Normal view

Received before yesterday

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

ஒரு வழியாக.. சந்தேகத்தை இடவலமாக அதக்கி வைத்திருக்கும் கன்னக் கதுப்பில் ஓராயிரம் அர்த்தக் குமைச்சல் ஊறுகிறது எதுவும் பயன்படப் போவதில்லை நீயும் நானும் ஒப்புக்கொள்ள விரும்பும் சமரசத்தை தொலைத்துவிட்டேன் பழியை எண்ணி மனதை அஞ்சி பெருங்காட்டின் இடைவழியில் சரித்து உருட்டித் தள்ளும் பாதாள அடுக்குகளில் மோதி பிளந்தது யோசனையின் பின்மண்டை தலைகீழ் கோணத்தை நேர்ப்படுத்திக்கொள்ள நான் எனக்கு ஒரு தூக்க மாத்திரையைப் பரிந்துரை செய்கிறேன் கனவுகளின் இரகசிய கதவுகள் திறந்ததும் வெளியேற வேண்டியது முதலில் தன்மானம் அல்ல […]

The post கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் appeared first on Nutpam.

பாலைவன லாந்தர் கவிதைகள்

கென்யா மூத்தக்குடி காகுரு அந்த பூர்வக்குடி வாத்தியத்தை இசைப்பதை நிறுத்து உன் தசைகள் துடிக்க வாசிக்கும் போது ஆப்பிரிக்க காற்று மணம் மாறுவதைக் கவனி எதற்கான எச்சரிக்கை இது எட்டு திசையிலிருந்தும் தடதடவென நிலம் அதிர ஓடிவருகின்றன காட்டெருமைகள் விரிந்தக் காதுகளுடைய யானைகள் சிங்கங்கள் சிறுத்தைகள் புலிகள் வரிக்குதிரைகள் ஒட்டகச் சிவிங்கிகள் இன்னும் எண்ணற்றவை ஓஹ் என்ன மாயை இது இந்த இசைக்கும் இவைகளுக்கும் என்ன பரிமாணம் நைரோபி எத்தனை பழைய கிழவி நீ வெள்ளைக் கூந்தலுக்குப் […]

The post பாலைவன லாந்தர் கவிதைகள் appeared first on Nutpam.

ரேவா கவிதைகள்

  இசையும் காலம் மனமெங்கும் அலையத் தொடங்கும் யோசனையின் கால்கள் ஒவ்வொன்றும் காலத்தின் வெவ்வேறு தொடர்ச்சிக்கு இழுத்துப்போகிறது சொல் முந்த வழித் திறந்த காலம் இறவாப் பொழுதாகிக் கனக்கிறது நிகழும் மௌனத்தை எடையேற்றி நியாபகத்தின் பொத்தலில் நிறையும் கணக்கற்ற நானுக்கோ தந்துதவ நல்ல சொல் தேடித் தேடி ஓடுகின்ற கால்கள் ஒயுமிடம் மாயும் மனம் எங்கு உண்டு நானின் வளையா நான் மூங்கில் மனம் உடைத்துத் துளையிட்ட விசையில் இசையும் பொழுதால் நிகழ்கிறது ஓயும் காலுக்கான காத்திருப்பு.. […]

The post ரேவா கவிதைகள் appeared first on Nutpam.

சமகால வியட்நாமிய கவிதைகள்

ஹோன் டோன் (Hoan Doan) நீங்கள் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ அதைவிட வெளிப்பாடு முக்கியமானது – என்று சொல்லும் ஹோன் டோன் தன் உடலையே கலைப்படைப்பாக மாற்றுகின்ற Cai No  என்று காணொளி வடிவத்தில் புதுமையான வகையில் ஒரு கலை படைப்பை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்ட கலைஞர். Cai No என்பதற்கு (The Slavery) அடிமைத்தனம் என்று பொருள். அந்தகைய புதுமையான கலை வழியாக பெண்ணுடல் மீது திணிக்கப்பட்டுள்ள வலியை பாடுகளை பிரச்சனைகளை மாறுபட்ட கோணங்களில் உடலோடு […]

The post சமகால வியட்நாமிய கவிதைகள் appeared first on Nutpam.

சவிதா கவிதைகள்

நகர மறுக்கும் இசை. என் பாதைகள் தவறிவிட்டன. நேரான பாதையில் நடப்பதாக லயித்திருந்தேன். தவறியதற்கு நான் பொறுப்பல்ல. உன் இசைதான் காரணம். தேர்ந்த இசைக்கருவிகளுக்கு செவிசாய்த்த நீ என் தடுமாற்றங்களை மறந்து விட்டாய். என் பாதைகளின் முட்களும், கற்களும் உன் பயணத்தைத் தடுக்க அனுமதிப்பதில்லை நான். பாதங்களில் வழியும் குருதியின் சிவப்பில் நிறைபவளுக்கு ஈடென தர உன் வாழ்வில் ஏதும் மிச்சமில்லை. நிறைவாழ்வு உம்முடையது. வாழ்க. மங்கலமுடைத்து வாழ்க. பொலிக. நான் இருளில் ஒளிவேன். முரடான கற்களுக்குள் […]

The post சவிதா கவிதைகள் appeared first on Nutpam.

