Normal view

Received before yesterday

ஒரு பழைய நாவல்

ய. மஹாலிங்க சாஸ்திரி எழுதிய நாமொன்று நினைக்க (1950) என்ற நாவல் இணையத்தில் கிடைக்கிறது.

மிஸ்டர் வேதாந்தம் பாணி நாவல். பணக்காரக் குடும்பத்து வாரிசு ராமநாதன். அவன் உயிர் நண்பன் சீதாராமன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். ராமநாதனின் அப்பாதான் அவனையும் படிக்க வைக்கிறார். ராமநாதனின் மாமாவுக்கு இது பிடிக்கவில்லை. தன் மகளை ராமநாதனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். பல ஜோடிகள், கடைசியில் எல்லாருக்கும் திருமணம் ஆகிறது.

இந்த நாவலைப் படிக்கும்போதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி போன்றவர்களின் அருமை புரிகிறது. கட்டுக்கோப்பாக ஒரு தொடர்கதை எழுதுவது கஷ்டம்தான். அதை சாதித்ததால்தான் அன்று இவர்கள் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். சாஸ்திரியும் முயன்றிருக்கிறார்தான், ஆனால் அவர்கள் தரத்தை எட்ட முடியவில்லை.

இந்தப் பதிவை எழுத நாவலின் ஒரு பாராதான் தூண்டுகோல். ராமநாதனின் மாமா சிவராமன் தன் மகள் செல்லத்தை ராமநாதனுக்கு மணம் முடிக்க விழைகிறார். ஆனால் ராமநாதனுக்கு உஷா மீது காதல். உஷா யார்? அதே சிவராமன் மாமாவின் வைப்பாட்டி மகள், தாசிக்கு பிறந்தவள். இது சிவராமனுக்கு தெரிய வரும்போது அவர் ராமநாதனுக்கு அறிவுரை சொல்கிறார் – நீ உஷாவை மணந்து கொள்ள விரும்புகிறாயே, வீட்டில் டிபன் சரியில்லை என்றால் கிளப்புக்கு போகலாம், ஆனால் வீடு என்று ஒன்று இருக்க வேண்டும், எனக்கு முறையாகப் பிறந்த பெண் செல்லத்தையே மணந்துகொள், செல்லம் வேண்டாமென்றால் வேறு “நல்ல குலப்பெண்ணாக” மணந்து கொள் என்கிறார்! விழுமியங்கள் எத்தனை மாறி இருக்கின்றன!

சாஸ்திரி எழுதிய டூவா சேர்த்தியா என்ற எளிய கதை புன்னகை வர வைக்கிறது.  ஒப்பந்தக் கல்யாணம் (1945) என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது.

சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர். தி.ஜா. இவர் போன்ற திறமைசாலி அபூர்வம் என்கிறாராம்.

முப்பது நாற்பதுகளுக்கான வணிக எழுத்து என்று மதிப்பிடுகிறேன். இந்த நாவலே கூட கலைமகளில் நாற்பதுகளில் தொடர்கதையாக வந்ததுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:

மனதில் மலர்ந்த மல்லிகை - 8

அத்தியாயம் 08​


அவர்களது ஊரான மங்களாபுரத்தில் பத்தாவது பரீட்சைக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததில் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அதில் மிகவும் மகிழ்ந்தது மணிவண்ணன் தான். இந்த அனுமதி கிடைத்ததற்கு முழு காரணமும் மணிவண்ணன் தான்.

வெறும் தொடக்கப்பள்ளிகள் மட்டும் உள்ள அக்கம் பக்கம் உள்ள சிறிய ஊருக்கெல்லாம் சென்று, தங்கள் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்படி பார்த்துக் கொண்டான். வெறுமனே சேர்ப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கும் சரியான ஏற்பாடு செய்தான்.
சில...


Read more

20. தேன் மல்லி

20. தேன் மல்லி

வார இறுதியில் தேனியில் அமைந்த ஒரு ரிசார்டில் மித்ரன் தேன்மல்லி வரவேற்பு, நண்பன் கண்ணன் மேற்பார்வையில், சொக்கநாதனின் அலப்பறையோடு வெகு விமர்சையாக நடந்தது. பூவரசன் குடும்பத்தைத் தவிர, அறிந்தவர், தெரிந்தவர், நட்பு, உறவு தொழில்துறை நண்பர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் அழைத்திருந்தனர்.

தேன்மல்லி, அழகுநிலையப் பெண்களின் கைங்கரியத்தில், ப்ரீ ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து, நீல வண்ண லஹங்காவில் பொருத்தமான அணிகலன்களோடு, கோட் சூட்டில் மிடுக்காக நின்ற மித்ரன்...


Read more

சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்

By:Para
5 June 2025 at 05:38

Pa Raghavan

தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.

முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.

முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.

திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!

வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.

அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.

இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.

ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!

சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

கதிரவன் ரத்தினவேல்

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)

குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”

மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.

ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.

செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.

இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?

சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?

இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!

குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.

ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.

பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.

மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!

ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!

இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.

முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.

நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்

இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.

சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.

சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.

அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.

சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி

சூக் சியாங் கூட்டுக்கொலை

1942இன் பி்ப்ரவரி மாதம்.

18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில் ஒரு அறிவிக்கை செய்தது. இந்த அறிவிக்கை, துண்டறிக்கைகளாக ஒட்டப்பட்டும், இராணுவ வீரர்களால் ஒலிபெருக்கி வழியாகவும் அறிவிக்கப்பட்டன. 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீன ஆண்கள் அனைவரும் தீவின் குறிப்பிடப்பட்ட ஐந்து இடங்களில் சோதிக்கப்படுவதற்காக வரவேண்டும் என்று அந்த அறிவிப்பு சொன்னது. சிங்கப்பூர் தீவில் இருந்த ஒரு யப்பானிய இராணுவப் பிரிவுக்கு கெம்பெய்டாய் (Kempeitai) என்ற பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுதான் சிங்கப்பூரில் சோதனைகள், தண்டனைகள் போன்றவற்றை நிறைவேற்றும் பொறுப்பை வைத்திருந்தது. அறிவிப்பின்படி சீன ஆண்கள் வந்து சேரவில்லை என்று தோன்றினால் வீட்டுக்கு வீடு சோதனையிட்டு சீன ஆண்களை முகாம்களுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். இந்த ஆண்கள் அனைவரும் விக்டோரியா பள்ளியின் விளையாட்டுத் திடல்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நான்கு அல்லது ஐந்து பெரிய பாரமேற்று மோட்டார் வாகனங்கள் அங்கு வந்தன. அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள் அனைவரையும் அந்த நான்கைந்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தானா மேரா(Tanah Merah) அருகே இருந்த கடற்கரைக்குக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர்.

தடுக்கப்பட்டு வைத்திருந்த அனைவரின் கைகளைப் பின்புறம் வைத்து, கயிறுகளால் பிணைத்து நீண்ட வரிசையில் அவர்கள் கட்டப்பட்டார்கள். அங்கு கடற்கரை மணலில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கடலைநோக்கி வரிசையாக நிற்குமாறு பணிக்கப்பட்டார்கள். பின்புறம் கைகள் பிணைக்கப்பட்ட, நீண்ட வரிசைகளில் நின்ற அவர்கள் கடலை நோக்கி ஒரே அளவில் நடக்குமாறு சொல்லப்பட்டார்கள். அவர்களது பின்புறம் வந்து நின்ற கெம்பெய்டாய் படை, தானியங்கித் துப்பாக்கிகளால் (machine guns) சட சடவென்று அவர்களைச் சுட்டது. அத்தனை சீன ஆண்களும் சிங்கப்பூர் கடற்கரையில் கொத்துக் கொத்தாக விழுந்தார்கள். அப்படி விழுந்தவர்களில் இறந்தும் இறக்காமல் இருந்தவர்களை, துப்பாக்கிக் கட்டையின் கத்திகளால் குத்திக் கொன்றார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டபின், இயங்கு வாகனங்கள் சென்று விட்டன. கடற்கரையில் கூட்டுக் கொலை செய்யப்பட்ட சீன ஆண்களின் பிணங்கள் காக்கைகளும் வல்லூறுகளும் சிதைக்க, கிடந்து அழுகின. முறையான ஒரு அடக்கம் கூட செய்யப்படவில்லை. யப்பானியர்கள் இந்த சூக் சியாங் நடவடிக்கையால் ஏறத்தாழ 6000 சீன ஆண்களைக் கொன்றதாக பின்னாட்களில் ஒப்புக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இளமையும் வலிமையும் கொண்டிப்பதாகக் கருதப் பட்ட சீன ஆண்கள் வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். [1] மேற்கண்டவாறு யப்பானிய கெம்பெய்டாய் கொடுங்கோண்மைப் படை செய்த கூட்டுக் கொலைகள் பலவற்றை வரலாறு பின்னர் பதிவு செய்திருக்கிறது.

Syonan Years – Mass Clensing

இந்த நடவடிக்கைகளை யப்பானிய இராணுவம் அந்த நாட்களிலும், பின்னாட்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டதாக நியாயப்படுத்தியது. ஆனால் சூக் சியாங் படுகொலை இரண்டு மூன்று நாட்கள் இடைவெளிக்குள் நடந்தது. யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக, மூன்றாண்டுகளில் ஐம்பதாயிரத்திலிருந்து லிருந்து ஒரு இலக்கம் (50,000 – 1,00,000) வரையான சிங்கப்பூரிய சீன ஆண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கணக்கீட்டை தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலில் திரு லீ க்வான் யூ அளிக்கிறார். சிங்கப்பூரின் சிங்லாப், பூங்கோல், சாங்கி போன்ற இடங்களின் கூட்டுப் புதைகுழிகளில் பல பிணங்கள் இட்டுப் புதைக்கப்பட்டன. [2].

அந்தப் புதைகுழிகளில் பலவற்றை, அந்தக் கட்டுப்பட்டவர்களைக் கொண்டே வெட்டுவித்தார்கள் யப்பானியர்.

அரிதானது உணவு

சிங்கப்பூர் ஒரு தீவு என்றும் அது ஒரு துடிப்பான துறைமுக வணிக நகரமாக இருந்தது என்றும் நாம் அறிவோம்; யப்பானிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிறகு போரின் மீது ஏற்பட்ட இயல்பான அச்சத்தால் வணிகப் போக்குவரத்து குறைந்தது. யப்பானிய நிருவாகம் தீவின் மக்களுக்கும் படைகளுக்கும் தேவைப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. உணவுப் பொருள்களின் வரத்து இயல்பாகவே குறைந்தது. தீவிலேயே வசித்த மக்களுக்கு மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் அரிதாயின. வெளியில் கிடைத்த பொருட்களை யப்பானிய இராணுவமும் படைகளும் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள். செயலாக இருந்த சீன ஆண்கள் மொத்த, மொத்தமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளோடு, தமது குடும்பத்தின் ஏனையவர்களின் உணவுக்குப் பெண்களும் குழந்தைகளும் உடல் வலிந்து பணி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

உணவுக்குத் தவிப்பு

சூழலில் இது மேலும் மேலும் நிச்சயமற்ற தன்மையையும், தினப்படி வாழ்வியல் அழுத்தத்தையும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஏற்படுத்தியது. பொருள் கொடுத்தாலும் இராணுவ நிர்வாகம் கொடுக்கும் உணவு அளவுக்குட்படுத்தப்பட்டதாகவே இருந்தது ( rationed supplies). ஒரு ஆணுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 12 கிலோ அரிசி என்ற கணக்கில் மட்டுமே தானியம் கொடுக்கப்பட்டது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் குறைவான அளவு தானியம் கிடைத்தது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவு, போர் தொடரத் தொடர, படிப்படியாக குறைக்கப்பட்டு 1945இல் கிட்டத்தட்ட பாதியாகி ஒரு ஆணுக்கு சுமார் 5 கிலோ அரிசி மட்டுமே ஒரு மாதத்திற்குக் கிடைத்தது. மக்கள் தீவில் மரவள்ளிக் கிழங்கை அதிகம் பயிரிடத் தொடங்கினார்கள். அவித்த மரவள்ளிக்கிழங்கு, கம்போங்குகளில் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன் போன்ற உணவுகள் வழக்கமான உணவாயின. மக்கள் அவ்வாறு பயிரிட்டாலும் அதனை யப்பானிய இராணுவத்தினர் பறித்துக் கொண்டு போவார்கள் என்ற அச்சத்தினால், நகரத்தை விட்டு வெளியேறி மலாய் பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கினார்கள். இருந்த மக்களை விவசாயம் செய்து விளைபொருட்களை உற்பத்தி செய்யும்படி, தீவின் இராணுவ நிருவாகம் வற்புறுத்தியது. தவறுகள் குற்றங்களாகக் கருதப்பட்டன; குற்றங்களுக்குக் கொடிய தண்டனைகள் அளிக்கப்பட்டன.

மொழி, கல்வி, பொது நிருவாக நிலை

யப்பானியர் அவர்களது மொழியான யப்பானிய மொழியை பள்ளிக் குழந்தைகள் முதல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பள்ளிகளில் யப்பானிய மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.யப்பானிய மொழி கற்றுக் கொள்ளத் தனிப்பள்ளியையும் யப்பானிய இராணுவ நிருவாகம் தொடங்கியது. தினமும் சங்கொலி முழங்கியவுடன், மக்கள் பொது இடங்களில் குழுமி யப்பான் இருக்கின்ற திசை நோக்கி மண்டியிட்டு, யப்பானிய தேசிய கீதத்தை இசைக்க பணிக்கப்பட்டார்கள்.

யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்த சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 50 கைக்குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள், குழந்தை ஏசு தேவாலயத்தின் வாசலில் அநாதையாக விடப்பட்டன என்ற ஒரு புள்ளிவிவரம் தரும் அதிர்ச்சியிலிருந்து சமூக நிலை எவ்வாறு இருந்தது என்பதை உணரலாம்.

குற்றங்களுக்குக் கடும் தண்டனைகளும், சிறைவாசமும் வழங்கப்பட்டாலும், சிறைக் கைதிகள் மிக மோசமான நிலைமையில் இருக்க வேண்டியிருந்தது. பொது சமூகத்துக்கே தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றும் கிடைக்காத நிலையில் சிறைக் கைதிகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? ஆரோக்கியமான மனிதனுக்கு 2200 கலோரி உள்ள உணவுப் பொருள் தேவைப்பட்ட நிலையில், சிறைக்கைதிகளுக்கு சுமார் 1000 கலோரி அளவுள்ள உணவுப் பொருள் மட்டுமே அளிக்கப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாதது, அளவுக்கதிகமான நெருக்கடி, ஊட்டமற்ற உணவு போன்றவற்றால் சிறைகளில் தொற்று நோய்கள் பெருகின. ஆடை, செருப்பு போன்றவற்றிற்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 14000 சிறைக்கைதிகள் இந்தக் காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்.

கைதிகளின் கோரநிலை

சிங்கப்பூரின் பணவிடை மாற்றப்பட்டு, யப்பானியப பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பூக்களின் படமும், வாழைமரத்தோடு கூடிய வாழைத்தார் இருக்கும் படமும் இருந்ததால் அது ‘வாழைப்பழநோட்டு’ என்ற பொருளில் பனானா கரன்சி என்று பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

விண்ணைத் தொட்ட விலைவாசி

சிங்கப்பூரில் ஏற்கனவே இருந்த பிரித்தானிய காலனி நிருவாகம் வெளியிட்டிருந்த பணவிடை முற்றாக யப்பானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது; எனினும் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மற்ற இடங்களில், அந்தப் பணவிடைக்குச் செலாவணி இருந்ததால் அது பெரிதும் மதிப்பில் விழவில்லை. ஆனால் வாழைப்பழ நோட்டுக்கு அந்த செலாவணிப் பெறுமதி சிங்கப்பூரில் இல்லையாதலால், அந்தப் பணவிடைக்கு சந்தை மதிப்பு இல்லாதிருந்ததோடு, நாள் செல்லச்செல்ல மேலும் அதன் மதிப்பு வீழ்ந்தது; அதனை வாங்குவார் அருகினார்கள். விளைவாகப் பொருட்களின் விலை விண்ணுச்சத்திற்குப் போனது. போர் தொடங்குவதற்கு முன்னர் சிங்கப்பூரில் 100 காடிக்கான (60 கிலோ) அரிசியின் விலை சுமார் 5 வெள்ளியாயிருந்தது. அதே பொருள் யப்பானிய ஆக்கிரமிப்பின் 1944 ஆம் ஆண்டு சுமார் 5000 வெள்ளிக்கு உயர்ந்தது![3]

இந்தக் காரணங்களால் ஆக்கிரமிப்புச் சிங்கப்பூரில் கள்ளச்சந்தை துடிப்பாக இயங்கியது.

பிரித்தானிய பணத்தாள்
யப்பானிய வாழைப்பழப் பணத்தாள்

கள்ளச் சந்தையில் தங்க நகைகள், மற்றும் உணவுப் பொருட்கள் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் பெற்றன. லீ க்வான் யூ தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலிலும் அந்நாட்களில் கள்ளச் சந்தை எவ்வாறு இயங்கியது என்றும், அப்போது பதின்மத்தில் மாணவனாக இருந்த தான் எவ்வாறு கையில் இருந்த பணத்தைக் கொண்டு, செலாவணி ஆகக் கூடிய சிறு தங்கத் தோடு போன்றவற்றை வாங்கி, பின்னர் சில நாட்கள் கழித்து விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை, எவ்வாறு தனது குடும்பத்தின் உணவு சம்பாத்திய தேவைக்குப் பயன்படுத்த முடிந்தது என்பனவற்றை விவரித்து எழுதியிருக்கிறார்.

இரணகளத்திலும் யப்பானியர்களுக்கான கிளுகிளுப்பு

சிங்கப்பூரின் வசதி படைத்த சமூகங்கள் வசித்த பல பகுதிகளில் இருந்த வீடுகள் ‘சொகுசு நிலைய’ங்களாக யப்பானிய இராணுவத்தினரால் மாற்றப்பட்டன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தாமே ஓடிப்போயிருந்தார்கள் அல்லது சில இடங்களில் விரட்டியடிக்கப்பட்டார்கள். கொரிய, மலாய், தாய்லாந்து மற்றும் சீனப் பெண்கள் அந்த வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். யப்பானிய இராணுவப் படையின் காமத் தேவைகளைத் தீர்த்து வைக்கவேண்டுவதே அவர்களது பணி. அந்தப் பெண்களில் 14 வயதேயான இளஞ்சிறுமிகளில் இருந்து 35 வயது வரையான பெண்கள் வரை பலர் இருந்தார்கள். வார இறுதி நாட்களில் இந்த வீடுகள் இருந்த பகுதிகளில் நெடும் வரிசைகளில் படையினர் சாரிசாரியாகக் காத்து நிற்பார்கள். அந்த வீடுகள் இருந்த பகுதிகள் மரப் பலகைத் தடுப்புகளால் அரண் போல அமைக்கப்பட்டன. ஒரு பெண், ஒரு நாளில் ஏறக்குறைய 30 லிருந்து 40 ஆண்களுக்கு காமப்பணி செய்யவேண்டியிருந்தது. இந்த கொடும் சுமையில் பெண்கள் நோய்ப்படுவதும் இறப்பதும் பெரும் எண்ணிக்கையில் நடந்தன. அந்த எண்ணிக்கை கொரியா, பர்மா, தாய்லாந்து போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய பெண்களால் மீண்டும் நிரப்பப்பட்டன. இந்த நிலையங்களில் சில யப்பானியப் பெண்களாலும் நிரப்பப் பட்டன; அவர்கள் யப்பானிய இராணுவ அதிகாரிகளின் தேவைக்காக மட்டும் வேலை செய்தார்கள். பெரும் சமூக அவலமாக இது நடந்தாலும், இந்த வடிகால் ஏற்பாட்டினால் ,பொது சமூகத்தில் இராணுவத்தினரால் ஏற்படும் கற்பழிப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

ஆக்கிரமிப்பின் ஆவணங்கள்

சிங்கப்பூர் யப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த நாட்களை அதிகாரப் பூர்வமாக விவரிக்கும் நூல்களில் முக்கியமானது லீ கெயோக் போய் (Lee Geok Boi) எழுதிய தி சியானன் இயர்சு (The Syonan Years – Singapore under Japanese rule 1942-1945) என்பது. இது இந்தக் கொடுங்காலத்தை மிகச் சரியாக ஆவணப்படுத்துகிறது. இது தவிர லீ க்வான் யூ அவர்களின் தி சிங்கப்பூர் சுடோரியின் ஒரு அத்தியாயம் பல செய்திகளை நேரடி சாட்சியாக ஆவணப்படுத்துகிறது. அப்போது லீ அவர்கள் பதின்ம வயது பள்ளி மாணவர். இன்னும் சில ஆவணங்கள், அந்த நாட்களின் சாட்சியாயிருந்தவர்கள் பலரை, பின்னாட்களில் சந்தித்து அவர்களது அனுபவத்திலிருந்த பல செய்திகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை சிங்கை மரபுடைமை ஆவணக் காப்பகம் மற்றும் சிங்கை தேசிய நூலகத்தின் கருவூலங்கள் போன்றவற்றில் காணக் கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பொதுவான நோக்கில் பின்வரும் நான்கு விதமான வகைப்பாட்டில் இந்த கொடுங்காலத்தின் உண்மைகளைப் பதிவு செய்கின்றன. 1. சமூக, பொருளாதார நோக்கில் கள்ளச்சந்தை, கூட்டுக் கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது; 2. புவியியல் நோக்கில் வாழ்வியல் இடங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், இடப்பெயர்வுகள்; 3. சிங்கப்பூரில் மற்றும் தென்கிழக்காசியாவில் அக்காலகட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு யப்பானியர்கள் கொடுத்த அணுசரனையான சலுகை, பதவிகள், வாய்ப்புகளால் சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையும் அதன் இயக்கம் இந்திய விடுதலைப் போரில் செலுத்திய தாக்கம் பற்றிய செய்திகள்; 4. யப்பானிய மொழியை திறந்த மனத்தோடு கற்றுக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தின் சிலரோடு சமூக அளவில் யப்பானியர்கள் எந்த அளவு ஒன்ற முடிந்தது என்பது பற்றியும், அது விளைவித்த சமூக மென்மாற்றங்கள் பற்றியும்; என இந்த நான்கு நிலைகளில் இந்த ஆய்வுக் குறிப்புகள் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

__________

1.  The Singapore Story – Memoirs of Lee Kuan Yew – From the part of ‘The Japanese Invaders’.
2. Syonan Years – யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் நேரடிச் சாட்சிகள் விவரித்த சம்பவங்களில் இருந்து தொகுக்கப்பட்ட சிங்கை தேசிய ஆவணக் காப்பக குறிப்பேடுகளில் இருந்து
3. https://en.wikipedia.org/wiki/Japanese_occupation_of_Singapore – விக்கிபீடியா தளம் தரும் குறிப்பில் இருந்து.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள் appeared first on கிழக்கு டுடே.

சாந்தி சந்திரசேகரன்/வேடந்தாங்கல்..!

அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16

நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தன.பயணிகளின் கால்தட சகதிகளைக் கோலங்களாக அரிதாரம் பூசியபடி திருவாரூர் ரயில் நிலையம் சிவப்பு நிற விளக்குகளில் மினுமினுத்தது.“டீ.. காபி.. டீ …காபி… டீ காப்ப்ப்ப்பி” போன்ற வியாபாரக் கோஷங்களுக்கு மத்தியில்.. பல தரப்பட்ட மக்களின் பேச்சு சத்தத்திற்கு மத்தியில், “வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கன்னி வரை செல்லும் மேடகான் எக்ஸ்பிரஸ்.. இன்னும் சற்று நேரத்தில்.. மூன்றாம் நடைமேடைக்கு வந்து சேரும்.. என்று எதிர்பார்க்கப்படுகிறது” தேனாய் மும்மொழிகளில் இனித்தது, தென்றலாய் பேசிய வருணாவின் குரல்.திடீரென கருத்த வானம் மழையைக் கட்டவிழ்த்தது போல இடித்துப் பெய்ய, வண்டியேறக் காத்திருந்தவர்கள் அனைவரும் நிழற்கொடையின் கீழ் ஒதுங்க ஓடி வர.. ரயில் நிலையமே நொடியில் மீன் சந்தையாய் மாறியிருந்தது.தேங்கிய தண்ணீரைக் கண்டவுடன் ஒரு சில குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். கைக்குழந்தையின் பெற்றோர்கள் குல்லா சகிதமாக உடை அணிவித்து, மாரோடு பிள்ளைகளை அணைத்து குளிரிலிருந்து காக்கலாகினர். இளைஞர்கள் சிலர் கையிலிருந்த பையைக் குடை போல வைத்தவாறு கொட்டகையின் கீழ் ஒதுங்கினர். இளம் பெண்டிரோ..தன் முந்தானை மற்றும் துப்பட்டாவின் முனையை ஏந்தியவாறு &#39ஓடு ஓடு”என்று கிளி போல கீசிப் பறந்தனர். வயதான பெரியவர்களும் முதியவர்களும் நடையில் வேகத்தைக் கூட்டினாலும் கால் வழுகிடாமல் கவனமாய் ஒதுங்கிடம் தேடிப்புகுந்தனர். ஒரு மழை, ரயில் நிலையத்தை சில நிமிடங்களில் தேன்கூடாய் மாற்றியிருந்தது.இவையனைத்தையும் சன்னலோரத்தில் வருணா அமர்ந்து வேடிக்கை பார்க்க, மழைச்சாரலாய் வந்தது அவனது நினைவுகள்.
அவன்.. நாஞ்சில் குமரன்.
கண்ணகி கலைக் கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டில் வருணா சேர்ந்திருந்த தினம்.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொகுத்து நோக்கல் நிகழ்வுக்கான கட்டடம் எதுவென பூக்களை மேயும் தேனீ போல அவள் வட்டமிட
“என்ன தேடுறீங்கன்னு சொன்னா.. உதவசுலபமா இருக்கும்” என்றது மனதை வசீகரிக்கும் ஒரு குரல்.
குரல் வந்த திசையில் அவள் நோக்க.. தேவதூதன் போல வெள்ளை அங்கி
அணிந்திருந்தான் அந்த இளைஞன் . தேன் சொட்டும் குரல். கூரான கண்கள். நேரான பார்வை. குறும்பு அரும்பாய் மலர்ந்த ஒரு வீசீகரப் புன்னகை. பார்த்தவுடன் அவனிடம் ஒரு பிடித்தம் வந்ததன் காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை வருணாவிற்கு. பதிலற்று அவள் நிற்கவே குமரனே தொடர்ந்தான்.
“முதல் வருட மாணவி தான நீங்க..? நான் நாஞ்சில் குமரன். இரண்டாம் வருட கணிதத்துறை மாணவன். நீங்க இப்போ நேரா போய் வலது கைப்பக்கம் திரும்புங்க. மஞ்சள் நிறக் கட்டடம் நூலகம். அதுக்கு எதிர்புறக்கட்டடம் தான் நீங்க போக வேண்டியது. நிறைய பேர் நிப்பாங்க. அத வச்சே நீங்க சுலபமா கண்டு பிடிச்சிடலாம்.” பேசி முடிக்கும் வரை அவன் புன்னகை குறையவில்லை. இவள் மூச்சி விட மறந்து அவன் முக அசைவுகளை ரசித்துக்
கொண்டிருந்தாள்.
“ஏய்.. இருடா.. கீழே போட்டுடாத..!! இரு ஒரு பக்கம் நான் பிடிச்சிக்கிறேன்” நூலகத்திற்கு சென்ற ஒரு மாணவனுக்கு உதவச் சென்ற அவன் அவள் மனதில் மருதாணி போல ஒட்டிக் கொண்டான்.
தேடிச்சென்று உதவி செய்வது என்பது அவனுக்கு இயல்பாக இருந்தது. அந்த இயல்பினால் கல்லூரியின் பெரும்பான்மை அவனது நட்பு வட்டத்தில் இருந்தது.
ஆனால் வருணாவிற்கு, கண்ட நாள் முதலே.. நட்பினைத் தாண்டிய ஒரு பாசம் அவன் மீது.
‘அவன் அறிவானா?’ என்றே தெரியாமல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பட்டாம்பூச்சியாய் அவள் மனதினில் ஒரு சிறகு முளைக்கும். உலகமே அழகாய் மாறும் அவள் கண்களுக்கு. அவனால், அவளும் கூட மாறிப்போனாள். தன் கடன்களை மட்டுமே கருத்திலேந்தும் அவள் கண்களுக்கு, பேருந்தில் நிற்க சிரமப்படும் மூதாட்டி தெரிந்தார். தன் இருக்கையை அவருக்கு கொடுத்த போது குமரன் நினைவுக்கு வந்தான்.முதல் மதிப்பெண் எடுக்கத் தீவிரமாய் தன்னைத் தயார்படுத்தும் அவளுக்கு,
வணிகக்கடிதத்தில் சிரமப்படும் கவிதா தெரிந்தாள். தேர்ச்சி பெறுவதே சிரமம் என்றெண்ணியவளை அறுபது விழுக்காடு வாங்க வைத்த போது அவள் சிரிப்பிலும் குமரனைக் கண்டாள்.
இப்படி அவனுடன் பழகிய ஒவ்வொரு தருணத்திலும் அவள் அவனாகிப் போனாள். ஒரு வருடம் அவனால் ஒரு மாதம் போல ஓடிப்போனது.
அன்று கல்லூரியில் ஒரு பெரும் கலை நிகழ்ச்சி. வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு கல்லூரி ஒரு திருவிழாக்கூடமாக உருமாறியிருந்தது. பல கல்லூரி மாணவ மாணவியரின் ஊர்வலம் அரங்கேற கல்லூரி ஒரு வண்ணமயமான ரங்கோலி கோலம் போல பொலிவாயிருந்தது. போதாக்குறைக்கு மழை மேகமாயிருந்தது. அதிகாலை மழைச்சாரல் அதிசயமாய் எட்டிப்பார்த்த சூரியனால் அழகான வானவில் ஓவியம் தீட்டியிருந்தது. அதை அந்த பழங்கட்டிடத்தின் தாழ்வாரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் வருணா. காற்றின் குழுமை, அவளது உடலை லேசாக நடுக்கியது.
“அட.. வருணாக்கே மழை குளிருமா?” அவள் விரும்பும் வானம்பாடி அவள் காதுகளில் ரீங்கரித்தது.
“குமரன்.. இங்க வந்து பாருங்களேன்” அவனை ஏறெடுத்தும் பாராமல் கூறினாள்.
“ பரவால்லயே.. குரல்லயே என்னை சரியா கண்டுபிடிச்சிட்டியே..!” என்றவன் அவள் காட்டிய திசையை நோக்க, அங்கு வெயில் காயக் காத்திருந்தன காக்கைகள், சிட்டுக்குருவிகள், மாடத்துப்புறாக்கள், அக்காகுயில்கள் தவிட்டுக்குருவிகள் மற்றும் மைனாக்கள் என ஒரு பெரும் பட்டாளம். “இந்த நாவல் மரத்துக்கு வயசு நூறு இருக்கும் வருணா. எப்பவுமே இது தான் நம்ம கல்லூரியோட வேடந்தாங்கல். இப்படி ஒரு மரம் போல.. வாழ்க்கையில சிலருக்காச்சும் உதவியா இருக்கனும்ன்றது தான் என் ஆசையே.”
அவன் புன்னகை ஆதவன் போல ஔி வீசியது.
“நீ தான் என்னோட வேடந்தாங்கல்” யோசனையின்றி சட்டென மனதினில் உள்ளது வார்த்தையாய் வெளி வர.. அவளே ஒரு கனம் நாக்கினைக் கடித்துக் கொண்டாள்.
“என்ன.. என்ன சொன்ன?” ஆச்சரியத்தில் அவன் புன்னகை பெரிதாய் விரிய.. வெட்கத்தில் அவள் கண்கள் குறுகியது.
அந்த நொடி, அவள் தாழ்வாரத்தில் சாய்ந்திருந்த பழைய மரப்பிடிமானம் ஒடிந்து சரிய, அவள் கைகளைப் பற்றி இழுத்துக் காப்பாற்றினான் குமரன். இரண்டு கண்களும் ஒரு நொடி சந்தித்தன. அடுத்த நொடி, அவன் கால்கள் நிலைதடுமாற, அங்கிருந்து கீழே விழுந்தவன், இல்லாமலே போனான்…!
அவன் கல்லூரிப்பையில் அவளுக்காக எழுதப்பட்ட ஒரு கவிதைப் புத்தகம். காதல் சொட்ட சொட்ட பல அழகான கவிதைகள். அவளிடம் பேசாத அவன் மனதை, எழுத்துருவில் கொட்டியிருந்தான். வாசிக்க வாசிக்க அவன் அவளை எத்தனை நேசித்தான் என அறிந்து வியந்து போனாள்.
இறந்தவனை எண்ணி, காற்றற்ற மழை போல கண்ணீரைக் கொட்டித் தீர்த்தது அவள் இதயம்.
“ரயில் நிலைய அறிவிப்பாய் உன் குரல் ஒலித்தால்.. வருணா.. மாடப்புறாவாய் நான் அங்கு வாழ்ந்திடுவேன்.” அவள் மேடையில் வாசித்த ஒரு கவிதைக்கு அவன் எழுதிய குறிப்பு அது.

இன்று ரயில் நிலைய அறிவிப்பாளினியாய் அவள் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் அவனது அந்த ஒற்றை வரி.. அவள் கேசம் வருடிச் செல்லும் காற்றாய் அவனை நினைவுறுத்தி ஒரு புன்னகையை அவள் இதழ்களில் சூட்டிச் செல்லும்.

“மேடம்.. மழைன்னால என் வேலை முடிய ரொம்ப நேரமாகிடுச்சி. ரயில விட்டுட்டேன். இப்ப திருச்சிக்கு எப்பிடி போறது..? ஏதாச்சும் வண்டி இருக்கா..? இல்ல பஸ்ல தான் போகனுமா?” கைக்குழந்தையுடன் வந்த யுவதியின் குரலில், நினைவுகளிலிருந்து மீண்டாள்.
மணி இப்போதே பத்தாகியிருந்தது. யுவதியின் கண்கள் சிவந்திருந்தது. அழுதிருக்கிறாள்…!
நன்றாக நனைந்திருந்தார்கள் இருவரும். இரண்டு வயதிருக்கும் அந்த குழந்தைக்கு. குளிரில் நடுங்கியது. அவள் கேட்ட தகவல் மட்டும் சொல்லியனுப்ப முடியாமல் ஏதோ தடுத்தது.
கோவா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் சென்றதால்.. பெரும்பான்மையான கூட்டம் குறைந்து, ரயில் நிலையம் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தது. அடுத்த ரயில் அறிவிப்பிற்கு அரை மணி நேரம் இருந்தது. மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்தவள் அருகிலிருந்த ரவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாள்.
யுவதி மற்றும் குழந்தையை பயணிகள் காத்திருப்பு அறையில் அமரச் செய்தாள். தனது கைப்பையிலிருந்த ஒரு துண்டு கொடுத்து துவட்டச் சொன்னாள். இருவரும் உடை மாற்ற காவல் இருந்தாள்.
தன்னிடமிருந்த ஒரு சால்வையை கொடுத்தவள்,”குழந்தைக்கு துணி மாத்தினாலும் மழைல நனைஞ்சதுல குளிரும். இத வச்சி இறுக்கமா பொத்திக்குங்க.” என்ற போது யுவதியின் கண்கள் குளமாகின.
“என் பேரு ரதி. வீட்ல ஒரு பிரச்சனை மேம். மழைன்னும் பாக்காம வெளிய போ”ன்னு சொல்லிட்டாரு. கோவத்துல எதுவும் யோசிக்கத் தோணல . அதான் அப்டியே மழைல நனைஞ்சிக்கிட்டே பாப்பாவ தூக்கிட்டு வந்துட்டேன். பஸ்க்கு போகற அளவு காசு எடுக்காம வந்துட்டேன். அதான் ஏதாச்சும் ரயில் இருந்தா அம்மா வீட்டுக்கு போய்டுவேன்.” குனிந்த தலை நிமிராமல் பேசினாள்.
“இன்னும் ஒரு மணி நேரங்களிச்சி அடுத்த ரயில் இருக்கு. அதுல போக ஏற்பாடு பண்றேன். குழந்தைய கைல வச்சிருக்கீங்க. எதுன்னாலும் ஒருதடவைக்கு இரண்டு தடவை..அவசரப்படாம.. கொஞ்சம் யோசிச்சி செய்ங்க. இப்ப டீ, காபி ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”
அவள் கை தாங்கி இதமாய் பேசினாள் வருணா.
அப்போது முகத்தில் படபடப்புடன் ஒரு இளைஞன் ரயில்நிலையத்தில் இங்கும் அங்கும் தேட.. “அது உங்க கணவரா ரதி?” வருணா.
“ம்ம்.. ஆமா..!” சிறிய ரயில் நிலையம் என்பதால் சட்டென தெரிந்தது. ரதியின் முகத்தில் அச்சமும், ஆறுதலும் ஒரு சேரத் தெரிய.. “Excuse me sir. கொஞ்சம் இங்க வாங்க.” என்று சத்தமாகக் கூப்பிட்டாள்.
ரதியைப் பார்த்தவுடன் பெருமூச்செறிந்தவன் விரைந்து வர “நீங்க பேசிட்டு.. பயணச்சீட்டு வாங்குற இடத்துல வந்து பாப்பாவ வாங்கிக்குங்க” குழந்தையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
சிறிது நேரத்தில், “ரொம்ப நன்றி மேம்.” மூவரும் சிரித்தவாறு கரம் கோர்த்து அவளிடம் விடைபெற்றார்கள்.
அவள் அடுத்த ரயிலுக்கான அறிவிப்பை வாசித்த நேரம்.. எங்கிருந்தோ பறந்து வந்த மாடப்புறா ஒன்று.. அவளருகினில் பயமின்றி நின்று கொண்டது. உடல் சிலுப்பி ஈரமாகியிருந்த தன் உடலைக் காய வைத்துக் கொண்டது.
“ரயில் நிலைய அறிவிப்பாய் உன் குரல் ஒலித்தால்.. வருணா.. மாடப்புறாவாய் நான் அங்கு வாழ்ந்திடுவேன்.” அவள் மனதினில் மீண்டும் விரிய.. திருவாரூர் ரயில் நிலையம்..
வேடந்தாங்கலாய் அரிதாரமிட்டுக் கொண்டது.

ஆசிரியர் குறிப்பு

சாந்தி சந்திரசேகரன். வயது 37. சொந்த ஊர் சிவகாசி. வசிப்பது திருவாரூர். ஆசிரியராக பணியாற்றிய இவர், தற்போது பல்வேறு பத்திரிகைகளுக்கு கதை மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்கி ‘படம் சொல்லும் கதை’ போட்டியில் சிறப்புப் பரிசும், பேசும் புதியசக்தியின் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். இவரது சிறுகதை அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்று ‘கரையேற்றம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. மின்மினிகள் என்னும் நூலில் இவரது இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன.

ஷைலஜா/மாயச்சூது – விருட்சம் நாளிதழ்

தமிழியல் தேடல்(5) -“தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கும் நூலகங்கள்”

27 April 2025 at 11:23

“தமிழ் ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலான நூலகங்களின் பட்டியலையும் நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் நூற்பட்டியலையும் விளக்குகிறது இக்கட்டுரைத் தொகுப்பு”

புத்தகங்கள் வெறும் காகிதங்களால் அச்சடிக்கப்பட்ட தொகுப்புகள் அல்ல; நிகழ்கால வரலாற்றை எழுத்தினூடே, எதிர்காலத் தலைமுறைக்குக் கொண்டு செல்லப் பதிவு செய்யப்படும் வரலாற்றுப் பொக்கிஷங்கள். கடந்த காலச் செயல்பாடுகளை நிகழ்காலத்தில் கண்முன் நிறுத்தும் காட்சிப் படிமங்கள்.

புத்தகங்களின் இன்றியமையாமை உணர்ந்து, அவற்றைச் சேகரிக்கும் மையங்களாகப் புத்தக சாலைகள் முகிழ்ந்தன. அறிவுதேடலுக்கான நுழைவு வாயில்களாக விளங்கும் நூலகங்களின் பயன்பாடு, ஆய்வாளர்களுக்கு அவசியமானது. எனவே, ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வின் குறிப்பிட்ட காலத்தை நூலகங்களைப் பார்வையிடுவதற்காக ஒதுக்க வேண்டும்.

எழுத்தாளரும் திறனாய்வாளருமான ந.முருகேச பாண்டியன் அவர்கள் “தமிழ் ஆய்வில் தகவல் சேகரிப்பும் ஆய்வு நூலகமும்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். ஜனவரி 2017-ல் சான்லாக்ஸ் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையில், தமிழ்நாடு அளவிலான முக்கியமான ஆய்வு நூலகங்களின் பட்டியலைக் கொடுத்திருப்பார்.

அவர் கொடுத்த நூலகங்கள் பற்றிய சிறுகுறிப்புகளையும் சில நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் நூல்கள் பற்றிய செய்திகளையும் இக்கட்டுரையில் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

1) கன்னிமாரா நூலகம், மறைமலையடிகள் நூலகம்

கன்னிமாரா நூலகத்தின் பழம்பெருமையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் நம்மில் பலர் அறிந்திருப்போம். 1890ஆம் ஆண்டு மதராஸ் மாகாண ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1896ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள 4 தேசிய நூலகங்களில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது. தற்போதைய கணக்குப்படி கன்னிமாரா நூலகத்தில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.

மறைமலையடிகள் நூலகமானது மறைமலையடிகளின் நூல் சேகரிப்பைக் கொண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆதரவில் 1958இல் நிறுவப்பட்டது. தற்போது பதிப்பில் இல்லாத அரிய நூல்களின் இருப்பிடமாக விளங்குகிறது. இந்நூலகம் தற்பொழுது கன்னிமாரா நூலகத்தின் முதல் தளத்தில் செயல்படுகிறது.

கன்னிமாரா நூலகம் பற்றி மேலும் தகவல் அறிய,

https://tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8juU1&tag=%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE#book1/

2) அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் 

1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரேபிய, பாரசீக மற்றும் சிங்கள மொழிகளைச் சேர்ந்த 50,180 ஓலைச்சுவடிகளும்; 22,134 கைப்பிரதிகளும்; 26,556 அரிய நூல்களும் காணப்படுகின்றன.

உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் காணப்படும் நூலகமாகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் விளங்குகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. பழந்தமிழ் இலக்கிய – இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு இந்நூலகம் ஒரு வரப்பிரசாதம்.

சுவடிகளின் பட்டியலைக் காண, 

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kxyy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88++A+Descriptive+Catalogue+of+the+Tamil+Manuscripts+in+the+Government+Oiental+Manuscripts+Library%2C+Madras

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8khyy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88++A+Descriptive+Catalogue+of+the+Tamil+Manuscripts+in+the+Government+Oiental+Manuscripts+Library%2C+Madras#book1/

3) டாக்டர் உ.வே.சா.நூலகம்

உ.வே.சாமிநாதையர் அவர்கள் சேகரிப்பில் இருந்த நூல்கள், ஓலைச்சுவடிகளைக் கொண்டு இந்நூலகம் தொடங்கப்பட்டது. 1943இல் சென்னை பெசண்ட் நகர் அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்டது. இங்கு 1,832 நூல்களும் 939 சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உ.வே.சா.விற்குப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய 3000கும் மேற்பட்ட கடிதங்களும் இங்கு உள்ளன. 

மேலும் தகவல் அறிய,

https://uvesalibrary.org/

4) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழியல் ஆராய்ச்சியை வளர்தெடுத்தற் பொருட்டு, 1994ஆம் ஆண்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தொடங்கப்பட்டது. நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம் எனத் தமிழாய்வு வெளியில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது. இங்குத் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 5,00,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், 30 இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்களுடன் மின்நூலகம் இணையத்தில் பவனி வருகிறது.

 தமிழ் அச்சுப்பயன்பாட்டின் வரலாற்றை விவரிக்கும் வகையிலும் சிந்துவெளி ஆராய்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் வகையிலும் இரண்டு அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணக் காப்பகம் இங்கு செயல்படுகிறது. இந்நூலகத்தின் சிறப்புகளை விளக்கி ஆனந்த விகடன் பத்திரிகையில் “1000 காலத்துப் பரண்” என்ற தலைப்பில் வாராந்திர தொடர் தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது. 

 மின்நூலகத்திற்கான இணைப்பு,

https://rmrl.in/ta/dl/books

5) தமிழ்நாடு ஆவணக் காப்பகம் 

சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு அருகில் ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1640 முதல் தற்பொழுது வரை வெளியான அரசாணைகளும் அரிய ஆவணங்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. 2.3 இலட்சம் நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, சமூகவியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தலைப்புகளின்கீழ் ஆய்வு மேற்கொள்வோருக்கு இக்காப்பகம் ஒரு பெருங்கொடை.

6) பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

சமூக அறிவியல், தொல்லியல், சூழ்நிலையியல், இந்தியவியல் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் ஆய்வுகளை மேற்கொள்கிறது. இங்கு 70,000 புத்தகங்களும் 460 ஆய்வேடுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஓலைச்சுவடிகளுக்கெனத் தனியாக நூலகம் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஆய்வு மாணவர்களுக்கு அரிய கருவூலமாக விளங்குகிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.ifpindia.org

7) மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி நூலகம்

 சென்னை இலக்கியச் சங்கம் 1812இல் தொடங்கப்பட்டது. இச்சங்கம் தோற்றுவித்த நூலகம் பழமையும் முக்கியத்துவமும் வாய்ந்தது. இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக வெளியிடப்பட்ட 83,000கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இலக்கிய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பாக இந்நிறுவனம் நடத்திய மெட்ராஸ் இதழைக் குறிப்பிடலாம். இந்த இதழ் புவியியல், வானிலையியல், விலங்கினங்கள், தாவரங்கள், கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த விரிவான ஆராய்ச்சிகளை வெளியிட்டது. 

8) அடையாறு நூலகம் & ஆய்வு நிறுவனம்

சென்னை அடையாறு பகுதியிலுள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் ‘அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்பவரால் 1886ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 2,50,000 அச்சுத் தொகுப்புகளும் 20,000 ஓலைச் சுவடிகளும் உள்ளன.

9) சரசுவதி மகால் நூலகம்

இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் முதலான பல மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.வரலாறு, மருத்துவம், அறிவியல், தத்துவம், மதம், இசை, நாட்டியம், சிற்பம் போன்ற பல கலைகளை பறைசாற்றும் சிறந்த நூல்களின் இருப்பிடமாக இந்நூலகம் விளங்குகிறது.

சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலையிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட சுவடிகள் சுமார் 47,000 மேல் உள்ளன. அதில் வடமொழிச் சுவடிகள் 39,000. தமிழ்ச் சுவடிகள் 4,200. மராத்தி ஓலைச் சுவடிகள் 3000. தெலுங்குச் சுவடிகள் 800 ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் சுமார் 4500 நூல்களை மன்னர் சரபோஜி சேகரித்து வைத்துள்ளார். 

10) ஞானாலயா ஆய்வு நூலகம்     

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது ஞானாலயா ஆய்வு நூலகம். இது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும். 1959ஆம் ஆண்டு, நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. தமிழில் அச்சாக்கம் பெற்ற நூல்களின் முதல் பதிப்புகள் பல இங்கு கிடைக்கின்றன. இந்த நூலகத்தை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி – டோரதி கிருஷ்ணமூர்த்தி இணையர் இணைந்து நடத்தி வருகின்றனர்.

11) மதுரைத் நான்காம் தமிழ்ச்சங்க நூலகம் (செந்தமிழ்க் கல்லூரி)

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நிறுவப்பட்டது.மதுரை சிம்மக்கல் பகுதியில் இச்சங்கத்தின் நூலகம் அமைந்துள்ளது. தற்போது பதிப்பில் இல்லாத பல அரிய நூல்கள் இங்குக் கிடைக்கின்றன. இச்சங்கம் வெளியிட்ட செந்தமிழ் இதழ் தமிழாய்வின் முன்னோடி இதழாகக் கருதப்படுகிறது. 

12) கரந்தைத் தமிழ்ச் சங்கம் 

கரந்தைத் தமிழ்ச் சங்கம் 14 மே 1911 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடி என்னும் கரந்தையில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தை த.வே.இராதாகிருட்டினப் பிள்ளை நிறுவினார். சங்கத்தின் முதல் தலைவராக த.வே.உமாமகேசுவரம் பிள்ளை செயல்பட்டார். இச்சங்க நூலகத்தில் முக்கியமான ஆய்வுநூல்கள் பல பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இச்சங்கம் நடத்திய ‘தமிழ்ப்பொழில்’ என்ற ஆய்விதழ் தமிழாய்வுப் புலத்தில் முக்கியமானதாக விளங்குகிறது.

13) திரு.வி.க. நூலகம்

திரு.வி.க. நூலகம் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியிலுள்ள மேலப்பாதி கிராமத்தில் செயல்படுகிறது. இந்த நூலகம் 1946 நவம்பர் 15 அன்று தன்னார்வலர்களால் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு சுமார் 19,000 நூல்கள் உள்ளன. வரலாறு, அரசியல், பொதுவுடமை, கதைகள், சிறுகதைகள், புதினங்கள், வாழ்க்கை வரலாறு, தொழில் எனப் பல்துறை சார்ந்த நூல்கள் இங்கு உள்ளன.

14) கோபால் ராவ் நூலகம்

கும்பகோணம் அரசினர் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றியவர் கோபால் ராவ். இவர் மறைந்த பிறகு, இவரிடம் பயின்ற மாணவர்களால் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வாழைத் தோட்டத்தில் 1895-ம் ஆண்டு மே மாதம் கோபால் ராவ் நூலகம் உதயமானது. இங்கு 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இந்நூலகத்தில் சமஸ்கிருத புத்தகங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன.

15) பென்னிங்டன் பொது நூலகம்

தமிழகத்தின் பழமையான நூலகங்களில் இரண்டாம் இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகம் உள்ளது. இங்கு 37,910 தமிழ் நூல்களும் 32,185 ஆங்கில நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளாக அறிவுத் தேடலுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது.

