Normal view

Received before yesterday

கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்

ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ”   நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல்  புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது. 

ஏகலைவன்

ஒரு நாள் இளவரசர்கள் அனைவரையும் அருகில் இருந்த வனத்திற்கு கூட்டி சென்றார் துரோணர். அவர்களுக்கு முன்பு அவர்களின் நாய் சென்றது. திடீரென்று சப்தம் வந்த திசையை நோக்கி குரைத்துக் கொண்டே சென்றது அந்த நாய். சில நிமிடங்களுக்குப் பின் அதன் குரைப்பு அடங்கிவிட, என்ன ஆனதென்று அனைவரும் அங்கு சென்றனர். அங்கே அந்த நாயின் வாய் அம்புகளால் கட்டப்பட்டிருந்தது.

பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை

ன்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்," திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!" என்றான்.

திக்குவிஜயம் : கார்த்திக் ராமச்சந்திரன்

May 09, 2025 நேரமாக ஆக ஆக விதவிதமாக ஊர்வலங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஓதுவார்கள் இசைவாத்தியங்கள் முழங்க சென்றதை முருகேசன் புளியோதரையை திண்றவாறு பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் நின்றவரிடம் ‘இன்னைக்கு என்ன வாகனத்துல சாமி வரும்’ என்றான். அவர், ‘இன்னைக்கு திக்குவிஜயம்.’ என்றார். ‘அப்ப திருக்கல்யாணம் முடிஞ்சுருச்சா’ என்றான். ‘திக்குவிஜயத்துக்கு முன்னாடி திருக்கல்யாணம் நடக்குமா நாளைக்கு தான் திருக்கல்யாணம்’ என்றான் சலிப்புடன்.

தும்ரி

அவளிடம் அப்படியெல்லாம் தனது மனதில் உள்ளதைக் கேட்க தயக்கமெல்லாம் தேவையில்லை என்று ஒரு பக்கம் உணரும் போதே மறுபக்கம் அவள் அதன் பிறகு தன்னை இப்படியே விட்டுச் சென்றாள் அதை எப்படி தாங்குவது? என்றும் அச்சமாயிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை தேவநாயப் பாவணார் நூலகத்தில் ஒரு எழுத்தாளரின் நூல் வெளியீட்டு விழா அதற்கு போகலாம் என்று ஏற்கனவே இருவரும் பேசியிருந்தார்கள்.

புதிய புனைவு வாசிப்புக்கலை – வடிவங்களை வாசித்தல்: கார்த்திக் பாலசுப்ரமணியன்

April 16, 205 அக்காலப் புதினங்கள் பலவும் மேற்கத்திய ஆங்கில நாவல்களின் தழுவல்களாகவே இருந்திருக்கின்றன. அவையும் பெரும்பாலும் துப்பறியும் கதைகளாகவும், பெண்கள் நாவல்களை வாசிக்கத் தடைசெய்யும் வகையிலான ரசம் சொட்டும் காதல் கதைகளாகவும் இருந்திருக்கின்றன. ஊர்ப் பக்கங்களில் இப்போது வரை கதைப் புத்தகம் வாசிப்பது என்பதே செய்யக்கூடாத ஒன்றென நிலவும் போக்குக்கெல்லாம் இதுபோன்ற தரமற்ற நாவல்களின் பெருக்கமே ஆதாரமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

கொலையாளியை ஜீரணித்தவர்

வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் "வாதாபி! வெளியே வா!" என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும்.

கொக்கென நினைத்தாயோ ?

தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் "பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்" எனக் கூறினாள்.
❌