Normal view

Received before yesterday

காகிதப் பூ தேன் – Crime Novel

9 August 2024 at 08:30

வழுக்குப்பாறை கிராமத்தில் அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்குகிறது மலைவாழ் மக்கள் கூட்டம். நாகரிக வாசனையே அறியாத மனிதர்களும், அங்கு நடக்கும் விசித்திர சடங்குகளும் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. அவர்கள் எல்லைக்குள் அத்துமீறி உள்ளே வருபவர்களை அடித்துக் கொன்று விடுவர் அங்கு வாழும் மக்கள்.

இந்நிலையில் மலையின் உச்சியில் வாழும் அந்த மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆராய்ச்சி செய்ய, சோசியாலஜி மாணவர்களைக் கொண்ட ஒரு குழு அங்கு வந்து சேர்கிறது. 12 மாணவ மாணவிகளைக் கொண்ட அந்தக் குழுவில் இந்தக் கதையின் கதாநாயகி அஜந்தாவும், கதாநாயகன் பாலமுரளியும் உள்ளனர்.

எதையுமே துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அஜந்தா அன்று இரவு அந்த மலை உச்சிக்குச் செல்ல முடிவு செய்கிறாள், உடன் பாலமுரளி. குழுவினர் யாரும் அறியாமல், இருவரும் மலையுச்சியை அடைந்து நேரில் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. அங்கு சென்றதன் விளைவாக பாலமுரளிக்கு கண்பார்வை பறிபோகிறது.

அஜந்தா கட்டாயப்படுத்தியதால் தான் பாலமுரளிக்கு கண்பார்வை போன குற்றவுணர்ச்சியில் வாழ்க்கை முழுவதும் அவனுடன் வாழ முடிவெடுக்கிறாள் அவள். இதற்கிடையில் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார் அஜந்தாவின் அம்மா. அவளுடைய வாழ்க்கையின் அடுத்த திருப்பமாக, அஜந்தாவின் அண்ணன் வேலை பார்க்கும் கம்பெனியின் பாஸின் மகன் தினேஷ்குமார் அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். கோபத்துடன் திருமணப் பேச்சை முடித்து வைத்தவள், பாலமுரளியைக் காதலிப்பதை தினேஷிடம் தெரிவிக்கிறாள்.

பாலமுரளி கண்பார்வை இழந்ததால் திருமணத்தை மறுத்த போதும் அவனிடம் பேசி சமாளித்து ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சென்னையில் இருந்த ஒரு கம்பெனி மூலமாக பம்பாயில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலை அஜந்தாவிற்கு கிடைக்கிறது. அந்த ஹோட்டலின் ஓனரின் உதவியால் தங்குவதற்கு வீடும் கிடைக்கிறது.

ஆனாலும் மனித நடமாட்டமே அதிகம் இல்லாத தெருவில் இருக்கும் அந்த வீட்டில் இருவரும் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். ஹோட்டலில் வேலை செய்து கொண்டே பாலமுரளி கண்பார்வையைத் திரும்ப கொண்டு வருவதற்காக நிறைய முயற்சி செய்கிறாள் அஜந்தா.

இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் இருந்தால், பாலமுரளிக்கு பார்வை மீண்டும் கிடைத்துவிடும் என்று அறிந்த அஜந்தா பணத்திற்காக அவனுக்குத் தெரியாமல், ஹோட்டலில் கிளாசிக்கல் டான்ஸ் ஆட ஒப்புக்கொள்கிறாள். ஆனால் ஹோட்டல் ஓனரின் திட்டமோ?! வேறு மாதிரி இருக்க..

பாலமுரளிக்குப் பார்வை கிடைத்ததா..? அஜந்தாவிற்கு ஆபரேஷனுக்கான பணம் கிடைத்ததா..? மனித ஓநாய்களிடம் மாட்டிக்கொண்டிருந்த அஜந்தாவின் நிலை என்ன..?

want to buy : https://www.panuval.com/kaagitha-poo-thaen-10015552

❌