16) ஆதீன நூலகங்கள்

சைவ ஆதீனங்களின் தமிழ்ப்பணி பங்கு அளப்பரியது. சைவ இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், இலக்கணம், சிற்றிலக்கியம் என பல்வேறு வகைமையிலான அரிய நூல்களின் இருப்பிடமாக ஆதீன நூலகங்கள் விளங்குகின்றன. அவ்வகையில் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, மதுரை, தருமை, பேரூர் போன்ற ஆதீனங்களில் செயல்படும் நூலகங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.17) பவானந்தர் கழகம் நூலகம்சென்னை வேப்பேரியில்பவானந்தர் கழக நூலகம் பதிப்பகமுமாகத் தமிழாய்வுலகில் வலம் வருகிறது. இது பவானந்தம் பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது. அரிய தமிழ் நூல்கள், ஏட்டுச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனப் பல ஆவணங்கள் இங்கு உள்ளன.

18) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்

தமிழியல் ஆய்வை வளர்த்தெடுத்தற் பொருட்டுத் தமிழ்நாடு அரசால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், ஓலைச்சுவடிகளும், அரிய நூல்களும் உள்ளன. மேலும், முனைவர் பட்ட ஆய்வேடுகளும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகளும் இடம்பெற்றுள்ளன.

19) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பாவேந்தர் நூலகம்

செவ்வியல் இலக்கியங்களில் முனைவர் பட்டம் பயில்வோர் தன்னுடைய ஆய்வுக் காலத்தில் அவசியம் பார்க்க வேண்டிய நூலகம் இதுவாகும். நூலகத்தில் 47,450 நூல்களும் 4800 அரிய செவ்வியல் நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. பல அரிய நூல்களைக் கொண்டு இணைய நூலகம் செயல்படுகிறது.

இணைய நூலகத்தைப் பார்வையிட,

https://library.cict.in/ebooks.html

20) நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்நூலகம் செயல்பட்டு வருகிறது. பல்லடம் மாணிக்கம் அவர்களின் சேகரிப்பில் இருந்த நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழின் பல்துறை சார்ந்த ஒரு லட்சம் புத்தகங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% சதவீத நூல்கள் தற்பொழுது பதிப்பில் இல்லாதவை.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றவை பெரும்பாலானோர் அறிந்தவை என்பதால் விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட, நூலகங்களுக்குச் சென்று நூல்களைத் தேடித் தேடி இன்புறுங்கள். தேடிய நூல்களின் தீர்க்க தரிசனம் கிடைக்கப்பெறும் போது ஓர் அலாதியான இன்பம் அகத்திடையே பரவும்.

நூலகங்களுக்குச் செல்வது என்பது, அறிவுசார் நெறியில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதற்கான சாட்சியம்.

The post தமிழியல் தேடல்(5) -“தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக விளங்கும் நூலகங்கள்” appeared first on Kaanalvari.

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

The post வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ் first appeared on கனலி.

ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்:அறிமுகம்                           

முன்னுரை

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் இன்றுவரை பதிப்பாசிரியர் பலர் பல்வேறு வகையான பதிப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பனவான பல நூல்கள் வெளிவந்தமைக்கு பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணியே காரணம் என்பதை எள்ளளவும் மறுக்க இயலாது. இவ்வாறான பதிப்பாசிரியர்களின் உழைப்பால்தான் பல்வேறு வகையான நூல்களும் இலக்கியங்களும் இன்றைக்கும் நம் கைகளில் தவழுகின்றன. தொடக்ககாலப் பதிப்பாசிரியர்கள் இப்பணியினை மேற்கொள்ளவில்லையெனில் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், கம்பராமாயணம், சிற்றிலக்கியங்கள் எனப் பலவற்றின் சிறப்பும் அதனைத் தோற்றுவித்த எழுத்தாளர்களின் பெருமையும் அவற்றிற்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் புலமையும் நமக்குத் தெரியாமலே மறைந்திருக்க வாய்ப்புகள் ஏராளம். பதிப்பாசிரியர்களின் ஆளுமைத்திறனின் மூலமே எத்தகைய சிறப்பு வாய்ந்த நூலாக இருப்பினும் அதன் சிறப்புகளை உணர்ந்துகொள்ள நம்மால் முடிகின்றது. ஒரு மொழியின் சிறப்பினையும் அதன் தனித்துவமான பண்புகளையும் புரிந்துகொள்ள இலக்கியங்கள் மிகவும் துணைபுரிகின்றன. அப்படிப்பட்ட இலக்கியங்களை உலகிற்கு வெளிக்காட்டியதில் நூலாசிரியர், உரையாசிரியரின் பங்கு எத்தகைய சிறப்பு வாய்ந்ததோ அதற்குத் துளியும் குறையாமல் சிறப்பு வாய்ந்தது பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணி ஆகும்.

ஈழமும் தமிழியலும்

தொடக்க காலகட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட படைப்பிலக்கியங்கள் ஈழத்தில் தோன்றின. அவற்றில் தனிச்செய்யுள்களை இயற்றுவதில் புகழ்பெற்றவர்களாக மட்டுநகர் பூபாலபிள்ளை, க. கணபதிப்பிள்ளை, நவநீதகிருஷ்ண பாரதியார் முதலானோர் விளங்கினர். காவியப் படைப்பாளர்களாக அரசகேசரி, வரத பண்டிதர்,  சதாசிவ ஐயர், முத்துக்குமாரர் முதலானோரும்; புராண ஆசிரியர்களாக கணேசபண்டிதர், சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார், சபாபதி நாவலர் முதலானோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சிற்றிலக்கியங்களாக மடல், உலா, குறவஞ்சி, பள்ளு, கலம்பகம் ஆகியவற்றினை இயற்றியோரும் ஈழத்தில் பலர். வடமொழி இலக்கியங்களை செய்யுள்வடிவில் தமிழில் மொழிபெயர்த்தோராக அ. குமாரசாமிப்புலவர் உள்ளிட்ட பலர் விளங்குகின்றனர். 

வசன நூலாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக ஆறுமுக நாவலர், வ. கணபதிப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ந.சி. கந்தையாபிள்ளை, அ. குமாரசாமிப்புலவர், சரவண முத்துப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை முதலான பலரையும் குறிப்பிடலாம். இசை நூலாசிரியர்களாக பரமானந்தப் புலவர், சுவாமி விபுலானந்தர், பிரான்சிஸ்குபிள்ளை, ஆவரங்கால் நமச்சிவாயப்புலவர், விநாயகமூர்த்திச் செட்டியார், பண்டிதர் சச்சிதானந்தர் முதலானோர் விளங்குகின்றனர்.

நாடகத்துறையில் கணபதி ஐயர், இணுவைச் சின்னத்தம்பி, முத்துக்குமாரகவிராயர், கந்தப்பிள்ளை, இன்னாசித்தம்பி, மயில்வாகனப் புலவர், பொன்னையாப் புலவர், சூசைப்பிள்ளை முதலான ஐம்பதிற்கும் மேற்பட்டோரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம். சோதிடத்தில் புலமைபெற்றவர்களாக போசராச பண்டிதர், சோமன், இராமலிங்கையர், சின்னத்தம்பி, வி. சபாபதி ஐயர் ஆகியோரையும்; திறன்மிக்க மருத்துவ எழுத்தாளர்களாக செகராசசேகரன், பரராசசேகரன், வரதபண்டிதர், நாகேசையர், சுப்பிரமணியம் முதலானோரையும் கூறலாம்.

தருக்கவியலாளர்களாக சிதம்பரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், சங்கர பண்டிதர், முருகேச பண்டிதர் போன்றோரைக் குறிப்பிடலாம். கணித நூல்களை இயற்றியவர்களாக காரிவையா, சுவாம்பிள்ளைப்புலவர், கறோல் விசுவநாதபிள்ளை, ஞானச்சகோதரர் பிலிப்பு S.S.J, இளையதம்பி, சின்னத்தம்பி போன்றோரையும்; மோற்றிமர் குலசேகரரை கப்பல் சாத்திர நூலாசிரியராகவும் குறிப்பிடலாம். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரை மொழி நூலாசிரியராகவும், புலவர் வரலாற்று நூல்களை இயற்றியவர்களாக சைமன் காசிச்செட்டி, அ. சதாசிவம்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அ. குமாரசாமிப்புலவர், சி. கணேசையர், இரத்தினேசுவர ஐயர், அ. சிவகுருநாதன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.

இலக்கண நூலாசிரியர்களாக கூழங்கைத் தம்பிரான், சவுந்தரநாயகம்பிள்ளை, அப்பாபிள்ளைப் போதகர், வ. குமாரசாமிப்புலவர், ச. ஜகநாத ஐயர், த. கைலாசபிள்ளை, நவநீத கிருஷ்ண பாரதியார், பொன் இராமநாதன் முதலானோரைக் குறிப்பிடலாம். சமயம்சார்ந்த கண்டன நூலாசிரியர்களாக ஆறுமுக நாவலர், விசுவநாதபிள்ளை, முத்துக்குமார கவிராயர், சி.வை. தாமோதரம்பிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதர், சிலம்புநாதபிள்ளை, வல்வை வயித்தியலிங்கப்பிள்ளை, அருளப்ப முதலியார், காசிவாசி செந்தில்நாதையர் முதலானோரைக் குறிப்பிடலாம்.

பலர் ஈழத்தினைப் பற்றியும் அந்நாட்டின் வரலாற்றினை அறியும் பொருட்டும் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளனர். செகராசசேகரன், வையா ஐயர், மயில்வாகனப் புலவர், சிவானந்தன், க. சுந்தரம், கதிர்காமர், முத்துக்கிருஷ்ணர், இராசநாயக முதலியார், கணபதிப்பிள்ளை, வ. சின்னத்தம்பிப் புலவர், வி. கனகசபைப்பிள்ளை, சோமன், முத்துராசகவிராயர் முதலானோர் இயற்றிய நூல்களை ஈழத்தின் தொடக்ககால வரலாற்று நூல்களாகப் பார்க்க முடியும்.

இவற்றோடு அகராதிகள், நிகண்டுகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றை உருவாக்கிய ஆசிரியர்களாக பண்டிதர் சந்திரசேகரம், கு. கதிரைவேற்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ச. சுப்பிரமணிய சாஸ்திரி, வி. கனகசபைப்பிள்ளை, சதாசிவம்பிள்ளை முதலானோரைச் சுட்டலாம்.

ஈழத்துப் பழைய உரையாசிரியர்கள்

ஈழத்தினைச் சேர்ந்த உரையாசிரியர்களாக கூழங்கைத்தம்பிரான், அம்பிகைபாகர், அருளம்பலம், ஆறுமுக நாவலர், ஆறுமுகத் தம்பிரான், ஏகாம்பரப்புலவர், சி. கணேசையர், நா. கதிரவேற்பிள்ளை, ச. கந்தையாபிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதர், சிவசிதம்பர ஐயர், சிவப்பிரகாச பண்டிதர், சுப்பிரமணிய சாஸ்திரி, ஞானப்பிரகாச சுவாமி, ஞானப்பிரகாச தேசிகர், நவநீத கிருஷ்ண பாரதியார், பொன்னம்பலப்பிள்ளை, ச. பூபாலபிள்ளை, ம.க. வேற்பிள்ளை முதலானோரைக் கருதலாம்.

பழம் பதிப்பாசிரியர்கள்

தமிழ்ப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு மக்கி மண்ணோடு மண்ணாக மாறியிருக்கும் எத்தனையோ நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்து காத்து நூலாக்கம் செய்த பழம் பதிப்பாசிரியர்களின் பணி என்றென்றைக்கும் நினைக்கத்தக்கது. பதிப்பாசிரியர் பதிப்பித்த அனைத்து நூல்களையும் குறிப்பது புறநிலை ஆகும்; அவர்தம் பதிப்பு நெறிமுறைகளைக் குறிப்பது அகநிலை ஆகும்.[1] இவ்வாய்வானது பதிப்பாசிரியரின் பதிப்புப் பணிகளை அகநிலையிலும் புறநிலையிலும் ஆராய்வதாக அமைகின்றது. பதிப்பாசிரியர்களைப் பற்றியும் அவர்தம் பதிப்பு நெறிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வதன் மூலம் ஒரு சிறந்த நூற்பதிப்பின் மூலபாடத் திறனாய்வினையும் பதிப்பு வரலாற்றினையும் அறிந்து கொள்ள முடியும். பதிப்பு நெறிமுறைகள் என்பது மரபு வழிப்பட்ட வளர்ச்சியினை உடையதாகும். அந்த மரபு வழிப்பட்ட கோட்பாட்டு வளர்ச்சி என்பது, மூலத்தில் உள்ளதை மாறுதல் இன்றி ஆய்வு நிலையில் தெளிவுற வெளிப்படுத்தக்கூடிய மரபு வழிபட்ட பதிப்பு அறக்கோட்பாட்டினை பதிப்பாசிரியர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். உரையாசிரியர்கள் என்று கூறினாலே இறையானர் களவியல் உரை தொடங்கி இளம்பூரணார் உட்பட்ட தொல்காப்பிய பழைய உரையாசிரியர்களும், குறளுக்கு உரையெழுதிய பதின்மரும், சிலம்பு உரைகூறிய அரும்பத உரையாசியரும், அடியார்க்கு நல்லாரும் நினைவுக்கு எட்டுவதினைப் போல; பதிப்பாசிரியர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு எட்டுபவர்களாக உ.வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர் முதலானோர் காணப்படுகின்றனர். பதிப்பாசிரியர்களை அவர்கள் பிறந்த இடத்தின் அடிப்படையில் வகைப்படுத்திப் பார்க்கும்போது தமிழுலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பதிப்பாசிரியர்கள் தோன்றியுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இத்தகைய வகைப்பாட்டினைப் பற்றியே ‘சுவடிப்பதிப்பாசிரியர்கள்’ என்ற நூலில் சி. இலட்சுமணன் வகைப்படுத்தியும் காட்டியுள்ளார்.

ஈழத்துப் பதிப்பாசிரியர்கள்

தமிழரின் மற்றொரு தாய்வீடான ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பலர் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பதிப்புத்துறையின் வாயிலாக பல்வேறு வகையில் தொண்டாற்றியுள்ளனர். அவ்வகையில் ஏறத்தாழ முப்பதிற்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்களை ஈழத்தின் பழம்பதிப்பாசிரியர்களாக அடையாளம் காண முடியும். ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பதிப்புப் பணிகளை பொதுவாக இலக்கிய, இலக்கணப் பதிப்புப் பணிகள் என்று சுருக்கமாக கூறிவிட இயலாது. இலக்கியம் என்பதை இசை, சோதிடம், தருக்கம், நாடகம் முதலான பல்வேறுபட்ட துறைகளை அடக்கியாளும் ஒரு சொல்லாகக் கருத முடியும். பல துறை சார்ந்த நூல்களையும் பல்வேறு வகைப்பட்ட பதிப்பு நெறிமுறைகளையும் கையாண்டு பதிப்பிக்க வேண்டியது இன்றியமையாதது. ஒரே வகைப்பாட்டினையோ அல்லது ஒரே மாதிரியான அளவுகோலையோ கொண்டு அனைத்து வகையான நூல்களையும் பதிப்பிப்பது என்பது கானல் நீரில் நீந்துவது போன்று யார்க்கும் இயலாத ஒன்றாகும். அந்தவகையில் ஈழத்துப் பதிப்புப்பணி என்பது பல்துறை ஆற்றல்மிக்க அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட  பணி ஆகும். சுவடிகளுக்குள் காணப்பட்ட முத்தமிழைப் போற்றத்தக்கதாய் பதிப்பாக்கம் செய்தவர்களுள் ஈழத்துப் பதிப்பாசிரியர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆவர். படைப்பு, பதிப்பு, ஆய்வு என்னும் முப்பெரும் நிலைகளிலும் பட்டறிவும் மிகுந்த தேர்ச்சியும் பயிற்சியும் உடையவர்கள் ஈழத்துப் பதிப்பாசிரியர்கள். கோப்பாய் அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் – மானிப்பாய் அருணாச்சல சதாசிவம்பிள்ளை, ஆறுமுக நாவலர், கு. கதிரைவேற்பிள்ளை, புலோலியூர் நா. கதிரைவேற்பிள்ளை, வடகோவை சபாபதி நாவலர், சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர், திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை, சி. கணேசையர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சிறுப்பிட்டி சி.வை. தாமோதரம்பிள்ளை, மல்லாகம் வி. கனகசபைப் பிள்ளை, மட்டக்களப்பு விபுலானந்த அடிகள், ச. பவானந்தம் பிள்ளை முதலானோரை ஈழத்துப் பதிப்பாசிரியர்களாகக் குறிப்பிடலாம். ஈழத்துப் பதிப்பாசிரியர்களைத் தவிர்த்து தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதுதல் என்பது யார்க்கும் இயலாத ஒன்றாகும். ஏனெனில், இவர்களது தமிழ்ப்பணி என்பது பதிப்புப்பணியும் சமயப்பணியும் இணைந்தது ஆகும்.

சி.வை. தாமோதரம்பிள்ளை

சி.வை. தாமோதரம்பிள்ளை தம்முடைய வீரசோழியப் பதிப்புரையில் தமிழ்மொழி குறித்தும், தமிழுக்கும் வடமொழிக்குமான தொடர்புகள் குறித்தும்; தமிழ்மொழிக்கு ஆதியிலக்கணம் செய்தவர் மட்டுமே அகத்தியர், தமிழ் மொழியை உருவாக்கியவர் அல்ல என்பதையும்; பல்வேறு இலக்கியங்களின் மேற்கோள் பாடல்வரிகளை சான்றாதாரமாக்கி விளக்கிக்காட்டுகின்றார். அத்தோடு அன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் காணப்பட்ட தமிழர்கள் மீதான தொன்மங்களை வெளிப்படையாக மறுத்தும் வடமொழியில் திராவிடம் என்றச் சொல்லின் பொருள், கோடி மண்டலமே தவிர தமிழ் என்பது அன்று என்பதையும் விளக்கி தமது பதிப்புரையினை ஐம்பது பக்கத்திற்கும் மேற்பட்ட ஆய்வுரையாக அமைத்துச் சென்றுள்ளார். தமிழ்மொழியின் காலத்தை இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் சங்ககாலம், சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தியியக்க காலம், சிற்றிலக்கிய காலம் போன்ற இலக்கிய வகைகளால் பிரித்தும் மூவேந்தர் காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என ஆட்சியாளர்களின் பெயர்களால் வகைப்படுத்தியுமே உள்ளனர். ஆனால் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழியின் காலத்தினை அபோத காலம், அஷர காலம், இலக்கணகாலம், சமுதாயக்காலம், சமண காலம் [2] எனப் பாகுபடுத்தி விளக்கியிருப்பது பதிப்பாசிரியர்கள் மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்கள் என்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. தனது பதிப்பிற்கு உதவிய தமிழ் அறிஞர்களோடு சமஸ்கிருத மொழி வல்லாளர்களின் பெயர்களையும் குறிப்பிடுவதை அவரது பதிப்பு அறமாகவே கருத இடமுள்ளது.

உ.வே. சாமிநாதையர்

உ.வே. சாமிநாதையர் அவர்களின் முதல் பதிப்புகளைவிட அவருடைய அடுத்தடுத்த பதிப்புகளில் அவர் மேற்கொண்ட பதிப்பு வளர்ச்சிகளைக் காண முடியும். ‘அவர் தொடக்ககாலத்தில் பதிப்பித்த சீவகசிந்தாமணியைவிட மணிமேகலைப் பதிப்பும், பத்துப்பாட்டைவிட குறுந்தொகையும் பல பாடவேறுபாட்டுப் பதிவுகளைப் பெற்றுள்ளன. பதிப்புப் பணியில் நன்கு திறமை பெற்ற பின்பு, அதனால் அடைந்த மொழித்திறனால் தொடர்ந்து வந்த பதிப்புகள் வளர்ச்சி காட்டின எனவும், அவற்றில் குறிப்புகள் மிகுதியாகி, விளக்கங்கள் அளவிற் பெருகி, பதிப்பு முதிர்ச்சியும், பதிப்புச் செய்திறனும், பதிப்புச் செம்மையும் கொண்டன’ [3] என அன்னிதாமசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இடைச்செருகல்கள்

பதிப்பாசிரியர்கள் அக்காலகட்டத்தில் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று இடைச்செருகல்கள் மிகுந்திருத்தல் ஆகும். எவையெவை மூலம், எவையெவை இடைச்செருகல் என்பதை எளிதில் அறிந்துகொள்ள இயலாத வகையில் இடைச்செருகல்கள் மிகுந்திருந்தன. பதிப்புத்துறையில் நன்றாகப் புலமையும் ஆழ்ந்த அனுபவமும் பெற்றிருந்தவர்களும் இத்தகைய இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. அந்த வகையில் உ.வே. சாமிநாதையர் தமது சுயசரிதையில் தான்கண்ட இடைச்செருகல் பற்றிக் குறிப்பிடும்போது, பாகவதச்சுவடிகளைப் பதிப்பித்த இராசகோபாலப்பிள்ளை அவர்களிடம், தான் பாகவத்சுவடிகளில் காணாத நூலாசிரியர் பெயர், வணக்கச்செய்யுள் ஆகியவை நூலில் இருப்பதாகவும், அவை எங்கிருந்து கிடைத்தன என தான் வினவியதாகவும், அதற்கு இராசகோபாலப்பிள்ளை “அந்த நூலை நான் பதிப்பிக்கவில்லை” என்றும் “என் பெயரைப்போட்டு யாரோ பதிப்பித்து விட்டார்கள்” என்றும் கூறியதாகக் குறிப்பிடுகின்றார். பிற்காலத்தில் செவ்வைச்சூடுவார் என்பவரே பாகவத்தின் ஆசிரியர் என்பதும், அச்சிட்டவர்களால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்தான் ‘சிந்தகத்து’ எனும் வணக்கச்செய்யுள் என்பதும் தமக்குத் தெரியவந்ததாகவும் குறிப்பிடுகின்றார் [4]. இவ்வாறு பல்வேறு இடைச்செருகல்களைக் கண்டறிந்தும் அவற்றினை நீக்கி பதிப்பிக்க வேண்டிய கடைமை பதிப்பாசிரியர்களைச் சேர்ந்ததாகும்.

பிற பதிப்பாசிரியர்களின் உதவியை நாடல்

பதிப்பாசிரியர் ஒரு நூலினை பதிப்பிக்க விரும்புகின்றார் எனில் அதற்கு பல்வேறு அறிஞர்களின் உதவியும் தேவையானதாக உள்ளது. தனது பதிப்பில் உள்ள பிழைகளைக் களைய வேண்டுமெனில் அதற்குப் பிற பதிப்பாளர்களின், அறிஞர்களின் புலமையும் இன்றியமையாததாகின்றது. சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் கலித்தொகையினை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பிக்க முற்படும்போது, கலித்தொகை முழுமைக்குமான மெய்ப்புத்திருத்தல் பணிக்காக உ.வே. சாமிநாதையரை நாடியுள்ளார். அப்பொழுது உ.வே.சா அவர்களும் அவருக்கு மெய்ப்புத்திருத்தல் பணியில் உதவியுள்ளார் என்பதையும் சுயசரிதம் வாயிலாக அறியமுடிகின்றது [5].

பதிப்புத்துறையில் புது முயற்சிகள்

ஆரம்ப காலகட்டங்களில் பதிப்புத்துறையில் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஓலைச்சுவடிகளில் என்னென்ன செய்திகள் இருந்தனவோ அவற்றை அப்படியே பதிப்பிக்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருந்தன. குறித்த நடைமுறைகளை மாற்றி முகவுரை எழுதும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர் உ.வே.சாமிநாதையர் ஆவார்.  முகவுரையில் நூலின் சிறப்பையும் அந்நூலால் இன்ன செய்திகள் தெரியவருகின்றன என்பதையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, மேற்கோள் விளக்க அகராதிகள் எனப் பலவற்றை புதியதாக உட்புகுத்தினார். அத்துடன் தம்முடைய ஆராய்ச்சி தொடர்பான செய்திகளையும், தம்மைப் பதிப்பிக்கத் தூண்டியவர்கள், பதிப்பிற்கு சுவடி கொடுத்து உதவியவர்கள், பதிப்பிக்கத் தூணாகத் துணைநின்ற நண்பர்கள் என அனைவரைப் பற்றியும் பதிப்பாசிரியர்கள் தங்களின் பதிப்புரையில் அல்லது பதிப்புகளில் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பதிப்புரையின் கூறுகள்

பதிப்புப் பணியினை மேற்கொள்ளும் பதிப்பாளர்கள் காலந்தோறும் புதிய புதிய மாற்றங்களையும் சேர்க்கைகளையும் செய்துகொண்டே வருகின்றனர். அவற்றுள் படிப்பவர்களுக்கு பொருள் எளிதில் விளங்கும் வகையில் சந்திபிரித்துப் பதிப்பித்தல், தாங்கள் பதிப்பித்த பதிப்புகளுக்கு முதன்மையாகத் தேவைப்பட்ட ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், கடிதப்பிரதிகள் எவையெவை எனவும் அதனைத் தனக்குக் கொடுத்து உதவிய நல்லுள்ளங்கள் யாவர் என்பதையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ஆரம்பகாலகட்டப் பதிப்புகளில் உரைமேற்கோள்களைத் தனியாகப் பிரித்துக்காட்டும் தன்மை காணப்படவில்லை. சி.வை.தா போன்றோர் மேற்கோள்களை இரட்டை மேற்கோள்குறிக்குள் அமைத்திருந்தபோதும் அதற்கான சரியான இடவிளக்கங்களைக் குறிப்பிடவில்லை. அதனால் மேற்கோள்களை தனித்துக் காட்டி இடஞ்சுட்டிப் பதிப்புகளை பதிப்பிக்கத் தொடங்கினர். இதனைப் பதிப்பின் அடுத்தகட்ட வளர்ச்சியாகக் கருத முடிகின்றது.

