Normal view

Received before yesterday

டோனல்ட் லாம் கதைகள்

எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் எழுதிய பெர்ரி மேசன் கதைகள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தன. 1970-இல் அவர் இறக்கும்போது  20-ஆம் நூற்றாண்டின் அதிகப் புத்தக விற்பனை அவர் புத்தகங்கள்தானாம். சிறு வயதில் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். டைம் பாஸ் புத்தகங்கள். கிட்டத்தட்ட நூறு பெர்ரி மேசன் புத்தகங்கள் இருக்கலாம். எல்லா புத்தகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். சில படிக்க சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் படித்த ஐந்தாவது நிமிஷம் மறந்தும் போய்விடும்.

எனக்கு பெர்ரி மேசன் கதைகளை விட டோனல்ட் லாம் துப்பறியும் கதைகள் பிடிக்கும். லாம் முன்னாள் வக்கீல், இன்னாள் துப்பறிபவன். பெர்த்தா கூல் நடத்தும் துப்பறியும் நிறுவனத்தில் பணி புரிகிறான், அதன் முக்கியத் துப்பறிவாளன் அவனே. சட்டத்தை வளைக்கத் தெரிந்தவன். எனக்குப் பிடித்தவை அப்படி ஒரு சட்ட நுணுக்கத்தை விளக்கி லாம் எப்படி சட்டத்தை வளைக்கிறான் என்று விவரிக்கும் கதைகளே. ஆனால் இவற்றை pulp fiction என்றுதான் வகைப்படுத்த வேண்டும்.

இருபது இருபத்தைந்து நாவல்கள் இருக்கும். அத்தனையும் படிக்கும் பொறுமை எல்லாம் இருபது இருபத்தைந்து வயதோடு போய்விட்டது. ChatGPT-யிடம் சிறந்த டோனல்ட் லாம் நாவல்கள் எவை என்று கேட்டேன், அது தந்த பட்டியல்:

  • Bigger They Come (1939). முதல் நாவல். லாம் வேலையும் பணமும் இல்லாமல் தவிக்கும்போது பெர்த்தா கூல் உதவி செய்கிறாள், அவளுடைய நிறுவனத்தில் சேர்கிறான். அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் குற்றம் புரிந்துவிட்டு வேறு மாகாணத்தில் பிடிபட்டால் அவனை குற்றம் புரிந்த மாகாணத்திற்கு திரும்பிக் கொண்டு வருவதில் சில முறைமைகள் இருக்கின்றன. Rules of Extradition. தானே கொலையாளி என்று ஒத்துக் கொண்டாலும் அவனை தண்டிக்க முடியாதபடி extradition சட்டத்தில் இருக்கும் ஒரு ஓட்டையை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம் வெளியானதற்குப் பிறகு இந்த ஓட்டையை அடைக்க சட்டமே மாற்றப்பட்டதாம்.
  • The Count of Nine (1958) சுமாரான நாவல். இந்த முறை ஒரு கொலை, ஒரே மாதிரியான இரண்டு புத்தர் சிலைகள். நாலு பக்கத்துக்கு ஒரு முறை டோனல்ட் அதிபுத்திசாலி என்று யாராவது சொல்கிறார்கள். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.
  • Double or Quits (1941) கொஞ்சம் இழுவை. ஆனாலும் படிக்கலாம். இந்த முறை ஒரு மருத்துவரின் மரணம். அவரது மனைவியின் நகைகள் திருடு போய்விட்டன, அவற்றை கண்டுபிடிக்க லாமை நியமிக்கிறார், அடுத்த நாளே இறந்து போய்விடுகிறார்.
  • The Knife Slipped (2016) கார்ட்னர் 1930களிலேயே எழுதிய நாவல். ஆனால் பிரதியைக் கண்டுபிடித்து தூசி தட்டி 2016-இல்தான் பதித்திருக்கிறார்கள். இதில் பெர்த்தாவுக்கு கொஞ்சம் பெரிய ரோல்.
  • Turn on the Heat (1940), Spill the Jackpot (1941), Top of the Heap (1952) எல்லாம் தண்டம்.

ChatGPT-க்கும் எனக்கும் ரசனையில் கணிசமான வித்தியாசம் இருக்கிறது! அதனால் ChatGPT பரிந்துரைத்த  Some Women Won’t Wait (1960), The Knife Slipped (2016) புத்தகத்தை தேடக் கூட இல்லை. இவற்றில் Knife Slipped கார்ட்னர் 1930களிலேயே எழுதிய நாவல். ஆனால் பிரதியைக் கண்டுபிடித்து தூசி தட்டி 2016-இல்தான் பதித்திருக்கிறார்கள்.

இவற்றைத்  தவிர கொஞ்சம் படிக்கக் கூடியவை

  • Beware the Curves (1956) நாவல் இன்னொரு ஓட்டையை விவரிக்கிறது. அமெரிக்க சட்டப்படி பொதுவாக கொலைக்கு காலவரம்பு (statute of limitations) கிடையாதாம். ஆனால் திட்டமிடப்படாத கொலைக்கு (manslaughter) காலவரம்பு உண்டாம். லாம் கொஞ்சம் அஜால்குஜால் வேலை பார்த்து அரசு தரப்பு வக்கீலை இது திட்டமிடப்படாத கொலை என்று ஒத்துக் கொள்ள வைக்கிறார். பிறகு காலவரம்பு கடந்துவிட்டது என்று சுட்டிக்காட்டி தன் கட்சிக்காரரை விடுவிக்கிறார்.
  • Up For Grabs (1964)-இல் கரு கொஞ்சம் சுவாரசியமானது. இன்ஷூரன்சை ஏமாற்றும் இரட்டை வாழ்க்கை வில்லன்; தன் காரை இடித்ததாகச் சொல்லப்படுபவனும் அவனேதான்!

மற்றவற்றில்

  • Give ‘Em the Ax (1944) இழுவைதான். ஆனாலும் படிக்கலாம். லாம் கொஞ்சம் சைட் அடிக்கும் ஒரு பெண்ணின் அபார்ட்மெண்டில் ஒரு பிணம். கடைசியில் சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரம்தான் கொலையாளி என்று முடித்துவிடுகிறார்.
  • Gold Comes in Bricks (1940) போன்ற கதைகள் எல்லாம் டைம் பாஸ்.

கார்ட்னர் எழுதியவற்றில் எனக்கு இன்னும் பிடித்தவை லெஸ்டர் லெய்த் (Lester Leith) கதைகள். லெஸ்டர் திருடர்களிடம் திருடுபவன். அவனை உள்ளே தள்ள போலீஸ் முயன்று கொண்டிருக்கிறது. அவனிடம் உளவறிய ஒரு போலீஸ்காரனை அவனிடம் பட்லராக வேலை செய்ய அனுப்பி இருக்கிறது. இந்த சட்டகத்தை வைத்துக் கொண்டு ஜாலியாக கதைகள் எழுதி இருக்கிறார். Monkey Murder Case போன்றவற்றை சொல்லலாம். பல கதைகள் எழுதி இருந்தாலும் இவை இப்போது கிடைப்பது அரிதுதான். எலரி க்வீன் தொகுத்த ஒரு புத்தகம் – Amazing Adventures of Lester Leith – மட்டுமே இன்னும் கிடைக்கிறது. இதே சட்டகத்தில் வேறு பாத்திரங்களை வைத்து Kid Clips.a Coupon போன்ற சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். சில pulp கதைகளையும் (எட் ஜெங்கின்ஸ் கதைக) எழுதி இருக்கிறார், சகிக்க முடியாதவை.

கார்ட்னர் பதின்ம வயதிலேயே டைம் பாஸ் என்ற அளவில்தான் இருந்தார். இப்போது மீள்வாசிப்பெல்லாம் நாஸ்டால்ஜியாவால்தான். தவிர்த்துவிடலாம். ஒரே ஒரு புத்தகம் முயற்சித்துப் பார்ப்பதென்றால் Bigger They Come புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

டிக் ஃபிரான்சிஸ்

டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கே ஜாக்கியாக இருந்தவர். ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார்.

டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு template உண்டு. எல்லா கதைகளுக்கும் குதிரைப் பந்தய பின்புலம் உண்டு. ஹீரோ ஜாக்கியாக இருக்கலாம், முன்னாள் ஜாக்கியாக இருக்கலாம், அக்கௌன்டன்ட், டிரைவர், குதிரைகளின் பயிற்சியாளர், ஏதாவது ஒரு வகையில் ஹீரோவுக்கு குதிரைப் பந்தய உலகோடு தொடர்பு இருக்கும். எல்லா ஹீரோவும் ஏறக்குறைய ஒரே மாதிரி குணம் உள்ளவர்கள். Strong morals, integrity உள்ள low-key ஆட்கள். என்ன பிரச்சினை வந்தாலும் நிதானம் இழக்கமாட்டார்கள். தன்னை நன்றாக புரிந்து கொண்டவர்கள். அடுத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள். ஏதாவது ஒரு சீனில் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்குவார்கள். அதுதான் புத்தகத்தின் highlight சீன் ஆக இருக்கும். அடி என்றால் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு அடி இல்லை. Nerve-இல் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ வெறும் விஸ்கியை இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி வரும். கால் உடைந்து படுத்திருக்கும் ஒரு ஹீரோவை தாக்க ஒரு வில்லன் வருவான். எனக்கு அந்த மாதிரி உணர்ச்சிவசப்படாத, எதையும் லாஜிகலாக பார்க்கும் மனிதர்களைப் பிடிக்கும் என்பதால்தானோ என்னவோ இவரது புத்தகங்களை நான் பெரிதும் ரசிக்கிறேன்.

டிக் ஃபிரான்சிசின் இறுதிக் காலத்தில் தன் மகன் ஃபீலிக்ஸ் ப்ரான்சிசுடன் இணைந்து சில புத்தகங்களை எழுதினர். அனேகமாக டிக் ஃபிரான்சிசின் ஐடியாக்களை ஃபீலிக்ஸ் டெவலப் செய்திருக்க வேண்டும். புத்தகங்களின் தரம் குறைவுதான். சமீபத்திய புத்தகமான Gamble இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeit-ஐத்தான். Nerve, Odds Against, Enquiry, Whiphand, Banker, Danger, Break-In, Bolt, Decider, To the Hilt போன்றவையும் நல்ல புத்தகங்கள். எல்லா புத்தகங்களையும் பற்றி ஓரிரு வரி விவரிப்பு கீழே.

மிச்ச பரிந்துரைக்கும் கதைகள்:

Bonecrack, 1971: இன்னும் ஒரு நல்ல த்ரில்லர். குதிரைப் பயிற்சியாளரான அப்பாவுக்கு விபத்து. மகன் நீல் க்ரிஃபான் பொறுப்பேற்கிறார். வில்லன் ஜாக்கியாக அனுபவமே இல்லாத என் 19 வயது மகனுக்கு முதல் தர ரேசில் முதல் தர குதிரையை சவாரி செய்ய ஏற்பாடு செய், இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்கிறார். நீல் எப்படி சமாளிக்கிறார்?

In the Frame, 1976: விறுவிறுவென்று போகும் நாவல். ஓட்டைகளை எல்லாம் கவனிக்க நேரமே கிடையாது. குதிரைகளை வரையும் சார்லஸ் டாட். அவனது கசினின் வீடு கொள்ளையடிக்கப்படுகிறது, கசினின் மனைவி கொல்லப்படுகிறாள். தற்செயலாக ஆஸ்திரேலியாவில் நிறைய பணம் கொடுத்து ஓவியங்களை வாங்கும் இரண்டு ஆங்கிலேயர்களின் வீடுகளில் கொள்ளை நடந்திருப்பதை உணர்கிறான். சுவாரசியமாகச் செல்லும் மர்மக் கதை.

Banker, 1982: மெதுவாகப் போகும் கதை. ஆனால் கதையின் சுவாரசியம் தொய்யாமல் இருக்கும். எகாடரின் ஒரு சிறு வங்கியின் சீனியர் அலுவலர். பெண் குதிரைகளைப் புணர்ந்து குட்டி போடுவதற்காக ஒரு பிரபலமான குதிரையை வாங்க வங்கியில் கடன் தருகிறார். இன்றைய venture capitalists மாதிரி. ஆனால் பிறக்கும் குட்டிகளில் பல உடல் ஊனத்துடன் பிறக்கின்றன. கடன் கொடுத்த எகாடரினின் நிலை அலுவலகத்தில் மிக மோசமாகிறது. குதிரைக்கு என்ன பிரச்சினை?

Danger, 1983: நாயகன் ஒரு பாதுகாவல் கம்பெனியில் வேலை செய்கிறான். அவனுடைய ஸ்பெஷாலிடி கடத்தப்பட்டவர்களை குறைந்த பட்ச மீட்புத்தொகை (ransom) கொடுத்தோ இல்லை எதுவும் கொடுக்காமலோ மீட்பது. கதை அவன் ஒரு அழகிய பெண் ஜாக்கியை மீட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.

Proof, 1984: விறுவிறுவென்று போகும் கதை. மது வியாபாரி டோனி பீச். தற்செயலாக உயர்ந்த தர வைன், விஸ்கி என்று தாழ்ந்த தர மதுக்களை விற்கும் ஒரு கும்பல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறான். கும்பலின் தலைவன் தனக்கு அபாயமானவர்கள் என்று தோன்றுபவர்களை முகத்தில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் கட்டு போட்டு (மூச்சு விடமுடியாது) கொடூரமாகக் கொல்கிறான். பீச் எப்படி தப்பிக்கிறான்?

Break In, 1985: ரோமியோ ஜூலியட் மாதிரி இரண்டு பரம்பரை பகையாளி குடும்பங்களுக்குள் (அல்லார்டெக், ஃபீல்டிங் குடும்பங்கள்) ஒரு காதல். கல்யாணமும் நடந்துவிடுகிறது. இந்த ஜோடி குதிரைகளை பயிற்றுவிக்கிறது. இந்த ஜோடி மீது பல மோசமான வதந்திகள், அவர்கள் திவாலாகும் நிலை. “ஜூலியட்டின்” அண்ணன் கிட் ஃபீல்டிங்தான் நாயகன். ஜாக்கி. பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Bolt, 1986: Break In-இன் தொடர்ச்சி. கிட் சவாரி செய்யும் குதிரைகளுக்கு சொந்தக்காரி ஒரு பிரபு குடும்பத்துப் பெரிய மனுஷி. அவர்களது பிசினசை ஆக்கிரமிக்க முயலும் ஒரு வில்லன். மீண்டும் கிட் பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Hot Money, 1987: பங்குச் சந்தையில் பெருவெற்றி பெற்றிருக்கும் அப்பா; ஐந்து முறை திருமணம் நடந்திருக்கிறது. அவரை கொல்ல யாரோ முயலும்போது தன் இரண்டாம் மனைவியின் மகனான இயன் பெம்ப்ரோக்கிடம் உதவி கேட்கிறார்.

Decider, 1993: ஸ்ட்ராட்டன் குடும்பத்தில் பல ரகசியங்கள். அவர்களுக்கு ஒரு ரேஸ்கோர்ஸ் சொந்தமாக இருக்கிறது. லீ மாரிஸ் குடும்ப சண்டையில் இழுக்கப்படுகிறான். லீ மாரிஸின் சித்திரம் எனக்குப் பிடித்த ஒன்று.

படிக்கலாம், ஆனால் கொஞ்சம் சுமாரானவை:
Flying Finish, 1966: படிக்கலாம். குதிரைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு கொண்டு செல்லும் ஒரு கம்பெனி.

Smokescreen, 1972: நாயகன் ஒரு நடிகன். அவனைக் கொல்லப் போடப்படும் திட்டத்தை கையும் களவுமாக சினிமாவாகவே படம் பிடித்து விடுகிறான்.

High Stakes, 1975: ஸ்டீவன் ஸ்காட் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் செய்து மில்லியனர் ஆனவன். குதிரைகளை வாங்கி ரேசில் கலந்து கொள்ள வைப்பவன். தன் ட்ரெய்னர் ஜோடி தன்னை ஏமாற்றுகிறான் என்பதை உணர்கிறான். ஜோடியிடமிருந்து தன் குதிரைகளை இன்னொரு ட்ரெய்னரிடம் அனுப்புகிறான். ஜோடி தான் அனுப்ப வேண்டிய உயர் ஜாதி குதிரையைப் போல இருக்கும் வேறு ஒரு சோதா குதிரையை அனுப்பி வைக்கிறான். ஸ்காட் என்ன செய்கிறான் என்பதுதான் கதை. படிக்கலாம்.

Reflex, 1980: சுமார். இறந்து போன ஒரு பத்திரிகையாளனிடம் பலரது குற்றங்கள்-ரகசியங்களுக்கான ஃபோட்டோ ஆதாரங்கள் இருக்கிறது. அவை ஜாக்கி ஃபிலிப் நோரேவிடம் வந்து சேர்கின்றன. பிறகு?

Twice Shy, 1981: ரேசில் எப்போதும் ஜெயிக்க ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் இருக்கிறது. அதைத் தேடும் வில்லனை அண்ணன் ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறான். விடுதலையான பிறகு தம்பிக்கு பிரச்சினை. படிக்கலாம்.

