Normal view

Received before yesterday

பாவை என்று சொல்லாதே என்னை!

2 June 2025 at 18:14

சந்திரவதனா செல்வகுமாரனின் கவிதைத்தொகுப்பு – வ.ந.கிரிதரன்

Paavai Entru Sollathe Ennai – Kavithaikal

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின்   கவிதைத்தொகுப்பு “பாவை என்று சொல்லாதே என்னை” – மனஓசை வெளியீடு.  72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.  புகலிடத்  தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன்.  எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின்  (செல்வி  சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி.  இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் இணைந்து, போராடி மறைந்தவர்கள். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.

ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்) பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள்,  யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம்  பெற்றுள்ளன.

தொகுப்பின் ‘என்னுரை’ சந்திரவதனாவின்  எழுத்துலகப் பயணத்தைச் சுருக்கமாக விபரிக்கின்றது. இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைக்கு இவர் அனுப்பிய கவிதை அந்நாளில் பிரபல ஒலிபரப்பாளராக விளங்கியவர்களில் ஒருவரான இராஜேஸ்வரி சண்முகத்தின் பாராட்டைப் பெற்று ஒலிபரப்பானதாக (1981) ‘என்னுரை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரி பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில்தான் அந்த ‘வயல்வெளி’ என்னும்  கவிதை ஒலிபரப்பானது.  நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளர்கள் பலரின் அடித்தளமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இருந்திருக்கின்றது.  இவரது சகோதரி சந்திரா இரவீந்திரனின் எழுத்துலகப் பயணமும் 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையிலேயே  ”ஒரு கல் விக்கிரகமாகிறது”  என்னும் சிறுகதை மூலம் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதை அவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதியிருந்தார்.

அதே சமயம் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டியவர் இவரது தந்தையாரான தியாகராஜாவே என்பதையும் ‘என்னுரை’ எடுத்துக்காட்டுகின்றது. சிறுவயதிலேயே தியாகராஜா அவர்கள் நாட்குறிப்பேடொன்றினைச் சந்திரவதனாவுக்கு வழங்கி அவரது அன்றாட அனுபவங்களை எழுதும்படி தூண்டியிருக்கின்றார். அதுவே பின்னர் அவரது எழுதுலகப் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இச்சமயத்தில் வீடெங்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள்,  நூல்களால் நிறைத்திருந்த என் தந்தையாரின் நினைவுகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவே என் எழுத்தார்வத்துக்கும்  தீனி போட்டது.

இத்தொகுப்பின் “பாவை என்று சொல்லாதே என்னை” என்னும்  பெயரைப் பார்த்ததும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிதைகளை மையமாகக் கொண்டு இத்தொகுப்பு அமைந்திருக்குமென்று எண்ணினேன். தொகுப்பு அதனைப் பொய்ப்பிக்கவில்லை. பல கவிதைகள் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கின்றன.  இத்தொகுப்பு பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதோடு, நனவிடை தோய்தல்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்நினைவிடைத் தோய்தல்கள் சந்திரவதனா தன் வாழ்வில் சந்தித்த பல்வகை அனுபவங்களை, இழப்புகளை, அவற்றால் எழுந்த  நீங்கா நினைவுகளை  வெளிப்படுத்துகின்றன. அவரே ‘என்னுரை’யின் இறுதியில் கூறுவதுபோல் அவரது  ‘உணர்வுகளின் வடிகால்கள்’ அவை.

தொகுப்பின் தலைப்புக் கவிதை “நான் ஒரு பெண்“. இதன் வரிகளே ‘பாவை என்று சொல்லாதே என்னை’  

‘பாவை என்று
சொல்லாதே என்னை
நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும்
அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும்
நான் ஒன்றும்
வாய் பேசாப் பொம்மையில்லை!’

இக்கவிதை வரிகள் அனைத்தும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவை.

‘வீணை என்று
சொல்லாதே என்னை.
நீ மீட்டுகையில் நாதமிசைக்கவும்
மீட்டாதிருக்கையில் மெளனிக்கவும்
நான் ஒன்றும் ஜடமில்லை!’

‘பூ என்று
சொல்லாதே என்னை
தேவைப்பட்டால் சூடவும்
வாடி விட்டால எறியவும்
நான் ஒன்றும்
எந்த வண்டுக்குமாய்
இதழ் விரிக்கும் மலரில்லை!’

இவ்விதம் ஆணாதிக்க சமுதாயமொன்றில் விடுதலைக்காக ஏங்கும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதையின் இறுதி வரிகள் அன்புடன் கூடிய மென் உறவுக்காக ஏங்கும் ‘பெண் என்று மட்டும் எண்ணு என்னை, அது போதும் எனக்கு!’ என்று  முடிகிறது.

நாற்குணம்” என்னும் கவிதையில் பெண்ணை அடிமையாக்கியோர் நாணப் போராடுகின்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிப் பெண் போராளிகள். இருந்தும்,
‘சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை.
ஆணாதிக்கமும் அடக்குமுறையும்
முற்றாக ஒழியவுமில்லை!’

தொலைக்காதே உன்னை”  என்னும் கவிதை
‘பெண்ணே! நீ, கிளர்ந்தெழு!
அழுவதை மறந்திடு.
போரிடவும் துணிந்திடு!’
என்று பெண்களை நோக்கி  அறைகூவல் விடுக்கிறது.

வழக்கம்போல் அடுப்படிக்குள்”  என்னும்  கவிதை
‘அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற் நினைப்பை
கொளுத்தி எறிந்தவள் மாலதி’

என்று சமையற்காரியாய், போகப்பொருளாய் இருப்பதுதான் பெண்ணின் வரைவிலக்கணம் என்னும் நிலையை மாற்றியவள் பெண் போராளியான மாலதி என்று கூறும் கவிஞை கவிதையைக் கீழுள்ளவாறு முடிக்கின்றார்.

‘…கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்..
அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல..!’

மாலதி போன்ற பெண் போராளிகளின் இருப்புக் கூட  சமுதாயத்தில் பெண்ணின் நிலையை மாற்றவில்லையே என்று இங்கு கவிஞை வேதனைப்படுகின்றார்.  

களிக்கும் மனங்களே கசியுங்கள்” என்னும் கவிதையை இயக்கத்துக்கு உதவும்படி  வேண்டும் பிரச்சாரக் கவிதையாகக் கருதலாம்.

புற்று நோய்”  என்னும் கவிதை அலுலகத்தில் கூட பணி புரியும் பெண்ணொருத்திக்கு புற்றுநோய் காரணமாக அவளது மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க இருக்கின்றார்கள். அப்பெண்ணுக்கு அது தரும் வேதனையை எடுத்துரைக்கும் கவிதை. அக் கவிதை ஆணாதிக்கச் சமுதாயத்தில் மார்பகத்தை வெறும் உறுப்பாக உணராமல், போகப்பொருளாகக் கருதும் நிலையும் அப்பெண்ணின் துயரத்துக்குக் காரணம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது. இதன் மூலம் இக்கவிதையும் பெண் விடுதலைக்கவிதைகளில் ஒன்றாக இனங்காணப்பட முடியும்.

உனக்காய் வாழ்‘ என்னுங் குறுங்கவிதையும்
‘பெண்ணே!
ஊருககாய் வாழாதே!
உனக்காய் வாழ்!’
என்று பெண்ணை எழுச்சி கொள்ளக் கோரிக்கை விடுக்கிறது.

இன்னுமொரு குறுங்கவிதை “உனதாய்” அது
‘உனது இருப்பு
உனது விருப்போடு
உனதாய் இருக்கட்டும்!’
என்று அறிவுரை கூறுகிறது.

உனக்கு விடுதலை வேண்டும்‘ கவிதை
‘பெண்ணே!
உனக்கு விடுதலை வேண்டும்!’
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது.
கலாச்சாரம், பண்பாடு, அம்மா, அம்மம்மா வழிமுறையில், சமூகச் சங்கிலியை உடைத்தெறிய முடியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணுக்கு முதலில் அவளிடமிருந்து விடுதலை வேண்டும் என்கின்றது.

ரணம்” கவிதை
‘உனக்காக
என் சுயத்தை எல்லாம் இழந்தது
போதும்…
இழப்பதற்கு என்னிடம்
இனி எதுவுமே இல்லை!’
என்று தன்னை உணர்ந்து சுயபரிசீலனை செய்த பெண்ணொருத்தியின் உளநிலையினை வெளிக் காட்டுகிறது.

பால்வினை” என்னும் இன்னுமோர் குறுங்கவிதை
ஏழ்மையினால், மனிதர்களின் இச்சையினால், சூழ்ச்சியினால், பால்வினைக் கிணறுகளுக்குள் தள்ளப்பட்டு, உடல்களுடன் உள்ளங்களும் ஊனமான பெண்களைப்பற்றி வருந்துகிறது.

உன் பலம் உணர்ந்திடு” குறுங்கவிதை தாயகத்தில் ‘வெண்கலத்துடன் போராடிய பெண்களின் கைகள் சுடுகலன்கள் ஏந்தி நிற்கையில், புகலிடத்திலோ தமிழ்ப்பெண்கள் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் ஒளிந்திருந்து தம் வலிமை உணராமல் கண் கலங்குகின்றார்கள்’ என்று விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

பெண்ணே நீ இன்னும் பேதைதானே!” கவிதை
‘மஞ்சளில் தாலி கட்டி
வேலி என்பார்!….
நுண்ணிய உணர்வுகள்
உனக்கேன் என்பார்.
பெண்ணெனப் பிறந்ததற்காய்
இன்னும் என்ன சொல்வார்?’ என்று கேள்வி கேட்கிறது.

இவ்விதம் தொகுப்பின் பல கவிதைகள், தொகுப்பின் தலைப்புக்கேற்பப் பெண் விடுதலையை வலியுறுத்துபவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சுதந்திரம்” இலங்கையின் சுதந்திரம் தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தைத் தரவில்லை. மாறாக 1958 தொடக்கம் 1983 வரையில் இனரீதியிலான வன்முறைகளைத்தாம், அடக்குமுறைகளைத்தாம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்க முடியாது அந்நியநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற கோழைகள் என்று தன்னை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் சந்திரவதனா.

கொழும்பு றோட்டில்” போர்ச்சூழலில் தாயகம் திரும்பிய பெண் ஒருத்திக்கு அங்கு நிலவிய பாதுகாப்புரீதியிலான அடக்குமுறைகள் ஏற்படுத்தும் பொலிஸ் ரிப்போர்ட், திடீர் சோதனைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்… என்று பல இடர்களை விபரிக்கிறது.

உயிரோடு திரும்புவேனா” புகலிடமான ஜேர்மன் நாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தந்தையைப் பார்க்கச் செல்லும் பெண்ணொருத்தி, தாய் மண்ணில் நிலவும் அனர்த்தங்கள் கண்டு தளராமல் செல்வதை எடுத்துரைக்கும் கவிதை.

இழந்த மண்ணின், இனிய இறந்த காலத்து நினைவுகளால் எழும் கழிவிரக்கத்தை வெளிக்காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் சில உள்ளன. அவற்றிலொன்று “சுகமான நினைவு“. சிறிது நீண்ட கவிதை. வாசிக்கையில் வாசகருக்கும் சுகமான இனியதோர் உணர்வினைத்தரும் மொழி கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது.
‘செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ, செம் மஞ்சட் கதிர்களை கதிரவன் வீச, பறவையினம் சிறகடிக்க, வண்டினங்கள் ரீங்கரிக்க, குயிலினங்கள் இசைபாட, மெல்லென விடிந்தது அங்கெனது காலை’ என்று இழந்த காலத்து நனவிடைதோய்தலின் இனிமையில், அதனால் விளைந்த கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் உளத்தை இக்கவிதை விபரிக்கின்றது.

நிமலராஜனே!” ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை பற்றிப் பேசும் கவிதை. பேச்சுரிமையற்ற சூழலில் நினைவாகிப் போன ஒருவராக அவரை விபரிக்கின்றது.

சந்திரவதனா செல்வகுமாரனின் அண்ணன், தம்பியர் இருவர் ஈழ விடுதலைப் போராளிகளாகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். ஒரு குடும்பத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு. காலத்தால் அழிக்க முடியாத பெருந்துயரம். தொகுப்பின் முதல், இறுதிக்கவிதைகள் இவ்விதம் போராட்டத்தில் அமரத்துவம் அடைந்த சகோதரர்களைப்பற்றி நினைவு கூர்கின்றன. இறுதியாக அவர்கள் நினைவுகளில்தாம் இருக்கின்றார்கள். தொகுப்பின் முதற் கவிதையான “நினைவுகள்” மூத்தக்கா என்றழைக்கும் தம்பியைப்பற்றியும், சின்ன வார்த்தைகளால் சீண்டும் அண்ணனைப்பற்றியும் நினைவு கூரும். இறுதிக்கவிதை “தம்பிமார்”, “அண்ணா!”, “தம்பியர்” பற்றிய நினைவுகளின் வெளிப்பாடு. ஒரு வகையில் இத்தொகுப்பை அவர்களுக்கான் அஞ்சலித் தொகுப்பாகவும் கருதலாம். தொகுப்பைத் தொடங்கும், முடிக்கும் வாசகர் ஒருவருக்கு அவர்களை நினைவூட்டும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு அமைந்திருக்கின்றது.

இவை தவிர மனம், காதல்… என மானுட வாழ்வின் முக்கியமான ஏனைய விடயங்களைப் பற்றிய கவிதைகளும் தொகுப்பிலுள்ளன.

புயலடித்துச் சாய்ந்த மரமொன்றின் குரல் “புயலடித்துச் சாய்ந்த மரம்“. அதன் இளமைப்பருவத்தில் மரத்தை அல்லும் பகலும் தழுவிக் கிடந்த தென்றல் அதன் முதுமையில் புயலாக மாறிச் சீர்குலைத்தது ஏன் என்று கேட்கின்றது. ‘கனிதரும் காலம் போய்விட்டாலும், நீ களைப்பாக வரும்போதெல்லாம் இளைப்பாற இடம் தந்திருப்பேனே, வேரோடு சாய்த்து விட்டாயே! என்று அது வேதனையுறுகின்றது. இது மரத்தின் கவிதை மட்டுமா? அல்லது மானுடர் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும், விமர்சிக்கும் ஒரு குறியீட்டுக் கவிதையா? அர்த்தங்கள் பலவற்றை அறிந்து கொள்ள வைப்பவை எழுத்துகள். இதுவும் அவ்வகை எழுத்துகளில் ஒன்று.

சந்திரவதனா செல்வகுமாரனின் “பாவை என்று சொல்லாதே என்னை” கவிதைத்தொகுப்பு பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்புரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள்… என்று பல்வேறு விடயங்களைக் கருப்பொருட்களாகக் கொண்ட, அவை பற்றிய அவரது நினைவுகளின் திரட்டு. எளிமையான, இதயத்தை இழுத்துப் பிடிக்கும் மொழி நடை அவரது முக்கிய பலம். உருவகங்கள் அதிகமில்லாவிட்டாலும், ஆங்காங்கே உவமைகள் சில உள்ளன. எதுகை, மோனைகள் நிறைய உள்ளன. கவிதையின் அடிநாதமாய் இருப்பது அது வெளிப்படுத்தும் உணர்வு. கவிதைகள் அனைத்துமே கவிஞையின் உண்மை உணர்வுகளின் வெளிப்பாடுகள். போலித்தனமான வறட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அல்ல. அதனால் வாசிக்கையில் நெஞ்சைத் தொடுகின்றன. வாழ்த்துகள்!

