Normal view

Received before yesterday

சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் "சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”"

மனித ஆன்மாவின் நெசவு

இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.

காலம் பற்றிய ஐந்து கவிதைகள்

ஆதியும் இறுதியுமான ஒற்றைவினா  மறைந்த மாத்திரத்தில், கேளிக்கைகள் பொருளற்றதாகும். யார் கண்டது, பசியும் ஓய்வும் உறக்கமும்கூட இல்லாமல் போகலாம். இருளும் ஒளியும் இரண்டற்று ஆகலாம். ஆந்தைகளும் மின்மினிகளும் பகலை ஆள, பகல்பொழுதின் உயிரிகள் இரவுக்கு இடம் பெயரலாம். 

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சிகையடர்ந்த நெஞ்சில் மார்புக் கதுப்புகள் அழுந்த முகம் புதைத்து அரை உறக்கம் கொள்ளும் என் தங்கமே நின் பின்னழகில் விரல்கொண்டு எழுதுகிறேன் இனி இந் நதியின் கரையெலாம் நின் பொன்னொளியால் சுடரட்டும்

சேரன் கவிதைகள்

13 April 2025 at 13:46
என் கையெழுத்தில் எஞ்சியிருந்த கவிதைகள், முத்தம் பதிந்திருந்த சில நூல்கள் சில கடிதங்கள் சில மாவிலைகள் அம்மாவின் படம், எப்போதோ கைக்கெட்டிய ஒரு சயனைட் குப்பி காய்ந்து போன மூன்று

தேவதச்சனின் கவியுலகம்

வெம்மை இருந்தாலும் கவிகள் மழையை விடுவதே இல்லை. மேலிருந்து வீழும் மழைக்கு போட்டியாக கவிஞர்களும் கவிதைகளை மேலே அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஊரில்  நம்ம வீட்டில் இருக்கிற கதவு, கைப்பிடி கிரிலில் நாம பாத்திருக்கலாம் - மழை பெய்யும் போதோ, இல்ல அது நின்ற  கொஞ்ச நேரத்திற்கு பிறகோ, நிறைய  துளிகள்  ஒரு நத்தையோட முதுகு போல உண்டாகிருப்பதை, அதை தொட்டால் உடைந்துவிடும்.

வேனிற்காலம்

13 April 2025 at 13:45
அருகிலிருக்கும் போதுதான் நாம் அநேகரை பார்க்க இயலாமல் போகிறது கை விட்டவர்களையெல்லாம் காலத்துக்கும் நினைத்துக் கொண்டு கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம் இந்த வேனிற் காலத்தில்

பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்

வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

அடர்க்கருமை இருள் போர்த்தியபடி

ராத்திரி விளக்கின் ஊதா நிறம் குடித்து அது அந்த அறையெங்கும் மின்மினியாய் மினுக்கி அலைந்தது அவனோ அந்தக் கொடும் இருட்டைப் போர்த்தியபடியே பஞ்சு பறக்கும் படுக்கையில் நாளான எண்ணெய்ச் சிடுக்கின் நாற்றம் பழக்கியவனாய் அவன் உயிரை வளர்த்தியபடி அறைக்குள் கிடந்தான்

ஊடாடும் பெருநிழல்

பதற்றத்துடன் என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டும் என் சகோதரனை இழுத்துக்கொண்டும்  பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடிய சந்தர்ப்பத்தில் பெப்பியைத் தாக்கி இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். கடைசி வரை அவருக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று சொன்னார் பப்பாஜி.  உங்கள் வீட்டில் பதுங்கியவாறு பெப்பி அணிந்திருந்த ஆடையின் நிறம்,   அடையாளங்களையும் கூறி அவளைத் தேடச்சொல்லி உங்களிடம் சொன்னாராம். உங்களாலும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து

குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.

ஆனந்த்குமார் கவிதைகள்

உனது இருப்பு உன்னை கவனிக்கவிடாமல் ஆக்குகிறது உன்னைப் பற்றி நினைக்கவிடாமல் செய்கிறது

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும்.  வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான்.

கு.அழகர்சாமி கவிதைகள்

அவசரப்படுத்தும் இரவுக்கு அந்தி வழி விட- பறவைகள் வீடு திரும்ப அதைக் கண்டு நான் வீடு திரும்ப- எதற்கோ ஓர் இரட்டைவால் குருவி என்னைக் கூப்பிடுவதாய்த் திரும்பிப் பார்க்க திரும்பிய கணத்தில் மின்னலடித்து உள்ளுணர்ந்தேன்

இறவாமை – பகுதி இரண்டு

இந்தக் கண்களா ? மனம் வேறெங்கோ இருந்தால், கண்ணில் படுபவை அனைத்தையும் நாம் பார்ப்பதில்லையே. அப்போது மனமா ? மனம் பார்க்கிறது அல்லது பார்க்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறதே. அப்போது வேறொரு ஆற்றல் இந்த மனதையும் கவனிக்கிறது

இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்

என் மனம் முழுவதையும் கரிச்சான் ஆக்கிரமித்திருந்தது மரத்தில் எங்கோ அப்போது ஒரு பறவை இட்ட முட்டையின் கதகதப்பின் நெடி காந்தலாக வீசிற்று.

பெருங்காய கச்சோடி

நான் இலந்தை ஊறுகாய் போட போகிறேன். உனக்கு கொஞ்சம் வேணுமா? ஊறுகாய் இன்னும் தயாராகவில்லை நான் வெல்லம் மட்டும் தான் சேர்த்திருக்கிறேன்." இப்படியாக குசுமும் நானும் மறுபடியும் பேச ஆரம்பித்தோம். குசும்  இலந்தை ஊறுகாயை என் கையில் தந்ததுமே என்னுடைய கோபத்தையும் வலியையும் நான் மறந்து போனேன். நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு நான் குசுமின் அறையை ஒட்டியிருந்த மாக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இருந்தன

கவிதை என்ன செய்யும்

13 April 2025 at 13:35
எல்லோருக்கும் எப்போதும் நேசிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு காலமோ சூழ்நிலையோ நல்லூழோ அமைந்துவிடுவதில்லை. கல்வியின் பொருட்டோ பணியின் பொருட்டோ அல்லது வாழ்வின் அழுத்தத்தினாலோ பிரிவு அமைகிறது. இதில் பேரன்பும் பெருங்காதலும் பிரிவின்றி நிறைவு கொள்ளாத தெய்வங்கள்.  தொலைத்தூர உறவில் காதலில் இருப்பவர்கள் சாலையில் பயணிக்கும் போது  எல்லை பலகையில் தெரியும் ஊரும் அவற்றின் கிலோ மீட்டர்களும் அளிக்கும் கிளர்ச்சியையும் துயரையும் நன்கு அறிவார்கள்.
❌