குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் “மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர்…
Once upon a time, in a quaint town nestled amidst whispering cashew trees, lived a girl named Anika. Within her, a silent storm brewed, embodied by an unseen shadow that only she could perceive. The shadow draped itself around her like an ethereal veil, forever present yet invisible to the eyes of others.
The shadow, a companion that followed Anika wherever she roamed, tormented her like an unwelcome specter. It loomed over her like an insidious fog, threatening to swallow her whole. She would catch glimpses of it from the corner of her eye, a dark silhouette silently creeping closer with each passing day.
But as the shadow encroached upon her, Anika found herself caught between a rock and a hard place. The people around her, oblivious to the relentless darkness that pursued her, dismissed her fears as mere figments of an overactive imagination. Their voices echoed with criticism and skepticism, insisting, “There is no shadow, Anika. You’re overreacting.”
Her heart, burdened with both the looming shadow and the weight of their words, sank further into the abyss. She felt like a fragile bird, desperately seeking refuge from an unrelenting storm, only to find herself scorned by those who believed her struggle to be imagined.
Determined to prove them wrong, Anika attempted to hide from the shadow, like a rabbit darting into the thicket, hoping to escape the predator’s gaze. She plastered a smile on her face, feigning strength while concealing the turmoil that raged within her. Yet, with each passing day, the shadow’s presence only grew stronger, encircling her like a tightening noose.
In her darkest moments, Anika wondered if she was truly losing her mind. Was the shadow a figment of her imagination, as they claimed? Or was it a tangible manifestation of her deepest fears and vulnerabilities? The uncertainty gnawed at her sanity, threatening to unravel the delicate threads of her existence.
But amid the chaos, Anika discovered a glimmer of solace in her creativity and wit. Like a jester dancing amidst the darkness, she embraced the power of words and humor as her secret weapons. She would quip, “you sly shadow, always lurking in the periphery. But I’ll outwit you yet!”
Through her words, Anika found a way to describe the indescribable, to express the inexplicable emotions that plagued her soul. Her words became a beacon, reaching out to others who shared her silent battles. They too recognized the shadow’s presence, validating Anika’s truth and providing her with a much-needed sanctuary of understanding.
United with kindred spirits who also bore the weight of unseen shadows, Anika learned that her struggle was not in vain. Together, they formed an unbreakable bond, lifting each other up as they faced their demons head-on. In their shared vulnerability, they discovered strength and resilience, the antidotes to the darkness that threatened to consume them.
Over time, Anika realized that the opinions of those who failed to perceive the shadow held no power over her truth. She understood that her journey was unique, and that her strength lay in embracing her fears and finding support from those who believed her.
And so, armed with her words and a tribe of understanding souls, Anika walked her path with newfound courage. The shadow still lurked, a constant reminder of her struggles, but it no longer held dominion over her spirit. She had learned to live alongside it, to dance with her fears while basking in the light of compassion and acceptance.
எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று, நமது மூளை பல குட்டிக்கரணம் போடும். பரிணாம வளர்ச்சி கூட, இந்த எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்கிற வேட்கையின் விளைவுதான்.
இந்த வேட்கையின் ஒரு வெளிப்பாடு தான் third man syndrome. எங்கோ ஆள் இல்லாத காட்டுக்குள், நடுக்கடலில், பனி மலையில், தன்னந்தனியாக நாம் மாட்டிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு ரெண்டு நாள் அதிகபட்சம் ஒரு வாரம் தனிமையில் சமாளித்து விடுவோம். பின் மெல்ல மெல்ல தனிமை, இந்த சூழலில் இருந்து மீளவே முடியாதா? ஐயோ யாருமின்றி இப்படி வந்து மாட்டிகொண்டமே என்கிற பீதி இதெல்லாம் சேர்ந்து நம்மை கடுமையாக தாக்கும்.