தொடக்ககாலப் பதிப்புகளை எடுத்துப் பார்த்தோமானால் சுவடிகள் எவ்வடிவத்தில் காணப்பட்டனவோ அதேவடிவத்தில் பதிப்பிக்கப்பட்டன. இதற்குச் சான்றாக தொல்காப்பிய எழுத்ததிகார மழவை மாகாலிங்கையர் பதிப்பைக் காணலாம். அப்பதிப்பிலிருந்து பிறகு வேறுபட்டு நூற்பாக்களும், உரைகளும், மேற்கோள்களும், எடுத்துக்காட்டுகளும், குறியீடுகள் மூலம் தனித்தனியாகக் காட்டப்பட்டன. இதனை ‘‘கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்பு நோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட் சொற்களையும் பிரித்தும், நிறுத்தியும், படிப்பதற்குரிய அடையாளங்களிட்டும் பதிப்பித்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும், பின்னும், முறையே {  } இக்குறிகளை இட்டுள்ளேன்” [6] எனும் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் தொல்காப்பியப்  பதிப்புரையிலிருந்து அறியலாம்.

உரைப்பகுதிகளைப் பிரித்து எழுதுதல், பதிப்புகளில் பாயிரமாக இருந்த பகுதிகளைப் பதிப்புரைகளாக மாற்றி எழுதுதல், இடைச்செருகல்களை நீக்கிப் பதிப்பித்தல், பிற பதிப்புகளுடன் ஒப்புநோக்கிப் பதிப்பித்தல்; உதாரணமாக அகராதி, அரும்பத விளக்கம், மேற்கோள் விளக்கம், ஆகியவற்றைச் சேர்த்தும் பதிப்புகளை வெளியிட்டுள்ளமை ஆகியவற்றைப் பதிப்புகளின் வளர்ச்சி நிலைகளாகக் காணமுடிகின்றது.

பண்டைய பதிப்பாசிரியர்கள் பின்பற்றிய பதிப்பு நெறிமுறைகள் பலவாகும். இந்நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழ்ப் பதிப்புத்துறை வளர்ச்சியில் சிறந்த பங்காற்றியோர்களாக ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, கா. நமச்சிவாயமுதலியார், உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை போன்றோரைக் குறிப்பிடலாம். இவ்வாறான  பதிப்பாசிரியர்களின் பதிப்பு முயற்சியில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது ஆகும். அவ்வகையில் தமிழ்ப் பதிப்புத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சிப் படிநிலைகளைப் பின்வருவனவாகக் கொள்ளலாம்.

  1. தொடக்ககாலப் பதிப்பு நிலைகளிலிருந்து மாறி, மூலபாடச் செய்யுள் தனியாகவும், உரை தனியாகவும் காட்டுகின்ற மரபும்; இவை இரண்டையும் தனித்தனி எழுத்து அளவிலும் வழங்குகின்ற வழமையும் ஏற்பட்டது எனலாம்.
  2. விருத்தியுரையினைப் பதிப்பிக்கும்போது பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, வரலாற்றுப்பகுதியில் எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் என்பவை தனித்தனியாக இனங்காணும் வகையில் அடையாளக்குறிகள் இட்டும் ஒவ்வொன்றிற்குமான இடைவெளிகள் விட்டும் பதிப்பிக்கப்பட்டன.
  3. உரைமேற்கோள்கள் எடுத்தாளப்பட்ட நூல்களின் பெயர்கள் இடஞ்சுட்டி விளக்கப்பட்டுள்ளன.
  4. இந்நூலானது மாணவர்களுக்குப் பயன்படக்கூடியதா, ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியதா? என்பதான விளக்கங்கள் அந்நூலிலையே வழங்கப்பட்டன.
  5. இந்நூற் பதிப்பிற்கான சுவடிகள் யாரால், எந்த நிலையில், எப்படி வழங்கப்பட்டன? என்பதான செய்திகள் தெளிவுற வழங்கப்படலாயின.
  6. ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது, அதற்கு முன்வந்த பிற பதிப்புகளிலிருந்து அந்நூல் எவ்வகையில் சிறப்புப் பெறுகின்றது என்பதான செய்திகள் அவ்வவ் பதிப்புகளிலேயே இடம்பெறலாயின.
  7. முன்னைய பதிப்புகளிலிருந்த பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான திருத்தங்கள் முறையான காரண – காரியத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
  8. ஒரு நூலினைப் பதிப்பிக்க மேற்கொண்ட ஆய்வு முயற்சிகள் யாவும் தொகுப்பாகப் பதிப்புகளில் இடம்பெற்றன. அப்பதிப்பினைப் பயன்படுத்துவோர் எவ்வகையில் அப்பதிப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயன்பாட்டுக்குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
  9. பதிப்பிற்கான பெயர்க்காரணங்கள் குறித்தும் அதற்கான இலக்கணப் பொருத்தங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.
  10. பாட வேறுபாடுகளும் வரலாற்றுக் குறிப்புகளும் அடிக்குறிப்புகளில் வழங்கப்பட்டன.

இவை மாத்திரமல்லாமல் பின்வருவனவான செய்திகளும் பதிப்புகளில் இடம்பெறலாயின:

  • நூலுக்கான முகவுரை, பதிப்புரை, அணிந்துரை என்பன இடம்பெறலாயின.
  • பின்வந்த பதிப்புகளில் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு ஆகியவற்றின் முன்னுரைகள் இடம்பெறலாயின.
  • அந்நூலின் தொன்மை, சிறப்பு, தேவை முதலான செய்திகள் இடம்பெறலாயின.
  • அந்நூலில் இடம்பெற்றுள்ள தெய்வப் பெயர், மக்கட்பெயர், ஆட்சியாளர்கள், நாடுகள், நகரங்கள், ஊர்கள், நதிகள், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள் என்பனவான பல செய்திகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
  • இலக்கண, இலக்கிய நூல்களில் குறிப்புரைகள் இடம்பெறலாயின.
  • செய்யுள் முதற்குறிப்பு அகராதிகள், மேற்கோள் விளக்க அகராதிகள், இடம்விளங்கா மேற்கோள் விளக்க அகராதிகள், அரும்பதவிளக்க அகராதிகள், அநுபந்தம் முதலியவான விடயங்கள் இடம்பெறலாயின.
  • ஒரு நூல் வெளிவருவதற்குப் பொருளுதவி செய்தவர்களின் பட்டியல்களும், ஆய்வியல் உதவிகள் செய்தவர்களின் பட்டியலும் தொழில்நுட்ப உதவிகள் செய்தவர்களின் பட்டியலும் இடம்பெறலாயின.

மேற்கண்டவாறாக தமிழ்ப்பதிப்புலகில் ஏற்பட்ட வளர்ச்சிநிலைகளைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

முடிவுரை        

இவ்வாறு பதிப்புத்துறையில் கண்ணிற்குப் புலனாகாமல் எத்தனையோ வளர்ச்சிகள் பதிப்பாசிரியர்களால் காலந்தோறும் புகுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பதிப்பு நெறிமுறைகளை அவர்களது பதிப்பு நூல்களை வைத்துக்கொண்டு ஆராய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரையின் தன்மையானது அமைந்துள்ளது.

துணைநூற்பட்டியல்

  1. F.X.C. நடராசா, 1957, ஈழமுந் தமிழும், கலைமகள் வெளியீடு, கத்தோலிக்க அனாத அச்சகம், மட்டக்களப்பு.
  2. ப. தாமரைக்கண்ணன், க, 2004, பதிப்புச்செம்பல் சி.வை. தாமோதரம்பிள்ளை (பதிப்புரைகளின் தொகுப்பு), 2 ஆம் பதிப்பு, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.
  3. உ.வே. சாமிநாதையர், 2022, என் சரித்திரம், நற்றிணைப் பதிப்பகம், சென்னை.
  4. ச. வையாபுரிப்பிள்ளை, 2001, புறத்திரட்டு, 3 ஆம் பதிப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
  5. ச. வையாபுரிப்பிள்ளை, 1931, களவியற்காரிகை, 1 ஆம் பதிப்பு, சென்னை.
  6. ச. வையாபுரிப்பிள்ளை, 1955, திவ்யப் பிரபந்தம் முதலாயிரம், 1 ஆம் பதிப்பு, சாது அச்சுக்கூடம், சென்னை.
  7. ச. வையாபுரிப்பிள்ளை, 1944, நான்மணிக் கடிகை, 1 ஆம் பதிப்பு, சக்தி காரியாலயம், சென்னை.
  8. சி. இலட்சுமணன், 2011, சுவடிப் பதிப்பாசிரியர்கள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
  9. ஆறுமுக நாவலர், நன்னூல் காண்டிகையுரை, வித்தியாநுபாலன யந்திரசாலை.

[1] சுவடிப் பதிப்பாசிரியர்கள், பக்.4.

[2] பதிப்புச்செம்பல் சி.வை.தா – வீரசோழியப் பதிப்புரை, ப.31.

[3] பதிப்பியல் – அன்னிதாமசு, ப.18.

[4] என் சரித்திரம் – உ.வே.சா., ப.559.

[5] என் சரித்திரம் – உ.வே.சா., ப.560.

[6] தொல்காப்பியம் – மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை.

The post ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்:அறிமுகம்                            appeared first on Ezhuna | எழுநா.

18.தேன் மல்லி

18.தேன் மல்லி

அரசுவுக்கு இந்திரன் குடில் முன்பு நிற்பதே பெரும் அவஸ்தையாக இருந்தது. அவரின் அம்மாவும், மகனும் வெற்றிகரமாகச் சீரைக் கொடுத்துவிட்டு வர, சென்றவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்து, மகளோடு டெலிபதியில் பேசியபடிக் கிளம்பி இருந்தார்.

மயிலாடும் பாறை தேன்மல்லி இல்லத்தில் முல்லைப் பதட்டத்தோடு கூடத்தை நடையால் அளந்து கொண்டிருந்தார். மாமியார் பேத்தியாளுக்குச் சீரை சேர்த்துவிட்டோம் எனவும் நிம்மதி.

“பாப்பா எப்படி இருக்கா அத்தை?” என வினவ,

“என் பேத்திக்கு...


Read more

17.தேன் மல்லி

17.தேன் மல்லி


புகழேந்திக்கு இரவே உறவினர் ஒருவர் மூலம் மித்ரன், தேன்மல்லி திருமண புகைப்படம் சென்றிருக்க, காலையில் தான் பார்த்தார். மித்ரன் பேண்ட் சட்டையில் இருக்க, அருகில் தேன் மல்லி மணப்பெண் அலங்காரத்திலிருந்தாள். மருமகனைத் தெரிந்தவருக்கு, அருகிலிருக்கும் பெண் யாரெனத் தெரியவில்லை. ஆனாலும் அதிர்ச்சி. யாரும் வேண்டுமென்று விளையாடுகிறார்களோ என நினைத்தவர் தங்கையிடம் கேட்காமல் சுரேந்திரனுக்கு அனுப்பி விவரம் கேட்டார்.

“ஆமாம் அத்தான். பொண்ணு அரசு அத்தான் மகள்”...


Read more

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

3 June 2025 at 11:42

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

C:\Users\computer\Desktop\ATHMAJIV\493264165_1822589748308751_7037754692867415298_n.jpg

_ லதா ராமகிருஷ்ணன்

காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி, தான் செய்துகொண்டிருக்கும் கணினி தட்டச்சுவேலையையும் சரிவர செய்ய இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்’கில் வெளியாகிக்கொண்டிருக்கும் அவருடைய சமீப கால கவிதைகள் அவருடைய வாழ்வியல் சார் நெருக்கடியை, இயலாமையை, அதனால் அவர் ’ஃபேஸ்புக்’ நட்பினரிடம் உதவி யாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, அப்படி அவருக்கு சிலர் உதவ முன்வருவதை, வேறு சிலர் அவரை அதற்காகப் பரிகசிப்பதை, மதிப்பழிப்பதையெல்லாம் கவித்துவம் குறையாத கவிதை களாக வெளிப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் கவித்துவத்தைப் பூரணமாக அனுபவிக்க முடியாதபடி அவருடைய இக்கட்டான நிலை நமக்குள்ளும் ஒரு அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. [கவிஞர் ஆத்மாஜீவை மின்னஞ்சல் மூலம் நான் கண்ட பேட்டி பதிவுகள் இணைய தளத்தில் 28 மார்ச் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு  இதோ: https://www.geotamil.com/…/202…/9055-2025-03-28-18-07-45 ]

ஆத்மாஜீவின் சமீபகால கவிதைகள் சில:

ஒவ்வொரு விடியலிலும் 

இரவின் வாசனை

கவலைகளின் படுக்கையில் 

படுத்திருப்பது நினைவுகளின் 

உடல்.

துயரின் போர்வைக்குள் 

ஒளிந்து கொள்கிறேன்.

ஆறுதல்களின் காற்றில் மனம் 

நொடிநேர ஆசுவாசமாகிறது.

கடந்து போகிற சாலைகளில் 

இரத்தச் சுவடுகள் பதிகிறது.

எனது முகத்தைப் பார்க்கும்போது 

யாரோவின் முகமாகத் தெரிகிறது.

கடவுளே 

எங்கே நான் தொலைந்து போனேன்.

ஆத்மாஜீவ்

உற்சாகம் மிகுந்த 

நொடிகளுக்காக ஏங்குகிறேன்.

கவலைகள் படிந்த 

இந்த முகத்தைப் பிடிக்கவில்லை.

கம்பீரமான வார்த்தைகள் 

ஒதுங்கி நிற்கிறது.

ஒரு காலத்தில் 

சிரித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

கொடுத்துக் கொண்டிருந்த கைகள் 

ஏந்திக் கொண்டிருக்கும் ஓவியத்தை 

வரைகிறேன் இப்போது.

உற்சாகம் இழந்து 

கவலைகள் படிந்த முகத்துடன் 

அலையும் என் கண்களில் படிகிறது 

ஒரு பிச்சைக்காரனின் வலி.

ஆத்மாஜீவ்

#ஆதிவிதையின்_நிழல்

ஜன்னல்கள் எல்லாவற்றையும்

சாத்தி விட்டேன்

அறையின் நடுவில் எரிந்தபடி இருக்கிறது

சிறிய அகல்விளக்கு

அகண்ட நெருப்புக்கோளத்தின்

அடையாளமாக

எனது முக ஓவியம் தீட்டப்பட்ட மேல்சுவற்றில்

இரண்டு நட்சத்திரங்கள் மட்டும்

இடையறாமல் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது

மூன்றாம் கண்ணிற்குள் அமர்ந்து

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில்

எழுத்துகள் எதுவும் பதிக்கப்படவில்லை

வருவதும் போவதற்குமான

இடைவெளிகளில் நிற்கும் கடவுளை

கண்டு கொள்வதாயில்லை யாரும்

திறந்தே இருக்கும் வாசலின் கதவை

தட்டியபடி நிற்கும் கரங்களில் வழிகிற

குருதியிலிருந்து மறுபடி முளைக்கிறது

ஆதிவிதையின் நிழல்

ஆத்மாஜீவ் 

#காற்றில்_புரளும்_காலத்தின்_ஏடுகள்.

காலத்தின் ஏடுகள் காற்றில் புரள்கிறது.

சுவற்றில் வரையப்பட்ட கிறுக்கல்களாய் 

எனது வார்த்தைக் கூட்டங்கள்.

ஈரத்துணியை முறுக்கிப் பிழிவதுபோல் 

இருக்கிறது எனது வாழ்க்கை.

உயிருணர்வு மிக்க நிழல் 

உலவுகிறது.

கனிதரும் மரங்களை வரைகிறேன்.

ஈரமுலராத மண்ணில் வேரூன்றி நிற்கிறது

அது.

கடந்து போகும் பாதையில் இரைந்து 

கிடக்கத்தான் செய்யும் கல்லும் முல்லும்

மெல்ல ஓதுகின்றன 

என்னுள் ஐக்கியமாகும் இறைநிழல்கள்.

எனது துயரங்களின் குரலை 

கருணையுடன் கேட்கும் காதுகளை 

கடவுளின் வரவாக இருப்பில் வைக்கிறேன்.

எதையும் கேட்க விரும்பவில்லை 

நான்.

பயணத்தின் பாதை முடிகிற போது 

வண்டியிலிருந்து இறங்கிச் செல்லும் 

ஒரு வழிபோக்கனின் கடைசி பாதச்சுவட்டில் 

விதை ஒன்றை புதைக்கிறேன்.

யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.

காற்றில் புரளும் காலத்தின் ஏடுகளிலிருந்து 

ஒருக்கால் 

மலர் ஒன்று மலரக் கூடும்.

ஆத்மாஜீவ்

என் வாழ்வின் கடைசித் துயர்

உதிரப்போகும் இலையின் அசைவு.

கல்தூணை விரும்பாதவனின்

எளிமையான விடைபெறுதல்.

சொற்களால் அடையாளப்பட்டவனின் மொழி

தனிமையின் வனாந்தரத்தில் அலைகிறது.

எழுதப்படாத புத்தகத்தின் வெற்றுப் பக்கத்தில்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது

முற்றுப்புள்ளி.

நடந்து கொண்டேயிருக்கிறேன்

பாம்பின் சட்டையை உரித்துக் கொண்டு.

யாசித்து அழுகிய கைகளை

எங்கே சென்று புதைப்பேன்.

ஆத்மாஜீவ்

கவிஞர் ஆத்மாஜீவின் வேண்டுகோள் இது. முடிந்தவர்கள் உதவ மறவாதீர்கள்

கவிஞர் ஆத்மாஜீவ் கைகூப்பிக் கேட்கிறேன்.

நட்பினர்களுக்கு என் அன்பான வணக்கம். 🙏

என் இதயத்திலிருப்பதை என் நட்பினரிடம் மனம்விட்டு சொல்கிறேன். 

ஓரிரு நிமிடங்கள் இந்தப் பதிவை தயவுசெய்து வாசிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படி தொடர்ந்து உதவிகேட்டு பதிவிடுவதும், அதன் லிங்கை இன்பாக் சில் அனுப்பி யாசிப்பதும், எனக்கு மிக அவமானமாகத்தான் இருக்கிறது. ஒரு குற்றவுணர்ச்சியுடன்தான் வேறுவழியின்றி நண்பர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனது உடலும் மனமும் முற்றிலும் தளர்ந்து விட்டது. உணவுக்கான தேவையைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. அன்புமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. 

கழுத்தை நெறிக்கும் கடன்பிரச்சனை ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிகப் படியான மனஉளைச்சலின் காரணமாக மூன்று வாரத்திற்குமுன் நான் மூர்ச்சையிழந்து சாவை சந்தித்து, ஆக்சிஜன் மூலம் மறுஉயிர்த்தெழந்ததில் ஏகப்பட்ட மருத்துவச்செலவு. இரண்டு வாரங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இப்போதும் நீண்ட நேரம் அமரமுடியாதநிலை. மயக்கமும், மிகுந்த அழுத்தமான மனவேதனையும் சூழ்ந்திருக்கிறது.

இப்படி உதவி கேட்டு தொடர்ந்து முகநூலில் பதிவிடுவது பெரிய அவமானமாக இருக்கிறது. முகநூலில் எனக்கான இடம் முற்றிலும் கேலிக்குரியதாகி விட்டது. வாழ்வதற்கான எந்த ஆதாரமும். பிடிப்புமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறேன்.

முகநூல் நண்பர்கள் அவ்வப்போது அனுப்பும் உதவிப் பணத்தில்தான் மருத்துவச் செலவும், உணவுத் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நிறைவாக இல்லையென்றாலும், நட்பினரின் உதவியால்தான் ஓரளவுக்காவது சமாளித்துக் கொள்கிறேன்.

இன்பாக்சில் பலரிடம் உதவி கேட்பது சங்கடமாக இருந்தாலும், உடல் ஒத்துழைக் காத நிலையில்தான் அவமானத்துடன் இப்படி கேட்கவேண்டியதாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே,

கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் இன்று அதையே காரணங்காட்டி பிச்சை யெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த முகநூலை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில் தான் இன்று இந்தப் பதிவை மிகுந்த தயக்கத்துடன் கூனிக்குறுகி பதிவிடுகிறேன்.

உங்களால் முடிந்தது சிறுதொகை என்றாலும், தயவுசெய்து பிச்சையிடுவதாக நினைத்து அனுப்பி உதவுகிறீர்களா? 

கையறுநிலையில் கையேந்தும் ஒருவனுக்கு நீங்கள் அனுப்பித்தரும் சிறு அளவிலான ஆதரவும் எனக்கு, எங்களுக்கு பேருதவியாக இருக்கும்

பணிவுட னும் வணக்கத்துடனும்

இப்படி உதவி கேட்டுதான் வாழ வேண்டுமா? என்ற கேள்வி என்னை தலைகுனிய வைக்கிறது. 

நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால், சென்ற 2024 ஏப்ரல் மாதமே “எல்லாம் முடிந்திருக்கும்”. இதுபோல, “கடன்பிரச்சனை கழுத்தை நெறிக்கிறது தயவு செய்து உங்களாலான உதவியை செய்யுங்கள்”, என்று யாசிக்கும்படியாக பதிவிட வேண்டியதிருந்திருக்காது.

எனக்கு மட்டுந்தான் கடன்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை. உடல் மற்றும் மனஉளைச்சல் பிரச்சனைகளா? இப்படி அசிங்கப்படும்படியாக உதவிகேட்டு கையேந்த வேண்டுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு வேறுவழி தெரியவில்லை. மன்னியுங்கள் நண்பர்களே.

“உடுக்கை இழந்தவன் கைபோல…” என் மீதுள்ள அபிமானத்தில் சில நண்பர்கள் அவ்வப்போது உதவுகிறார்கள்.

“ஒருவரையொருவர் நேசிக்கிற பெருங்குணம் காரணமாக, தன்பக்க மிருக்கும் சிரமங்களுக்கிடையிலும் சிறுதொகையேனும் எனக்கு அனுப்பி உதவி செய்திருக் கிறார்கள் பலர்.

சொல்வதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. உதவிய அனைவரும் மனிதவுருவில் தெய்வமென நன்றியுடன் வணங்குகிறேன்.

எத்தனை முயற்சி செய்தும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, நேர்மறையான சிந்தனைகளில் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித் தாலும், பசியும் கடனும் நெருக்கும்போது, தானாகவே எதிர்மறையில் போய் சிக்கிக் கொள்ள நேர்கிறது. 

கடந்து போகும் என்ற நம்பிக்கையை மட்டும் கடந்துபோகாமல் இறுகப் பிடித்துக் கொண்டு போராடுகிறேன்.

இந்தப் பதிவை முழுதாக வாசித்தவர்களுக்கும், இதைப்போன்றோ, அல்லது இதைவிட சற்றுகூடுதல் குறைவாகவோதான் வாழ்க்கையிருக்கு மென அறிவேன். எனினும், எனது நட்பு வட்டத்திலுள்ள நண்பர்களின் மீதான அதீத நம்பிக்கையில், என்னை நான் வெளியரங்கப்படுத்திக் கொண்டுள்ளேன். பலர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனது கவிதைப் பயிற்சிக்கான ஒரு அருமையான களமாக இந்த முகநூலை பயன்படுத்திக் கொண்டிருந்த நான், இன்று என்னை ஒரு கவிஞனாக முன்னிலைப்படுத்தி கையேந்திக் கொண்டிருக்கிறேன் என்பது தவிர இந்த வாழ்க்கைமீது எனக்கு எந்த புகாருமில்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

உதவ மனமிருந்தும் உதவமுடியாத சூழலிருப்பவர்களுக்கும், இதுவரை யிலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

உதவக்கூடிய சாத்தியமுள்ளவர்கள், தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் எந்தவொரு சிறுஉதவியும் எனக்கு பேருதவியாகவே இருக்கும் நண்பர்களே.

நம்பிக்கையுடன், நன்றியுடன்… 🙏

ஆத்மாஜீவ், காலக்ரமம் ஆத்மாஜீவ் என்கிற வி.சி.ராஜேந்திரன், சேலம்

எனது வங்கி மற்றும் GPay விபரங்கள்.

#Bank_Details : Rajendran Chinnasamy

Kotak Mahindra Bank

Branch : Shevapet, Salem.

Account Number : 6249465891

IFSC Code : KKBK0008781

#GPay_Number : 84385 44124

#Name : V.C. Raj

C:\Users\computer\Desktop\ATHMAJIV\APPEAL FROM ATHMAJIV\கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவி தேவை (1) image.jpg

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா

By:Para
1 June 2025 at 00:30

Pa Raghavan

நண்பர்களுக்கு வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று  ஆண்டுவிழா.

* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;

* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;

* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;

* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;

* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;

* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;

* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.

மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.

கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.