வ.ந.கிரிதரன்
19.05.2025

சொம்பு நீர்ப்பூ – நர்சிம்:

ஆசிரியர் குறிப்பு:

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும்

நர்சிம்மின் மே 2025ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.

Lydia Davisன் குறுங்கதை ஒன்றில் குழந்தையைப் புகைப்படம் எடுக்கும் தாய், கடைசியில் தான் தெரிய வரும் அந்தக்குழந்தை இறந்துபோன குழந்தை என்பது.  தொகுப்பின் தலைப்புக்கதையில் அதே போல் குழந்தையுடன் தனித்திருக்கும் தாய்.  உயிருள்ள குழந்தை.  ஆனால் கதை அதேயளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  சுசியின் உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாக வடித்தல் ஒரு ஆணுக்கு மிகவும் கடினம்.

கடைசியில் ஒரு Change of mind (செந்தில்குமாரி) யதார்த்தமாக வந்திருக்கிறது.  செய்நேர்த்தி மிகுந்த கதை.

“நுரை” கதையில் இரண்டு Mutually exclusive events.  ஆண்பிள்ளைக்கு மார்புக்காம்பில் வலி, அடுத்தது பாம்பு கடித்தல்.  இரண்டு பிரச்சனைகளும் அந்தக் கதையில் Sync ஆவது மட்டுமல்ல, போகிற போக்கில் ஒருவர் முருகேசன் அண்ணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரி, மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது.  ‘புன்கணீர்’  கதையும் எந்த அணிகலனும் இல்லாது அழகாகத் தெரியும் யுவதியின் சாயல் கொண்ட கதை.

ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பில் பல கதைகள், கல்யாண வீட்டிற்குச் செல்வதற்கு சகல அலங்காரங்களையும் செய்தபெண்,  பட்டுப்புடவையை ஏற்றிவிட்டு அவசரமாக வாசலில் மறந்த கோலத்திற்கு நான்கு கோடுகள் கிழித்த பாவனையில் இருக்கின்றன.  நர்சிம் கதைகள் அழகாக நேரத்தைக் கொடுக்க வேண்டும், Fine tuning ஒரு எரிச்சலூட்டும் பணி ஆனால் அதில் சிரத்தை காட்ட வேண்டும்.

கதைகள் எல்லாமே ஏதோ உணர்வைத் தொட்டுத் தொடருகின்றன.  உணர்வுகளுக்கு அதிக தூண்டுதல் கொடுத்து செயற்கையாக்காமல் அளவான கலவையில் கதைகளில் கலக்கத் தெரிந்திருக்கிறது நர்சிம்முக்கு.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு மே 2025

விலை ரூ. 100.

சொம்பு நீர்ப்பூ – நர்சிம்:

ஆசிரியர் குறிப்பு:

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும்

நர்சிம்மின் மே 2025ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.

Lydia Davisன் குறுங்கதை ஒன்றில் குழந்தையைப் புகைப்படம் எடுக்கும் தாய், கடைசியில் தான் தெரிய வரும் அந்தக்குழந்தை இறந்துபோன குழந்தை என்பது.  தொகுப்பின் தலைப்புக்கதையில் அதே போல் குழந்தையுடன் தனித்திருக்கும் தாய்.  உயிருள்ள குழந்தை.  ஆனால் கதை அதேயளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  சுசியின் உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாக வடித்தல் ஒரு ஆணுக்கு மிகவும் கடினம்.

கடைசியில் ஒரு Change of mind (செந்தில்குமாரி) யதார்த்தமாக வந்திருக்கிறது.  செய்நேர்த்தி மிகுந்த கதை.

“நுரை” கதையில் இரண்டு Mutually exclusive events.  ஆண்பிள்ளைக்கு மார்புக்காம்பில் வலி, அடுத்தது பாம்பு கடித்தல்.  இரண்டு பிரச்சனைகளும் அந்தக் கதையில் Sync ஆவது மட்டுமல்ல, போகிற போக்கில் ஒருவர் முருகேசன் அண்ணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரி, மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது.  ‘புன்கணீர்’  கதையும் எந்த அணிகலனும் இல்லாது அழகாகத் தெரியும் யுவதியின் சாயல் கொண்ட கதை.

ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பில் பல கதைகள், கல்யாண வீட்டிற்குச் செல்வதற்கு சகல அலங்காரங்களையும் செய்தபெண்,  பட்டுப்புடவையை ஏற்றிவிட்டு அவசரமாக வாசலில் மறந்த கோலத்திற்கு நான்கு கோடுகள் கிழித்த பாவனையில் இருக்கின்றன.  நர்சிம் கதைகள் அழகாக நேரத்தைக் கொடுக்க வேண்டும், Fine tuning ஒரு எரிச்சலூட்டும் பணி ஆனால் அதில் சிரத்தை காட்ட வேண்டும்.

கதைகள் எல்லாமே ஏதோ உணர்வைத் தொட்டுத் தொடருகின்றன.  உணர்வுகளுக்கு அதிக தூண்டுதல் கொடுத்து செயற்கையாக்காமல் அளவான கலவையில் கதைகளில் கலக்கத் தெரிந்திருக்கிறது நர்சிம்முக்கு.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு மே 2025

விலை ரூ. 100.

நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை

18 October 2024 at 16:16

பொதுவாக நரனின் கதையுலகம் பற்றிப் பேசுவதற்கு அவரது முழுப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும். முழுப் படைப்புகளையும் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் இல்லாததால் இந்தப் புத்தகம் பேசும் கதை மாந்தர்கள், சூழல்கள், கதையுலகம் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் பற்றி விரிவாகப் பேசவே நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது மற்றும் அவசியமானது என்று நான் கருதுவது அல்லது நான் கண்டடைந்தது என்று கூறினால் நரனின் கதை மாந்தர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதீத மனப்பிறழ்வுத் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் நீட்சியாகச் சாதாரண மனிதர்களிடம் இல்லாத வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்களோடு புழங்கும் அசாதாரண மனநிலை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும் இதிலொரு அழகு என்னவென்றால் தங்கள் பிறழ்வுகளை யாருமறியாது ஒரு ரகசியமாகவே அனைவரும் வைத்திருப்பது தான்.

அந்தக் கதாபாத்திரங்கள் யாருமே தங்கள் பிறழ்வு பற்றிய பிரக்ஞை அற்று ஒடுங்கிக் கிடக்கும் மனநிலை உடையவர்களாகவே இருக்கிறார்கள். பிறழ்வுகளில் பலவகை உண்டு. பிறழ்வடைந்த பலர் தங்களுக்கு ஏற்படும் புற, சமூகத் தீங்குகளின் காரணமாக அதீதக் கோபத்தில் மற்றவருக்குச் சமுதாயத்துக்குத் தீங்கு இழைப்பவர்களாக மாறுகிறவர்கள் ஒரு ரகம். அந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழியற்று தன்னை அழித்துக் கொண்டோ ஒடுங்கிக் கொண்டோ தங்களை அழித்துக் கொள்வது ஒரு வகை. நரனின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரண்டாவது வகையில் வந்து நிற்கின்றன.

தங்களைத் தாக்கும் ஏதோ ஒரு சூழல், அதிலிருந்து மேடேற முடியாத தன்மை அதன் நீட்சியாகத் தீவிரத்தன்மைகள் தொடரத்தொடர அத்தகைய பிறழ்வுகளை ஒரு பிரச்சினையாக எந்த கதாபாத்திரமும் யோசிக்கவில்லை.

அதை அனுபவிக்கத் துவங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எந்த வாசகனும் சொல்லவே முடியாது. அப்படி இருந்தால் அது அப்படிதான் இருக்க முடியும் என்று தோன்றவைப்பதில் கைதேர்ந்த ஆசிரியராக இருக்கிறார். ஏன் நம்மோடு கூட இருப்பவர்கள் தானே அல்லது நாம் தானே இவர்கள் என்று கூட எடுத்துக் கொண்டால் சரி தவறு என்று எந்தத் தராசுகளையும் தூக்கிக் கொண்டு இல்லாமல் வாசிக்கலாம்.

இவர்களால் தீங்கு நேருமா என்றால் எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்பதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாது. இந்தக் குற்றங்களின் அல்லது இவர்கள் அப்படி ஆகக் காரணமானவர்களை, சூழல்களை என்று யாரை நோக்கியும் நேரடியாகக் கைநீட்டி விட முடியாத படியான சிக்கலில் விழுந்து கொண்டவர்கள், விழவைக்கப்பட்டவர்கள்.

ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா (அதாவது அது போல் நம்மோடு உலாவும்) என்றால் அதைத் தான் அவர்கள் துன்பமெனக் கருதுவார்களோ என்று தோன்றுகிறது. அந்தப் பிறழ்வின் உச்சங்களையே அவர்கள் விடுதலையென நம்புகிறார்கள். எனில் அவர்களை அப்படியே விட்டு விடுவதே வழி என்ற முடிவுக்கு நாமே நகர்ந்து விடுகிறோம்.

 

மொத்தம் பதினொரு கதைகள்.

திருகுமொழி வடிவம் கொண்ட மொழியமைப்பு பெரும்பாலும் இல்லை. ஓரளவுக்கு அல்லது நன்றாகவே புரிந்து கொள்ள வாய்ப்புடைய எளிமையான மொழிநடைதான். ஆனால் வலுவான கதாப்பாத்திரத்திர வடிவமைப்பு, பழக்கவழக்க, காட்சி வடிவமைப்பு, திடீரென ஏதேனும் ஓர் இடத்தில் இறுக்கி முடிச்சிட்டு அங்கேயே அவிழ்க்கும் நுட்பமான இடங்கள் இவற்றை எப்படியேனும் கண்டு கொண்டால் நரனின் கதைகளுக்குள் பதற்றமின்றி உலாவரலாம்.

1. மானேந்தி கதையில் ஸ்தபதியாக வந்து சிலையைப் புணரும் கணபதி, அவன் வீட்டில் சிலை கண்திறக்காது அம்மா மீது விழுந்து இறந்து போவது இதை இறை நம்பிக்கை உடையோர் தண்டனையாகக்கூட எடுத்துக் கொள்ள முடியும். அவ்வளவு சிலை செய்பவனுக்கு நன்றோ தீதோ அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து யார்?

2. பெண்காது கதை அடைக்கலராஜிற்கு இருப்பது யாரேனும் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பிரச்சினையாக மாற அவன் முதல் மனைவி ஏன் அப்படி இருக்கிறாள், இவனால்தான் விவாகரத்து வாங்கிக் கொண்டாளா.. இப்போது வந்து கேட்பவள் எவ்வளவு காலங்களுக்குக் கேட்பாள். அவளுடைய தந்தைக்கு ஏன் தான் வேலை செய்த பஞ்சு மில்லின் சத்தங்கள் கேட்கமுடியாது மரணித்துப் போனார். காதுகளும் சத்தங்களும் நம்மை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றன‌ என்கிற பல கேள்விகளை உருவாக்கிய கதை.

3. தொகுப்பில் உடனே வாசித்த என்னால் மறக்க முடியாத‌ நான் மிகவும் ரசித்த கதை  ‘கேசம்’. ஆதியப்பனின் காலில் இருந்த புண்களைக் கண்டு கட்டிய மனைவியே வெறுத்து ஒதுக்குகையில் எங்கிருந்தோ வரும் ஆவுடைத்தங்கம் அந்தப் புண்களைக் குழந்தைகள் போல பாவித்து தன் முடிகளையே இறகாக்கி அவர் இருக்கும், இறக்கும் வரை விரும்பி மருந்திடும் கதை. ஆதியப்பனின் காம உணர்வை மனைவி கணபதியம்மாளிடம் ஏற்படுத்திக் கொள்ள முற்படுகையில் எறும்புகள் கீழிறங்கி ஓடுவது போலவும், அதே காம உணர்வை ஆவுடையிடம் உணரும் போது கடிவாய் இல்லாத கறுப்பு எறும்புகள் லட்சக்கணக்கில் ஓடுவது போலவும் அழகான குறியீடு.

4. சைக்கிள் கடையில் வேலை பார்த்தபடி உடலில் இருக்கும் சிறு ஊனத்தோடு தன் மனதைத் தன்னை விட மூத்தவளான மரியத்திற்கு தந்துவிட்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இறுதியில் அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடையில் வந்து துடைத்து மனதை ஆற்றில் படுத்திக் கொள்கிறான்.

மரியமோ ‘வா, உனக்கு என்ன தேவைனு தெரியும்’ என்று பழனிக்குப் பல வருடங்கள் கழித்துத் தன்னை தந்துவிட்டு எந்தவிதத் தாங்கல்களும் இல்லாது அவள் சைக்கிளைத் தந்துவிட்டு கணவனற்ற பாலையில் கையில் குழந்தையோடு பயணிக்க தொடங்குகிறாள். கிளிஷேவோ என்று யோசிக்கையில் முடிவு நம்மை இல்லை என்று சொல்ல வைத்துவிடுகிறது ’மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்’ கதை.

5.  ‘லயன் சர்க்கஸ்’ நலிந்து போன சர்க்கஸ் கூடாரங்களின் நுணுக்கமான உணர்வுகளைப் பேசும் கதை. லீலாவின் முதல் கணவன் காளி, அவனைப் பார்த்துக் கொண்டே லீசாவோடு வாழும் உதவியாளன் மாரீசன், தன் சர்க்கஸ் கூடாரத்திற்காக மாரீசன் கண்முன்னே கிழட்டு அதிகாரி அறைக்குச் செல்லும் கர்ப்பிணியான லீசா, வறுமையின் பிடியிலும் மானத்தை விடாத கணேசன், எதையேனும் செய்யத் துடிக்கும் குள்ளன், இரும்புக் கம்பிகளை விலைக்குப் போட்டு விலங்குகளுக்கு இறைச்சி வாங்கும் சிறுவன், மனம் உடைந்தவன் என்று உணரப்பட்ட காளி குரங்குக்குப் பதிலாகத் தன்னையே தின்னச்சொல்லி சிங்கங்களிடையே அமர்வது என்று மனித வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் அறமும், அற மீறல்களுமாய் மனதை அலைக்கழிப்பு செய்யும் கதை.

6. இதோ எனது சரீரம் கதை.

உணவகம் நடத்திய படி மூன்று ஓவியங்கள் மட்டும் வரைந்து விட்டு கடைசி ஒன்றை விற்காமல் இருப்பதற்குப் பின்புலமாக அகதி வாழ்வின் இரணங்களை அது குறிப்பதாக இறுதியில் கோர்ப்பது நல்ல இணைப்பு. பாட்டி, அம்மா, நாயகி எமி மூவரும் தோற்றமாயை துணையோடு இளைஞனின் புகைப்படத்தைக் காலங்காலமாகப் பரம்பரையாக முத்தமிட்டு ஒயின் அருந்தியபடி அவனது கவிதைகளை வாசித்துக் கிறங்கிக் கிடப்பது. பிணமாக இளைஞனைக் கண்டடைந்து ஆடைகளை அணிவிப்பது, காம உணர்வு கொள்வது. இறுதியில் எமி அவன் புகைப்படம் முன் நிர்வாணமாவது என்று நம்பமுடியாத நம்பவேண்டிய கட்டாயங்களை ஏற்படுத்தும் கதை.