தனிமை தாங்க முடியாது. அப்போது நாமாகவே Cast Away படத்தில் வரும் Chuck போல ஒரு பந்தை வைத்து கொண்டு, “என்னடா Wilson நம்ம நிலைமை இப்படி ஆகி போச்சே” என்று பேச ஆரம்பித்தால் ஒரு மாதிரி சமாளிக்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் உள்ளே போன கொஞ்ச நாளில் காமெராவை பார்த்து மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது எதோ attention seeking என்று நாம் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அது ஒரு உளவியல் சிக்கலே. நமது எண்ணத்தை பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாதபோது, வேறு ஒரு வடிகாலை நமது மூளை தேடும் அது பிக் பாஸ் காமெராவாக இருக்கலாம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளமாக இருக்கலாம், டைரியாக இருக்கலாம், அல்லது Wilson என்னும் football ஆக இருக்கலாம்.
football ஐ Wilson ஆக கற்பனை செய்து பேசும்போது கொஞ்ச நாள் வரை அது football என்பது நமக்கு தெரியும். நாள் போக போக அது football என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அது Wilson என்றொரு ஆள் என்றே நினைக்க தொடங்கிவிடுவோம். Cast Away படத்தில் Chuck, conscious ஆக ஒரு மூன்றாவது ஆளை கற்பனை செய்து கொள்கிறார். தனிமையை போக்கி கொள்ள… உயிர் வாழ…
Cast Away படத்தில் Chuck க்கு stress கம்மி அவருக்கு ஒரு நல்ல தீவு, தண்ணீர், உணவு, இருப்பிடம் போன்றவை அமைந்துவிடுகிறது. அவர் சாவகாசமாக Wilson என்றொரு ஆளை கற்பனை செய்கிறார்.
ஆனால் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கி கொள்ளும்போது, நடுக்கடலில் பனிமலையில் ‘தோ அவ்ளோதான் நம்ம கதை முடிஞ்சது’ என்ற அதிக life-threatening சூழலில் மாட்டும்போது stress அதிகரிக்கிறது. ‘இனிமே எதுவுமே பண்ண முடியாது, சாக வேண்டியது தான்’ என்பது போல நாம நினைக்க தொடங்கும்போது, ‘அய்யய்யோ எங்க இந்த பய பிழைக்க முடியாது ன்னு கையை கிய்யா அறுத்து தொலைச்சுப்பானோ, இல்லாட்டி எதுவுமே முயற்சி பண்ணாம அப்படியே உக்காந்துருவானோ’ என்று நமது மூளை பீதி அடைந்து எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று புதிதாக ஒரு ஆளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. நம்மை hallucinate பண்ண வைக்கிறது.
இதற்கு பெயர் third man syndrome. மலையேறுபவர்கள், polar explorers, கப்பல் விபத்தில் மாட்டி கொண்டவர்கள் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது.
1933 ல் Frank Smythe என்பவர் Mt. Everest சிகரத்தை கிட்டத்தட்ட அடையும் நிலைக்கு சென்றார். அவரும் சிலரும் மலையேற தொடங்கும்போதே சூழல் மோசமாக இருந்து இருக்கிறது. போக போக weather மோசமாக இருக்கவும் அவருடன் வந்த அனைவரும் திரும்பிவிட்டனர். இவர் மட்டும் தனியாக தொடர்ந்து முன்னேறி இருக்கிறார். பல இடங்களில், ‘இதோட நம் கதை முடிந்தது’ என்று துவளும் போதெல்லாம் ஒரு ஆள் வந்து, “அதெல்லாம் ஒண்ணுமில்ல கொஞ்ச நேரத்துல புயல் நின்னுடும், நாம இந்த பக்கமா போகலாம்” இப்படி பேசி கொண்டே வந்ததாக சொல்கிறார். அந்த ஆளுக்கு தன்னிடம் இருந்த Kendal mint cake எல்லாம் குடுத்து இருக்கிறார். இவர் சாப்பிட்டு திரும்பி பார்த்தால் கேக் கீழே கிடந்தது இருக்கிறது.
ஒருத்தன் நம்ம கூட இருக்கானா? இல்லையா? என்ற குழப்பத்துடனே உயிர் பிழைத்து வந்து இருக்கிறார். ஆனால் அந்த ஒருவன் இல்லாவிட்டால் நான் சோர்ந்து போயிருப்பேன் என்கிறார்.
