Normal view
ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்!
அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது சில முன்முடிவுகளையேனும் உதிர்த்திருக்கிறதா?
The post அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள் appeared first on அரூ.
தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு இலக்கியத்தில் இடமில்லாதபோது அறிவியல் புனைவு கைகளை அகல விரித்து நம்மை அணைக்கிறது.
The post தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு appeared first on அரூ.
புத்தகத் திருவிழா.
அப்பா இப்போது நலமாக இருக்கிறார். சென்ற வாரத்தில் தம்பியிடம் பேசும்போது, ‘அப்பாக்கு லேசான தொண்டை வலிதான் ஆனா’ என்று இழுத்தான். இந்த ‘ஆனால்’ எனும் சொல் ஒரு மாயை. அதனுள் நிறைய பொருட்களை பொதித்துப் புதைத்து ’மெத்தி’ விடலாம். போட்டது போட்டபடி என்பார்களே அப்படி, அந்த இரவில் கிளம்பிவிட்டேன். வண்டியை எடுக்கும்வரை நான் மட்டும் போவதாகத்தான் இருந்தது. பார்த்தால், தூங்கிக்கொண்டே அருகில் அமர்ந்தான். ‘நானும் வர்றேன்ப்பா’. “ஏண்டா ஒன்னும் இல்ல சும்மா தொண்டவலிதான் தாத்தாவுக்கு”. ”ம்ம்..ஆனா you’re not ok” அப்டீன்னான். ஓஹ் என்று தோன்றியது எனக்கு. நான் இயல்பாக இருப்பதாகத்தான் நினைத்திருந்தேன்.
பொதுவாக, நான் மாலை ஆறு மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைப் பயணங்களைத் தவிர்த்துவிடுவேன். அதிகாலை 5 மணிக்குக் கிளம்புவதே வழக்கம். ‘ஆனால்’ இம்முறை இருப்புக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு! ஆம். சமீபத்தியப் பெருமழையின் விளைவாக மிக மோசமான சாலைகள், சென்னை விழுப்புரம் வரை குண்டும் குழியுமான சாலைகள், போதிய வெளிச்சமற்ற விளக்குகள், அதிவெளிச்சமான எதிர்வரு வாகனங்கள் என, தவிர்த்திருக்க வேண்டிய இரவுப்பயணம்.
அதிகாலையில் வீட்டிற்குப் போனதும் வழக்கமான அந்தக் குரல் கொஞ்சம் பிசிறடித்தது போல் இருந்தது ‘இதுக்குத்தான் ஒங்கிட்ட சொல்லாதனு சொன்னேன்’. அவ்வளவுதான்.
ஒருவாரம் அவரோடுதான் இருந்தேன்..இதுவரை எதுவெல்லாம் இந்த சென்னை வாழ்வின் அன்றாட முக்கியங்கள் என்று இருந்தேனோ அவை யாவும் ஒன்றுமேயில்லை என்பது போல் ஒரு வாரம் ‘சும்ம்மா’ அவரோடு இருந்தேன். யோசித்துப் பார்த்தால் கடந்த 25 வருடங்களில் நான்கு ஐந்து நாட்கள் கூட தொடர்ந்து இப்படி ‘சும்மா’ அங்கு அவரோடு இருந்ததில்லை என்று தோன்றியது. சிலபல மருத்துவ சோதனைகள் முடித்து, கிரிக்கெட் அரசியல் என எம் திண்ணை 20,25 ஆண்டுகளுக்கு முந்தையது போல் ஒரு வாரமும் போனது. போகட்டும்.
கிளம்பும்போது, ‘அப்ப இப்பிடி நாலஞ்சு நாள் இருக்கமாதிரி வரலாம்போலயே’ என்றார். ஆம். மீண்டும் சும்மா போகவேண்டும். சும்மா சும்மா போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நிர்பந்தங்கள் ஏதுமற்ற பயணங்கள் அமைதல் வேண்டும்.
இந்த ஒருவாரத்தில் என்னவெல்லாமோ நடந்திருக்கிறது. ஆனானப்பட்ட அப்பா-மகன் அன்புமணியே அப்பாவை எதிர்த்து மைக்கைத் தூக்கி எறிந்தார் நேற்று.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கொடூரம், இழுக்கு. உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை உடைத்தது அரசு. நன்று. ஆனால் இவ்வளவு எளிதாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ‘இப்படி செய்யமுடியும் எனில்’. எனும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டதை என்ன செய்து நேர் ஆக்கப்போகிறார் முதல்வர் எனப் பார்ப்போம். இது நிகழ்ந்திருக்கக் கூடாது.
சென்னையில் புத்தகத் திருவிழா ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் இதற்காகத்தான் ஓடி வந்தேன் என்று நினைக்கிறேன். பனுவல் அரங்கில் மிளிர் புத்தகங்கள் அடுக்கப்பட்டப் புகைப்படத்தைப் பார்த்ததும் இன்னும் ஆவல் உந்த, இதோ, சென்னை வந்தாகிவிட்டது.
இன்று காலை 11:30 மணியில் இருந்து மதியம் வரை பனுவல் அரங்கத்தில் (115) இருப்பேன்..வழக்கம்போல், வாய்ப்புள்ள, எதிர்படும் நண்பர்களே, சந்திப்போம்.

ஏன் உங்களுக்கு பொருத்தமில்லாத ஒரு நபரையே நீங்கள் திருமணம் செய்யவுள்ளீர்கள்? – அலான் டி பாட்டன்
கூடா நட்பு
கூடா நட்பு
இந்த ஆண்டும் வழக்கம் போல பள்ளி ஆண்டு விழாவின் விளையாட்டுப் போட்டியை ஆசிரியர் அறிவித்துக் கொண்டிருந்தார். எல்லாப் போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டு முதல் இரண்டு பரிசுகளையும் ஆளுக்கொன்றாக தட்டிச் செல்வதில் இணை பிரியாத் தோழிகளான கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும் அடித்துக்கொள்ள வேறு எவரும் இல்லை என்பது அந்தப் பள்ளியில் அனைவருக்கும் தெரியும். இது பல மாணவர்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்த ஆண்டு இவர்கள் இருவரையும் தோற்று ஓடச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்த அந்த வகுப்பு மாணவர்களில் சிலர் அதற்கான வேலையை தந்திரமாக செய்ய ஆரம்பித்தனர். அதன் முதல் படியாக கண்மணியையும், தமிழ்ச்செல்வியையும் பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
“ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்” என்றாள் மணிமொழி.
“அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச் செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது” என்றாள் கண்மணி.
“அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை விருது வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்” என்றாள் மணிமொழி
இதற்கு 4 மாணவிகள் ஒத்து ஊதிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் கண்மணிக்கு ஆசை காட்டி தமிழ்ச்செல்வியை சண்டைக்கு இழுக்க வைக்க முயற்சி செய்தார்கள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல கண்மணியை தொடர்ந்து மூளைச் சலவை செய்தவர்கள், இறுதியாக,
“கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்” என்றபோது கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. இதைப் பயன்படுத்திக்கொண்டு மணிமொழி குழுவினர் அவளை மெல்ல தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி தலைக்கேற ஆரம்பிக்க புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் பல படிகள் அதிகமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
புதிய நண்பர்கள் கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்.
“கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”
“என்ன அது.. இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”
“அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” என்றார்கள்.
இதற்கு 4 நண்பர்களும் நான்கு விதமாக கண்மணியை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனாலும் கண்மணியின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டேதான் இருந்தது. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விடக்கூடாது என்று மனம் எச்சரிக்கை விடுத்தாலும் புதிய நண்பர்களின் ஆசை வார்த்தைகள் அவளை மதியிழக்கச் செய்தது.
அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,
“கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்” என்று கனிவுடன் கேட்டார்கள். அவளும் அவசர அவசரமாக, “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா” என்றபோதே அவள் அம்மா ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள். எப்படியோ நல்ல வார்த்தை சொல்லி மகளை அனுப்பி வைத்தாலும் அந்தத் தாய்க்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று தெரிந்துவிட்டது. அவரும் அதற்குமேல் மகளை தொல்லை கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தவர் போட்டி நடக்கும் மைதானத்திற்கு தானும் வந்து சேர்ந்தார்.
போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது. அவள் அம்மாவிற்கு மட்டும் ஒரு ஐயம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதற்கேற்றார்போல் சில மாணவிகள் வந்து அவளிடம் இரகசியம் பேசிச் சென்றதையும் கவனித்து விட்டார். போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவர் அதைத் தடுக்க ஆயத்தமாகவும் இருந்தார். குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள். தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாலும் கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டதில் பெருமிதம் கொண்டாள். அவள் அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்டவள் அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள்.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும், என்ற வள்ளுவரின் குறள் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது.
காட்சி அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம்.
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
என்பது கூடா நட்பு அதிகாரத்தின் 824வது குறட்பா.
இதன் பொருள், முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். நண்பர்களுடன் பேசும்போது நம்முடைய மனம் நேர்மறை சிந்தனைகளில் அல்லாமல் எதிர்மறை சிந்தனைகளில் வளர்கிறதெனில் அந்த நட்பு தவறானது என்பதைக் கண்டு கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் தான் முடியும் .
“உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்”, என்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யக் கூடாது. அதன் வலி தாங்கமுடியாதது என்பதையும் உணரச் செய்யும் காட்சிகளைத்தான் காண இருக்கிறோம். வாருங்கள் நிகழ்ச்சிக்குள் போகலாமா…
காட்சி – 1 பள்ளி வகுப்பறை
ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! ஒரு நல்ல செய்தி. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆண்டு விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கப் போகிறது. கண்மணி, தமிழ்ச்செல்வி தவிர வேறு யாரெல்லாம் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?
மாணவர்கள் ஒன்றாக டீச்சர் ஏன் அவர்களைத் தவிர என்கிறீர்கள்? என்ற கூச்சல்.