7. ‘ரோமம்’ சிறுகதையில் தீயில் வெந்து கருகிப்போன தாயின் நினைவில் உழன்று அவளின் நீள முடிகளைப்பொசுக்கி நுகர்ந்து அவள் இருப்பது போலான பிரமை கணேசனை எவ்வளவு தூரம் தேடித் தூண்டுகிறது எத்தனை முடிகளைத் தேடி அலைகிறது இறுதியில் மழிக்கும் இடத்தில் முடிகளைத் திருடி அவன் மேல் கிடத்திக்கொண்டு கணேசன் என்னவானான்? குளியலறை முடிகளைத் தேடிப் பொசுக்குவது, ஓர் உணர்வு மனிதனை எவ்வாறு ஆழமாக செல்லச் செல்ல ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

8. ‘மூன்று சீலைகள்.’மூன்று சேலைகளைத் தூக்கிக் கொண்டு ஊரெங்கும் திரியும் ஆசிரியராலேயே பிறழ்வென்று ஊர் சொல்வதாகச் சொல்லப்படும் கணேசன். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிகழும் மூன்று சாவு. மூன்று சேலைக்குள் ஒளிந்து நிற்கும் மூன்று உறவுகளை இழந்த வெறுமை. வேறெதுவும் செய்யத் தோன்றாது மூன்று சேலைகளையும் மறுபடி மறுபடி முடிச்சிட்டுத் தொங்கும் முடிவு நோக்கி தன்னை தள்ளிக்கொள்ளும் காசி. உச்சிவெயில் கருநாய் ஊளை என்று குறைவான மாயமும் தொடர்ச் சங்கிலியாகத் தொடர்கிறது. மனதின் புதிர்களை யாரறிவார்?

9. ‘செவ்வக வடிவப் பெண்கள்’ எனும் இறுதிக் கதையும் அதிகப் பாதிப்பைத் தந்தது. பெண்களின் வித்தியாசமான அக உலகம், அபிலாஷைகள், பொம்மையை உயிரிருப்பதாய்ப் பாவித்துத் தழுவுதல், முத்தமிடல், புணர்தல் என்று முற்றிலும் அந்தரங்கமான பெண்களின் வேறொரு உலகங்களை அலசுகிறது.

10. ‘வண்டுகள்’ காம உணர்வை புத்தப் பௌர்ணமி அன்று மலையுச்சியில் புணர்ந்து பூரணியோடு இணைந்து வெளிப்படுத்தும் வகையிலும், பிறகு ஒவ்வொரு ஜோடி வண்டுகளை நசுக்கி நாயகன் தன் உணர்வுகளைச் சொல்வதைக் குறியீடாகவும்,

11. ‘பரிராஜா’ கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்கு ஒவ்வொரு உயிரினமாகப் பயன்படுத்தி மீண்டும் அனுப்பும் விதமாகவும், வேலையில்லாதவர்கள் பணத்துக்காக, பணத்தைப் பார்க்கிற ஆர்வத்தில் ஒவ்வொரு கட்டமாக நகர்வதையும் அவர்களை நகர்த்தி தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதையும் சுருங்கச் சொல்லி நிறைய அர்த்தங்களைத் தேடவும் தரவும் செய்கின்றன.

எல்லாப் பிறழ்வுகளிலுமே ஆண்கள் பெண்கள் என்கிற வேறுபாடற்று நீதியோ போதனைகளோ அற்று அவரவர் உடல் சார்ந்த உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே கையாண்டிருப்பதால் அது ஆபாசக் கதைகளுக்குரிய தோற்றத்தைத் தராமல் மடைமாறி பிறழ்வு அதற்கான காரணிகள் மூலங்கள் தற்போது நடப்பது என்ற அளவில் உருமாறி நகர்ந்து விடுகிறது.

சாதாரணமான மனநிலையில் வாசிக்க முடியாத கதைகள் நிறைய இருக்கின்றன தொகுப்பு முழுவதும். ஆழ்ந்த மனநிலையில் வாசிக்கும் போது மட்டுமே அதன் வீரியங்கள் காணக்கிடைக்கின்றன. நுண்ணுணர்வு சார்ந்த, அதுவும் பாலுறவுகளின் பிறழ்வு சார்ந்த நுட்பமான விஷயங்களை அநாயசமாகக் கையாண்டு இருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!


– சுபி.

நூல் தகவல்:

நூல் :   கேசம்

ஆசிரியர் : நரன்

வகை :   சிறுகதைகள்

வெளியீடு :   சால்ட் 

வெளியான ஆண்டு :   2018

பக்கங்கள் : 127

விலை : ₹  200

நூலினைப் பெற +91 93 63 00 74 57

The post நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம்.


சிறப்பான அட்டைப்படம். வேலிக்குள்ளிருந்து எழுதும் கைகள்.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின், ‘தொலைவான காலத்திலும்கூட நம்பிக்கையூட்டும் எதுவும் தென்படவில்லை’ என்னும் நடராஜா சுசீந்திரனின் மேற்கோளுடன் தொடங்கும், மிகச் சிறந்த அணிந்துரை.

நாடிலி – நாடற்றவன்;  ஏதிலி – அகதி.

இந்த சொற்களின் பொருள் எவ்வளவு வலியுடையது. கவிதைத் தொகுப்பு முழுக்க வலி, வலி, வலி…!

இத்தகைய வலியை சொற்களால் கடத்தியிருக்கிறார் கவிஞர். சொந்த நாட்டைவிட்டு வந்தால், வந்த நாட்டிலும் வலியே தொடர்வது எவ்வளவு பெரிய சோகம்..!

‘அவல முகாம்’ கவிதை இப்படி முடிகிறது:

“உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல
யாழினிகள் தெரியவில்லை!
அகதிகள் வீடடைதல் கவிதை நெஞ்சை உலுக்கும் அவலம்:
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
….
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்”

  ‘அகதி வாழ்வு’ கவிதை அதிர்வு:

மஞ்சள் கனியொன்றின்
பற்குறியில்
உறைந்து கிடக்கும்
குருதியென வீச்சமடிக்கிறது
இந்த வாழ்வு”

‘நட்சத்திரங்களினூடே…’கவிதை சோகம்:

“அவனுக்குத் தெரிகிறது
எண்ண எண்ண
நட்சத்திரங்கள் மறைந்துகொண்டே வருவது”

‘இரவு’ கவிதையில் சிறப்பான படிமம்:

”தேவையற்று வளர்ந்துகிடக்கும்
புற்றுக்கட்டியைப் போல்
துருத்திக்கொண்டிருக்கிறது
என் விருப்பத்துக்கு மாறாய்
நிர்பந்தப்பட்டிருக்கும் இன்றைக்கான இரவு”

‘கொடிய நிழல்’ கவிதை நிதர்சனத்தின் வலி:

“சீவல் தொழிலற்று
சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை
பனை நிழலும் அற்றுப் போனான் ”

இந்த கவிதைத் தொகுப்பின் மொத்த செய்தியையும், ‘எம் வாழ்வின் மிச்சமாய்…’ கவிதை கடத்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் கூட:

”காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்கு குழி தாண்டியும்
பரவிக் கிடந்தன பறவையின் இறகுகள்
முறிந்த மரக்கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகெடுத்து
எத்தனை கதைதான் நானெழுத
ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?”

கவிதையின் தலைப்பும் கடைசி வரிகளுமான விடையற்ற இக்கேள்வியை எல்லாக் குழந்தைகளும் தனது தந்தைகளிடம் கேட்பார்கள் தானே?

‘ஊமைக்காற்று’ கவிதை தகப்பனின் மற்றொரு வலி:

“மகள்
இப்போது
என் தாய்நாடு பற்றி வினவுகிறாள்
நான்
பிரபஞ்சத்தின் மேலிருந்து
ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன் ”

‘நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்’ கவிதையின் கோபத்தணலை யாராலும் தணிக்கவே இயலாது:

“நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவு மில்லை”

‘உதிரிகளின் வாழ்வு’ கவிதை அகதிகள் உதிரிகளாகிப் போன அவலத்தைப் பேசுகிறது:

“நிச்சயமற்ற வாழ்வில்
பொய்த்துப் போகும் சொற்களுக்காக
ஒருபோதும் சபித்துவிடாதீர்கள்
கிளிகளை”

‘செவ்வரி பூத்த வானம்’ குறுங்கவிதைகளில், கீழ்க்கண்ட கவிதையின் கடைசி வரிகள் கன்னத்தில் அறைகின்றன:

“முன்னொரு
மழைநாளில்
வானம் செந்நிறமானது
தரையெங்கும்
சிதறிக் கிடந்தன
செங்காந்தளைச் சுமந்த உடல்கள்”

‘அகதி முகாமில் தீபாவளி’ கவிதை முகாம்களின் அவல நிலையை தெரிவிக்கிறது. எவ்வளவு கொடுமை:

“கந்து வட்டியில்தான் இந்த வருடமும்
எமக்கான தீபாவளி
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது ”

‘புனித அப்பங்கள்’ கவிதை அதிகாரங்களின் துரோகங்களைப் பேசுகிறது:

“உங்களுக்கும் சேர்த்தே ஏற்றுக்கொண்டது பணிகளை
ஆணிகொண்டு அறையப்பட்ட குருதிக்கரங்கள்
இப்போது உங்களுக்கான
புனித அப்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
யூதாஸின் கரங்களால்”

‘மஞ்சள் நெருப்பு’ கவிதை துயரத்தின் நிறத்தைச் சொல்கிறது.

“நாடற்றவனுக்கு மஞ்சள் என்றும் துயரம்.
ஏனெனில் எரியும் நெருப்பு மஞ்சள்.”

‘கார்ட்டூன்களுக்குள் உலவும் அரசியல்’ கவிதை தகப்பனின் வலி:

“மகளிடத்து இன்னும் சொல்லாமல் வைத்திருக்கிறேன்
பிஸ்கெட்டை சுவைப்பதற்குள்
சுடப்பட்ட சிறுவனையும்
வனங்களுக்குள் கொன்றொழிக்கப்பட்ட சனத்தையும்
நினைவுகளில் சுமந்தபடிக்கு
நாடற்று அலையும் நாடோடியான
என் கதையை”

‘நவதிசை’ கவிதை அகதிகளின் தினசரி அவஸ்தை:

“எண்திசைகள் குறித்து
யாரும் அலட்டிக்கொள்வதில்லை
இடதுபக்கம் கருவேலங்காடும்
வலதுபக்கம் தைலமரக்காடும்
ஆண்டுகளுக்கும் பெண்களுக்குமான
வெளித்திசை என்பது
முகாம்வாசிகளின் ஒன்பதாவது திசை”

மழையைப் பார்க்கையிலும் தங்களின் கண்ணீர் தான் நினைவுக்கு வருகிறது கவிஞருக்கு:

“இப்படிப்
பொங்கி வழிந்தோடுகிறதே
நிலமெங்கும் வெள்ளமென
அகதிகளின் கண்ணீராய்”

 ‘அகதியின் பாதம்’ எப்போதும் தனது நிலத்தையே தேடுகிறது:

“கடல்மீதும்
சிறுதுண்டு நிலம்
தேடும்
அகதியின் பாதம்”

‘புலம்பெயராது இறந்திருக்கலாம்’ கவிதை நல்ல நாட்களை நம்பி வந்தவனின் ஏமாற்றம்:

“தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்
போர் நிலத்தில்
ஒருகணம்
இறந்தேபோயிருக்கலாம்
புலம்பெயராது”

‘காலப்பெருவெளியில்’ கவிதை அகதிகளின் நம்பிக்கை இழப்பு:

“இலையுதிர் காலத்தின்
மரங்களைப் போல்
என் நம்பிக்கைகள்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன”

‘அதிகாரத்தின் கசையடித் தழும்புகள்’ கவிதை, கவிஞரின் கவிதை மொழியின் கண்ணீர்ப் பிண்ணனி:

“பலநூறு கசையடித் தழும்புகளில்
எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்
என் மொழியை”

இப்படி 96 பக்கங்களில் ஒரு சமூகத்தின் வலி. படித்தபின் கண்கள் கலங்குவதை நிறுத்த இயலவில்லை. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் எவ்வளவு மதிப்புடையது என்று நமக்குத் தெரியவில்லை. படித்ததும் ஒரு சிறு குற்ற உணர்ச்சி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிறப்பான வாசிப்பு அனுபவம்..!


நூல் தகவல்:

நூல் : நாடிலி

வகை :  கவிதைகள்

ஆசிரியர் : சுகன்யா ஞானசூரி

வெளியீடு : கடற்காகம்

வெளியான ஆண்டு:  ஜூன் 2021

பக்கங்கள் : 96

விலை:  ₹  110

 

  •  “நாடிலி” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை வாசிக்க  Click Here

 

The post நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம். appeared first on Vimarsanam Web.

இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை


நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

The post இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்

10 September 2023 at 06:17

பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

தனலெட்சுமியின் இரு கவிதை நூல்கள்:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சியைச் சேர்ந்தவர். கவிஞர்.  மேடைப் பேச்சாளர்.  இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.  இதில் ‘பெருவெளி கடக்கும் சிறு துளி’ And ‘சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்’

ஆகிய இருநூல்களிலிருந்து கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்னுடன் பழகியவர்கள் பொதுவாகச் சொல்வது ‘ உங்களுக்குப் பொறுமை அதிகம்’.  அதையே தனலட்சுமியைப் பார்த்து என்றாவது நான் நேரில் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் சமீபத்தில் கூறினார் ‘ உங்களுடன் பேசுகையில் எங்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதேயில்லை’.   ஒருவேளை புத்திசாலித்தனமாக நான் கத்தியை மறைத்து வைத்திருக்கலாம்.

”  பதில்தரும் உன் வார்த்தைகளில்

பாசம் கூடுவதை உணர்கிறேன்

பதற்றத்தோடு சேர்ந்து கொள்ளும்

எச்சரிக்கை என்னுள் புகுந்துவிட

முன்பிருந்த இயல்பை இழக்கிறேன்

அதற்குப் பின்னான பேச்சுகளில்”

நெருக்கமானவர் மரித்த பின்னும் அவர்கள் எண்ணை, சமூக ஊடகத் தொடர்பை அழிப்பது அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று நம்மில் பலர் நம்புவதால் தான் மழையே பெய்கிறது.

“உறவுகள் நட்புகள் எண்களாய்

அடுக்கப்பட்ட அலைபேசியில்

மரித்தோரின் தொடர்புகள்

அறுபடாத சங்கிலிகளாய்

சரம் கோர்த்து நிற்கும்

நீக்கு என்ற பொத்தானை

அறவே தவிர்க்கும் விரல்

நீக்கினால் வலிக்குமென்று

சுழற்றுகிறேன் அவ்வப்போது”

சிறுதுளி தொகுப்பில் மூன்று வரிகளில் முடிக்க வேண்டிய அவசரத்திலும் பளிச்சென்று வந்திருக்கின்றன பல.

” பேச முடியாத பொம்மையிடம்

கேட்க நிறைய இருக்கிறது

குழந்தைகட்கு”

” எவருமில்லை நூலகத்தில்

புத்தகத்தைப் புரட்டியது

காற்று”

” கோர்த்த கொலுசுமணி

கொடிக்கம்பியில் அணிவகுப்பு

மழைத்துளி”

“உறங்கும் தறியில்

நெய்கிறது சிலந்தி

வலையை”

சிறுதுளித் தொகுப்பில் ஒன்றைச் சொல்லி உள்ளர்த்தமாய் மற்றொன்றைச் சொல்லும் கவிதைகள் பல வந்திருக்கின்றன.

எளிமையான கவிதைகள்.  எளிமையான Presentation.  அசாத்தியமான உற்சாகம். இவையே  இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்த உடனேயே மனதில் தோன்றியது.

