Normal view

Received before yesterday

திருக்குறள்

இலக்கியத்தில் எனக்கு மிகப்பிடித்த  திருக்குறளையே  முதலாவது பதிவாக பதிவுசெய்கிறேன். மறை என்பதற்கு பொருளாக பல சொற்கள் உண்டு. இருப்பினும் பொதுவாக வேதம், மற்றும் மறைதல்  என்ற பொருளிலேயே  நேரடியாக  நாம்  வழக்கமாகப் யன்படுத்துகிறோம்.     வேதத்தின் பொருளை  அனைவராலும்  படித்து பொருள் உணர்ந்து கொள்ள   முடியாது.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் – நர்சிம்

9 September 2023 at 05:33

சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் அவ்வப்போது தென்படும். ஒரு பெண் இருகைகளையும் ஏந்தி, ஒரு தெய்வத்தின் முன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் அது. அவ்வளவு எளிதில் கடந்திட முடியாத வண்ணம், வாழ்வின் மொத்த வலியையும் பொதித்து தெய்வத்தின் முன் கையேந்தி நிற்கும் அப்பெண்ணின் சித்திரம் பல நினைவுகளைக் கொண்டு வரும்.  எங்களுடைய ஊரில், அய்யனார் கோயிலுக்கு பக்கவாட்டில் கம்மாய் இருக்கும். நெடுஞ்சாலையை இணைக்கும் ஊரின் சாலை, கோயிலுக்கு எதிரே, பொட்டல் வெளி. அது எங்களின் கிரிக்கெட் மைதானம்.   […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 16: தெறூஉம் தெய்வம் – நர்சிம் appeared first on Uyirmmai.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் – நர்சிம்

24 August 2023 at 05:23

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர், ஒரு மதியப்பொழுதின் சலனமற்ற அமைதியைக் குலைக்கும் வண்ணம் பெரிய வண்டி வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. என்னவென்று வெளியே எட்டிப்பார்த்தால், பிரம்மாண்ட ராட்சச உருவில் கட்டிடத்தை இடிக்கும் வண்டி.  பஞ்சம் பிழைக்க, சொந்த ஊரைவிட்டு சென்னை போன்ற பெருநகரத்தில் இத்தனை ஆண்டுகளாக, ஊரில் இருப்பதை விட அதிக வசதிகளோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தாலும் ஒரு சிறிய சிக்கல் உள்ளது, அது இப்படி தெருவில், பிரம்மாண்ட அடுக்கக வளாகங்களில், தினமும் பார்த்து சிரித்துக்கொண்டாலும் எதிர்படும் […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 15: அளியள் – நர்சிம் appeared first on Uyirmmai.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே – நர்சிம்

14 August 2023 at 03:20

பத்தாம் வகுப்பு என்று நினைவு, சிட்டிபாபு தான் எனக்கு அருகில் அமர்ந்து இருப்பான் எப்போதும். அன்று, தமிழய்யா வகுப்புக்கு வர சற்று தாமதம் ஆனது என்பதால் மாணவர்கள் சலசலவென பேசும் சப்தம். அதனால் சற்று கத்தியபடி பேசிக்கொண்டிருந்தோம் நானும் சிட்டிபாபுவும். வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டதாகவும் அதன் அளாவு குறித்து கண்கள் விரிய “எத்தா மொக்க தெரியுமா, இந்தா இத்தாமொக்க” என இரு கைகளையும் இயேசுநாதர் போல் விரித்து நீட்டினான். சட்டென வகுப்பறை நிசப்தம் ஆக, அவன் இத்தாமொக்க […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே – நர்சிம் appeared first on Uyirmmai.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். – நர்சிம்

1 August 2023 at 04:46

நெருங்கிப் பழகியவர்கள் பிரிந்துபோகும் சூழலில், வெகுசிலர் மட்டும், அதுவரையிலான அத்தனை நெருக்கத்தையும் முற்றாக மறந்து, மொத்தமாக ஒதுங்கிவிடுவார்கள். உடன் இருந்தபொழுது ஏற்பட்ட மகிழ்வான அனுபவங்களை மட்டும் மனதில் நிறுத்தி, பின்னர் எங்காவது சந்தித்துக்கொண்டால் ஒரு சிறிய புன்னகை, புருவ உயர்த்தல், நலம் விசாரித்தல் எனும் அளவிற்கு பக்குவமான பிரிவாக இருக்கும். இதற்கு நேர் எதிராய், பெரும்பாலானவர்கள், பிரிவைத் தாங்கமாட்டாமல், தான் ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் பெண்கள் அதுவரையிலான அத்தனை காதலையும் ப்ரியத்தையும் நொறுக்கி உடைப்பது போல், தங்களுக்குள் நிகழ்ந்த […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 13 : உன் சும்மா அழகையே கண்ணால் தாண்டுதல் அரிய காரியம். – நர்சிம் appeared first on Uyirmmai.

மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம்

22 July 2023 at 09:33

“ தலைவரு வெளிநாட்டுல இருந்து வந்த பூரிப்பு மொகத்துல தெரியும்னு பாத்தா, இப்பிடி சோகமா  வாடிப்போய் இருக்கே, என்ன ஆச்சு” அவ்வளவுதான். இந்தக்கேள்விக்காகவே காத்திருந்தது போல் ஆரம்பித்தாள். “எங்க? வர்றவரைக்கும்தான். வந்துட்டாருனா அய்யோ மறுபடியும் போய்ருவாரே, இன்னும் இத்தனை நாள்தான் இருக்கேன்ற நெனப்புலயே பாதி ஆவி போய்ருது.” “அட” “ஆமா, ஆனா போய்த்தான ஆகணும் பாவம்.. ஒரு குடும்பத்தக் காப்பாத்தவே நாக்கு தள்ளும், இதுல அக்கா, தம்பி, வீடுனு எல்லாருக்கும் செஞ்ச கடன எல்லாம் எல்லாம் கட்டிட்டு […]

The post மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 12. பையுள் மாலையில் எமியமும் தமியரும். – நர்சிம் appeared first on Uyirmmai.

❌