Normal view

Received before yesterday

திணைகள் கவிதை விருது 2025

16 April 2025 at 08:10

இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்…


பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து…

– றியாஸ் குரானா

தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும் மென்மையான வடிவம் என்பதில் இரண்டு கருத்தில்லாதபோதும், அதை அதன் மென்மையான அளவில் வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாத அவசியங்களின் அடியாக மிகக் கவனமாக தேர்வுச் செயலில் இறங்குவது இலக்கிய வெளியில் அறம்சார்ந்த ஒன்று. அந்த அறத்தை எப்போதும் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்பதனால், விருதுக் தேர்வுக்காக என் கைவசம் கிடைத்த அனைத்து நூல்களையும் 20 முழுமையான நாட்களுக்கும் மேலாக நுணுக்கமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும், பல கோணங்களில் அணுகியும்தான் திணைகள் விருதுக்கான இறுதித் தேர்வை செய்திருக்கிறேன். அந்த வகையில், எனது இறுதித் தேர்வு என்பது ‘பூவிதழ் உமேஷ்‘ அவர்களின் ‘துரிஞ்சி’ கவிதை நூலாக இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்வின் போது சவாலாக இருந்த பல நூல்கள் இருந்தன. குறிப்பாக ஐந்து நூல்களைச் சொல்ல முடியும். அவற்றைக் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த வாய்பைத் தந்த திணைகள் விருதுக் குழவினருக்கு மிகுந்த நன்றிகளும் அன்பும். கடந்த இரண்டாண்டுகளில் தமிழின் விரிந்த பரப்பிற்குள் வெளிவந்த அநேக கவிதை நூல்களை ஒரே மூச்சில் வாசிக்கக் கிடைத்ததென்பது, சமகால தமிழ்க் கவிதைகளையும் அவற்றின் இயங்குவெளியையும் அறிந்துகொள்ள பெருவாய்ப்பாகவும் இருந்தது.

சமகாலத் தமிழ்க் கவிதையின் பன்முகப்பட்ட நிலப்பரப்பில், பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ (2023) ஒரு குறிப்பிடத்தக்க அதே சமயம் ஒரு சவாலான பிரசன்னத்தை நிகழ்த்துகிறது. இதுவரையிலான தமிழ்க் கவிதையின் சில பிரதான வழக்குகளிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் ஓர் அழகியல் வேட்கையையும், புனைவின் புதிய சாத்தியங்களைத் தேடும் ஒரு முனைப்பையும் இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது. தருமபுரி நிலத்தின் பிரத்தியேக மணத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அகவுலகச் சிடுக்குகளையும் வெறும் யதார்த்தப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளின் ஊடாக அணுகும் உமேஷின் கவிதைகள், தமிழ்க் கவிதை சார்ந்த சில மனநிலைகளை ஊடறுத்து, தனித்துவமான ஒரு திசைவழியை அக்கறைகொள்கின்றன. நவீனத்துவத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதையின் சில இயல்புகளான பதற்றமான அகவயத்தன்மை, கட்டமைப்புச் சிதறல், அசையும் படிமப் பெருக்கம் போன்றவற்றை நோக்கி நகரும் முனைப்பை கவனத்திற்கொள்ளும் அதே வேளையில், அவற்றைத் தனது பிராந்திய அடையாளத்தோடும் புனைவின் அதீத சாத்தியங்களோடும் இணைத்து, சமகாலத் தமிழ்க் கவிதையின் சில அடிப்படைகளைத் தகர்த்து வெளியேற வேண்டுமென்ற ஒரு தீவிரமான அவாவையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. இந்த அவாவின் வெற்றி, அதன் முழுமை, மற்றும் அது எதிர்கொள்ளும் விமர்சனக் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பார்வை, இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.