Straight, 1989: டெரக் ஃப்ராங்க்ளினின் அண்ணன் – ரத்தினக் கற்கள் வியாபாரி – இறந்துவிடுகிறார். வழக்கம் போல மர்மங்கள். படிக்கலாம்.

Longshot, 1990: இளம் எழுத்தாளன். பணத்தேவைக்காக ஒரு குதிரைப் பந்தய பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வருகிறான். குதிரைகளை கவனித்துக் கொள்ளும் ஒரு பெண் ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயிருக்கிறாள். அவள் பிணம் கிடைக்கிறது. போலீஸ் சந்தேகப்படுபவனைக் கொலை செய்ய ஒரு முயற்சி. சுமாரான நாவல்தான்.

To the Hilt, 1996: நாயகன் ஒரு எக்சென்ட்ரிக் ஓவியன். ஸ்காட்லாந்தின் பெருகுடும்பம் (clan) ஒன்றைச் சேர்ந்தவன். ஏறக்குறைய ஒரு (குடும்பத்துக்கு சொந்தமான) குகையில் வாழ்கிறான். அவனுடைய மாற்றாந்தந்தை பிசினஸ் சிக்கலில். பெருகுடும்பத்தின் தலைவன் பழங்கால வாள் ஒன்றை ஒளித்து வைக்கும்படி சொல்லி இருக்கிறான். குடும்பம் என்பது எவ்வளவு வலிவான பந்தமாக இருக்கலாம் என்பதை நன்றாக காட்டி இருப்பார்.

10 LB. Penalty, 1997: சுமார். தேர்தல் பின்புலம்.

தவிர்க்க வேண்டியவை:

Dead Cert, 1962: முதல் நாவல். கொஞ்சம் அமெச்சூர்தனமாக இருக்கும். தவிர்க்கலாம்.

For Kicks, 1965: ரேஸ்களில் மீண்டும் மீண்டும் எதிர்பாராத விதமாக குதிரைகள் ஜெயிக்கின்றன. லார்ட் அக்டோபர் டேனியல் ரோக்கை துப்பறிய அனுப்புகிறார். ரோக் குதிரைகளுக்கு பாவ்லோவ் முறையில் ஒரு விசில் சத்தத்தையும் நெருப்பையும் வைத்து அவற்றை வேகமாக ஓட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்கிறான். ரொம்ப ஸ்லோவான கதை. இன்னும் ஃபிரான்சிஸ் தன் ஃபார்முலாவை முழுதாக கண்டுபிடிக்கவில்லை. தவிர்த்துவிடலாம்.

Risk, 1977: சுமார். அக்கௌன்டன்ட் ரோலண்ட் ப்ரிட்டன் கடத்தப்படுகிறான். ஏன்?

Field of 13, 1998: சிறுகதைகள்.

Blood Sport 1967, Rat Race 1970, Slay Ride 1973, Knockdown 1974, <strongTrial Run 1978, Edge 1988, Comeback 1991, Driving Force 1992: இவை எல்லாமே கொஞ்சம் போரடிக்கும். தவிர்க்கலாம்.

Wild Horses, 1994, Second Wind, 1999, Shattered, 2000: இவை எல்லாம் நிறையவே போரடிக்கும், தவிருங்கள்.

டிக் ஃப்ரான்சிஸ், மற்றும் அவர் மகன் ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிசோடு இணைந்து சில புத்தகங்களை – Dead Heat 2007, Silks: 2008, Even Money 2009, Crossfire, 2010 – எழுதி இருக்கிறார். பொதுவாக ஒரு மாற்று குறைவு. தீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

இப்போது ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் தனியாக எழுதிக் கொண்டிருக்கிறார் – Gamble (2011), Bloodline (2012), Refusal (2013), Damaged (2014), Frontrunner (2015), Triple Crown (2016), Pulse (2017), Crisis (2018), Guilty or Not Guilty (2019), Iced (2021), No Reserve (2023), Syndicate (2024) – இரண்டு மாற்று குறைவு! அதிலும் Guilty or Not Guilty புத்தகத்தில் குதிரைப் பந்தயம் பற்றி இருப்பது பெருங்காயம் வைத்த பாண்டமாகத்தான் இருக்கிறது. Syndicate நாவலில் நிறைய நுண்விவரங்கள், ஆனால் முடிச்சு மகாசுலபமாக அவிழ்கிறது. அதிதீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “ஃபோர்ஃபிட் (Forfeit)”
டிக் ஃபிரான்சிசின் “என்கொயரி”
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “நெர்வ்”

ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்

எனக்கு துப்பறியும் கதைகள் மீது கொஞ்சம் பித்து உண்டு. பதின்ம வயதில் படித்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என் உள்ளம் கவர்ந்தவை. அதை விட சிறந்த துப்பறியும் கதைகள் இன்னும் வரவில்லை. பிடித்த கதைகளை சமீபத்தில் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன்.

ஹோம்ஸ் கதைகளைப் படித்துவிட்டு வேறு கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆவல். அகதா கிறிஸ்டி, பெர்ரி மேசன் கதைகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. கிறிஸ்டி பிடித்திருந்தாலும் ஹோம்ஸ் அளவு இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. பெர்ரி மேசன் கிறிஸ்டி அளவு கூட வரவில்லை. வேறு துப்பறியும் கதைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

அப்போது ஹ்யூ கிரீன் தொகுத்த Rivals of Sherlock Holmes என்ற புத்தகம் கிடைத்தது. ஹ்யூ கிரீன் (கிரஹாம் கிரீனின் சகோதரர்) இப்படி மூன்று அருமையான தொகுதிகளை கொண்டு வந்திருக்கிறார். Rivals of Sherlock Holmes, Further Rivals of Sherlock Holmes, American Rivals of Sherlock Holmes. அவர்தான் பிற நல்ல கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த Rivals அனைவரும் ஹோம்ஸின் “சமகாலத்தவர்” – அதாவது ஹோம்ஸ் கதைகள் வந்த காலத்தில் – 19 -ஆம் நூற்றாண்டு இறுதி, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் – இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அந்த மூன்று தொகுதிகளிலிருந்து எனக்குப் பிடித்த சில துப்பறியும் “நிபுணர்கள்”, எழுத்தாளர்கள் பற்றி சின்ன ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

கிரான்ட் ஆலனின் கர்னல் க்ளே (Grant Allen’s Colonel Clay): க்ளே ஒரு ஏமாற்றுக்காரன். மீண்டும் மீண்டும் தென்னாப்பிரிக்க மில்லியனர் வாண்ட்ரிஃப்டிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டே இருக்கிறான். Episode of the Diamond Links என்னுடைய ஃபேவரிட் கதை.

ராபர்ட் பாரின் யூஜீன் வால்மான்ட் (Robert Barr’s Eugene Valmont): Absent-minded Coterie ஒரு அருமையான கதை. ஆனால் வேறு எதுவும் அவ்வளவு சுகமில்லை.

ஜாக்விஸ் ஃப்யூட்ரல்லின் திங்கிங் மெஷின் (Jacques Futrelle’s Thinking Machine): ப்ரொஃபசர் வான் டூசன் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி. சவால் விட்டு ஜெயிலிலிருந்து தப்பிக்கும் Problem of Cell 13 மிகவும் அருமையான கதை. எல்லா கதைகளிலும் தரம் எப்போதும் நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் படிக்கலாம்.

மாரிஸ் லேப்ளான்கின் ஆர்சீன் லூபின் (Maurice Leblanc’s Arsene Lupin): லூபின் ஒரு திருடன். சில கதைகள் – Arsene Lupin in Prison, Red Silk Scarf – நன்றாக இருக்கும்.

ஆர்தர் மாரிசனின் மார்ட்டின் ஹெவிட் (Arthur Morrison’s Martin Hewitt): ஹெவிட் ஒரு சம்பிரதாய துப்பறியும் நிபுணர். படிக்கலாம்.

ஆர்தர் மாரிசனின் டாரிங்க்டன் (Arthur Morrison’s Dorrington): டாரிங்க்டன் துப்பறிபவனாக வேஷம் போடும் திருடன். படிக்கலாம்.

கிளிஃபோர்ட் ஆஷ்டவுனின் ராம்னி ப்ரிங்கிள் (Clifford Ashdown’s Romney Pringle): ராம்னி ப்ரிங்கிள் ஏமாற்றுக்காரர். நான் படித்த கதைகளின் ambience charming ஆக இருந்தது.

பாரனஸ் ஆர்க்சியின் (Baroness Orczy) Old Man in the Corner: ஒரு டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு மர்மங்களை தீர்ப்பார் இந்தக் கிழவர். மிகவும் நன்றாக இருக்கும்.