ஆசிரியர்: ஆமாம் அவர்கள் எப்போதும் கலந்து கொள்பவர்கள்தானே. அதான் நானே அவர்களுடைய பெயர்களை எழுதிக்கொண்டேன்..
ஓ …..
ஆசிரியர்: சரி, விரைவில் மற்றவர்களும் பெயர்களைக் கொடுங்கள். இப்போது பாடத்திற்குச் செல்லலாம்.
காட்சி – 2
கண்மணி : “தமிழ், எப்படியும் இந்த முறையும் நீதான் சுழற்கோப்பையை தக்க வைத்துக்கொள்ளப் போகிறாய். அப்படித்தானே?”
தமிழ்ச்செல்வி : அதெல்லாம் இல்லைப்பா. எனக்குப் போட்டியாத்தான் எப்பவும் நீ இருகிறாயே? அப்புறம் எப்படி ?
(தமிழ்ச்செல்வி அந்த இடத்தை விட்டு அகன்றாள்)
மணிமொழி : “ஏய் கண்மணி எப்படியும் இந்தப் போட்டியிலும் வழக்கம் போல நீதான் வெற்றி பெறப் போகிறாய்”
கண்மணி : “அதெல்லாம் இல்லப்பா விளையாட்டுப் போட்டி என்று வந்தால் தமிழ்ச்செல்வியை யாரும் முந்திச் செல்ல முடியாது”
மணிமொழி : “அப்படியெல்லாம் இல்லைப்பா. நீதான் இந்த முறை கோப்பையை வாங்கப் போகிறாய் என்று நான் பந்தயம் கட்டியுள்ளேன்”
மற்ற 3 மணவிகள் : ஆமாம் .. ஆமாம். மணிமொழி சொல்வது சரிதான். நீதான் இந்த முறை கோப்பையை வெல்லப் போகிறாய்.
“கண்மணி இந்தப் போட்டியில் கட்டாயம் முதல் பரிசு உனக்குத்தான். அதற்கு நாங்கள் பொறுப்பு. நீ மட்டும் நாங்கள் சொன்னபடி கேட்டால் போதும். சுழற்கோப்பை இந்த முறை உனக்குத்தான்”
(கண்மணிக்கு மெல்ல சபலம் தட்ட ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பிக்கிறாள். “எப்படியும் சுழற்கோப்பையை அடைந்தே தீரவேண்டும்” என்று தனக்குத்தானே சபதம் மேற்கொள்கிறாள்.
(புதிய நண்பர்களின் பேச்சை முழுமையாக நம்ப ஆரம்பித்தாள் கண்மணி. கண்மணியிடம் ஒரு பெரிய திட்டத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். எப்படியாவது இருவரையும் தோற்கச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டிருந்தனர்).
“கண்மணி ஓட்டப் பந்தயத்தில் நீ வெற்றி பெற வேண்டுமானால் நாங்கள் சொல்வதுபோல் நீ செய்ய வேண்டும்”
கண்மணி : “என்ன அது.. இதனால் வேறு பிரச்சனைகள் வராது அல்லவா?”
தோழிகள் : “அதெல்லாம் ஒன்றும் வராது. எப்படியும் நீங்கள் இருவரும்தான் முன்னிலையில் ஓடி வந்து கொண்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் நாங்கள் சைகை காட்டுவோம். அப்போது மெதுவாக ஒரு கல்லை வழியில் உருட்டி விடுவோம். நீ அந்த நேரம் பார்த்து தமிழ்ச்செல்வியின் காலை இடறச் செய்துவிட்டால் போதும். அவள் கீழே விழுந்து விடுவாள். நீ முன்னால் ஓடிச் சென்று பரிசை தட்டிச் செல்லலாம்” .
கண்மணி : (மனதிற்குள்) மனசு என்னமோ உறுத்திக் கொண்டே இருக்கிறதே. இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு அன்புத் தோழி தமிழ்ச்செல்வியை இக்கட்டில் மாட்டி விட்டுவிடுவோமா? சே..சே.. அப்படியெல்லாம் ஆகாது. பார்த்துக்கலாம் …
காட்சி – 3
அன்று போட்டி நாள். எப்போதும் உற்சாகமாகக் கிளம்பும் கண்மணி அன்று ஒரு பதட்டத்திலேயே கிளம்பிக் கொண்டிருந்தாள். இதை கவனித்த அவளுடைய அம்மா,
அம்மா : “கண்மணி இன்று ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாய். இத்தனை முறை காரணம் கேட்டும் சொல்லவும் மறுக்கிறாய். இந்த மனநிலையில் போனால் எப்படி போட்டியில் வெற்றி கிடைக்கும். ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் சொல்”.
கண்மணி : “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா”
அம்மா மனதிற்குள் .. : ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்னமோ அசம்பாவிதம் நடக்கப் போவதாகத் தோன்றுகிறதே. பேசாமல் போட்டி நடக்கும் மைதானத்திற்கு போய்விடலாம்”.
போட்டி ஆரம்பித்தது. மூன்றாவது விசிலும் ஊதப்பட்டது. எல்லோரும் பந்தயத்திற்கு தயாராகி விட்டனர். கண்மணியின் மனதில் மட்டும் ஒரு சலனம். தேவையற்ற இந்த மனக்குழப்பம் அவளுடைய வெற்றிப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாகவும் நின்றது.
சில மாணவிகள் வந்து கண்மணியிடம் இரகசியம் பேசிச் செல்கிறார்கள்.
அம்மா மனதிற்குள் : “போட்டி நடக்கும்போது அந்தப் பிள்ளைகள் ஏதோ செய்யப் போகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்”.
குறிப்பிட்ட அந்த இடம் வந்தவுடன் கண்மணியின் அம்மா கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மணிமொழி குழுவினர் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கண்மணியும் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தாலும் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவளையறியாமல் கால்கள் அச்சத்தில் பின்னிக் கொண்டன. வேகம் குறைய ஆரம்பித்தது. கீழே விழப் போனவளை ஒரு நொடியில் அணைத்து காப்பாற்றி விட்டு முன்னேறிச் சென்ற தமிழ்ச் செல்வியைப் பார்த்து கூனிக்குருகி நின்றாள்.
“தமிழ்ச்செல்வி முதல் இடத்தைப் பிடித்து விட்டாள்” என்ற அறிவிப்பு வருகிறது.
கண்மணிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
கண்மணி மனதிற்குள் : நல்ல வேளை. கூடா நட்பினால் நல்ல தோழியை இழக்க நேர்ந்த விபத்திலிருந்து தப்பி விட்டோம்”
அம்மாவும் அதைப் புரிந்து கொண்டு அவள் முதுகில் அன்பாக தட்டிக் கொடுத்தார்.
இறுதிக் காட்சி
“நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை புரிந்து கொண்ட கண்மணி அதைத் தன் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டாள். நமக்கும் இது ஒரு பாடம்தானே?”
#KASi : காசியும் அயோத்தியும்! (மார்ச் 30, 2025 – ஏப்ரல் 3, 2025)
தருமராஜ் வந்தார்..
தருமராஜின் அயோத்திதாசர் புத்தக வெளியீட்டு விழா சில குறிப்புகள்
அயோத்திதாசர் புத்தகம் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழைப் பார்த்தவுடன் குழப்பமாக இருந்தது. விழா விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களின் தேர்வு குறித்த குழப்பமே அது. ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அயோத்திதாசர் குறித்து எந்த திசையிலிருந்து பேசுவார்கள் என்று யோசித்ததும் கொஞ்சம் துலங்கத் துவங்கியது. இந்த மூவரும் பொருத்தமான தேர்வு என்றும் தோன்றியது.
இருந்தாலும் புனைவெழுத்தாளர்கள் மட்டும் ஏன் என்ற கேள்வி நீங்காமல் இல்லை. அதற்கும் விடை கிடைத்தது.
விழாவில் பேசிய – சமஸ், ஜெமோ, சுவெ – மூவரிலும் தருமராஜின் புத்தகம் அவர்களை எவ்வாறு பாதித்தது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதைத் தாண்டி அவர்கள் பேசியது இந்நிகழ்வையே ஒரு புனைவாக்கியது . மூவருக்கும் அயோத்திதாசர் எனும் ஓரே நபர் இந்துத்துவ எதிர்ப்பாக, பகுத்தறிவிற்கு எதிர்ப்பாக, நவீனத்துவக்கு எதிர்ப்பாக என மாறிய அதிசயம் நிகழ்ந்தது.
இறுதியில் பேசிய தருமராஜுக்கு வேறு வழியே இல்லை. அவர் உண்மையைப் பேசித்தான் ஆக வேண்டும். ஏனெனில் அவர் இங்குள்ள உண்மைகள் பற்றித் தெரியாத ஒரு வேற்று நூற்றாண்டு ஏலியன் ஒருவருடன் இருபது வருடம் வாழ்ந்திருக்கிறார்.
அவருடைய பேச்சிலே மூவரின் நிலைப்பாட்டிற்கான துணைகேள்விகள் வந்து கொண்டேயிருந்தன.
ராஜ்கௌதமன் ‘குறுகிய ஐரோப்பிய’ பார்வை கொண்டு செய்த தவறை, தருமராஜ் செய்யவில்லை என்று வழக்கம்போல ஐரோப்பிய பிரச்சனையாக்கி ஜெமோ சொன்னார். தருமராஜ் தனது பேச்சின் ஊடே, தான் எவ்வாறு தெரிதா, விட்கென்ஸ்டைன், தெல்யூஸ் போன்ற ‘இந்தியப் பார்வைகள்’ கொண்டு அயோத்திதாசரைக் கண்டடைந்தேன் என்றார்.