நீள் கவிதைகளை விட சிறுதுளி சிறப்பாக வந்துள்ளதாக நினைக்கிறேன். காரணம்,  கடைசியாக வந்த தொகுப்பு என்பதை விட வடிவம் இவர் அகத்திற்கு நெருங்கியது என்று கருதுகிறேன்.

கவிதைகளில் நல்லாள்,இல்லாள் போன்ற சொற்கள் கவிதைத் தன்மையைக் கூட்டுவதான நம்பிக்கையை தனலெட்சுமி அவசரமாகக் கைவிட வேண்டும்.  சிறு துளிகளில் வார்த்தைகளை விடக் கற்பனைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அவை கூர்மையாக வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.  தொடர்ந்து வாசியுங்கள்.  இலக்கியத்தோடு எப்போதும் பயணியுங்கள்.  உங்கள் பொறுமையைச் சோதிப்பவர்களையேனும் சின்னதாகக் கடிந்து கொள்ளுங்கள்.

சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்

மலர்க்கண்ணன் பதிப்பகம்

73055 00990

முதல்பதிப்பு ஏப்ரல் 2021

விலை ரூ.110.

பெருவெளிகடக்கும் சிறுதுளி

வாலி பதிப்பகம் 99405 08595

முதல்பதிப்பு நவம்பர் 2021

விலை ரூ.100.

தனலெட்சுமியின் இரு கவிதை நூல்கள்:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சியைச் சேர்ந்தவர். கவிஞர்.  மேடைப் பேச்சாளர்.  இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.  இதில் ‘பெருவெளி கடக்கும் சிறு துளி’ And ‘சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்’

ஆகிய இருநூல்களிலிருந்து கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்னுடன் பழகியவர்கள் பொதுவாகச் சொல்வது ‘ உங்களுக்குப் பொறுமை அதிகம்’.  அதையே தனலட்சுமியைப் பார்த்து என்றாவது நான் நேரில் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் சமீபத்தில் கூறினார் ‘ உங்களுடன் பேசுகையில் எங்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதேயில்லை’.   ஒருவேளை புத்திசாலித்தனமாக நான் கத்தியை மறைத்து வைத்திருக்கலாம்.

”  பதில்தரும் உன் வார்த்தைகளில்

பாசம் கூடுவதை உணர்கிறேன்

பதற்றத்தோடு சேர்ந்து கொள்ளும்

எச்சரிக்கை என்னுள் புகுந்துவிட

முன்பிருந்த இயல்பை இழக்கிறேன்

அதற்குப் பின்னான பேச்சுகளில்”

நெருக்கமானவர் மரித்த பின்னும் அவர்கள் எண்ணை, சமூக ஊடகத் தொடர்பை அழிப்பது அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று நம்மில் பலர் நம்புவதால் தான் மழையே பெய்கிறது.

“உறவுகள் நட்புகள் எண்களாய்

அடுக்கப்பட்ட அலைபேசியில்

மரித்தோரின் தொடர்புகள்

அறுபடாத சங்கிலிகளாய்

சரம் கோர்த்து நிற்கும்

நீக்கு என்ற பொத்தானை

அறவே தவிர்க்கும் விரல்

நீக்கினால் வலிக்குமென்று

சுழற்றுகிறேன் அவ்வப்போது”

சிறுதுளி தொகுப்பில் மூன்று வரிகளில் முடிக்க வேண்டிய அவசரத்திலும் பளிச்சென்று வந்திருக்கின்றன பல.

” பேச முடியாத பொம்மையிடம்

கேட்க நிறைய இருக்கிறது

குழந்தைகட்கு”

” எவருமில்லை நூலகத்தில்

புத்தகத்தைப் புரட்டியது

காற்று”

” கோர்த்த கொலுசுமணி

கொடிக்கம்பியில் அணிவகுப்பு

மழைத்துளி”

“உறங்கும் தறியில்

நெய்கிறது சிலந்தி

வலையை”

சிறுதுளித் தொகுப்பில் ஒன்றைச் சொல்லி உள்ளர்த்தமாய் மற்றொன்றைச் சொல்லும் கவிதைகள் பல வந்திருக்கின்றன.

எளிமையான கவிதைகள்.  எளிமையான Presentation.  அசாத்தியமான உற்சாகம். இவையே  இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்த உடனேயே மனதில் தோன்றியது.

நீள் கவிதைகளை விட சிறுதுளி சிறப்பாக வந்துள்ளதாக நினைக்கிறேன். காரணம்,  கடைசியாக வந்த தொகுப்பு என்பதை விட வடிவம் இவர் அகத்திற்கு நெருங்கியது என்று கருதுகிறேன்.

கவிதைகளில் நல்லாள்,இல்லாள் போன்ற சொற்கள் கவிதைத் தன்மையைக் கூட்டுவதான நம்பிக்கையை தனலெட்சுமி அவசரமாகக் கைவிட வேண்டும்.  சிறு துளிகளில் வார்த்தைகளை விடக் கற்பனைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அவை கூர்மையாக வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.  தொடர்ந்து வாசியுங்கள்.  இலக்கியத்தோடு எப்போதும் பயணியுங்கள்.  உங்கள் பொறுமையைச் சோதிப்பவர்களையேனும் சின்னதாகக் கடிந்து கொள்ளுங்கள்.

சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்

மலர்க்கண்ணன் பதிப்பகம்

73055 00990

முதல்பதிப்பு ஏப்ரல் 2021

விலை ரூ.110.

பெருவெளிகடக்கும் சிறுதுளி

வாலி பதிப்பகம் 99405 08595

முதல்பதிப்பு நவம்பர் 2021

விலை ரூ.100.

துடிநிலை – பவித்ரா:

ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.  பெரம்பலூரில் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  எட்டு வருடங்களாகக் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவரும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.

Windowவை Widow என்று வாசித்தீர்களென்றால் அது தோற்றமயக்கமல்ல, ஆழ்மனத்தின் தடுமாற்றம்.  ஆழப்பதிந்தவை எப்படியேனும் எழுத்தில் வந்தே தீரும்.

”  காட்டுமல்லியைப் போல் அவ்வளவு

வாசனை இந்த இரவுக்கும் இருந்தது

முகம் முழுவதும் விகசித்தபடி

நாசிதுளைத்துச் சென்ற

விடியல்கள் இருந்தது

ஊடுபயிராக வளர்ந்த 

தோட்டத்து மஞ்சள் வாசனையும்

தண்ணீர்விட்டு வளர்ந்த

இளநீரின் குளிரில் அந்த

ஈரவானம் படர்ந்து இருந்தது”

கவிதையோ சிறுகதையோ பவித்ராவின் மொழிக்கு எல்லைக்கோடுகள் கிடையாது.  இந்தக்கவிதை வாசித்தவுடன் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.  வாழ்க்கைச்சுழற்சியை மட்டும் சொல்லவில்லை,  ஒரு Black humourஐ ஆரவாரமின்றிச் சொல்கிறது.

‘  முன்பெல்லாம்

தொடையிடுக்கில் அமுதூறும்

நாட்களை டயரியில் குறிப்பதுண்டு

இப்போது

வெற்றுக்காகிதமாய் நிரம்பிக்கிடக்கும்

டயரியில்

மகள் கோலம் வரைந்து பழகுகிறாள்”

அவல நகைச்சுவை இந்தக் கவிதையிலும் வந்திருக்கிறது.  தற்கொலைக்குக் காரணம் இந்தக் கவிதைக்குத் தேவையில்லை.  அது போலவே கடைசி ஆசை என்றாலும் பாரம்பரியச் சடங்குகளை மாற்றுவதற்கில்லை.

“பிணம் தின்பதால் தான் கடல்மீன்

சுவைப்பதாகக் கூறியிருந்தார்கள்

சில மீன்குஞ்சுகள்

எங்கள் கிணற்றில்

வளர்ந்து வந்தன

அழுக்கையும் பாசானையும்

தின்று வளர்ந்த

எங்கள் தோடத்துக்கிணற்று

மீன்களுக்கு சுவைகூட்ட

தனிமை அழுத்திய நன்நாளில்

தலைகுப்புறக் கிணற்றுக்குள்

விழுந்தேன்.

மூன்றாம் நாள்

அழுகிக்கிடந்த உடலை

எரிக்கவேண்டாம்

புதைத்துவிடுங்கள்

என்ற கடிதம் என்னோடு

சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது

பிணத்தை எரியூட்டும் தாத்தா

குவாட்டரை வாயில் சரித்தபடி

என்னுடலின் அழுகல் வாடை

தாங்காமல்

‘நார முண்ட’  என்றார்”

பவித்ராவின் இந்தத் தொகுப்பில் அடிக்கடி வரும் விஷயங்கள் இறப்பு, அப்பா.  மரணம் என்பது ஆசுவாசம் என்றொரு வரி வருகிறது.  இறந்த அப்பா நாற்காலியில் வந்தமர்ந்து சிகரெட் கேட்கிறார்.  வேப்பமரத்து நிழலில் பலருடன் கலவி செய்தவளின் உயிரை அந்த வேப்பமரத்துக் கிளையே வாங்கிக் கொள்கிறது.

பல கவிஞர்களின் கருப்பொருளான பிரிவின் துயரம் பவித்ராவின் சில கவிதைகளில் வந்திருக்கின்றது.  ஆனால் இந்தப் பிரிவுகள் மற்றவர்களைப் போலன்றி நிணவாடையும், மாறாப்பிணியும் கொண்டிருக்கின்றன.  அறுவைசிகிச்சை மருத்துவரின் சலனமின்மையுடன் பவித்ராவின் கவிதைகள் உடலை உற்று நோக்குகின்றன.  கிண்டல்கள், கேலிகளுக்குப் பின்னால் மெல்லிய வேதனை முகம்காட்டாது ஒளிந்திருக்கிறது.  சிறுகதைத் தொகுப்பைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள் பவித்ரா.

பிரதிக்கு:

சால்ட் 9363098933

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை. ரூ.120

துடிநிலை – பவித்ரா:

ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.  பெரம்பலூரில் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  எட்டு வருடங்களாகக் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவரும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.

Windowவை Widow என்று வாசித்தீர்களென்றால் அது தோற்றமயக்கமல்ல, ஆழ்மனத்தின் தடுமாற்றம்.  ஆழப்பதிந்தவை எப்படியேனும் எழுத்தில் வந்தே தீரும்.

”  காட்டுமல்லியைப் போல் அவ்வளவு

வாசனை இந்த இரவுக்கும் இருந்தது

முகம் முழுவதும் விகசித்தபடி

நாசிதுளைத்துச் சென்ற

விடியல்கள் இருந்தது

ஊடுபயிராக வளர்ந்த 

தோட்டத்து மஞ்சள் வாசனையும்

தண்ணீர்விட்டு வளர்ந்த

இளநீரின் குளிரில் அந்த

ஈரவானம் படர்ந்து இருந்தது”

கவிதையோ சிறுகதையோ பவித்ராவின் மொழிக்கு எல்லைக்கோடுகள் கிடையாது.  இந்தக்கவிதை வாசித்தவுடன் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.  வாழ்க்கைச்சுழற்சியை மட்டும் சொல்லவில்லை,  ஒரு Black humourஐ ஆரவாரமின்றிச் சொல்கிறது.

‘  முன்பெல்லாம்

தொடையிடுக்கில் அமுதூறும்

நாட்களை டயரியில் குறிப்பதுண்டு

இப்போது

வெற்றுக்காகிதமாய் நிரம்பிக்கிடக்கும்

டயரியில்

மகள் கோலம் வரைந்து பழகுகிறாள்”

அவல நகைச்சுவை இந்தக் கவிதையிலும் வந்திருக்கிறது.  தற்கொலைக்குக் காரணம் இந்தக் கவிதைக்குத் தேவையில்லை.  அது போலவே கடைசி ஆசை என்றாலும் பாரம்பரியச் சடங்குகளை மாற்றுவதற்கில்லை.

“பிணம் தின்பதால் தான் கடல்மீன்

சுவைப்பதாகக் கூறியிருந்தார்கள்

சில மீன்குஞ்சுகள்

எங்கள் கிணற்றில்

வளர்ந்து வந்தன

அழுக்கையும் பாசானையும்

தின்று வளர்ந்த

எங்கள் தோடத்துக்கிணற்று

மீன்களுக்கு சுவைகூட்ட

தனிமை அழுத்திய நன்நாளில்

தலைகுப்புறக் கிணற்றுக்குள்

விழுந்தேன்.

மூன்றாம் நாள்

அழுகிக்கிடந்த உடலை

எரிக்கவேண்டாம்

புதைத்துவிடுங்கள்

என்ற கடிதம் என்னோடு

சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது

பிணத்தை எரியூட்டும் தாத்தா

குவாட்டரை வாயில் சரித்தபடி

என்னுடலின் அழுகல் வாடை

தாங்காமல்

‘நார முண்ட’  என்றார்”

பவித்ராவின் இந்தத் தொகுப்பில் அடிக்கடி வரும் விஷயங்கள் இறப்பு, அப்பா.  மரணம் என்பது ஆசுவாசம் என்றொரு வரி வருகிறது.  இறந்த அப்பா நாற்காலியில் வந்தமர்ந்து சிகரெட் கேட்கிறார்.  வேப்பமரத்து நிழலில் பலருடன் கலவி செய்தவளின் உயிரை அந்த வேப்பமரத்துக் கிளையே வாங்கிக் கொள்கிறது.

பல கவிஞர்களின் கருப்பொருளான பிரிவின் துயரம் பவித்ராவின் சில கவிதைகளில் வந்திருக்கின்றது.  ஆனால் இந்தப் பிரிவுகள் மற்றவர்களைப் போலன்றி நிணவாடையும், மாறாப்பிணியும் கொண்டிருக்கின்றன.  அறுவைசிகிச்சை மருத்துவரின் சலனமின்மையுடன் பவித்ராவின் கவிதைகள் உடலை உற்று நோக்குகின்றன.  கிண்டல்கள், கேலிகளுக்குப் பின்னால் மெல்லிய வேதனை முகம்காட்டாது ஒளிந்திருக்கிறது.  சிறுகதைத் தொகுப்பைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள் பவித்ரா.

பிரதிக்கு:

சால்ட் 9363098933

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை. ரூ.120

இராட்சதர்களின் வீழ்ச்சி

6 February 2025 at 06:41

            அயல்மொழி அலமாரி தொடரில் இரா.நடராசன் ஒரு முறை குறிப்பிட்டதிலிருந்து கென் ஃபாலெட்டின் (Ken Follett –  இவரை சிலர் கென் ஃபாலே என்றும் கூறுகிறார்கள்) ஃபால் ஆஃப் ஜெயண்ட்ஸ் (Fall of giants)  நாவலைத் தேடிக்கொண்டே இருந்தேன்.  சமீபத்தில்தான் கிடைத்தது.  20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை மூன்று பாகங்களாக எழுதத் திட்டமிட்டு ஃபாலெட் எழுதிய முதல் பாகம் இது. (இரண்டாவது பாகமும் இப்போது வந்துவிட்டது)  1913லிருந்து 1925 வரையில், அதாவது முதல் உலகப் போர் துவங்கும் சூழலிலிருந்து, அது முடிந்த பிறகான பின்விளைவுகள் ஏற்படுத்திய தாக்கம் வரை விறுவிறுப்பாகச் சொல்லும் 985 பக்க நாவல்.  லண்டனில் ஒரு பிரபுக் குடும்பம், வெல்ஷ் பகுதியின் ஒரு சுரங்கத் தொழிலாளியின் குடும்பம், ரஷ்யாவில் ஒரு எளிய தொழிலாளியின் குடும்பம், அமெரிக்காவில் ஒரு செனட்டரின் குடும்பம், ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா குடியேறிய ஒரு தாதாவின் குடும்பம், ஜெர்மனியின் ஒரு உயர்குடிக் குடும்பம் என ஆறு குடும்பங்களின் வாயிலாக உலகின் சரித்திர மாற்றங்களை விவரிக்கும் நாவல்.  ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களும் உலகப்போரின் போது ராணுவ சேவையில் ஈடுபட, குடும்பங்களின் கதை உலகநாடுகளின் கதையாக, உலகப்போரின் கதையாக உருமாறுகிறது.  103 கற்பனைப் பாத்திரங்களும், 23 உண்மைப் பாத்திரங்களும் உலவும் நாவல்.  லெனினும், டிராட்ஸ்கியும், உட்ரோ வில்சனும், சர்ச்சிலும், லாயிட் ஜார்ஜ்ஜும், ஜெர்மனியின் கெய்சரும் எடுக்கும் முடிவுகள் சாமான்ய மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கூறுகிறது இக்கதை.  நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான கர்சன் பிரபுகூட ஓரிரு இடங்களில் வந்து போகிறார்.  முதல் உலகப்போரின்போது அவர்தான் பிரபுக்கள்சபையின் சபாநாயகர்.