இம்மாதிரியான பல சம்பவங்களை பற்றி John Geiger, The Third Man Factor: Surviving the Impossible என்னும் புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதை hallucination என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் hallucination க்கு பெரிதாக அர்த்தம் எதுவும் இருக்காது. தாறு மாறா இருக்கும். ஆனா third man syndrome ல் கூட வரும் அந்த நபர் நமக்கு ஆறுதல் சொல்லுவதும், idea தருவதுமாக இருப்பார். (இந்த idea நமக்கு தெரிந்த idea தான். ஆனா பதட்டத்தில் நமக்கு எதுவும் தோன்றாது. இந்த மூணாவது ஆள் புதுசா நமக்கு சொல்ற மாதிரி இந்த idea களை சொல்லுவார். அதாவது நம்ம மூளை நம்மகிட்ட எடுத்து குடுக்குது.)
1914 ல் Shackleton என்பவரும் அவரது குழுவினரும் Endurance என்னும் கப்பலில் South Georgia Island ல் இருந்து கிளம்பி Antarctica வில் அதுவரை யாரும் பார்க்காத இடங்களை பார்த்து வருவதர்க்காக கிளப்பினார்கள். ஆனால் Weddell Sea ல் உறைந்த பனிக்குள் கப்பல் மாட்டி சின்னாபின்னமாகிவிட்டது. கப்பலை பனியில் இருந்து எடுக்க பல மாதங்கள் குளிரில் முயன்று இருக்கிறார்கள் முடியவில்லை.
கடைசியில் கப்பல் மூழ்க ஆரம்பித்ததும் 3 lifeboat ல் Elephant Island சென்று சேர்ந்து இருக்கிறார்கள். அங்கு குழுவினரை விட்டுவிட்டு Shackleton உம் இன்னும் 3 பேரும் மட்டும் 1 lifeboat ல் South Georgia Island நோக்கி (1,300 kilometers) பயணித்து இருக்கிறார்கள். தீவில் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு தீவின் மலைகளில் ஏறி சென்று இருக்கிறார்கள்.
இப்படி மலை மீது நால்வரும் செல்லும்போது Shackleton க்கு கூட 3 நபர்களுடன் 4 வதாக ஒரு ஆள் வந்ததாக தோன்றி இருக்கிறது. இந்த 4ஆம் நபர் Shackleton க்கு ஆறுதலும் உத்வேகமும் அளித்தபடி வந்து இருக்கிறார்.
கவிஞர் T.S. Eliot இந்த சம்பவத்தில் impress ஆகி The Waste Land என்னும் அவரது கவிதையில் இதை பயன்படுத்தி இருக்கிறார்.
Who is the third who walks always beside you? When I count, there are only you and I together But when I look ahead up the white road There is always another one walking beside you Gliding wrapt in a brown mantle, hooded I do not know whether a man or a woman But who is that on the other side of you?
இந்த கவிதையில் இருந்து தான் Third Man என்ற பெயர் வந்தது.
Spirituality க்கு தமிழில் ஆன்மீகம் என்கிறார்கள். மதமும் தமிழில் ஆன்மீகம் தான். அப்படியானால் இரண்டும் ஒன்றா?
மனிதன் முதலில் spirituality யில் தான் ஆரம்பித்து இருக்கிறான். Spirituality யில் இருந்து வந்தது தான் மதம். நாம் யார்? இந்த பூமியில் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? இறந்த பின் எங்கு செல்வோம்? நமக்கு நெருக்கமான ஒருவர் இறந்த பின்னும் இந்த பூமியில் நாம் வாழ வேண்டி இருக்கே ஏன்? அதை எப்படி எதிர்கொள்ளவது போன்ற கேள்விகள் தான் spirituality க்கு ஆரம்பம். பதில் தெரியாத இந்த கேள்விகளுக்கு தத்துவங்கள் மூலம் பதில் சொல்வது spirituality. இந்த கேள்விகளுக்கு எல்லாம் கடவுள் என்று பதில் சொன்னால் அது மதம்.
Spirituality மற்றும் மதம் இரண்டிற்கும் கேள்விகள் ஒன்றே ஆனால் பதில்கள் தான் வேறு. தொடக்கத்தில் spirituality மற்றும் மதம் இரண்டும் ஒன்றற கலந்து இருந்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் கடவுள் என்ற ஒரே பதில் மட்டும் மனிதனுக்கு போதுமானதாக இல்லை. அப்போது சிலர் கடவுள் இருக்கிறார் ஆனாலும் சில கேள்விகளுக்கு கடவுள் மட்டுமே பதில் அல்ல என்று spirituality க்கு புதிய பாதை வகுத்தனர். அந்த புதிய பாதை இன்று, கடவுள் இருக்கலாம் இல்லாமல் போகலாம், நீங்கள் கடவுளை நம்பலாம் நம்பாமல் போகலாம் கடவுள் என்ற ஒருவரை உள்ளே இழுக்காமலே பதில் கிடைக்காத கேள்விகளுக்கு பதில் சொல்ல முயல்வதுதான் spirituality என்னும் இடத்தில் வந்து முடிந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் spirituality யில் எல்லா கேள்விகளுக்கும் கடவுள் என்ற பதில் இருந்தது. பின்னர் கடவுளை தொடர்புபடுத்தி ஒரு பதில் இருந்தது, இன்று கடவுளை உள்ளே இழுக்காமலே பதில் சொல்ல முயற்சிக்கப்படுகிறது.
