Normal view

Received before yesterday

பிடித்த SF சிறுகதை: ஃப்ரெடெரிக் ப்ரௌன் எழுதிய Arena

இந்தச் சிறுகதையை என் பதின்ம வயதுகளில் முதல் முறையாகப் படித்தேன்.

நேரான, சிம்பிளான கரு/கதை. பூமிக்கும் இன்னொரு கிரகத்துக்கும் போர். மனிதர்களின் பிரதிநிதியாக ஒருவன், வேற்று கிரகத்து பிரதிநிதியாக பல வளையும் கரங்கள் (tenatcles) கொண்ட உருண்டு செல்லும் கோளம் இருவருக்கும் நடுவில் துவந்த யுத்தம். அவ்வளவுதான் கதை.

அப்போதெல்லாம் மாபெரும் வீரனாக உலகை வெல்ல வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்னால் பிறக்காமல் போய்விட்டோமே என்று கொஞ்சம் வருத்தம். இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்ததில் என்ன வியப்பு!

1944-இல் எழுதப்பட்ட சிறுகதை. பின்னாளில் ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடர் இந்தச் சிறுகதையை ஒரு அத்தியாயத்துக்கு (episode) பயன்படுத்திக் கொண்டது. 1965-க்கு முற்பட்ட 20 சிறந்த SF சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இன்றும் பிடித்துத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ப்ரெடெரிக் ப்ரௌனின் ஒரு இரண்டு வரி சிறுகதை – Knock – மிகவும் புகழ் பெற்றது.

Imagine all human beings swept off the face of the earth, excepting one man. Imagine this man in some vast city, New York or London. Imagine him on the third or fourth day of his solitude sitting in a house and hearing a ring at the door-bell!

அவ்வளவுதான் கதை!

இந்தப் பதிவை எழுதும்போது Dark Interlude என்ற சிறுகதையையும் படித்தேன். நல்ல கரு. எதிர்காலத்திலிருந்து வரும் ஒருவன் இன்றைய அமெரிக்காவில் ஒரு பெண்ணை மணக்கிறான். அவன் கால்பகுதி கறுப்பன், மணந்தது வெள்ளை இனப் பெண். அவன் உடலில் நீக்ரோ ரத்தம் ஓடுவது தெரியும்போது வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்ற மனநிலை உள்ளவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆனால் என் கண்ணில் நன்றாக எழுதப்படவில்லை.

Cry Silence என்ற இன்னொரு சிறுகதையும் கிடைத்தது. தனக்கு கேட்கும் திறன் போய்விட்டது என்று கதை கட்டிவிட்டு தன் மனைவி, அவளது காதலன் தங்களைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டது கேட்கவில்லை என்னும் கணவன். நல்ல கரு, ஆனால் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைத்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

Zenna Henderson: Pilgrimage

ஹெண்டர்சனின் People கதைகள் எனக்குப் பிடித்தமானவை. ஒரு charming கருவை பல கோணங்களில் விரிக்கிறார்.

வேற்று கிரகவாசிகள். ஆனால் அவர்களும் உயிரியல் ரீதியாக மனிதர்களே. இரண்டு கை, கால், கண், காது – ஏன் 46 க்ரோமோசோம்கள்தான். அவர்கள் கிரகம் அழியும்போது அங்கிருந்து தப்புகிறார்கள், பூமிக்கு வருகிறார்கள். காற்று மண்டலத்தின் சூட்டில் அவர்கள் விண்கலன்கள் எரிகின்றன, பலரும் இறக்கிறார்கள். தப்பித்தவர்களில் அனேகம் பேர் அமெரிக்காவில் ஒரு மலைப்பகுதியில் இறங்குகிறார்கள், அங்கே தனியாக வாழ்கிறார்கள். பூமியின் மனிதர்களோடு மிகக் குறைவான தொடர்புதான். அவர்களுக்கு பல சக்திகள் இருக்கின்றன, அவர்களால் பறக்க முடியும், எண்ணங்களைப் படிக்க முடியும். அவை பூமியின் மனிதர்களுக்குத் தெரிந்தால் வேற்றுகிரக வாசிகள் என்று தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள், அந்த சக்திகளை வெளியே காட்டாமல் இருக்க படாதபாடு படுகிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு சின்ன  முடிச்சை விவரிக்கிறது.

