Normal view

Received before yesterday

உலகச் சிறுகதைகள் 18 பீட்டர் பிஷெல்

ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை. 

ஆத்திரம் அவனைப் பற்றிக்கொண்டது. 

அவன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். அவனுடைய முகம் சிவந்து போயிருந்தது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முஷ்டியைச் சுருட்டி மேஜைமீது குத்திக்கொண்டிருந்தான். முதலில் ஒரு குத்துமறுபடியும் ஒரு குத்து. பிறகு 'மாறியாக வேண்டும் மாறியாக வேண்டும்என்று கத்தியபடியே மேஜைமீது கைகளால் அறையத் தொடங்கினான். அதன் பிறகு கடிகார ஒலி கேட்கவில்லை. 


*** 

அநேகமாக மனிதர்கள் அனைவருக்குமே அடிப்படையில் பணமே வாழ்வை அர்த்தப்படுத்துவதாக இருப்பதால் அதுவே  வாழ்வின் ஒரே இலக்காக ஆகிவிடுகிறது. 

பெரும்பான்மையைக் கவரும்படி எழுதி, பிரபலமாகிப் பணம் பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று இருப்பதால், வணிக எழுத்தாளன் கிழடுதட்டிப் போனாலும் காதல் கத்தரிக்காய் என்று கிளுகிளுக்கவைப்பதிலேயே கிடக்கிறான். வாழ்வில் பொருள் தேடுவதைவிட வாழ்வின் பொருளைத் தேடுவதையே முதன்மையாகக் கொண்டிருப்பதால் இலக்கிய எழுத்தாளன் கிழவர்களைப் பற்றி எழுதுவபவனாக இருக்கிறான். 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 18 மேஜை மேஜைதான்

நிற்க கல்விக்கு தக

 கல்வி கற்பதும், வணிகம் செய்வதும் இருவேறு துருவங்கள் என்பது போல நீண்ட விவாதங்கள் கொண்ட பதிவுகளைக் காண நேர்ந்தது. இவ்வளவு மேம்போக்காக, இவ்வளவு அதீதமாக கொட்டி நிரப்பும் விவாதங்கள் மட்டுமே நமது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்கள் என்று நம்பி அலைமோதுவதைக் காணும்போது அயர்ச்சியே எஞ்சியது.

கல்வி கற்பது, திறனை வளர்த்துக் கொள்வது போன்றவை எல்லாம் ஏன் வணிகம் செய்வதற்கு இடையூறாக இருக்கப் போகிறது? அல்லது வணிகம் என்பதை மட்டுமே நம்பும் சமூகம், எப்படி சமுதாயத்தை சீர்கேடாக்குகிறது? இது போன்ற அடிப்படை பிரக்ஞை எதுவுமில்லாமல், வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எதையாவது உருட்டி பிரட்டி கருத்துரைக்க வேண்டும் என்கிற அகநெருக்கடி ஏன் உண்டாகிறது?

JSTOR போன்ற தளங்களில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீடாக எழுதிக் குவிக்கப்படும் கட்டுரைகளை நீங்கள் பார்க்கலாம். காந்தி ஏன் குடியை எதிர்த்தார் என்பதை காந்தியின் அத்தனை எழுத்துகளிலும் இருந்து புரிந்து கொள்ளாமல், ஏதாவது ஒரு மேல்நாட்டுக்காரர் திரிபுவாதமாக எழுதி வைத்திருப்பதை அப்படியே உருவி எடுத்து தமிழ்ச்சூழலில் உலவவிடுவது போன்றவை அறிவு செயல்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பானவை.


நமது சமூகத்தின் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளனவா? மிக அதிக மனித வளம் கொண்ட நாட்டில், அனைவருக்கும் அடிப்படை கல்வியும், அதற்கு மேல் தரமான உயர்கல்வியும் அளிக்கும் சிஸ்டம் சாமானியமாக உருவாக்கப் படுவதில்லை. ஏகப்பட்ட கருத்து விவாதங்களின் மீது, கற்க வேண்டிய கல்வி வரையறுக்கப்பட்டு, மொத்த சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த திரளின் மீதான அதன் தாக்கத்தை எடைபோட்டு, இந்த கல்வித்திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் போக்கில் பல குறைபாடுகள் விளைந்து கொண்டேதான் இருக்கும். அவற்றை சீர்படுத்தி செப்பனிடுவதும் நமது பொறுப்புதான்.
மாறாக, வணிகம் மட்டுமே நோக்காக கொண்டு செயல்படும் சில சமூக்கத்தினரை உதாரணமாக காட்டி, 'அதுதான் உயர்ந்தது' என்று அடித்து விடுவதெல்லாம் அறிவுச்செயலுக்கு அடாதது.
வணிகம் மட்டுமே நோக்காக கொண்டவருடைய பார்வையில், இலாபம் மட்டுமே முதன்மையானதாக இருக்கும். சுரண்டல், வன்முறை, பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்க்கும் தடித்தனம், காரியம் சாதிக்க யாரையும் காவுகொடுக்கும் அடாவடித்தனம், சமூக சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாதிருத்தல் என பல எதிர்மறை குணங்களை, அதன் ஊறுகள் தெரியாமலே தன்னகத்தே கொண்டிருக்கும் அவலம் நிகழ்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உண்டு.
வள்ளுவரின் வாக்கில் சொல்வதானால், "கற்க வேண்டியவற்றை குறையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்'. இதில் 'காசு பணம் சம்பாதிப்பதும்' உள்ளடக்கம்தானேத் தவிர, அது மட்டுமே 'கற்பவை' அல்ல. ஒரு குடிமைச் சமூகத்திற்கு தேவையான பரந்துபட்ட கல்வியைத்தான் வள்ளுவர் 'கற்பவை' எனக் குறிப்பிடுகிறார்.
அரசியல் வெளியில், சிறந்த ஜனநாயக முறை என்பது மிகவும் சர்ச்சைகள் கொண்ட, கருத்து மோதல்களுக்கு பரந்த இடமளிக்கக் கூடிய, கட்டுபாடான முன்னேற்றத்தை மட்டுப்படுத்தி கேள்விக்குட்படுத்தும் மக்கள் செயல்பாடுகள் எல்லாம் உள்ளடக்கியது. ஜனநாயக முறையின் திறனுக்கு, தீர்க்கமான அளவுகள் இல்லை.
ஆனால், ஜனநாயக முறைதான் நமது குடிமை அமைப்பிற்கு, குறைந்த ஊறுகளை விளைவிக்கும் சிறந்த அரசியல் முறை.
அது போலதான், வெறும் வணிக இலாபத்தை மட்டும் நோக்காக கொண்ட இனக்குழு செயல்பாடுகளைக் காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய சீரான கல்விமுறைதான் சமூகத்திற்கு அத்தியாவசியமான ஒன்று.
நான் கற்ற கல்வியோ, பெற்ற செல்வமோ, அறிவுச்சமூகத்தில் வெறும் அடையாளங்கள்தான். அந்த கல்வியின் வழியே நான் என்னை நடத்திக் கொள்ளும் முறையே என் தகுதியை தீர்மானிக்கின்றது.
அப்படியல்லாது, வணிக இலாபங்களை புகழ்ந்தும், அறிவு செயல்பாட்டை இகழ்ந்தும் அடையாளப்படுத்துமானால், அந்த சமூகம் எனக்கானதல்ல. அடிப்படை மனித பண்புகள் கொண்ட எவருக்கானதுமல்ல.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

❌