‘துரிஞ்சி‘ கவிதை நூலின் மைய உத்தி, யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான எல்லையைத் தொடர்ந்து கலைத்துப் போடுவதில் தங்கியிருக்கிறது. இது வெறும் அழகியல் உத்தியாக மட்டுமின்றி இருப்பையும் அறிதலையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கருத்தியல் நிலைப்பாடாகவும் விரிகிறது. தமிழ்க் கவிதையின் சில நீரோட்டங்களில் காணப்படும் நேரடிப் பதிவுமுறை அல்லது சமூக யதார்த்தவாதச் சித்தரிப்பு முறைகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க அளவு விலகி நிற்கிறது. தருமபுரி நிலத்தின் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவை மீமெய்மைப் பார்வையின் வழியே புதுப்பிக்கப்பட்டு, அந்நியமாக்கப்படுகின்றன. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘ (பக்கம்:13) ‘பாறையின் கண்கள் போல இருக்கும் வெள்ளாட்டுக் குட்டிகள்‘ (பக்கம்:13) இந்தப் பரீட்சயநீக்கம் (Defamiliarization), பழகிப்போன பார்வைகளிலிருந்து வாசகனை விடுவித்து அனுபவத்தின் புதிய பரிமாணங்களைத் திறந்து பயணிக்கச் செய்கிறது. ‘விதைப் புத்தகம் (பக்கம்:19-22) போன்ற கவிதைகள், ‘விதை’ எனும் ஒரு எளிய கருத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தத்துவார்த்தமான, சில சமயங்களில் விளையாட்டுத்தனமான, பல அடுக்குகளில் விரித்தெடுக்கும் விதம், நேரடியான அர்த்த உற்பத்திக்குப் பதிலாக பன்முகப்பட்ட வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்குகிறது. இந்தப் போக்கு, தமிழ்க் கவிதையில் பொதுவாக நிலவிவரும் சில சித்தரிப்பு முறைகளின் வரம்புகளை மீறிச் செல்ல விழையும் ஒரு முயற்சியாகவேபடுகிறது. இத்தகைய மீறல் முயற்சி என்பது தவிர்க்கவியலாமல் சில அர்த்த உருவாக்குதலின் சிக்கல்களையும் (Hermeneutic challenges) தோற்றுவிக்கும் என்பதும் உண்மையே. படிமங்களின் அடுக்குகளும், புனைவின் தாவல்களும் சில சமயங்களில் தெளிவின்மையை நோக்கி நகர்ந்து வாசகனுக்கும் பிரதியின் உள்ளடக்கத்திற்குமான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். இந்த விமர்சனங்கள் தமிழில் மட்டுமல்ல உலகளவிலும் பல விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பானதும் சிக்கலானதுமான நியாயங்கள் உண்டு என்றபோதும், அர்தத்தைக் கண்டுபிடிப்பதில் பங்களிப்புச் செய்வது என்பது தேவையுடன் கூடிய சவாலான வினையாற்றும் செயல் என்பதை கவிதையை முன்வைத்து வாதிடும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

இக்கவிதைகளில் வெளிப்படும் கவிதைசொல்லியின் குரலும் ஆழமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் குரலின் அழுத்தம் கிராமிய வேர்களைக் கொண்டிருந்தாலும் வெறும் மண் சார்ந்த பதிவுகளாகச் சுருங்கிவிடாமல், உலகளாவிய இருப்பியல் கேள்விகளுடனும், தத்துவார்த்தமான சிந்தனைகளுடனும் உரையாடுகிறது. இந்தப் பதற்றம் ஏறிய அகவயநிலையும், அதேசமயம் புனைவின் அதீத சாத்தியங்களுக்குள் சஞ்சரிக்கும் கவிதைசொல்லியின் குரலும் தமிழ்க் கவிதைகளில் பொதுவாகக் காணப்படும் நேரடியான சமூக விமர்சனக் குரல்களிலிருந்தோ அல்லது தீவிரமான உணர்ச்சி வெளிப்பாடுகளை முதன்மைப்படுத்தும் (பாடல் மரபின் தொடர்சியை உள்ளெடுத்த நவீன கவிதை) தன்மையிலான குரல்களிலிருந்து வேறுபடுகிறது. ‘நுணா‘ (பக்கம்:14) மற்றும் ‘அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல்‘ (பக்கம்:11-12) போன்ற கவிதைகளில் வெளிப்படும் நினைவுகள்கூட, நேரடியான கடந்தகாலப் பதிவுகளாக அல்லாமல் புனைவின் புதிர்ப்பாதை வழியே வெளிப்படுகின்றன. இந்தக் குரலின் தனித்தன்மை சில சமயங்களில் ஒருவித இருண்மைக்கு வழிவகுக்கலாம் என்றாலும் அதுவே தமிழ்க் கவிதைச் சூழலில் புதிய சாத்தியங்களுக்கான தேடலாகவும் அமைகிறது. இந்தத் தேடலின் சிக்கலான பயணத்தில் உருவாக்க வேண்டிய புனைவுகள் வாசகப் பரீட்சயத்தை எட்டும்போது மென்மைப்படுத்தும் ஒன்றாகவோ அல்லது தவிர்க்க வேண்டிய ஒன்றாகவோ மாற்றமடையலாம். அதற்கான கால எல்லை என்பது தமிழ்க் கவிதை வெளிக்கு அவசியமானது.

