Normal view

Received before yesterday

சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ்

நுண்ணுணர்வும் கற்பனை விரிவும் உள்ள இலக்கியவாசகர்கள் எப்போதுமே பற்றிக்கொள்ளக் காத்திருக்கும் சருகு போன்றவர்கள். அப்படி சிலரையேனும் இந்த இதழின் கவிதைகள் ஈர்த்தால், அதன் வாயிலாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் அவர்கள் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால் சொல்வனத்தின் இந்த முயற்சி சிறு பலனை எட்டியது என்று கொள்ளலாம். இது இரு இதழ்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடுவதல்ல, தொடர் முயற்சிகள் வாயிலாகவே அடையக்கூடுவது.

சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் "சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”"

மனித ஆன்மாவின் நெசவு

இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.
❌