வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள்
11 May 2025 at 12:40
தமிழில் எனக்குப் பிடித்த சொல் ஊரா காடா என்பதில் எனக்குள் நிறைய போராட்டம் நடந்தது. இறுதியில் காடே வென்றது. காடு ஊரைவிடத் தன்னிறைவானது. சங்ககாலத்தில் ஊரே காடாக இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் காடு இருந்தது. பாலை நிலமும் பாலைவனமாகவே இருந்தது.வயலும் காடாக வயல்காடாக. மலையும் மலைக்காடாக.