Normal view

Received before yesterday

குழலினிது

சண்முகநாதன், "டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்" என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.

மெய்கண்டவன்

மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.

ஒளிரொலி : விஜய் ரெங்கராஜன்

April 02, 2025 சொல்மொழி வகைமை அமைந்த பிறகு, இசைமொழி வகைமை அமைக்கலாயினர். இசை மொழியாக விரிய, சொல் இசையாக மலர்ந்தது. கழனிப்பாடல் வேட்டைப்பாடல் மீன்பிடிபாடல் பல கண்டு, படிகள் ஐந்தென முதலில் வரையறுத்தனர். மனம் மயக்கும் முல்லையாய் மோகனமாய் இசை மிளிர்ந்தது. மேலும் பாடல் பல கேட்டு, வானில் மழைவில் நிறங்கள் கண்டு, சுரங்கள் ஏழென உயர்த்தினர்.
❌