            வரலாற்றுப் புனைவு எழுதுவது கடினம்.  அதுவும் சமீபகால நிகழ்வுகளை வைத்து எழுதுவது மிகமிகக் கடினம்.  நம் இந்தியா போல் ஆவணங்கள் சரிவர இல்லாத நாடாக இருந்தாலும் ஏதாவது கற்பனையாக எழுதி ஒப்பேற்றலாம்.  ஆனால், சர்ச்சில் போன்ற, லெனின் போன்ற உலகத் தலைவர்களின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஆவணங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு வரியையும் கடுமையான ஆய்வுக்குப் பின்னரே எழுதமுடியும்.  ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சர்ச்சில் யாரைச் சந்தித்தார், என்ன பேசினார் என்பதற்கு ஆவணம் உள்ளது.  அந்த ஆவணத்தை வைத்துக்கொண்டு, அந்தப் பேச்சிற்கு தொடர்புடையது போல கதையில் ஒரு காட்சியை உருவாக்கவேண்டும். அதில் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நடமாட விடவேண்டும்.  சர்ச்சில் அந்த சந்தர்ப்பத்தில் பேசியவற்றிற்கு ஏற்றாற்போல் கற்பனைப் பாத்திரங்களைப் பேசவைக்க வேண்டும்.  இந்தப் பேச்சுக்கள் கதையை அடுத்த காட்சிக்கு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லவேண்டும்.  எத்தனை கடினமான படைப்புச் சவால் !! கென் ஃபாலெட் இதில் பெரிய வெற்றி பெற்றுள்ளார்.  நாவலை எழுதி முடித்ததும், கதைக்களமான நாடுகளின் எட்டு மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களிடம் பிரதியைக் கொடுத்து, வரலாற்றுத் தகவல்ரீதியாக தவறுகள் எதுவும் இல்லை என்று உறுதிசெய்துகொண்ட பின்னரே, அச்சுக்கு அனுப்பியதாக ஃபாலெட் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

        தலைவர்களின் பார்வையில் எழுதப்பட்டிருந்தால், இது ஒரு வறண்ட வரலாற்று நூலாக மாறியிருக்கும்.  சாமானிய மக்களின் கதையாக இது வளர்வதால், பிரமிப்பூட்டும் மக்கள் வரலாறாக மாறுகிறது.  பதிமூன்று வயதுச் சிறுவன் முதன்முதலாய் சுரங்கவேலைக்கு பூமிக்கு அடியில் நுழைவதில் துவங்கும்  நாவல், சுரங்கம், தொழிலாளர், அவர்கள் ஊர், வாழ்க்கைமுறை என்று முழுமையாய் அதைச் சுற்றிச்சுற்றி வருகிறது.  சின்னச்சின்ன விஷயங்களுக்கான அவர்களது போராட்டம், சோவியத் யூனியன் எழுச்சி அவர்களுக்கு ஏற்படுத்தும் நம்பிக்கை எல்லாம் நாம் இதுவரை எங்கும் படிக்காத விஷயங்கள்.  மறுபுறம் சோவியத் யூனியனின் கதை.  1905 எழுச்சியில் கொல்லப்பட்ட ஒரு போராளித் தாயின் இரு குழந்தைகள் ஜார் அரசின் ரயில்வே தொழிற்சாலையில் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இருவரில் ஒருவன் அமெரிக்கா சென்று அங்குள்ள ரஷ்ய தாதாவின் மாப்பிள்ளையாகிறான்.  மற்றவன் சிறிதுசிறிதாக உணர்வு பெற்று, லெனினின் நம்பிக்கைக்குரிய உதவியாளனாகிறான்.  ரஷ்யாவின் மாற்றம் இங்கிலாந்திலும் வந்துவிடுமோ என்று சர்ச்சில் போன்றோர் கலவரமடைகிறார்கள். இங்க்கிலாந்தில் சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் காரணமான ஆடைத் தயாரிப்புத் தோழிலில் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம்.  அவள் வழியே பெண் வாக்குரிமைக்கான போராட்டம், அது எப்படி வெற்றி பெற்றது என்பது நாவலில் மிக இயல்பாக வருகிறது.  ஜெர்மனியின் ஆதிக்கவெறியும், அதன் தோல்வியும், தோற்ற அதன் செல்வங்களை ஏகாதிபத்திய நாடுகள் பேராசையோடு பங்குபோட்டுக் கொள்வதும், ஜெர்மன் மக்கள் போருக்கு முன்னும், பின்னும் எப்போதும்போல் கஷ்டப்படுவதும் கதையோடு ஒட்டி வருகின்றன.

        நாவலின் மிகப்பெரும் பலம் அது சாமானிய மக்களின் மனவோட்டத்தை துல்லியமாக, நேர்மையாகப் பதிவு செய்வதுதான்.  இங்கிலாந்தின் ஒரு பிரபுக் குலத்தில் பிறந்து, ஜெர்மனியின் ஒரு உயர்குடிப் பிரபுவை மணந்து, போரின் சீரழிவில்  இரவுவிடுதி ஒன்றில் (மாமனார், மாமியாருக்குத் தெரியாமல்) பியானோ வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் ஒரு சீமாட்டியும், இங்கிலாந்தின் சுரங்கங்களில் சொல்லமுடியாத அளவு துன்பத்தில் வேலை பார்த்து, உலகப் போரின்போது ராணுவத்தில் சேர்ந்து, ஜெர்மன் குண்டுகளுக்கு அஞ்சிப் பதுங்குகுழியில் ஒண்டிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை சுரங்கத் தொழிலாளியும் இங்கிலாந்து நாட்டவர் உலகையே ஆள கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற நினைப்போடு வாழும் முரணை மிக இயல்பாக, சரியாகக் காட்டும் இந்த நாவல் முடியும் இடம் மிக அழகானது.

        நாவலின் ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஒரு பிரபு வீட்டுப் பணிப்பெண்.  பிரபு எதிரில் வந்தால், அவள் சுவரை ஒட்டிக் கொண்டு,  தலைதாழ்த்தி நிலம் பார்த்து நிற்கவேண்டும்.  அவர் பேசினால்தான் பதில் கூறவேண்டும்.  இப்பெண் பெண்வாக்குரிமைப் போராட்டத்தில் சேர்கிறாள்.  பத்திரிகையில் பணியாற்றுகிறாள்.  தொழிலாளர்கட்சியின் முக்கியமான நிர்வாகியாகிறாள்.  பெண்கள் வாக்குரிமை பெறும்போது, தொழிலாளர்கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.  பாராளுமன்றத்தில் பிரபுக்கள்சபை உறுப்பினரான முன்னாள் எஜமானரை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பத்தில், தலை நிமிர்த்தி, அவருக்கு ஹலோ சொல்கிறாள்.  இவள் செல்வதற்கு  வழிவிட்டு சுவரோரமாக நிற்கிறார் அந்தப் பிரபு.  நம் செம்மலர் கதைகளில் வருவது போன்ற இந்த அற்புதமான காட்சியோடு முடிகிறது இந்த நாவல்.

        தி ஐ ஆஃப் தி நீடில் (the eye of the needle) துவங்கி,  புகழ்பெற்ற ஏராளமான நாவல்கள் எழுதியவர் கென் ஃபாலெட்.  அவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளன.  பெருமளவு பணமும், புகழும் சேர்த்தபின், இலக்கிய உலகில் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என்ற பேரவாவினால் அவர் இந்த மூன்று நாவல் தொடரினை எழுதத் திட்டமிட்டார் என்று கருதலாம்.   பணத்திற்கும், புகழுக்கும் மீறிய ஒரு ஆசை படைப்பாளனின் மனதில் வரும்போதுதான் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாகின்றன. அப்போது  ஒரு ஏகாதிபத்திய எழுத்தாளன் தன்னையறியாமல் மக்கள் எழுத்தாளனாகிறான்.  நம் தமிழ்கூறு நல்லுலகின் எழுத்தாளர்களும் இதுபோன்ற ஆசைகளை மனதில் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

பின்னி​ணைப்பு

ஆசிரியரின் பிற நூல்கள்

​கென் ஃபா​லெட் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்.  புத்தகப் பதிப்பாளராக இருந்தவர்.  பிரிட்டிஷ் ​தொழிலாளர் கட்சியின் தீவிர உறுப்பினர்.  ம​னைவி பார்பரா ​தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மூன்று மு​றை இருந்தவர்.  கார்டன் பிரவுன் மந்திரிச​பையில் கலாச்சாரத் து​றை அ​மைச்சராக இருந்தவர்.

அவரது மற்ற நாவல்க​ளைப் பற்றிப் ​பேச​வே முடியாதபடி சமீபத்திய ​சென்சுரி ட்​ரைலாஜி நாவல்கள் அ​மைந்துவிட்டன.  இரண்டாவது பாகமான winter of the world ஸ்பானிய உள்நாட்டுப் ​போர், இரண்டாம் உலகப் ​போ​ரை விவரித்தது.  மூன்றாவது பாகமான edge of eternity இந்த ​செப்டம்பர் மாதம் தான் ​வெளியானது. சமீபகாலத்தில் இப்படி​யொரு அற்புதமான நாவல் வர​வேயில்​லை என்று ​சொல்லலாம்.  பனிப் ​போர் காலத்தில் ஆரம்பித்து ஒபாமா பதவி​யேற்​போடு முடிகிறது. ​பெர்லின் சுவர் கட்டப்படுவது, கியுபா ஏவுக​ணைப் பிரச்​னை, வியட்நாம் ​போர், வாட்டர்​​கேட் விவகாரம், ​சாலிடாரிடி இயக்கம், ​சோவியத் யூனியன் சிதறியது, ​பெர்லின் சுவர் இடிப்பு என்று 1960களுக்குப் பின்தான் எத்த​னை எத்த​னை நிகழ்வுகள். இத்த​னையயும் ​தொட்டுத் ​தொட்டுச் ​சென்றாலும், இந்த பாகத்தின் அடிநாதமாக இருப்பது கறுப்பின மக்களின் எழுச்சி, அவர்களுக்கு ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாக​வேனும் நன்​மை ​செய்​தே ஆக​வேண்டிய கட்டாயம்தான்.  மார்டின் லூதர் கிங் ஜூனியரின் எனக்​கொரு கனவு இருக்கிறது என்ற ​உ​ரை நாவலில் வரும் இடத்தில் நம் கண்ணில் கண்ணீர் வரும்.  அ​மைதியாகப் ​போராடிய அந்த மக்கள் சந்தித்த அடக்குமு​​றைகள் அத்த​னை ​கொடு​மை. ​போலீஸ் நாய்க​ளை விட்டு ​போராட்டக் காரர்க​ளைக் கடிக்க விடும் ​கொடு​மை​யெல்லாம் நடக்கும்.  க​டைசியில் ஒபாமா பதவி​யேற்பின் ​போது அந்தப் ​போராளிகள் வடிக்கும் ஆனந்தக் கண்ணீ​ரோடு நம் கண்ணீரும் கலக்கும்.

மற்​றொரு முக்கியமான விஷயம் 1960களுக்குப் பிறகான அ​மெரிக்க அதிபர்க​ளைப் பற்றிய ஃபா​லெட்டின் வார்த்​தைகள். ​கென்னடியிலிருந்து புஷ் வ​ரை பல​ரையும் திருடன், ​பொய்யன், ​கொ​லைகாரன் என்று பல இடங்களில் ​நேரடியாக​வே திட்டுவார். நம் ஊராக இருந்தால் ​கொடும்பாவி எரிப்பது, அவர் படத்​தை ​செருப்பு, விளக்குமாறு ​வைத்து அடிப்பது, த​டை ​செய்ய வழக்கு என்று ஒரு ​பெரிய ​கோஷ்டி கிளம்பியிருக்கும். 

ஒரு புறம் அரசியல் வரலாற்று நாவல்க​ளை எழுதிய அவர் மறுபுறம் 11, 12ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சர்ச் கட்டுவ​தை ​வைத்து அரு​மையாக இரு நாவல்கள் எழுதியிருக்கிறார்.  Pillars of the earth, world without end என்ற அந்த இரு நாவல்களில் சர்ச் கட்டுவ​தைப் பின்னணியாக ​வைத்து அன்​றைய இங்கிலாந்தின் நிலப்பிரபுத்துவ சமூகம் எளிய மக்க​ளை எப்படி​யெல்லாம் ​கொடு​மைப்படுத்தியது என்ப​தை இங்கிலாந்தின் வரலாறு, சர்ச்சின் வரலாறு ஆகியவற்​றோடு இ​ணைத்து எழுதியிருப்பார்.  இந்த நாவல்களில் அவர் வர்ணிக்கும் சர்ச் ஸ்​பெயினின் விட்​டோரியா நகரில் உள்ள சான்டா மரியா சர்ச். பில்லர்ஸ் ஆஃப் தி எர்த்தின் ஸ்பானிய ​மொழி​பெயர்ப்பு ​வெளியான முதல் மாதத்தில் 2,75,000 பிரதிகள் விற்றது.  இ​தைவிட ஆச்சரியமான ஒரு தகவல் இருக்கிறது.  அந்த ஊர் மக்கள் அந்த சர்ச் வாசலில் ​கென் ஃபா​​லெட்டிற்று ஆளுயர ​வெண்கலச் சி​லை ​வைத்திருக்கிறார்கள்.  ​கென் ஃபா​லெட் தன் சி​லை​யைத் தா​னே திறந்து ​வைத்தார்.  எந்த ஒரு எழுத்தாளனுக்கும் உலகில் இதுவ​ரை கி​டைத்திராத மரியா​தை இது.  ஆனால், இந்த மரியா​தைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்பதில் சந்​தேக​​மே இல்​லை. 

