Normal view

Received before yesterday

எனி டைம் MONEY மர்டர் – Crime Novel

23 September 2024 at 17:00

போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து, கவசம் பத்திரிக்கையில் கடந்த வாரம் வெளிவந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்திருந்தார் ஏ.சி. டேனியல் மாணிக்கம். அவரது மிரட்டலைப் பொருட்படுத்தாத ஆடலரசும் அருணாவும் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார் ஏ.சி டேனியல் மாணிக்கம்.

கவசம் பத்திரிக்கையைத் தரைமட்டம் ஆக்குவதற்காக எதிராளிகளிடம் காசு வாங்கிய உதவியாசிரியர் கமலப்பித்தன், யாரும் அறியாத நேரத்தில் பிரிண்டிங் அறையில் டைனமைட்டைப் பொறுத்துகிறார். கமலப்பித்தனின் உண்மையான ரூபத்தை அறியாமல் முக்கியஸ்தர் ஒருவரை பேட்டி எடுக்க வெளியில் அனுப்புகிறார் ஆடலரசு. இதை சாக்காக வைத்து வெளியில் இருந்து டைனமைட்டை இயக்க முடிவு செய்கிறார் கமலப்பித்தன்.

மறுபக்கம், மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலை அமோகமாக செய்து வருகிறார் மாஜி மந்திரி ராஜாங்கம். அவருக்கு பின்னணியில் உதவியாக ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, வார்டன் சண்முகராஜன் மற்றும் சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர் உள்ளனர். மேலும் சிறையில் அவருக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.

ராஜாங்கத்தின் சுயரூபத்தை அறிந்த அருணா, அவரைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கேட்கிறாள். அவரோ பேட்டி கொடுக்க மறுப்பு தெரிவிக்க, சிறையில் அவருக்கு கிடைக்கும் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் கூறி பேட்டிக்கு அவரை சம்மதிக்க வைக்கிறாள் அருணா.

இதற்கிடையில் உபயதுல்லா – சண்முகராஜன் இருவரும் கைதிகளுடன் கல் குவாரிக்கு கைதிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் சாக்கில் போதைப் பொருளைக் கடத்த, மறைந்திருந்து அவர்களை போட்டோ எடுக்கிறாள் அருணா. இதையறிந்த இருவரும் அவளைக் கொலை செய்து அங்கிருக்கும் கல் குழிக்குள் அருணாவைத் தள்ளுகின்றனர்.

அருணாவைத் தேடி அவளுடைய அண்ணன் விக்னேஷ், ஆடலரசுக்கு போன் செய்கிறான். அருணாவை முக்கியமான ஒரு வேலைக்கு அனுப்பியிருப்பதாக ஆடலரசு கூற, சமாதானமடைந்த அவன் அருணாவிற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். நேரம் நாட்களாக மாற ஆரம்பிக்க அருணா வீடு திரும்பவேயில்லை.

நிலைமை இவ்வாறிருக்க மாஜி மந்திரி ராஜாங்கம், ஏ.சி டேனியல் மாணிக்கம் என வரிசையாக ஒவ்வொருவராக இருதயத்தில் ஓட்டை போடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அடுத்ததாக உபயதுல்லா & சண்முகராஜன் கொலை செய்யப்பட போவதாக மிரட்டல் கடிதம் வருகிறது.

கொலையாளி யார்..? டைனமைட் வைக்கப்பட்ட கவசம் பத்திரிக்கை அலுவலகத்தின் நிலை என்ன..? இருதயத்தில் ஓட்டை போட்டு கொலை செய்யப்பட காரணம் என்ன..? பரபரப்பு திருப்பங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது எனி டைம் மர்டர்.

One Minute One Book-இன் புதிய முயற்சியாக கதையில் வரும் கதாப்பாத்திரங்களைத் தனியாக கொடுத்துள்ளோம்.

Casting : கவசம் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடலரசு, உதவியாசிரியர் கமலப்பித்தன், பத்திரிக்கையின் சீஃப் ரிப்போர்ட்டர் அருணா, அருணாவின் அண்ணன் விக்னேஷ், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் டேனியல் மாணிக்கம், மத்திய சிறைச்சாலையின் ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, ஜெயில் வார்டன் சண்முகராஜன், மாஜி மந்திரி ராஜாங்கம், சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர்.

❌