வருக.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

ந. பிச்சமூர்த்தி

பிச்சமூர்த்தியைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஒரு காலத்தில் பாரதியைத் தவிர்த்து நான் ரசித்த ஒரே நவீன காலக் கவிஞர் அவர்தான். (ஆனால் இன்று குயிலின் சுருதி புத்தகம் – கவிதைகள் – எனக்குத் தேறவில்லை)

பிச்சமூர்த்தியின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது காதல். இன்று சரியாக வரிகள் நினைவில்லை. காதலன் வருவான், அன்று அலங்கரித்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் காதலி வீட்டுக்கு எதிர்பாராதவிதமாக காதலன் வருகிறான்.  வீடெங்கும் குப்பைகூளம், கை எங்கும் சமையல் மணம், வேளை பார்த்தா நாதர் வந்தார் அசடானேன் என்று சில வரிகளும் கேட்பது அல்ல காதல் தருவதுதான் காதல் என்று தரையில் அமர்ந்தார் என்றும், என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பும் இன்னும் நினைவிருக்கின்றன. இது காதலா, பக்தனுக்கு கடவுள் காட்சி தருவதா? என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்ற கந்தர் அனுபூதி வரிகளை நினைவுபடுத்துகிறது.

பிச்சமூர்த்தியின் கதைகளும் அப்படித்தான். எளிமையினால், காலாவதி ஆகிவிடாத முன்னோடித்தனத்தால், இன்று கிழவனாகிய எனக்கே மங்கலாகவே நினைவில் மிச்சமிருக்கும் ஒரு உலகத்தைக் காட்டுவதால் (உதாரணமாக: ஞானப்பால் சிறுகதையின் அன்னசத்திரம்), சிறு மின்னல் போல அடிக்கும் ஓரிரு வரிகளால் மனதைக் கவர்கின்றன. அவரது கதைகளின் எளிமை நம்மை ஏமாற்றிவிடலாம். ஆனால் அது மேலோட்டமான எளிமை மட்டுமே. உதாரணமாக ஞானப்பால் சிறுகதையை எளிய பண்டாரத்தில் விழிப்பு என்று எண்ணிவிடலாம். ஆனால் அது ஞானோதயம் என்று படித்தால் மனம் நிறைகிறது. அந்த மாதிரி கட்டங்களை மெலிதாகச் சொல்லிச் செல்வதுதான் அவரது பாணி. ஆன்மீகம் கீன்மீகம் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லாத என்னையே அந்தத் தருணத்தை ஆன்மீகமானதாக உணரச் செய்கிறார்.

ஆனால் அவரது சிறுகதைகளில் எதையும் நான் உலகத் தரமானது, மொழிபெயர்க்க வேண்டியது என்று கருதவில்லை. ஒன்று வேண்டுமானால் ஞானப்பால். அவர் என் கண்ணில் முன்னோடி சிறுகதை எழுத்தாளர்தான். தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டால் அவருக்கு ஓரிரண்டு பாராக்கள் கிடைக்கலாம், அவ்வளவுதான்.

பல கதைகள் படிக்கலாம் ரகம். (1961), இரட்டை விளக்கு

முதல் ஃபிடில் சிறுகதையை சாரு நிவேதிதா சிலாகிக்கிறார். என் கண்ணில் சுமார்தான்.

மாய மான் (1961), வரிசை விளக்கு (1961), வெறும் செருப்பு (1977), நெருப்புக்கோழிவானம்பாடி, வேப்பமரம், ஏணி, கணபதி துணை, கல் குமிழிகள், வண்டிக்காரர்கள், மண்ணாசை, பரிசு பெற்ற ஓவியம், பஞ்சகல்யாணி, மலடி மகன், கண்ணம்மா, வண்ணாத்திப்பூச்சி எல்லாம் சுமார்.

, ஈஸ்வர லீலை (1961), நெருக்கடி (1961), தலையெழுத்து (1961). ஒரு பேரட்டி (1961), கோர்ட்டு முத்திரை (1961), வயிறு, வலி, இலக்கிய வழக்கழகனார், கோணங்கள், புசிப்பு, புரட்சிகரமான ஓவியம், பெரிய கண், நாடகம் (1977), ஈயத்தவலை பேரம் (1977), ஆகாசத் தையல் (1977) போன்ற மிக எளிய கதைகளைத் தவிர்க்கலாம்.

அசோகமித்திரன் பிச்சமூர்த்தியைப் பற்றி சாஹித்ய அகடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஒரு அறிமுகப் புத்தகம் எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பிச்சமூர்த்தி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

பொடி சங்கதி #1

31 May 2025 at 05:04

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் எங்கேயோ புயல் மூண்ட நொடியிலேயே மூக்கின் இரு துவாரங்களால் தேடி ஜலதோஷத்தைப் பிடித்துக்கொள்கிற அடியேன், முன்னறிவிப்புகளின்றி திடீரென பெய்த இரவு மழையில் முழுதாக நனைந்து, வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும் என்னுடைய அம்மா பால்கனி கதவைத் திறந்து உட்சபட்ச எச்சரிக்கைக் கூண்டை அவசர அவசரமாக ஏற்றினார். சில நாட்களாக தொடர்பில் இல்லாத கடவுள்களுக்கும் சேர்த்து செய்தி அனுப்பினார். சமையலறையில் சில அலமாரிகளின் கதவைப் பரபரப்பாகத் திறந்து மூடினார். அனைத்து அறைகளிலும் விளக்குகளை வரிசையாக எரியவிட்டார். தண்ணீரை ஆக்ரோஷமாகக் கொதிக்க விட்டார். விளக்கின் ஒளி சரியாகச் சிக்கும் கோணத்திலும் கண்களிலிருந்து சரியான தூரத்திலும் பிடித்துப் பார்த்து மாத்திரைகளின் காலவரையைச் சரிபார்த்தார். அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் யாரும் தயிரை நினைவினாலேக் கூட தொடக்கூடாது எனப் பிரகடனம் செய்தார். திடீரெனப் பெய்தாலும் ஒரு அளவுடன் அல்லவா பெய்திருக்கவேண்டும் என்ற அநியாயத்தை பாத்திரங்களோடு சேர்த்துத் தட்டிக்கேட்டார். எல்லோருக்கும் இதே கனமழை பெய்ததா என்று சிலரை அலைபேசியில் அழைத்து விசாரித்தார். நன்று எப்படியோ போகிறபடி போகட்டும், ஆனால் எனக்கு நேர்கிற அத்தனை தீங்கும் என்னைத் தவிரப் பிறர் தர வாரா என்ற அவரின் ஆழ்ந்த தொடர் நம்பிக்கையின் காரணமாக, கடைசியாக என்னையே கடிந்துகொண்டார்.

இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறும் வரையில் மழை வரும் அறிகுறி வானிலே காற்றிலே யாரின் விழியிலோ தென்படவில்லை. இடிகள் ஒதுங்கத் தோதாக வெறும் மரங்கள் மட்டும் இருந்த நெடுஞ்சாலையை தொட்டதும் மழை வலுத்ததால், தப்பிக்க வழியும் தென்படவில்லை. ஒரு போக்குவரத்து சந்திப்பில் பச்சை விளக்கு விழும் வரை கருணையின்றி நிறுத்திவைக்கப்பட்டோம். கவலைகளின்றி ஆடிப்பாடும் இளம் தமிழ்த் திரை கதாநாயகி போலவோ, எதிராளியின் முகத்தில் ஆவேசமாகக் குத்திவிட்டு கைவளையை பின்னுக்குத் தள்ளியபடி slow-motionஇல் நெற்றியில் வழியும் மழைநீரைத் துடைக்கும் கதாநாயகனைப் போலவோ அல்லாமல், மௌனமாக மொட்டைத் தலையில் மழையை வாங்கியபடி அமர்ந்திருந்தேன். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பின் ஒரு கூரைக்கு அடியில் சேர்வதற்குள் என் காதுகளில் அலையடித்தது. புதிதாகக் காதலில் விழுந்தவன் போல முதுகுத்தண்டு சில்லிட்டது. காலணிகளில் தேங்கியிருந்த இரண்டு குளங்களில் நிலைபெற்று வளர்ந்து வளைந்ததால் தான் அவை கெண்டைக் கால்களோ என்று தோன்றியது. கால்சட்டையில் அவசரமாகத் திணிக்கப்பட்டிருந்த கைக்குட்டையோடு சேர்ந்து சில பழைய சோகங்களையும் சேர்த்தே பிழியமுடிந்தது.

அடுத்த சில நாட்களில் என்னைப் பீடிக்கப் போகிற நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி, இரவெல்லாம் அவற்றைத் திருத்தி காலையில் எனக்காகக் காத்திருந்த அம்மாவின் முன்னே முழு ஆரோக்கியத்துடன் காட்சி தந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். தொண்டையில் சிறு கிச் கீச் கூட இல்லை. எதை விழுங்கினாலும் நள்ளிரவு கடற்கரைச் சாலையில் செல்லும் பணக்காரர்களின் வாகனங்களைப் போலத் தடையோ வலியோ இன்றி வழுக்கிக்கொண்டு சென்றது. காய்ச்சலின் மூதாதையரான உடல் வலி எந்தப்பாகத்திலும் தோன்றியிருக்கவில்லை. ஸைபீரியாவிலிருந்து ஒரு வேளை சில பனிக்கரடிகள் வந்து பணிபுரிய நேர்ந்தால் அதற்கு ஏதுவாக அதீதக் குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் அன்று அமர்ந்து வேலை செய்து திரும்பினால் நோய் துவங்கிவிடுமெனக் கணித்த அம்மா, அவரின் போர்க்கால-அடிப்படை நடவடிக்கைகளை சில மணி நேரங்களுக்குத் தள்ளி வைக்க சம்மதித்தார்.

மாலையும் வந்தது, நானும் திரும்பி வந்தேன் – பூங்காற்று தடையின்றி வந்தாடும் வாசலாம் மூக்குத் துவாரங்களுடனும், பிறர் தரும் அறிவுரைகளை இந்தப்பக்கம் வாங்கி அந்தப்பக்கம் சுலபமாக விட ஏதுவாக அடைப்பில்லாத காதுகளுடனும். மற்றுமொரு இரவு கடந்ததும், அம்மா உண்மையிலேயே பீதியடைந்தார். வழக்கமான ஜலதோஷங்கள் இன்றி இது வேறேதோ விபரீதத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் அமைதியான முதல் பகுதி என்று கலவரமடைந்தார். கடவுள்களைப் புறக்கணித்து துஷ்ட சக்திகளைப் பற்றி யோசிக்க துவங்கினார்.  இரண்டு மூன்று நாட்களுக்கு நான் கையை நீட்டினால், காலை நீட்டினால், எழுந்தால், நின்றால், நடந்தால், என் புருவங்கள் சுருங்கினால், என் தொண்டை விழுங்கினால், என் குரல் சற்றே பிசகினால் தீவிரமான சிந்தனையுடன் என்னையே தொடர்ந்து வந்தார். A24 தயாரித்த ஒரு மென் திகில் திரைப்படத்தில் சூழலின் அடர்த்தியை கூட்டவென தென்படும் உருவகக் காட்சிபோல, ஈரம் காய்வதற்கென ஆவென வாயைப் பிளந்தபடி சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த என் சப்பாத்துகள் இவற்றுக்கு நடுவே அவ்வப்போது எங்கள் கண்களில் தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு ஏதும் சம்பவங்கள் நிகழாமல், சில நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த திடீர் மழை எங்கள் வீட்டைக் கடந்தது.

கண்முன்னே தெருவே வெள்ளக்காடானாலும், இடியிடித்து மின்னல் வெட்டி வீடே அதிர்ந்தாலும், வீட்டுக்குள்ளேயே மழை ஒழுகத்துவங்கினாலும், இதெல்லாம் பெரிய மழையில்லை என்று நிராகரிக்க என்னுடைய அம்மா, சில நாட்களுக்குப் பிறகு என்னிடமும் பிறரிடமும் அப்படியென்ன திடீர் மழை பெய்த விட்டதென்றும், அப்படியொன்றும் பெரிய மழையில்லையே, நான்கு தூறல் தூறியிருக்குமா என்றும் கேட்கத் துவங்கினார்.

[**]

அடுத்த அறையில் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சி தொடர்களை சதா கேட்க விதிக்கப்பட்ட சங்கத்தின் சார்பாக நான் ஆணித்தரமாக நிறுவ நினைப்பது – எந்த அலைவரிசை, எந்தத் தொடர் என்ற பேதமின்றி அனைத்திலும் அதே பத்து பதினைந்து பின்னணிக்குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதன் பின்னணியில் ஒரு எளிய, பெரிய தத்துவம் இருக்கிறது. நல்லவர்களுக்கு என சில குரல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கெட்டவர்களுக்கு என சில குரல்கள். கதாநாயக-நாயகிக்கென சில குரல்கள், முதல் வட்டமாக சுற்றி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள், ஒன்று விட்ட வெளி வட்டங்களில் தள்ளி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள். நல்ல மாமியாருக்கு ஒரு குரல், கெட்ட மாமியாருக்கு ஒரு குரல், நடுநிலையான மாமியாருக்கு ஒரு குரல்; கண்டிப்பான குடும்பத் தலைவருக்கென ஒரு குரல், பழைய பனியனுடன் ஓரமாக நிற்கும் குடும்பத்தலைவருக்கென ஒரு குரல்; பணக்காரக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் என்ற பேதமில்லை, நகரத் தொடர்கள், கிராமியத் தொடர்கள் என்ற பேதமில்லை; துணைக் கதாபாத்திரங்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்ட குரல்கள் – முக்கியமான அண்ணிக்கு ஒரு குரல், மாதத்திற்கு ஒரு முறை வருகிற சித்தப்பாவிற்கு ஒரு குரல்; ஆண்பார்வையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இளம் மாமியார்கள், அண்ணிகள், மனைவிகள், நாயகிகள், தங்கைகளுக்குத் தனியான குரல்கள், ஆண்பார்வையில் சிக்காத மற்ற பெண்களுக்கு சகோதரித்தனமான குரல்கள். விசிறியைப் போல விரியும் வண்ணப்பூச்சுகளின் விற்பனை அட்டவணையைப் போல, துல்லியமாக வகுத்துப் பிரிக்கப்பட்ட படிநிலைகளையும் குணநிலைகளையும் கொண்ட குரல்கள், அதே போலப் பகுக்கப்பட்ட பின்னணி இசைத்துணுக்குகளுக்கு இடையிடையே வசனங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதே மனித பாவங்கள், அதே கதைகள், அதே திருப்பங்கள், அதே உணர்வுகள், அதே குரல்கள்.  சளி, காய்ச்சல் மற்றும் இதர உபாதைகளின் ஊடே இளைத்தும் அடர்ந்தும் பிசகினாலும் இந்த நியதி மாறுவதில்லை. காற்றின் அலைவரிசைகள் கலக்கும் ஒரு அபூர்வ தினத்தில், மரங்கொத்திப்பறவையின் குரலில் குயிலோசை கேட்கும் ஒரு அதிசய முகூர்த்தத்தில், நல்ல அண்ணியின் குரல் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து சேர முடியாமல் போக, அதற்குப் பதிலாக ஒலிக்கும் மாமியாரின் மோசமான தங்கைக் குரல் குணம் மாறி ஒலிக்கக் கூடும். எல்லா கைவேலைகளையும் போட்டது போட்டபடி, அடுத்த அறையில் அமர்ந்திருக்கும் என் கால்களை நோக்கி நகர்ந்து நனைக்கும் ஒரு குழப்ப அலையைத் தொடர்ந்து வந்து தொலைக்காட்சியின் முன் நின்றபடி, அந்தப் பிறழ்வை நான் மட்டும் புரிந்தவனாக அரையிருட்டில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி நிற்பேன்.

[**]

பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பெண்ணை முதலில் பார்க்க நேர்ந்தது – இதே நகரத்தில், வேறொரு வாழ்க்கையில், வேறொரு சூழலில். நான் பணிபுரியும் அதே அலுவலகத்தில் அங்கங்கே தென்பட்டார், சில சமயங்களில் நான் பயணிக்கும் அதே அலுவலகப் பேருந்தில் ஏறினார். கடுமையான ஒரு பாவத்தை எப்போதும் தாங்கிய முகம். உடல்மொழியில் அதீத தன்னம்பிக்கை, பார்வையின் வீச்சிலே ஒரு சின்ன சவால். ஒரு முறை அலுவலக உணவு விடுதியில் யாருடனோ எதற்காகவோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு கலங்கிய நினைவு. ஆறேழு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வேறொரு அலுவலகத்தில் அங்கங்கே தோன்றி மறைந்தார். சில சமயங்களில் பொது இடங்களிலும் கண்ணில் தட்டுப்பட்டார். அவருடைய அசாத்திய உயரமும் மத அடையாளங்களும் அவரை மிகச்சுலபமாகத் தனிமைப்படுத்தித் தெரியப்படுத்தின. நான் இன்னும் சில அலுவலகங்கள் மாறி, வீடுகள் மாறி, பத்து வருடங்கள் வழியே வழி மாறி, உருவம் மாறி இந்த வட்டப் பூங்காவைச் சுற்றி நடக்கும் பொழுதுகளில் அவர் மீண்டும் தென்படத்தொடங்கியிருக்கிறார். பூங்காவை ஒட்டிய அந்த வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபடியோ, பூங்கா சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலின் உள்ளே சமையல் செய்தபடியோ, பிள்ளைகள் அவரைச் சுற்றி இல்லாத சில அபூர்வ தருணங்களில் இலக்கின்றி நடந்தபடி, எப்போதையும் போல, என்னைக் கவனிக்காமல் என் இருப்பை அறியாமல் நகர்ந்தபடி. முகத்தில் எப்போதும் இருந்த கடுமை, காலம் பின் விட்டுச்சென்ற கால் தடங்களினால் சற்று கனிந்து கலைந்துவிட்டிருக்கிறது. சிறுகதை என்ற சட்டையை அணிவித்தால் தொளதொளக்கும் இந்தப் பரிச்சயத்தை, ஒரு குறுங்கவிதையின் எல்லையைத் தாண்டி நீளும் இந்த பரிச்சயத்தை அவரிடம் பகிர சில சமயங்களில் நான் விழைந்தாலும், ஒருமுறை கூட அவர் என்னை கவனித்திராததால், திரையில் பார்க்கிற பார்வையாளனாகவே நின்றுவிடுகிறேன். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆணாக நான் தோன்றக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அந்த முயற்சியை ஒவ்வொரு முறையும் கைவிடுகிறேன். என்னக் காரணத்திற்காகவோ எங்கள் இருவரையும் விடாது பின் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிற காலத்தின் முடிவிற்கே மீண்டும் அதைக் கைவிடுகிறேன். காலம் தானே எங்களை stalk செய்கிறது?

[**]

இந்த தள்ளாத நடுத்தர வயதில் என்னுடைய இனிய, சிறிய நட்பு வட்டத்தில் இன்னும் ஒருவரை, ஒரே ஒருவரை, சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக சில விதிமுறைகளை வகுக்க நேர்ந்தது – வாரத்திற்கு நான்கு ரீல்களுக்கு மேலாகப் பகிர்பவராக இருக்கக் கூடாது; பால்புதுமையினருக்கு முன்னுரிமை; பால்பழமையினர் உள்ளே நுழைய வாய்ப்புகள் உண்டு என்றாலும் திருமணமாகிப் பிள்ளைகள் இருந்தால் வாய்ப்புகள் குறைவு; எல்லா வெள்ளிக்கிழமைகள் புதிய தமிழ் மசாலாத் திரைப்படங்கள் பார்த்து கருத்து சொல்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை, கருத்துக் கேட்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி இல்லை; செவ்வாய்க்கிழமையே வாரயிறுதிக்கான திட்டங்களைத் தீட்டுபவராக இருக்க வேண்டும், வெள்ளிக்கிழமை அதைக் கைவிடுபவராக இருக்க வேண்டும்; நல்ல நகைச்சுவையை ரசிப்பவராக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர் என்னுடைய நகைச்சுவையை ரசிக்க நிச்சயம் நேரும்போது வாய்விட்டும் மனம்விட்டும் சிரிப்பவராக இருக்க வேண்டும்; ஜி ஜி என்று விளிப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்; நாட்டை ஆளும் ஜியின் நலம்விரும்பிகள் விண்ணப்பிக்க வேண்டாம்; இளையராஜா ரசிகர்களுக்கு அனுமதி உண்டென்றாலும், பிடித்த ஐந்து பாடல்கள் கேட்கப்பட்டு, அப்படி ஐந்து பாடல்களை உங்களால் சொல்லமுடிந்து விட்டால் துரதிர்ஷ்ட விதமாக நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்; அதிகமாக selfie எடுப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை – அதே அளவு என்னையும் படம் எடுப்பவராக இருந்தால்; திரிஷா ரசிகர்களுக்கு அனுமதியில்லை; ஜெயமோகன் ரசிகர்களுக்கு trial period விதிக்கப்படலாம்; இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு அனுமதியில்லை; மதிய வேளைக்கு முன்னர் சந்திக்க நினைப்பவர்களுக்கு அனுமதியில்லை, மதியம் இரண்டு முதல் ஐந்து மணி வரை சந்திக்க விரும்புபவர்களுக்கு அனுமதியில்லை; உலக சினிமாப் பிரியர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றாலும் நான் கேள்விப்படாத படங்களைப் பார்த்தவராக இருந்தால் சில தடைகள் ஏற்படலாம்;  Whatsapp தவிர்த்த செயலிகளில் பேச விரும்புபவராக இருக்க வேண்டும்; தோன்றும் போதெல்லாம் தொலைப்பேசியில் அழைப்பவராக இருக்கக் கூடாது, தோன்றாத போதும் அழைப்பவராக இருக்கக்கூடாது, அழைக்கத் தோன்றும் பொழுதென்று ஒன்று இருப்பவராக இருக்கக்கூடாது; பிரயாணப்பிரியர்களுக்கு அனுமதியில்லை, பிரியாணிப்பிரியர்களுக்கு சில மேலதிகத் தேர்வுச் சுற்றுகள் இருக்கலாம்; ரோஸ்மில்க் பிரியர்கள் விண்ணப்பத்தில் அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்;  Mutual fundsஇல் முதலீடு செய்வதில் உள்ள நிதி அபாயங்களை நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை; மூன்றிற்கு மேற்பட்ட நண்பர்கள் இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்; என்னுடைய மற்ற நண்பர்களை அறிய விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்; இவை அனைத்தும் பொருந்தி வந்தால் நான் வசிக்கும் சட்டமன்றத் தொகுதி எல்லைக்குள்ளே வசிப்பவராக இருத்தல் மிக அவசியம். விண்ணப்பிக்க விரும்புவோருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

[**]

கண்ணாடிக் கூண்டிற்கு வெளியே பாதுகாப்பாக நின்றபடி வியந்தும் ரசித்தும் நான் பார்க்கிற பிற பெற்றோர்-பிள்ளைகள் கணங்களில் தனித்த நின்றவர்கள் : மூன்றடி உயரத்தில் இரு தோள்களிலும் ஒவ்வொரு புத்தகப் பையைத் தாங்கியபடி தளர்ந்து நடக்கிற தந்தையும், அதே உயரத்திற்கு வளர்ந்து அவரை பின் தொடர்ந்து வரும் மகனும் மகளும்; பயந்தும் அழுதும் முரண்டு பிடித்தும் நின்றபின் தந்தையால் கொஞ்சம் கொஞ்சப்பட்டும், கெஞ்சப்பட்டும், மிஞ்சப்பட்டும் வலுக்கட்டாயமாகத் தனியாக நகரும் படிக்கட்டில் ஏற்றிவிடப்பட்ட சிறுமியும், அதே பயத்துடனும் பதற்றத்துடனும் தட்டுத் தடுமாறி மேலேறி வந்த மூன்றாவது படியில் தாவி பின் தொடர்ந்த தந்தையும்.

[**]

அனைவரும் நலமா?

ந. பிச்சமூர்த்தி

பிச்சமூர்த்தியைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஒரு காலத்தில் பாரதியைத் தவிர்த்து நான் ரசித்த ஒரே நவீன காலக் கவிஞர் அவர்தான். (ஆனால் இன்று குயிலின் சுருதி புத்தகம் – கவிதைகள் – எனக்குத் தேறவில்லை)

பிச்சமூர்த்தியின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது காதல். இன்று சரியாக வரிகள் நினைவில்லை. காதலன் வருவான், அன்று அலங்கரித்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் காதலி வீட்டுக்கு எதிர்பாராதவிதமாக காதலன் வருகிறான்.  வீடெங்கும் குப்பைகூளம், கை எங்கும் சமையல் மணம், வேளை பார்த்தா நாதர் வந்தார் அசடானேன் என்று சில வரிகளும் கேட்பது அல்ல காதல் தருவதுதான் காதல் என்று தரையில் அமர்ந்தார் என்றும், என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பும் இன்னும் நினைவிருக்கின்றன. இது காதலா, பக்தனுக்கு கடவுள் காட்சி தருவதா? என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்ற கந்தர் அனுபூதி வரிகளை நினைவுபடுத்துகிறது.