நாம் என்ன ஆசைப்பட்டா ஐரோப்பிய பார்வைகளுக்குத் தேடிப் போகிறோம். இங்கு முப்பது வருடமாகக் கூடவே இருக்கிற இளையராஜாவைப் புரிந்து கொள்ள Charles Rosen தயவில்லாமல் முடியவே முடியாது போல இருக்கிறது. இல்லையென்றால் இங்கே நூறு புத்தகங்கள் வந்திருக்க வேண்டுமே. நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தானே மேற்கினை நோக்கிச் செல்ல வேண்டி இருக்கிறது. ஏன் வேறு வழி இல்லை என்ற கேள்வியும், பொருத்தமான ஐரோப்பிய பார்வைகளைத் தேர்வு செய்வதும், அப்பார்வைகள் தரமுடியாத நமது ‘லட்சணத்தை’ நாம் பேசுவதும் நம்முடைய கையில்.
போலவே சமஸ்கிருதத்துக்கு எதிராக அயோத்திதாசர் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்ற சு.வெ கேள்விக்கு..தமிழையும் சமஸ்கிருதத்தையும் சகோதர மொழிகளாகத் திருப்பியிருப்பார் என்று ஒரு பதில் வந்தது.
நவீனத்தின் பார்வைக்கு அயோத்திதாசர் கொஞ்சம் கெட்டவராகத் தெரிகிறார் என்ற சமஸின் காரணத்திற்கு, இவ்வாறு நாம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியில் எத்தனை பேரை, முக்கியமானவற்றை இழந்துவிட்டோம், இழக்கப் போகிறோம் என்ற ஆற்றாமை பதிலாக வந்தது.
அயோத்திதாசரின் மெய் குறித்த விளக்கமாக தருமராஜ் சொன்ன சப்தமில்லாத மெய், தமிழுக்கு புதிய திறப்புதான் என்று நினைக்கிறேன்.
நேர்மாறாக நமது உயிரெழுத்துக்கள் சப்த வடிவானவை. அதுவும் இசைச்சுர அமைப்பிலானவை. இது போன்ற அணுகுமுறை எகிப்திய, கிரேக்க இசைமுறைகளிலும் உள்ளது. தமிழ் உயிரெழுத்துக்களை இன்றைய பியானோ கட்டைகளில் அடுக்கிவிட முடியும் (அதனால் இரண்டும் ஒன்று என்பதல்ல).
இவை தமிழில் மட்டும்தான் இப்படி என்பதைவிட அவர் சொன்னதைப் போல வேறெந்த மொழியையும் விட தனது வழி வழியான தொடர்ச்சியினால் இம்மொழியில் இந்த ஆழத்திற்கு நாம் செல்லமுடிகிறது.
தனது புத்தகத்தை பல காரணங்களினால் அவர் இளையராஜாவிற்கு சமர்ப்பித்திருக்கலாம். சிலவற்றை புத்தகமாக எழுதியுள்ளார். (அதையும் அவர் புத்தகமாக வெளியிட வேண்டும்.தமிழில் இளையராஜா பற்றி புத்தகங்களே இல்லை!!..பிரேமின் ஒன்றுதான் இருக்கிறது) ஆனால் இவற்றைத்தாண்டி தாசரும், ராஜாவும் சேரும் -உயிர், மெய் – அருமையான புள்ளி இது.
தாசரும் ராஜாவும் சேரும் மற்றொரு புள்ளி இருவரும் ஏலியன்கள்.
தருமராஜின் உரையில் கேட்டது மிகப்பொருத்தமானது – “இப்படிப்பட்ட ஒருவர் வரலாற்றிலிருந்து வந்தால் நாம் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி – நீங்க நல்லவரா கெட்டவரா”. ஆனால் இது வரலாற்றிலிருந்து வந்தவருக்கு மட்டுமா.. நிகழ்காலத்திலும் நடப்பது..நடக்கப்போவது.
கர்னாடக இசை தமிழிசை இல்லயாமே என்ற போது அவர் சிரித்துக்கொண்டே ‘தானா வந்த சந்தனமே’ என்றார். தியாகராஜர் கடவுள் மாதிரி என்ற போது ‘அதனால தான் அவர் ஆசிர்வாதம் பண்ணி பாட்டு கொடுத்தார்’ என்று தியாகராஜரின் பாடல்வரிகளை வேறு மெட்டில் அமைத்தார். கர்னாடக சீசனைத் திறந்து வைத்து ‘நான் folk musicஐ classicalஆ கொடுப்பவானக்கும்’ என்றார். ஒவ்வொன்றும் நமது கால உண்மைகளை உரசிப்பார்க்கும் கூற்றுகள்தான்.
ஆனால் எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல மாட்டேன் என்று இவரும், நேரடியாக சொன்னாலே குழப்பும் அவர்களும் சேர்ந்து இவர் திமிர் பிடித்த மோசமானவராகி, அவர்கள் ‘அறிவிருக்கா’ ஆகி ..
இதிலும் பொருத்தம் தான். என்ன இவரை மறந்துவிடதான் இனி முடியாது. திரைஊடகம் காப்பாற்றி விட்டது.
பேச்சின் நடுவே அவர் ‘நல்லவேளை அ.தாசருக்கு பெரிசா தகவல்கள்’ இல்லை என்று ஆசுவாசப்பட்டார். ஆனால் இப்படிச் சொல்லும் ஒருவரிடம் புனைவெழுத்தாளர்கள் நாவல் எழுதச் சொன்னதாகச் சொன்னது திகிலான அனுபவம்.
புனைவெழுத்தாளர்கள் தங்களை அறிவியக்கமாக அறிவித்துவிட்டார்கள். தங்கள் கற்பனைக்கு எல்லை இல்லை என்று நிரூபிக்க சகலத்தையும் எழுதினார்கள். பிறகு எல்லாரையும் புனைவெழுத்தாளர்களாக மாற்றினால் தமிழ்நாட்டையே அறிவியக்கமாகி விடலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதில் ஒன்று ‘நீங்க நாவல் எழுதலாமே’ என்று கேட்பது. இதை தருமராஜிடம் கேட்டதும் அவர் ‘அதமாதிரி தான் இதையும் எழுதுறேன்’ என்று சொன்னதும் திகிலான வேடிக்கைதான்.
ஆனால் புனைவெழுத்தாளர்களை ஏன் அழைத்தார் என்பது அந்த விழாவிலும், பிறகு அவர் பேசியதில் தான் தெரிகிறது. அந்த பக்கச் சிக்கல் இன்னும் மோசம் போலவே.
எனவேதான் தருமராஜின் வருகை நம்பிக்கையூட்டுவது.
தருமராஜிடமிருந்து கிடைக்கப் போகும் முறையியல் ( நன்றி @anathai) தமிழில் சிந்தித்தலுக்கு புதிய திறப்பாக இருக்கும் என்பதே எனக்கு தருமராஜ் வரவின் முக்கியத்துவம்.
இங்கே தெரிதா, சார்த்தர், விட்கென்ஸ்டைன்… மொழியியல், தத்துவம் பற்றி புத்தகங்கள் உள்ளன. அவர்களையெல்லாம் மேற்கோள் காட்டாமல் கட்டுரைகளும் இல்லை. ஆனால் பெரும்பாலும் அவை நினைவில் நிற்பதில்லை. அதாவது உண்மையில் நம் சிந்தனையின் பகுதியாக மாறவில்லை. ஏனெனில் அதற்கான சரியான தேவையை, எங்கே எவ்வாறு பொருத்துவது என்ற அணுகுமுறையைக் கொண்டுவர இயலவில்லை. இந்த கட்டமைப்பு இல்லாமல்தான் தகவல்கள் நிரம்பி, ஆனால் இறுதியில் பெரிதாக ஒன்றும் மிஞ்சாத சூழல் நிலவுகிறது. அயோத்திதாசர் புத்தகத்தின் வாயிலாக இந்த முறையியலே தமிழுக்கு எதிர்பார்ப்பது.
அயோத்திதாசரின் வரவு போலவே தருமராஜின் வரவுக்கு என்ன நேர்கிறது என்று பார்க்க வேண்டும்.
தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்
சிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம். இருப்பது போலத்தான் தெரிகிறது.
ஒரு மொழிச்சூழலில் சிந்திப்பது அச்சூழலின் அறிதல், அறியாமை இரண்டின் பயனாலாகிறது. ஒரு உதாரணமாக இசை குறித்து தமிழில் சிந்தித்தலை எடுத்துக் கொள்வோம். இது பல்வேறு சிக்கல்களைத் தாங்கியது. இசையை ரசிப்பவர்கள், கற்றுக்கொள்பவர்கள், கோட்பாட்டாளர்கள், கலைஞர்கள் என அனைவரையும் வஞ்சனையில்லாமல் பாதிப்பது. இசையைப் புரிந்துகொள்ளவே முடியாது என்பதில் துவங்கி இசையே தெய்வீகம், அல்லது மரபு, செவ்விசையாக அறியப்படுவது என, இங்கே நிலவும் பலநூறு திரைகளைக் கடந்து இசையை சிந்தித்தல், உரையாடுதல் அனைவருக்குமே சிக்கலானதாகிறது.
ஒரு ஒப்பீடிற்கு, Schoenberg, Hindemith, Rosen, Tovey போன்றோருக்கு இசையின் தெய்வீகம் பற்றியோ, சாதியச் சிக்கல் பற்றியோ, இசை மரபுகள் பற்றியோ இந்த அளவிற்கு சம்பந்தம் இல்லை. அவர்களுடைய இசைக்கோட்பாட்டு எழுத்துக்கள், ஒலியின் பௌதீகத்தில் துவங்கி நேரடியாக இசை கட்டுமானங்களுக்குள் செல்பவை. ஆனால் ஒருவேளை அவர்கள் தமிழில் இசைகுறித்து தமிழர்களுக்கு (இசைக் கலைஞர்களுக்கு கூட) எழுதினால் இவையனைத்தும் மைய பொருட்டாக மாறிவிடும். எனவே ‘தமிழில் சிந்தித்தல்’ என்பது ஒரு தனி நிலைதான்.