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

கதை நிஜமான கதை

20 December 2024 at 14:28

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு குட்டி நாடு.  ஏராளமான கனிமவளம் கொண்டது. அங்கு ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி.  அவருக்கு எதிரணியில் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மற்றொரு வருங்கால சர்வாதிகாரி.  அவரை ஆட்சியில் அமரவைத்து, கனிமவளங்களை மொத்தமாகச் சுரண்டத் திட்டமிடும் ஒரு பன்னாட்டு ஏகபோகநிறுவனம். தானே ஒரு ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி, தனது ஆளை ஆட்சிக்குக் கொண்டுவந்தால், காலாகாலத்தில் சுரண்டலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் அந்த நிறுவனம் ஒரு கூலி ராணுவப் படையை (mercenary army) ஏற்பாடு செய்கிறது.  கோடிக்கணக்கில் செலவு செய்து புரட்சியும் நடக்கிறது.  கூலிராணுவப்படையின் தளபதி கடைசியில்[i] இரு சர்வாதிகாரிகளையும் கொன்றுவிட்டு, சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு மிதவாத மக்கள் தலைவரை அதிபராக்கிவிடுகிறார்  .கைக்காசைச் செலவழித்த நிறுவனம் செய்வதறியாது திகைத்துநிற்க சுபம் !

      மேற்படி 10-20 வரிக்கதை மிக நுட்பமாக எழுதப்பட்ட, பிரும்மாண்டமான நாவலான ‘தி டாக்ஸ் ஆஃப் வார் ( the dogs of war) என்ற நாவலின் மிக மோசமான சுருக்கம். தி டாக்ஸ் ஆஃப் வார் என்பது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய வரி. இந்த நாவலை எழுதியவர் தனது 27ஆவது வயதில் ‘டே ஆஃப் தி ஜகால்’ என்ற நாவலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்ற ஃபிரடெரிக் ஃபார்சித்.  டே ஆஃப் தி ஜகால் எட்வர்ட் ஃபாக்சின் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் திரைப்படமாகவும் வந்து சரித்திரம் படைத்தது. மேற்படி தி டாக்ஸ் ஆஃப் வாரும்கூட ஓரளவு மூலக்கதை சிதையாது, திடைப்படமாக வந்தது.  கூலி ராணுவப்படைத் தளபதியாக கிறிஸ்டோபர் வாக்கன் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருந்தார்.

      ஃபார்சித் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் அங்குலம் அங்குலமாக நுணுக்கமாக எழுதுபவர்.  டே ஆஃப் தி ஜகாலில் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்முறை பற்றி விவரிப்பது அற்புதம்.  1970களில் அவர் சொல்லும் சட்ட ஓட்டைகளை பல வருடங்கள் ஆராய்ந்து 2003ல் தான் பிரிட்டிஷ் அரசு சரிசெய்தது.  அதுபோலவே ராஜீவ்காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மனிதவெடிகுண்டு முறை அவரது தி நெகொஷியேட்டர் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

      இந்த நாவலை எழுத ஃபிரடெரிக் ஃபார்சித் உலகெங்கும் உள்ள தலைசிறந்த கூலிராணுவப்படை தளபதிகளைச் சந்தித்து, தாம் ஒரு நாட்டில் ராணுவப் புரட்சிக்கு ஏற்பாடு செய்துவருவதாகக் கூறி, பேச்சுவார்த்தைகள் நடத்தி, விஷயங்களைச் சேகரித்தார். கூலிராணுவத்தினரைத் தொடர்ந்து கண்காணித்து வரும் சி.ஐ.ஏ, கே.ஜி.பி, மொஸாத், எம்.ஐ.6 போன்ற உளவு நிறுவனங்கள் ஃபார்சித்தை தீவிரவாதி பட்டியலில் வைத்துக் கண்காணித்தன.  தி டாக்ஸ் ஆஃப் வார் நாவல் வெளிவந்ததும், சே! இதற்குத்தானா என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. கூலிராணுவப்படையை உருவாக்கி ஒரு நாட்டில் திடீர்புரட்சியை (coup)  ஏற்படுத்துவது எப்படி ( நம் ஊர் சமையல் குறிப்பு புத்தகம் போல!) என்பதை விளக்கமாக விவரிக்கும் ஹவ் டு ஸ்டேஜ் அ மிலிட்டரி கூப் என்ற நூலின் ஆசிரியர் கென் கானர் தி டாக்ஸ் ஆஃப் வார் நாவலைத்தான் கூலிராணுவப்படைகளுக்கு பாடநூலாகப் பரிந்துரை செய்கிறார்!

      அதன்பிறகு ஃபார்சித் இரண்டாம் உலகப்போர்க்குற்ற நீதிமன்றத்திலிருந்து தப்பி தலைமறைவாக வாழும் நாஜிதளபதிகள் பற்றிய நாவலான ‘தி ஒடிஸ்ஸா ஃபைல்’, வளைகுடா போர் பற்றிய நாவலான ஃபிஸ்ட் ஆஃப் காட், சோவியத் யூனியன் சிதறுண்ட பின், அங்கு எழுந்த மாஃபியா அட்டகாசம் பற்றிய தி ஐகான், பனிப்போர் கால நாவலான தி டெவில்ஸ் ஆல்டர்னேடிவ் (பனிப்போர் காலத்திய நாவல்களில் அமெரிக்காவுடனான ஒரு சிக்கலில் ரஷ்யா ஜெயிப்பது மாதிரி முடியும் ஒரே நாவல் இதுதான்) என்று பல நாவல்கள் எழுதி ஏராளமான ரசிகர்களின் ஆதர்ச எழுத்தாளரானார்.  நம் கட்டுரை அதைப் பற்றியல்ல.

      எத்தனை நாவல் வந்தாலும் டாக்ஸ் ஆஃப் வாரின் தாக்கம் குறையவில்லை. ஒரு படைப்பாளனின் கூற்று பொய்யாகலாமா? கம்பனின் கூற்றை மெய்ப்பிக்க சரஸ்வதிதேவி கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாய் வந்த கதை போல,  தி டாக்ஸ் ஆஃப் வாரை உண்மையாக்க ஒரு பெரிய இடத்துப் பிள்ளை முடிவு செய்தார்.

      நாவலில் கூறப்படும் ஆப்பிரிக்கநாடு என்று விமர்சகர்கள் சந்தேகிக்கும் ஈக்வடோரியல் கயானா உண்மையாகவே கனிமவளம் நிறைந்த நாடு.  மேற்சொன்ன பெரிய இடத்துப் பிள்ளையின் பன்னாட்டு நிறுவனம் அதை விழுங்க ஆசை கொண்டது.  அந்தநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் ஒரு டுபாக்கூர் கம்பெனி அங்கு துவங்கப் பட்டது  கம்பெனிக்கு வந்துசெல்லும் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டன.  கூலிராணுவப்படை ஏற்பாடுகள் முடிந்தன.  திடீரென இந்தப்படை அந்தநாட்டில் நுழைந்து, அதிபரைக் கொன்று, கம்பெனிக்கு வேண்டப்பட்ட பொம்மையை அதிபர் நாற்காலியில் உட்கார்த்திவிட்டால், நாடே கம்பெனி கையில் ! கம்பெனி நாள் நட்சத்திரம் பார்த்துக் குறித்த சுபயோக சுபதினத்தில் 64 கூலிராணுவப்படையினர் ஜிம்பாப்வேயின் ஹாராரே விமானநிலையத்தில் விமானத்தில் ஏறியபோதே, எப்படியோ விஷயம் கசிந்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, ஈக்வடோரியல் கயானா ஆகிய மூன்று நாடுகளின் உளவு மற்றும் கமாண்டோ கூட்டுப்படை 64 பேரையும் சிறு சிராய்ப்புகூட இல்லாமல் கைது செய்தது.

கூலிப்படையினருக்கு தலா ஆயிரம் டாலர்கள்தான் கூலி பேசியிருந்தார்களாம்.  வேலை முடிந்து புதுஅதிபர் வந்ததும் அவரது மெய்க்காவலாளர் பதவி – மாதம் 10000 டாலர் சம்பளம் என்று ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.  கடைசியில் எல்லோரும் சிறையில்.  விசாரணையில் கூலிப்படையின் தளபதி சைமன் மான் தங்களை வேலைக்கு அமர்த்தியவர் பெயரைச் சொன்னதும் ஆப்ரிக்கக்கண்டமே அதிர்ந்தது.  தென் ஆப்ரிக்காவில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரையும் கைது செய்து இழுத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். வழக்கின் முடிவில் கூலிப்படையின் தலைவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை. மற்றவர்களுக்கு ஓராண்டு சிறைவாசம்.  ஏற்பாடு செய்தவரின் அம்மா உலகளாவிய செல்வாக்கு உடையவர். அவர் தலையீட்டால் பிள்ளைக்கு 30 லட்சம் ராண்ட் அபராதமும், மூன்றாண்டு சிறைத்தண்டனையும்.  அதுவும் அவரது நன்னடத்தைக்காக (!) தள்ளுபடி செய்யப்பட்டது.

      தி டாக்ஸ் ஆஃப் வாரைப் படித்து, அதே நாட்டில், அதே போல ராணுவப்புரட்சி ஏற்படுத்தி, நாட்டையே பிடிக்க நினைத்த அந்தப் பெரிய இடத்துப் பிள்ளை ஸர். மார்க் தாட்சர்.  அவரது அம்மா இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் திருமதி. மார்க்கரெட் தாட்சர். இதன் முழுவிபரங்கள் பிபிசி செய்தித்தொகுப்பாக வந்தன.  இன்றும் நாம் இணையத்தில் இதன் விபரங்களைக் காணலாம். நூறுசத லாபம் என்றால் ஏகாதிபத்தியம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று மார்க்ஸ் கூறியது எத்தனை சத்தியமான வார்த்தைகள் !

      நம் ஊர் அரசியல்வாதிகள், வாரிசுகள், தொழிலதிபர்கள் இது போன்ற ஆங்கில நாவல்களெல்லாம் அதிகம் படிக்காமல் இருப்பதும் ஒருவகையில் நன்மைதான் போலும் !    


பின்னி​ணைப்பு

இந்த மார்க் தாட்சரின் ​ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கம்​பெனியுல் முதலீடு ​செய்தவர்களில் முக்கியமானவர் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்.  அவ​ரைப் பற்றிய தனிக் கட்டு​ரை ஒன்று பின்னால் இருக்கிறது.

ப​டைப்புகளின் பட்டியல்

The Afghan  9/11 தாக்குதலுக்குப் பின் நடக்கும் க​தை. க​தையில் பின்​லேடனும் ஒரு பாத்திரமாக வருவார்.

Avenger ​  ​போஸ்னியப் ​போர் பற்றிய க​தை. ​போஸ்னியப் ​போ​ரையும், வியட்நாம் ​போ​ரையும் பற்றி மாற்றி மாற்றிச் ​சொல்லிச் ​செல்லும் இந்தக் க​தை 2001 ​செப்டம்பர் 10ம் ​தேதி அற்புதமாக முடியும்.

The Cobra

The Day of the Jackal – தி​ரைப்படமாக வந்தது.  இந்த நாவலுக்காக அவர் எட்கர் ஆலன் ​போ பரி​சைப் ​பெற்றார். இக்க​தையின் ​மோசமான தழுவலான ஆகஸ்ட் 1 என்ற ம​​லையாளத் தி​ரைப்படம் ​வெற்றிகரமாக ஓடியது.  மம்முட்டியும், ​கேப்டன் ராஜூவும் பிரமாதமாக நடித்த படம் இது.  பின்னர் , இதன் அடுத்த பாகமாக ஆகஸ்ட் 15 என்ற படம் கூட வந்ததாக ஞாபகம்.

The Deceiver   பனிப் ​போ​​ரை மிகமிக நுட்பமாகக் காட்டிய க​தை.

The Dogs of War  தி​​ரைப்படமாக வந்தது.

The Fist of God  சதாம் உ​சேன் முக்கிய பாத்திரமாக வரும் இந்த நாவல்       வ​​ளைகுடா ​போர் பற்றிய அரு​மையான பதிவு.  எனக்குத் ​தெரிந்து ஒ​ரே பதிவு என்றுகூடச் ​சொல்லலாம். 

The Fourth Protocol   தி​ரைப்படமாக வந்தது

Icon

The Kill List

The Negotiator

The Odessa File   தி​ரைப்படமாக வந்தது. நாஜி ​ஜெர்மனி பற்றி, உலகப் ​போர் முடிந்தபின் பல முக்கியமான நாஜி அதிகாரிகள் எப்படி ​போர்க்குற்ற விசாரண​கைளிலிருந்து தப்பி, ​வேறு ​பெயர் அ​டையாளங்க​ளோடு, ​வெவ்​வேறு இடங்களில் ​செல்வாக்காக வாழ்ந்தார்கள் என்ப​தைச் ​சொல்லும் க​தை.

The Phantom of Manhattan

The Shepherd, பிரிட்டிஷ் ​போர் விமானி​யைக் கதாநாயகனாக ​வைத்து எழுதிய குறுநாவல். பிரடரிக் ஃபார்சித் ​போர் விமானியாகப் பணியாற்றியவர். நா​மே ​போர் விமானத்​தை ஓட்டுவது ​போன்ற அனுபவத்​தைத் தருவார் – சுஜாதாவின் பதினான்கு நாட்கள் நாவ​லைப் ​போல.

இ​வை தவிர no comebacks, the avenger என இரு சிறுக​தைத் ​தொகுப்புகளும் உண்டு.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரட்டும் !

19 November 2024 at 13:46

      உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது.  அதற்கு முன்னால்  நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை.  அதன் பெயர் புசானன் மேஜை.  இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது.  ‘அதில் உட்காருங்கள்.  அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர்.  அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு.  எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை.  மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.

      வாலஸ் மெல்ல அமர்கிறார்.  எதிரே பிரும்மாண்டமான மேஜை.  அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு.  அதிபரின் குடும்பப் படங்கள்.  ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள்.  விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது.  மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.

      பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள்.  எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி.  அருகே இரண்டு  சாதா கறுப்பு தொலைபேசிகள்.  அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.

      நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ்.  அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது.  பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார்.  இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு.  அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள்.  ஒரு கடற்போர் சித்திரம்.  அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி.  அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம்.  இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.

      நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி.  அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள்.  வெளியே பாதுகாவலர்கள்.  நிற்கும் அறை.  அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம்.  அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.

      ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்?  அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம்.  அந்த நாள் 1963 செப்டம்பர் 16.

      அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது.  இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார்.  பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள்.  ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார்.  நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !

      மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது.  தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ்.  ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ;  கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).

      நேரம் முடிந்துவிட்டது.  அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ்.  உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும்   நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி.  ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!

      நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ்.  டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது  கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது.  வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.

      நாவல் வெளியாகிவிட்டது.  வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது.  கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ்.  பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த  நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.

      பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார்.  அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,

      ஒரு தட்டில்

      பழங்களும், பிரார்த்தனைகளும்

      வைக்கப்பட்டன.

      பழத்தைத் தின்றார் கடவுள்.

      பழுக்கட்டும் என்று

      விட்டு வைத்தார்

      பிரார்த்தனைகளை.

என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது.  ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !

பின்னி​ணைப்பு

இது ஒரு நாள் சம்பவமல்ல.  பத்து நாட்கள் இது​போல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வ​ரை ​கென்னடி ஓய்​வெடுக்கும் ​போது அவரது அலுவலக அ​றையில் இது ​போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.