முதல் புத்தகமான Pilgrimage (1961) – அதன் முதல் கதையிலேயே – Ararat (1952) – களைகட்டிவிடுகிறது. வெளி உலகத்திலிருந்து இந்த ஊருக்கு ஆசிரியையாக வரும் அழகிய இளம் பெண் வாலன்சி. இவர்கள் ஊருக்கு ஆசிரியராக வரும் யாரும் நிலைப்பதில்லை, இவர்களின் அபூர்வ சக்திகள் எதையாவது பார்த்து பயந்து ஓடிவிடுகிறார்கள். வாலன்சியும் ஜெம்மியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள், ஆனால் வாலன்சி அவனை ஏற்க மறுக்கிறாள். கடைசியில் வாலன்சியும் தப்பித்த இரண்டு வேற்று கிரகவாசிகளின் பெண், அவர்களில் ஒருத்தி என்பது தெரிகிறது. தப்பித்தவர்கள் இவர்கள் மட்டுமல்ல, இன்னும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறார்கள்.

அடுத்த கதையின் கேள்வி இவர்களால் பூமி மனிதர்களோடு உடல் உறவு கொள்ள முடியுமா என்பது. அப்படி ஒரு திருமணத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் இவர்களைத் தேடி அடைகிறார்கள்.

மூன்றாவது கதை பூமி மனிதர் ஒருத்தி பார்வையிலிருந்து. ஜெம்மியின் தங்கை ஆசிரியை பயிற்சிக்குப் போகிறாள், அங்கே பூமிப்பெண் ஒருத்தியோடு நல்ல நட்பு. அந்தப் பெண்ணுக்கு தன்னால் இந்த மாதிரி சூப்பர்வுமன் ஆக முடியவில்லையே என்று கொஞ்சம் ஏக்கம். அவள் ஏதோ ஊருக்கு ஆசிரியையாகச் செல்கிறாள், அதுவும் தப்பிப் பிழைத்தவர்களின் ஒரு சிறு குழு. ஆனால் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று தெரிந்தால் தாக்கப்படுவார்கள் என்ற அச்சத்தினால் அத்தனையையும் அமுக்கப் பார்க்கிறார்கள். எப்படி குழுக்கள் இணைகின்றன என்பதுதான் கதை.

பூமி மனிதர்களும் இவர்கள் மாதிரி சூப்பர்மான் ஆகத் தொடங்குகிறார்கள் என்று ஒரு கதை. அம்மா இறந்து தனியாக மாட்டிக் கொள்ளும் ஒரு சிறுவனைப் பற்றி ஒரு கதை. இன்னொரு கிரகத்துக்கு சென்ற குழு ஒன்று இவர்களை தங்களோடு அழைத்துச் செல்ல வருகிறார்கள் என்று ஒரு கதை.

கதைகளின் சிறப்பு ஒரு கருவை எப்படி எல்லாம் விவரிக்க முடிகிறது என்பதில்தான் இருக்கிறது.

எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம் பெரிதாக எதையும் விவரிக்காமலே அவர்கள் க்வேக்கர்கள் போல அமைதியை விரும்புபவர்கள், லட்சிய பைபிள் காலத்து விழுமியங்கள் உள்ளவர்கள் என்று கோடி காட்டுவது.

ஹெண்டர்சன் நாலைந்து புத்தகங்களை எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது இது ஒன்றுதான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒரே ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்றால் Ararat சிறுகதையைப் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிவியல் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Zenna Henderson விக்கி குறிப்பு

 

Zenna Henderson: Pilgrimage

ஹெண்டர்சனின் People கதைகள் எனக்குப் பிடித்தமானவை. ஒரு charming கருவை பல கோணங்களில் விரிக்கிறார்.