ஆஸ்டின் ஃபிரீமனின் டாக்டர் தார்ண்டைக் (Austin Freeman’s Dr. Thorndyke): தார்ண்டைக் விஞ்ஞானத்தை பயன்படுத்தி துப்பறிபவர். கொஞ்சம் dry ஆக இருந்தாலும் கதைகள் மிக நன்றாக இருக்கும்.

வில்லியம் ஹோப் ஹாட்க்சனின் கார்னகி (William Hope Hodgson’s Carnacki): கார்னகி பேயோட்டுபவர். எல்லா கதைகளிலும் ஒரு supernatural background இருக்கும்.

எர்னஸ்ட் பிரம்மாவின் மாக்ஸ் காரடோஸ் (Ernest Bramah’s Max Carrados): காரடோஸ் ஒரு குருடர். ஹோம்ஸ் தரத்துக்கு இல்லாவிட்டாலும் நல்ல துப்பறியும் கதைகள்.

சில இன்று curiosities மட்டுமே. Guy Boothby உருவாக்கிய திருடன் Simon Carne (A Wedding Guest சிறுகதை, Prince of Swindlers தொகுப்பு), E. Phillips Oppenheim (Mr. Blunt’s Three Clients சிறுகதை போன்றவை.

இந்தத் தொகுப்பில் இடம் பெறாத சில நல்ல துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்:

  1. எட்கார் ஆலன் போ – டூபின் (Edgar Allan Poe – Auguste Dupin) குறிப்பாக Purloined Letter சிறுகதை. டூபின் இல்லாத Gold Bug சிறுகதை.
  2. அகதா கிறிஸ்டி – ஹெர்க்யூல் போய்ரோ, மிஸ் மார்பிள் கதைகள் (Agatha Christie: Hercule Poirot, Miss Marple)
  3. டோரதி சேயர்ஸ் – பீட்டர் விம்சி கதைகள் (Dorothy Sayers: Lord Peter Wimsey)
  4. ஜி.கே. செஸ்டர்டன் – ஃபாதர் பிரவுன் கதைகள் (G.K. Chesterton: Father Brown)
  5. ஈ.சி. பென்ட்லி – ட்ரென்ட் கதைகள் (E.C. Bentley: Trent)
  6. ஹெச்.சி. பெய்லி – டாக்டர் ஃபார்ச்சூன் கதைகள் (H.C. Bailey – Dr. Fortune)
  7. எட்கார் வாலஸ் – ஜே.ஜி. ரீடர் கதைகள் (Edgar Wallace – J.G. Reeder)
  8. ஜோசஃபின் டே (Josephine Tey) – குறிப்பாக Daughter of Time நாவல்.
  9. மெல்வில் டேவிசன் போஸ்ட் – அங்கிள் எப்னர், ராண்டால்ஃப் மேசன் கதைகள் (Melville Davisson Post – Uncle Abner, Randolph Mason)
  10. டாஷியல் ஹாம்மட் (Dashiel Hammett)
  11. ரேமன்ட் சாண்ட்லர் – ஃபிலிப் மார்லோ (Raymond Chandler – Phillip Marlowe)
  12. ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) – குறிப்பாக Three Coffins நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி

Google home

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கப் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனால் அதற்கும் நேரமில்லாத மனிதர்களுக்காக அவர்களின் வேலையை இன்னும் எளிதாக்கியுள்ளது கூகுள். வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களையும் நிர்வகிக்கவும் தானியக்கமாக்கவும் கூகுள் ஹோம் உதவும். வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் பலவற்றை இச்செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். சாவி தேவைப்படாத எண்ணிமப்பூட்டு, கூகுள் தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டின் பாதுகாப்புக்காக வைக்கப்படும் படக்கருவி (CCTV) போன்ற பல திறன்கருவிகள் இதில் அடங்கும். இணையத்துடன் இணைந்து இயங்கும் திறனுள்ள எல்லா பொருள்களையும் இச்செயலி மூலம் கட்டுப்படுத்த இயலும்.

Google home

எப்படியெல்லாம் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தங்கள் நிறுவனத்தில் வேலைசெய்பவர்களிடமே கருத்து கேட்டுள்ளது கூகுள். அதைத் தங்கள் வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்கள். 

1. அன்பான வரவேற்பு

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பணியைத் தலைமையேற்று நடத்துபவர் ஸ்பரதரா. அவர் வீட்டில் விருந்தினர்களை வரவேற்க கூகுள் ஹோம் செயலியைப் பயன்படுத்துவது தனக்கு விருப்பமானது என்கிறார். பொழுது விடிவதற்கு முன்போ, மாலை நேரத்தில் இருள் கவிந்த பிறகோ யாராவது அவர் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தால் உள் முற்றத்தில் உள்ள விளக்குகள் ஒளிரத் தொடங்கும். இதன் மூலம் விருந்தினர்கள் இருண்ட நடைபாதையில் தட்டுத்தடுமாறாமல் நடக்க முடியும்.

2. உடற்பயிற்சி நேரம் 

தயாரிப்பு மேலாளராக இருக்கிறார் கேத்ரின் மெக்கின்லி. திங்கட்கிழமைகளில் மாலை 6 மணிக்குத் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியின் உதவியால் ‘இது உடற்பயிற்சி நேரம்’ என்ற நினைவூட்டலைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல, இந்த நேரத்தில் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள விளக்குகள் தானாகவே எரியத் தொடங்கும்படி செயலி மூலம் கட்டுப்படுத்துகிறார். வேலையை நிறுத்திவிட்டுப் போய் உடற்பயிற்சி செய் என்பதை வலியுறுத்தும் இந்த விளக்கு மாற்றத்தால், தான் தவறாமல் உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவிக்கிறார். 

3. தாகமுள்ள தாவரங்கள்

மென்பொருள் பொறியாளர் கிறிஸ்டினா காங்கின், இச்செயலி மூலம் தான் செய்யும் பணியில் விருப்பமானது, வீட்டுச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதுதான் என்கிறார். நாள்தோறும் மாலை நேரத்தில் தானாகவே செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கும் திறன்மிக்கத் தெளிப்பான்களை வைத்திருக்கிறார் இவர். கூகுள் ஹோம் செயலி மூலம் இவர் குறிப்பிடும் நேரத்துக்குத் தாவரங்களுக்குத் தண்ணீர் கிடைத்து அவற்றை நன்கு வளர்க்க உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

4. பாதுகாப்பான வீடு

மென்பொருள் பொறியாளர் ஜிம் லியின் குழந்தைகள் அவ்வப்போது அவரது வீட்டின் பின் கதவுகளைத் திறந்துவிட்டு மூடாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதை கண்டுபிடித்த ஜிம், தானியக்கம் மூலம் இரவு 11 மணிக்கு மேல் அவரது வீட்டில் ஏதேனும் கதவு, ஜன்னல்கள் திறந்திருந்தால் அவரது திறன்பேசிக்குத் தகவல் வரும்படி செய்துள்ளார். அதிலிருந்து அவர் கதவுகளைப் பூட்டத் தவறவிட்டதே இல்லையாம்.

5. குழந்தைகளின் கண்காணிப்பு

பொறியியல் மேலாளர் காயத்ரி சுப்பிரமணியனின் குழந்தைகள் அவருக்கு முன்னதாகவே வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த அவர், குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அறிமுகமில்லாத நபர்கள் அவரது வீட்டு அழைப்பு மணியை ஒலித்தால் உடனடியாக அந்தத் தகவல் தனக்குக் கிடைக்கும்படி செய்துள்ளார். இதனால் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறுகிறார். 

6. படுக்கைக்குச் செல்லுங்கள்

மென்பொருள் பொறியாளர் ஜேம்ஸ் வுட், இரவு 11:55 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் தொலைக்காட்சியையும் உடனடியாக அணைக்கும்படி செய்துள்ளார். இது அவருக்கு உறங்கும் நேரத்தை நினைவூட்டி அதிக நேரம் கணினித் திரையையோ, தொலைக்காட்சித் திரையையோ பார்ப்பதைத் தடுத்து தன்னை படுக்கைக்குச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். 

  • சத்யா கோபாலன்

The post வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி appeared first on செல்லினம்.

தமிழில் பெயர் வைப்போம்

Tamil name

மலேசியத் தமிழ்க் கணினி வல்லுநர் முகிலன் முருகன்,  மே முதல் தேதி அன்று தமிழ்ப்பெயர் இணையச்செயலியின் இலவச முன்னோட்டப் பதிப்பை வெளியிட்டுள்ளார். 

Tamil name

முகிலன், தமிழ்ச் கணினித் துறையில் இருபத்தைந்தாண்டுகள் அனுபவம் கொண்டவர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் மொழியியல் துறையிலும் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வகையிலான தளங்களை உருவாக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மொழி தொடர்பான திட்டப்பணிகளைச் செயல்படுத்தியுள்ளார். மொழி என்கிற விளையாட்டு செயலிகள் தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.