இதுபோன்ற சிக்கல்கள் இங்கே இசைக்கு மட்டும் உரியதாக இருக்க முடியாது. எனவே இங்கே சிந்தனையாளர்களாக அறியப்படுபவர்கள் அவரவர் தளங்களில் இதனை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆனால் இச்சிக்கல்களோ, இதற்கான விடைகளோ தென்படும் என்று தேடினாலோ (அல்லது தேடாமல் கிடைக்குமாறோ) அரிதாகத் தான் தமிழில் ஏதாவது கிடைக்கிறது.
‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளரில்லை’ என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரையின் மூலமே திரு.தருமராஜின் அறிமுகம் கிட்டியது. தலைப்பில் துவங்கி அக்கட்டுரை அதுகாறும் ராஜாவை அணுகுவதில் தடுமாறிய, அதனால் அவரை சில வளையங்களில் திரும்ப திரும்ப பேசிவந்த தமிழ்ச்சூழலில், மாற்றாக ஒருவர் கிடைத்ததாகத் தோன்றியது. மேலும் அக்கட்டுரை ஒருவிபத்து மாதிரியும் தெரியவில்லை. துணுக்குகளாலான அக்கட்டுரையின் வீச்சும், சொல்வன்மையும் அவரது பிறகட்டுரைகளை உடனடியாக வாசிக்கவைத்தபோது, அவை மேலே சொன்ன தமிழில் சிந்தித்தலின் ஆதாரமான சிக்கல்களை வெளிக்கொண்டு வருபவையாகவும், அதற்கான விடைகளைத் தேடுபவையாகவும் பெரும் நம்பிக்கையளியத்தவை. எனவே தருமராஜின் எழுத்து முக்கியமானதாக இருப்பதோடு நில்லாமல் ஒரு வகையில் விரிவான பயன்பாட்டுக்குரியதாகவும் அமைகிறது.
இதற்கு ஒரு உதாரணமாக அவரது ஒரு கட்டுரையை எடுத்துக்கொண்டு, அவரது பார்வைகள் ஏன் முக்கியமானவை என்றும், விரிவான பயனாக வேறொரு களத்தில் எவ்வாறு பொருந்துகிறது என்றும் பார்க்கலாம்.
இதற்குள் செல்ல, முதலில் ஒரு முன்கதை சுருக்கம்..
மேற்கிசை கற்றுக் கொண்டும், அதன் தொடர்பில் மேற்கிசை கோட்பாடுகள் மற்றும் வரலாறு குறித்து, தடுமாறி ஒருவழியாக (எனக்கு) தெளிவடையத் துவங்கிய காலம் அது. அப்போது எதேச்சையாக வாசிக்க கிடைத்த புத்தகம் விபுலாணந்தரின் ‘யாழ் நூல்’. இப்புத்தகம் தூக்கிவாரிப் போட்டது என்று சொல்வது குறைவே. ஏனெனில் அதில்தான் சிலப்பதிகாரத்தின் இசைச்செய்திகளை முதன்முதலில் படிக்க நேர்ந்தது. மேற்கிசை அறிமுகமின்றி முதலில் இதனை படித்திருந்தால் வேறு. ஆனால் மேற்கிசையின் வரலாறுகள் பின்னணியில், தொனிமுறைகளின் பின்னணியில் அதனைப் படித்த போது கிடைத்த துலக்கம் முற்றிலும் வேறானது. ஒருபுறம் இத்தகைய இசையறிவு தமிழில் சங்க, சிலப்பதிகார, மத்திய காலங்களில் இருந்ததன் இயல்பான வியப்பு… மறுபுறம் இன்றைய காலத்தில் அது முற்றிலும் நீர்த்து, அப்படி ஒன்றின் இருப்பே மறைந்து, தமிழிசை பற்றி தெரிந்து கொள்ளவே மேற்கிசையின் துணை கொண்டுதான் முடியும் என்ற யதார்த்த சோகம்.
இந்த பின்னணியில், தமிழிசை பற்றிய ஆய்வுகள், முன்னெடுப்பு வரலாறுகள் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்ட பின்னரே, அதில் இருந்த இசைச்செய்திகளைக் கொண்டு தமிழிசை ஆய்வுகள் தொடங்குகின்றன. அதாவது இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலகட்டங்கள். இதனை சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த உ.வே.சா துவங்கிச் செய்தாலும், தமிழிசையை அதன் தொனிமுறையை, இசை ஆராய்ச்சியாக அணுகி அதனை முன்னுக்கு எடுத்துவந்தது ஆபிரகாம பண்டிதரே. அவர் துவங்கி தமிழிசை குறித்து அற்புதமான புத்தகங்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. போலவே பல்வேறு முன்னெடுப்புகளில் தமிழிசையின் மீட்டுருவாக்கமும் நிகழ்ந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் தோன்றிய இந்த தமிழிசை இயக்கம் ஒரு நூற்றாண்டாக தமிழில் கனவுகண்டு நிகழந்த அற்புதமான முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை.
இப்போது நாம் சிக்கலுக்குள் செல்வோம்…
தமிழிசை வரலாறு கிடைப்பதற்கு முன்னர், கர்னாடக இசையின் வரலாறு ஒருவாறு இங்கே இருக்கிறது. அவ்வரலாறு இந்திய இசையின் வரலாற்றின் தொடர்ச்சியாக, வேதத்தில் தோன்றிய இசையாக, தெய்வீக இசையாக, பக்தியே மையமான இசையாக, முக்கியமாக பழம்பெருமையான இசையாக நிறுவப்பட்டிருக்கிறது. அதற்கு வேதங்கள், நாட்டிய சாஸ்திரம், பிற்கால சமஸ்கிருத நூல்கள் என ஒரு தொடர்ச்சி கிடைக்கிறது. இந்நிலையில் வேதத்தில் பிறந்த இசைக்கு திருப்பமாக தமிழில் ஒரு இசைமுறை கிடைக்கிறது. இந்தப் புதிய வரவை இருதுருவங்களும் எவ்வாறு எதிர்கொண்டன என்பது காண சுவாரசியமானது.
இதனை இந்திய பண்பாடுகளுள் ஒன்றாகக் கண்ட பார்வைகளில் இருந்து, தமிழிசை என்று தனியாக ஒன்றெல்லாம் சொல்ல முடியாது, கிடையாது என்று பதட்டத்தோடு, சிலவேளைகளில் முறுவலையும் அல்லது கடும் எரிச்சலையும் (வெங்கட்சாமிநாதன் போன்ற) வரவழைக்கும் போக்குகள் ஒருபுறம். இது எதிர்பார்த்ததுதான்.
ஆனால் தமிழிசையாளர்கள் இதனை எதிர்கொண்டது நாம் கூர்ந்து பார்க்க வேண்டியது. தமிழிசையின் தனித்துவத்தை நிறுவும் அதே வேளையில் அவர்களது சிந்தனைப் போக்கு பெருமளவில் சமஸ்கிருத இசையினால் பாதிக்கப்படுபவதை நாம் காணலாம். ஒரு எதிர் அரசியலாக இதன் தேவையும் இருந்தது என்றாலும் இதன் பலன் சென்ற நூற்றாண்டின் தமிழிசை முயற்சிகளில் பலவடிவங்களில் தெரிபவை. சமஸ்கிருத இசை குறித்த கதையாடல்கள் போலவே தமிழிசையே உலகின் முதல் இசை என்ற தொனியிலும், அல்லது அதன் பழம்பெருமையிலும், அந்த பழமையின் மீட்பிலும் இப்போக்கு பெருமளவில் சிக்கிக்கொள்வதை நாம் காணலாம்.
இச்சிக்கல் குறித்து சிலகாலமாக சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் திரு. தருமராஜின் இச்சிறிய கட்டுரை வெளிவந்தது.
http://tdharumaraj.blogspot.com/2016/04/blog-post_16.html
இக்கட்டுரை ‘தாய்மொழி எனும் ஏமாற்றுவேலை’ பற்றி பேசுகிறது. அதில் அவர் ஒரு மொழியின் உயிர் பற்றி பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“தமிழ் பேசும் மொழியாக மட்டுமே இருக்கிறது; ஆனால், நமது சிந்தனை மொழியாக சமஸ்கிருதமே இருக்கிறது என்பதற்கு வகை தொகையில்லாமல் உதாரணங்கள் உண்டு”
இவ்வரி, மேலே கண்ட தமிழிசையின் சிக்கலுக்கு எவ்வளவு பொருத்தமாகிறது. ஆம், நாம் தமிழிசை குறித்து பேசுவதாகச் சொன்னாலும் நமது சிந்தனை முறை சமஸ்கிருத இசைமுறையின் பாதிப்பில் இருக்கிறது. இதுவே பல்வேறு குழப்பங்களுக்கு வித்திடுகிறது.
சமஸ்கிருத இசை போன்றே இசையின் மேன்மை என்பது அதன் பழம்பெருமையில் இருப்பதான கற்பனையில் தமிழிசை முன்னெடுப்புகள் சிக்கிக் கொள்கிறது. இச்சிக்கல் தமிழிசையினை மீட்பதான முயற்சிகளில் தெளிவாக வெளிப்படுகிறது. இம்முயற்சிகள் திரும்ப திரும்ப ஓரே மாதிரியான முன்னெடுப்புகளில் சுற்றுகின்றன. ஏற்கனவே இன்றைய கர்னாடக இசை, 19ம் நூற்றாண்டில் உறைந்து போகும் நிலையில் இருந்தால், தமிழிசை விழாக்கள் மற்றும் கச்சேரிகள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டு தேவாரங்களைப் பாடுவதாகவும், அல்லது பழைய தமிழ்க்கீர்த்தனைகளைப் பாடுவதாகவும், அல்லது வழக்கமான நாதசுவரக் கச்சேரிகளாகவும் இருக்கின்றன. இவற்றிற்கு இடம் இல்லாமல் இல்லை. ஆனால் இவை மட்டுமே தமிழிசை மீட்பாகாது.