வேற்று கிரகவாசிகள். ஆனால் அவர்களும் உயிரியல் ரீதியாக மனிதர்களே. இரண்டு கை, கால், கண், காது – ஏன் 46 க்ரோமோசோம்கள்தான். அவர்கள் கிரகம் அழியும்போது அங்கிருந்து தப்புகிறார்கள், பூமிக்கு வருகிறார்கள். காற்று மண்டலத்தின் சூட்டில் அவர்கள் விண்கலன்கள் எரிகின்றன, பலரும் இறக்கிறார்கள். தப்பித்தவர்களில் அனேகம் பேர் அமெரிக்காவில் ஒரு மலைப்பகுதியில் இறங்குகிறார்கள், அங்கே தனியாக வாழ்கிறார்கள். பூமியின் மனிதர்களோடு மிகக் குறைவான தொடர்புதான். அவர்களுக்கு பல சக்திகள் இருக்கின்றன, அவர்களால் பறக்க முடியும், எண்ணங்களைப் படிக்க முடியும். அவை பூமியின் மனிதர்களுக்குத் தெரிந்தால் வேற்றுகிரக வாசிகள் என்று தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள், அந்த சக்திகளை வெளியே காட்டாமல் இருக்க படாதபாடு படுகிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் இந்தக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒரு சின்ன  முடிச்சை விவரிக்கிறது.

முதல் புத்தகமான Pilgrimage (1961) – அதன் முதல் கதையிலேயே – Ararat (1952) – களைகட்டிவிடுகிறது. வெளி உலகத்திலிருந்து இந்த ஊருக்கு ஆசிரியையாக வரும் அழகிய இளம் பெண் வாலன்சி. இவர்கள் ஊருக்கு ஆசிரியராக வரும் யாரும் நிலைப்பதில்லை, இவர்களின் அபூர்வ சக்திகள் எதையாவது பார்த்து பயந்து ஓடிவிடுகிறார்கள். வாலன்சியும் ஜெம்மியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள், ஆனால் வாலன்சி அவனை ஏற்க மறுக்கிறாள். கடைசியில் வாலன்சியும் தப்பித்த இரண்டு வேற்று கிரகவாசிகளின் பெண், அவர்களில் ஒருத்தி என்பது தெரிகிறது. தப்பித்தவர்கள் இவர்கள் மட்டுமல்ல, இன்னும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறார்கள்.

அடுத்த கதையின் கேள்வி இவர்களால் பூமி மனிதர்களோடு உடல் உறவு கொள்ள முடியுமா என்பது. அப்படி ஒரு திருமணத்தில் பிறந்த இரண்டு குழந்தைகள் இவர்களைத் தேடி அடைகிறார்கள்.

மூன்றாவது கதை பூமி மனிதர் ஒருத்தி பார்வையிலிருந்து. ஜெம்மியின் தங்கை ஆசிரியை பயிற்சிக்குப் போகிறாள், அங்கே பூமிப்பெண் ஒருத்தியோடு நல்ல நட்பு. அந்தப் பெண்ணுக்கு தன்னால் இந்த மாதிரி சூப்பர்வுமன் ஆக முடியவில்லையே என்று கொஞ்சம் ஏக்கம். அவள் ஏதோ ஊருக்கு ஆசிரியையாகச் செல்கிறாள், அதுவும் தப்பிப் பிழைத்தவர்களின் ஒரு சிறு குழு. ஆனால் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று தெரிந்தால் தாக்கப்படுவார்கள் என்ற அச்சத்தினால் அத்தனையையும் அமுக்கப் பார்க்கிறார்கள். எப்படி குழுக்கள் இணைகின்றன என்பதுதான் கதை.

பூமி மனிதர்களும் இவர்கள் மாதிரி சூப்பர்மான் ஆகத் தொடங்குகிறார்கள் என்று ஒரு கதை. அம்மா இறந்து தனியாக மாட்டிக் கொள்ளும் ஒரு சிறுவனைப் பற்றி ஒரு கதை. இன்னொரு கிரகத்துக்கு சென்ற குழு ஒன்று இவர்களை தங்களோடு அழைத்துச் செல்ல வருகிறார்கள் என்று ஒரு கதை.

கதைகளின் சிறப்பு ஒரு கருவை எப்படி எல்லாம் விவரிக்க முடிகிறது என்பதில்தான் இருக்கிறது.

எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம் பெரிதாக எதையும் விவரிக்காமலே அவர்கள் க்வேக்கர்கள் போல அமைதியை விரும்புபவர்கள், லட்சிய பைபிள் காலத்து விழுமியங்கள் உள்ளவர்கள் என்று கோடி காட்டுவது.

ஹெண்டர்சன் நாலைந்து புத்தகங்களை எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது இது ஒன்றுதான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒரே ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்றால் Ararat சிறுகதையைப் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிவியல் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Zenna Henderson விக்கி குறிப்பு

 

❌