ஸ்வப்ன வாசவ தத்தா – 9
30 April 2025 at 16:45
‘என் மகள் வாசவதத்தா மறைந்து விட்டாள். எனக்கும், மகா சேனருக்கும் எங்கள் மகன்கள் கோபால, காபாலிகர்கள் போலவே தான் நீங்களும். நாங்களே முன்னால் தீர்மானித்து விட்டிருந்தோம். எங்கள் மருமகன் உதயணன் தான் என்று. உஜ்ஜயினிக்கு உங்களை அழைத்து வந்த காரணமும் அதுவே. அக்னி சாக்ஷியாக விவாக நடை முறைகள் இன்றி வீணை கற்றுக் கொள்ள என்று உங்களிடம் அனுமதித்த பொழுதே உங்களுக்கு என்றே கையளித்து கொடுக்கப் பட்டவள் போலத்தான்.