Normal view

Received before yesterday

Mannai Maasupaduthum Navina Ethiri|Dr.N.Dharmaraj

Abstract         
           

         On the other side of the science to grow, it should be approached with caution. When we approach science naturally, we have seen the traumatic events in front of us when we arise against nature due to civilized maturity. Some people in the world have tried to take control of their natural control because we do not know that part of nature is a part of nature. This earth is called the mother of the world, if so, if the mother of all of us is extinct. We are dead but if we are destroyed, we have no way to exist. We must all live in immortality, the only earth that everyone has.


“மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரி”

ஆய்வுச் சுருக்கம்         

        அறிவியல் வளர வளர அதன் இன்னொரு பக்கம் எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டும் என்பார் இறையன்பு. அறிவியலை இயற்கைக்கு இணக்கமாக்கி அணுகும் போது பாதிப்பில்லை நாகரீக முதிர்ச்சியால் இயற்கைக்கு எதிராக நாம் எழும்போது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம் முன்னால் நிகழ்வதை கண்டு கொண்டுதான் இருக்கிறோம் நம்மிடையே ஏற்பட்டுள்ள அறிவியல் தாக்கத்தாலோ கலாச்சார மாற்றத்தாலோ சிதைக்கப்படுவது சுற்றுச்சூழல் மட்டுமே என்பதை இக்கட்டுரையில் காண்போம்.


முன்னுரை
         

        இயற்கையோடு இணையும் போது தான் மனித வாழ்க்கை அத்தப்படுகிறது.நாம் இயற்கையின் ஒரு பாகம் என்பது தெரியாத காரணத்தால் உலகத்தில் சிலர் இந்த இயற்கை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று முயற்சித்தார்கள் ஆகையால் இயற்கை மோசமாகி சீரழிந்துள்ளது. இந்த பூமியை உலகம் முழுவதும் அம்மா என்று அழைக்கிறது அப்படி என்றால் நம் எல்லோருக்கும் இருக்கும் அம்மா அழிந்தால் நாம் இல்லை. நம்மைப் பெற்ற தாய் இறந்தாள் நாம் இருக்கிறோம் ஆனால் பூமித்தாய் அழிந்தால் நாம் இருப்பதற்கு வழியே இல்லை. எல்லோருக்கும் இருக்கும் ஒரே பூமித்தாயை நாம் எல்லோரும் சேர்ந்து அழியாமல் வாழ வைக்க வேண்டும்.
         

      எந்த வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும் சுற்றுச்சூழல் பாதிக்கும்போது வளர்ச்சி தானாகவே தடைப்பட்டு போகும். இந்த நூற்றாண்டில் மனிதன் நன்கு வாழ வேண்டும் என்ற சிந்தனையை தவிர்த்து அடுத்த தலைமுறையினரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இன்று மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத போது வருங்கால சந்ததிகளின் நிலை என்னவாகும் என்ற கவலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் இது மிகவும் அவசியமானதாகும். இன்றைய காலகட்டத்தில் மண் மாசு படுவதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் நெகிழிப் பயன்பாடு நெகிழிப் பயன்பாட்டால் பூமி வெப்பமடைவதை கட்டுரை விளக்குகிறது.


          நெகிழிப் பயன்பாடு அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்று வருகிறது நகரத்தில் சேரும் கழிவுகளில் நெகிழி கழிவு பொருட்கள் மட்டும் 50% விழுக்காட்டிற்கு மிகுதி என்ற செய்தி நெகிழியின் பயன்பாட்டை உறுதி செய்கிறது. ஒருபுறம் நெகிழிப் பொருள்களின் தேவை மிகுதியாகி வருகிறது மறுபுறம் எதிர்ப்பு பெருகி வருகிறது. இந்த எதிர்ப்புக்கு காரணம் நெகிழியினால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் பாதிப்புகளே. ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களால் சூழல் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.
 மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக நெகிழி திகழ்வதை பழனி பாரதி மிக அழகாக கூறியுள்ளார்.


“அதிகாலையில்

வாசலில் வந்து விழுந்த

பால்காரனின்குரல்

எடுத்து பேசியது

பால் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் பை

காய்கறி மளிகை என்று

வேலைக்காரியின் கைகளோடு

வீட்டுக்குள் நுழைகின்றன

நான்கைந்து பிளாஸ்டிக் பைகள்

குழந்தைகளின் உணவு சட்டி

தண்ணீர் குவளைஎல்லாம் பிளாஸ்டிக் “..!
         

     என்ற வரிகளில் விவரிக்கின்றார் இப்பைகளை பயன்படுத்துவதாலும் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிவதாலும் ஏற்படும் இன்னல்களை மனித இனம் உணர்வதில்லை. இயற்கையை மனிதனே சீரழிக்கின்றான்.நாளைய உலகம் நெகிழிப் பைகளாக காட்சியளிக்கும். வருங்கால தலைமுறையினர் மண் எப்படி இருக்கும் என்று அறியாமலேயே இறக்க நேரிடும் மண்ணோடு மண்ணாக சிதைவடைய 10 லட்சம் மில்லியன் ஆண்டுகள் கால அளவு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


நெகிழி மோகம்
         

    மக்களிடையே மிகுந்து வரும் நெகிழி மோகத்தையும் அதற்கு அடிமையாகி விட்டதையும் சோ. இராஜேந்திரன் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்.