பிச்சமூர்த்தியின் கதைகளும் அப்படித்தான். எளிமையினால், காலாவதி ஆகிவிடாத முன்னோடித்தனத்தால், இன்று கிழவனாகிய எனக்கே மங்கலாகவே நினைவில் மிச்சமிருக்கும் ஒரு உலகத்தைக் காட்டுவதால் (உதாரணமாக: ஞானப்பால் சிறுகதையின் அன்னசத்திரம்), சிறு மின்னல் போல அடிக்கும் ஓரிரு வரிகளால் மனதைக் கவர்கின்றன. அவரது கதைகளின் எளிமை நம்மை ஏமாற்றிவிடலாம். ஆனால் அது மேலோட்டமான எளிமை மட்டுமே. உதாரணமாக ஞானப்பால் சிறுகதையை எளிய பண்டாரத்தில் விழிப்பு என்று எண்ணிவிடலாம். ஆனால் அது ஞானோதயம் என்று படித்தால் மனம் நிறைகிறது. அந்த மாதிரி கட்டங்களை மெலிதாகச் சொல்லிச் செல்வதுதான் அவரது பாணி. ஆன்மீகம் கீன்மீகம் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லாத என்னையே அந்தத் தருணத்தை ஆன்மீகமானதாக உணரச் செய்கிறார்.

ஆனால் அவரது சிறுகதைகளில் எதையும் நான் உலகத் தரமானது, மொழிபெயர்க்க வேண்டியது என்று கருதவில்லை. ஒன்று வேண்டுமானால் ஞானப்பால். அவர் என் கண்ணில் முன்னோடி சிறுகதை எழுத்தாளர்தான். தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டால் அவருக்கு ஓரிரண்டு பாராக்கள் கிடைக்கலாம், அவ்வளவுதான்.

பல கதைகள் படிக்கலாம் ரகம். (1961), இரட்டை விளக்கு

முதல் ஃபிடில் சிறுகதையை சாரு நிவேதிதா சிலாகிக்கிறார். என் கண்ணில் சுமார்தான்.

மாய மான் (1961), வரிசை விளக்கு (1961), வெறும் செருப்பு (1977), நெருப்புக்கோழிவானம்பாடி, வேப்பமரம், ஏணி, கணபதி துணை, கல் குமிழிகள், வண்டிக்காரர்கள், மண்ணாசை, பரிசு பெற்ற ஓவியம், பஞ்சகல்யாணி, மலடி மகன், கண்ணம்மா, வண்ணாத்திப்பூச்சி எல்லாம் சுமார்.

, ஈஸ்வர லீலை (1961), நெருக்கடி (1961), தலையெழுத்து (1961). ஒரு பேரட்டி (1961), கோர்ட்டு முத்திரை (1961), வயிறு, வலி, இலக்கிய வழக்கழகனார், கோணங்கள், புசிப்பு, புரட்சிகரமான ஓவியம், பெரிய கண், நாடகம் (1977), ஈயத்தவலை பேரம் (1977), ஆகாசத் தையல் (1977) போன்ற மிக எளிய கதைகளைத் தவிர்க்கலாம்.

அசோகமித்திரன் பிச்சமூர்த்தியைப் பற்றி சாஹித்ய அகடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஒரு அறிமுகப் புத்தகம் எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பிச்சமூர்த்தி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

பொடி சங்கதி #1

31 May 2025 at 05:04

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் எங்கேயோ புயல் மூண்ட நொடியிலேயே மூக்கின் இரு துவாரங்களால் தேடி ஜலதோஷத்தைப் பிடித்துக்கொள்கிற அடியேன், முன்னறிவிப்புகளின்றி திடீரென பெய்த இரவு மழையில் முழுதாக நனைந்து, வீட்டு வாசலில் வந்து நிற்பதைக் கண்டதும் என்னுடைய அம்மா பால்கனி கதவைத் திறந்து உட்சபட்ச எச்சரிக்கைக் கூண்டை அவசர அவசரமாக ஏற்றினார். சில நாட்களாக தொடர்பில் இல்லாத கடவுள்களுக்கும் சேர்த்து செய்தி அனுப்பினார். சமையலறையில் சில அலமாரிகளின் கதவைப் பரபரப்பாகத் திறந்து மூடினார். அனைத்து அறைகளிலும் விளக்குகளை வரிசையாக எரியவிட்டார். தண்ணீரை ஆக்ரோஷமாகக் கொதிக்க விட்டார். விளக்கின் ஒளி சரியாகச் சிக்கும் கோணத்திலும் கண்களிலிருந்து சரியான தூரத்திலும் பிடித்துப் பார்த்து மாத்திரைகளின் காலவரையைச் சரிபார்த்தார். அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் யாரும் தயிரை நினைவினாலேக் கூட தொடக்கூடாது எனப் பிரகடனம் செய்தார். திடீரெனப் பெய்தாலும் ஒரு அளவுடன் அல்லவா பெய்திருக்கவேண்டும் என்ற அநியாயத்தை பாத்திரங்களோடு சேர்த்துத் தட்டிக்கேட்டார். எல்லோருக்கும் இதே கனமழை பெய்ததா என்று சிலரை அலைபேசியில் அழைத்து விசாரித்தார். நன்று எப்படியோ போகிறபடி போகட்டும், ஆனால் எனக்கு நேர்கிற அத்தனை தீங்கும் என்னைத் தவிரப் பிறர் தர வாரா என்ற அவரின் ஆழ்ந்த தொடர் நம்பிக்கையின் காரணமாக, கடைசியாக என்னையே கடிந்துகொண்டார்.

இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறும் வரையில் மழை வரும் அறிகுறி வானிலே காற்றிலே யாரின் விழியிலோ தென்படவில்லை. இடிகள் ஒதுங்கத் தோதாக வெறும் மரங்கள் மட்டும் இருந்த நெடுஞ்சாலையை தொட்டதும் மழை வலுத்ததால், தப்பிக்க வழியும் தென்படவில்லை. ஒரு போக்குவரத்து சந்திப்பில் பச்சை விளக்கு விழும் வரை கருணையின்றி நிறுத்திவைக்கப்பட்டோம். கவலைகளின்றி ஆடிப்பாடும் இளம் தமிழ்த் திரை கதாநாயகி போலவோ, எதிராளியின் முகத்தில் ஆவேசமாகக் குத்திவிட்டு கைவளையை பின்னுக்குத் தள்ளியபடி slow-motionஇல் நெற்றியில் வழியும் மழைநீரைத் துடைக்கும் கதாநாயகனைப் போலவோ அல்லாமல், மௌனமாக மொட்டைத் தலையில் மழையை வாங்கியபடி அமர்ந்திருந்தேன். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பின் ஒரு கூரைக்கு அடியில் சேர்வதற்குள் என் காதுகளில் அலையடித்தது. புதிதாகக் காதலில் விழுந்தவன் போல முதுகுத்தண்டு சில்லிட்டது. காலணிகளில் தேங்கியிருந்த இரண்டு குளங்களில் நிலைபெற்று வளர்ந்து வளைந்ததால் தான் அவை கெண்டைக் கால்களோ என்று தோன்றியது. கால்சட்டையில் அவசரமாகத் திணிக்கப்பட்டிருந்த கைக்குட்டையோடு சேர்ந்து சில பழைய சோகங்களையும் சேர்த்தே பிழியமுடிந்தது.

அடுத்த சில நாட்களில் என்னைப் பீடிக்கப் போகிற நோய்களைத் தடுக்கும் வழிமுறைகளை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி, இரவெல்லாம் அவற்றைத் திருத்தி காலையில் எனக்காகக் காத்திருந்த அம்மாவின் முன்னே முழு ஆரோக்கியத்துடன் காட்சி தந்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். தொண்டையில் சிறு கிச் கீச் கூட இல்லை. எதை விழுங்கினாலும் நள்ளிரவு கடற்கரைச் சாலையில் செல்லும் பணக்காரர்களின் வாகனங்களைப் போலத் தடையோ வலியோ இன்றி வழுக்கிக்கொண்டு சென்றது. காய்ச்சலின் மூதாதையரான உடல் வலி எந்தப்பாகத்திலும் தோன்றியிருக்கவில்லை. ஸைபீரியாவிலிருந்து ஒரு வேளை சில பனிக்கரடிகள் வந்து பணிபுரிய நேர்ந்தால் அதற்கு ஏதுவாக அதீதக் குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளில் அன்று அமர்ந்து வேலை செய்து திரும்பினால் நோய் துவங்கிவிடுமெனக் கணித்த அம்மா, அவரின் போர்க்கால-அடிப்படை நடவடிக்கைகளை சில மணி நேரங்களுக்குத் தள்ளி வைக்க சம்மதித்தார்.

மாலையும் வந்தது, நானும் திரும்பி வந்தேன் – பூங்காற்று தடையின்றி வந்தாடும் வாசலாம் மூக்குத் துவாரங்களுடனும், பிறர் தரும் அறிவுரைகளை இந்தப்பக்கம் வாங்கி அந்தப்பக்கம் சுலபமாக விட ஏதுவாக அடைப்பில்லாத காதுகளுடனும். மற்றுமொரு இரவு கடந்ததும், அம்மா உண்மையிலேயே பீதியடைந்தார். வழக்கமான ஜலதோஷங்கள் இன்றி இது வேறேதோ விபரீதத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் அமைதியான முதல் பகுதி என்று கலவரமடைந்தார். கடவுள்களைப் புறக்கணித்து துஷ்ட சக்திகளைப் பற்றி யோசிக்க துவங்கினார்.  இரண்டு மூன்று நாட்களுக்கு நான் கையை நீட்டினால், காலை நீட்டினால், எழுந்தால், நின்றால், நடந்தால், என் புருவங்கள் சுருங்கினால், என் தொண்டை விழுங்கினால், என் குரல் சற்றே பிசகினால் தீவிரமான சிந்தனையுடன் என்னையே தொடர்ந்து வந்தார். A24 தயாரித்த ஒரு மென் திகில் திரைப்படத்தில் சூழலின் அடர்த்தியை கூட்டவென தென்படும் உருவகக் காட்சிபோல, ஈரம் காய்வதற்கென ஆவென வாயைப் பிளந்தபடி சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டிருந்த என் சப்பாத்துகள் இவற்றுக்கு நடுவே அவ்வப்போது எங்கள் கண்களில் தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு ஏதும் சம்பவங்கள் நிகழாமல், சில நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக அந்த திடீர் மழை எங்கள் வீட்டைக் கடந்தது.

கண்முன்னே தெருவே வெள்ளக்காடானாலும், இடியிடித்து மின்னல் வெட்டி வீடே அதிர்ந்தாலும், வீட்டுக்குள்ளேயே மழை ஒழுகத்துவங்கினாலும், இதெல்லாம் பெரிய மழையில்லை என்று நிராகரிக்க என்னுடைய அம்மா, சில நாட்களுக்குப் பிறகு என்னிடமும் பிறரிடமும் அப்படியென்ன திடீர் மழை பெய்த விட்டதென்றும், அப்படியொன்றும் பெரிய மழையில்லையே, நான்கு தூறல் தூறியிருக்குமா என்றும் கேட்கத் துவங்கினார்.

[**]

அடுத்த அறையில் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சி தொடர்களை சதா கேட்க விதிக்கப்பட்ட சங்கத்தின் சார்பாக நான் ஆணித்தரமாக நிறுவ நினைப்பது – எந்த அலைவரிசை, எந்தத் தொடர் என்ற பேதமின்றி அனைத்திலும் அதே பத்து பதினைந்து பின்னணிக்குரல்கள் தொடர்ந்து ஒலிப்பதன் பின்னணியில் ஒரு எளிய, பெரிய தத்துவம் இருக்கிறது. நல்லவர்களுக்கு என சில குரல்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கெட்டவர்களுக்கு என சில குரல்கள். கதாநாயக-நாயகிக்கென சில குரல்கள், முதல் வட்டமாக சுற்றி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள், ஒன்று விட்ட வெளி வட்டங்களில் தள்ளி நிற்கும் குடும்பத்தினருக்கு சில குரல்கள். நல்ல மாமியாருக்கு ஒரு குரல், கெட்ட மாமியாருக்கு ஒரு குரல், நடுநிலையான மாமியாருக்கு ஒரு குரல்; கண்டிப்பான குடும்பத் தலைவருக்கென ஒரு குரல், பழைய பனியனுடன் ஓரமாக நிற்கும் குடும்பத்தலைவருக்கென ஒரு குரல்; பணக்காரக் குடும்பங்கள், ஏழைக் குடும்பங்கள் என்ற பேதமில்லை, நகரத் தொடர்கள், கிராமியத் தொடர்கள் என்ற பேதமில்லை; துணைக் கதாபாத்திரங்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்ட குரல்கள் – முக்கியமான அண்ணிக்கு ஒரு குரல், மாதத்திற்கு ஒரு முறை வருகிற சித்தப்பாவிற்கு ஒரு குரல்; ஆண்பார்வையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இளம் மாமியார்கள், அண்ணிகள், மனைவிகள், நாயகிகள், தங்கைகளுக்குத் தனியான குரல்கள், ஆண்பார்வையில் சிக்காத மற்ற பெண்களுக்கு சகோதரித்தனமான குரல்கள். விசிறியைப் போல விரியும் வண்ணப்பூச்சுகளின் விற்பனை அட்டவணையைப் போல, துல்லியமாக வகுத்துப் பிரிக்கப்பட்ட படிநிலைகளையும் குணநிலைகளையும் கொண்ட குரல்கள், அதே போலப் பகுக்கப்பட்ட பின்னணி இசைத்துணுக்குகளுக்கு இடையிடையே வசனங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதே மனித பாவங்கள், அதே கதைகள், அதே திருப்பங்கள், அதே உணர்வுகள், அதே குரல்கள்.  சளி, காய்ச்சல் மற்றும் இதர உபாதைகளின் ஊடே இளைத்தும் அடர்ந்தும் பிசகினாலும் இந்த நியதி மாறுவதில்லை. காற்றின் அலைவரிசைகள் கலக்கும் ஒரு அபூர்வ தினத்தில், மரங்கொத்திப்பறவையின் குரலில் குயிலோசை கேட்கும் ஒரு அதிசய முகூர்த்தத்தில், நல்ல அண்ணியின் குரல் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து சேர முடியாமல் போக, அதற்குப் பதிலாக ஒலிக்கும் மாமியாரின் மோசமான தங்கைக் குரல் குணம் மாறி ஒலிக்கக் கூடும். எல்லா கைவேலைகளையும் போட்டது போட்டபடி, அடுத்த அறையில் அமர்ந்திருக்கும் என் கால்களை நோக்கி நகர்ந்து நனைக்கும் ஒரு குழப்ப அலையைத் தொடர்ந்து வந்து தொலைக்காட்சியின் முன் நின்றபடி, அந்தப் பிறழ்வை நான் மட்டும் புரிந்தவனாக அரையிருட்டில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி நிற்பேன்.

[**]

பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பெண்ணை முதலில் பார்க்க நேர்ந்தது – இதே நகரத்தில், வேறொரு வாழ்க்கையில், வேறொரு சூழலில். நான் பணிபுரியும் அதே அலுவலகத்தில் அங்கங்கே தென்பட்டார், சில சமயங்களில் நான் பயணிக்கும் அதே அலுவலகப் பேருந்தில் ஏறினார். கடுமையான ஒரு பாவத்தை எப்போதும் தாங்கிய முகம். உடல்மொழியில் அதீத தன்னம்பிக்கை, பார்வையின் வீச்சிலே ஒரு சின்ன சவால். ஒரு முறை அலுவலக உணவு விடுதியில் யாருடனோ எதற்காகவோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஒரு கலங்கிய நினைவு. ஆறேழு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வேறொரு அலுவலகத்தில் அங்கங்கே தோன்றி மறைந்தார். சில சமயங்களில் பொது இடங்களிலும் கண்ணில் தட்டுப்பட்டார். அவருடைய அசாத்திய உயரமும் மத அடையாளங்களும் அவரை மிகச்சுலபமாகத் தனிமைப்படுத்தித் தெரியப்படுத்தின. நான் இன்னும் சில அலுவலகங்கள் மாறி, வீடுகள் மாறி, பத்து வருடங்கள் வழியே வழி மாறி, உருவம் மாறி இந்த வட்டப் பூங்காவைச் சுற்றி நடக்கும் பொழுதுகளில் அவர் மீண்டும் தென்படத்தொடங்கியிருக்கிறார். பூங்காவை ஒட்டிய அந்த வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபடியோ, பூங்கா சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலின் உள்ளே சமையல் செய்தபடியோ, பிள்ளைகள் அவரைச் சுற்றி இல்லாத சில அபூர்வ தருணங்களில் இலக்கின்றி நடந்தபடி, எப்போதையும் போல, என்னைக் கவனிக்காமல் என் இருப்பை அறியாமல் நகர்ந்தபடி. முகத்தில் எப்போதும் இருந்த கடுமை, காலம் பின் விட்டுச்சென்ற கால் தடங்களினால் சற்று கனிந்து கலைந்துவிட்டிருக்கிறது. சிறுகதை என்ற சட்டையை அணிவித்தால் தொளதொளக்கும் இந்தப் பரிச்சயத்தை, ஒரு குறுங்கவிதையின் எல்லையைத் தாண்டி நீளும் இந்த பரிச்சயத்தை அவரிடம் பகிர சில சமயங்களில் நான் விழைந்தாலும், ஒருமுறை கூட அவர் என்னை கவனித்திராததால், திரையில் பார்க்கிற பார்வையாளனாகவே நின்றுவிடுகிறேன். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களைக் கைப்பிடித்து அழைத்து வரும் ஆணாக நான் தோன்றக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அந்த முயற்சியை ஒவ்வொரு முறையும் கைவிடுகிறேன். என்னக் காரணத்திற்காகவோ எங்கள் இருவரையும் விடாது பின் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிற காலத்தின் முடிவிற்கே மீண்டும் அதைக் கைவிடுகிறேன். காலம் தானே எங்களை stalk செய்கிறது?

[**]

இந்த தள்ளாத நடுத்தர வயதில் என்னுடைய இனிய, சிறிய நட்பு வட்டத்தில் இன்னும் ஒருவரை, ஒரே ஒருவரை, சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதற்காக சில விதிமுறைகளை வகுக்க நேர்ந்தது – வாரத்திற்கு நான்கு ரீல்களுக்கு மேலாகப் பகிர்பவராக இருக்கக் கூடாது; பால்புதுமையினருக்கு முன்னுரிமை; பால்பழமையினர் உள்ளே நுழைய வாய்ப்புகள் உண்டு என்றாலும் திருமணமாகிப் பிள்ளைகள் இருந்தால் வாய்ப்புகள் குறைவு; எல்லா வெள்ளிக்கிழமைகள் புதிய தமிழ் மசாலாத் திரைப்படங்கள் பார்த்து கருத்து சொல்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை, கருத்துக் கேட்பவர்களுக்கு நிச்சயம் அனுமதி இல்லை; செவ்வாய்க்கிழமையே வாரயிறுதிக்கான திட்டங்களைத் தீட்டுபவராக இருக்க வேண்டும், வெள்ளிக்கிழமை அதைக் கைவிடுபவராக இருக்க வேண்டும்; நல்ல நகைச்சுவையை ரசிப்பவராக இருக்க வேண்டும், அப்படிப்பட்டவர் என்னுடைய நகைச்சுவையை ரசிக்க நிச்சயம் நேரும்போது வாய்விட்டும் மனம்விட்டும் சிரிப்பவராக இருக்க வேண்டும்; ஜி ஜி என்று விளிப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்; நாட்டை ஆளும் ஜியின் நலம்விரும்பிகள் விண்ணப்பிக்க வேண்டாம்; இளையராஜா ரசிகர்களுக்கு அனுமதி உண்டென்றாலும், பிடித்த ஐந்து பாடல்கள் கேட்கப்பட்டு, அப்படி ஐந்து பாடல்களை உங்களால் சொல்லமுடிந்து விட்டால் துரதிர்ஷ்ட விதமாக நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்; அதிகமாக selfie எடுப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை – அதே அளவு என்னையும் படம் எடுப்பவராக இருந்தால்; திரிஷா ரசிகர்களுக்கு அனுமதியில்லை; ஜெயமோகன் ரசிகர்களுக்கு trial period விதிக்கப்படலாம்; இரவு எட்டு மணிக்கு மேல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு அனுமதியில்லை; மதிய வேளைக்கு முன்னர் சந்திக்க நினைப்பவர்களுக்கு அனுமதியில்லை, மதியம் இரண்டு முதல் ஐந்து மணி வரை சந்திக்க விரும்புபவர்களுக்கு அனுமதியில்லை; உலக சினிமாப் பிரியர்களுக்கு முன்னுரிமை உண்டு என்றாலும் நான் கேள்விப்படாத படங்களைப் பார்த்தவராக இருந்தால் சில தடைகள் ஏற்படலாம்;  Whatsapp தவிர்த்த செயலிகளில் பேச விரும்புபவராக இருக்க வேண்டும்; தோன்றும் போதெல்லாம் தொலைப்பேசியில் அழைப்பவராக இருக்கக் கூடாது, தோன்றாத போதும் அழைப்பவராக இருக்கக்கூடாது, அழைக்கத் தோன்றும் பொழுதென்று ஒன்று இருப்பவராக இருக்கக்கூடாது; பிரயாணப்பிரியர்களுக்கு அனுமதியில்லை, பிரியாணிப்பிரியர்களுக்கு சில மேலதிகத் தேர்வுச் சுற்றுகள் இருக்கலாம்; ரோஸ்மில்க் பிரியர்கள் விண்ணப்பத்தில் அதைத் தெளிவாகக் குறிப்பிடவும்;  Mutual fundsஇல் முதலீடு செய்வதில் உள்ள நிதி அபாயங்களை நன்கு அறிந்தவர்களுக்கு முன்னுரிமை; மூன்றிற்கு மேற்பட்ட நண்பர்கள் இருப்பவர்கள் சந்தேகத்துடனேயே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்; என்னுடைய மற்ற நண்பர்களை அறிய விரும்புபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்; இவை அனைத்தும் பொருந்தி வந்தால் நான் வசிக்கும் சட்டமன்றத் தொகுதி எல்லைக்குள்ளே வசிப்பவராக இருத்தல் மிக அவசியம். விண்ணப்பிக்க விரும்புவோருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

[**]

கண்ணாடிக் கூண்டிற்கு வெளியே பாதுகாப்பாக நின்றபடி வியந்தும் ரசித்தும் நான் பார்க்கிற பிற பெற்றோர்-பிள்ளைகள் கணங்களில் தனித்த நின்றவர்கள் : மூன்றடி உயரத்தில் இரு தோள்களிலும் ஒவ்வொரு புத்தகப் பையைத் தாங்கியபடி தளர்ந்து நடக்கிற தந்தையும், அதே உயரத்திற்கு வளர்ந்து அவரை பின் தொடர்ந்து வரும் மகனும் மகளும்; பயந்தும் அழுதும் முரண்டு பிடித்தும் நின்றபின் தந்தையால் கொஞ்சம் கொஞ்சப்பட்டும், கெஞ்சப்பட்டும், மிஞ்சப்பட்டும் வலுக்கட்டாயமாகத் தனியாக நகரும் படிக்கட்டில் ஏற்றிவிடப்பட்ட சிறுமியும், அதே பயத்துடனும் பதற்றத்துடனும் தட்டுத் தடுமாறி மேலேறி வந்த மூன்றாவது படியில் தாவி பின் தொடர்ந்த தந்தையும்.

[**]

அனைவரும் நலமா?

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.

இருவரும் பேசிப்பேசி தம் காதலை வளர்த்துக்கொண்டனர். அவனுக்கும் பெற்றோர் என சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை. அவளுக்கும் பெற்றோர் இல்லை. அதனால் அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்ல ஒருவரும் இல்லை. அதனால் அவர்களாகவே ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே ஊரில் வசித்தார்கள். ஒவ்வொரு பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. அவன் காலையில் எழுந்ததும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுவெட்டக் கிளம்பிவிடுவான். அவளும் பூந்தோட்டத்துக்குச் சென்று பூக்களை வாங்கிவந்து மாலையாகக் கட்டி விற்பதற்காகக் கிளம்பிவிடுவாள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணம் அவர்களுடைய தேவைக்குப் போதுமானதாக இருந்தது. இருவருடைய இல்வாழ்க்கையும் இனிமையாகக் கழிந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக்கொண்டனர். திருமணமாகி ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை பிறக்கவில்லை. அது ஒன்றுதான் அவர்களுக்கு மனக்குறையாக இருந்தது.

அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக் கோவில்களுக்கும் அவர்கள் சென்று குழந்தைக்காக வேண்டிக்கொண்டனர். ஓராண்டுக்குப் பிறகு ஒரு வழியாக அவள் கருவுற்றாள். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு நான்கு வயது நடக்கும்போது, திடீரென அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். விறகுவெட்டிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நான்கு வயது பிள்ளையை தனியாக வளர்க்க அவன் படாத பாடுபட்டான். விறகு வெட்டச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறுவனையும் அவன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதாக இருந்தது. அவனால் விறகு வெட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. சிறுவனையும் சரியான முறையில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக வேறு வழி தெரியாமல், சிறுவனைப் பார்த்துக்கொள்வதற்காக இன்னொரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டான்.

