யார் எழுதியதோ
29 June 2014 at 04:28
நீர்க்கரைகளிலே
தனிமையிலே திரிந்திருந்தேன்
மீன் வருமளவும்
முழுவதுமாய்ச் சலித்திருந்தேன்
நதிமேல் விழும் வானிலே
மிதந்தே வரும் தாரகை
அடையா உளவை உணர்ந்தேன் உணர்ந்தேன்
வான் தரையிறங்கும்
இரவுகளில்
உனை தொடர்வேன்
நான்
நடைபழகும் கவிதைகளின்
பொருள் பெறுவேன்
நிலவே விளக்கானவன்
அடியேன் தெருவாசகன்
மெதுவாய் நடந்தேன் தொடர்ந்தேன் தொடர்ந்தேன்
—
எதிரில் இருந்தும் கதவைத் திறவேன்
விடையை துறந்தேன் புதிரில் சுழன்றேன்
—
ஆண்
அறையினிலே
விடிவதில்லை சில பகல்கள்
பெண்
வரும் வரையில்
திறப்பதில்லை அதன் திரைகள்
விழியோ ஒரு சாளரம்
மனமோ சிறு தாவரம்
ஒளியாய் வளர்ந்தாய் கடந்தாய் கடந்தாய்
—
பின் குறிப்பு #1 – இதை எழுதிக் கொண்டிருக்கையில் தோன்றியது – சாதாரணமாகவே தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வேலை spying தானோ?
பின் குறிப்பு #2 – பதிவின் தலைப்பை கேள்வியாகவே பாவித்தால் – பதில் – நானே தான்.