கருப்பொருள்களை அணுகும் விதத்திலும் ‘துரிஞ்சி‘ ஒரு விலகலை நிகழ்த்துகிறது. இயற்கை, நிலம், காதல், காமம், நினைவுகள், அரசியல், மரணம் போன்ற பொதுவான கருப்பொருள்களை இத்தொகுப்பு கையாண்டாலும், அவற்றை அணுகும் பார்வை மரபானதல்ல. இயற்கை, வெறும் அழகியல் பின்புலமாகவோ, மனித உணர்வுகளின் உவமையாகவோ பயன்படுத்தப்படாமல் அதுவே ஒரு விசித்திரமான, தன்னுணர்வு கொண்ட பாத்திரமாகப் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘, ‘பாறைகளின் கண்கள்‘ காதல் மற்றும் காமம் சார்ந்த சித்தரிப்புகள் ‘கொள்ளுக் கொடியில் ஆடும் காமம்‘ (பக்கம்:15) ‘அழிஞ்சி பழம்‘ (பக்கம்:81-82) ‘இரண்டாவது நாளில் சந்தித்தல்‘ (பக்கம்:78) நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தவிர்த்து வினோதமான படிமங்கள், விளையாட்டுத்தனம், சில சமயங்களில் ஒருவித அந்நியமாதல் ஆகியவற்றினூடாக வெளிப்படுகின்றன.

இது, காமம் குறித்த தமிழ் மனத்தின் சில தயக்கங்களையும் மரபான சித்தரிப்பு முறைகளையும் மீற விழையும் முயற்சியாகத் மேலோட்டமாகத் தோன்றுகிறது. ஆயினும், இந்த மீமெய்மை அடர்த்தி என்பது சில சமயங்களில் உணர்ச்சிகளின் ஆழத்தைத் தட்டையாக்கிவிடுகிறதா அல்லது வெறும் அழகியல் சாகசமாக நின்றுவிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. சமூக யதார்த்தங்கள் குறிப்பாக வறுமை, ஒடுக்குமுறை, இடப்பெயர்வு போன்றவை நேரடிப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மைப் படிமங்களின் ஊடாகவே சித்தரிக்கப்படுகின்றன. ‘உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை‘ (பக்கம்:67-68) ‘தடினிக்காய் உனக்கல்‘ (பக்கம்:35-36). இந்த மறைமுகத்தன்மை அரசியல் கவிதைகள் மீதான தமிழ்ச் சூழலின் சில எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச் செல்கிறது. ‘மீனவன்‘ (பக்கம்:45-46) ‘எங்கள் பிரதமர் மிக நல்லவர்‘ (பக்கம்:76) போன்ற கவிதைகளில் உள்ள அரசியல் விமர்சனம், குறியீடுகளின் வழியே செயல்படுவதால் அது நேரடியான தாக்கத்தை இழந்துவிட்டது என்று சிலருக்கு நீர்த்துப்போனதாகவும் தோன்றலாம். இது அரசியல் கவிதையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தூண்டக்கூடியதாக தமிழச் சூழலில் இருக்க முடியுமே தவிர, உலகளவில் அரசியல் கவிதைகளோடு நெருக்கமுள்ளவர்களுக்கு அப்படியிருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

மொழியும் படிமங்களும் இத்தொகுப்பின் தனித்துவத்திற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. வட்டார வழக்குகளை இயல்பாகப் புழங்கும்படி பாவிக்கும் அதே வேளையில் தத்துவார்த்தமான, சில சமயங்களில் அறிவார்ந்த ஒரு மொழியையும் கவிதைகள் பயன்படுத்துகின்றன. இந்த மொழி, பெரும்பாலும் உரைநடைக்கு நெருக்கமாக அதீத அலங்காரங்களைத் தவிர்த்து, அசையும் படிமங்களின் வழியாகவே தனது கவித்துவத்தை அடைகிறது. இங்கு பயன்படுத்தப்படும் அசையும் படிமங்கள், வெறுமனே காட்சிகளை விவரிப்பவையாக அல்லாமல் அறிந்துகொள்ளுதலின், அர்த்தம் உருவாக்குதலின் சவால்களையும், உணர்வுநிலைகளையும் கடத்துபவையாக பல சமயங்களில் பொருள்கோடல் சிக்கல்களைக் கொண்டவையாகவும் உள்ளன. தமிழ் மரபின் செழுமையான படிமவியல் வழக்கத்திலிருந்து (சங்க இலக்கியம் தொடங்கி) உமேஷின் படிமங்கள் வேறுபடும் இடம் எதுவென்றால், அவை பெரும்பாலும் தர்க்க ஒழுங்கைக் கலைத்துப் போடும் மீமெய்ம்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இது கடந்தகால தமிழ் நவீன கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிவோம். அதே நேரம் இவற்றை கவிதைகள் முழுமையிலும் பயன்படுத்திய ஈழத்துக் கவிஞர் சோலைக்கிளியும் இருக்கிறார். ஆயினும், உமேஷ், தனது கவிதையை நகர்த்திச் செல்லும் வசன நடையின் எதிர்பாராத தருணங்களில் இந்த அசையும் படிமங்களை பாவிப்பதோடு, அது தேவையான இடமாகவும் கவிதையின் இயங்கும் போக்கில் அமைந்துவிடுவதுதான் குறிப்பிட்டுக் காட்டவேண்டியது. இந்தக் கவிதை சொல்லும் முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது தீர்க்கமான தனித்தன்மையை முழுமையாகக் கண்டடைந்துவிடலாம் என்பது எனது கணிப்பீடு. இந்த அணுகுமுறை, சங்கப் படிமங்களின் நேரடித்தன்மை இயற்கை சார்ந்த இயல்புநிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபடக்கூடியது. கவிதைகள் நகர்ந்து செலலும்போது ஏற்படும் உரைநடைத் தாளம் என்பது இடைக்கிடை மரபின் தொடர்ச்சியை சில நேரங்களில் மனதில் ஏதாவதொரு மூலையில் தட்டி எழுப்பிவிடுகிறது.