மீண்டும், தருமராஜ் இக்கட்டுரையில் குறிப்பிடும் நிலைதான் தமிழிசைக்கு நேர்வது
“ஒரு பழங்குடியினம் மகுடம் என்ற இசைக்கருவியை வாசிக்கும் பண்பாடு கொண்டது என்று மானிடவியலாளர்கள் கண்டு பிடித்து விட்டால், அந்தப் பழங்குடியைச் சார்ந்த ஒருவர், காலாகாலமும் மகுடத்தை வாசித்துக் காட்டியே தனது பழங்குடித்தன்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை மானிடவியலே ஏற்படுத்துகிறது”
இது போலத்தான் தமிழிசை என்றாலே தேவாரம் பாடுதல் என்று நினைத்துக் கொள்வது, அல்லது தமிழிசைப் பண்களின் பட்டியலை வழங்குவது, அல்லது அப்பண்களை இன்றைய ராகங்களோடு பொருத்தம் பார்த்து வழங்குவது என இப்போக்கு பல கோளாறுகளுக்கு வித்தாகிறது. சமஸ்கிருத இசைக்கு மாற்றாக ஒன்றைச் சொல்வதாக நினைத்து, அதன் மையச்சிக்கலான பழமைவாதத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறது.
இக்குழப்பத்தின் முக்கிய காரணம் எது தமிழிசை என்ற கேள்வியில் இருக்கிறது. இது எப்போதுக்குமான கேள்விதான். எது செவ்விசை, எது கர்னாடக இசை எனும் கேள்வியைப் போன்றதே இதுவும்.
எது செவ்விசை என்ற கேள்விக்கு, நம் மனதில் தோன்றும் பதில்களை நினைத்துப் பார்த்தால் அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பாணி, இடம், வெளித்தோற்றம் இவற்றை சுற்றியே அமைந்திருக்கும். ஒருமுறை கர்னாடக இசை பயிலச் சென்ற போது ஒருவர் வேஷ்டி அணிந்து வரச்சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. மாறாக செவ்விசை என்பது வேஷ்டியோ, சூட் அணிந்த வயலின்ஸ்டோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இசை பாணியோ, கலைஞர்களோ, அவர்களின் உடல்மொழிகளோ, ரசனைமுறைகளோ, சபைகளோ அல்ல.
மீண்டும் தருமராஜின் கட்டுரையிலிருந்து
இதனை நேரடியாக நாம் செவ்விசைக்கு அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்…ஒரு பிரதேசத்தின் செவ்விசை என்பது அப்பிரதேசத்தின் இசையறிவின் தொகுப்பே ஆகும். தமிழிசை என்றால் அது தமிழில், தமிழ்ச்சூழலில் வழங்கும் இசையறிவின் தொகுப்பே ஆகும்.
ஒலி பற்றி, அதனைக் கலையனுபவமாக வழங்குவது பற்றிய அறிவும் சிந்தனையும் தான் ஒரு செவ்விசை இயக்கத்தின் அடிப்படையாக இருக்க முடியும். மற்றவை அதன் வெளிப்பாடுகள் தான். மேலும் ஒலியை செவியனுபவமாக வழங்குவது பற்றிய இன்றைய அறிவும், சிந்தனையும் நிரந்தரமானது அல்ல. அதுவும் கால மாற்றங்களை சந்திப்பது. ஆனால் சிந்தித்தல் மாறாதது. அது நாட்டுப்புற இசையாகவோ, கர்னாடக இசையாகவோ, திரையிசையாகவோ, மேற்கிசையாகவோ வேறு எந்த இசைவடிவாகவோ இருக்கலாம். இதனை உணர்வதும், இங்கே இசைகுறித்து சிந்திப்பதும், அதனைத் தொகுப்பதும், அச்சிந்தனைகளின் பயனாக இசை நிகழ்வதுமே தமிழிசை முன்னெடுப்பாக இருக்க முடியும்.
தருமராஜ் மொழியைக் காப்பது குறித்து சொல்வது பொருத்தமானதாகிறது.
“அந்த வகையில், அழிந்து கொண்டிருக்கும் பழங்குடி மொழிகளை மட்டுமல்ல, உயிரோடு இருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கிற செல்வாக்கான மொழிகளையும், சிந்திக்கும் மொழிகளாக பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது.”
அவரது கட்டுரை தாய்மொழி பற்றியதான கட்டுரையாக இருந்தாலும், அதன் ஆதாரமான சிக்கலைப் பற்றிப் பேசுவதால், இதற்கிணையான மற்றொரு களத்தின் ஆணிவேருக்குள் செல்கிறது. அவரது பலகட்டுரைகளில் இப்படி ஏதாவது நடந்து விடுகிறது. இதன்மூலம் தமிழில் வெகுஅரிதாகக் கிடைக்கும் சிந்திப்பதற்கான கட்டமைப்புகளை (Frameworks) இவருடைய எழுத்து வழங்கிவிடுகிறது.
தமிழில் சிந்திப்பதற்கு ஏதுவாக, தமிழின் இலக்கியவாதிகள் பல பயங்கரமான பொதுமைப்படுத்தல்களை வழங்கியுள்ளார்கள். அதில் ஒன்று கல்விப்புலத்திலிருந்து வருபவர்கள் வறட்டு சிந்தனையாளர்கள் என்பது. கொஞ்சம் சிக்கலாகத் தெரிந்தால் அவர்கள் எழுத்தில் மொழி இல்லை, கலை நயம் இல்லை என்பது. (பகுத்தறிவு கலைக்கு உதவாது, இசை தெரிந்தவர்களுக்கு இசையே தெரியாது(!) என்பது போல வகைவகையாக இவர்கள் வழங்கியுள்ள முடிவுகளுக்கெல்லாம் அளவேயில்லை).
நேர்மாறாக கல்விப்புலத்திலிருந்து வரும் தருமராஜின் பேசுபொருள் மட்டுமல்லாது அவரது பேசுமுறையும் கூர்மையானது. அதன் காரணமும் அவர் பேசுபொருளிலிருந்து அதற்கான தேவையிலிருந்து பிறப்பதுதான் என்றே தோன்றுகிறது.
அவருடைய கட்டுரைகள் எப்பொழுதுமே எழுதப்படுவதை மீறிச் செயல்படுபவையாக, ஒரு polyphonic தன்மையைக் கொண்டவையாக விளங்குகின்றன. மேற்சொன்ன தமிழிசைக்கான பொருத்தம் ஒரு உதாரணம் என்றாலும் அவரே கட்டுரைகளில் வேறொரு கண்ணியை இணைகோடாக நகர்த்தியே செல்கிறார். அவருடைய ‘திராவிட காலத்தில் பிராமணர்களுக்கு சாபவிமோசனம் உண்டா‘ என்ற கட்டுரை ஒரு அருமையான உதாரணம். அவருடைய கருத்தொருமையினாலும் (consistency) , இருவேறு கட்டுரைகளில் தானாக இந்த இணைகோட்டுப் பதிவு நிகழ்வதும் நடக்கிறது.
மேலும் அவர் தனது எழுத்தில் காலத்தை பயன்படுத்துவது அலாதியானது. சரளமாக அவரால் கால நேர்க்கோடுகளை கலைத்துப் போட்டு மீளமுடிகிறது. மீண்டும் இது அவரது சிந்தனைமுறையினால் நிகழ்வதைக் குறிப்பிட வேண்டும். சங்ககாலத்திலிந்து நிகழும்காலம்வரை தமிழகத்தை அவரால் ஒரு காலத்தொடர்ச்சியில் காணமுடிவதாகத் தோன்றுகிறது. அது வெறுமனே இப்போது போலத்தான் முன்பொரு காலத்திலும் என்பது போல அல்ல. அதனால்தான் அவரால் 96 படத்தின் தோழர்குழுவைக் கொண்டு, சங்ககாலம் தொட்டு தமிழில் காதல் மொழி குழு மொழியாக இயங்குவதைச் சொல்ல முடிகிறது, கைசிக நாடகத்தில் தமிழின் சாதிய அரசியலை, அயோத்திதாசரின் பௌத்ததோடு இளையராஜாவின் இசையை, அயோத்திதாசரின் கனவோடு ஆபிரகாம பண்டிதரை… இதனை அவர் மொழியிலேயே சொல்வதானால் அவரால் தமிழ்ச்சமூகத்தை ‘ஆநின்று’ பார்க்க முடிகிறது.
ஆனால் இதனைத் தாண்டி ஆச்சர்யமளிக்கும் ஒன்று, அவரால் சில பதங்களை நமக்கு மறக்க முடியாததாக்கிவிட முடிவதைதான். போலச் செய்தலும் திரும்பச் செய்தலும், ராஜதந்திரியைக் கொல்வது எப்படி, காதுள்ள எல்லாருக்கும்… இவ்வாறு அவரது பலகட்டுரைகளின் சொற்சேர்க்கைகள், தலைப்புகள் நமக்கே தெரியாமல் மந்திரங்களாக ஒட்டிக்கொள்கின்றன. (ஒருவேளை மாணவர்களை பரீட்சைக்கு தயாரிக்கும் உத்தியிலிருந்து வந்ததா என்பது ஆசிரியருக்கே வெளிச்சம்). அதன் காரணமும் இவை வெற்று சொற்சேர்க்கைகளாக அல்லாமல் ஒரு கருத்துத்திரட்சியின் அடையாளமாக மாறிவிடுவதால்தான்.
இது போன்ற வெளிப்பாட்டு முறைகளும், கட்டுரைகளுக்குத் தோதான வடிவத் தேர்வுகளும், ஒரு அருமையான ஒலிநயத்தில் அமையும் அவரது வாக்கியங்களும் அவரது கட்டுரைகளை மீள்வாசிக்கத் தூண்டுபவை.
சமூகம், அரசியல், தலித்தியம், மொழி, இலக்கியம், கலை என பலதளங்களில் தருமராஜின் எழுத்துக்கள் பேசுபொருளிலும், முறையிலும் தமிழில் சிந்திப்பதற்கான நம்பிக்கையையும், ஆசுவாசத்தையும், முக்கியமாக நிறைய கற்றுகொள்ளவும் அளிப்பவை. அதற்கு அவருக்கு நன்றிகள் பல.
