Normal view

Received before yesterday

நெஞ்சங் கவரும் வங்காளக் கதைகள்

 ஆசிரியர்  விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை.  அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.

அழகின் ஆராதனை

ஆசிரியை  லெஷ்மி அவர்களின்  கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப  வாழ்வில்  எதிர் கொள்ளும் பிரச்சனைகளும்  அதனை அவர்கள்  கையாளும் விதமும் பற்றியே  அமைந்திருக்கும்.பூக்கள்  அ த்தனையுமே  அழகுதான்    இருப்பினும்  சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது.    பூக்களின்   ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை  விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும்  வெறுப்பதுமில்லை.

பங்குச்சந்தை அனாலிஸிஸ்

இன்றைய வேகமான உலகில் பணம் பணம்  என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில்  மூன்றே நிமிடத்தில்  பல வேலைகள் செய்து பணக்காரனாக  ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில்  முடியாதென்பதை  உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு  இது சாத்தியமாகலாம்.

நெஞ்சின் அலைகள்

அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர்.   ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும்  ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன்  என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில்  நூலகத்திலிருந்து  என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில்  நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.

சேரமான் காதலி

பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள்  அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில்  நடத்தும்  பாட்டுப் போட்டிகளில்   கவிஞரின்   பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும்  அவை வாடாத பூக்களாய்  என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.

ஜா: தீபா – வாஞ்சிநாதனைப் பற்றிய சிறுகதை

மறைமுகம் சுவாரசியமான சிறுகதை. வாஞ்சிநாதனைப் பற்றி அவரது மனைவி எப்படி உணர்ந்திருப்பார்? இந்தச் சிறுகதையில் அவர் பதின்ம வயதினராக, அப்போதுதான் தாயானவராக சித்தரிக்கப்படுகிறார். உண்மையிலேயே அப்படித்தானா என்று எனக்குத் தெரியாது, ஆனால் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. பதின்ம வயதுப் அக்ரஹாரத்துப் பெண், நூறாண்டுகளுக்கு முன் என்ன நினைத்திருப்பார்? பாரதமாதா என்று உயிரையே தியாகம் செய்யலாம் என்று வாஞ்சி தீவிரமாக இருந்தால் எதற்கு திருமணம் செய்துகொண்டார்?

வாஞ்சி குழந்தையைப் பார்க்க வரவில்லை, என்ன செய்கிறார் என்று குடும்பத்தினருக்கு சரியாகப் புரியவில்லை. மனைவி வருவார் வருவார் என்று காத்திருக்கிறார், குழந்தையின் உயிருக்கு அபாயம். இந்தச் சூழலை சிறப்பாக கொண்டு வந்திருப்பதால் இந்தச் சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தீபாவின் எழுத்தில் நான் படித்தது இந்த ஒரு சிறுகதையைத்தான். இனி மேல் தேட வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

 

ஜா: தீபா – வாஞ்சிநாதனைப் பற்றிய சிறுகதை

மறைமுகம் சுவாரசியமான சிறுகதை. வாஞ்சிநாதனைப் பற்றி அவரது மனைவி எப்படி உணர்ந்திருப்பார்? இந்தச் சிறுகதையில் அவர் பதின்ம வயதினராக, அப்போதுதான் தாயானவராக சித்தரிக்கப்படுகிறார். உண்மையிலேயே அப்படித்தானா என்று எனக்குத் தெரியாது, ஆனால் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. பதின்ம வயதுப் அக்ரஹாரத்துப் பெண், நூறாண்டுகளுக்கு முன் என்ன நினைத்திருப்பார்? பாரதமாதா என்று உயிரையே தியாகம் செய்யலாம் என்று வாஞ்சி தீவிரமாக இருந்தால் எதற்கு திருமணம் செய்துகொண்டார்?

வாஞ்சி குழந்தையைப் பார்க்க வரவில்லை, என்ன செய்கிறார் என்று குடும்பத்தினருக்கு சரியாகப் புரியவில்லை. மனைவி வருவார் வருவார் என்று காத்திருக்கிறார், குழந்தையின் உயிருக்கு அபாயம். இந்தச் சூழலை சிறப்பாக கொண்டு வந்திருப்பதால் இந்தச் சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தீபாவின் எழுத்தில் நான் படித்தது இந்த ஒரு சிறுகதையைத்தான். இனி மேல் தேட வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

 

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக […]

❌