Normal view

Received before yesterday

பாட்ரிசியா  கவாலி கவிதைகள்

இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று. இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ, எனக்கு பொருட்டல்ல இன்று. இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத் தணிவித்துக் கலந்திடும் இனிமையான கவிகை மாடத்திற்குள் பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.

கு.அழகர்சாமி கவிதைகள்

அவசரப்படுத்தும் இரவுக்கு அந்தி வழி விட- பறவைகள் வீடு திரும்ப அதைக் கண்டு நான் வீடு திரும்ப- எதற்கோ ஓர் இரட்டைவால் குருவி என்னைக் கூப்பிடுவதாய்த் திரும்பிப் பார்க்க திரும்பிய கணத்தில் மின்னலடித்து உள்ளுணர்ந்தேன்

கு.அழகர்சாமி கவிதைகள்

சாய்த்துத் தான் வைக்கப்பட்டிருந்தது அது. ஆனால் வேறெதுவும் சாய்த்து வைக்கப்பட்டிருப்பது போலில்லை அது. சுட்டு விடுவது போல் ஓர விழியில் என்னைப் பார்க்கிறது.
❌