலையெல்லாம் பார்த்துக்கிட்டே இருடி” என்றார் மகள் மேல் உள்ள அக்கறையில்.

“சரிமா நான் பார்த்துக்குறேன் முல்லையை கவனிச்சிக்கோங்க” என்று போனை வைக்கபோனவளை “ஒரு நிமிசம் இருடி நான் இன்னும் பேசி முடிக்கலை” என்றவரோ “திருவிழாவுக்கு நேரமே வந்துடு நேர்ல வந்து அழைப்பு சொல்லலைனு நினைக்காதே” என்றவுடன்

“அட அப்பா நேத்து மதியம் வீட்டுக்கு திருவிழாவுக்கு நேரமே வந்துடணும்னு அழைப்பு சொல்லிட்டு போனாரு. ராயன் மாமா போன் போட்டு கண்டிப்பா திருவிழாவுக்கு குடும்பத்தோட வரணும்னு சொல்லியிருக்காருமா நான் திருவிழாவுக்கு வராம இருப்பேனா?”

“வாடி வாடி எல்லாம் குடும்பமா சந்தோசமா இந்த திருவிழாவை கொண்டாடுவோம்” என்று மனநிறைவுடன் போனை வைத்தார் அழகு.

ஹாலுக்குச் சென்ற அழகுவோ முல்லை அறைக்கதவு மூடியிருப்பதை கண்டு “இவன் வேலையை காட்டிட்டான் பாரு… டேய் ராயா கதவை திற” என்று சத்தம் போட்டு கதவின் பக்கம் போனவரின் கையை பிடித்துக்கொண்ட நீலகண்டனோ “புருசன் பொண்டாட்டி அறைக்கதவை தட்டுறியே உனக்கு இங்கிதம் இருக்காடி” என்று சண்டைக்கு வந்தார் நீலகண்டன்.

“அட நீங்க வேற முதல் நாள் முல்லை அறைக்குள் ராயன் போய்ட்டு வந்ததுனால அடுத்தநாள் முல்லைக்கு இடுப்பு வலி வந்துடுச்சு இவன் முரட்டு ஆளு அந்த பொண்ணு தாங்கணும்ல உங்களை யாரு அவனை உள்ளே விடச்சொன்னது” என்று நீலகண்டனை முறைத்தார் அழகு.

“அட விடுமா ராயன் பார்த்துப்பான் வா நாம தூங்கலாம்” என்று மனைவியின் கையை பிடித்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டார்.

பாலாஜியோ வேக வேமாக மாடுகளுக்கு தீவனம் காட்டி முடித்து வீட்டுக்குள் சென்றான். நதியாவோ குளித்து விட்டு நைட்டியில் பவுடர் அடித்துக்கொண்டிருந்தவளை கண்டவனோ “நைட்டுக்கு ரெடியாகிட்ட போல சும்மா கும்முனு இருக்கடி உருண்டை” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

“உருண்டைனு கூப்பிடாதீங்க மாமா” என்றாள் அவனை முறைத்து.

“அப்படித்தான் கூப்பிடுவேன் உருண்டை” என்று அவளது நைட்டியின் பட்டன்களை விடுவித்தான்.

“அச்சோ இப்ப கொஞ்ச நேரம் பேசலாம்”

“என்னத்த பேசறது வாயும் கையும்தான் பேசணும் வாடி” என்று நதியாவை தூக்கி கட்டிலில் போட்டு லைட்டை அணைத்தவன் நதியாவையும் அணைத்தான் பாலாஜி.

“கொஞ்சம் கூட பொறுமை இல்லையா மாமா நேத்து நைட் கடிச்சு வச்சி சிவந்து போச்சு” என்று காயப்பட்ட இடத்தை காண்பித்தாள்.

“நீயும்தான் கடிச்சிருக்க இங்க பாருடி காலையில உன் அண்ணன் என் கழுத்தை உத்து உத்து பார்க்குறான் எனக்கு வெட்கம் வந்து சட்டை காலரை இழுத்து விட்டுக்கிட்டேன்” என்றவனோ அவளை பேச விடாது இதழில் மூழ்கினான்.

கொஞ்ச நேரத்தில் நைட்டியும் அவனது லுங்கியும் ஒரு ஓரமாய் கிடந்தது. அவனது இதழ்களும் கைகளும் அவளது மேனியில் நாட்டியம் ஆடிக்கொண்டே இருந்தது. “இன்னிக்கு இப்படி” என்று அவளது காதில் ஏதோ இரகசியம் பேச “அய்யே சீ போடா நான் மாட்டேன்” என்றவளை “ஏய் ஏய் நதி ப்ளீஸ்டி” என்று அவன் கேட்டதை வாங்கிக்கொண்டே விட்டான். பெண்மையை மலர வைத்தான்.