இர்விங் வாலஸின் பு​னைவுக​ளைப் ​போல​வே அவரது கட்டு​ரை நூல்களும் மிகமிக முக்கியமான​வை.  இக்க​ட்டு​ரை அவரது சண்​டே ​ஜெண்டில்​மேன் என்ற கட்டு​ரைத் ​தொகுப்பிலிருக்கிறது – ஆம், ​வே​றெரு கட்டு​ரையில் நாம் ஏற்கன​வே பார்த்தது ​போல அவர் ஞாயிற்றுக்கிழ​மைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்பு அது.  1965ல் ​வெளிவந்த இந்தத் ​தொகுப்பில் அவர் அ​மெரிக்கா ​தொடர்பாக எழுதிய​வை, ​வெளிநாடு ​சென்று பார்த்த​தை எழுதிய​வை என இரு ​பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார்.  இந்தக் கட்டு​ரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகா​கோவின் புகழ் ​பெற்ற எவர்​​லே விடுதி​யை நடத்திய ​இரு பெண்கள் பற்றிய கட்டு​ரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.

இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னு​ரை மிகமிக முக்கியமானது.  புகழ்​பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உ​ழைப்​பைப் ​போகிற​போக்கில் ​சொல்வார்.  பத்திரி​கைகளில் ​வே​லை பார்த்துக் ​கொண்டு முதலாளி ​சொன்ன​தை எழுதிக் ​கொண்​டே ஞாயிற்றுக்கிழ​மைகளில் அவர் எழுதிய கட்டு​ரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் ​பெற்றுவிடவில்​லை.  அவரது புகழ் ​பெற்ற ப​டைப்புகளின் எண்ணிக்​கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட ப​டைப்புகளும் உண்டு. அவர் ​சொல்வ​தை அப்படி​யே தருகி​றேன் – பாருங்கள்.

என் பதி​னேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளு​மைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டா​ரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீ​ரோஸ் ஆஃப் டு​டே என்று ஒரு நூல் எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பதி​​​னெட்டாவது வயதில் மக்களின் ​பொதுவான மூடநம்பிக்​கைக​ளை ​வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பத்​தொன்பதாம் வயதில் ​ஹோண்டூராஸ் காடுகளில் நான் ​மேற்​கொண்ட சாகசப் பயணம் பற்றி ​​மை அட்​வென்சர் டி​ரெய்ல் என்று ஒன்று எழுதி​னேன்.  நிராகரிப்பு.  ​டேனியல் ​டெஃ​போவின் வாழ்க்​கை வரலாற்​றை தி சண்​டே ​ஜென்டில்​மேன் ( அதுதான் ஒரிஜினல் ​போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது.  இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்​கை வரலாற்​றை ​ரோமன் ஹாலி​டே என்று ஆரம்பித்து பாதி எழுதி நா​னே நிறுத்திவிட்​டேன்.  அப்​போது பல பத்திரி​கைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டு​ரைக​ளை திருத்தி எழுதி புத்தகமாகத் ​தொகுத்​தேன்.  அது பிரசுரமாகவில்​லை.  இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நி​னைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் ​மெய்ன் காம்ஃப் ​என்று ஒன்​றை எழுதி​னேன்.  நிராகரிப்புதான்.   இருபத்தி​யேழாவது வயதில் நான் ​பத்திரி​கை வாழ்வில் பேட்டி கண்ட ஆளு​மைக​ளைப் பற்றி வித் ​​தெயர் ​பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல்.  பிறகு ​கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்தி​லே​யே அ​ரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் ​தோல்விதான். முப்பத்தி​யேழாவது வயதில் பத்திரி​​கை ​வே​லை​யை விட்டுவிட்டு சீரியஸாக முழு​நேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதிய​போதுதான் முதல் புத்தகம் வந்தது.

பிரசுரமாகாத இந்த நூல்க​ளை யாராவது ​தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்​றேனும் ஒரு நாள் அ​வை பிரசுரமாகும் என்ற நம்பிக்​கை எனக்கு இருக்கிறது.

எப்படி எழுத​வேண்டும் என்ப​தை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சி​யோடு எழுத​​வேண்டும் என்ப​தையும் நாம் இர்விங் வாலஸிடம் ​சேர்த்துக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

சோதனைக்குழாயில் டைனாசோர் !

4 October 2024 at 12:16

இணையத்தில் சமீபத்தில் கிடைத்த ஒரு ரத்தினம் The science of Michael Crichton என்ற மின்னூல்.  அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பத்துபேர் சேர்ந்து, மைக்கேல் கிரைட்டனின் விஞ்ஞான நாவல்களில் எத்தனை சதம்  விஞ்ஞானம் எத்தனை சதம் கதை என்று மிகக் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து எழுதிய நூல். பத்து கட்டுரைகள். 184 பக்கங்கள்.

      நூலைப்படித்தும், என்னையறியாமல் அப்படியே அவரது ஜுராசிக் பார்க் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் படமாக வந்து இன்றும் ஏதேனும் ஒரு சானலில்   நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே ஜுராசிக் பார்க்தான்.  ஒரு காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞான நாவலாக என்னைக் கவர்ந்த அதே ஜுராசிக் பார்க்.     அதில் விஞ்ஞானம் மிகவும் குறைவு,கதைதான் அதிகம் என்று 27 ஆண்டுகள் எம்பிரியானிக் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ள டாக்டர் சான்டி பெக்கர் 40 பக்கத்திற்கு கட்டுரை எழுதிய பிறகு, கிரைட்டனின் தீவிர ரசிகன் என்றபோதிலும், அதை ஏற்பதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஆனாலும் மறுவாசிப்பில் மைக்கேல் கிரைட்டன் என்னை வேறுவிதமாக ஈர்த்தார்.

      6’9” உயர உருவத்தின் காரணமாக இருந்த கூச்சசுபாவத்தால் யாரிடமும் பேசிப் பழகாத தனிமை விரும்பியான கிரைட்டன் இயல்பாகவே ஒரு படைப்புமனம் கொண்டவராக இருந்தார்.  தொழிலால் மருத்துவர் என்றாலும் ஒருகட்டத்தில் முழுநேர எழுத்தாளரானார்.  திரைப்பட இயக்குனரானார்.  சக மருத்துவரான, சகஎழுத்தாளரான ராபின் குக் எழுதிய கோமா என்ற மருத்துவ திகில் படத்தை இயக்கினார்.  19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் கொள்ளையை வைத்து, தான் எழுதிய தி கிரேட் டிரைன் ராபரி என்ற நாவலை அதே பெயரில் படமாக எடுத்தார். இதில் சீன் கானரி நடித்திருக்கிறார். ஜுராசிக் பார்க்கில் கிழவர் ஹாமாண்ட் பாத்திரத்தில் அற்புதமாக  நடித்தவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் கிரைட்டன்.  அதிலும் வெற்றிதான்.  1994ல் அமெரிக்காவின் டாப் திரைப்படமாக ஜுராசிக் பார்க்கும், டாப் தொலைக்காட்சி தொடராக ஈ.ஆர் தொடரும், டாப் நாவலாக டிஸ்குளோசர் நாவலும் வெகுகாலத்திற்கு இருந்தன.  மூன்றுமே கிரைட்டனின் படைப்புகள்.  இவரைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் இந்த சாதனையை இன்றுவரை செய்யவில்லை. ஆனாலும் அடிப்படையில் மருத்துவரான அவரது மனம் விஞ்ஞானப் புனைகதைகளில்தான் இருந்தது.

அவர் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஆய்வுகளை,  மாற்றங்களை வைத்துத் தன் நாவல்களைப் புனைந்தார்.  அவர் தமது நாவல்களில் கூறும் அறிவியல் ஆய்வுகளுக்கு, போக்குகளுக்குத் தரும் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருக்கும். செயற்கையாக டைனாசோர்களை உருவாக்கும் ஜுராசிக் பார்க்காக இருக்கட்டும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளின் சில அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் லாஸ்ட் வேர்ல்ட்டாக் இருக்கட்டும், ( இதைத்தான் ஸ்பீல்பெர்க் டைனாசோரின் தாய்ப்பாசத்தைக் காட்டும் ஆங்கில அன்னை ஓர் ஆலயமாகக் கெடுத்தார்),காலயந்திரப் பயணத்தையும், 13ம் நூற்றாண்டு ஐரோப்பா வரலாற்றையும் அற்புதமாக இணைத்து எழுதிய ‘டைம்லைன்’, மனிதர்களைப் போல் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த மனிதக்குரங்கினை மையமாக வைத்து எழுதிய காங்கோ ( இது இதே பெயரில் திரைப்படமாகவும் வந்தது. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு சானலில் அது ஓடிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது இன்று மனிதக்குரங்குக​ளை ​​வைத்து வந்துள்ள பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் தி​ரைப்பட வரி​சைக்கு இந்த காங்​கோதான் முன்​னோடி) புவி வெப்பமயம் என்பதே ஒரு ஏகாதிபத்திய சதிதான் என்ற கருத்தில் ஏகப்பட்ட வ​​ரைபடங்கள், புள்ளிவிபரங்க​ளோடு எழுதப்பட்டு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான தி ஸ்டேட் ஆஃப் ஃபியர், என எல்லா நாவல்களுமே வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான தகவல்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு எழுதப்பட்டவை.  அவரவர் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்ற, 25,30 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உள்ள அறிஞர்கள் ( இவர்களும் கிரைட்டனின் தீவிர ரசிகர்கள்தான்)  கிரைட்டனின் நாவல்களை வரிவரியாக ஆராய்ந்து மேற்கூறிய நூலை எழுதிய பிறகுதான் கிரைட்டனின் நாவல்களில் 20 சதம்தான் விஞ்ஞானம், 80 சதம் கதைதான் என்று தெரிகிறது.    நம்  நாட்டில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மாயக்கலவையான வசீகரஎழுத்து.

விஞ்ஞானக்கதையில் விஞ்ஞானத்தின் சதவிகிதம் குறைந்தால் என்ன?   கிரைட்டன் கதைகளில் அறிவியல் அடிப்படையில் கதை எழுதினாலும், அதையும்தாண்டி, கதையின் ஆதாரமாக அறிவியலின் நோக்கத்தை வைத்திருப்பது  இந்த மறுவாசிப்பில் தெரிந்த்து.  ஜுராசிக் பார்க்கில் கேயாஸ் கொள்கை பேசும் பேராசிரியர் டாக்டர் மால்கம் கிரைட்டன்தான். மால்கமின் குரலில் கிரைட்டன் அறிவியல் ஆராய்ச்சிகள் யாரால் செய்யப்படவேண்டும், ஆராய்ச்சிகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம், ஆராய்ச்சிகளுக்கு யார் செலவு செய்வது, ஆராய்ச்சிகளின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவா? சாதாரண மக்களின் நல்வாழ்விற்காகவா ? என்றெல்லாம் பேசுகிறார்.  ஜெனிடிக் இஞ்சினீயரிங், பரிணாமத் தத்துவம் என்றெல்லாம் போகும் கதையில் நடுநடுவே, மால்கம் குரலில்  கிரைட்டன்  ‘லேசர், டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், போலியோ சொட்டு மருந்து,ஹோலோகிராம்,கணினி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இவை எல்லாமே தனியார் ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. அரசுப் பல்கலைக்கழகங்களில் புதிய ஆய்வுகளுக்கு எவ்வித ஊக்குவிப்பும் கிடையாது,’  ‘இத்தனை முன்னேற்றத்திற்குப் பிறகும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள் வந்தபின்னும் கூட 1930களிலிருந்து இன்று வரை வீட்டுவேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் குறையவே இல்லை’, விஞ்ஞானிகள் தங்களை இயற்கையை வென்றவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் படகு செய்யலாம். ஆனால் கடலைச் செய்யமுடியாது.  அவர்களால் விமானத்தைச் செய்ய முடியலாம். ஆனால் காற்றைச் செய்யமுடியாது, என்றெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார். அவரது கோபம் விஞ்ஞானத்தின் மீதல்ல.  விஞ்ஞானத்தின் வர்த்தகமயத்தின் மீதுதான்.  அவரது நாவல்களில் விஞ்ஞானிகள் தீராத அறிவியல்தாகத்தோடு, அந்த  முயற்சியில் எத்தகைய இடையூறு வந்தாலும் ஏற்கத் தயாரானவர்களாக இருக்க, அவர்கள் ஆய்வு நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் லாபத்திற்காக எத்தகைய மோசமான செயலையும் செய்பவர்களாக  கவனமாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிவியல் புனைகதைகளை வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள், விண்வெளிப் பயணம் என்பதைத் தாண்டி முதலாளித்துவ உலகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கடும்விமர்சனமாகத் தனது  நாவல்களை எழுதியவர் என்பதால் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு  ஜொலிப்பவர்   கிரைட்டன். 

எது படித்தாலும் தமிழ்ச்சூழலில் என்ன நிலமை என்று யோசிக்கும் என் மனம் இப்போதும் அதேபோல் யோசித்தது.  விஞ்ஞானக்கதைகளை ஓரளவு எழுதியவர் சுஜாதா மட்டுமே. இவ்வகைக்கதைகள் தமிழில் இல்லாததற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யானத் தூக்கம், நினைவுத்திரைகள் பின்னோக்கிச் செல்வது, சமயலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு, என்றும் மாறாத காதல், இது போதும் என்கிற பொன் செய் மனோபாவத்தால்தான் முக்கியமான இவ்வகைக் கதைகள் தமிழில் வரவில்லை என்கிறார் சுஜாதா.  தமிழின் ஒரே விஞ்ஞான எழுத்தாளரான சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் கதை எவ்வளவு ? விஞ்ஞானம் எவ்வளவு ? என்ற ஆய்வு இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.  நண்பர் இரா. நடராசன் மனம் வைப்பாரா?

பின்னி​ணைப்பு

ப​டைப்புகள் பட்டியல்

Airframe

The Andromeda Strain   தி​ரைப்படமாக வந்தது

Binary

A Case of Need

Congo (novel)  தி​ரைப்படமாக வந்தது

Dealing: or the Berkeley-to-Boston Forty-Brick Lost-Bag Blues

Disclosure   தி​ரைப்படமாக வந்தது

Drug of Choice

Easy Go

Eaters of the Dead  தி​ரைப்படமாக வந்தது

Grave Descend

The Great Train Robbery  தி​ரைப்படமாக வந்தது

Jurassic Park (novel)  தி​ரைப்படமாக வந்தது

The Lost World (Crichton novel) தி​ரைப்படமாக வந்தது

        Micro

Next

Odds On

Pirate Latitudes

Prey

Rising Sun   தி​ரைப்படமாக வந்தது

Scratch One

Sphere   தி​ரைப்படமாக வந்தது

State of Fear

The Terminal Man

Timeline   தி​ரைப்படமாக வந்தது

The Venom Business

Zero Cool

Nonfiction

Electronic Life

Five Patients

Jasper Johns

Travels

​மைக்​கேல் கி​ரைட்டனின் ப​டைப்புகள் பற்றி வந்துள்ள நூல்கள்

The science of Michael crichton by Kevin R.Grazier

இது மிக முக்கியமான நூல். ​மைக்​கேல் கி​ரைட்டனின் முக்கிய நாவல்கள் அ​னைத்தும் பற்றி எழுதப்பட்ட கட்டு​ரைகளின் ​தொகுப்பு. 1) The andromeda strain, 2) Virtual reality and man-machine interface in disclosure and the terminal man, 3)Shock to the system, 4)Neanderthals and werdols, 5)Primate behaviour and misbehaviour in Michael Crichton’s congo, 6)crichton’s travel in time. 7)Artificial life in Michael Crichton’s prey, 8)Be afraid. Be very afraid : Michael Crichton’s state of fear, 9) Science comes second in next என்று ஒவ்​வொரு நாவலிலும் உள்ள விஞ்ஞான, கற்ப​னை கல​வை பற்றி ​பெரிய விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் இந்தக் கட்டு​ரைகளின் த​லைப்புக​ளைப் பார்த்தா​லே​யே அவர் எத்த​னை ​பெரிய விஞ்ஞான ​எழுத்தாளர் என்பது ​தெரியும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் –  அருள்ஜோதி முரளிதரன்:

ஆசிரியர் குறிப்பு:

கோவையைச் சேர்ந்தவர்.  முனைவர் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது அமெரிக்கப் பல்கலையில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இலக்கியம், தமிழ்சங்கப் பணிகளுடன், அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.