ஒரு spiritualist கடவுள் நம்பிக்கையற்றவராக இருக்கலாம் அதே சமயம் ஒரு ஆன்மீகவாதி spiritual தாக்கமே இல்லாமல் வெறும் கடவுள் சடங்குகள் என்றும் இருக்கலாம். இன்று அவை இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் அற்றவை. ஆனால்… எல்லா மதங்களும் spiritual ஐ முன்மொழிகின்றன. Spiritual கேள்விகளுக்கு தங்களிடம் பதில் இருக்கு நாங்களும் spirituality யின் அங்கம் தான் என்கின்றன.
Spirituality மற்றும் மதத்திற்கு இருக்கும் முக்கியமான வேறுபாடு, மதம் என்பது organized குழு. அந்த organized குழுவுக்கென்று ஒருமித்த நம்பிக்கைகள் பின்பற்றவேண்டிய சடங்குகள் இருக்கும். Spirituality என்பது தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய புரிதலில் அவர்களுக்கென்று சில நம்பிக்கைகளை வளர்த்து கொள்வது.
Spiritual குருமார்கள் தங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் புரிதல்களை தன்னுடைய followers க்கு கற்பிக்கிறார்கள். இது மறுபடியும் organized குழுவாக மாறுகிறது.
இந்த தனிப்பட்ட நம்பிக்கைகள் எங்கிருந்து வரும்? தனிப்பட்ட நபர்களின் புரிதல்கள் எப்படி வருகின்றன. இவர்கள் பெரும்பாலும் அவர்கள் சார்ந்த மதத்தில் இருந்து தான் தங்களது நம்பிக்கைகள் புரிதல்களை தருவிக்கிறார்கள். ஒரு 20 வயது வரை அவர்கள் கண்டு கேட்டு பார்த்து வளர்ந்த அவர்களது மதம் சார்ந்த நம்பிக்கைகள் கோட்பாடுகள் தான் அவர்களது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர் போன்றவர்கள் இந்து மதத்தை ஆதாரமாக கொண்டும், ஓஷோ ஜெயின் மதத்தை ஆதாரமாக கொண்டும் spiritual கருத்துக்களை சொல்கிறார்கள். நவீன சிந்தனைகளான Law of Attraction, Positive thinking, metaphysics and manifestation, New Thought philosophy போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் அதை அடிப்படையாக வைத்து தங்களது spiritual கருத்துக்களை சொல்கிறார்கள் Eckhart Tolle போன்றவர்கள் இந்த வகை.
வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள் தங்களது வாழ்க்கையையே அடிப்படையாக, பாடமாக வைத்து spiritual கருத்துக்களை சொல்கிறார்கள்.
மதத்தின் சடங்கு சம்பிரதாயங்களால் பெரிதாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட முடியாதபோது, தங்களது இழப்பு வேதனைகளை எதையாவது சொல்லி தேற்றி கொள்ள மக்கள் spirituality பக்கம் வருகிறார்கள். இங்கும் சடங்குகளுக்கு பழக்கப்பட்ட மக்களுக்காக யோகா, மூச்சு பயிற்சி போன்றவை alternative களாக வழங்கப்படுகின்றன.
மதம் அதனால் ஏற்படும் தீமைகள் அல்லது கடவுளால் எதுவும் வேலைக்காகாது அல்லது கடவுளே இல்லை என்று மதம் ஒழியும் காலகட்டத்தில் spirituality அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும். Spiritual குருமார்கள் தலைமையில் organized குழு உண்டாகும். அது மதம் செய்த அதே மூடத்தனங்களை செய்யும்.