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் அத்தியாயம் 7:

அத்தியாயம் 7

கலாவின் முகத்தில் நிறையவே கடுமை. ஆனால் சுவர்ணா அதை கவனிக்கும் நிலையில் இல்லை. மயூரனின் சகோதரி எப்படி மாலாவோடு இப்படி அன்னியோன்னியமாகப் பேசலாம்? என்ற பொறாமை வர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். மாலாவின் தாய்க்கு எதுவும் தெரியாது என்பதால் அவள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

"நான் உண்மையிலேயே ஏதோ பூஜை செய்யப் போகிறோம் என்று அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் கலா! அவளை ஏமாற்றுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது" என்றாள் மாலா. அது சுவர்ணாவின் காதில்...

Read more

என் இனிய ராட்சஷனே 17,18

அத்தியாயம் 17

 

சின்னப்பொண்ணு இளமதியின் கையை பிடித்து இழுத்து செல்ல 

“என் கையை விடு மா இந்த கிழிவியை இன்னைக்கு நான் உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்” என்று சிவகாமியை முறைத்துக் கொண்டே கூற “என்ன டி பண்ணுவ என்ன பண்ணுவ என் மகனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை இந்த வீட்டை விட்டே வெளியே துரத்திடுவான்” என்று எகிறி கொண்டே சிவகாமி அவள் அருகில் கோபத்துடனே வர. 

 

“கூப்பிடுங்க உங்க மகனை இன்னைக்கு என்ன பண்றாருன்னு பார்ப்போம்” என்றாள் அவளும் அவருக்கு சற்றும் குறையாத கோபத்துடன் தைரியமாக “மதி நீ இப்போ உள்ளே வர போறியா இல்லையா” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கூறியவர் அவளின் கைப்பிடித்து இழுக்க சிவகாமியை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் இளமதி. 

 

அறையின் உள்ளே வந்த இளமதி கோபத்துடன் படுக்கையில் அமர்ந்திருக்க “உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது பெரியவங்க பேசுனா நீயும் கூட கூட பேசுவியா சொல்லு டி” என்றார் கோபத்துடன் அவர். 

 

“அம்மா அந்த கிழவி பேசுனது எல்லாம் சரியா நீ என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ற” என்க அவள் அருகில் வந்து அமர்ந்த சின்னப்பொண்ணு “மதி மா நாம இந்த வீட்ல இருக்க வர அவங்களுக்கு அடங்கி தான் ஆகனும்” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது. 

 

“அம்மா நாம இனிமே இந்த வீட்ல இருக்க தேவையில்லை” என்ற இளமதி தன் பையில் இருந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் “அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கு அதுவும் பெரிய ஐடி கம்பெனில மாசம் முப்பதாயிரம் சம்பளம்” என்றாள் மகிழ்ச்சியுடன். 

 

சின்னப்பொண்ணு ஒரு நிமிடம் அந்த பேப்பரை தன் கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டார் அடுத்த நிமிடம் 

“நீ என் தம்பி கூட வாழ வேண்டாமா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்று கேட்க

“மா என் வாழ்க்கைக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு” என்று அவள் கேட்க. 

 

“சம்மந்தம் இருக்கு நீ இங்கே இருந்து போய்ட்டா நந்தினியை கருப்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க 

நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேர்ந்து கூட வாழ ஆரம்பிக்கல”

 

“அம்மா மாமா அக்காவை கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாரு” என்றாள் 

இவள் மிகவும் தைரியமாகவும் உறுதியாகவும் “உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் ஒரு நாளாவது அவன் குடும்பம் நடத்திருக்கியா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்றார் பயத்துடன். 

 

“மா நாங்க ஒன்னா வாழலைன்னு யார் சொன்னா” என்றாள் அவள் அவரின் முகம் பார்க்காமல் 

“என்ன சொல்ற மதி” என்று அவர் ஆச்சரியம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்க 

“அம்மா நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம் அவரு கண்டிப்பா அக்காவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு இதுக்கு மேல என் கிட்ட எதுவும் கேட்க்காத” என்று அவள் சொல்லும் போதே அவளின் முகம் சிவந்து போனது அவளால் தாயின் முகம் பார்க்க முடியவில்லை எழுந்து வெளியே சென்றுவிட்டாள். 

 

சின்னப்பொண்ணுவுக்கு அனைத்தும் புரிவதை போல் இருந்தது அவருக்கும் இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. 

