Normal view

Received before yesterday

கவிதை என்ன செய்யும்

13 April 2025 at 13:35
எல்லோருக்கும் எப்போதும் நேசிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு காலமோ சூழ்நிலையோ நல்லூழோ அமைந்துவிடுவதில்லை. கல்வியின் பொருட்டோ பணியின் பொருட்டோ அல்லது வாழ்வின் அழுத்தத்தினாலோ பிரிவு அமைகிறது. இதில் பேரன்பும் பெருங்காதலும் பிரிவின்றி நிறைவு கொள்ளாத தெய்வங்கள்.  தொலைத்தூர உறவில் காதலில் இருப்பவர்கள் சாலையில் பயணிக்கும் போது  எல்லை பலகையில் தெரியும் ஊரும் அவற்றின் கிலோ மீட்டர்களும் அளிக்கும் கிளர்ச்சியையும் துயரையும் நன்கு அறிவார்கள்.
❌