சமகாலத் தமிழ்க் கவிதைகளின் அடிப்படைகளை தகர்த்து வெளியேறும் ஆவல் இக்கவிதைகளில் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்ற கேள்வி முக்கியமானது. ‘துரிஞ்சி‘ ஒரு முழுமையான உடைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்றால் இல்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் போக்குகளின் (பின்-நவீனத்துவச் சிதறல், அகவய நோக்கு) ஒரு தீவிரமான நீட்சியாக, ஒரு புதிய அழகியல் சேர்க்கையாக அமைகிறதா என்றால் விவாதத்திற்கு இடமின்றி அதை ஏற்க முடிகிறது. மீமெய்ம்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளைத் தமிழ் நிலத்தின் பிரத்யேக அனுபவங்களுடன் இணைக்கும் முயற்சியில் குறிப்பிடும் அளவு இவரது கவிதைகள் முன்னேறியுள்ளன என்பதுதான் உண்மை. இது, தமிழ்க் கவிதையை உலகளாவிய கவிதைப் பிரதிகளுடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படலாம். இந்த பண்பாட்டுக் கலப்பு தமிழ்க் கவிதையின் தனித்துவத்தையும், உலகளாவியத் தன்மையையும் ஒருங்கே சாத்தியமாக்கும் ஒரு வழியாக அமைகிறது. ஆயினும், இந்த அடிப்படைகளைத் தானே தகர்க்கும் படியாக, சில சமயங்களில் கவிதையை வரிவரியாக நகர்திச் செல்லும் போது கவிதைச் சம்பவங்களின் சீரற்ற தன்மை, சில படிமங்களின் செயற்கைத்தன்மை அல்லது மீமெய்ம்மை உத்தியின் பாணி மிகைப்பு போன்ற விமர்சனங்களுக்கும் இடமளிக்கிறது. எந்தவொரு தீவிரமான கவிதை உருவாக்க முயற்சியும் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது இயல்பே. இந்தப் புதிய திசைவழிக்கான தேடலில், சில கவிதைகள் அடையும் வெற்றியை மற்றவை அடையாமல் போகலாம்.

முடிவாக, பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு அசாதாரணமான, தவிர்க்கமுடியாத தலையீட்டை நிகழ்த்த முயல்கிறது. அதன் மீமெய்மை அழகியல், மரபான தமிழ்க் கவிதை மனநிலையிலிருந்து விலகிச் செல்ல எத்தனிக்கும் பிரக்ஞை, நிலம் சார்ந்த அனுபவங்களை உலகளாவியப் புனைவு உத்திகளுடன் இணைக்கும் முயற்சி மற்றும் அது எழுப்பும் எண்ணற்ற அர்த்த உருவாக்கச் சாத்தியங்கள் ஆகியவை இத்தொகுப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது முன்வைக்கும் விமர்சனக் கேள்விகளும் அதன் கலைத்துவச் சவால்களும்கூட அதன் உயிர்ப்பிற்கும், சமகாலத் தமிழ்க் கவிதைச் சூழலில் அது நிகழ்த்தும் உரையாடலின் முக்கியத்துவத்திற்குமே சான்றுகளாக நிற்கின்றன. அடிப்படைகளைத் தகர்க்கும் அதன் ஆவல் முழுமையாக நிறைவேறியதா இல்லையா என்பதைவிட, அத்தகையதொரு தீவிரமான கலைவேட்கையுடன் அது பயணிப்பதே அதன் தனித்துவமாகிறது. எனவே, ‘துரிஞ்சி‘, அதன் அனைத்துச் சிக்கல்களோடும் வெற்றிகளோடும் சமகாலத் தமிழ்க் கவிதையின் போக்கைக் கூர்ந்து அவதானிப்பவர்களால் அவசியம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய, ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு செறிவான, சவால்நிறைந்த கவிதை நூலாக நம்முன் நிற்கிறது. இது, தமிழ்க் கவிதை தேங்கிவிடாமல் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டிருப்பதன் அடையாளம்.

