ஈசுவரஸ்மரணையிலேயேதன்ஸ்மரணையைஉலகைவிட்டுசுழலாமல்வாழ்வைநடத்திவந்தபரமஹம்ஸரைச்
சுற்றிசிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். பிற்காலம் உலகப் பிரசித்தி
பெற்ற நரேந்திரநாத தத்தர், உலகறியாத ஆனால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி, உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர், சாஸ்திரி சிவநாத பாபு, பிரதாப சந்திர முஜும்தார், வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி, நித்தியானந்தஸ்வாமி, வைத்தியரானசசாதரபண்டிதர், கோடீச்வரரானயதுநாதமல்லீக், ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர். இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள். அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை- அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள். அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. நினைத்துக்கொண்டு, இருந்தாற்போல் நிஷ்டை கலைவது வரையில் காத்திருப்பார்கள். நிஷ்டை நீடித்தால்-சில சமயம் நிஷ்டை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கலையாமல் இருந்தது உண்டு - கலைவது வரைக் காத்திருக்கவோ அல்லது மீண்டும் வருவதாகவோ தோதாபுரியிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.
இந்த தோதாபுரி-மகான் தோதாபுரியிடமிருந்து வேறுபட்டவர். இவரும் பரமஹம்ஸர் கூட்டத்தைச் சார்ந்தவர். தக்ஷிணேச்வரத்தில் சேட் கோவிந்தஜியின் பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்து வந்தார். அவர் மனைவிஒருபிள்ளையை - நவீனன், வயதுபதினாறு - வைத்துவிட்டு இறந்துவிட்டாள். தோதாபுரிக்குத் தன் மனைவி மீது அத்யந்த பிரேமை. ஏனென்றால் கல்யாணமாவதற்கு முன் அவர் கோலாகல புருஷராக இருந்து தீராத காசநோயைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் மனைவியின் தீவிர தெய்வபக்தியையும் தேவநிஷ்டைகளையும் பார்த்து மனம் மாறிவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் மனைவி தன் மகன் நவீனனைப் பார்த்துக் கொள்வது அவர் கடமை என்று சொல்லிவிட்டு உயிர்நீத்தாள். அதற்குப் பிறகு தோதாபுரி தன் மகன் மீது அதிகமாக வாஞ்சையைக் காட்டாது, ஆனால் அவனைக் கண்ணை இமைகாப்பது போல் காத்துவந்தார். அவர் மனைவி இறந்தபொழுது நவீனனுக்கு வயது பத்து இருக்கும். பரமஹம்ஸர் அவனுக்குப் பதிமூன்று வயதாகும்போது அவனைப் பார்த்துவிட்டு பையன் முகத்தில் வீசிய பிரம்மதேஜஸைக் கண்டு, அவனைத் தன் தேவிபூஜை காரியத்துக்கு மலர்பறித்தல், மாலைசூட்டல், துதிபாடல் உபயோகப் படுத்திக் கொண்டு வந்தார். இது தோதாபுரிக்குத் தெரியாது. நவீனன் ஒருநாள் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வராமலிருக்கவே தோட்டி குஞ்சன் மூலம் அவன் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று நவீனன் கெளரங்கஸ்வாமியிடம் பரமஹம்ஸர் செத்துவிட்டாரா என்று கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அவன் அதற்கு முன்னர் பரமஹம்ஸர் நிஷ்டையில் வீழ்வதைக் கண்டதில்லை. தோதாபுரி இரண்டுபட்ட