அவரைத் தொடர்ந்து படித்ததில், அயோத்திதாசர் பற்றிய அவருடைய புதிய புத்தகம், அவரது நீண்ட கால ஆய்விலிருந்து வருவதாகத் தோன்றுகிறது. புதிய புத்தகத்தின் வெளியீட்டிற்கு அவருக்கு வாழுத்துக்கள்.
-
காம்கேர் கே. புவனேஸ்வரி
- #Mayiladuthurai : திருவாரூர் வாசன் கஃபே இப்போது மயிலாடுதுறையிலும்! (மார்ச் 9, 2025)
#Mayiladuthurai : திருவாரூர் வாசன் கஃபே இப்போது மயிலாடுதுறையிலும்! (மார்ச் 9, 2025)
#Ai : இடது கையால் எழுதும் மனிதரின் படத்தை வரையச் சொன்ன மோடிஜியின் Ai உரை!
ஒன்று புரொஃபஷனலா இருங்கள் அல்லது பர்சனலாக பேசுங்கள்!
சாப்பாட்டுக்கு உப்பு மட்டுமல்ல சூடும் அவசியம்!
நினைவுகள் கரைந்திடும் மாயம்
மரத்தில் பூத்த கதிர் மலர்
காமபாணம் கொண்டது
நிலத்தில் பூத்த கவி மலர்
காதல்நாணம் கொண்டது
குளத்தில் பூத்த பதுமமோ
இதழ்விரியச் சிரித்தது மின்
தளத்தில் பூத்த பதிவிலோ
தமிழும் பொழியச் சிவந்தது
இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
விழித்ததும் மறைந்து போகும்
உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
முதிர்வினில் மறந்து போகும்
பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
பிணியினில் மறத்து போகும்
பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
இறப்பில் எரிந்து போகும்
பயணம் முடிந்த தருண மெல்லாம்
சீட்டை கிழித்திடும் நாளும்
அயனம் மாறிடும் உதய மெல்லாம்
ஏட்டைப் புரட்டிடும் மேலும்
சயனம் நிரந்தர மாகிடுமேனி
சடலம் என்றவர் காணும்
நயனம் பெருகிடும் நீராற்றில்
நினைவுகள் கரைந்திடும் மாயம்
எம்.ஜி.ஆர். – நிஜத்திலும் மன்னாதி மன்னன்
சேஷாத்ரி பாஸ்கர்
(எம்ஜியாரின் நூற்று எட்டாம் வருடப் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)
பிம்பங்கள் இயல்பிலே உருவாவது மிக அபூர்வம். எனக்கு தெரிந்து அது மகாத்மாவுக்கும், கர்ம வீரருக்கும் நிகழ்ந்தது. பிம்பங்களை உருவாக்குவதில் பெரிதும் முயன்று அதில் பெரும் வெற்றி கண்டவர் எனக்கு தெரிந்து இந்தியாவில் ஒருவர் தான். அது எம் ஜி ராமச்சந்தர் தான். முதன் முதலில் நடிக்க வந்த போது அவருக்கு பொருளாதாரம் மட்டுமே பிரச்சனை. புகழ் அடைய வேண்டும், பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சிறிது கூட இல்லை. ஆனால் வாழ்க்கைப் போராட்டம் அவரை வெறி கொள்ளச் செய்தது. ஒரு உத்வேகம் வந்தது, அவர் நிராகரிக்கப்பட்ட போது தான். இந்த ஒதுக்குதல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. கிடைத்த துணைப் பாத்திரங்களில் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை.
ஒரே ஒரு காட்சியில் நடித்தால் என்ன பெயர் சம்பாதிக்க முடியும்? அவருக்கு முக்கியமாகப் பின்னாளில் கை கொடுத்தது அவரின் கட்டுடலும் அழகிய முகமும் தான் .போராட்டம் தொடர ஒரு கட்டத்தில் மெதுவாகச் சோபிக்க ஆரம்பித்தார். அவர் கண்டியைச் சேர்ந்தவர் தான். ஆயினும் அவருடைய தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பு. கணேசன், ராஜேந்திரன் அளவுக்கு ஈடு செய்யக் கூடியவர். நாடோடி மன்னன் வசனம் ஒன்றே சாட்சி.
அவர் மனோகரியிடம் பேசும் கட்டம் இன்றும் ரசிக்கப்படுகிறது. அவரின் திட்டமிடல் இங்கு தான் தொடங்குகிறது. மனோகரியாக நடித்த ராஜம் சொல்வார்.
” நான் மட்டும் இல்லை அண்ணா, இந்த நாடே உங்களைத் தான் நம்பி இருக்கிறது (வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர்). அவருக்குப் புகலிடம், அண்ணாதுரையால் கிடைத்தது. நண்பராய் இருந்த கருணாநிதி அவருக்கு எதிரி ஆனார். காரணம் அவரின் அபரித வளர்ச்சி.
ஒரு பக்கம் கணேசனிடம் திரை உலகப் போட்டி. இன்னொரு பக்கம் அரசியலில் கருணாநிதியிடம் போட்டி. இரண்டையும் ஜெயித்தார். பிம்பம் உருவாகி, பிம்பம் பெரிதானது. அதனைக் காப்பாற்றிக்கொள்ள அவர் மிகவும் பிரயத்தனம் செய்தார். இது அசாதாரணம். எல்லோரும் நினைப்பது போல அவருக்கு அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. அவர் பெரியாய் இடத்திற்கு வருவதற்குப் போட்ட கணக்கு தான் எழுபத்து இரண்டாம் ஆண்டு வெடித்தது. அது இயல்பில்லை. அதன் பின்னால் பெரிய திட்டம் இருந்தது. எம் ஜி யார் நினைத்தபடி அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அவர் எதிர்பார்த்ததும் அதனைத் தான். அதிமுக தோன்றியது. அந்தப் பெரும்புயலில் திமுக சாய்ந்தது. அந்த அலை, தமிழகத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆண்டது.
இதற்கு முன் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் நடிக்க இருந்தார . அண்ணாதுரையின் தொண்ணூறு பக்க வசனத்தை அவரால் குறுகிய காலத்தில் மனனம் செய்ய முடியவில்லை. பேரறிஞரின் தமிழ் அப்படி. நாடகத்தை விட்டு அவர் விலக, அந்த இடத்தில் அமர்ந்தவர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். பின்னாளில் அவர் தான் நடிகர் திலகம். பட்டம் கொடுத்தவர் பெரியார். எம்ஜியார் நடித்து இருந்தால் அவர் நடிகர் திலகமாக மாறியிருப்பார். காலம் போடும் கோலம் என்பார்களே, அது இது தான் போலும்.
எம்ஜியாரைப் போல பிம்பம் உருவாக்கியவர்கள் வேறு எங்கும் இல்லை. அவரின் வறுமை, போராட்டம், தந்தையற்ற சூழல் எனப் பல காரணிகள் இருந்தாலும் அவரின் வெற்றிக்குக் காரணம், அவருடைய நல்ல குணவான் தன்மை. அவரிடம் குறைகள் இருக்கலாம். அது கடந்து போகக் கூடியவை. ஒரு சின்ன இல்லத்தில் எல்லோரின் அன்புக்குப் பாத்திரமாவதே பெரிய கஷ்டம் எனும் போது கோடிக்கணக்கான மக்கள் அவரைக் கொண்டாடுவது என்பது என்பது என்ன லேசுப்பட்ட காரியமா? எம்ஜியார் அதனை லாகவமாகச் செய்தார்.
அவரின் ஈகைக் குணம், வசீகர முகம், நல்ல விஷயங்களைக் கொண்டாடும் மக்கள் எனத் தமிழ்நாடு இருந்ததனால் தான் அது சாத்தியம் ஆயிற்று. அவர் நிஜத்திலும் மன்னாதி மன்னன் தான். அவர் ஒரு சரித்திரம் என்ற விளிப்பு, எம் ஜி யார் முன்பு ஒரு சாதாரண பிரயோகம். அவரே அவரை ஜெயித்துவிட்டார். நல்ல உள்ளங்களைக் கொண்டாடுவதில் தமிழ் மக்களுக்கு ஈடு இணை இல்லை. அவர் உதாரண புருஷர்.
ஜி.டி.நாயுடு பற்றி அறிஞர் அண்ணா பேச்சு
1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஜி.டி.நாயுடு 75ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
குரு நித்யா எனக்கு யார்?
குரு நித்யா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். இது அவர் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். அவருடைய பின்புலம், அவருடைய ஆளுமைத்திறன், அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆகியவற்றைப் பற்றிய காணொளி. சற்று உணர்ச்சிபூர்வமானது.
மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025
மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் இந்தியாவின் மிகச்சிறந்த முன்னுதராண களச்செயல்கள் எனலாம். மக்களையும் மருத்துவர்களையும் ஒன்றிணைத்து அவர் உருவாக்கிய கூட்டுறவு மருத்துவமனைகள் தேசிய அளவிலான முன்மாதிரி. மருத்துவம், சூழலியல், வரலாறு, சமூக அரசியல், கல்வி, இலக்கியம் என பரந்துபட்ட களத்தில் மருத்துவர் ஜீவா செயலாற்றினார். காந்தியம் மற்றும் பொதுவுடைமைக் கருத்துகளின் ஒத்திசைவுச் சித்தாந்தமென தன் வாழ்வை வாழ்ந்துகாட்டியவர். போதை மீட்பு மருத்துவமனை மூலமாக பலநூறுக் குடும்பங்களைச் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிய பெருமனிதர் ஈரோடு வெ. ஜீவானந்தம்.
ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, மருத்துவர் ஜீவா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அவர் விட்டுச்சென்ற செயற்கனவுகளை சிறுகச்சிறுக நிறைவேற்றுவதே இம்முயற்சியின் நோக்கம். அதன் நீட்சியாக, தங்கள் பங்களிப்பால் சமூகத்திற்குத் தொண்டாற்றும் ஆளுமைகளுக்கு வருடந்தோறும் ‘பசுமை விருதுகள்’ அளிக்கப்படுகின்றன. வருடந்தோறும் ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் இவ்விருதளிப்பும் நிகழ்கிறது.
இதுவரையில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் சமஸ், இளம் சூழலியலாளர் விஷ்ணுப்ரியா, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞரான அய்யா அ.கா.பெருமாள் அவர்களுக்கும், திருநங்கைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்வுநலனுக்காகச் செயலாற்றும் தோழமை சுதா அவர்களுக்கும் சுற்றுச்சூழல் களசெயல்பாட்டாளர் தியடோர் பாஸ்கரன் கிணறு புனரமைப்புப் பணியாளர் மதுமஞ்சரி ஆகியோருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் நீட்சியாக இந்த ஆண்டு இரு ஆளுமைகளுக்கு மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025 பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.
பேரா.முனைவர்.க.பழனித்துரை
பல்கலைக்கழக சுவர்களைக் கடந்து சமூகம் சார்ந்து சமூகத்துடன் செயல்படும் களச் செயல்பாட்டாளர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று பணியாற்றி காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு வந்து காந்திய நிறுவனங்களுடன் இணைந்து 34 ஆண்டு காலம் பணி செய்து இன்றும் களத்தில் நிற்பவர்.
இவரின் ஒருங்கிணைந்த பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பொறுப்புகளிலும் தடம் பதித்தவர்.தற்போது பணி ஓய்வுக்கு பிறகு பாண்டிசேரியில் ஆரோவில் லின் அரவிந்தர் சமூகம் நடத்திவரும் ஊரக வளர்ச்சி செயல்பாட்டகத்திற்கு கௌரவ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
தேஜாஶ்ரீ இங்வாலே ~
1988 ஆம் வருடம் பிறந்த இவர் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டவர். சிறு வயது முதலே கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டவரான தேஜாஶ்ரீ ஐந்தாண்டு கல்லூரி படிப்பாக ஓவியத்தை தேர்வு செய்து படித்து முடித்தார்.
இந்தியா முழுவதும் இருக்கிற மிக முக்கியமான இசை சார்ந்த ஆசிரியர்களை சென்று சந்தித்து அந்தந்த பிராந்திய இசைக்கான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறார்.
தான் சந்திக்கும் பழங்குடி மக்களின் தனித்த இசையையும், அவர்களின் இசைக் கருவிகளையும் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வருகிறார்.
இதன் வாயிலாக அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய பாடல்களையும், இசைக் கருவிகளையும் மீளுருவாக்கம் செய்யும் பணியை தொடங்க இருக்கிறார்.
சொற்களையும், தத்துவங்களையும் தாண்டி தொடர்ச்சியாக களத்தில் நின்று சமூகம் சார்ந்தும், கலை சார்ந்தும் தீவிரமாக இயங்கி வரும் மூத்த மனமும், இளைய மனமுமான க.பழனிதுரை ஐயா மற்றும் தேஜாஶ்ரீ இங்வாலே இருவரும் இவ்விருதைப் பகிர்வதென்பது மகிழ்ச்சியாகவும் , நம்பிக்கையாகவும் இருக்கிறது.
மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மா, டாக்டர் எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம் IAS அவர்கள் , அக்னி தங்கவேலு ஐயா ஆகியோரின் முன்னிருப்பில் வருகிற மார்ச் 2ம் தேதி காந்திகிராம பல்கலைக்கழக வளாக ஊழியரகத்தில் காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கிறது. விருதுத்தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாயும் விருது சான்றிதழும் விருதாளர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
எளிய மக்களின் வாழ்வுமீள்கைக்கான எத்தனையோ செயலசைவுகளின் முதற்துவக்கமாக அமைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் இறையிருப்பை வணங்கி மனதிலேந்துவோம். அவரது வாழ்நாள் கடந்து நம்மிடம் எஞ்சிய செயற்கனவுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். தோழமைகள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அன்புகூர்ந்து அழைக்கிறோம்.
நன்றியுடன்,
மருத்துவர் ஜீவா அறக்கட்டளை
பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும்

அன்புள்ள ஜெ,
தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றாலும் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் நல்லுபதேசம் செய்கிறார்கள். குடிக்காதே என்கிறார்கள். அடிமை முறையை எதிர், பெண்களை ஒழுங்காக நடத்து, குழந்தைகளை அடிக்காதே என்றெல்லாம் கூறுகிறார்கள். அக்காத்தனமாகவும் அம்மாத்தனமாகவும் மாறி மாறி கொஞ்சியும் அதட்டியும் பேசுகிறார்கள்.

இவர்களில் சிலர் மரபுவாதிகள். சிலர் இலட்சியவாதிகள். பலர் நடைமுறைவாதிகள். மரபுவாதிகளாவது ஒரு மதிப்பீட்டின் பின்புலத்திலிருந்து பேசுகிறார்கள். நடைமுறைவாதிகள் சொல்வதெல்லாம் நடைமுறை சார்ந்து மட்டுமே. அத்தகைய அறிவுரைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர் அவ்வாறு அறிவுறுத்தத் தகுதி உள்ளவரா?
ஆனால் அத்தகைய அறிவுரை எழுத்துக்கு ஒரு இலட்சியத்தன்மை உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. “இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது,” என்று சிவசங்கரியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
என் கேள்வி, ஒரு சூழலில் ஒரு வகையான எழுத்தாளராவது இப்படி ஓர் ஒழுக்கக்காப்பாளராக (moralist), அறிவுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது தேவை இருக்கிறதா? சூழலுக்கு இவர்களது பங்களிப்பு என்ன?
அன்புடன்,
சுசித்ரா

அன்புள்ள சுசித்ரா,
இந்தக்கோணத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் சொன்னபிறகு இது ஒரு சுவாரசியமான பார்வை என நினைக்கிறேன்.
இந்த விவாதத்தில் நாம் செய்யக்கூடுவது பொதுமைப்படுத்தலை விட தனித்தனியாக நூலாசிரியர்களைக் கருத்தில்கொண்டு அவர்களின் எழுத்தையும், தனியாளுமைகளையும் பரிசீலனை செய்வதுதான். ஏனென்றால் எழுத்தாளர்கள், அதாவது பொருட்படுத்தத் தக்க எழுத்தாளர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைப்பட்டவர்கள். அவர்களின் இயல்புகள் நாட்டுக்கும், பண்பாட்டுக்கும் ஏற்ப பெரிய மாறுதல்களையும் கொண்டுள்ளன.
எனக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையை எடுத்துக் கொள்கிறேன். கவிஞர் மலையாளக் கவிஞர் பாலாமணி அம்மா கடுமையான ஒழுக்கவாதத்தை முன்வைத்தவர், அதை வலியுறுத்தும் கவிதைகளையும் எழுதியவர். குறிப்பாக பெண்களின் பாலியல் விழைவு அல்லது வெளிப்பாட்டை அவர் தீவிரமாக எதிர்த்தார்.பெண்கள் பாலியல் கவற்சி அற்ற தோற்றத்துடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார். அவர் மகள் மாதவிக்குட்டி என்னும் கமலாதாஸ் பெண்களின் பாலியல் விடுதலையை முதன்மைப்படுத்தி எழுதிய படைப்பாளி.

ஆனால் பாலாமணி அம்மா காந்தியவாதி. சமூகசீர்திருத்தவாதி. களமிறங்கிப் போராடியவர். பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டும், சிறைசெல்லவேண்டும் என வாதிட்டவர். இடதுசாரி இயக்கங்களில் பெண்கள் ஈடுபட்டு சிறைசெல்வதைக்கூட ஆதரித்தவர். மாறாக கமலாதாஸ் முழுமையாகவே அரசியலற்றவர். சொல்லப்போனால் சமூகநோக்கங்களோ, பொதுப்பார்வையோ அற்ற தூய சுயமைய நோக்கு வெளிப்படும் அகவுலகை உருவாக்கியவர்.
கமலா தாஸின் சமகாலத்தவரான சுகதகுமாரி பாலுணர்வு வெளிப்பாடற்ற நோக்கு கொண்டவர், ஒழுக்கமதிப்பீடுகளின் பிரச்சாரகர் என்றும் சொல்லலாம். ஆனால் அவர் ஒரு மாபெரும் சூழியல் போராளி. பெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுக்க களம் நின்று போராடியவர், அதற்கான அமைப்புகளை உருவாக்கியவர்.
தமிழிலும் வை.மு.கோதைநாயகி அம்மாள், குமுதினி , கிருபா சத்தியநாதன், மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார் போன்ற தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் கடும் ஒழுக்கவாதிகளாகத் திகழ்ந்தவர்கள் கூடவே சமூகப்பணி, அரசியல்போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்தவிழைந்தவர்களாகவும், தாங்களும் ஈடுபட்டவர்களாகவும் இருப்பதைக் காணலாம். அவர்களின் எழுத்துக்களிலேயே உபதேச அம்சம் மிகுதி.

இந்த பொருள் விரிவாக விவாதிக்கவேண்டிய ஒன்று. இந்தியச் சூழலில் பெண்கள் பொதுவெளிக்கு வந்து பேசவும் எழுதவும் முற்பட்டது 1900 ங்களின் தொடக்கத்தில்தான். ஆனால் அந்தத் தலைமுறைப் பெண்கள்தான் அரசியல் சமூகக் களங்களில் நேரடியாக ஈடுபட்டுப் பணியாற்றியவர்கள். அடிப்படையில் அவர்கள் இலட்சியவாதிகள். பெண்களில் அடுத்தடுத்த தலைமுறையினரின் இலட்சியவாத நோக்கம் குறைவுபடுவதையும் ,அவர்கள் நேரடியான களச்செயல்பாடுகளில் ஈடுபடுவது இல்லாமலாவதையும், அவர்கள் தங்களையே மையமாக்கி யோசிப்பதையும் காண்கிறோம்.
