Normal view

Received before yesterday

பயமுறுத்தும் பாத்திரம்

நேற்று பேஸ்புக்கில் இதைப் பாக்க நேர்ந்தது. அப்படியே ஸ்கிரீன்ஷாட் மட்டும் எடுத்துக்கொண்டேன். வீடியீவைப் பார்க்கவேயில்லை. 

41 வருடங்கள் முன் நடந்த சம்பவம் நிழலாடியது. கூடவே, கீழ்க்காணும் வரிகளில் காவி குறுநாவலில் (விளக்கும் வெளிச்சமும் தொகுப்பு) அது இடம்பெற்றிருப்பதும் நினைவுக்கு வந்தது. 

***

சினிமாவில் நடிக்கிற வெறியில் வெளி மாநிலத்திலிருந்து வந்து எல்லாவற்றையும் இழந்து, இனி பிச்சைக்காரன் வேடத்தில் மட்டுமே நடிக்கமுடியும் என்கிற அளவிற்கு நாசமாகிப்போன தெரிந்தவன் ஒருவனை சில நாட்களுக்குமுன் தற்செயலாகத் தெருவில் சந்தித்தான்.

என்ன நான் கேல்விப்பட்டது...


ஆமா.


நிஜமாவே சாமியாராகப் போகப் போறீங்களா.


ஆமா.


இனிமேல் உங்க ஜிப்பா ஜீன்ஸ் பேண்ட் எல்லாம் உங்குளுக்கு யூஸாகாது இல்லையா. எனக்குக் குடுத்துடுங்கலேன்


அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவனுக்கு ஒரு டீ பிஸ்கேட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்




ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன


ஆனால், அவள் அப்படித்தான் பற்றி சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னார் என்று சொன்னதும் படாரென ருத்ரைய்யா போட்ட ஒரே போடில் அவன் ஆடிப்போய்விட்டான். தருமு சிவராமு உட்பட, சுந்தர ராமசாமியை போகிற போக்கில் இவ்வளவு சாதாரணமாக யாரும் அடித்து அவன் பார்த்ததில்லை என்பதால் பேச்சு மூச்சற்று அவர் ஆபீசில் அமர்ந்திருந்தான்


நாகர்கோவிலில் இருந்து திரும்பிவந்து மெட்ராஸில் இருந்த நான்கைந்து நாட்களில் ஒருமுறை, மந்தைவெளியில் திறந்தவெளி குப்பைக் கூளத்திற்கு நடுவில் பெரிய கட்டடத்தில் இருந்த  ருத்ரையாவின் ஆபீசுக்குப் போயிருந்தான். அவன் போனது என்னவோ,ஜோதிவிநாயகத்தைப் பார்க்கப்போனபோது நாகலாபுரத்தில் அவள் அப்படித்தான் ஓடிக்கொண்டு இருந்ததையும் அந்தக் கொட்டகைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் டைரக்‌ஷன் வி சசி என்று பிட்டு படம்போல அச்சிடப்பட்டிருந்த அநியாயத்தையும் சொல்வதற்காகத்தான். அவரைப் போய்ப் பார்க்க அது ஒரு சுவாரசிய முகாந்திரமாக இருக்கும் என்றுதான் அதைத் தூக்கிக்கொண்டு போனான். ஆனால், அவன் ருத்ரையாவிடம் பேச்சை ஆரம்பித்ததென்னவோ அவள் அப்படித்தானைப் பற்றி சுந்தர ராமசாமி சொன்னதை வைத்துதான்


ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

உலகச் சிறுகதைகள் 20 - காப்ரியே கார்சியா மார்க்கேஸ்

''இது ஒரு கற்பனையின் சிறகடிப்பு'' என்றார் அவர்.

கூட்டத்திற்கிடையே பால்தசாரைத் தேடினார்தனது தாய்மை நிறைந்த விழிகளை அவன் மீது பதித்தவாறே, "நீ ஒரு அசாதாரணமான கட்டிடக் கலைஞனாய் இருந்திருப்பாய்" என்றார்

பால்தசார் நாணத்தில் சிவந்தான்

''நன்றி'' என்று கூறினான் அவன்

''இது உண்மை '' என்றார் டாக்டர்தனது இளமையில் மிக அழகாயிருந்த ஒரு பெண்ணைப்போல் அவர் மிருதுவாகவும்மென்மையாகவும் பருத்திருந்தார்மென்மையான கைகளைக் கொண்டிருந்தார். 

***

எந்தக் கதையிலும் கதை மட்டுமே கதையன்று. கதை சொல்லப்பட்டிருக்கும் விதமும் கதைக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களுமே அதன் தரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. 