மலேசிய பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையுடன் இணைந்து இயங்கிவருகிறார். பல செயலிகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள தமிழ்ப் பெயர்கள் செயலியும் மொழியியல் வல்லுநர்கள் ஆலோசனையுடனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடனும் உருவாகியுள்ளது.

அவரைத் தொடர்பு கொண்டு புதிய செயலி பற்றிப் பேசினோம். “நிறைய பேருக்குத் தமிழில் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் சுருக்கமான எளிமையான பெயர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை தாம் விரும்பும்படி நவீன காலத்துக்கு ஏற்றதாக இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் எண் கணிதம், ஜோதிடம் இவற்றில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். இப்படி எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.

நம்பிக்கை இருப்போர், குழந்தையின் பிறந்த தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்தால் நட்சத்திரம், ராசி உள்ளிட்ட தகவல்களுடன் எந்த முதல் எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடும். பெயர்களையும் பரிந்துரைக்கும். எண்கணித முறைப்படியும் பெயர்களை வழங்கும். இவற்றில் நம்பிக்கை இல்லாதோர் நேரடியாக உள்ளே சென்று பெயர்களைத் தேடலாம்.

தேர்ந்தெடுக்கும் பெயர்களுக்கு உரிய பொருளையும், சிறப்புக் கூறுகளையும் வரலாற்றில் பதிந்த பெயர் எனில் அந்தத் தகவலையும் கொடுக்கும். இச்செயலி, செயற்கை நுண்ணறிவு நுட்பத்திறன் மூலம் இயங்கும். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் உள்ளது. எனவே இளைய தலைமுறையினரும் ஆர்வமாகப் பயன்படுத்துவர். 60,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெயர்கள் இத்தளத்தில் உள்ளன. ” என்று தெரிவித்தார்.

கீழே இணைப்பைக் கொடுத்திருக்கிறோம். பயன்படுத்திப் பாருங்கள்.

tamilname இணையத்தள முகவரி

மொழி விளையாட்டுகள்

The post தமிழில் பெயர் வைப்போம் appeared first on செல்லினம்.

தேடினாலும் கிடைக்காது – Crime Novel

7 November 2024 at 04:30

(இந்தக் கதை நடக்கும் காலக்கட்டம் (1980’s) என்பதால் சில விஷயங்கள் இந்தக் காலக்கட்டத்திற்குப் பொருந்தாததாக இருக்கலாம்.)

யோகேஷும் நீரஜாவும் புதுமணத் தம்பதிகள். இருவரும் தங்கள் ட்ரிப்பை முடித்துவிட்டு, நீலகிரியின் ரிச்சி ரிசார்ட்டிலிருந்து கிளம்பியபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அன்றைக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், யோகேஷ் காரை ஜாக்கிரதையாக கையாண்டான்.

நீரஜா காரில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வர, திடீரென காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் யோகேஷ். பார்த்தால் அங்கே லிப்ட் கேட்டு நின்றிருந்தான் யோகேஷின் கல்லூரி கால நண்பன் சேதுபதி. காரில் அவனை ஏற்றிக்கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டபடி மூவரும் பயணத்தை தொடர்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொஞ்ச நேரத்திலேயே காரின் டயர் பஞ்சர் ஆகிறது.

வானம் இருட்டிக்கொண்டு வர, மூவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சேதுபதி தான்  மெக்கானிக்கை அழைத்து வருவதாகச் சொல்லிச் செல்கிறான். இதற்கிடையே தங்களுக்காக காத்திருக்கும் அப்பா கேசவ்விடம், டயர் பஞ்சர் விஷயத்தை போனில் சொல்லச் சொல்லி நீரஜா கூற, போன் நம்பரை வாங்கிச் செல்கிறான் சேது.

ஆனால் கதையின் திருப்புமுனையாக, கேசவ்விற்கு போன் செய்த சேது, யோகேஷையும் நீரஜாவையும் தான் கடத்தி உள்ளதாகக் கூறுகிறான். மேலும்  பணம் 5 லட்ச ரூபாயை யாருக்கும் தெரியாமல், அவன் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து வைக்காவிட்டால், அன்று இரவே இருவரையும் கொன்று விடுவதாகவும் மர்ம நபரைப் போல பேசி மிரட்டுகிறான்.

கேசவ்விற்கு பேசிவிட்டு அடுத்ததாக தன்னுடைய நண்பன் கதிரவனுக்கு போன் செய்த சேது, திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு அவனைத் தயார் படுத்துகிறான். நீண்ட நேரம் ஆகியும் தன்னுடைய மகளும், மருமகனும் வந்து சேராததால் ஏற்கனவே அயர்ந்து போயிருந்த கேசவ், பணத்தை சேது சொன்ன இடத்தில் வைக்கிறார்.

அடுத்ததாக மெக்கானிக் உடன் திரும்பிய சேது, காரை சரி செய்த பிறகு, மூவரும் இரவு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறான். அடுத்த நாள் காலையில் யோகேஷும் நீரஜாவும் வீட்டிற்குச் சென்ற பிறகு, மர்ம நபர் மிரட்டிய விஷயம் இருவருக்கும் தெரியவர, கேசவ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் நண்பனை உதவிக்கு அழைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் தனபால் உடனே கேசவ் வீட்டிற்கு வந்து, நடந்த அனைத்து விஷயங்களையும் கேட்ட பிறகு, விசாரணையைத் தொடங்குகிறார். முதலில் கேசவ்வின் ஆபீஸில் இருந்து விசாரணையைத் தொடங்க, அங்கே பெரிய பதவியில் இருந்த பத்மநாபன் மேல் போலீசின் சந்தேகப்புள்ளி விழுகிறது.

காரணம், திடீரென 15 நாட்கள் முறையாக விண்ணப்பிக்காமல் லீவ் எடுத்தது தான். ஆனால் வெகு சீக்கிரமே கேஸின் கோணம் மாற, போலீஸின் பார்வை சேதுபதியின் மேல் விழுகிறது. ஒரு வழியாக சேதுவின் வீட்டை போலீஸ் அடைந்த போலீசிற்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம்.

அங்கே பூட்டப்பட்டிருந்த வீட்டில், சேதுபதி இறந்து கிடந்தான். சேதுபதியின் நண்பர்களை லிஸ்ட் எடுத்து போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்க…

தப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா..? சேதுபதியைக் கொலை செய்தது யார்..? யோகேஷ்-நீரஜாவை வைத்து சேதுபதி மிரட்டியது எதற்கு..? கேசவ் வைத்த பணத்தை எடுத்துச் சென்ற சேதுவின் நண்பன் கதிரவனின் திட்டம் என்ன..?

உங்களை மிரட்ட வரும் தேடினாலும் கிடைக்காது..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=387

மறக்காதே மன்னிக்காதே – Crime Novel

6 November 2024 at 08:30

கம்பெனி நஷ்டத்தில் ஓடியதை மறைத்து, வினயாவைத் தனக்கு திருமணம் செய்து வைத்த மாமனாரைப் பழி வாங்க முடிவெடுக்கிறான் விஷ்வா. பணக்கார பெண்ணான அருணாவைக் காதலித்துக் கொண்டிருந்த விஷ்வா, மனைவி வினயாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறான்.

ஆரம்பத்தில் இருந்தே வினயாவை வெறுத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் அம்மா இந்திராதேவியும் இந்தத் திட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறாள். மேலும் வினயாவின் கொலையைத் தற்கொலையாக காட்டுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான் விஷ்வா.

அதை செயல்படுத்தும் நோக்கத்தில் ஷெரினாவை மும்பையில் இருந்து வரவழைக்கிறாள் அருணா. ஷெரினா – கொலையைத் திட்டம் போட்டு பிசிறில்லாமல் செய்து முடிப்பவள்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய அப்பாவைப் பார்க்க பெங்களூர் செல்கிறாள் வினயா. வினயா பயணிக்கும் அதே ரயிலில் சென்று அவளின் கதையை முடிக்க முடிவு செய்கிறாள் ஷெரினா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, வினயா சென்ற ரயிலில் பாம் வெடித்து ரயில் விபத்துக்கு உள்ளாகிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வினயாவை, ஹாஸ்பிடலில் இருந்து கடத்தி தன்னுடைய கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைக்கிறாள் அருணா. அன்றிரவு வினயாவின் கதையை முடிக்க அருணா முடிவு செய்கிறாள். ஆனால் திடீர் திருப்பமாக பணக்காரர்களின் கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க எல்லோருடைய கெஸ்ட் ஹவுஸையும் போலீஸ் சோதனையிட்டு வருகிறது.

