Normal view

Received before yesterday

ஆடல் 9, கம்பப்பாடல்கள்: வஜ்ரபாகு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி

27 May 2025 at 09:31


சூரசம்மார நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் கம்பம் ஏறும் சடங்கு கந்த புராணத்தின் வச்சிரபாகு பாத்திரம் ஒன்றை மையமாக்கி நிகழ்கிறது. வச்சிரபாகு என்னும் அரக்கன் தான் அந்த கம்பம், குறைந்தபட்சம் அறுபதடி உயரம் உள்ள கம்பம். இவன் இராவணனைப்போல பத்துத் தலையும் இருபது கரமும் உடையவன். வச்சிரம்பாகு என்னும் பெயருக்கு வச்சிரம் போன்ற உறுதியான தோள்களை உடையவன் என்று பொருள். 

ஆடல் 8, செவ்வேள் ஆடல்: கம்பப்பாடல்கள் - 2, தாமரைக்கண்ணன் புதுச்சேரி

25 November 2024 at 07:28


நெட்டப்பாக்கம் சூரபத்மன்

ஆடல்- கம்பப்பாடல்கள் பகுதி- 1


1.3 சூரசம்காரம் : முத்தியால்பேட்டை

திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ

சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ

திட்டாண்மை யொடுபகைமை உற்றாரும் உயஅருள்தி
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....

..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ 

முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே

  • முத்தியாலுப்பேட்டை முருகப்பெருமான் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய குமருகுருநாதன் திருவகுப்பு 

ஆடல் 7, செவ்வேள் ஆடல் -கம்பப்பாடல்கள் , தாமரைக்கண்ணன் புதுச்சேரி

15 September 2024 at 17:47
குக்கே சுப்ரமண்யர்

சூரசம்கார கூத்து

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

தனது சேனையை விட்டு கடலை தாண்டி சூரன் நகரான மகேந்திரபுரத்தில் தூது சென்று, அசுரர்கள் அஞ்ச போர் புரிந்து சிவந்த கிரணங்களை உடைய சூரியனை ஒத்து கடலிலிருந்து திரும்பி வந்த வீரபாகுவின் ஆவியான முருகா, பொழில் சூழ்ந்த செந்தூரில் உறையும் குமரா

(கொங்கைப் பணையிற் என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

❌