எழுதத் தெரியாதவர்கள் எழுதுகிற கதைகளில், கதைக்குள் கதையைத் தவிர, அதை உயிர்ப்போடு கட்டி எழுப்பி நிறுத்துவதற்கான 'எதுவுமே' இருக்காது. சினிமாக்காரனை சுண்டி இழுப்பதற்கு ஒன்லைன் போதுமே என்பதைப்போல. முற்போக்கு லேபிளுடன் வருகிற பெரும்பான்மையில் சொல்லப்பட்டிருப்பவை ஒன்றோடொன்று ஒத்திசையாது கருத்து தத்துவார்த்த ஜிகினா தோரணங்களாகத் தொங்கிக்கொண்டிருக்கும். அரைகுறைப் போலி எழுத்துக்களில் அசடுகள் மேற்கோள் இட்டுக்கொள்ள வசதியாய் போலியான அசட்டு வாழ்க்கைத் தத்துவங்கள் ஆங்காங்கே தெளித்து வைக்கப்பட்டிருக்கும்.  

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் - பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

உலகச் சிறுகதைகள் 19 காஃப்கா

இந்தக் கதை வெளியான 1915 ஆம் ஆண்டு வாக்கிலேயே காஃப்கா விசாரணை என்ற நாவலையும்  எழுதிக்கொண்டிருந்தார். என்ன குற்றம் செய்தான் என்று தெரிவிக்கப்படாமலேயே தண்டனை விதிக்கப்பட்ட ஜோசஃப்  கே. நாவலின் மையப் பாத்திரம். யார் தண்டனை விதித்தார்கள் என்பதும் தெரியாது, அந்த அமைப்பை அணுகவும் முடியாது. ஆனால், அவன் இயல்பான வாழ்க்கையை வாழலாம்எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம்அச்சமூட்டும் இந்தக் குழப்பமான காலத்தில் ஒரு பாதிரி அவனுக்குச்  சொல்வதாக   இந்தக் கதை நாவலில்  இடம்பெற்றுள்ளதுசட்டப் புத்தகத்தின் முன்னுரை அது என்று சொல்கிறார்முற்றுப்பெறாத அந்த நாவல்  காஃப்காவின்  மறைவுக்குப் பிறகு 1925ல்தான் வெளியானது.   . வி. தனுஷ்கோடி செய்த  நாவலின்  (ஜெர்மன்) நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை   க்ரியா பதிப்பகம் 1992-ல் வெளியிட்டது

சட்டம் என்கிற உருவமற்ற பொருள் உயிருள்ள மனிதர்களைக் கண்ணுக்குத் தெரியாதவகையில் எப்படியெல்லாம் கட்டுப்படுத்துகிறதுஉள்ளேயே நுழையவிடாமல் சாகடிக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிற எண்ணம் காஃப்காவுக்குத் தோன்றியதே அவரது தனித்த பார்வை காரணமாகத்தானே. கலையே பார்வையைத் தருகிறது. பார்வையே கலை உருவாகக் காரணமாகவும் இருக்கிறது. 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 19 - சட்டத்தின் வாயிலில்

ஆபீஸ் அத்தியாயம் 55 புகை

என்னய்யா மெஸ் இது. போவும்போதுதகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.  

அவர்களோசார் செம காமெடியா பேசறாரில்லே, என விதந்து, சினிமாவுக்கு வசனமெழுதப் போனா நிச்சயமா பெரியாளா ஆகிடுவாரு என்று அவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்கள்.

இந்த அன்றாடத்தின் சலிப்பைஉள்ளார்ந்த புகைச்சலைக் கதையாக எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. சரியான சம்பவமாக மாட்டாமல் எப்படி எழுதுவது என்று பிடிபடவில்லை. இதைத்தான் ஜானகிராமன் கதை உட்காருவது என்று சொல்கிறாரோ என்று தோன்றிற்று. சலிப்பை சுவாரசியமாக எதை வைத்து எப்படி எழுதுவது என்று மனம் ஓயாமல் உருட்டிக்கொண்டே இருந்தது.

அந்த ரொட்டீனுக்கு இடையில் கொஞ்சம் ஆறுதலாகவும் சமயத்தில் எரிச்சலூட்டும்படியாகவும் இருந்தது தேவிபாரதிதான். அவன் எப்படி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான் என்பதே நினைவில் பதியாதபடிக்கு சுந்தர ராமசாமி சொல்வதைப்போல 'புகைமூட்டமாகஇருந்தது.

அவன் ஆபீஸுக்குதான் தேடி வந்திருக்கவேண்டும். ராஜசேகரன் என்கிற தேவிபாரதி பாவமாய் அவனைவிடவும் ஒல்லியாய் இருந்தான். அவனை இன்னும் நோஞ்சானாய்க் காட்டியது, அவன் நிறமும் ஒட்டிய தேகமுமாய்த்தான் இருக்கவேண்டும். 

ஆபீஸ் அத்தியாயம் 55 புகை 

ஆபீஸ் அத்தியாயம் 54 சுயநலம்

இரண்டு நாள் முன்பாக கேவிஆரைப் பார்த்ததும் முதல் காரியமாக, "எஸ்விஆருக்கு பணம் கொடுத்துவிட்டீர்கள்தானே" என்றுதான் கேட்டான். 