இதற்கிடையில் ஒரு பெண்ணின் இறந்த உடல் பீச்சில் கிடப்பதாகப்  போலீசிற்குத் தகவல் கிடைக்கிறது. அருணாவின் கெஸ்ட் ஹவுஸைப் போலீஸ் சோதனையிடச் செல்ல, பயத்துடன் உடன் செல்கிறாள் அவள். ஆனால் அவள் சந்தோசப்படும் விதமாக வினயா அங்கே இல்லை.

கெஸ்ட் ஹவுசின் கதவு பூட்டிய நிலையில் இருக்க..வினயா எங்கே..? பீச்சில் இறந்து கிடந்த பெண் யார்..? வினயா இவர்களிடம் இருந்து தப்பிப்பாளா..? விஷ்வா-அருணாவின் திருமணம் நடந்ததா..?

அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் மறக்காதே மன்னிக்காதே..!

கற்கண்டு ஆயுதம் – Crime Novel

5 November 2024 at 08:59

மேகாவும் செல்வியும் நெருங்கிய தோழிகள். தினமும் இருவரும் போனில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பவர்கள். செல்வி இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ஆகி அமெரிக்காவிற்கு பறக்க இருப்பவள்.

மேகாவின் அப்பா ஆதித் உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளர். எதிர்காலத்தில் மனிதனுக்கு வரவிருக்கும் நோய்களை மரபணு மூலம் சரிசெய்யும் நான்-வோலடைல் மெமரி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் சில சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். ஆதித்தின் உதவியாளர் பிரசாத். மேகாவை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருப்பவன்.

அன்றைக்கு மேகாவிற்கு போன் செய்த செல்வியின் குரல் நடுக்கத்தில் இருந்தது. மேகாவை உடனே தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாள் செல்வி. அங்கே சென்ற அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தனக்கு நாள் தள்ளி போயிருப்பதாகவும், கர்ப்ப காலத்தில் இருக்கும் அறிகுறிகள் இப்போது தனக்கு இருப்பதாகவும் கூறி மேகாவை திடுக்கிட வைத்தாள்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை எனவும் செல்வி புலம்ப, மெடிக்கல் கிட்டை வைத்து மேகா செக் செய்ய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. ஷாப்பிங் போவதாகப் பொய் சொல்லிவிட்டு இருவரும் மேகாவிற்கு தெரிந்த கைனகாலஜிஸ்ட்டிடம் செல்கின்றனர்.

செல்வியைப் பரிசோதித்த டாக்டர், அவளின் உடலில் எந்த விதமான கருவளர்ச்சிக்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அவள் கன்சீவ்வாக இருப்பதை உறுதி செய்கிறார். டாக்டர் பேசிக்கொண்டே போக, செல்வி அப்படியே மயங்கி கோமா நிலைக்குச் செல்கிறாள்.

இதையறிந்த மேகாவின் அப்பா ஆதித், மருத்துவத் துறையில் தான் கண்டுபிடித்த ராக்கெட் கேண்டி ஆயுதம் என அழைக்கப்படும், மரபணு சிகிச்சை மூலம் செல்வியை குணப்படுத்த முன்வருகிறார். ஆனால் மருத்துவ முறைப்படி, நடைமுறைக்கு வராத டிரீட்மெண்ட்டை பேஷண்ட்டிற்கு கொடுக்க கூடாது.

அதே சமயம் வேறு இடத்தில்..

போலீஸ் இன்பார்மர் என்ற போர்வையில், தனக்கு வேண்டாத எதிரிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டு, அண்டர் கிரௌண்ட்டில் தாதாவாக வாழ்ந்துகொண்டிருந்த சிக்கந்தரை சந்திக்க வந்திருந்தார் ஏ.சி. நமோ நாராயணன்.

நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஏ.சி. வழக்கமாக பிரதமரும், ஜனாதிபதியும் வரும் இடங்களில் பாதுகாப்பு காரணமாக ரவுடிகளை சிறையில் அடைத்து வைப்பதைக் கூறிய அவர், இந்த முறை சமூக விரோதிகள் லிஸ்டில் சிக்கந்தர் பெயரும் இருப்பதாகக் கூறுகிறார். தவறுதலாக இது நடந்துவிட்டதாகவும், மூன்று நாட்கள் மட்டும் சிறையில் இருக்கும்படி கேட்கிறார் ஏ.சி. ஒரு வழியாக சம்மதிக்கிறான் அவன்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு ஒரு போன் வருகிறது, பேசியது ஒரு பெண்.  தன்னுடைய பெயர் தன்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், தனக்கு வேண்டாத ஒருவனைக் கொலை செய்யும் வேலையை அவனிடம் ஒப்படைக்கிறாள். முன்பணமாக பேசிய மொத்தப் பணமான பத்து லட்சத்தையும் உடனே தர முன்வருகிறாள்.

யோசித்த சிக்கந்தர், தன்யாவின் வேலையை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறான். அடுத்த நாள் அவன் போலீசில் சரணடைய வேண்டி இருப்பதால், தன்னுடைய சகாவான போஸிடம் அந்த வேலையை மாற்றிக் கொடுக்கிறான் சிக்கந்தர். தன்யா சொன்ன ஆளை முடிக்கச் செல்கிறான் போஸ். ஒரு வழியாக அந்த போட்டோவில் இருந்த ஆளைக் கண்டுபிடிக்கிறான். போஸ் கொல்ல வேண்டியது ஆதித்தின் உதவியாளர் பிரசாத்.

யாரந்த தன்யா..? அவளுக்கும் பிரசாத்திற்கும் என்ன சம்பந்தம்..? கோமாவில் இருந்து செல்வி உயிர் தப்பினாளா..? செல்வியின் இந்த நிலைக்கு யார் காரணம்..? ராக்கி கேண்டி வெப்பன் என்பது என்ன..? ஆதித்-பிரசாத்தின் சுயரூபம் என்ன..?

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=86

குட் நைட் குரோதம் – Crime Novel

2 November 2024 at 14:30

ஆளும்கட்சியைச் சேர்ந்த மினிஸ்டர் வெற்றிச் செல்வன், தனக்கும் மாடலிங் கேர்ள் ஆன மம்தாவிற்கும் உள்ள ரகசியத் தொடர்பு வெளியே கசிவதை அறிகிறார். இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள், மம்தா தனது அரசியல் வாழ்க்கைக்குப் பிரச்சனையாக வருவாள் என்று உணர்ந்த அமைச்சர் அவளைக் கொல்ல முடிவு செய்கிறார்.

மம்தாவின் பிறந்தநாள் அன்று அவளை வீட்டிற்கு வரவழைத்து, தனது பிஏ-வான ரத்னத்தை வைத்து அவளை சுட்டுக் கொல்கிறார் அமைச்சர். பிணத்தை டிஸ்போஸ் செய்யும் வேலையை ரத்னத்திடமே ஒப்படைக்கிறார்.

அடுத்த சில நாட்களில் மம்தாவை மறந்துவிட்டு அரசியல் வேலைகளில்  இருந்த அமைச்சருக்கு, கர்நாடகாவில் இருந்து ஒரு போன் வருகிறது. போனில் பேசிய பசவப்பா, சிபாரிசு செய்து தன்னுடைய வேலையை முடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறார்.

மேலும் பெங்களூரில் இருந்த மம்தாவிடமும் தன்னுடைய சிபாரிசு பற்றி அமைச்சரிடம் பேசும்படி கூறியதாக பசவப்பா கூறுகிறார். இதைக் கேட்ட அமைச்சர் வெற்றிச் செல்வன் அதிர்ந்து போகிறார். அன்றிரவே மம்தாவைப் புதைத்த இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கே அவளின் பிணம் இல்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய கண் முன்னால் ரத்தம் சிந்தி உயிர் விட்ட மம்தா எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று யோசித்த அவர் தன்னுடைய அடியாள் வடிவேலுவுடன் பெங்களூர் செல்கிறார். உயிருடன் இருப்பது மம்தாவோ இல்லை, மம்தா உருவத்தில் யாரோ, யாராக இருந்தாலும் உயிருடன் விட்டுவைக்க கூடாது என்று முடிவு செய்து அவளைத் தேடுகிறார்.

தேடலின் முடிவில் அச்சு அசலாக மம்தாவைப் போல இருக்கும் அஸ்வினி என்ற பெண்ணைக் கண்டுபிடிக்கிறார். சினிமா பட வாய்ப்புக்காக அழைப்பது போல், அவளைத் தனியே வரவழைத்து அஸ்வினியையும் கொலை செய்கிறார். போன தடவை புதைத்ததைப் போல் அல்லாமல் இந்த முறை பிணத்தை எரிக்கச் சொல்கிறார்.

