விளக்கேற்றுபவன்
23 February 2025 at 12:57
அந்த நேரத்தில் முற்றத்தில் சிவராசனின் சைக்கிளைக் காணமுடியாது. அவர் வேளைக்கே, அப்பா எழும்புவதற்கு முன்னராக எழுந்து, பின் வளவிற்குள் இருக்கும் இரண்டு மாமரங்களிலும் கொப்புகளை உலுப்பி மாங்காய்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவார். முத்தலும் பிஞ்சும் என்று அங்கே ஒன்றும் இருக்காது. பின் வளவைப் போய்ப் பார்த்தால் மாமரக் கொப்புகள் முறிந்து காணப்படும்.