Normal view

Received before yesterday

நமக்குத் தேவை நவீன நாடகங்கள்

உலகம் முழுவதுமே வெகுஜனக் கலைகளுக்கும் செவ்வியல் கலைகளுக்குமான பிரிவு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் யுகசந்திகளிலும் பெரும் சமூக மாற்றங்களின் காலகட்டங்களிலும் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையிலான வேற்றுமைகள் மறைந்து, இவற்றுக்கு இடையில் பாலமாக அமையும் புதிய கலை வடிவங்கள் உருவாகி, அவை சமூகத்தை மறு வரையறை செய்யத் தொடங்குகின்றன. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக ஆங்கிலேய ஆட்சியாலும் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தாலும் இந்தியாவெங்கும் உருவான நவீன சிந்தனைகள் மற்றும் கலைகளின் பேரலையின் ஒரு பகுதியாகவே உருவானது நவீன நாடகம். 

விழாப் பந்தல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில் – விக்னேஷ் ஹரிஹரன்) சிமோன் தி பொவாவின் மரணத்திற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றளவும் அவர் பெண்ணிய இயக்கத்தின் வரலாற்று நாயகியாகவே போற்றப்படுகிறார். 1956இல் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான அபிமானிகளின் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருந்த “இங்குள்ள அனைத்துமே பெண்களுக்கு கடன்பட்டவையே” எனும் அவரது வாக்கியமே அவரது ஆளுமையையும் அவர் முன்வைத்த பெரும் பாரம்பரியத்தையும் பரைசாற்றும். அவரது எல்லா கருத்துக்களோடும் நீங்கள் உடன்படாமல் போகலாம். அவரது ஆளுமை கூட உங்களுக்கு […]

பெண்மை எனும் முடிவுறாக் கதையாடல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) எலிஃப் ஷஃபாக் துருக்கியின் “முதன்மையான பெண் நாவலாசிரியர்” (உபயம்: Financial Times) ஆக அறியப்படுபவர். சொற்பமான பெண் படைப்பாளிகளே உலகளவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த தனித்துவமான குரல் அவர். மத்திய கிழக்கு நாடுகளில் துருக்கியே மிகவும் தாராளமயமானது என்றாலும் அங்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகுந்தே இருக்கின்றன. ஓரான் பாமுக்கும், அகமத் ஹம்தி தன்பினாரும் உலகை ஆட்கொண்ட பிறகே ஷஃபாக் ஆங்கில இலக்கிய உலகத்தால் அடையாளம் காணப்பட்டார். […]
❌