 

இளமதி அங்கிருந்து வெளியே சென்றவள் நேரே தன் மாமனை தேடி ரைஸ் மில்லுக்கு சென்றாள் அவன் அங்கே இல்லை என்றவுடன் மீண்டும் வயலுக்கு தேடிப்போக அங்கே தான் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். 

 

அவனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்த மதி அவனுக்காக மரத்தடியில் சென்று அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள் அவள் மறைவாக அமர்ந்திருக்க கருப்பன் அவளை பார்க்கவில்லை அப்போது வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதை போல் இருக்க கருப்பன் சீக்கிரமே வேலையாட்களை அனுப்பி வைத்தான். 

 

இறுதியாக கருப்பன் மட்டும் தான் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் வருவதற்க்குள் மழை பொழிய ஆரம்பிக்க மா மரத்தின் அடியில் சென்று மழைக்காக ஒதுங்கி நின்றான் மழையை வேடிக்க பார்த்து கொண்டு இருந்தவன் தன் பக்கத்தில் யாரோ ஒரு பெண் நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த இளமதியை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அவளை பார்த்து முறைத்து வைக்க “என்ன மாமா என் மேல கோவமா” என்று கேட்க. 

 

அவனோ கண்டுகொள்ளாமல் மழை என்றும் பாராமல் நடந்து செல்ல “மாமா” என்று கத்திக் கொண்டே இளமதி அவன் பின்னே ஓடியவள் அவனின் கைப்பிடித்து இழுக்க 

சரியாக அவள் சேற்றில் காலை வைத்து விட கால் வழுக்கி விழ நிலைதடுமாறி அவள் விழ போக கருப்பன் அவள் விழுந்து விடாமல் பிடிக்க முயல இருவரும் ஒன்றாக சேர்ந்து கொட்டும் மழையில் சேற்றில் விழுந்தனர். 

 

கருப்பன் கீழே கிடக்க இளமதி அவன் மேலே கிடந்தாள் மழை பயங்கரமாக வெளுத்து கொண்டு இருக்க மின்னல் வேறு வெட்டி கொண்டு இருந்தது. 

 

இளமதி அவன் மேலே எக்கு தப்பாக விழுந்து கிடக்க அவள் தாவணி நழுவி அபாயகரமான பள்ளத்தாக்கு வெளியே தெரிய கருப்பனின் கண்கள் எதார்த்தமாக பார்க்க அவளின் இந்த நிலையை கண்டு வாயடைத்து போனான் ரத்தநாளங்கள் உடனே சுறுசுறுப்பாக ஆரம்பித்தது இரண்டு வார பிரிவு அவனை ஏதோ செய்தது அவன் ஆண்மை விழித்து கொள்ள பார்க்க உடனே அவளை தன்னில் இருந்து விலக்கியவன் தானும் எழுந்து நின்றான். 

 

கருப்பன் வேட்டி சட்டை என்று அனைத்தும் சேறாகி இருக்க இளமதியும் அதே நிலையில் தான் இருந்தாள்

“மாமா என் மேல கோவமா ஏன் என் கிட்ட பேச மாட்டேங்குறிங்க” என்று அவனிடம் கேட்க

“ஆமாம் டி கோவம் தான் பெரிய கலெக்டருக்கு படிக்கிறியா ஒரு நாள் என் கூட இருக்க உனக்கு உடம்பு நோவுது பெரிய இவள் மாதிரி பேசுன இப்போ எதுக்கு என் கிட்ட வந்த” என்றவன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு 

முன்னே நடந்து சென்றான். 

 

அவன் நடைக்கு இவளால் அவன் பின்னே ஓட தான் முடிந்தது “மாமா மாமா” என்று கத்தி கொண்டே வர அவன் கண்டுகொள்ளவேயில்லை மழை ஒரளவுக்கு குறைந்து விட பம்பு செட்டின் அருகில் சென்றவன் தன் ஆடையை கலைந்துவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கினான். 

 

சேற்றை சுத்தம் செய்ய தண்ணீரில் இறங்க அவன் பின்னே வந்த இளமதி 

‘இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாரு மாமா’ என்று மனதில் நினைத்தவள் அவளும் தண்ணீர் தொட்டியின் உள்ளே அவனுடன் இறங்கினாள். 

 

“ஏய் என்ன டி பண்ற” என்று கருப்பன் 

கத்த “உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு மாமா அதை சுத்தம் பண்ண வேண்டாமா” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“அதுக்கு ஒரு ஆம்பளை குளிக்கும் போது தண்ணீ உள்ளே வருவியா இறங்கு டி கீழ” என்றான் கோபத்துடன் கருப்பன் கூற. 

