புதிய புனைவு வாசிப்புக்கலை – வடிவங்களை வாசித்தல்: கார்த்திக் பாலசுப்ரமணியன்
15 April 2025 at 18:30
April 16, 205
அக்காலப் புதினங்கள் பலவும் மேற்கத்திய ஆங்கில நாவல்களின் தழுவல்களாகவே இருந்திருக்கின்றன. அவையும் பெரும்பாலும் துப்பறியும் கதைகளாகவும், பெண்கள் நாவல்களை வாசிக்கத் தடைசெய்யும் வகையிலான ரசம் சொட்டும் காதல் கதைகளாகவும் இருந்திருக்கின்றன. ஊர்ப் பக்கங்களில் இப்போது வரை கதைப் புத்தகம் வாசிப்பது என்பதே செய்யக்கூடாத ஒன்றென நிலவும் போக்குக்கெல்லாம் இதுபோன்ற தரமற்ற நாவல்களின் பெருக்கமே ஆதாரமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.