அதே சமயம் செமினார் அட்டென்ட் செய்வதற்காக விவேக்-ரூபலாவுடன் பெங்களூரில் தங்கியிருந்தான். தன்னுடைய போலீஸ் நண்பன் வாசனை மீட் பண்ணுவதற்காக விவேக் ஸ்டேஷன் வந்த சமயம், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணத்தைக் காரில் கொண்டு போன விஷயம் அவர்களை எட்டுகிறது. விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் அஸ்வினி என்று தெரிய வருகிறது.

இந்த இடத்தில் கேஸிற்குள் நுழைகிறான் விவேக். அடுத்த நாள் கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் போட்டோ பத்திரிக்கையில் வருகிறது. விவேக் பத்திரிக்கையைப் புரட்டி, அஸ்வினியின் போட்டோவைத் தேடிக் கண்டுபிடிக்க.. எதிரில் ஒரு ஆட்டோ செல்கிறது. அந்த ஆட்டோவில், போட்டோவில் இருந்த அதே அஸ்வினி..

அஸ்வினி எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தால், ஆட்டோவில் சென்ற அந்தப் பெண் யார்..? மம்தாவின் பிணம் எங்கே..? மம்தா தான் அஸ்வினியா..?

தேடலுடன் இப்படிக்கு குட் நைட் குரோதம்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=972

டிசம்பர் இரவுகள் – Crime Novel

31 October 2024 at 00:30

வேலை விஷயமாக ஏர்போர்ட் செல்ல இருந்த அண்ணன் பார்த்திபனை எழுப்புவதற்காக மாடியில் இருக்கும் அவனது அறைக்குச் செல்கிறாள் மேகலா.  ஆனால் ஏற்கனவே எழுந்திருந்த பார்த்திபன், பணத்தைக் கொண்டு வருவதாகவும், விஷயம் வெளியே தெரிய வேண்டாம் எனவும் போனில் யாருடனோ பயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனியின் ஓனரான கங்காதருக்கு மூன்று வாரிசுகள். முதல் மனைவிக்கு பிறந்தவன் பார்த்திபன், இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் – ஜீவா, மேகலா.

பார்த்திபனின் பேச்சை இண்டர்காமில் ஒட்டுக்கேட்ட மேகலா, போனில் ப்ளாக்மெயிலர் சொன்ன இடத்திற்குத் தன்னுடைய காதலன் பிரகாஷை அனுப்புகிறாள். பிரகாஷ்-மேகலா இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் ஆறு மாதங்களாகத் தங்கள் காதலை வளர்த்து வருபவர்கள்.

பார்த்திபனுக்கு முன்னமே அந்த ஹோட்டலுக்குச் சென்ற பிரகாஷ், ப்ளாக்மெயிலருக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அதே சமயம் பார்த்திபனும் அங்கு வந்து சேர, கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தச் செல்கிறான். நீண்ட நேரமாகியும் பார்த்திபன் வெளியே வராததால், பார்க்கிங் இடத்திற்கே செல்கிறான் பிரகாஷ்.

அங்கே கழுத்தில் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் பார்த்திபன். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விவேக்கும், கோகுல்நாத்தும் SOC பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் விவேக் அந்த விஷயத்தை கவனித்தான். காரைத் திறந்தவுடன் உள்ளே இருந்து ஒரு பெர்ஃபியூம் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.

அனைத்து பூக்களையும் கொண்டு செய்த வாசமாக அது இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சேறு படிந்த பூட்ஸ் தடயங்கள் மிகவும் பெரிய அளவில் வித்தியாசமாக இருந்தது. கேஸ் இவ்வாறாக போய்க்கொண்டிருக்க, வேலைக்குச் சென்ற தன்னுடைய பெண் தேவியை நாலு நாட்களாக காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனிற்கு வருகிறார் ரிடையர்டு ஆர்மிமேன் ஜலபதிராவ்.

தேவி வேலை பார்த்துக்கொண்டிருந்த இடம், “கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனி. நேரடியாக விசாரணையை கம்பெனியில் ஆரம்பித்த விவேக், உரக்கிடங்கில் இருந்து ஒரு பெண்ணின் பர்ஸைக் கண்டுபிடிக்கிறான். அந்தப் பர்ஸ் தேவியுடையது என கண்டுபிடிக்கப்பட, மேற்கொண்டு போலீஸ் நாய் சீஸரை வரவழைத்து தேடலைத் தொடங்குகிறான் விவேக்.

சீஸர் பர்ஸை மோப்பம் பிடித்துவிட்டு காட்டுக்குள் ஓடி, ஒரு கட்டத்தில் ஓய்ந்து நிற்கிறது. அங்கே மண்ணில் காலால் பிராண்டி போலீசை அழைக்க, தோண்டிப் பார்த்தால் அழுகிய நிலையில் தேவியின் பிணம் கிடைக்கிறது.

தேவியின் கொலைக்கு பார்த்திபன் காரணமாக இருந்து, தேவிக்கு நெருக்கமானவர்கள் பார்த்திபனைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேஸ் நகர்ந்துகொண்டிருக்க, ஜலபதிராவ் வீட்டிற்கு விசாரணைக்குச் செல்கிறான் விவேக். தேவியின் மரணத்தைப் பற்றித் துப்பு துலங்க அங்கே  சென்றவனுக்குக் காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜலபதிராவ், கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரின் மனைவி, மேலும் பித்துப் பிடித்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவியின் தங்கை அர்ச்சனா என குடும்பமே மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் பார்த்திபனுக்கு வந்த மாதிரியே இன்னொரு போன் கால் ஜீவாவிற்கு வர, அவனும் பயந்து போய் யாருக்கும் தெரியாமல் பணத்துடன் வெளியே செல்ல, இதைக் கண்டுபிடித்த மேகலா, விவேக்கிற்கு விஷயத்தைச் சொல்கிறாள்.

ஆனால் விவேக் செல்வதற்கு முன்னமே பார்த்திபன் கொலை செய்யப்பட்டதைப் போலவே ஜீவாவும் கொலை செய்யப்படுகிறான். மேலும் ஜீவாவின் காரிலும் அதே பெர்ஃபியூம் நறுமணம். அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருக்க, அதில் தேவியின் ஆவி என்ற பெயரில் கடிதம் ஓடியிருந்தது.

அடுத்தது நீ.. என தேவியின் ஆவி என்ற பெயரில் ஒரு லெட்டர் மேகலாவிற்கும் வந்திருக்க..

தேவியைக் கொலை செய்தது யார்..? தேவியின் ஆவி என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் கேஸை திசைதிருப்புவதற்காகவா..? போலீசிடம் இருந்து ஜலபதிராவ் மறைக்கும் உண்மை என்ன..? குற்றவாளி பிடிபட்டானா..? மேலும் தெரிந்துகொள்ள வாசியுங்கள் டிசம்பர் இரவுகள்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=319

காகிதப் பூ தேன் – Crime Novel

9 August 2024 at 08:30

வழுக்குப்பாறை கிராமத்தில் அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்குகிறது மலைவாழ் மக்கள் கூட்டம். நாகரிக வாசனையே அறியாத மனிதர்களும், அங்கு நடக்கும் விசித்திர சடங்குகளும் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. அவர்கள் எல்லைக்குள் அத்துமீறி உள்ளே வருபவர்களை அடித்துக் கொன்று விடுவர் அங்கு வாழும் மக்கள்.

இந்நிலையில் மலையின் உச்சியில் வாழும் அந்த மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆராய்ச்சி செய்ய, சோசியாலஜி மாணவர்களைக் கொண்ட ஒரு குழு அங்கு வந்து சேர்கிறது. 12 மாணவ மாணவிகளைக் கொண்ட அந்தக் குழுவில் இந்தக் கதையின் கதாநாயகி அஜந்தாவும், கதாநாயகன் பாலமுரளியும் உள்ளனர்.

எதையுமே துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அஜந்தா அன்று இரவு அந்த மலை உச்சிக்குச் செல்ல முடிவு செய்கிறாள், உடன் பாலமுரளி. குழுவினர் யாரும் அறியாமல், இருவரும் மலையுச்சியை அடைந்து நேரில் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. அங்கு சென்றதன் விளைவாக பாலமுரளிக்கு கண்பார்வை பறிபோகிறது.

அஜந்தா கட்டாயப்படுத்தியதால் தான் பாலமுரளிக்கு கண்பார்வை போன குற்றவுணர்ச்சியில் வாழ்க்கை முழுவதும் அவனுடன் வாழ முடிவெடுக்கிறாள் அவள். இதற்கிடையில் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார் அஜந்தாவின் அம்மா. அவளுடைய வாழ்க்கையின் அடுத்த திருப்பமாக, அஜந்தாவின் அண்ணன் வேலை பார்க்கும் கம்பெனியின் பாஸின் மகன் தினேஷ்குமார் அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். கோபத்துடன் திருமணப் பேச்சை முடித்து வைத்தவள், பாலமுரளியைக் காதலிப்பதை தினேஷிடம் தெரிவிக்கிறாள்.