காய்கறி வாங்க

எடுத்துச் சென்ற மஞ்சள் பை

இறைச்சி வாங்க

எடுத்துச் சென்ற ஓலைப்பை

எண்ணெய் வாங்க பாதுகாத்த கண்ணாடி குப்பி

தண்ணீருக்கு இல்லாத

தனிமனம் தரும்

பித்தளை சொம்பு 

அத்தனையும் தொலைத்து

உயிர் வாழ தொடங்கி விட்டோம்

பிளாஸ்டிக் இதயத்தோடு..
        

    என்று சுட்டிக் காட்டுகிறார்.பல்வேறு காரியங்களுக்கும் நெகிழியை பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள் மனிதர்கள். ஆகவே நெகிழிக்கு அடிமையாகாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றார் கவிஞர் இராசேந்திரன்.


நெகிழி – மண் மாசு
         

பண்டைய காலத்தில் வளமான மண்ணை கொண்டு காட்சி அளித்தது நிலம்.எனவே ஐவகை நிலப் பாகுபாடுகளின் வழியே தமிழர்கள் வாழ்க்கையை உணர்த்தினர். இப்பொழுது மண்ணினைக் காண முடியாத அளவுக்கு நெகிழி நிரப்பி காணப்படுகிறது இதனால் நிலம் தனது தன்மையிலிருந்து மாறி வருகின்றது.


“ நெகிழி குப்பைகள் மூடஇறந்து கொண்டே இருக்கும் நிலம் “
 

என்று செழியன் கூறுகின்றார் மாணவர் எக்ஸ்னோரா ஆலோசகர் முத்துகிருஷ்ணன்


“ நல்ல நிலம் கெட்டுப் போகுது பிளாஸ்டிக்காலே

மழை பேஞ்ச தண்ணியும் தான் பூமியிலே சேறாதுங்க

பூமியிலே       சேறாதுங்க

மண்வளம் கெட்டுப்போகும் மண்புழுவும் செத்துப்போகும்

மண்புழுவும் செத்துப் போகும்

முந்நூறு ஆண்டு ஆனாலும் பிளாஸ்டிக் மக்காதுங்க..

மண்ணோடு மண்ணாக ஒன்னாவே சேராதுங்க 

ஒன்னாவே சேராதுங்க…
        

       என்று குறிப்பிடுகின்றார். நிலத்தில் கிடக்கும் நெகிழிப் பைகள் மண்ணிற்குள் காற்று போகாமல் தடுக்கின்றன. மண்வளத்தை கெடுக்கின்றன.தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. மண்ணின் பிடிமானத்தை குறைத்து நிலச்சரிவு ஏற்படும் சூழலை உருவாக்குகின்றன. நிலத்திற்கு போர்வையாக நெகிழிகள் அமைந்துவிட்டால் நுண்ணுயிர்கள் இன்மையால் மண்புழுக்கள் அழிந்து விட்டன. மட்கும் தன்மையற்ற நெகிழிகளால்  நிலங்கள் அழிந்து வருவதை “இறப்பு “என்று சுட்டிக் காட்டுகின்றார். மண்ணுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால் நெகிழிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நிலம் அழிந்துவிடும் நிலம் அழிந்துவிட்டது என்றால் உணவுக்கு என்ன செய்வது பணத்தையே உணவாக உண்ண முடியுமா? ஆகவே இயற்கைக்கு தீங்கு இழைக்காதீர்கள் என்று கவிஞர் வருந்துகின்றார்.


நெகிழி மண்ணுக்கு இழைக்கும் கொடுமை
         

     செயற்கை பொருள்களான நெகிழிப் பைகள் மேல் மண்ணுக்கும் கீழ் மண்ணுக்கும் இடையில் ஒரு கண்ணாடி சுவர் போல நீரோ காற்று உள்ளே செல்ல வழி விடாது மண்ணை மூச்சு திணற செய்கிறது.அதனை மீறி எந்த விதையும் முளைப்பதில்லை. மேலும் நுண்துளைகள்.நீர் பிடிப்பு தன்மை. மண்ணில் இயற்கை தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன நெகிழி பயன்பாட்டால் மண்ணில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை..
 நெகிழி கழிவு பொருட்கள் நிலத்தில் எரியப்படுவதால் அவை மற்ற உயிர்மக் கழிவுப் பொருட்களை போல மண்ணோடு மண்ணாக மடக்குவதில்லை. அவை நிலத்தில் வெப்ப அழுத்தத்தினால் வேதியில் மாற்றத்திற்குள்ளாகி நிலத்தின் தன்மையை நஞ்சாக்குகிறது. அதனால் மண்வளத்தை காக்கும் பல பூச்சி இனங்கள் அழிக்கப்படுகின்றன. மண்ணின் மூலம் நிலத்தடி நீரையும் நஞ்சாகுகிறது மேலும் அப்பொருட்கள் செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து விட்டாலோ வேர்களுக்கு கிடைக்கும் காற்றோட்டம் தடைபட்டு செடிகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது. அதேபோல நிலத்தின் காற்றோட்டத்திற்கு தடை ஏற்படுத்துவதால் நிலம் கட்டிப் படுவதுடன் மண்வளம் குறைந்து நிலங்கள் பயிரிட தகுதியற்றவையாக மாறிவிடுகின்றன. என்று பூரணச் சந்திரன் கூறுகிறார்.
          இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலை இன்று முற்றிலும் மறைந்து விட்டது. தெய்வமாக விளங்கிய இயற்கையும் இன்று மாறிவிட்டது.இயல்பாக நிலத்தில் வளரும் தாவரங்களை செயற்கையாக வளர்க்கின்றனர் இதனை கலாபிரியா