மனதுடன் மகனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அன்று வீட்டிற்கு வந்ததும் அவர் மனம் நிலையில் இல்லை. அவர் போன அன்று ஆசிரமத்தில் யதுநாதமல்லிக்கும் மதுரபாபுவும் சாதுஜனங்களைவிட்டு வேறாக, மெதுவாகப் பேசிக் கொண்டும், பரமஹம்ஸரை அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். உபயஜீவியானதோதாபுரிக்குஅது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு மல்லிக்கும் மதுராபாவுவும் கொழுத்த பணக்காரர்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்துபோகும் விவரம் அவருக்குப் புரியவில்லை. ஊர் ஜனங்கள் பரமஹம்ஸர் மூலமாகத் தன் பணத்தை மல்லிக் இன்னும் அதிகமாக்க விரும்புகிறானென்றும், ஆனால் அந்தப் பைத்தியக்காரச்சாமி அதற்குச் சம்மதிக்கவில்லை என்று பேசி வந்ததும் அவருக்குத் தெரியும். எனினும் ஒருதடவை சென்றுவந்த தோதாபுரிக்கு அடிக்கடி ஆசிரமத்துக்குப் போகாமல் இருக்கமுடியவில்லை. இதன் பொருட்டு அவர் வெள்ளிக்கிழமைதோறும் காலை ஒருமணிக்கு முன் கடைக்கு வந்துவிட்டு இரவு எட்டுமணிக்குப் பரமஹம்ஸர் ஆசிரமத்திற்குப் போவதற்குச் சேட் கோவிந்தஜியிடம் அனுமதி வாங்கி இருந்தார். ஆசிரமத்தில் வந்த பிறகு ராமகிருஷ்ணரைப் பற்றிய அபிப்பிராயம் மேலோங்கி வந்தது. எந்தச் சமயத்தில் யார் அங்கு வருவார் என்பது நிச்சயமில்லை. சேட் கோவிந்தஜி சபையில் யாராவது பெரிய மனிதர் வந்தால் - அவிநாத சட்டர்ஜியோ, ராம பண்டித முக்கர்ஜியோ- அவர்களுக்கு விசேஷ மரியாதை நடக்கும். அவர்களை உபசரிக்கும் கடமையெல்லாம் சேட், தோதாபுரிக்கு விட்டுவிடுவார். தோதாபுரிக்கு அதைச் செய்வதில் பரம சந்தோஷம்.
அதைப் போலவே ஆசிரமத்தில் இவர் வந்திருக்கும் சமயத்தில் யாராவது பெரிய மனிதன் வந்தால் - சந்திரஸேனரோ, சசாதரபண்டிதரோ - பரமஹம்ஸர் இவரைப் பார்த்துச் சிரிப்பார். உடனே தோதபுரியும் அவர்களைக் கவனித்துக் கொள்வார். இது ஒரு மாமூலாகிவிட்டது. அங்கு வருபவர்களெல்லாம் இதைக் குறித்துத் தோதாபுரியைப் பரிகசித்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
தோதாபுரி பார்ப்பதற்கு நெட்டையாக, நன்றாக உணங்கிய கருவாடு நிறத்தை உடையவராக இருந்தார். தலை முழுவதும் ரோமம் வளர்த்துக் கொண்டு உச்சியில் மாத்திரம் ஒரு சிறுகடுகத்தனை குடுமி வைத்திருந்தார். மெல்லிய அழுக்கடைந்த மல்லைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அங்கவஸ்திரம் மாத்திரம் அணிந்து கொண்டிருப்பார். அவர் மடியில் ஒரு வெள்ளிப்பொடி டப்பி எப்பொழுதும் முளைத்திருக்கும். அவர் மனம் உணர்ச்சிப் பெருக்கு அடையும் பொழுதெல்லாம் அவர் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சுவார். இதைக்குறித்தும் ஆசிரமவாசிகள் அவரைப் பரிகசிப்பார்கள். ஆனால் தோதாபுரி கொஞ்ச நாட்கள் பரமஹம்ஸர், ஒரு திருஷ்டாந்தக் கதையில் எவ்வாறு தான் மூக்குப்பொடி போட்டுக்கொள்வதை, ஒரு திருஷ்டாந்தமாக உபயோகித்தார் என்று போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