நிம்மி சிவா கவிதைகள்

1) நொடி உணர்வுகளின் அழிவு நடைக்குள் சிதறும் நிழல்களைப் போல் மறைந்துருக்கும் குரல்கள் சலனமற்ற துளியாய் சில வரிகள் மட்டும் நீளுகின்றன மணலில் புதைந்து போன வெளிச்சத்தில் பிரவாகமெடுக்கும் சொற்களின் ஓரங்களில் பதிந்த ரகசியங்கள் பிம்பமாக ஜொலிக்கின்றன நீரோடைகள் உதிர்த்த கனலாய் கண்களின் எல்லை பிய்க்கும் தருணம் தோளில் பஞ்சாயுதம் சுமந்ததுபோல் பாதங்களில் தீக்கதிர்கள் சுடுகின்றன காற்றில் சுழன்றுகொண்டிருக்கும் தடுமாறும் இரவுகள் வேரற்ற நினைவுகளின் நிழலாய் பின்தொடர்கின்றன காற்றில் பழுத்த நினைவுகளை நான் கைப்பற்றும்போது அவற்றின் விதைகள் […]

The post நிம்மி சிவா கவிதைகள் appeared first on Nutpam.

வருணன் கவிதைகள்

வாழ்க்கை போலொரு விளையாட்டு விதிகளற்ற விளையாட்டு வாழ்க்கையைப் போல இருக்கும். சமன்செய் நீளங்களை ஆழங்களை அகலங்களை நீட்டல்களை குறைத்தல்களை கணிக்கிற பயிற்சியே அன்றாடத்தின் அதிமுக்கிய பணி சரி,எதனோடு அல்லது எவரோடு சமன்செய்தல்? ஷூ… சும்மாயிரு. தொணதொணக்காமல்… அலுத்துக் கொள்ள என்ன இருக்கிறது? சலிப்பின் கசப்பேறிய பொழுதுகளை மூடி வைத்திட இழுத்து வந்து கொண்டே இருக்கிறது அந்தி கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு அச்சு எதுவெனும் ரகசியம் தெரியாத (ரகசியமாம் பெரிய…) ஆனால் அதற்குள் கச்சிதமாய் பொருந்திக் கொள்கிற […]

The post வருணன் கவிதைகள் appeared first on Nutpam.

ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

1. மறத்தல் ஒரு இனிய சுபாவமாகத் திரள்கிறது கதவுகளின் இடுக்குகளில் இருந்து ஏங்கும் தந்தையைக் கட்டிலின் விளிம்பிலிருந்து விழப் பார்க்கும் அன்னையை கோபத்தின் முடிச்சிலிருந்து விலகமுடியா உற்றவளை என எல்லோரையும் மறக்க முடிகிறது எதிரே சில சொற்கள் இருந்தால் அதிலும் அது புதியது என்றால் தன்னையே மறக்கவும் வாய்க்கிறது இவ்வினிய சுபாவத்திற்காகவே தினமொரு தந்தையை பொழுதொரு அன்னையை கணமொரு காதலை அழியச்செய்து லயிக்கிறேன். 2. யாரும் படிக்காத கவிதையைப் புரட்டுகிறது ஒரு கை யாரோடும் போதாச் சொற்களோடு […]

The post ஜார்ஜ் ஜோசப் கவிதைகள் appeared first on Nutpam.

ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்

1.பூனைகள் அம்மாவுக்கு பூனைகளே உலகம். அப்பாவின் உலகிற்குள் நுழைந்துவிடாத பூனைக்குட்டிகளை அம்மா வளர்த்தாள். அப்பா வீடு நீங்கும் பொழுதுகளில் முதலில் வரவேற்பறைக்குள் வந்தது. பின்னொரு நாளில் படுக்கையறைக்குள். பூனைக்காரி என்று ஊர் சொன்னபோதும் அம்மா பூனைகளுடன் வசிப்பதை நிறுத்தவில்லை. ஊர் உறங்கும் ஓர் இரவில் அப்பா மறைந்து போனார். அப்பாவின் உடலை ருசித்த பூனைகள் அன்றிரவு அவரது உயிரையும் ருசித்தன என்பது யாரும் அறிந்திடாத ரகசியம். 2.மாற்றம் யானைகளைக் கொல்வது எளிதாகிவிட்ட இக்காலத்தில்தான் எறும்புகள் தங்களுக்கு தந்தங்கள் […]

The post ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள் appeared first on Nutpam.

ந.பெரியசாமி கவிதைகள்

நீங்களும் வந்திருக்கலாம். பாத்திரமொன்றில் கொஞ்சுண்டு கடலை நிறைத்து வீட்டில் வைத்திருந்தான். பாத்திரம் பாசியை வளர்க்க அலைகளில் கால் நனைத்து விளையாட தினசரி வந்துகொண்டு இருக்கிறார்கள். ******** மணம் அறிந்திராததோ புழங்கியதோ இல்லாமல் இல்லை புதிதானதைப் போன்று இருப்பதன் காரணம் அறிந்ததுதான் பிடித்தமானதாகிவிட்டது நீல நிறத்தவள் நினைவிலும் நிஜத்திலும் உடனிருக்க உருக்கொள்ளும் புழுதியின் மணம். ******** என்செய்ய அதிகாரம் யார் கைகளில் இருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல. என்செய்ய ஏதும் செய்ய இயலாது எதிர்படுகையில் நாணலாகி கடந்திடுகிறோம் இதுகூட […]

The post ந.பெரியசாமி கவிதைகள் appeared first on Nutpam.

❌