Normal view

Received before yesterday

செல்வசங்கரன் கவிதைகள்

ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கிளம்பிக் கொண்டிருக்க மலையே இறங்கி வந்து கைகளில் என்னை ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட எதுவும் மாறாதென்று தோன்றியது

மைக்கேல்:  புலங்களும் ஒளியும்

கண்ணாடி இழைகள் காகிதங்களை இழுப்பது, காந்தங்கள் ஒன்றையொன்று விலக்குவது என மின்சாரம் குறித்தும் காந்தம் குறித்தும் பதினெட்டாம் நூற்றாண்டில் சில செப்பிடு வித்தைகளைத் தாண்டி எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இவை குறித்த ஆய்வுகள் மெதுவாகத் துவங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச்  சென்றது. லண்டனில் ஆய்வகம் ஒன்றில் சிறு தையல் நூல்கண்டுகள், ஊசிகள், கத்திகள், இரும்புக் கூண்டுகளை வைத்து மின் மற்றும் காந்தப் பொருட்களின் ஈர்ப்பு - விலகலை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

15

“இது இன்னும் மோசம். பொநுதான் இதன் காரணமா?” என் இருபது ஆண்டு ஊடக வாழ்க்கையில் நான் கேட்ட, படித்த பல சதிக்கோட்பாடுகள் நினைவிற்கு வந்து என்னை அந்த உரையாடலில் ஆர்வமிழக்க செய்தன. இங்கே வந்ததற்கு பதிலாக முன்னரே திட்டமிட்டபடி என் துணையுடன் வெளியே போயிருக்கலாம். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்திக்க தொடங்கினேன்.

நியூட்டனும் சிறுநிலவும் – 2

மத்தியகாலத்தில் கோலோச்சிய அரிஸ்டாடிலினுடைய கோட்பாட்டு கட்டமைப்பின் வீழ்ச்சியே இது.  உதாரணத்திற்கு தாந்தேவின் பிரபஞ்சத்தினையே காணலாம்: அரிஸ்டாடிலின்படி பிரபஞ்சத்தின் மையமாக பூமிப்பந்தும் அதை சுற்றி வரும் விண்ணக கோள்களும் இருந்தன. இனி அவ்வாறல்ல.  அடர்த்தியான, எல்லையற்ற, விண்மீன்கள் பொறிக்கப்பட்ட, மையமோ எல்லைகளோ இல்லாத ஒன்றே பிரபஞ்சம்.

நியூட்டனும் பிறையும் – 1

மண்ணுலகம் என்னும் தெளிவான பிரிவினை அவசியம்.  விண்ணுலகிலுள்ள அனைத்தும் படிகங்களானவை. மையமான கோள வடிவான புவியினை, பொதுவான மைய வட்டப்பாதையில்  நிரந்தரமாக அவை சுற்றி வருகின்றன. இனி, மண்ணுலகில் சாதாரண மற்றும் தூண்டப்பட்ட இயக்கங்கள் என்னும் பிரிவினை அவசியம். ஏதேனும் ஒரு வகையான தள்ளுதலில் தொடங்கும் தூண்டப்பட்ட இயக்கம், அதனுடனேயே தானும் நின்றுவிடும்.  சாதாரண இயக்கம் மேலும் கீழுமாக செங்குத்தான திசையில் - பொருள் மற்றும் இடத்தைப் பொறுத்து இயங்கும்
❌