“ வாசலில் பதியன்கள்

தின்று வளர

மண் திணித்து

மச்சுத் தோட்டத்தில்

மண் தின்ன முடியாத

பாலத்தீன் பைகள் ‘’
         

       என்று விளக்குகிறார். மண்வாசனையை நுகராதவர்கள் அதன் பெருமையை அறியாதவர்கள். நிலத்தில் வளரும் தாவரங்களைப் பைகளில் மண்ணிறப்பு வளர்க்கின்றனர் ஆடம்பர வாழ்க்கையின் எதிரொளிப்பான அழகிய வீடுகளில் மண் இருப்பதை இழிவாக கருதுகின்றனர் எனவே நெகிழிப்பைகளில் செடிகளை வளர்க்கின்றனர் இயற்கையாக கிடைக்கும் நுண்ணுட்ட சத்துக்களை உந்து வளர்கின்ற தாவரங்களை செயற்கையாக வளர செய்கின்றனர் இதனால் மண்ணோடு மனிதருக்கு உறவு இல்லாமல் போகின்றது.எனவே நிலத்தின் காற்றோட்டத்தை தடுக்கும் நெகிழிகள் பெருகிவிட்டது அழிக்க முடியாத பொருளை உருவாக்கி அல்லலூரும் சமுதாயத்தை கண்டு வருந்துகிறார் கவிஞர் கலாப்ரியா
         

       மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரிகளில் நெகிழி முதன்மையானது மண்ணின் உறிஞ்சும் தன்மையை தடுப்பதோடு மண்ணோடு செரிமானமாகாமல் நீண்ட தொல்லையாய் உள்ளன நெகிழி உருவாக்கத்தின் போது அதிலுள்ள நச்சு கழுவுப் பொருட்கள் நிலத்தை மாசடைய செய்கின்றன இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மண்ணைக் காண முடியாத நிலை ஏற்படும் என்பதை  செந்தமிழ் இனியன்


“குப்பைகளில் நாளைய தலைமுறைகள் நெகிழியில் நெளியும்”
         

என்று சுட்டிக் காட்டுகிறார். நெகிழிக் குப்பைகளின் மிகுதியால் எதிர்கால தலைமுறைகள் தவழ்ந்து விளையாட மண் இருக்காது. ஐம்பெரும்புதங்களில் முதலிடம் வகிக்கும் நிலம் எதுவென்று கேட்டால் விடை தெரியாமல் திகைப்பர். நிலத்தின் மேல் போர்வை போல் நெகிழி குப்பைகள் படிந்து காணப்படுவதால் மழை நீர் உட்புக முடியவில்லை அதனால் மண் வெப்பமடைகிறது. மண் வெப்பம் அடைவதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது மனித சமுதாயம அழிவதற்கு காரணமாகவும் நெகிழி அமைகிறது. பூமியில் மண்ணுக்கு பதிலாக நெகிழி பரவினால் மண்ணின் தன்மை குறைந்து வெப்பம் அதிகரிப்பதை கண்களால் காண முடிகிறது.


சான்றெண் விளக்கம்

1.கவிஞர் பழனி பாரதி, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப – 40


2.இராசேந்திரன், சூழலியல் தமிழ் ப-90


3.செழியன் தீட்டெனக் கழியும் ப -18


4.முத்துக்கிருஷ்ணன் நெகிழிக்கு டாட்டா சொல்லுவோம் ப – 51


5.சத்தியமோகன், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப -41


6.வைகைச் செல்வி, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப – 43


7.ரவிச்சந்திரன் கே, மேலது ப –  44


8.பூரணச்சந்திரன், அறிவியல் கட்டுரைகள் ப -43,44


9.கலாப்ரியா சூழலியல் தமிழ் ப 90


10.செந்தமிழ் இனியன், தற்கால கவிதைகள் ஒரு பார்வை ப- 68



ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ந.தர்மராஜ்

இணைப் பேராசிரியர்


செயின்ட் ஜோசப் கல்லூரி( கலை மற்றும் அறிவியல்)


கோவூர், சென்னை.

 

The post Mannai Maasupaduthum Navina Ethiri|Dr.N.Dharmaraj appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

❌