Normal view

Received before yesterday

மறக்காதே மன்னிக்காதே – Crime Novel

6 November 2024 at 08:30

கம்பெனி நஷ்டத்தில் ஓடியதை மறைத்து, வினயாவைத் தனக்கு திருமணம் செய்து வைத்த மாமனாரைப் பழி வாங்க முடிவெடுக்கிறான் விஷ்வா. பணக்கார பெண்ணான அருணாவைக் காதலித்துக் கொண்டிருந்த விஷ்வா, மனைவி வினயாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறான்.

ஆரம்பத்தில் இருந்தே வினயாவை வெறுத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் அம்மா இந்திராதேவியும் இந்தத் திட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறாள். மேலும் வினயாவின் கொலையைத் தற்கொலையாக காட்டுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான் விஷ்வா.

அதை செயல்படுத்தும் நோக்கத்தில் ஷெரினாவை மும்பையில் இருந்து வரவழைக்கிறாள் அருணா. ஷெரினா – கொலையைத் திட்டம் போட்டு பிசிறில்லாமல் செய்து முடிப்பவள்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய அப்பாவைப் பார்க்க பெங்களூர் செல்கிறாள் வினயா. வினயா பயணிக்கும் அதே ரயிலில் சென்று அவளின் கதையை முடிக்க முடிவு செய்கிறாள் ஷெரினா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, வினயா சென்ற ரயிலில் பாம் வெடித்து ரயில் விபத்துக்கு உள்ளாகிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வினயாவை, ஹாஸ்பிடலில் இருந்து கடத்தி தன்னுடைய கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைக்கிறாள் அருணா. அன்றிரவு வினயாவின் கதையை முடிக்க அருணா முடிவு செய்கிறாள். ஆனால் திடீர் திருப்பமாக பணக்காரர்களின் கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க எல்லோருடைய கெஸ்ட் ஹவுஸையும் போலீஸ் சோதனையிட்டு வருகிறது.

இதற்கிடையில் ஒரு பெண்ணின் இறந்த உடல் பீச்சில் கிடப்பதாகப்  போலீசிற்குத் தகவல் கிடைக்கிறது. அருணாவின் கெஸ்ட் ஹவுஸைப் போலீஸ் சோதனையிடச் செல்ல, பயத்துடன் உடன் செல்கிறாள் அவள். ஆனால் அவள் சந்தோசப்படும் விதமாக வினயா அங்கே இல்லை.

கெஸ்ட் ஹவுசின் கதவு பூட்டிய நிலையில் இருக்க..வினயா எங்கே..? பீச்சில் இறந்து கிடந்த பெண் யார்..? வினயா இவர்களிடம் இருந்து தப்பிப்பாளா..? விஷ்வா-அருணாவின் திருமணம் நடந்ததா..?

அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் மறக்காதே மன்னிக்காதே..!

❌