அப்படியென்றால் அந்த தொடக்ககால ஒழுக்க அக்கறையின் பின்னணி என்ன? பெண்கள் இல்லங்களுக்குள் இருந்து வெளிவந்து சமூகவெளியில் செயல்படத் தொடங்கிய அக்காலகட்டத்தில் மெய்யாகவே இது பெரும் பிரச்சினையாக இருந்திருக்கவேண்டும். அப்பெண்கள் மேல் ஒழுக்கம் சார்ந்த தாக்குதல்களை அக்காலத்துக் கட்டுப்பெட்டிகள் நடத்தியிருக்கலாம். ஆகவே தாங்களும், தங்களைப்போல வீட்டைவிட்டு வெளிவந்து செயல்படும் பெண்கள் அனைவருமே, கடுமையான ஒழுக்கவாதிகள் என்பதை நிறுவவேண்டிய தேவை அப்பெண் முன்னோடிகளுக்கு இருந்திருக்கலாம்.

கூடவே, நடைமுறையில் கல்வி,தொழில், சமூகப்பணி, அரசியல் என பெண்களுக்கு உருவாகிவந்த அந்த தொடக்ககால பொதுவெளியை பாலியல் சுரண்டலுக்காகப் பயன்படுத்தும் ஆண்களும் அன்று இருந்திருக்கலாம் . அதற்கு அடிமைப்பட்ட பெண்களும் இருந்திருக்கலாம். இந்தியாவின் பல தொடக்ககால தன்வரலாற்றுப் பதிவுகளில் அந்த சான்றுகள் உள்ளன. ஆகவே பெண்களை நோக்கி தொடர்ச்சியான எச்சரிக்கையை அவர்கள் எழுதவேண்டியிருந்தது.
லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி போன்ற அடுத்தகாலப் பெண் எழுத்தாளர்கள் வேலைக்குச்செல்லும் பெண்கள் எப்படி ஒழுக்கத்தை தங்கள் கவசமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை பல கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மெய்யாகவே வேலைக்குப் போகும் பெண்களுக்கு அது பெரும் அறைகூவலாக இருந்திருக்கிறது. எண்பதுகளில்கூட ஆனந்தவிகடன், குமுதம் ‘ஜோக்கு’களில் கணிசமானவை டைப்பிஸ்ட், நர்ஸ் போன்ற வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதை முன்வைப்பவையாகவே இருந்தன. (இதைப்பற்றி நான் விகடனுக்கு ஒரு கடுமையான கடிதம் எழுதியிருக்கிறேன்)
இன்றும்கூட பொதுவெளிக்கு வரும் பெண் கொஞ்சம் ‘விட்டுக்கொடுப்பவள்’ என்னும் எண்ணம் ஏராளமான முதிர்ச்சியற்ற இந்திய ஆண்களிடம் இருக்கிறது. பெண் அடையவேண்டிய ‘பாலியல் விடுதலை’யை திரும்பத் திரும்ப அந்த ஆண்கள் ஏதோ புரட்சி போல முன்வைக்கிறார்கள், ஆனால் அது அப்பெண்களைப் பாலியல்ரீதியாக சுரண்டுவதற்கான ஒரு முன்முயற்சி மட்டுமே.

இன்னொரு கோணமும் யோசிக்கத் தக்கது. 1900ங்களில் தமிழிலும் மலையாளத்திலும் (பொதுவாக இந்தியாவெங்கும்) எழுதவந்த பெண்கள் பெரும்பாலும் உயர், உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த முதல்தலைமுறையினர். அவர்கள் கல்விபயின்ற கிறிஸ்தவக் கல்விநிறுவனங்களும் சரி, அன்று உருவாகிவந்திருந்த தேசியக் கல்வி இயக்கத்தின் கல்விநிறுவனங்களும் சரி ஒழுக்கநெறிகளை கடுமையாக வலியுறுத்தியவை. அந்தச் செல்வாக்கு இந்தப் பெண் எழுத்தாளர்களிடம் இருந்திருக்கலாம்.
அந்தக் கல்விநிறுவனங்களில் நகர்ப்புற, படித்த பெண்களிடமே பொதுநாகரீகம், ஒழுக்கநெறிகள் ஆகியவை ஓங்கியுள்ளன என்றும், கிராமப்புறப் படிக்காத பெண்கள் பொதுநாகரீகம் அறியாதவர்கள் என்றும், அவர்கள் பலசமயம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் அடிமைகள் என்பதனால் பாலியல் ஒழுக்கத்திற்கான சுதந்திரம் இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு படித்த பெண்கள் இவற்றைக் கற்பிக்கவேண்டும் என்றும், அது கற்றவர்களின் கடமை என்றும் திரும்பத்திரும்ப கற்பிக்கப்பட்டது. அது பெருமளவும் அன்றைய நடைமுறை உண்மையும்கூட.

கிருபா சத்தியநாதன் அசலாம்பிகை போன்றவர்களிடம் இப்பார்வையைக் காணலாம். ஹெப்சிபா ஜேசுதாசன் இதே பார்வையை பிற்காலத்திலும் கொண்டிருந்தார். இதன் உச்சகட்ட வெளிப்பாடு மீனாட்சிசுந்தரத்தம்மாள் . இந்த அம்மையாரின் எழுத்து நேரடியான பிரச்சாரம் மட்டுமே. அது இரண்டு கோணங்கள் கொண்டது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான சீற்றம், பெண்கள் ஒழுக்கமாகவும் சுதந்திரமாகவும் நாகரீகமாகவும் இருக்கவேண்டியதன் தேவை. அதாவது ஆங்கிலம் படித்து, நவநாகரீக உலகுக்குள் சென்றாலொழிய கிராமிய வாழ்வில் அது இயல்வதும் அல்ல என்கிறார். அன்றைய சூழலில் இந்த இரண்டு பட்டைகள் கொண்டதாகவே பெண்விடுதலை இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
பெண்கள் ஈடுபட்ட அன்றைய அரசியலியக்கங்கள் காந்திய இயக்கம், திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம் ஆகிய மூன்றுமே பெண்களின் ஒழுக்கத்தை வலுவாகவே பிரச்சாரம் செய்தவை என்பதை நாம் கருத்தில்கொள்ளவேண்டும். அந்த இயக்கங்களைச் சார்ந்தே இங்கே தொடக்ககாலப் பெண்ணுரிமைநோக்கு உருவானது, அதை முன்வைக்கும் படைப்பாளிகளும் உருவானார்கள்.

இதைத் தவிர உண்மையிலேயே பழமைவாதத் தரப்பைச் சேர்ந்த ஏராளமான படைப்பாளிகளும் இருந்தார்கள். அன்றைய சூழலில் எழுத்துக்கு வந்த படித்த உயர்குடிப்பெண்களில் பலர் ஆசாரமான, பழமைவாத நோக்கு கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக, வி. விசாலாட்சி அம்மாள் ,வி.சரஸ்வதி அம்மாள் போன்றவர்கள் வி. கிருஷ்ணசாமி ஐயரின் குடும்பத்துப் பெண்கள். பழமைவாதியான அவர் தன் பெண்களுக்கு குழந்தைமணம் செய்து வைத்தவர். அத்தகைய பின்னணிகொண்ட பெண்கள் பழமைவாத நோக்கை வலியுறுத்தியதில் வியப்பில்லை.
இப்படிச் சொல்லலாம். ஒரு முன்னோக்கிய நகர்வு உருவாகும்போது மறுபக்கம் அதற்கான எதிர்விசைகளும் செயல்படுகின்றன. ஒன்று, அந்த முன்னகர்வை எச்சரிக்கையுடன் கட்டுப்படுத்தும் விவேகத்தின் விசை. இன்னொன்று, பின்னிழுக்கும் பழமையின் விசை. இரண்டுமே நீங்கள் கேட்ட வகையான எழுத்துக்கான காரணங்கள்.

இதெல்லாம் பெண்களின் எழுத்தை, தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வதற்கான நம் முயற்சியின் ஒரு பகுதி மட்டுமே. நாம் அவர்களின் காலகட்டம், சூழல் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்தமாக அவர்களின் படைப்புகளைப் பார்ப்பதற்கான பயிற்சிகள் இவை. இதை முன்னிட்டு அவர்களைப் பற்றிப் பேசுவது நிறைவளிக்கிறது
ஜெ
- அசலாம்பிகை
- அம்மணி அம்மாள்
- அழகியநாயகி அம்மாள்
- ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்
- ஆர்.சூடாமணி
- ஆர்.பொன்னம்மாள்
- எஸ். விசாலாட்சி
- எஸ். அம்புஜம்மாள்
- கமலா சடகோபன்
- கமலா பத்மநாபன்
- கமலா விருத்தாசலம்
- கிருத்திகா
- கிருபா சத்தியநாதன்
- கி.சரஸ்வதி அம்மாள்
- கி.சாவித்ரி அம்மாள்
- கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
- குகப்பிரியை
- குமுதினி
- கெளரி அம்மாள்
- சகுந்தலா ராஜன்
- சரஸ்வதி ராம்நாத்
- சரோஜா ராமமூர்த்தி
- செய்யிது ஆசியா உம்மா
- செய்யூர் சாரநாயகி அம்மாள்
- ஜெயலட்சுமி ஸ்ரீனிவாசன்
- டி.பி.ராஜலட்சுமி
- நீலாம்பிகை அம்மையார்
- மூவாலூர் ராமாமிர்தத்தம்மையார்
- மீனாட்சிசுந்தரம்மாள்
- வி. விசாலாட்சி அம்மாள்
- வி.சரஸ்வதி அம்மாள்
- விசாலாட்சி அம்மாள்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- ஹெப்சிபா ஜேசுதாசன்