 

“நீங்க என் புருசன் தான உங்க கூட நான் குளிச்சா தப்பு இல்லை வேற ஆம்பளைங்க கூட குளிச்சா தான் தப்பு” என்றவள் தன் தாவணியை கழட்டி எறிந்தாள். 

 

கருப்பன் ஒரு கணம் அதிர்ந்தவன் “அடியேய் உன்னை வெளுக்க போறேன் ஒழுங்கு மரியாதையா கீழே இறங்கி போ” என்றான் “மாமா உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு ஒழுங்கா குளிக்க வேண்டாமா” என்றவள் தன் மேலாடையின் கொக்கியை கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தாள். 

 

‘அவளை பார்க்காத டா கருப்பா’ என்று தனக்கு தானே கடிவாளம் இட்டு கொண்டாலும் அவனால் அவனையே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை தண்ணீரின் உள்ளேயே தடுமாற ஆரம்பித்தான். 

 

அவள் ஒவ்வொரு கொக்கியாக கழட்ட அவன் தன்னிலை இழந்து தவிக்க ஆரம்பித்தான் “அச்சோ மாமா வெட்ட வெளியா இருக்கே உங்க பின்னாடி மறைஞ்சு நின்னுக்கிறேன்” என்று கூறி அவன் பின்னே வர மாலை ஆறு மணி என்பதால் நன்றாகவே இருட்ட வேறு ஆரம்பித்து இருந்தது. 

 

“அய்யோ மாமா இந்த கடைசி கொக்கி மட்டும் கழட்ட வரலை நீங்களே கழட்டி விடுறிங்களா” என்று கருப்பனை தன் புறம் திருப்ப அவளின் ஈர ஆடையில் திமிறி பூத்து குலுங்கி கொண்டு இருந்தது இரட்டை ரோஜா அவற்றை பார்த்து எச்சில் விழுங்கியவன் முழுதாக தன் சுயத்தை இழந்தான். 

 

“மாமா கழட்டி விடுங்களேன்” என்று அவள் மீண்டும் கேட்க சும்மா அவள் மேல் பைத்தியமாக திரிபவன் மொத்தமாக அவளை இந்த நிலையில் பார்க்க எத்தனை முறை பார்த்தாலும் அவனுக்கு புதியதாக தான் தோன்றியது ரோஜா குவியலை அள்ளி எடுத்து ருசி பார்த்து கடித்து மென்று சுவைத்து முகற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 

 

தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவன் அவளை தன் அருகில் சேர்த்தணைத்தான் இளமதி மனதில் ‘எனக்கு தெரியாதா மாமா உங்களை பத்தி’ என்று நினைத்தாள். 

 

அவள் அருகில் வந்தவன் “ஏன் டி இப்படி தான் கண்டதை காட்டி தான் மனுசனை உசுப்பேத்துவியா” என்று அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டே கருப்பன் கேட்க “உங்க அம்மா உங்களை நல்லவரு வல்லவருன்னு சொல்றாங்களே நீங்க நல்லவரான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“ஊர்ல எல்லாருக்கும் நல்லவன் ஆனா உன் ஒருத்திக்கு மட்டும் ரொம்ப கெட்டவன் டி” என்றவன் அவளின் இதழில் முத்தமிட்டு அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்

யாரும் இல்லாத தனிமை இருள் இருவரையும் உல்லாச உலகுக்கு அழைத்துச் சென்றது. 

 

அவளை தண்ணீரில் இருந்து தூக்கியவன் உள்ளே இருந்த பம்பு செட் அறைக்குள் தூக்கி சென்றவன் அவள் மேல் படர ஆரம்பித்தான் இத்தனை நாள் பிரிவை அவனை வாட்டி வதைத்து இருக்க அதிரடியாக தன் ஆட்சியை நிலை நாட்ட அவன் இடையில் காலை சுற்றி போட்டு கொண்டு அவளும் “ம்ம்ம்ஆஆஆ” என்று துடிக்க ஆரம்பித்தாள் 

அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் 

“மாமா பொறுமையா பிளீஸ் ம்ம்ம்” என்று அவள் கெஞ்ச “முடியாது டி இத்தனை நாள் என்னை தவிக்க விட்டல்ல அனுபவி” என்றவன் அவளுள் அசுரனாக இயங்க ஆரம்பித்தான் “ம்ம்மாஆஆ” என்று அவள் கத்தும் சத்தமும்

இருவரின் முத்தம் சத்தமும் அறையெங்கும் எதிரொலிக்க இனிதாக இல்லறம் நடந்து முடிந்தது. 

 

இரவு இருவரும் தனியே தனியே ஈர உடையுடன் வந்து சேர்ந்தனர் சிவகாமி 

வீட்டில் இல்லாததால் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை மறுநாளில் இருந்து திருவிழா வேலைகள் ஆரம்பிக்க இருவரும் அவ்வப்போது கள்ளத்தனமாக சந்தித்து கொண்டனர். 