தாயில்லாத சிறுவனுக்குத் தாயாக இருந்து நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல விதங்களில் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத்தான் அவன் அந்தத் திருமணத்தைச் செய்துகொண்டான். புதிதாக வந்த மனைவியும் தொடக்கத்தில் அச்சிறுவனிடம் மிகுந்த பாசத்தோடு இருந்தாள். சிறுவனும் அந்தப் பெண்ணிடம் கிடைத்த தாய்ப்பாசத்தில் மகிழ்ந்து கவலையில்லாமல் இருந்தான். சித்தியாக இருந்தாலும் அம்மா என்றே அழைத்து மகிழ்ந்தான்.

எல்லாமே அவளுக்கு என ஒரு குழந்தை பிறக்கிறவரை சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பின் அவள் குணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அந்தச் சிறுவனை அவள் வெறுக்கத் தொடங்கினாள். அற்பமான விஷயங்களுக்கெல்லாம் அவன்மீது கோபம் கொண்டு வசைபாடினாள். அவனுடைய தேவைகளை உதாசீனம் செய்யத் தொடங்கினாள். அச்சிறுவன் வயதில் சின்னவனாக இருந்தாலும் தன் சித்தியிடம் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தான். அவள் அச்சிறுவனை ஓர் அடிமை போல நடத்தினாள்.

ஒருநாள் அவளை அவன் அம்மா என்று அழைத்தபோது ‘இனிமேல என்னை அம்மான்னு கூப்புடாத, புரியுதா? நானா உன்ன பெத்தேன்? யாரோ ஒருத்தி உன்ன பெத்துட்டு என் தலையில கட்டிட்டு போயிட்டா. ஒழுங்கா சித்தின்னு கூப்புடு’ என்று கடுமையான குரலில் சொன்னாள். அவனும் அன்றுமுதல் அம்மா என்று அழைப்பதை விட்டுவிட்டான். தனிமையில் இருக்கும்போது அதை நினைத்து அவனுக்கு அழுகையாக வரும். சிறிது நேரம் அழுது மனவேதனையைக் குறைத்துக்கொள்வான்.

சிறுவன் பத்து வயதைத் தொடும் வரை அவள் அமைதியாக இருந்தாள். பிறகு ஒருநாள் கணவன் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில் ‘இன்னும் எத்தனை நாளுக்கு இவனை இப்படியே வீட்டுக்குள்ள வச்சிருக்கறது? பத்து வயசு ஆயிடுச்சி. இப்பவே உலகத்தைப் புரிஞ்சிக்கறதுக்கு அவனைப் பழக்கினாதானே நல்லது’ என்று சொன்னாள்.

‘சரி, அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?’ என்று கேட்டான் கணவன்.

‘நீ வேலைக்குப் போற இடத்துக்கு அவனையும் அழைச்சிட்டு போய் நாலு விஷயங்களை கத்துக் கொடுக்கறதுதான் நல்லது.’

‘விறகுவெட்டக் கத்துக் கொடுக்கணும்னு சொல்றியா?’

‘அதுல என்ன தப்பு? மெல்ல மெல்ல பழகினாதான எல்லாத்தயும் கத்துக்க முடியும்.’

‘அதுக்கென்ன இப்ப அவசரம்? அவனால ஒழுங்கா கோடாலியை தூக்கி நிறுத்தமுடியுமான்னு கூட தெரியலை. உடம்புல சக்தி வேணாம? இன்னும் கொஞ்சம் நாள் போவட்டும். பார்ப்போம்.’

ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பேச்சு தொடங்கியது.

‘வயசுப்பிள்ளை இப்படி ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு சுத்திட்டு வந்தா, எதிர்காலத்துல எதுக்கும் உருப்படியில்லாம போயிடுவான். நான் சொல்றத கேளு. ஏதாவது ஒரு வேலைக்கு அவனை அனுப்பு. அதுதான் அவனுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.’

‘அனுப்பலாம். அனுப்பலாம். இரு. கொஞ்ச நாள் போவட்டும்.’

‘பெத்தவளா இருந்தா, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனா வளர்ப்பாளா? மாத்தாந்தாயா இருந்ததாலதான் இப்படி தறுதலையா வளர்த்திருக்கான்னு எதிர்காலத்துல என்னை யாரும் விரலை நீட்டி சொல்லிடக் கூடாது. அந்த பயத்தாலதான் நான் சொல்றேன். அத நீ புரிஞ்சிக்கணும்.’

‘சரி, அவனை இப்ப என்ன வேலைக்கு அனுப்பலாம். அதையும் நீயே சொல்லு.’

‘எங்கயும் அவன் வேலைக்குப் போவவேணாம். யாருகிட்டயும் கைகட்டி வேலை செய்யவும் வேணாம். இங்க பாரு. நம்மகிட்டயே ஏழு பசுமாடுங்க இருக்குது. அந்த மாடுங்களை தினமும் விளையாட்டா ஏரிப்பக்கமோ, காட்டுப்பக்கமோ, மலையடிவாரத்துக்கோ ஓட்டிட்டுப் போய் மேய்ச்சிட்டு வந்தாவே போதும். அதுவும் ஒரு வேலைதான?’

அவள் எடுத்துச் சொன்ன விதம் அவனுக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது. ‘சரி, ஏதாவது செய்’ என்று அவளுடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டான்.

அடுத்தநாள் காலையில் அவள் தொழுவத்தில் இருந்த ஏழு பசுமாடுகளையும் அழைத்துவந்து அவனிடம் கொடுத்தாள். ‘ஊருக்கு வெளியில மலையடிவாரத்துல பச்சைப்பசேல்னு நல்ல புல்வெளி இருக்குது. அங்க கொண்டுபோய் மேய்ச்சிட்டு வா’ என்று சொன்னாள். மதிய உணவுக்காக ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை நிரப்பிக் கொடுத்து அனுப்பிவைத்தாள்.

மலையடிவாரத்தின் பக்கமாக நல்ல பசுமையான புல்வெளி இருந்தது. அந்தப் புல்வெளியின் பக்கம் பசுக்களை மேய விட்டுவிட்டு, அவற்றின் பின்னாலேயே பாட்டுப் பாடி திரிந்தான். ஒவ்வொரு பசுவுக்கும் அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான். அந்தப் பெயரைச் சொல்லித்தான் அவன் அந்தப் பசுவைக் கூப்பிட்டான். எந்தப் பசுவையும் அவன் பசுவாகவே நினைக்கவில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களாகவே அவற்றை அவன் நினைத்தான். ஏழு பசுக்களும் அவனுக்கு ஏழு நண்பர்கள்.

மதிய வேளையில் வெயில் உச்சிக்கு ஏறியதும் பசுக்களை பக்கத்தில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கவைத்தான். பிறகு மெதுவாக அவற்றை ஓட்டி வந்து நிழலில் உட்கார்ந்து இளைப்பாறவைத்தான். அதற்குப் பிறகுதான் அவன் தான் கொண்டுவந்திருந்த தூக்குவாளியைத் திறந்தான். தூக்குவாளியில் நிறைந்திருந்த நீராகாரத்துக்குள் கையை விட்டு சோற்றைப் பிசைந்தான். அப்போது அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த பசுக்கள் எல்லாம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.

‘என்னங்கடா, சோறு சாப்புடறீங்களா?’ என்று கேட்டான். அவை தலையசைத்ததைப் பார்த்துவிட்டு அவை ஆமாம் என்று சொல்வதாக அவன் நினைத்துக்கொண்டான். ‘ஆகா, உங்களுக்கும் சோறு சாப்பிடணும்ன்னு ஆசை வந்துடிச்சா?’ என்று கேட்டுக்கொண்டே ஏழு பசுக்களுக்கும் நடுவில் சென்று உட்கார்ந்துகொண்டான்.

முதலில் அவன் ஒரு கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிட்டான். அடுத்து மீண்டும் கை நிறைய சோற்றை அள்ளி முதல் பசுவின் வாய்க்குள் ஊட்டினான். அந்தப் பசு பழைய சோற்றை ருசித்துச் சாப்பிட்டு அசைபோட்டது. இப்படியாக அவனும் ஏழு பசுக்களும் சாப்பிட்டு முடித்தார்கள். அதற்குப் பிறகு அவன் அவற்றுக்கு கதைகள் சொன்னான். அவற்றின் முன்னால் பாட்டுப் பாடி ஆடினான். அவையும் அவன் சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டதுபோல தலையை உயர்த்தி ம்மே ம்மே ம்மே என்று விதம்விதமாக குரலெழுப்பி உடலைக் குலுக்கின.

அவன் சாப்பிட்ட பழைய சோறு கொஞ்ச நேரத்துக்குக் கூட தாங்கவில்லை. அடுத்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கத் தொடங்கியது. ஆயினும் சாப்பிட வழி இல்லாத இடத்தில் அதைப்பற்றி நினைப்பதால் ஒரு பயனுமில்லை என்ற எண்ணத்துடன் மெளனமாக பசுக்கள் பின்னால் நடந்துசென்றான்.

அவனுடைய மெளனத்தைக் கொண்டே அவனுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட ஒரு பசு, அவனுக்குப் பின்னால் வந்து அவனை முட்டி தலையாலேயே தள்ளிக்கொண்டு சென்றது. இன்னொரு பசுவுக்கு அருகில் வந்ததும் அவனைக் கீழே தள்ளியது. அவன் அந்தப் பசுவின் பால்மடிக்கு அருகில் விழுந்தான். அதன் மடியில் பால் குடி என்பதுபோல தன் கொம்பால் அவனை முட்டி முட்டி உணர்த்தியது. முகத்துக்கு அருகில் பால்மடியைப் பார்த்ததும் பசு சொல்லவருவது என்ன என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த கணமே அவன் அதன் மடியில் பால் அருந்தத் தொடங்கினான். பால் வயிற்றில் நிறையத் தொடங்கியதும் அவன் பசி அடங்கியது. அதற்குப் பிறகு பசிக்கிற வேளையில் எல்லாம் அவனுக்கு பசுவின் பாலே அமுதமானது.

அவனுக்கு பழைய சோற்றைக் கொடுத்து அனுப்பும் அவனுடைய சித்தி, தன்னுடைய சொந்தப் பிள்ளைக்கு மட்டும் பலவிதமான கறிகளோடு ருசியாக சோறு சமைத்துப் போட்டு, அவன் சாப்பிடுவதை பக்கத்தில் உட்கார்ந்து அழகு பார்த்தாள்.

இரவிலும் அவனுக்கு எல்லோரும் சாப்பிட்டு எஞ்சிய சோறுதான் கிடைத்தது. அவன் எதைப்பற்றியும் எந்தக் குறையும் சொன்னதில்லை. பசி அடங்க ஏதோ ஒரு சாப்பாடு என்பதுதான் அவன் கணக்கு. சாப்பிட்டு முடித்ததும் பசுக்களோடு சேர்ந்து தொழுவத்திலேயே படுத்துக்கொண்டான்.

கஷ்டம் கொடுத்தால் அவனாகவே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எல்லாக் கஷ்டங்களையும் அவன் சகித்துக்கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

என்றைக்காவது அவன் மனச்சோர்வில் முகம்சுருங்கி உட்கார்ந்துவிட்டால், ஒவ்வொரு பசுவாக அவனை நெருங்கிவந்து அவன் முதுகில் முட்டும். அவன் தோள்பட்டையை நாவால் நக்கும். எழுந்து வா என்று சொல்வதுபோல ம்மே என்று குரல் கொடுக்கும்.

பழைய சோறு சாப்பிட்டாலும் அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவே இருந்தான். சத்தான உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அவள் பெற்ற சிறுவன் எலும்புத் தோற்றத்துடன் குச்சியாகவே இருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய எரிச்சல் பலமடங்கு கூடுதலானது. மனத்தில் பொறாமைத்தீ பற்றி எரிந்தது.

அந்தப் பொறாமைத்தீயிலேயே அவள் மனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வெந்து கொதிப்பேறியது.

அவன் இருபது வயது இளைஞனாக வளர்ந்து நின்றான். ஐந்து வயதில் இருந்த அமைதியைவிட அப்போது இன்னும் கூடுதலான அமைதி அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குள் செல்வதே குறைந்துவிட்டது. சாப்பிடுவதற்கு மட்டுமே அவன் வீட்டுக்குள் சென்றான். மற்றபடி பகல் முழுக்க மலையடிவாரத்துப் புல்வெளியிலும் மரத்தடியிலும் இரவு முழுக்க மாட்டுத்தொழுவத்திலும் கழித்தான்.

அவனுடைய வாட்டசாட்டமான தோற்றத்தையும் மகிழ்ச்சியான முகத்தையும் பார்க்கப்பார்க்க அவள் மனச்சங்கடம் பெருகியது. தான் பெற்ற மகன் அதுபோல இல்லையே என்று நினைத்துப் பொறாமைப்பட்டாள். அவனை எப்படியாவது அந்த வீட்டைவிட்டு வெள்யேற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும் என்று அவள் நினைத்தாள்.

அடுத்தநாள் காலை. கோடாலியை எடுத்துக்கொண்டு சந்தை நடைபெறும் ஊருக்கு விறகு வெட்டுவதற்காக அவன் புறப்பட்டான். அப்போது அவள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு வலிப்பதுபோல முனகியபடி இருந்தாள். ஒரு கருப்புத்துணியை எடுத்து நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வலியால் துடிப்பதுபோல நடித்தாள்.

‘ஏன், என்னாச்சி?’ என்று அவளுக்கு அருகில் வந்து கேட்டான் விறகுவெட்டி.

‘தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குது.’

அவன் அவள் நெற்றியைத் தொடுவதற்காகக் குனிந்தான். ‘ஐயையோ, தொடாதீங்க. வலி தாங்க முடியலை’ என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

‘சரி, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. நான் ஓட்டமா ஓடிப்போய் நாட்டு வைத்தியரை அழைச்சிட்டு வரேன்.’

‘அதெல்லாம் வேணாம், இங்க பக்கத்திலயே இரு.’

‘பக்கத்திலயே நின்னுட்டிருந்தா, எப்படி குணமாவும் சொல்லு. பைத்தியமா நீ?’

‘நான் சொல்றதை கோபப்படாம கேக்கறதா இருந்தா, இத எப்படி குணப்படுத்தறதுன்னு நானே சொல்றேன். இதுக்கு என்ன மருந்துன்னு எனக்கு நல்லா தெரியும்.’

‘என்ன மருந்து, சொல்லு. எங்க இருந்தாலும் தேடிப் பார்த்து வாங்கியாறேன்.’

‘கண்டிப்பா எடுத்துவரேன்னு சத்தியம் பண்ணு. அப்பதான் சொல்வேன்.’

‘உன் தலைவலி நல்லாவறதைவிட வேற எது எனக்கு முக்கியம்? எதை எடுத்துட்டு வரணும்னு சொல்லு. ஒரே ஓட்டமா ஓடிப் போய் எடுத்துட்டு வரேன்.’

‘சத்தியம் பண்ணு.’

‘எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் சத்தியமா எடுத்துட்டு வரேன். போதுமா? சொல்லு. எங்க இருக்குது மருந்து?’

‘உன் பெரிய பையனை கொன்னு, அவனுடைய ரத்தத்தை எடுத்துட்டு வா. அதைக் கொண்டுவந்து என் நெத்தியில பூசு. அப்பதான் என் வலி சரியாவும். இதை நீ செஞ்சா, இங்க உன் கூட நான் இருப்பேன். இல்லைன்னா என் புள்ளைய தூக்கிகிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்.’

‘என்ன சொல்ற நீ? கைக்கு உசந்த புள்ள அவன். அவனைப் போய் எப்படி கொல்றது?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனைக் கொன்னு ரத்தத்தை எடுத்துவந்த பிறகு எங்கிட்ட பேசு. இப்ப கெளம்பு.’

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த மனைவியை ஒருமுறை அவன் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சோடு கோடாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அவனுடைய கால்கள் தாமாகவே மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. அவனுடைய முதல் மனைவியின் முகமும் மகனுடைய முகமும் மாறி மாறி அவன் நெஞ்சில் எழுந்து மறைந்தன.

கோடாலியோடு நடந்து வந்த விறகுவெட்டியை பசுக்கள்தான் முதன்முதலில் பார்த்தன. அவனுடைய வருகையின் நோக்கத்தை அவை எப்படியோ தம் நுண்ணுணர்வால் புரிந்துகொண்டன. ஒரு அப்பாவாக இருந்துகொண்டு இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துவிட்டானே என்று நினைத்து அவன் மீது அருவருப்பு கொண்டன. உடனே அந்த மரத்தடியில் நிழலில் உட்கார்ந்திருந்த இளைஞனை அவன் சுலபமாக நெருங்கி விடாதபடி அரண்போல சுற்றி வளைத்துக்கொண்டு நின்றன.

பசுக்களுக்கு அருகில் நெருங்கி வந்த பிறகு விறகுவெட்டி தன் மகனைப் பெயர் சொல்லி அழைத்தான். தன் அப்பா தன்னைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்திருப்பதை உணர்ந்த அந்த இளைஞன் ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எழுந்து நின்று பார்த்தான். அவரை நெருங்குவதற்காக அடியெடுத்து வைத்தான். ஆனால் பசுக்கள் அவனை அடியெடுத்து வைத்து விடாதபடி முதுகாலும் கொம்பாலும் முட்டிமுட்டித் தடுத்தன. அவை தன்னைத் தடுக்கவேண்டுமென்றால் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

ஏழு பசுக்களும் ஆக்ரோஷமாக விறகுவெட்டியைப் பார்த்து குரலெழுப்பின. நெருங்கி வந்துவிடாதபடி கொம்பைச் சுழற்றி மிரட்டின. அதைப் பொருட்படுத்தாமல், மகனைக் கொல்லும் ஆவேசத்துடன் கோடாலியை உயர்த்திப் பிடித்தபடி முன்னோக்கி நடந்துவந்தான்.

அக்கணமே ஒரு பசு கண்ணைமூடி கண்ணைத் திறக்கும் வேகத்தில் அவனை நோக்கி அடியெடுத்துவைத்து முன்னால் சென்று தன் கொம்பால் அவனை முட்டித் தள்ளியது. இன்னொரு பசு முன்னேறி வந்து அவன் கால்களை மிதித்தது. மற்றொரு பசு வேகமாக வந்து அவனுடைய தோள் மீது காலால் உதைத்தது. கோடாலி ஒருபக்கம் நழுவிவிழ, அவன் இன்னொரு பக்கம் விழுந்து உருண்டான். நீண்ட கொம்புடைய ஒரு பசு அவனைத் தன் கொம்பாலேயே முட்டிக்கொண்டு சென்று உருட்டிவிட்டது. இன்னொரு பசு காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டது. அவன் உருண்டோடி கீழே விழுந்தான். அடுத்த கணமே விறகுவெட்டி மீண்டும் நெருங்கிவிடாதபடி இளைஞனை தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு மலை உச்சியை நோக்கி நடந்தது பசு. பிற பசுக்களும் அந்தப் பசுவுக்குப் பாதுகாப்பாக சுற்றிவளைத்தபடி கூடவே நடந்தன.

பசு முட்டி உருட்டிவிட்டதால் ஏற்பட்ட சோர்வும் அவமானமும் விறகுவெட்டியைப் பாடாய்ப் படுத்தின. பசுக்கள் சூழ தன் மகன் தப்பித்துச் செல்லும் திசையையே ஒருவித இயலாமையோடு பார்த்தான். ‘சரி, இதுவும் நல்லதுக்குத்தான்’ என மனத்துக்குள் ஆறுதலாக நினைத்துக்கொண்டான். அப்போதுதான் தன் மனைவி ரத்தம் எடுத்துவரச் சொன்ன கோரிக்கை அவனுடைய நினைவுக்கு வந்தது. மகனே தப்பித்துப் போய்விட்ட பிறகு, ரத்தத்துக்கு என்ன செய்வது என நினைத்துக் குழம்பினான்.

அப்போது அவன் விழுந்துகிடந்த மரத்தைச் சுற்றி இரண்டு அணில்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்தான். உடனே அவற்றை நோக்கி தன் கோடாலியை வீசினான். கோடாலியின் கூர்மையான பகுதியில் வெட்டுப்பட்டு ஓர் அணில் அந்த இடத்திலேயே இறந்தது. அந்த ரத்தம் கோடாலியின் கூர்மையான பகுதியில் படிந்து சொட்டியது. விறகுவெட்டி இறந்துகிடந்த அணிலை நோக்கி வேகமாகச் சென்றான். தன்னிடம் இருந்த துணியை அணிலின் ரத்தத்தில் தோய்த்து நனைத்தான். பிறகு அத்துணியைப் பாதுகாப்பாக தன் பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் தொலைவில் வரும்போதே அவன் வருகையை உணர்ந்துகொண்ட அவனுடைய மனைவி வேகவேகமாக கட்டிலுக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டாள். அம்மா அம்மா என்று வலியில் முனகுவதுபோல முனகத் தொடங்கினாள்.

அவளைப் பெயர் சொல்லி அழைத்தபடி வீட்டுக்குள்ளே வந்த விறகுவெட்டி ‘இதோ, நீ கேட்ட ரத்தம். அவனைக் கொன்று எடுத்துவந்துட்டேன்’ என்று ரத்தம் தோய்ந்த துணியை எடுத்து நீட்டினேன்.

‘நீங்களே நெத்தியை சுத்தி கட்டிவிடுங்க. வலி தாங்கமுடியலையே’ என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல பேசினாள் அவள். கட்டிலில் அவளுக்கு அருகில் உட்கார்ந்த விறகுவெட்டி ரத்தம் படிந்த துணியை அவளுடைய நெற்றியைச் சுற்றி கட்டினான்.

சில நிமிடங்களிலேயே ‘அப்பாடி, இப்பதான் வலி போச்சி’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

மலை உச்சிக்கு இளைஞனை அழைத்துச் சென்ற பசுக்கள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் நிழலில் இறக்கிவிட்டது. ஒவ்வொரு பசுவையும் கட்டியணைத்து அதன் நெற்றியில் நன்றியோடு முத்தம் கொடுத்தான் அவன். இனி வீட்டுப்பக்கம் செல்வதில் பொருள் இல்லை என்று அவன் மனம் நினைத்தது. பசுக்களுக்கும் அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை. இந்த பூமியில் வாழ்ந்த காலம் போதும் என அவை நினைத்தன.

ஏழு பசுக்களும் ஒருகாலத்தில் தம் முன்னோர்கள் வாழ்ந்த காமதேனுவின் உலகத்துக்குச் செல்லப் போவதாக அவனுக்கு வெவ்வேறு குரல்மாற்றத்தின் மூலம் உணர்த்தின. ‘கவனமாக இரு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது’ என்று அவனை வாழ்த்தின. பிறகு இரு புல்லாங்குழல்களைப் பரிசாகக் கொடுத்தன.

‘நாங்க வேற உலகத்துல இருந்தாலும் உன்னை எப்பவும் நினைச்சிட்டிருப்போம். நீ எங்களுக்குப் புள்ளை மாதிரி. நீ மகிழ்ச்சியா இருக்கற சமயத்துல இந்தப் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அந்த இசையைக் கேட்டு நீ சந்தோஷமா இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். நீ துக்கமா இருக்கற சமயத்துல இந்த இன்னொரு புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அதைக் கேட்டு நீ துன்பத்துல இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். உன் உதவிக்கு உடனே நாங்க வந்து உன் துன்பத்தைப் போக்குவோம்’ என்று மூத்த பசு சொன்னது.

பிறகு அவனை அந்த ஆலமரத்தடியில் உட்காரவைத்துவிட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தம் உலகத்துக்குச் சென்றன. அவன் அந்த மரத்தடியையே தன் உலகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொண்டான். பசிக்கும் நேரங்களில் மலைப்பகுதியில் இருக்கும் செடிகளிலும் மரங்களிலும் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பறித்துச் சாப்பிடுவான். எதுவுமே கிடைக்காத நேரத்தில் துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய புல்லாங்குழலை எடுத்து வாசிப்பான். சில நொடிகளில் ஏழு பசுக்களும் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவனுக்குத் தன் பாலையே உணவாகக் கொடுத்து பசியாற்றிவிட்டுச் செல்லும். சந்தோஷமான நேரங்களில் அவன் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு, அவையும் சந்தோஷத்துடன் அவனை நினைத்துக்கொள்ளும்.

ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள். அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.

அவள் தண்ணீர் அருந்தும்போது பொன்னிறமான ஓர் இழை குவிந்த கைக்குள் விழுந்ததைப் பார்த்தாள். உடனே தண்ணீர் அருந்துவதை நிறுத்திவிட்டு, அந்தப் பொன்னிழை என்ன என்று பார்த்தாள். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. எங்கிருந்து பறந்து வந்திருக்கும் என சுற்றுமுற்றும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குத் திரும்பி நடந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் நடந்தனர்.

சிறிது தொலைவு நடந்த பிறகு ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலால் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் கண்களுக்கு ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உருவம் தெரிந்தது. அவனுடைய தலைமுடி பொன்னிழைகளைப்போல படிந்திருப்பதையும் பார்த்தாள். அக்கணமே மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தாள்.

வீட்டுக்குச் சென்றதுமே ஒரு கருப்புத்துணியை எடுத்து தன் நெற்றியைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள் இளவரசி. அவள் சோர்ந்து படுத்திருக்கும் செய்தி அப்போதே அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அரசன் அவளுடைய அந்தப்புரத்துக்கு ஓடோடி வந்தான். அரசனுக்கு அவள் ஒரே மகள். தாயில்லாமல் வளர்க்கப்பட்ட செல்ல மகள். அவளை படுக்கையிலிருந்து எழுப்பி உட்காரவைக்க அரசன் மிகவும் முயற்சி செய்தான். ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.