இப்பொழுது தோதாபுரி ஆசிரமத்திற்கு வரத் தொடங்கி மூன்று வருடங்களாகி விட்டன. இந்த மூன்று வருடங்களும் அவர் மனதில் ஒரு உருத்தெரியாத ஆனால் கலவரப்படுத்தும் எண்ணம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை என்பதை அவரால் கூட நம்பமுடியவில்லை. இதைப் பற்றி நினைக்கையில் அவருக்கு ஒருதடவை பரமஹம்ஸர் தன் தாஸர்களிடை அவரால்(தோதாபுரியால்) பரமஹம்ஸரிடம் மூன்று வருஷம் நெருங்கிப்பழகிய பின்னும் ஒருமுறையாவது பொடிபோடுவதை நீக்க முடியவில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. நவீனனிடம் மாலை ஆசிரமத்தில் இருந்த அவன் ஸ்கூலில் இப்பொழுது இறுதி வகுப்புப் படித்துத் தேறிவிட்டான். திரும்பி வருகையில் தனக்குத் தினம் ஒரு அணாவுக்குப் பொடி வாங்கி வரச் சொல்வார். நவீனனும் ராமகிருஷ்ணர் கூறியபடி அவன் நல்ல பிள்ளை - அதை ஒழுங்காய்ச் செய்து வந்தான். அந்த நவீனன் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டான். அப்பொழுது கல்கத்தாவில் புதியதாக சர்வகலாசாலையைத் தொடங்கியிருந்தார்கள். தோதாபுரிக்குத் தன் மனைவி சொன்னது மாத்திரமல்லாமல் அவர் பொருட்டும் மேல்படிப்புக்குச் சென்று பெரிய பதவியில் வரவேண்டுமென்று ஆசை,இதற்கு அவர் ஆசிரமத்தில் முதல் தடவை வந்தபோதே அவருக்குத் தெரியாமலேயே ஆயத்தமாக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவருக்குக் கூட இப்பொழுதுதான் தெளிந்த மனதின் மேல்பரப்பில் சிந்தனை உருவாகத் திரண்டு வந்தது. ஏனென்றால் முதல் முறை அவர் ஆசிரமத்திற்கு வந்த அன்று, நிஷ்டையிலிருந்த பரமஹம்ஸரின் நினைவே அவருக்கு இல்லை. அவர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தவர்கள் மல்லிக்கும் மதுரபாபுவும்தான். பரமஹம்ஸரை நன்றாகப் பார்க்காமல் வந்ததைக் குறித்துக் கலவரப்பட்டார். ஆனால் அன்று ஆரம்பித்தது இன்று தன் மனதில் உருப்பெற்று கையும் காலும் பெற்றுவிட்டது என்று நினைத்ததும் அவருக்கு மீண்டும் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. எனினும் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு புறப்பட்டார். முதல் நாளே இன்றைக்கு அவர் சேட்டிடம் லீவ் வாங்கியிருந்தார்.
நல்ல உச்சிவேளை, வெயில் எரித்துக் கொண்டிருந்தது. போவதற்கு முன் தன் மன உளைச்சலை நிறுத்த ஒரு சிட்டிகை நல்ல பொடியை உறிஞ்சிவிட்டு, தன் தலையை அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டு, போதமில்லாமல் என்று சொல்லும்படியாக நடந்தார். நடந்து செல்லும் பொழுதே தான் செல்லும் காரியத்தைப் பற்றி நினைக்கக் கூடாது என்று நினைத்தும், அதைப் பற்றி நினைக்காமலிருந்தும் மீண்டும் அதைக் குறித்துத் தாவ, அவஸ்தைப் பட்டுக் கொண்டே நடந்த வேகத்தில், அவர் ஆசிரமத்தை விட்டு நாலு அடி தாண்டிய பின்னர், உணர்வு மீண்டும் தன்னைப் பின்னிழுக்க ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.
அவர் நினைத்தபடி ஆசிரமத்தில் ஒருவருமில்லை. ராமகிருஷ்ணர் மாத்திரம் இருந்தார். ஹிருதயன் கூட இல்லை. அவர் நிஷ்டையில் இல்லை என்பதை அறிந்ததும் அவருக்கு ஒரு நிம்மதி. பிறகு தன் மேல் துண்டால் முகத்தை விசிறிக் கொண்டுவிட்டு. ஆசிரமத்தில் உள்ள கிணற்றை நோக்கிச் சென்றார். இவையெல்லாவற்றையும் அவர் வேண்டுமென்றே மெதுவாகச் செய்தார்.