 

நான்கு நாள் திருவிழாவில் இரண்டு நாட்கள் கருப்பனுக்கு ஜீரம் வந்தது மழையில் நனைந்ததால் மூக்கு வேறு அடைந்திருந்தது எங்கும் வெளியே செல்லாமல் இருந்து கொண்டான். 

 

கடைசி நாள் திருவிழாவுக்கு அவன் கோவிலுக்கு செல்ல அவனுக்கு ராஜமரியாதை வழங்கப்பட்டது நாகராஜனுக்கு அவனை பார்த்து பொறாமை பொங்க இவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான். 

 

 அத்தியாயம் 18

 

அன்று கடைசி நாள் திருவிழா என்பதால் ஊரே கூடி இருந்தது பெண்கள் அனைவரும் பொங்கல் கூடையை சுமந்து கொண்டு வனத்தின் நடுவே இருந்த மைதானத்திற்க்கு வந்து கொண்டிருந்தனர். 

 

கருப்பனும் தன்னவளை தான் அந்த கூட்டத்தில் தேடிக் கொண்டு இருந்தான் அவன் எதிர்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் பொங்கல் கூடையுடன் நடந்து வந்தாள் அவனின் மனைவி இளமதி அரக்கு நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து  பட்டு புடவை கட்டி பளபளவென நடந்து வந்து கொண்டு இருந்தாள் நேற்று இரவு அவன் தான் இந்த புடவையை கொடுத்து கட்டிவர கூறியிருந்தான். 

 

அவளின் பால் வண்ண நிறத்துக்கு அந்த புடவை அத்தனை எடுப்பாக வேறு இருந்தது தன் நீளக் கூந்தலை தளர பின்னி அதில் மல்லிப்பூ சூடி அழகான பெரிய முட்டை கண்களுடன் அதில் கண் மை ஐ லைனர் தீட்டி இருக்க அவளின் மை தீட்டிய கண்களே அவனை கொள்ளை கொண்டது. 

 

தேவலோக ரதியே நேரில் இறங்கி வந்ததை போல் இருந்தாள் கருப்பனின் கண்கள் அவளை விட்டு இம்மி அளவு கூட விலகவேயில்லை பொங்கல் கூடயை தூக்கி சென்றவளின் இடையில் இருந்த புடவை விலகி எலுமிச்சை நிற இடை பளிச்சென்று தெரிந்தது அந்த இடையிலேயே கருப்பனின் கண்கள் நிலைத்து நின்றது. 

 

பெண்கள் அனைவரும் முன்னே செல்ல இறுதியாக சென்ற இளமதியை தடுத்து நிறுத்தினான் அவள் கணவன் 

“ஏய் ஒரு நிமிசம் நில்லு டி புடவை மடிப்பே சரியில்லை” என்ற கருப்பன் அவளின் கைப்பிடித்து தனியே ஒரு பெரிய ஆலமரத்தின் பின்னே அழைத்து சென்றான் ஆலமரம் பெரிதாக இருந்ததால் அதன் பின்னே யார் நிற்கிறார்கள் என்பது சரியாக தெரியாது. 

 

அவளின் இடையில் இருந்த புடவை கொசுவத்தை சரி செய்கிறேன் என்ற பெயரில் கையை ஆடையின் உள்ளே நுழைக்க இளமதி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திணற ஆரம்பித்தாள். 

 

ஏனெனில் அவள் தலையில் பொங்கல் கூடை இருக்க இரு கையும் மேலே கூடையை பிடித்து கொண்டு இருந்தது அவனை அவளால் தடுக்கவே முடியவில்லை அவன் கை புடவையை சரி செய்யாமல் கொசுவத்தின் உள்ளே சென்று இன்னும் ஆழமாக பாதாளத்தின் உள்ளே நுழைந்தது “அய்யோ என்ன பண்ணுறிங்க மாமா” என்று தவிப்புடன் கேட்டு கொண்டே அவள் நெளிய ஆரம்பித்தாள். 

 

“ரொம்ப அழகா இருக்க டி” என்று அவளின் கீழ் உதட்டை பார்த்து கொண்டே கூறியவன் அடுத்த நொடி அவளின் பட்டு போன்ற ரோஜா இதழை இதழை தன் இதழால் கல்வி இழுத்து முத்தமிட அவன் கைகள் இன்னும் உள்ளே சென்று ஆழத்துளையின் உள்ளே விரல் நுழைக்க அவனின் செயலில் அவள் இன்னும் தடுமாற ஆரம்பித்தாள். 