"அதை ஏன் கேக்கறே. அது, பெரிய கூத்தா ஆகிடுச்சு" என்று ஆரம்பித்தார். 

"உன் லெட்டர் வந்திருந்த நேரம் பாத்து கவுண்ட்டர்ல கியூ. (கேவிஆரின் அரசாட்சியின் கீழ் இருந்த அந்த சப் போஸ்ட்டாபீஸில்அவருடைய டெஸ்க் எதிரில் ஒரே சமயத்தில் மூன்று பேர் நின்றாலே கியூவாக ஆகிவிடும். அதுகூட முதல் வாரத்தில்தான் என்பது வேறு விஷயம்.) அப்பறம் நிதானமா படிக்கலாம்னு டெஸ்க் மேலையே அதை வெச்சுட்டு வேலைல பிசியாகிட்டேன். ராமகிருஷ்ணன் வந்திருந்தான். அவனுக்கு பிரமோஷன் லேட்டாகறதேங்கற கவலை. யாரோ ஜோஸ்யர் கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்திருக்கான். அதுக்கு இன்னும் டைம் இருக்கே, அங்க ஏன் எல்லார் எதுரையும் வெய்ட்பண்றதுனு இங்க வந்திருக்கான். அவன் கூட உங்க ஆபீஸ் இன்ஸ்பெக்டரோ சூப்பிரெண்டெண்ட்டோ ஒருத்தர் வேற யூனிஃபார்ம்ல வந்து கைகட்டிண்டு பவ்வியமா நின்னுண்டிருந்தார். வந்தவன் கண்ல உன் லெட்டர் பட்டுடுத்து. 'என்ன அவன் கையெழுத்தாட்டம் இருக்கே'னு எடுத்துப் பிரிச்சான். 'கொஞ்சங்கூட மேனர்ஸ் இல்லாம,என்ன இதுஅவன் எதுக்கு, உன்னைக் குடுக்கச்சொல்லி எழுதறான்'னு அப்செட் ஆகி அப்படியே கெளம்பிப் போயிட்டான். இதுக்கு ஏன் இவன் இவ்ளோ அப்செட் ஆகணும்னு மொதல்ல தோணித்து. உன் லெட்டர படிச்சப்பறம்தான் எனக்கு விஷயமே புரிஞ்சிது" என்று சிரித்தபடியே சொல்லி முடித்தார் கேவிஆர். எனினும் அவர் முகத்தில் தம் நண்பருக்கான வருத்தமும் கொஞ்சம் இருப்பதைப்போலத்தான் பட்டது. 

ஆனால், 'பணத்தால் மட்டுமே ஆன உலகம் இது. இவர்களுக்குபணம் கேட்டு கையை நீட்டாதவரைதான் ஜி நாகராஜன் பிரமாதமான எழுத்தாளர். காசு கேட்ட அந்த நொடியேஇவர்கள் எஜமானர்களாகி, அவர் வெறும் தொந்தரவாகிவிடுவார்' என்று, தான் அந்த கடிதத்தில் எழுதியிருந்ததைப் பற்றி அவனுக்கு அப்போதுகூட எந்த வருத்தமும் ஏற்படவில்லை. 

ஆபீஸ் அத்தியாயம் 54 சுயநலம்

உலகச் சிறுகதைகள் 18 பீட்டர் பிஷெல்

ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை. 

ஆத்திரம் அவனைப் பற்றிக்கொண்டது. 

அவன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். அவனுடைய முகம் சிவந்து போயிருந்தது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முஷ்டியைச் சுருட்டி மேஜைமீது குத்திக்கொண்டிருந்தான். முதலில் ஒரு குத்துமறுபடியும் ஒரு குத்து. பிறகு 'மாறியாக வேண்டும் மாறியாக வேண்டும்என்று கத்தியபடியே மேஜைமீது கைகளால் அறையத் தொடங்கினான். அதன் பிறகு கடிகார ஒலி கேட்கவில்லை. 


*** 

அநேகமாக மனிதர்கள் அனைவருக்குமே அடிப்படையில் பணமே வாழ்வை அர்த்தப்படுத்துவதாக இருப்பதால் அதுவே  வாழ்வின் ஒரே இலக்காக ஆகிவிடுகிறது. 

பெரும்பான்மையைக் கவரும்படி எழுதி, பிரபலமாகிப் பணம் பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று இருப்பதால், வணிக எழுத்தாளன் கிழடுதட்டிப் போனாலும் காதல் கத்தரிக்காய் என்று கிளுகிளுக்கவைப்பதிலேயே கிடக்கிறான். வாழ்வில் பொருள் தேடுவதைவிட வாழ்வின் பொருளைத் தேடுவதையே முதன்மையாகக் கொண்டிருப்பதால் இலக்கிய எழுத்தாளன் கிழவர்களைப் பற்றி எழுதுவபவனாக இருக்கிறான். 

புனைவு என்னும் புதிர் - உலகச் சிறுகதைகள் 18 மேஜை மேஜைதான்

❌