பிறகு, பரமஹம்ஸரிடம் வந்து அவரை வணங்கிட பின்னர், வாளாஉட்கார்ந்திருந்தார். இதைப் பார்த்த பரமஹம்ஸர் சிரித்த வண்ணம்,
"என்ன தோதா, இன்று கடை இல்லையா?'' என்றுகேட்டார்.
“இருக்கு''
''எஜமானருக்கு உடம்பு சரியாக இல்லையா?''
"அவரும் சௌக்கியம்தான்."
"நவீனனைத் தேடிக் கொண்டு வந்தாயா? அவன் இப்போது சிறு பிள்ளை இல்லை என்றாலும், அவனைத் தேடிக் கொண்டு வருவாயா, என் மூளை துருப்பிடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்தக் காலத்திலேயே அண்ணா சொன்னதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் கல்கத்தா சென்று சர்வகலாசாலையில் சேர்ந்திருந்தால் இந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கமாட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார். இதைக் கேட்ட தோதாபுரி உள்ளம் மேலும் கலவரமடைந்தது.
இருந்தாலும் முகத்தில் ஒரு பிடிவாதத்தின் சாயைபடர, வெள்ளிடப்பியிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக் கொண்டு விட்டு மெள்ளப் பேசத் தொடங்கினார்.
“நவீனன் விஷயமாக வந்தேன்.''
“நவீனன் நல்ல பிள்ளை.”
"என்னுடன் நீங்கள் ராய்மஹாசயர் வீட்டிற்கு வரவேண்டும்."
"எனக்குஅவரைத்தெரியாதே."
''உங்களுக்குத் தெரிய வேண்டாம் எனக்குத் தெரியும். அவர் மதுரபாபுவின் சிநேகிதர்.'
''ஏன், இன்னும் நவீனனுக்கு வயதாகவில்லையே" என்று சொல்லி பரமஹம்ஸர் சிரித்தார்.
"அதற்கில்லை, ராய் மஹாசயர் கோடீஸ்வரர். ஆனால் அவருக்குப் புத்திர பாக்கியம் கிடையாது நவீனனைப் பற்றிக்கூட அவர் என்னிடம் கடைக்கு வருகையில் பராபரியாக விசாரிப்பார். நவீனன் மேல்படிப்புக்குப் போகவேண்டுமென்று முன்னுக்கு வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என்னுடைய நிலையில் அவனுக்கு இந்த உதவி செய்யமுடியாது. அதனால்தான் அவரிடம் சென்று இதற்காகப் பொருள் உதவியையும் அவருடைய ஆதரவையும் கோரவேண்டும். நவீனன் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.''
"ஆனால்?''
“க்ஷமிக்க வேண்டும். நான் சொல்லி முடித்து விடுகிறேன். நவீனன் பெரியவனாகி பெரிய பதவியில் அமர்ந்து சிஷ்யனாக இங்கே வர நானே அவனை உபசரித்து எதிர்கொண்டு அழைக்க வேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை."
"ஆனால் நான் என்ன செய்யமுடியும்?"
"நீங்கள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவேண்டாம். என்னுடன் வந்து உட்கார்ந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு தோதாபுரி ஒரு ஆர்வத்துடனும், ஆவலே உருவாகவும் அவர் முகத்தைப் பார்த்தார்.
பரமஹம்ஸர் அவரை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. கொடியில் போட்டிருந்த தன் ஒற்றை மேல் துண்டைக் கையில் பிடித்துக் கொண்டு அவருடன் வெளியே இறங்க ஆயத்தமானவர், திரும்பித் தோதாபுரியிடம் “உங்கள் வெள்ளி டப்பியில் போதிய பொடி இருக்கிறதா" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வேறு நினைவில் மூழ்கியிருந்த தோதாபுரியிடமிருந்து "இருக்கிறதே" என்ற பதில் வந்தது. இதன்பின் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு நாலு தெரு தாண்டி ராய்மஹாசயர் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பொழுது ராய்மஹாசாயர் தன் வீட்டு வாசலில் விசிறியால் தனக்குத்தானே விசிறிக்கொண்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தோதாபுரியைத் தெரிந்ததும் அவரை வரவேற்காமல் நின்று கொண்டிருந்தார்.
