மூட்டைப் பூச்சி
11 May 2025 at 12:39
நாங்கள் போய் சேர்ந்த போது கோவிலில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. கோவில் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கோவில் மீது குடை போல் விருந்திருந்த மல்லிக் கொடியின் கிளையிலிருந்து பறவை ஒன்று பாடிக் கொண்டிருந்தது. காற்றில் நறுமணம் நிரம்பியிருந்தது. நாங்கள் கோவிலில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு மூலையில் வைத்திருந்த விளக்கைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டடோம். சங்கர் கௌடா ஒரு நிமிடம் நின்று தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டான். அவன் என் நெற்றிலும் குங்குமத்தை இட்டுவிட்டு அதன் துகள்கள் என் கண்களில் விழாமல் கையால் தடுத்தபடி ஊதி விட்டான்.