Normal view

Received before yesterday

காதலெனும் திசைமானி

சிவதனுசு உடைபட்டது. மழையில் கண்ணீர்த்துளியாய் நின்று இசைத்துக்கொண்டிருந்தான். ஆம் கேள்விகளை நோக்கி பாடலாகப் பெருகுகிறான் அவன் பழி பாவங்களை நோக்கி சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன் கண்ணீரை நோக்கி கண்ணீராகவே பெருகுகிறான் அவன். பேதையாய் ஆகி நிற்பவளே காதலின் அழைப்புகள் ஆழங்களில் பிறக்கிறது

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

அன்னையே மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன் ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான் எத்தனை எத்தனை அழகு கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள் அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது சுடரேற்றும் வளைக்கரங்கள் விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில் என் இசையின் காலங்கள் கழிகிறது.
❌