தோதாபுரியே வலிந்து அவரைக் கும்பிட்டு அவரிடம் சென்றார். அவராகவே வலிந்து, சற்று எட்டி நின்று கடுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பரமஹம்ஸரைச் சுட்டிக் காட்ட ராய் மஹாசயர் அவர்கள் இருவரையும் உள்ளே வரச் சொல்லி தான் முன்னே போனார்.
உள்ளே சென்றதும் கூடத்தில் சார்த்தி வைத்திருந்த இரு பலகைகளில் ஒன்றைத் தரையில் வைத்து, அதில் பரமஹம்ஸரை அமரும்படி தோதாபுரி வேண்டிக்கொண்டார். பரமஹம்ஸர் அவ்வாறே செய்தார். அவர் தன் மேல் துண்டை இப்பொழுது மடியில் வைத்துக்கொண்டார். தோதாபுரி பேச ஆரம்பித்தார்.
''நீங்கள் சில நாட்கள் முன் கேட்ட குங்குமப்பூ கடையில் வந்திருக்கிறது."
“என்ன கதையாக இருக்கிறது, தோதாபுரி! இதைச் சொல்லவா இந்தப் பட்டை உரிக்கும் வெயிலில் இந்தக் கிழவனையும் அழைத்துக் கொண்டு வந்தாய்.''
தோதாபுரிக்குக் கலவரம் கூடியது. திரும்பிப் பார்த்தார். பரமஹம்ஸர் சுவரில் சாய்த்த பலகையைப் போல அரையாக மூடிய கண்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் தன்னைத் தைரியப்படுத்திக் கொள்ள ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சி விட்டுச் சற்றுத் தயங்கிவிட்டு, க்ஷமிக்கணும் இதற்காக நேற்றுக் கடைக்குக் கல்கத்தாவிலிருந்த ரோஜாமணி அம்மையார் ஆள்விட்டிருந்தார்கள்."
இதுகாறும் அசட்டையாக இருந்த ராய்மஹாசயர் எழுந்து உட்கார்ந்தார். தாசிரோஜாமணியுடன், தன் மனைவி இறந்த பிறகு அவர் நிரந்தரமான தொடர்பு வைத்திருந்தும், அவள் தேவைகளை இவர் கணக்கில் எழுதிக் கடையிலிருந்து அனுப்புவதும் தோதாபுரிக்குத் தெரியும்.
"???" இவ்வாறு ராய்மஹாசயர் அவர் பேச்சைத் தொடர எதிர்பார்த்தார்.
"குங்குமப்பூ இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்று தகவல் கிடைத்தது. நான் இன்று லீவ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நவீனன் மூலம் உங்களிடமே கொடுத்தனுப்பலாம் என்றுதான் நினைத்தேன். இன்று சேட்டும் கடையைச் சீக்கிரமாக அடைத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."
ரோஜாமணியின் பெயரைக் கேட்டதால் சந்தோஷமடைந்திருந்த ராய்மஹாசயர் "நவீனன் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அவன் யார்? கடைவேலைக்காரனா?"
"இல்லை அவனுக்கு உங்கள் அனுக்கிரகம் வேண்டும்.''
ராய்மஹாசயர் பரமஹம்ஸரைப் பார்த்துக்கொண்டே “என்னுடைய அனுக்கிரகமா" என்றார். பரமஹம்ஸர் இன்னும் அதே நிலையில் வீற்றிருந்தார்.
“நல்லபையன். என் ஒரே புத்திரன், ஆசிரமத்தில் புண்ணிய கைங்கரியம் செய்கிறான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டான். அவன் மேலே படிக்க வேண்டுமென்றும் பெரிய பதவியில் அமரவேண்டும் என்றும் என் ஆசை. இந்த சிந்தனை உதித்தவுடன் உடனே இங்குவந்தேன்.''