 

அவன் இதழில் இருந்த தன் இதழை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவள் “ம்ம்ம் மாமா விடுங்க யாராவது வந்துட போறாங்க” என்று மூச்சு திணற கூற

கருப்பன் தன் கையை உடனே எடுத்து கொண்டான் அவளின் புடவையை சரி செய்தவன் கீழே குனிந்து அவளின் நாபியில் முத்தமிட்டு மேலே வந்தவன் “நைட் மேல இருக்க ரூமுக்கு வந்துரு டி” என்று மையலுடன் அவள் இதழை தன் ஒற்றை விரலால் தடவிக் கொண்டே முகத்தை தாபத்துடன் பார்த்து கொண்டே கூற பதிலுக்கு அவளின் முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்து போனது “ம்ம்ம்” என்று இதழ் கடித்து அவளும் தலையை ஆட்டினாள் அதன் பின் அவளை அழைத்து கொண்டு மைதானத்துக்கு வந்தான் கருப்பன். 

 

மைதானத்துக்கு வந்தும் இளமதியை விட்டு விலகாமல் கருப்பன் அவளுடனே நின்றிருந்தான் நந்தினி பொங்கல் கூடையுடன் பொங்கல் வைக்க தன் தாய் பெரியப்பொண்ணுவுடன் அங்கே வந்தாள் கருப்பன்-மதி இருவரும் ஜோடியாக நிற்பதை பார்த்து முறைத்து வைக்க கருப்பன் அவளை கண்டு கொள்ளவேயில்லை. 

 

பெரியப்பொண்ணுவும் அவளை பார்த்து முறைத்து கொண்டே அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைக்க இளமதிக்கு தான் அவர்களின் முன்னே நிற்க ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தது ஆனால் அவள் கணவன் மிகவும் சாதரணமாக தான் இருந்தான்

இளமதியுடன் வாழ ஆரம்பித்தது தெரிந்தால் தான் தன் அக்கா அவரின் மனதை மாற்றிக் கொள்வார் என்று நினைத்தான். 

 

“என் மகள் வாழ்க்கையை கெடுத்துட்டு எப்படி என் முன்னாடியே வந்து ஜோடியா நிக்குறா பாரு பாதகத்தி இவள் எல்லாம் நல்லா இருப்பாளா” என்று பெரியப்பொண்ணு புலம்பிக் கொண்டே கண்ணீருடன் பொங்கல் வைக்க 

“அம்மா நீ அழாத அவளுக்காக நான் ஒன்னு ரெடி பண்ணி வச்சிருக்கேன் இதை பாரு” என்று தன் போனில் இருந்த எதையோ காட்டினாள் நந்தினி அதை பார்த்தவர் அதிர்ச்சி குறையாமல் “இது எப்போ எடுத்தது” என்று கேட்க 

“அது நம்ம சுப்பையா மாமா பொண்ணு அதே காலேஜ்ல தான் படிக்குறா அவள் தான் எடுத்து கொடுத்தா இவளும் அந்த ஆளும் ரொம்ப நெருங்கி பழகுவாங்களாம் நேரம் வரும் போது நமக்கு இது உதவும்” என்றாள். 

 

“இப்போ தான் டி நீ என் பொண்ணுன்னு நிரூபிச்சிருக்க இது ஒன்னு போதும் அவளை துரத்த” என்றார் வன்மத்துடன் அதன் பின் அனைவரும் பொங்கல் வைத்து முடிக்க மாலை ஆனது பொழுது சாயும் வேளையில் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். 

 

இறுதியாக கருப்பன் இளமதியை தனக்கு தெரிந்தவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு ஊர் பெரியவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தான் இரவு நேரம் அந்த காட்டுப்பாதையில்  வழியே நடந்து வந்து கொண்டு இருந்தவன் பின்னே ஒரு நால்வர் பின் தொடர்ந்தனர். 

 

முன்னே நடந்து சென்று கொண்டிருந்த கருப்பன் தன் பின்னே காய்ந்த சருகுகள் மிதி படும் சத்தத்திலேயே அறிந்து கொண்டான் தன் பின்னே யாரோ பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டான் இன்னும் பொறுமையாக கருப்பன் நடந்து சென்றவன் இருள் சூழ்ந்த ஒரு மரத்தின் அருகே செல்லும் போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது கருப்பன் அங்கே நின்று திரும்பியவன் சிங்கத்தை போன்று ஒரு பார்வை அவர்களை பார்க்க ஏற்கனவே வானம் இருட்டி இருக்க மழை தூர ஆரம்பித்தது. 

