சென்னை புத்தகத் திருவிழா புதிய வெளியீடுகள் – காலச்சுவடு, பாரதி- புக்பார் சில்ரன்,சால்ட், தமிழ்வெளி, புலம்
சென்னை புத்தகத் திருவிழா இன்று(27-12-2024) தொடங்கியுள்ளது. புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவந்த, வெளிவர இருக்கும் காலச்சுவடு, பாரதி- புக்பார் சில்ரன், சால்ட், தமிழ்வெளி,புலம் ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
காலச்சுவடு வெளியீடுகள்
பாரதி புத்தகாலயம் வெளியீடுகள்
Book for children வெளியீடுகள்
சால்ட் வெளியீடுகள்
தமிழ்வெளி வெளியீடுகள்
புலம் வெளியீடுகள்
சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியாகும் புதிய வெளியீடுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிட இருக்கிறோம். இணைந்திருங்கள்.
எலுமிச்சைத் தேயிலையில் காதல் வார்த்தைகள் – எஸ்.செந்தில்குமார்:
செந்தில்குமார் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார். இவருக்கு ஒரு வாரம் ஒதுக்கி முழுமையாக வாசிக்க வேண்டும்.
கதை முழுதும் ஸ்பூன்கள் தான் வருகிறது. கல்யாணம் முடித்த தம்பதிகளுக்கிடையேயும் அதே ஸ்பூன்கள். சற்று கவனமாக வாசியுங்கள். இடையே இருப்பது ஸ்பூனல்ல என்பது விளங்கும். அலட்டாமல் ஆழமான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் செந்தில்குமார்.
சமையலம்மா – பாட்டக்குளம் துர்க்கையாண்டி:
சென்டிமென்டால் நிறைந்த கதை. இருந்தும் ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது. காலம் முழுதும் மனிதர்களோடு பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுபவர்கள் யாரும் அருகிலின்றித் தனியாக இறப்பதேன்? மற்றவர்களுக்கு உணவளித்தவர் உணவின்றி இறப்பதேன்?
குருதியுறவுள்ள ஆவிகள் – ஆலிஸ் வாக்கர் – தமிழில் ராணி கணேஷ்:
கறுப்பினக் குடும்பத்தின் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் கதை. ஆலிஸ் வாக்கர் நல்ல நாவல்களைப் போலவே நல்ல சிறுகதைகளும் எழுதியுள்ளார். ராணியின் உற்சாகம் பாராட்டத்தக்கது, ஆனால் மொழிபெயர்ப்புத்தேர்வில் கவனம் அவசியம்.
மன்னிப்பு – ராஜலட்சுமி- ஆங்கிலத்தில் A J Thomas- ஆங்கிலம் வழித்தமிழில் தி.இரா.மீனா:
ராஜலட்சுமியின் கதையில் ஒளிந்திருக்கும் Embers இரண்டு மொழிக்கு மாற்றப்பட்ட போதிலும் வெம்மை தணியாதிருக்கிறது. கடைசி வரியில் கதையே மாறுகிறது. ரெமாவிற்குக் கூடுதல் குற்றஉணர்வு வரப்போகிறது. நல்ல, தெளிவான மொழிபெயர்ப்பு. Pronounஐப் பிரதிப்பெயர்ச்சொல் என்றால் புரிதல் எளிது.
தொடுகை – தேவிலிங்கம்:
இந்தியப்பெண்கள் விளையாட்டுத்தனத்தை மணமானதும் வெட்டென மறத்தல் எப்போதும் ஆச்சரியம் தருவது. தேவி பெண்பிள்ளைகளின் பதின்மவயதில் நடைபெறும் Extracurricular activities எல்லாவற்றையும் கதைகளில் வரிசையாகப் பார்வைக்கு வைக்கிறார். கதையின் Open ending. நன்றாக வந்திருக்கிறது.
எலுமிச்சைத் தேயிலையில் காதல் வார்த்தைகள் – எஸ்.செந்தில்குமார்:
செந்தில்குமார் தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி வருகிறார். இவருக்கு ஒரு வாரம் ஒதுக்கி முழுமையாக வாசிக்க வேண்டும்.
கதை முழுதும் ஸ்பூன்கள் தான் வருகிறது. கல்யாணம் முடித்த தம்பதிகளுக்கிடையேயும் அதே ஸ்பூன்கள். சற்று கவனமாக வாசியுங்கள். இடையே இருப்பது ஸ்பூனல்ல என்பது விளங்கும். அலட்டாமல் ஆழமான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் செந்தில்குமார்.
சமையலம்மா – பாட்டக்குளம் துர்க்கையாண்டி:
சென்டிமென்டால் நிறைந்த கதை. இருந்தும் ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது. காலம் முழுதும் மனிதர்களோடு பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுபவர்கள் யாரும் அருகிலின்றித் தனியாக இறப்பதேன்? மற்றவர்களுக்கு உணவளித்தவர் உணவின்றி இறப்பதேன்?
குருதியுறவுள்ள ஆவிகள் – ஆலிஸ் வாக்கர் – தமிழில் ராணி கணேஷ்:
கறுப்பினக் குடும்பத்தின் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் கதை. ஆலிஸ் வாக்கர் நல்ல நாவல்களைப் போலவே நல்ல சிறுகதைகளும் எழுதியுள்ளார். ராணியின் உற்சாகம் பாராட்டத்தக்கது, ஆனால் மொழிபெயர்ப்புத்தேர்வில் கவனம் அவசியம்.
மன்னிப்பு – ராஜலட்சுமி- ஆங்கிலத்தில் A J Thomas- ஆங்கிலம் வழித்தமிழில் தி.இரா.மீனா:
ராஜலட்சுமியின் கதையில் ஒளிந்திருக்கும் Embers இரண்டு மொழிக்கு மாற்றப்பட்ட போதிலும் வெம்மை தணியாதிருக்கிறது. கடைசி வரியில் கதையே மாறுகிறது. ரெமாவிற்குக் கூடுதல் குற்றஉணர்வு வரப்போகிறது. நல்ல, தெளிவான மொழிபெயர்ப்பு. Pronounஐப் பிரதிப்பெயர்ச்சொல் என்றால் புரிதல் எளிது.
தொடுகை – தேவிலிங்கம்:
இந்தியப்பெண்கள் விளையாட்டுத்தனத்தை மணமானதும் வெட்டென மறத்தல் எப்போதும் ஆச்சரியம் தருவது. தேவி பெண்பிள்ளைகளின் பதின்மவயதில் நடைபெறும் Extracurricular activities எல்லாவற்றையும் கதைகளில் வரிசையாகப் பார்வைக்கு வைக்கிறார். கதையின் Open ending. நன்றாக வந்திருக்கிறது.