இப்பொழுது ராய்மஹாசயர் தோதாபுரியைத் தனியே வேறு அறைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். தோதாபுரியும் மூன்று வருஷத்திற்கு முன் தன் உள்ளத்தில் எற்பட்ட அதே ஒரு உருத்தெரியாத உணர்ச்சியுடன் அவரைப் பின் தொடர்ந்தார். கூடத்தில் பரமஹம்ஸர் பலகையைப் போல் உட்கார்ந்திருந்தார்.
"தோதாபுரி, நான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நாம் இருவரும் மனைவியை இழந்தவர்கள். இருவரும் நிறைய லோகானுபவம் நிறைந்தவர்கள். நான் பரமஹம்ஸர் ஆசிரமம் பக்கமே போவதில்லை என்பது உனக்கு தெரியும். நீயும் மூன்று வருஷங்களாக அங்கு போய் பழகிக் கொண்டிருந்தவன். இன்று அவரையும் அழைத்துக் கொண்டு என்னிடமும் வந்திருக்கிறாய்."
இதைக் கேட்டுக் கொண்டேயிருந்த தோதாபுரி மேலே அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தால், அவரைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சிவிட்டு, தன்மூக்கைத் துடைத்துக்கொண்டு அவரைத் தொடரச் சொன்னார்.
"நான் அங்கு வராவிட்டாலும் எனக்கும் பரமஹம்ஸரைத் தெரியும். மல்லிக் முதலியவர்கள் ஏன் அவரைச் சுற்றி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. எனக்கு வம்பு பேசுவதில் வெறுப்பு. ஆனால் ஒன்று. நான் அதிகமாகப் படித்ததில்லை. பரமஹம்ஸரும் படிக்கப் பிடிவாதமாக மறுத்தவர் என்பது உனக்குத் தெரியும். ஆனால் எங்கள் நிலையென்ன, உண்மையான ஞானம் பதவியெல்லாம் வேண்டுமென்றால் அதற்கு மேல்படிப்பு வேண்டாம். என்ன, நான் சொல்வதைக் கேட்கிறாயா?''
வரும் அழுகையை அடக்கிக் கொள்வதாலும், வரம்புமீறிய உணர்ச்சியால் கட்டுண்டபோதும் மக்கள் பெறும் ஒரு உணர்ச்சியால், தோதாபுரி தன் வாய் வலித்ததால், வாய்பேச முடியாமல் தலையை அசைத்தார். மீண்டும் அவர் உள்ளத்தின் உருத்தெரியாத வெளியில் தன் மனைவியின் உருவமும், கூடத்தில் நிர்விசாரமாக உட்கார்ந்திருந்த பரமஹம்ஸர் உருவமும் வீட்டிலிருந்த களங்கமற்ற நவீனன் உருவமும் ஒருசேர மின்னிப் பாய்ந்தன.
''எனக்குத்தெரியும். நீ உலகம் தெரிந்தவன். எனக்கு நவீனன் என்ற பெயர் பிடித்திருக்கிறது. எனக்கும் அவனுக்கு உதவிபுரிந்து அவனை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனால் அவனை நான் படிப்பினால் வீணாக்க விரும்பவில்லை. அவனுக்குக் காரியத்திறமையையும், பொருள் சேகரிப்பு முறையையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - நீ சம்மதித்தால்."
மோர் மீது திரண்டு வரும் வெண்ணெயைப் போல் தன் உள்ளத்தில் மிதந்து தன் மென்னியைப் பிடிக்க உயர்ந்து எழும்பி வரும் ஒரு பயத்தினால் தோதாபுரி மீண்டும் தலையை அசைத்தார்.