பெண்ணோ, ஆணோ எதிர்பாலினத்தின் மீதான அன்பு, புறக்கணிப்பின் வலி, பிரிவு இன்னபிறவற்றைக் குறித்து எழுதாமல் இருக்க முடியாது.  நம்மை அதிகம் பாதிப்பவற்றைத் தான் நம் மொழியில் எழுதுகிறோம்.  அருள்ஜோதி,  அமெரிக்கா வரை ஜாதியைக் கொண்டு சென்றிருப்பது, பள்ளி மாணவனின் உளச்சிக்கல், போரின் குரூரம், அமெரிக்கக்கனவுக்குள் சிறைபட்ட 

பெண் என்பது போல பலவற்றைக் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

முழுக்கவிதையல்ல இது.  கவிதை சொல்லும் பொருளும் வேறு.  ஆனால் இந்த வரிகளை மொத்தக் கவிதையில் இருந்து துண்டித்தால் இது தனியாகத் தரும் பொருள் வேறு.  நிழலைச் சுமப்பதென்பது பெரும்பாரம்.

“எனக்கும் காலத்துக்குமான

இடைவெளியின் கணத்தில்

நுழைந்து கொள்கின்றன

அரூப நிழலின் கரங்கள்

சதாசர்வ காலமும் கூடவே

அலைகிறது என் நிழலின் சுமை”.

பெண்கள் வேலைக்கு சென்றால் அந்நிய ஆணால் கவரப்பட்டு விடுவார்கள் என்ற ஆதிகாலத்து பயம் அகலாமலிருக்கிறது.  தன் பெண்ணில் தொலைந்து போன தன்னைத் தேடும் பெண்கள் ஏராளம்.

‘  ஊரை உறவை கனவைத்

தொலைத்த இறுக்கம்

மனநோயான பின்பு

மாடுலர் கிட்சனில்

இன்ஸ்டாரீல்களுக்குள்

அடக்கப்பட்டுவிடுகிறது

டிபன்டெண்ட் விசாவில்

வந்தவளின்

கோல்ட் மெடல்களும்

ஒரு கோப்பைக் கனவுகளும்”

வீடு, கொல்லை, புங்கைமரம் எல்லாமே போன பிறவியில் பார்த்தது போல் இருக்கிறது.  இதில் வரும் பெண்ணையும் தான்.  முத்தத்தை  எதற்குப் புதைக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். மரத்தின் கீழ் புதைத்ததால் ஊதாப்பூ, வானத்தில் ஒளித்திருந்தால் நட்சத்திரம்.

“நுதல் முத்தங்கள் ஒவ்வொன்றாய்

ஒற்றியெடுத்து என்வீட்டின் கொல்லையில்

புங்கை மரத்தடியில் புதைத்து

வைத்திருந்தேன் நான்

காலத்தைக் கொஞ்சம் சிறையிலெடுத்து

நம் அந்தரங்கத்தைச் சுமந்தலைகிறது

கொல்லைப்புறத்துப் புங்கை

தனித்திருக்கும் இரவுகள்

சலனமின்றிக் கடக்க

நடுநிசியில் முளைக்கிறது

தினமொரு புங்கைமர முத்தம்”.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள்.  காதலை வெளிச்சொல்லத்தெரியாத அப்பாவி புங்கைமரப்பெண்.  அந்நியமாதல் கோட்பாடு எழுதும், உணர்ச்சியை உதிர்த்து அறிவால் விடைதேடும் அடுத்த பெண்.  கடைசியாகத் தீராக்கோபத்தைக் கவிதையெழுதி அணைக்கும் மற்றொரு பெண்.

அருள்ஜோதியின் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.  சில எடிட்டிங்கைக் கோருபவை.  எல்லாக் கவிதைகளிலும் ஒரு முதிர்ச்சியைக் காண முடிவது முக்கியமான விஷயம்.  சதுரங்க விளையாட்டை நிகழ்த்தும் பெண், பவளமல்லி மரம் வரைந்தவளின் பெண், என்று சில பெண்கள் கவிதைக்குள் கதைகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.  நல்ல வாசிப்பனுபவத்தை அளித்த தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் அருள்ஜோதி.

பிரதிக்கு:

 யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472

முதல் பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ. 150.

பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் –  அருள்ஜோதி முரளிதரன்:

ஆசிரியர் குறிப்பு:

கோவையைச் சேர்ந்தவர்.  முனைவர் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது அமெரிக்கப் பல்கலையில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இலக்கியம், தமிழ்சங்கப் பணிகளுடன், அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.

பெண்ணோ, ஆணோ எதிர்பாலினத்தின் மீதான அன்பு, புறக்கணிப்பின் வலி, பிரிவு இன்னபிறவற்றைக் குறித்து எழுதாமல் இருக்க முடியாது.  நம்மை அதிகம் பாதிப்பவற்றைத் தான் நம் மொழியில் எழுதுகிறோம்.  அருள்ஜோதி,  அமெரிக்கா வரை ஜாதியைக் கொண்டு சென்றிருப்பது, பள்ளி மாணவனின் உளச்சிக்கல், போரின் குரூரம், அமெரிக்கக்கனவுக்குள் சிறைபட்ட 

பெண் என்பது போல பலவற்றைக் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

முழுக்கவிதையல்ல இது.  கவிதை சொல்லும் பொருளும் வேறு.  ஆனால் இந்த வரிகளை மொத்தக் கவிதையில் இருந்து துண்டித்தால் இது தனியாகத் தரும் பொருள் வேறு.  நிழலைச் சுமப்பதென்பது பெரும்பாரம்.

“எனக்கும் காலத்துக்குமான

இடைவெளியின் கணத்தில்

நுழைந்து கொள்கின்றன

அரூப நிழலின் கரங்கள்

சதாசர்வ காலமும் கூடவே

அலைகிறது என் நிழலின் சுமை”.

பெண்கள் வேலைக்கு சென்றால் அந்நிய ஆணால் கவரப்பட்டு விடுவார்கள் என்ற ஆதிகாலத்து பயம் அகலாமலிருக்கிறது.  தன் பெண்ணில் தொலைந்து போன தன்னைத் தேடும் பெண்கள் ஏராளம்.

‘  ஊரை உறவை கனவைத்

தொலைத்த இறுக்கம்

மனநோயான பின்பு

மாடுலர் கிட்சனில்

இன்ஸ்டாரீல்களுக்குள்

அடக்கப்பட்டுவிடுகிறது

டிபன்டெண்ட் விசாவில்

வந்தவளின்

கோல்ட் மெடல்களும்

ஒரு கோப்பைக் கனவுகளும்”

வீடு, கொல்லை, புங்கைமரம் எல்லாமே போன பிறவியில் பார்த்தது போல் இருக்கிறது.  இதில் வரும் பெண்ணையும் தான்.  முத்தத்தை  எதற்குப் புதைக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். மரத்தின் கீழ் புதைத்ததால் ஊதாப்பூ, வானத்தில் ஒளித்திருந்தால் நட்சத்திரம்.

“நுதல் முத்தங்கள் ஒவ்வொன்றாய்

ஒற்றியெடுத்து என்வீட்டின் கொல்லையில்

புங்கை மரத்தடியில் புதைத்து

வைத்திருந்தேன் நான்

காலத்தைக் கொஞ்சம் சிறையிலெடுத்து

நம் அந்தரங்கத்தைச் சுமந்தலைகிறது

கொல்லைப்புறத்துப் புங்கை

தனித்திருக்கும் இரவுகள்

சலனமின்றிக் கடக்க

நடுநிசியில் முளைக்கிறது

தினமொரு புங்கைமர முத்தம்”.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள்.  காதலை வெளிச்சொல்லத்தெரியாத அப்பாவி புங்கைமரப்பெண்.  அந்நியமாதல் கோட்பாடு எழுதும், உணர்ச்சியை உதிர்த்து அறிவால் விடைதேடும் அடுத்த பெண்.  கடைசியாகத் தீராக்கோபத்தைக் கவிதையெழுதி அணைக்கும் மற்றொரு பெண்.

அருள்ஜோதியின் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.  சில எடிட்டிங்கைக் கோருபவை.  எல்லாக் கவிதைகளிலும் ஒரு முதிர்ச்சியைக் காண முடிவது முக்கியமான விஷயம்.  சதுரங்க விளையாட்டை நிகழ்த்தும் பெண், பவளமல்லி மரம் வரைந்தவளின் பெண், என்று சில பெண்கள் கவிதைக்குள் கதைகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.  நல்ல வாசிப்பனுபவத்தை அளித்த தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் அருள்ஜோதி.

பிரதிக்கு:

 யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472

முதல் பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ. 150.

அமெரிக்க விருந்தாளி – தியா காண்டீபன்:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்தவர்.  அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒரு கட்டுரை நூல், ஒரு நாவல், ஒரு கவிதைத் தொகுப்பிற்குப்பின் வெளிவரும் இந்த நூல், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பும், நான்காவது நூலுமாகும்.

ஆங்கிலத்தில் Percentile என்கிறோம்.  குழுவின் முதல் மதிப்பெண் எடுப்பவனை வைத்து நம் மதிப்பெண் தீர்மானிக்கப்படும்.  குழுவில் அதிகம் கெட்டிக்காரர்கள் இருந்தால் நாம் தேர்ச்சியடையாது போகவும் வாய்ப்பிருக்கிறது.  தமிழ் சிறுகதையுலகம் உலகத்தரம் வாய்ந்தது.  எனவே புதிதாகக் கதை எழுத வருபவர்கள் மிக அதிகமாக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.

‘ உம்மாண்டி’  (தமிழ்நாட்டில் பூச்சாண்டி)

அம்மாவால் சிறுவயதில் பயமுறுத்தி வளர்க்கப்பட்டவன் காலம் அடித்த அடியில் உம்மாண்டியாக மாறுவதைச் சொல்வது.  கதையில் பல வரிகள் எடிட் செய்ய வேண்டும் என்ற போதிலும் நல்ல Presentation இந்தக்கதை.  ‘ இங்கிலிஸ் என்றொரு வேட்டையன்’  நல்லவிதமாகப் Present செய்யப்பட்ட இன்னொரு கதை.

தொகுப்பின் பல கதைகள் Flat ஆக முடிந்திருக்கின்றன.  உதாரணத்திற்குத் தலைப்புக்கதையை எடுத்துக் கொள்வோம்.  அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான யாழ்பாணத்திற்கு ஒரு

தம்பதி இரு குழந்தைகளுடன் செல்கிறார்கள்.  முதன்முறை இலங்கை செல்லும் குழந்தைகள் யாழ்ப்பாணத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட முடியுமா என்று பார்க்கிறார்கள்..  மனைவிக்கு நடுவில் துபாயில் சில நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு இலங்கை போகலாம் என்ற விருப்பம்.  கணவனுக்குக் குறைந்த விடுமுறை நாட்களை முழுவதும் சொந்த ஊரில் கழிக்க விருப்பம்.  இங்கே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கில் இந்தப் பயணம் அமைய விரும்புவது யதார்த்தமும் சுவாரசியமும் நிரம்பியது.

Connecting flightக்கு தாமதமானதால் அதில் செல்ல முடியவில்லை.  அமெரிக்கக் குடிமக்கள் என்றால் துபாய்க்காரர்கள் எப்படி வழிவார்கள் என்பது சொல்லப்படுகிறது.  ஐந்து நாட்கள் துபாயில் விமானக் கம்பெனி செலவில் தங்க நேர்கிறது.  இதுவரை கதை Perfect.  ஆனால் இனிமேல் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும்.  அது ஏதும் நடக்காமல் இலங்கை செல்கிறார்கள்.  ஆங்கிலப்படங்களில் முகங்கள் நெருங்கி வருகையில் முத்தம் தான் என்று நாம் அசிரத்தையாகப் பார்க்கையில்,  ஒருவர் விலகிக் கொள்வது போல் சப்பென்று முடிகிறது.

காண்டீபனுக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கிறது.  இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைக்கருக்களும் வலிந்து உருவாக்காமல் நம்மைச் சுற்றி நடப்பதை வைத்தே உருவானவை.  இவர் செய்ய வேண்டியது கதைகளுக்கு அழுத்தத்தை உருவாக்க முயற்சிப்பது மட்டுமே.  சென்ற பத்தியில் குறிப்பிட்ட

கதையில் சிறுமி முதல் நாளே காணாமல் போய், ஐந்து நாட்களும் போலீஸ், அழுகை என்று கடைசியில் அவள் கிடைத்து தப்பித்தால் போதும் என்று கிளம்பினால் கதைக்குக் கதையுமாயிற்று.  அடுத்த முறை சிங்கப்பூரில் தங்கிச் செல்ல யோசனை சொன்ன மனைவியை அடக்கின மாதிரியுமாயிற்று.  எழுத்தாளன், குறிப்பாக சிறுகதையாசிரியன் எல்லாக் கதைகளுக்குமே பலவித சாத்தியங்களைக் குறித்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பிரதிக்கு:

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650

முதல்பதிப்பு செப்டம்பர் 2024

விலை ரூ. 200.

பெருநெஞ்சன் –  ஜார்ஜ் ஜோசப்:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர்.  தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

இரண்டு நாவல்களை மொழிபெயர்த்துள்ள இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.

முந்தைய தொகுப்பான எமரால்ட் கதைகள் அனைத்தும் கிறிஸ்துவப் பின்னணியைக் கொண்டவை.  இந்த நூலில் அவை அல்லாதவற்றை முதலில் பார்ப்போம்.  ‘ அச்சிறைக் கிழவன்’  நூலகவாசிகளின் தொடர்ச்சி என்றிருக்கிறார்.  ஆனால் அதன் அழுத்தம் இதில் வரவில்லை.   அதே போல் ‘ அந்தணன்’  கதை எந்த விதத்திலும் முழுமையடையாத கதை.

தலைப்புக்கதை இவரது கையெழுத்தைப் பொறித்து வந்திருக்கிறது.  ‘ உபதேசியார்’  நன்றாக வந்திருக்கிறது.  இது இப்படித்தான் என்று காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளுதல் இவருக்குக் கைவந்த கலையாகிவிட்டது.  ‘ பட்டயம்’  இரண்டு நம்பிக்கைகள் மோதிக் கொள்வது போன்ற தோற்றமளிப்பினும்

மதங்களைத் தாண்டி, வாழ்க்கை குறித்த ஏராளமான கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.  ‘சோபி’ is another beautiful story.

கீழ்மைகளைக் குறித்து எழுதுகையில் விமர்சனத்தொனி இல்லாது இறுதி முடிவை வாசகனிடம் விட்டுவிடும் படி  கதை எழுதுபவர்கள் குறைவு.  (Not the ending of the story) இவர் அதைத் தொடர்ந்து செய்கிறார்.  ‘ நெடி’  போன்ற பக்கஅளவில் மிகச்சிறிய கதைகளுக்குக் கூடப் போதிய அழுத்தத்தைத் கொடுக்க இவரால் முடிகிறது.  Another writer to watch.

பிரதிக்கு:

சீர்மை 80721 23326

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ.120.

❌