‘என்னம்மா, உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி படுத்திருக்கே? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. உனக்குத் தேவையானது எங்க இருந்தாலும், அதைக் கொண்டுவந்து உன்கிட்ட சேர்க்கறேன்’ என்றான் அரசன்.

அவள் அதைக் கேட்ட பிறகு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். ‘நம்ம நாட்டு எல்லைக்கு வெளியே இருக்கிற மலையடிவாரத்துல ஒரு ஆலமரம் இருக்குது. அந்த மரத்து உச்சியில ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கான். அவனை நான் பார்த்தேன். அவன் தலைமுடி தகதகன்னு தங்கம் மாதிரி மின்னுது. அவன் ரொம்ப அழகா இருக்கான். அவனை எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க. நீங்க செஞ்சு வைக்கறேன்னு எனக்கு சத்தியம் செஞ்சாதான், நான் இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன்’

‘அவ்ளோதானே? அதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கணும்? இப்பவே ஆளுங்கள அனுப்பி அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன். ஒரு இளவரசியே ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும்போது, வேணாம்ன்னு சொல்றவங்க இந்த உலகத்துல இருக்கறாங்களா என்ன?’

‘அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல எனக்கு நீங்க சத்தியம் பண்ணுங்க. அப்பதான் எனக்கு நம்பிக்கை வரும்.’

‘சத்தியமா அவனை உனக்கு கட்டிவைக்கறேன். போதுமா? எழுந்திரும்மா.’

உடனே அரசன் நம்பிக்கைக்கு உரிய ஏழு வேலைக்காரர்களை அழைத்து விவரத்தைச் சொல்லி ‘அந்த இளைஞனை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி உடனடியா அழைச்சிட்டு வாங்க’ என்று கட்டளையிட்டான். வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக மலையடிவாரத்தை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் முதலில் அரசன் குறிப்பிட்ட கிணற்றை அடைந்தார்கள். அதற்குப் பின் அந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றார்கள். உச்சிக்கிளையில் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கினார்கள்.

அந்த இளைஞனை கைதட்டி அழைத்து ‘உன் கூட ஒரு விஷயம் பேசணுமாம். ராஜா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாரு’ என்றார்கள்.

‘அதெல்லாம் வரமுடியாது. போங்க’ என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். அரசனின் அழைப்பை ஒருவன் மறுப்பான் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. எதை எதையோ சொல்லி கெஞ்சியும் பார்த்தார்கள். ஆனாலும் அவன் இறங்கி வரவில்லை. அவனைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

அதைப் பார்த்ததும் துன்ப நேரங்களில் இசைக்கும் புல்லாங்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான் இளைஞன். அந்த இசை விண்ணுலகத்தில் இருக்கும் பசுக்களுக்குக் கேட்டது. தம் மகன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்பதை அவை புரிந்துகொண்டன.

அக்கணமே ஏழு பசுக்களும் கூடி ஆலமரத்தை நோக்கி வந்தன. அரசனின் பணியாட்கள் இளைஞனிடம் வம்பு செய்துகொண்டிருப்பதைப் பார்த்தன. உடனே அந்த ஆட்களோடு அவை மோதின. தம் கொம்புகளால் அவர்களை முட்டி கீழே தள்ளின. அவர்கள் தரையில் விழுந்து உருண்டார்கள். திடீரென நிகழ்ந்த தாக்குதலால் திகைத்த வேலைக்காரர்கள் அக்கணமே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அரண்மனைக்கு ஓடினார்கள். பசுக்கள் எல்லாம் கூடி இளைஞனுக்கு ஆறுதல் கூறின. அவன் பசிக்கு பால் கொடுத்துவிட்டு, விண்ணுலகத்துக்கு விடைபெற்றுக்கொண்டு சென்றன.

அரண்மனைக்கு ஓடிய வேலைக்காரர்கள் அரசனிடம் நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். ‘இது என்ன, விசித்திரமா இருக்குதே’ என்று குழம்பினான் அரசன்.

பிறகு முப்பது பேரை அழைத்துக்கொண்டு அவனே நேரில் அந்த இடத்துக்குச் சென்றான். அவர்கள் கூட்டமாக தன்னை நோக்கி வருவதை மர உச்சியிலிருந்து இளைஞன் பார்த்துவிட்டான். உடனே வழக்கம்போல துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான். உடனே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் அந்த இடத்துக்கு விரைந்துவந்தன. ஒரு சிறிய படையே தன் மகனை எதிர்ப்பதற்குத் திரண்டு வருவதைப் பார்த்த பசுக்கள் அவர்களை எதிர்கொண்டன. ஒவ்வொருவரையும் கால்களால் உதைத்து கீழே உருட்டிவிட்டன. கொம்பால் முட்டி காயப்படுத்தின. அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அரசனின் படை வேறு வழியில்லாமல் பின்வாங்கி அரண்மனைக்குத் திரும்பியது.

அரசன் தோல்வியோடு அரண்மனைக்குத் திரும்பிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இளவரசி நிராசைக்குள்ளானாள். மனவேதனையுடன் எழுந்திருக்க விருப்பமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அந்தச் செய்தியை அறிந்த அரசனின் மனம் துயரத்தில் மூழ்கியது.

அந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று புரியாமல் இரவு முழுதும் தூக்கமின்றி அரண்மனைத் தோட்டத்தில் உட்கார்ந்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான் அரசன்.

அப்போது பொழுது விடிந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையைத் தொடும் முன்பே தோட்டத்தில் இருந்த மரங்களில் காகங்கள் கூடி கரையும் சத்தம் எழுந்தது. வானத்திலும் சில காகங்கள் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதைப் பார்த்தான். காகங்களின் காட்சியும் அவற்றின் சத்தமும் அச்சமயத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்தன.

‘இறைவனுடைய படைப்புல நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்ச உயிரினம். எந்தத் துயரமும் இல்லாம ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க. என்னை மாதிரி எந்தக் கஷ்டமும் உங்களுக்கு இல்லை’ என்று மனத்துக்குள் நினைத்து பெருமூச்சுவிட்டான்.

அப்போது அவன் முன்னால் ஒரு காகம் வந்து உட்கார்ந்து அவனை நோக்கி குரல் கொடுத்தது. முதலில் அந்தச் சத்தத்தை அரசன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ச்சியாக அந்தக் குரல் எழுந்ததும் ஆர்வத்துடன் அந்தக் காக்கையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அந்தக் காக்கை தன்னை நோக்கித்தான் தலையை அசைக்கிறது என்று நினைத்துக்கொண்டு அதைப் பார்த்து புன்னகைத்தான்.

உடனே அந்தக் காக்கை அரசனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தது. அரசனின் மனம் வியப்பில் மூழ்கியது. ‘அரசே, உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன்’ என்று சொன்னது.

தன்னோடு பேசும் காக்கையைப் பார்த்து அவனுடைய ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. எல்லாம் கடவுளின் கருணை என நினைத்துக்கொண்டு மனத்துக்குள்ளேயே கடவுளுக்கு நன்றி சொன்னான். நடந்த விஷயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்தக் காக்கையிடம் விரிவாகச் சொன்னான் அரசன்.

‘அவன்கிட்ட அதிசயமான ஒரு புல்லாங்குழல் இருக்குது. எங்களைப் பார்த்ததும் அவன் அதை எடுத்து வாசிச்சான். உடனே எங்கிருந்தோ பெரிய பெரிய கொம்பு இருக்கிற பெரிய பெரிய பசுக்கள் ஆகாயத்துலேர்ந்து வந்து எங்களை முட்டி மோதி விரட்டியடிச்சிடுச்சி. அந்தப் புல்லாங்குழலை அவன்கிட்டேர்ந்து எப்படியாவது எடுத்துட்டோம்ன்னா, அவனை ரொம்ப சுலபமா நம்ம வழிக்குத் திருப்பிடலாம்.’

அதைக் கேட்டதும் ‘கவலைப்படாதே. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது காக்கை. அரசனும் தன் தினசரி வேலைகளைப் பார்க்க நிம்மதியாக அரண்மனைக்குத் திரும்பினான்.

அரசன் குறிப்பிட்ட மலையடிவாரத்துக்குப் பறந்துசென்ற காக்கை, அங்கிருந்த ஆலமரத்தையும் அதன் உச்சியில் உட்கார்ந்திருந்த இளைஞனையும் பார்த்தது. ஒருகணம் அவன் அழகைப் பார்த்து ரசித்தது. ‘இப்படிப்பட்ட அழகன் மேல இளவரசி ஆசைப்பட்டதுல ஆச்சரியமே இல்லை’ என்று நினைத்துக்கொண்டது. அவன் உட்கார்ந்திருந்த கிளைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு கிளைக்குச் சென்று சத்தம் காட்டாமல் அமர்ந்து அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தது.

அப்போது அவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருந்தான். அந்த இனிய இசை மயக்கம் தருவதாக இருந்தது. அந்த இசையில் மயங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த காக்கைக்கு சில கணங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. ‘ஓ. இந்தப் புல்லாங்குழலை வச்சிகிட்டுதான் ஆகாயத்துலேர்ந்து பசுக்களை வரவழைக்கிறியா?’ என்று நினைத்துக்கொண்டு மெல்ல அவனுக்கு அருகில் பறந்துவந்து சட்டென அந்தக் குழலை தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்துபோனது.

சற்றும் அதை எதிர்பார்க்காத இளைஞன் அதிர்ச்சியில் மூழ்கினான். இப்படி ஏமாந்துவிட்டோமே என நினைத்து துயரத்தில் மூழ்கினான். சிறிது நேரம் என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு அந்தக் காக்கை பறந்துபோன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகுதான் அவனுக்கு துன்பத்தில் இருக்கும்போது இசைக்கத்தக்க இன்னொரு குழலின் நினைவு வந்தது. உடனே அதை எடுத்து இசைக்கத் தொடங்கினான். அடுத்த கணமே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் இறங்கி வந்தன. ‘என்ன மகனே, என்ன துன்பம்?’ என்று கேட்டன. அவன் நடந்த செய்தியையெல்லாம் அவற்றிடம் சொன்னான்.

‘போகட்டும் விடு. நடந்ததை நெனச்சி கவலைப்படாதே. உனக்கு இன்னொரு புல்லாங்குழல் தரேன்’ என்று பசுக்கள் ஆறுதல் கூறின. புத்தம்புதிதாக இன்னொரு குழலை வரவழைத்து அவனிடம் அளித்தன. பிறகு அவனோடு சிறிது நேரம் கொஞ்சியிருந்துவிட்டு விண்ணுலகத்துக்குத் திரும்பின.

புல்லாங்குழலை எடுத்துச் சென்ற காக்கை அரண்மனைக்குச் சென்று அரசனிடம் கொடுத்தது. அரசன் அந்தக் காக்கைக்கு பலமுறை நன்றி சொன்னான். ‘கவலைப்படாதே அரசே. எந்த சமயத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னை ஒரு நொடி நினைச்சிக்கோ. நான் வந்து என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது. இனி, இளைஞனை வசப்படுத்தி அழைத்துவருவது எளிதான விஷயம் என நினைத்தான் அரசன்.

அடுத்தநாள் காலையில் ஏற்கனவே மலையடிவாரத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களை அழைத்து அந்த இளைஞனை அழைத்துவரும்படி சொன்னான். அவர்கள் அங்கு செல்லவே அஞ்சினர். ‘ஐயோ, அங்க அந்தப் பசுக்கள் வந்து முட்டுமே’ என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். ‘அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நான் சொல்றத நம்புங்க. போய் அழைச்சிட்டு வாங்க’ என்று அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தான்.

காலையில் சென்ற வீரர்கள் அனைவரும் மாலையில் காயங்களோடு ஓடிவந்து அரசன் முன்னால் நின்றார்கள். ‘நீங்க போ போன்னு சொன்னதால நாங்க கெளம்பிப் போனோம். நீங்க வரவே வராதுன்னு சொன்ன பசுக்கூட்டம் இந்த முறையும் வந்துடுச்சி. எங்களையெல்லாம் முட்டிமுட்டி விரட்டியடிச்சிடுச்சி. அந்த இளைஞன் ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். அவன்கிட்ட ஏதோ மந்திரம் இருக்குது. ஒரு புல்லாங்குழல எடுத்து ஊதினா, எல்லாமே நடக்குது’ என்று முறையிட்டார்கள்.

அவர்களை அனுப்பிவிட்டு தனிமையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கினான் அரசன். அவனுடைய புல்லாங்குழலை காக்கை எடுத்துவந்த பிறகு இன்னொரு புல்லாங்குழல் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று நினைத்துக் குழம்பினான்.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி என பல கோணங்களில் யோசித்துப் பார்த்தான். ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் காக்கையிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்தபடி அதை மனத்துக்குள் நினைத்து தியானித்தான். அடுத்து சில கணங்களிலேயே அவனுக்கு எதிரில் கா கா என கரைந்தபடி காக்கை தோன்றியது.

‘துக்கத்துக்கு என்ன காரணம்? இன்னும் பிரச்சினை ஓயவில்லையா?’ என்று கேட்டது. அரசன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் காக்கையிடம் பகிர்ந்துகொண்டான்.

காக்கை எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தது. ‘ஏதோ ஒரு பிழை நடந்திருக்குது. ஒரு ரெண்டுநாள் பொறுத்துக்கோ. நானே கண்டுபிடிச்சி சரி செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.

இளைஞன் உட்கார்ந்திருந்த ஆலமரத்தின் வேறொரு கிளையில் சத்தம் காட்டாமல் அமர்ந்தபடி அவனுடைய நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் கவனிக்கத் தொடங்கிது காக்கை. நாலைந்து நாட்கள் அவனைக் கவனிக்கும் வேலை நீடித்தது. அப்போதுதான் அவனிடம் இரண்டு புல்லாங்குழல்கள் இருப்பதையும் துக்கமான நேரத்தில் இசைக்க ஒரு குழலையும் மகிழ்ச்சியான சமயத்தில் இசைக்க இன்னொரு குழலையும் அவன் மாறிமாறிப் பயன்படுத்தும் ரகசியத்தையும் அது கண்டுபிடித்தது. கடந்த முறை குழலை எடுக்கும்போது என்ன பிழை நடந்தது என்பதை காகத்துக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. மேலும் ஒரு நாள் காத்திருந்து அவன் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இளைஞன் மகிழ்ச்சிக்குழலை இசைத்துக்கொண்டிருந்த சமயத்தில், சந்தடி காட்டாமல் அவனுக்கு அருகில் சென்று, அவன் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த துன்பக்குழலைக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது.

விண்ணுலகத்திலிருந்த பசுக்கள் இளைஞனின் இன்பக்குழலின் இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. தன் மைந்தன் நலமாகவே இருக்கிறான் என நினைத்து மகிழ்ச்சியடைந்தன.

குழலின் இசையில் தன்னை மறந்து கண்ணை மூடி லயித்திருந்த இளைஞன் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கண்களைத் திறந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு அருகில் வைத்திருந்த துன்பக்குழலைக் காணவில்லை என்பதை அவன் உணர்ந்தான். கீழே எங்காவது விழுந்திருக்குமோ என அவனுக்கு சந்தேகம் வந்தது. மரத்திலிருந்து இறங்கிவந்து தரையெங்கும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. கிளையிடுக்குளில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் ஒவ்வொரு கிளையாக ஏறி நின்று மீண்டும் தேடிப் பார்த்தான். அங்கும் கிடைக்கவில்லை. மனமுடைந்து மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.

புதையலைப்போல தனக்குக் கிடைத்த அபூர்வமான குழலைத் தொலைத்துவிட்டோமே என அவன் மனம் துயரத்தில் மூழ்கியது. தான் குழலைத் தொலைத்த செய்தியை எப்படியாவது தன் பசுக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என நினைத்தான். ஆனால் தன்னிடம் துன்பக்குழல் இல்லாத நிலையில் அச்செய்தியைத் தெரிவிப்பது எப்படி எனப் புரியாமல் குழம்பினான். பித்துப் பிடித்தவனைப்போல மகிழ்ச்சிக்குழலை எடுத்து மீண்டும் மீண்டும் இசைத்தான் அவன். விண்ணுலகத்தில் இருந்தபடி அந்த இசையின் நாதத்தைக் கேட்ட பசுக்கள் தன் மைந்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைத் தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவையும் மகிழ்ச்சியில் திளைத்தன.

அப்போது தொலைவில் அரசன் அனுப்பிய ஆட்களின் கூட்டமொன்று ஆலமரத்தை நெருங்கிவருவது தெரிந்தது. அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் மரத்தடியிலேயே அமைதியாக நின்றான். அவனை நெருங்கிவந்த அரசனின் ஆட்கள் அவனைத் தூக்கி ஒரு சிம்மாசனத்தில் உட்காரவைத்து, அதைத் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடந்துசென்றனர். கடுமையான தாக்குதலை எதிர்பார்த்திருந்த அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தபடி அரண்மனையின் வாசலிலேயே அரசன் நின்றிருந்தான். ‘வருக வருக’ என இளைஞனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்தப்புரத்திலிருந்த இளவரசியை தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் அவனுக்கும் அரசன் திருமணம் செய்துவைத்தான். அங்கிருந்த அவைப் பெரியவர்கள் அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.

ஆசைப்பட்ட கணவன் கிடைத்ததை ஒட்டி இளவரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அந்த இளைஞனால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியவில்லை. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என அவன் விரும்பினான். ஆனால் அதற்குச் சரியான வழி தெரியாமல் தவித்தான்.

ஒரு மாதம் கழிந்தது. அந்த இளைஞன் முகம் மலரவே இல்லை. குழல் இசைப்பதையும் விட்டுவிட்டான். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்துக்குச் சென்று நெடுங்காலமாக தான் தங்கியிருந்த ஆலமரத்துக்கு அடியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவான். அவனிடம் மகிழ்ச்சிக்குழல் மட்டுமே இருந்தது. மகிழ்ச்சியே இல்லாத அத்தருணத்தில் அக்குழலை எடுத்து இசைக்க அவன் மனம் விரும்பவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அன்புக்குரிய பசுக்கள் எங்காவது தென்படுகிறதா என அங்குமிங்கும் தேடிப் பார்ப்பான். பிறகு ஏமாற்றத்தோடு திரும்பிவிடுவான்.

இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. துயரம் படிந்த இளைஞனுடைய முகம் மலரவே இல்லை. இளவரசியோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று அவள் கேட்டாலும் அவன் ஒரு பதிலும் சொல்வதில்லை.

ஒருநாள் அவன் வழக்கம்போல காலை உணவுக்குப் பிறகு மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது அவனுக்குத் தெரியாமல் அந்த இளவரசியும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.

விண்ணுலகத்தில் வசித்துவந்த பசுக்களும் இளைஞனிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே என நினைத்து குழப்பத்தில் மூழ்கியிருந்தன. இன்பக்குழலின் இசையும் வரவில்லை, துன்பக்குழலின் இசையும் வரவில்லை என்பதால் ஏதோ ஒரு சிக்கலில் அவன் சிக்கியிருப்பதாக அவை நினைத்தன. எதுவாக இருந்தாலும் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து அதே நாளில் அவையும் பூமிக்கு வந்து சேர்ந்தன.

வழக்கமாக இளைஞன் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையில் அவன் காணவில்லை. ஆலமரத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் அவனைத் தேடிப் பார்த்தன பசுக்கள். எங்கும் அவன் தென்படவில்லை. ஆளுக்கு ஒருபக்கம் நடந்து சென்று தேடிப் பார்க்கலாம் என முடிவெடுத்து ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு பக்கம் நடந்துசென்றது.

மலையடிவாரத்தை நோக்கி வந்த இளைஞன் மரத்தை நெருங்கிவரும் சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒரு பசுவைக் கண்டான். தன் குழலோசை கேட்காமல் விண்ணுலகத்திலிருந்து தம் பசுக்கள் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை என நினைத்து முதலில் அப்பசுவை அவன் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டே இருந்தான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோற்றத்தில் தன் பசுவைப்போலவே அப்பசுவும் காணப்பட்டதால் ஒரு சின்ன சந்தேகத்துடன் நின்றான்.

ஒரு காலத்தில் பசுக்களை அழைக்க வழக்கமாக எழுப்பும் ஓசையை எழுப்பி அதை அழைத்தான். அவன் அழைப்புக்குரலைக் கேட்டதும் அந்தப் பசு திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டது. உடனே ஓடோடி வந்தது. அவனும் அதை நோக்கி ஓடினான். அதன் கழுத்தைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான். அதன் முதுகில் ஏறிப் படுத்தான். ம்மே ம்மே என வெவ்வேறு விதமாக குரலெழுப்பி அவனும் பசுவும் கொஞ்சினர். மறைவிடத்திலிருந்து அக்காட்சியைப் பார்த்த இளவரசி ஆச்சரியத்தில் உறைந்துபோனாள். முதன்முறையாக அந்த இளைஞன் முகம் மலர்ந்திருப்பதை அவள் பார்த்து மகிழ்ந்தாள். அவள் விழிகளிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.

அந்தப் பசு எழுப்பிய குரலைக் கேட்டதும் வெவ்வேறு திசைகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்த பிற பசுக்களும் அந்த இடத்தை நோக்கி ஓடிவந்தன. இளைஞனைப் பார்த்ததும் அவையும் மகிழ்ச்சியில் துள்ளின. ஒவ்வொன்றும் ஓடிவந்து அவனை முட்டி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தது. ஏழு பசுக்களிடையில் அவன் ஒரு சிறுவன் போல மகிழ்ச்சியோடு நின்றிருந்தான்.

கொஞ்சல் எல்லாம் முடிந்த பிறகு அப்பசுக்களிடம் தன்னிடமிருந்த துன்பக்குழல் தொலைந்துபோன செய்தியைத் தெரிவித்தான் அவன். குழல் இசைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்றும் தெரிவித்தான். ‘கவலைப்படாதே’ என்று சொன்ன ஒரு பசு அவனுக்கு புதியதொரு குழலைக் கொடுத்தது. ‘இனிமேல் நீ இதையே துன்பக்குழலா பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தது. ஒரு பெரிய புதையலைப் பெற்றுக்கொள்வதுபோல அவன் அக்குழலைப் பெற்றுக்கொண்டான்.

இளைஞனும் பசுக்களும் உரையாடலில் மூழ்கியிருந்த நேரத்தில் இளவரசி தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். பசுக்களின் முன்னால் தோன்றி வணங்கினாள். இளைஞன் அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களையெல்லாம் பசுக்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவளை பசுக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.

அவனுடைய குழல் தொலைந்துபோனதற்கு தானும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துவிட்டதாகத் தெரிவித்து இளைஞனிடமும் பசுக்களிடமும் மனமார மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் அவள்.

‘அவன் மேல நான் வச்ச ஆசைதான் எல்லாத்துக்கும் காரணமே தவிர, எனக்கு வேற எந்த கெட்ட நோக்கமும் இல்லை.’

அவளுடைய முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்த காதலை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான். அந்தப் பசுக்களும் புரிந்துகொண்டன.

‘நூறாண்டு காலம் மாறாத அன்போடு நீடித்து வாழ்க’ என இருவரையும் பசுக்கள் வாழ்த்தின. இருவரும் பசுக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

‘குழல்களை பத்திரமா வச்சிக்கோ. எப்ப வேணும்ன்னாலும் எங்களை நீ கூப்பிடலாம்’ என்று சொல்லிக்கொண்டே விடைபெற்று ஆகாயத்தில் பறந்துசென்றன.

பசுக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகு இளவரசியும் இளைஞனும் வெகுநேரம் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை பேசினார்கள். இளைஞன் தன் கதையை முழுமையாக அவளுக்கு விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பொழுது சாயும் வரைக்கும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு இருவரும் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள் appeared first on கிழக்கு டுடே.

14.தேன் மல்லி

14.தேன் மல்லி

இந்திரன் குடில் முதலில் அதிர்ந்தாலும், பின் சுதாரித்து, கமலத்தின் ஆணைப்படி பாரதி ஆலம் சுற்றித் தேன் மல்லியை மருமகளாக உள்ளே அழைத்துக் கொண்டார். சொக்கனும், மீனாட்சியும் மணமக்களோடு மூத்த ஜோடியாக வந்து வீட்டின் கடினமானச் சூழலை இலகுவாக்க முயன்றனர்.

“பெரியம்மா, தேனு விளக்கேத்தனுமுல்ல, உங்கப் பூஜை ரூம் எங்க இருக்கு.” என அழைத்துச் சென்று, சேகரன் இல்லத்தில் தன் அத்தைமார் சொல்லச் சொல்லத் தான் செய்த முறைகளைத் தேன்மல்லியையும் செய்ய வைத்தாள்.

தேன் மல்லி...


Read more

ஆன்மாவும் அவரைக்காயும்

By:Para
30 May 2025 at 00:30

Pa Raghavan

எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.

பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.

இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.

அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.

கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.

இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப்  புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அப்புறம் அந்த அவரைக்காய்.

பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.

அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.

பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.

அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.

விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?

செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.

இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!

எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது  அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.

என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான்.  கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

❌