Normal view

Received before yesterday

தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416) தமிழே விழி!                         தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 வைகாசி 25, 2056  ஞாயிறு 08.06.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள் பேரா.மரு.மு.செம்மல், முதன்மை...

The post தமிழ்க் காப்புக் கழகம்: இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம் appeared first on அகர முதல.

மொழியாக்கமும் படைப்பாக்கமும் [உரை]

10 November 2024 at 08:19
[நன்றி: ஜெயமோகன்.இன் தளம்] (21 அக்டோபர் அன்று ஈரோடு நண்பர்கள் சந்திப்பில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம்) நண்பர்களுக்கு வணக்கம். இந்த சந்திப்புக்கு நண்பர் கிருஷ்ணன் அவர்கள் அழைத்தபோது, மொழியாக்கம் தொடர்பாக ஒரு சிறிய நண்பர் உரையாடல் என்ற அளவில் அமையும் என்று சொன்னார். ஆனால் எதிர்பார்த்ததை விட நண்பர்கள் பதிவுசெய்ததால், ஓர் உரையுடன் தொடங்கலாம் … Continue reading

சங்கரரை அறிதல்- கடிதங்கள்

24 February 2025 at 18:31

ஜெ,

சங்கரதரிசனம் கட்டுரைகள் மிகுந்த வாசிப்புத்தன்மை கொண்டவையாக இருந்தன. ஒரே உரையில் வரலாற்றுப்பின்புலம், தத்துவப் பங்களிப்பு எல்லாமே சொல்லப்பட்டு விட்டது. சங்கரர் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிப்பதற்கு இந்த உரை அளவுக்கு முக்கியமான இன்னொரு வழி இன்று இன்று இல்லை. உரை என்பதனால் ஒரே ஓட்டமாக வாசித்துச்செல்ல முடிந்தது. நல்ல உதாரணங்கள், கதைகள் என அழகாகச் சென்றது. இதை கீதையை அறிதல் போல ஒரு நூலாக ஆக்கலாம். பலருக்கும் பயன்படும்.

ஶ்ரீராம் அருண்

அன்புள்ள ஜெ

சங்கரதரிசனம் உரை செறிவாகவும் அழகான ஓட்டத்துடனும் இருந்தது. கீதையை அறிதல் போல மிகுந்த சுவாரசியத்துடன் வாசிக்கத்தக்க நூலாக ஆக்கலாம். நான் முக்கால் மணி நேரத்தில் ஆறு பகுதிகளையும் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுச் சித்திரம் இத்தனை அற்புதமாக உருவாகி வருவதை கண்டு வியப்பு அடைந்தேன். அண்மையில் ஒரு நூல் இத்தனை மன எழுச்சியை உருவாக்கியதில்லை. சங்கரரின் பங்களிப்பு என்ன என்பதை தத்துவம், வரலாறு, அழகியல் என்னும் மூன்று நிலைகளிலும் சொல்லும் உரை. ஆனால் மிக எச்சரிக்கையாக புராணங்களைத் தவிர்த்து, மிகைப்படுத்தல்களை தவிர்த்து, கத்திமுனையில் சென்றிருக்கிறீர்கள். முற்றிலும் பகுத்தறிவுடன் அமைந்த பார்வை. Reason தான் அடிப்படையாக இருந்தது மொத்த உரையிலும். சங்கரர் பற்றிய புராணங்களை மட்டுமே கேட்டு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்த உரை புதிய காற்றுபோல இருந்தது.

சங்கர் கிருஷ்ணசாமி

❌