'பரமஹம்ஸரைப் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் பெண்களைப் பற்றிச் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் தோதாபுரி, விந்துவை ஒரு பொழுதும் விரயமாக்கக் கூடாது என்று அந்தப் பேயனே வந்து சொன்னாலும் நம்மால் முடியுமா, தோதாபுரி? ரோஜாமணியைப் பற்றி நான் பராபரியாகப் பல கேள்விப்படுகிறேன். நானும் சட்டவரம்புக்குட்பட்டவன் தான். என் மனதைச் சாந்திப்படுத்த ஒருவன் இருந்தால் இந்த அவஸ்தையில்லை. உன்னிடம் நான் சொன்னது பொய், எனக்கு நவீனனைத் தெரியும். அவன் மிகவும் நல்ல பையன் என்றும், பிரம்மதேஜஸ் உடையவன் என்றும் என்னிடம் மதுரபாபு சொல்லியிருக்கிறான். நவீனன் ரோஜாமணி வீட்டில் அவள் வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டு என்னுடைய ஆளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவனைப்பற்றி நீ ஒன்றுக்குமே கவலைப்பட வேண்டாம். தோதாபுரி, அவன் காரியத்தை என்னிடத்தில் விட்டுவிடு. என்ன சொல்கிறாய்?''
தோதாபுரி உருத்தெரியாத தனது உள்ள வெளியிலிருந்து எழுந்த சூறைக்காற்றைப் போன்ற கோபத்தை அடக்க வெகுவாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு அவரிடம் "நாளை வருகிறேன்" என்று எழ “நன்றாக யோசித்து முடிவுக்கு வா" என்று சொல்லிக்கொண்டே அவரும் அவனைப் பின்தொடர, இருவரும் கூடத்திற்கு வந்ததும், அதுகாறும் வீற்றிருந்த பரமஹம்ஸர் எழுந்திருந்ததும் ஒரே சமயத்தில் நடந்தது.
இருவரும் பரமஹம்ஸரும் தோதாபுரியும் மௌனமாக நடந்து, ஆசிரமத்திற்கு வந்ததும் விடை பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்ற தோதாபுரியைப் பார்த்து பரமஹம்ஸர், "தோதாபுரி, நீ ஒன்றும் சொல்லவேண்டாம். இந்த மூன்று வருஷங்களில் நீ என்னிடம் கற்றுக்கொண்டதைவிட, கற்றுக் கொள்ளத் தவறியதை, ராய்மஹாசயர் உனக்கு மூன்று மணி நேரத்தில் கற்றுக் கொடுத்திருப்பார். நாம் இருவரும் அவரை வணங்குவோம். இப்பொழுது நான் உன்னுடன் வந்ததின் தாத்பரியம் உனக்குப் புரிந்திருக்கும்"என்று சொல்லிப் பரமஹம்ஸர் அவருக்கு விடைகொடுத்தனுப்பினார்.
அடுத்த நாள் காலையில் தக்ஷிணேசுவரத்தின் காளி கோயிலில் நவீனன் அர்ச்சகனாகிவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட ராய்மஹாசயர் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.
நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.
எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.
‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே
நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’
இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.
எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை
எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
எதன் பொருட்டும் நீ பலியாவதை
நான் விரும்புவதில்லை என்று
அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்
அது அழுதது; நான் சிரித்தேன்.
அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.
பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.
நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.
நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.
தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது.
றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ்.
தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.
மைத்துனன் நம்பி
சூதனா சற்று சும்மா இரு
கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்
முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு
நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்
நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.
சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;
எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.
தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.
சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.
குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.
அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.
யாருமில்லையா உனக்கு மந்தி
உன் மந்தை எங்கே
அது என்னைப் போலவே
என்னோடு பேசாமல் பார்க்கிறது.
கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.
றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.
‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.
விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?
இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும், மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.
சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.
போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார்.
இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.
மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது.