The post திணைகள் கவிதை விருது 2025 first appeared on திணைகள்.

சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து!

சுட்டி உலகத்துக்கு நான்காம் ஆண்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று ‘சுட்டி உலகம்’ வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் வாசிப்புக்கு வழிகாட்டவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட சுட்டி உலகத்தில், குழந்தைகளின் வயதுக்கேற்ற நூற்றுக்கு மேற்பட்ட சிறார் நூல்களின் பரிந்துரைகள் உள்ளன. எனவே பெற்றோர் தம் குழந்தைகளின் விருப்பம் ரசனைக்கேற்ப நூல்களைத் தேர்வு செய்து வாங்க முடியும்.

‘சுட்டி உலகம்’ காணொளியில் சிறந்த குழந்தைப் பாடல்கள் உள்ளன. குழந்தைகள் தமிழை எளிதாக உச்சரித்துப் பழக, இந்தப் பாடல்கள் உதவும்.

நான்காம் ஆண்டை வெற்றிகரமாக முடித்து, ஐந்தாம் ஆண்டில் நுழையும் சுட்டி உலகத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம். 

The post சுட்டி உலகம் பிறந்த நாள் வாழ்த்து! first appeared on சுட்டி உலகம்.

குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி – 3

28 April 2025 at 23:30

குரு அரவிந்தன் வாசகர் வட்டம்

குரு அரவிந்தன் வாசகர்வட்டம், திறனாய்வுப்போட்டி – 3

2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்:

இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியா, இலங்கை, பிரித்தானியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகி, அவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு), ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா), ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா), எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா, இலங்கை.

இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலா, தேனி, தமிழ்நாடு.

மூன்றாம் பரிசு: மரு.வெ. மாலாபாரதி. ஆரணி. தமிழ்நாடு.

நான்காம் பரிசு: வரதராஜன் ஜூனியர்தேஜ் சீர்காழி, தமிழ்நாடு.

ஐந்தாம் பரிசு: (1) திவானி கந்தசாமி, வவுனியா, இலங்கை.

                            (2) சீ. கவிதாராணி, பாசறை, இலங்கை.     

பாராட்டுப்பரிசுகள்: சிவநேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ. இலங்கை. எஸ். ராமேஸ்வரன், கொழும்பு -5. திருமதி பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை. பி.பி. புஸ்பராஜா, கொழும்பு -1. சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி. சிந்துஜா சிவகுமார், அவுஸ்ரேலியா. த.வேல்முருகன், ஈரோடு, தமிழ்நாடு. க.பூமணி, சென்னை, தமிழ்நாடு. இக்பால் அலி, பரகஹதெனியா, இலங்கை. விமலாதேவி புசுப்பநாதன், ரொறன்ரோ, கனடா. தீபரதி குபேந்திரன், வாணியம்பாடி, தமிழ்நாடு. பன்னீர்ச்செல்வம் கருப்பையா, கோலாலம்பூர், மலேசியா.

சுலோச்சனா அருண் ([email protected])

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.

எனது புதிய கவிதைத் தொகுப்பு

29 January 2011 at 16:12
நண்பர்களே,
எனது புதிய கவிதைத் தொகுப்பு "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்"
ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. முகவரி:


ஆழி பப்ளிஷர்ஸ்,
12, முதல் பிரதான சாலை,
யுனைட்ட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600 024

044-23722939
9940147473 விலை: ரூ.50/-

உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.

ஏழைமை, பசி, பட்டினி, சமத்துவமின்மை போன்று உலகளவில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கவும் இலக்கியம் சிறந்த பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, “The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)” என்பதை இந்த 2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகத் (Theme) தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண்பதிலும், குறிக்கோள்களை அடைவதிலும் இலக்கியம் சிறப்பான பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கருப்பொருள் உறுதி செய்கிறது.    

ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

துவக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்திலும் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பதிப்பகங்கள் புத்தக விலையில் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன. இந்த உலகப் புத்தக நாளில் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்! வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்.

The post உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025 first appeared on சுட்டி உலகம்.