 

அந்த நால்வரும் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர் கருப்பன் அங்கிருந்த யாருக்கும் அஞ்சாமல் தன் வேட்டியை மடித்து கட்டியவன் முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டு சண்டைக்கு தயாரானான். 

 

“யார்ரா நீங்க எல்லாம்” என்று கருப்பன் அவர்களை பார்த்து கேட்டுக் கொண்டே இருக்க “நாங்கெல்வாம் நாகராஜ் அண்ணா ஆளுங்க உன்னை கொன்னு புதைச்சுட்டு வர சொன்னாரு அண்ணன்” என்க கருப்பன் இன்னும் கோபத்துடன் அவர்களை பார்த்து முறைத்தான்.

 

“அந்த நாய் சொன்னுச்சுன்னு நீங்க எல்லாரும் என்னை கொல்ல வந்திங்களா உங்களை வெட்டி கல்லுப்பாறையில புதைக்குறதுக்குள்ள இங்கே இருந்து ஓடிப் போய்டுங்க” என்றான் கருப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே கர்ஜனையான குரலில். 

 

அவனை பார்த்து பயந்து ஓடாமல் நால்வரும் அங்கேயே நிற்க அதில் ஒருவன் அருவாளுடன் கருப்பனை நெருங்கி வர 

கருப்பன் ராவணன் தன் எதிரிகளை வேட்டையாடுவதை போல சினத்தோடு அவன் அருகில் நெருங்கி அசால்ட்டாக அவனை தூக்கி தரையில் வேகமாக போட அவன் முதுகில் பலமாக அடி பட “அம்மா” என்று கத்தினான் மற்றவர்கள் கருப்பனை பார்த்து பயம் கொள்ள நரம்புகள் புடைக்க முகம் சிவக்க கோபத்துடன் நின்றிருந்தான். 

 

இரண்டாவதாக ஒருவன் கருப்பனை நெருங்கி வந்து அவன் மீது அருவாளை வீச போக அடுத்த நொடி கருப்பன் அவன் கையை பிடித்து வளைத்து அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் அவன் முகமே ரத்தமாக மாற மூன்றாவதாக இருந்தவன் பயந்து நடுங்க ஆரம்பித்தான். 

 

“அண்ணா எங்களை மன்னிச்சிடுங்க காசுக்காக ஏதோ தெரியாம வந்துட்டோம் 

பிள்ளைக் குட்டிக்காரன் அண்ணா நான் எங்களை மன்னிச்சி விட்டுருங்க” என்று அவன் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருக்க கருப்பனின் பின்னே வந்த ஒருவன் தன் கையில் இருந்த பெரிய அரிவாளால் கருப்பனை வெட்ட பின்னிருந்து கையை ஓங்கி கொண்டு வர கருப்பன் திரும்பி பார்க்காமலேயே அவனின் கைப்பிடித்து தடுத்தவன் தன் காலை உதறிவிட்டு திரும்பி நின்று அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து அவனை மீண்டும் தாக்க ஆரம்பித்தனர். 

 

கருப்பன் அவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தான் இறுதியாக அனைவரையும் அடித்து வீழ்த்த மூலைக்கு ஒருவராக விழுந்து கிடந்தனர் அவன் பலத்துக்கு அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை தடுமாறினர். 

 

கருப்பன் அங்கிருந்து இறுதியாக நடந்து போக அவனின் பின்னே ஒருவன் ஓடி வந்து அவன் முதுகில் வெட்ட வலியுடன் திரும்பிய கருப்பன் தன்னை காத்துக்கொள்ள அவன் கையில் இருந்த அருவாளை பிடுங்கி அவன் கழுத்தில் ஓங்கி வெட்டினான் அவன் கழுத்தில் வெட்டு ஆழமாக விழுந்து விட ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்து துடித்தவன் அதே இடத்தில் இறந்து போனான். 

 

அந்த நேரம் அங்கு வந்த நாகராஜன் 

“அடப்பாவி கொலையே பண்ணிட்டியா” என்று ஊரை கூட்ட அனைவரும் அங்கே ஓடி வந்தனர் கருப்பன் கையில் அருவாளுடன் நிற்க இறந்து போனவனின் மனைவி தன் பிள்ளைக்களோடு அங்கு ஓடி வந்து கதறி அழ ஆரம்பித்தாள். 

 

நாகராஜன் போலீஸ்க்கு போன் செய்திருக்க கருப்பனின் கையில் விலங்கு மாட்டி அழைத்து செல்ல நாகராஜன் அவன் அருகில் வந்தவன்

“பங்காளி எனக்கு தெரியாதா நீ எவ்வளவு பெரிய பலசாலின்னு இப்படி எதாவது ஒன்னு நடக்கும் எனக்கு முன்னாடியே தெரியும் இனி இந்த ஊருக்கு தலைவர்ன்னா அது நான் ஒருத்தன் மட்டும் தான்” என்றான் சிரிப்புடன். 

