Normal view

Received before yesterday

முகம் அலம்பும் பூனை

மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.
❌