Normal view

Received before yesterday

நித்தியம்

"டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?" கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான் தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில் அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.

இசைவைத் தேடும் வாழ்க்கை

மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி  உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.

எல்லையற்ற நடனம்

"நாம் புதிய பிரபஞ்சங்களை உருவாக்கும்போது, வெறும் கால-வெளியை மட்டும் உருவாக்கவில்லை," என்று டாக்டர் மார்கஸ் தனது கையை உயர்த்தி, மேலே உள்ள ஹோலோகிராபிக் காட்சியில் புதிதாக உருவாகும் பிரபஞ்சத்தை சுட்டிக்காட்டினார். "எளிய விஞ்ஞான செயல்முறை அல்ல. நாம் ஒரு கடவுளின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம், பாருங்கள், இங்கே. பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் - ஒவ்வொன்றும் ஒரு சூரியன், ஒவ்வொன்றும் புதிய உலகங்களுக்கான ஒளி. டிரில்லியன் கணக்கான கிரகங்கள் - ஒவ்வொன்றும் ஒரு வீடு, ஒரு தாய்மடி, புதிய வாழ்க்கை.

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, "கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?" என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.
❌