 

போலீஸ் அங்கே எஞ்சி இருந்த மூவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க “ஜாதி வெறியில இந்த ஊர் தலைவர் வெட்டி கொன்னுட்டான் சார்” என்றான் அழுது கொண்டே ஒருவன் 

அவர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்ற இறுதியாக கருப்பனும் ஏறினான். 

 

இளமதி அவளின் தாய் கருப்பனின் தாய் தந்தை பெரியப்பொண்ணு நந்தினி என்று அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்திருந்தனர் கருப்பனுக்கு இளமதியை பார்க்கும் போது மிகவும் மனம் வலித்தது. 

 

ஜீப் அங்கிருந்து செல்ல “மாமா மாமா” என்று கத்தி அழுது கொண்டே அவளும் அவன் பின்னேயே ஓடினாள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தவிப்புடன் நின்றவள் தன் மாமனை அழுத விழிகளுடன் பார்த்து கொண்டே நிற்க 

கண்கள் சரியாக தெரியாமல் அனைத்தும் மங்கலாக தெரிந்தது அப்படி மயங்கி கீழே சரிந்தாள். 

 

இதை தூரத்தில் இருந்து பார்த்த சின்னப்பொண்ணு அவள் அருகில் ஓட அனைவரும் அவள் அருகில் வந்தனர் தண்ணீர் தெளித்து இளமதியை எழுப்ப 

அவளும் மெல்ல கண்ணை திறந்தாள். 

 

அந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சி ஒருத்தி அவளின் கைப்பிடித்து பார்த்தார் 

“எல்லாம் நல்ல விஷயம் தான் நம்ம மதி உண்டாகி இருக்காள்” என்றார் அதை கேட்ட இளமதியின் முகம் மலர்ந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மனதில் மலர்ந்த மல்லிகை - 8

அத்தியாயம் 08​


அவர்களது ஊரான மங்களாபுரத்தில் பத்தாவது பரீட்சைக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததில் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அதில் மிகவும் மகிழ்ந்தது மணிவண்ணன் தான். இந்த அனுமதி கிடைத்ததற்கு முழு காரணமும் மணிவண்ணன் தான்.

வெறும் தொடக்கப்பள்ளிகள் மட்டும் உள்ள அக்கம் பக்கம் உள்ள சிறிய ஊருக்கெல்லாம் சென்று, தங்கள் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்படி பார்த்துக் கொண்டான். வெறுமனே சேர்ப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கும் சரியான ஏற்பாடு செய்தான்.
சில...


Read more

அன்பின் 🕊️சிறகுகள் (அத்தியாயம்-11)

அன்பின் 🕊️சிறகுகள்
(அத்தியாயம்-11)

“அதுக்கப்புறம், 15 நாள் நான் ஸ்கூலுக்கே போகல; என் அத்தைக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் அவங்க பையன் சின்ன வயசுலேயே கிணத்துல தவறி விழுந்து இறந்துட்டான்.
அவங்க பொண்ண என் அத்தை டெய்லி
தலை சீவி பூ வச்சு, அழகு பார்த்து சாப்பாடு கொடுத்து பள்ளிகூடம்
அனுப்பும் போது; நான் அழுக்கு டிரஸ்ஸோட தலைமுடி கூட சீவ
தெரியாம பரட்டை தலையோட நின்னு அதை பார்க்கும் போது
ஏக்கமா இருக்கும். நம்மள எப்பவும் அழகுபடுத்தி பார்க்கிறவங்க
அம்மா மட்டும்தான்னு அழுகையா...


Read more

VVT -20

அத்தியாயம் -20


யசோதா, வீட்டில் வேலையாய் இருந்தாள். முதல் நாள் இரவு ஆதர்ஷிடம் பேசி முடித்த பின்னும், அதைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் தாமதமாகத் தூங்கினாள். அதனால் காலையில் முழிப்பு தட்டவே நேரமாகி விட்டது அவளுக்கு.

மகனும் மகளும் அப்போது தான் பள்ளிக்கு, கல்லூரிக்கு கிளம்பி இருந்தனர். கணவரும் கிளம்பத் தயாராகி விட்டார்.

அவளுக்குத் தான் அன்று மருத்துவமனைக்கு செல்லத் தாமதமாகி விட்டிருந்தது. தலையும் வலித்தது போல் இருக்கவே அரை நாள் விடுப்பு கூறி விட்டு வந்து வேலையைத் தொடர்ந்தாள்...


Read more
❌