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதை கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதையை நாமெல்லாருமே படித்திருப்போம். இவருடைய நூல்களில் லிட்டில் மெர்மெய்டு (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை மிகவும் பிரபலமானது. இது தமிழில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்து வானம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இதன் கதைச் சுருக்கம்:- கடற்கன்னி ஒருத்தி இளவரசன் மீது காதல் கொள்கிறாள். கடலில் இருந்தால் அவளுக்கு 300 ஆண்டுகள் மரணமில்லை. ஆனால் அவள் தனது களங்கமில்லாத அன்புக்காக மரணமில்லா வாழ்வைத் துறந்து கரையேறத் துணிகிறாள். அவள் மீன் உடலில் இருக்கும் வாலுக்குப் பதிலாக. கரையில் நடக்க அவளுக்குக் கால்கள்  தேவைப்படுகின்றன. மந்திரவாதியிடம் தன் இனிமையான குரலைப் பறிகொடுத்து அதற்குப் பதிலாகக் கால்களைப் பெறுகின்றாள். எனவே அவளால் பேசவோ பாடவோ முடியாது. இளவரசன் அவள் காதலை ஏற்றுக் கொண்டானா? அவளைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக் கதை. மிகவும் நெகிழ்ச்சியான கதையிது.

இந்தக் குட்டி கடற்கன்னிக்காக டென்மார்க் கோபன்ஹேக் துறைமுகத்தில் ஒரு பாறையின் மீது கடற்கன்னி உட்கார்ந்திருப்பது போல் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியன.     

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாக (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்?

குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து பள்ளிக்கு வருதல்; ஒருவருக்கொருவர் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புது வகை புத்தகங்கள் வாசிப்பது; புதிய எழுத்தாளர்களை வாசிப்பது;

வகுப்பில் பிடித்த புத்தகத்தைக் குறித்து விநாடி வினா நடத்துவது; சிறந்த புத்தகங்களை வகுப்பு சுவரில் பரிந்துரை செய்வது;

கதை மூலம் கிடைக்கும் வெவ்வேறு செய்திகளைக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்; குழந்தகளுக்குப் பிடித்த புத்தகங்கள், அவற்றின் வகை, எழுத்தாளர்கள், அதன் கருப்பொருள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவது;

இது வரை வாசிக்காத நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் குறித்தும், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்;

இப்படிப் பல்வேறு விதமாக இந்தக் கொண்டாட்டம் அமையலாம். குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், வாசிப்பின் அருமையை உணர்த்துவதாகவும் இந்நாள் அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025 first appeared on சுட்டி உலகம்.

அறிவிப்பு : எப்படியிருக்கிறது செயலி?


நண்பர்களே!  

வணக்கம்.  

இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.  

தீராத பக்கங்களின் இன்னொரு பக்கமாக – மொபைல் செயலியாக உருவெடுத்திருக்கிறது.  

(16.1.2025 ) முந்தாநாள் வரை இந்த மொபைல் செயலியை தரவிறக்கம் (Download) செய்தவர்கள் எண்ணிக்கையை 214 என்று காட்டுகிறது கூகிள்.  

அதிகமாக எல்லாம் ஆசைப்படாததால், இந்த எண்ணிக்கை மகிழ்ச்சியே. ஐந்தாறு  மாதங்களுக்குள் ஆயிரத்தைத் தொட முடிந்தால் பெரும் மகிழ்ச்சி.  

சராசரியாக ஒரு பதிவை 300 பேர் படித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரத்தில் 400 என உயர்ந்திருக்கிறது. உங்களுக்கு என் நன்றி.  

இன்னும் தரவிறக்கம் (Download)  செய்து கொள்ளாதவர்கள், இன்றே செய்து கொள்ளுங்கள். உங்கள் மொபைலில்  நிறுவிக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் அன்பு வேண்டுகோள்.  

சரி. விஷயத்துக்கு வருவோம்.  மொபைலில் தீராத பக்கங்களை படித்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொன்னால் இந்த செயலியை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.  

1. செயலியைத் தொட்டவுடன் தீராத பக்கங்கள் திறக்கிறதா?  

2. வடிவமைப்பும் எழுத்துருக்களும் படிக்க வசதியாக இருக்கின்றனவா?  

3. புதிய பதிவு வெளியானதும் ‘தீராத பக்கங்கள்’ என்னும் குரலோடு உங்கள் மொபைலுக்கு அழைப்பு வருகிறதா?  

4. லிங்க்கைத் தொட்டதும், அந்தப் பக்கத்துக்கு அழைத்துச் (Redirect) செல்கிறதா?  

5. இடையிடையே விளம்பரங்கள் வராமல்தான் செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி விளம்பரங்களின் தொந்தரவு இருக்கிறதா?  

6. சில வெளி நாடுகளுக்கு மட்டும்தான் App Availability Option  கொடுக்கப்பட்டிருக்கிறது. யாராவது தெரியப்படுத்தினால் விரைவில் update செய்துகொள்ளலாம்.  