பாலமுரளி கண்பார்வை இழந்ததால் திருமணத்தை மறுத்த போதும் அவனிடம் பேசி சமாளித்து ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சென்னையில் இருந்த ஒரு கம்பெனி மூலமாக பம்பாயில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலை அஜந்தாவிற்கு கிடைக்கிறது. அந்த ஹோட்டலின் ஓனரின் உதவியால் தங்குவதற்கு வீடும் கிடைக்கிறது.

ஆனாலும் மனித நடமாட்டமே அதிகம் இல்லாத தெருவில் இருக்கும் அந்த வீட்டில் இருவரும் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். ஹோட்டலில் வேலை செய்து கொண்டே பாலமுரளி கண்பார்வையைத் திரும்ப கொண்டு வருவதற்காக நிறைய முயற்சி செய்கிறாள் அஜந்தா.

இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் இருந்தால், பாலமுரளிக்கு பார்வை மீண்டும் கிடைத்துவிடும் என்று அறிந்த அஜந்தா பணத்திற்காக அவனுக்குத் தெரியாமல், ஹோட்டலில் கிளாசிக்கல் டான்ஸ் ஆட ஒப்புக்கொள்கிறாள். ஆனால் ஹோட்டல் ஓனரின் திட்டமோ?! வேறு மாதிரி இருக்க..

பாலமுரளிக்குப் பார்வை கிடைத்ததா..? அஜந்தாவிற்கு ஆபரேஷனுக்கான பணம் கிடைத்ததா..? மனித ஓநாய்களிடம் மாட்டிக்கொண்டிருந்த அஜந்தாவின் நிலை என்ன..?

want to buy : https://www.panuval.com/kaagitha-poo-thaen-10015552

Whispering Shadows

30 May 2023 at 09:35

Once upon a time, in a quaint town nestled amidst whispering cashew trees, lived a girl named Anika. Within her, a silent storm brewed, embodied by an unseen shadow that only she could perceive. The shadow draped itself around her like an ethereal veil, forever present yet invisible to the eyes of others.

The shadow, a companion that followed Anika wherever she roamed, tormented her like an unwelcome specter. It loomed over her like an insidious fog, threatening to swallow her whole. She would catch glimpses of it from the corner of her eye, a dark silhouette silently creeping closer with each passing day.

But as the shadow encroached upon her, Anika found herself caught between a rock and a hard place. The people around her, oblivious to the relentless darkness that pursued her, dismissed her fears as mere figments of an overactive imagination. Their voices echoed with criticism and skepticism, insisting, “There is no shadow, Anika. You’re overreacting.”

Her heart, burdened with both the looming shadow and the weight of their words, sank further into the abyss. She felt like a fragile bird, desperately seeking refuge from an unrelenting storm, only to find herself scorned by those who believed her struggle to be imagined.

Determined to prove them wrong, Anika attempted to hide from the shadow, like a rabbit darting into the thicket, hoping to escape the predator’s gaze. She plastered a smile on her face, feigning strength while concealing the turmoil that raged within her. Yet, with each passing day, the shadow’s presence only grew stronger, encircling her like a tightening noose.

In her darkest moments, Anika wondered if she was truly losing her mind. Was the shadow a figment of her imagination, as they claimed? Or was it a tangible manifestation of her deepest fears and vulnerabilities? The uncertainty gnawed at her sanity, threatening to unravel the delicate threads of her existence.

But amid the chaos, Anika discovered a glimmer of solace in her creativity and wit. Like a jester dancing amidst the darkness, she embraced the power of words and humor as her secret weapons. She would quip, “you sly shadow, always lurking in the periphery. But I’ll outwit you yet!”

Through her words, Anika found a way to describe the indescribable, to express the inexplicable emotions that plagued her soul. Her words became a beacon, reaching out to others who shared her silent battles. They too recognized the shadow’s presence, validating Anika’s truth and providing her with a much-needed sanctuary of understanding.

United with kindred spirits who also bore the weight of unseen shadows, Anika learned that her struggle was not in vain. Together, they formed an unbreakable bond, lifting each other up as they faced their demons head-on. In their shared vulnerability, they discovered strength and resilience, the antidotes to the darkness that threatened to consume them.

Over time, Anika realized that the opinions of those who failed to perceive the shadow held no power over her truth. She understood that her journey was unique, and that her strength lay in embracing her fears and finding support from those who believed her.

And so, armed with her words and a tribe of understanding souls, Anika walked her path with newfound courage. The shadow still lurked, a constant reminder of her struggles, but it no longer held dominion over her spirit. She had learned to live alongside it, to dance with her fears while basking in the light of compassion and acceptance.

ஆபத்தில் கூகுள் குரோம்?

கூகுள் குரோம்

கூகுள் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க நீதித்துறை அமைச்சகம், அதன் குரோம் உலவியை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இணையதள விளம்பர சேவைகளில் ஏகபோக உரிமையை கூகுள் மீறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

Google Chrome
Google Chrome

கூகுள் ஏகபோக உரிமையாளரா?

அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் கடந்த 2023-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஏகபோக உரிமைச் சட்டங்களை மீறுவதாக கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. அதில் ஆப்பிள், ஆண்டிராய்டு கருவிகளின் இயல்புநிலை தேடுபொறியாக, கூகுள் குரோம் உலவியை நிறுவ, அந்நிறுவனம் பல பில்லியன் டாலர்கள் கொடுத்து, ஒப்பந்தங்கள் போட்டதாகக் குறிப்பிடப்பட்டது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விதிமீறலை மறைக்க பல்வேறு நடவடிக்கைகளை கூகுள் மேற்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி அமித் மேத்தா, 2024-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், கூகுள் போட்டியாளர்களின் சந்தை அணுகுமுறையைத் தடுப்பதாகவும், பயனர்களின் விருப்பங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் உறுதிப்படுத்தி, கூகுளை ஓர் ஏகபோக உரிமையாளர் (Monopolist) என அறிவித்தார். வர்த்தகத்தில் ஏகபோக உரிமை நிலையைப் பெறுவது சட்டவிரோதமல்ல என்றாலும், அதைப் பயன்படுத்தி சந்தைப் போட்டியைக் கட்டுப்படுத்த முயல்வது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார். 

கூகுள் கருவிகளின் விற்பனை 

இந்த வழக்கில் அண்மையில் அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் மேலும் ஒரு கோரிக்கையைத் விடுத்துள்ளது. அதில், கூகுள் தனது குரோம் உலவியை விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், ஆப்பிள், மொசில்லா போன்ற நிறுவனங்களுடன் கூகுள் கொண்டுள்ள இயல்புநிலைத் தேடுபொறிக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கூகுளின் இந்தச் செயல் போட்டியாளர்களை விலக்கிச், சந்தை ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கூகுளின் ஏகபோக உரிமைத்துவத்தை நீக்கும் வகையில், கூகுள் பிளே, கூகுள் குரோம் உள்ளிட்ட கருவிகளை விற்பனை செய்யலாம் என்று நீதிபதி அம்த் மேத்தா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அதை வலியுறுத்தி கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணை வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

குரோம் விற்பனையின் தாக்கம்

கூகுள் குரோம் உலவி விற்பனை செய்யப்பட்டுவிட்டால், அந்நிறுவனத்தின் வருமானம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிளுடன் கூகுள் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கொண்டுள்ள ஒப்பந்தம் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், உலக அளவில் 3.69 பில்லியன் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோம் உலவி மற்றும் அதன் பயன்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாகக் கூறப்படுகிறது.  ஏகபோக உரிமை நிலையைத் தவறாகப் பயன்படுத்தி, சந்தையில் போட்டியைத் தவிர்ப்பதுடன் பயனர்களின் விருப்பங்களையும் கூகுள் கட்டுப்படுத்துவதற்கு இப்புதிய நடவடிக்கை கடிவாளமிடுவதுடன், தொழில்நுட்ப சந்தையின் முக்கியமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

கூகுளின் பதில் 

இந்நிலையில் கூகுள் நிறுவனம், நீதித்துறை அமைச்சகத்தால் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், கூகுளின் வரையறுக்கப்பட்ட அங்கீகாரத்திற்குள் அதீத தலையீடு நிகழ்வதாகவும் விமர்சித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, மேல்முறையீட்டுக்கும் தயார் நிலையில் உள்ளதாக கூகுள் கூறியுள்ளது. இந்த வழக்கு, இணையளத்தில் ஏகபோக உரிமைகள் மற்றும் அதற்காக நிலவும் போட்டிகள் குறித்த முக்கியமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • விவேக்பாரதி

The post ஆபத்தில் கூகுள் குரோம்? appeared first on செல்லினம்.

❌