Normal view

Received before yesterday

ஜெயகாந்தனின் சினிமா

தற்செயலாக இந்த இதழ் கண்ணில் பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைதான். ஆனால் ஜெயகாந்தனே இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் திரைப்படங்கள் பக்கம் தலைவைத்துப் படுத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இவை எந்த விதத்திலும் காலாவதி ஆகிவிடவில்லை.

ஜெயகாந்தன் இயக்கிய உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான் திரைப்படங்களைப் பற்றி எடிட்டர் லெனின் எழுதி இருக்கிறார். உ.போ. ஒருவன்தான் ஜெயகாந்தன் இயக்கிய முதல் திரைப்படம் போலிருக்கிறது. சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் ஜெயகாந்தன் பிடிவாதத்தால் முதலில் 18000 அடி எடுத்தார்களாம். அப்புறம் பீம்சிங் எப்படியோ ஜேகேயின் மனதை மாற்றி 5000 அடி கத்தரித்தாராம். லெனின் கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அம்ஷன்குமார் எழுதிய ஒரு நல்ல கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. இவற்றைத் தவிர சினிமாவுக்குப் போன சித்தாளு நாவலுக்கு ஜேகே எழுதிய முன்னுரை இருக்கிறது. யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

தியோடோர் பாஸ்கரனும் ஒரு சுமாரான கட்டுரை எழுதி இருக்கிறார். யமுனா ராஜேந்திரன் இன்னொரு கட்டுரையை எழுதி இருக்கிறார், ஆனால் அதற்கும் திரைப்படங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை.

நான் பார்த்தவற்றில் ஜெயகாந்தன் திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தக் கூடியவை யாருக்காக அழுதான் (1966), சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகியவைதான். அவற்றில் சி.நே.சி.ம. படத்தை பத்து பனிரண்டு வயதில் பார்த்தபோதும் சரி, நாற்பத்து சொச்சம் வயதில் மீண்டும் பார்த்தபோதும் சரி, பிடித்திருந்தது. மற்ற இரண்டும் சுமார்தான்.

எப்படி இருந்தாலும் சரி, இந்த இதழைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: திரைப்படங்கள், ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  • பேசாமொழி இதழ்
  • சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்பட விமர்சனம்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்பட விமர்சனம்

❌