7.கமெண்ட் செய்யும்போது Google Account sign செய்வதில் சிரமம் இருக்கிறதா?  

8. இது தவிர வேறு எதேனும் issues / advices / assessment  இருந்ததால் தெரியப்படுத்துங்கள். செயலியை சரி செய்யவும் மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.  

மேற்கூறிய விஷயங்களில் உங்கள் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள் நண்பர்களே!  

உங்கள் பொதுவான மதிப்பீடுகளை Play storeல் Mathavaraj App-ன் பக்கத்திற்கு சென்று  Rating and Reviewல் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி.  

உங்கள் ஆதரவும், கருத்துக்களும் இந்த முன்முயற்சிக்கு ஊக்கமளிக்கும்.  

நன்றி.  

அன்புடன்

மாதவராஜ்



சொல்வனம் 340 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

14 April 2025 at 23:46

அன்புடையீர்,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 340ஆம் இதழ், 13 ஏப்ரல், 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இதழ் திரு.பாலாஜி ராஜு-வின் விசேஷ ஆசிரியத்துவத்தில் கவிதை இதழாக மலர்ந்திருக்கிறது.

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: [email protected]

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். 

சொல்வனம்

பதிப்புக் குழு

இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்

கவிதைகள் சிறப்பிதழ்

மனித ஆன்மாவின் நெசவுபதிப்புக் குழு
தேவதச்சனின் கவியுலகம்வெங்கட பிரசாத்
பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்பாலாஜி ராஜு
சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்துமுருகானந்தம் கங்காதரன்
கவிதை என்ன செய்யும்தேவி. க

இலக்கியம்/புத்தக அறிமுகம்

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்விஜய் சத்யா

அறிவியல்

மைக்கேல்:  புலங்களும் ஒளியும்சங்கரன்

சிறுகதை

ஊடாடும் பெருநிழல்பென்னேசன்
பெருங்காய கச்சோடிபிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்
சாப விமோசனம்ரகு ராமன்

கல்பதரு

பிரபு மயிலாடுதுறை
உயிரில் கலந்துசுதா ஶ்ரீநிவாசன்
அறுபது நொடிகள்கங்காதரன் சுப்ரமணியம்

கட்டுரைத் தொடர்

இறவாமை – பகுதி இரண்டுவ. ஸ்ரீநிவாசன்
3. மரணமின்மையின் முதற்துளிபிரதீப் பாரதி
ஹர்ஷ சரித்திரம்ஜானகி க்ருஷ்ணன்
ஸ்வப்ன வாசவ தத்தா – 8ராஜஸ்ரீ
ஈர்ப்பு அலைகள் – பகுதி 6ரவி நடராஜன்
தூக்கணாங்குருவி கூடுஅருணாசலம் ரமணன்

கொலையாளியை ஜீரணித்தவர்

கார்த்திக்

கவிதை

காலம் பற்றிய ஐந்து கவிதைகள்யுவன் சந்திரசேகர்
ரவிசுப்பிரமணியன் கவிதைகள்ரவிசுப்பிரமணியன்
சேரன் கவிதைகள்சேரன்
மின்மினிப் பூச்சிகள் வெறுமனே பறந்து செல்கின்றனநந்தாகுமாரன்
வேனிற்காலம்ஆமிரா
அடர்க்கருமை இருள் போர்த்தியபடிதங்க.ஜெயபால் ஜோதி
சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகள்சதீஷ்குமார் சீனிவாசன்
ஆனந்த்குமார் கவிதைகள்ஆனந்த்குமார்
கு.அழகர்சாமி கவிதைகள்கு.அழகர்சாமி
இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்இலட்சுமணப் பிரகாசம்
பூவிதழ் உமேஷ் கவிதைகள்பூவிதழ் உமேஷ்
கவிதைகள் மாதம் – கற்பனைத் தோட்டம்ராமலக்ஷ்மி

ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

14 April 2025 at 23:43

சுலோச்சனா அருண்

கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre  மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி நகுலராசா, காப்பாளர் நவா கருணரட்ணராசா, உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், ஒன்ராரியோ மாகாண அரசின் மாகாணமன்ற உறுப்பினரும் இணையமைச்சருமான வியேஜ் தணிகாசலம் மற்றும் ஒன்ராரியோ அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டின் போது, முதலில் முனைவர் பார்வதி கந்தசாமியின் வாழ்த்துரையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனர் கமலவதனா சுந்தாவின் நூல்அறிமுக உரையும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் வெளியீட்டுரை இடம் பெற்றது. முனைவர் வாசுகி நகுலராசாவின் ஆய்வுரையைத் தொடர்ந்து கமலவதனா சுந்தா அவர்கள் சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு வைத்தார்.

தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில், நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் நடந்த தனது சிறுகதை பயிலரங்கில் பங்கு பற்றிய அனேகமான ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளும் இதில் இடம் பெற்றிருப்பதாகவும் இளைய தலைமுறையினர் இப்பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் 26 கனடிய தமிழ்ப் பெண்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்ப்பெண்கள் ஏற்படுத்திய ஒரு சாதனையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இச்சிறுகதைத் தொகுப்பில், பூமிகா அன்புதாசன், மாலினி அரவிந்தன், சன்ரா யூட் பாலேஸ்வரன், குலமணி பிரான்சிஸ், சசிகலா ஜீவானந்தன், மணிமேகலை கைலவாசன், பத்மா கரு, சுந்ரீஸ்வரி காசிப்பிள்ளை, கேதா கிருபராஜன், நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு, விஜயராணி மதியழகன், அர்ச்சனா மோகனகுமார், நவகீதா முருகண்டி, யோகநாயகி மூர்த்தி, கௌசல்யா பார்த்தீபன், கலைமகள் புஸ்பநாதன், விமலாதேவி புசுப்பநாதன், கஜலக்ஸி புவனேஸ்வரன், நஸ்வியா சற்குணராசா, சுமதி செல்வா, இளவரசி செந்தில்குமார், வாணிசிறி சிவபாதசுந்தரம், செல்வி சோதி, கமலவதனா சுந்தா, தருணி தியாகராசா, கவிநயா விஜயதர்சன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் எழுதிய இளைய தலைமுறையினர் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் தொகுத்து வெளியிட்ட இச்சிறுகதைத் தொகுப்பின் அச்சாக்கத்தை ஜே.ஜே பிரின்ரேசும், அட்டைப்படத்தை செல்வி நவீனி இராசையாவும், கணினி அச்சு உதவியை பிரவீனி இராசையாவும் பொறுப்பேற்றுச் செய்திருந்தனர். இந்த சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டின் போது, எழுத்தாளர்களுக்கான பாராட்டு நிகழ்வுகளும், சில கலைநிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.

இதே போன்ற, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைப் பயிலரங்கில் 2017 ஆம் ஆண்டு பங்குபற்றிய 16 கனடிய தமிழ் பெண்களின் சிறுகதைகள் அடங்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் கனடா மிஸசாகாவில் உள்ள சொப்கா பீல் குடும்ப மன்றத்தினர் வெளியிட்டிருந்தனர். கனடாவில் இதுவரை சுமார் 40 மேற்பட்ட தமிழ் பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமை எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களையே சாரும் என்பதையிட்டு குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினராகிய நாங்கள் பெருமைப்படுகின்றோம்.

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ்

30 March 2025 at 22:05

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 339ஆம் இதழ், 23 மார்ச்., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லாஅனுராதா க்ருஷ்ணஸ்வாமி
வினோத்குமார் சுக்லா கவிதைகள்ராமலக்ஷ்மி

கட்டுரைகள்

கலை/ஆளுமை/இலக்கியம்

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்ரா. கிரிதரன்
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்  எஸ்ஸார்சி

சமூகம்/புத்தக அறிமுகம்

தெரிந்த நிழல்களும் தெரியாத நிஜங்களும்சுந்தர் வேதாந்தம்
ஜாதிக்காயின் சாபம்அச்சுதன் இராமகிருஷ்ணன்
மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்பிரதீப் பாரதி

அறிவியல்

ரங் பர்ஸேஅருணாசலம் ரமணன்

சிறுகதை

எல்லையற்ற நடனம்விவேக் சுப்ரமணியன்
இன்மையால் வகுத்தல்வெங்கட பிரசாத்
15ஸ்ரீனி சங்கரன்
பூச்சாண்டிமலேசியா ஸ்ரீகாந்தன்

கட்டுரைத் தொடர்


இறவாமை – பகுதி ஒன்று
வ. ஸ்ரீநிவாசன்

பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும்
ராஜஸ்ரீ

நியூட்டனும் சிறுநிலவும் – 2
சங்கரன்

தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்
ஜானகி க்ருஷ்ணன்

பைனரி பல்ஸார் என்னது?
ரவி நடராஜன்

கவிதை

சைத்ரீகன் கவிதைகள்சைத்ரீகன்
கோடுகள் மீதான கேள்விகள்ஷெல் சில்வர்ஸ்டெயின்
புகையும் நிஜங்கள்ஹெச்.என்.ஹரிஹரன்
கொக்கென நினைத்தாயோ ?கார்த்திக்

காணொளி உரையாடல்

விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்பதிப்புக் குழு

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: [email protected]

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். 

சொல்வனம்

பதிப்புக் குழு

❌