மூளை நரம்பியல் துறை 21ஆம் நூற்றாண்டில் பெருமளவு வளர்ந்துள்ள சூழலில், இன்றும் உலகின் தீர்க்கமுடியாத புதிர்களில் ஒன்றாக இருக்கும் மனித மூளைக்குள் உள்ள ரகசியங்களை, போர்ஹெஸ் சென்ற நூற்றாண்டில் சிறுகதைகள் வாயிலாக தொட்டுச் சென்றிருக்கிறார் என்று நரம்பியல் விஞ்ஞானி ரோட்ரிகோ குயின் ஆச்சரியப்படுகிறார். நினைவு, மறதி என்பதை தனது படைப்பின் முக்கியமான விவகாரமாக்கிய போர்ஹெஸ், தனது “funes the memorius” கதையின் மூல கதாபாத்திரம், தனக்கு நடப்பது எல்லாவற்றையும் சித்திரம் போல ஞாபகம் இருப்பதால் எதையும் மறக்க இயலாமல் அவதிப்படும் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தால் அரூபமான கருத்துருவங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. விஞ்ஞானி குயினும் மூளை பற்றிய தனது ஆராய்ச்சியில் இதே இடத்துக்குத்தான் வந்து சேர்கிறார். மனித மூளையில் உள்ள நியூரான்கள் அரூப கருத்துருவங்களால் தூண்டப்படுகின்றன. ஆனால் விவரங்களை விட்டுவிடுகின்றன என்று போர்ஹெஸ் எழுதிய இடத்துக்கு வந்துசேர்கிறார். மூளை நரம்பியலில் பிற்காலத்தில் அறியப்பட்ட ஒரு விஷயத்தை போர்ஹெஸ் கனவாக தனது புனைகதையில் கண்டுள்ளார்.
அந்த அடிப்படையில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’, ராபர்ட்டோ கலாஸோவின் நாவலான ‘க’, எம். வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’, சம்பத்தின் ‘இடைவெளி’ எல்லாம் ஒரு புனைவு மட்டும்தானா? பஷீரையும் காஃப்காவையும் சாதத் ஹசன் மண்டோவையும் ஹாருகி முராகமியையும் வெறும் புனைவெழுத்தாளர்கள் என்று மட்டும் யாராவது சொல்ல முடியுமா?
தத்துவம், மெய்யியல் சிந்திக்கும் பாதையில் செல்வதுபோலச் சென்று, மினுங்கித் தோன்றி மறையும் கணத்தோற்றங்கள் என்று புனைவின் கண்டுபிடிப்புத் தருணங்களை நாம் வகுத்துப் பார்க்கலாம். ஜே. கிருஷ்ணமூர்த்தி சத்தியத்துக்கு ‘பாதையற்ற பாதை’ என்ற படிமத்தை வரையறுப்பதிலிருந்து கடன்வாங்கி புனைவின் வழிகளைப் பாதையற்ற பாதை என்று சொல்லிப் பார்க்கலாம்.
சீமுர்க் கதையில் பெயரில்லாமல் ஒட்டகத்தில் அலையும் அந்த ஞானி உறக்கத்தில் விழுந்த ஆழமான குளம்தான் புனைவு என்று கருதுகிறேன். விரைகளால் உருவான அன்றாடத்தின் உலகம் ஒன்றிருக்கிறது. சிமூர்க் கதையில் வரும் அந்த ஞானியோ புனைவென்னும் கனவின் விதைகளை, அன்றாடம் தந்த தனது உடலிலும் தனது ஒட்டகத்திலும் புதைத்து அதிலிருந்து ஒரு உலகத்தை உருவாக்குகிறான்.
இந்த உலகம் அழிந்தபிறகும், அதை மறுபடைப்பு செய்வதற்கான உயிர்கள், தாவரங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் நோவா கப்பல்தான் புனைவு.
000
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, சீமுர்க் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்த வகையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் என்ற சிறுகதை எழுத்தாளனின் இடம் என்ன என்ற கேள்வியை எனக்கு நான் கேட்டுக் கொண்டு ஒரு தூண்டிலைப் போட முயல்கிறேன்.
அதற்கான பதில் ‘எத்திசை செலினும் அத்திசை சோறே’ என்ற கதையில் இருக்கிறது. சிந்திக்கிற காலத்தை எட்டி, அதன் வியர்த்தத்தையும் உணர்ந்து பாடல்களின் காலத்தில் நுழைந்துவிட்ட பிரக்ஞையைக் கொண்ட சிறுகதை எழுத்தாளர் இவர் என்று தோன்றுகிறது.
லட்சியம் நழுவிய காலத்தில், சிந்தனைகளும், ரத்தம் தோய்ந்த வரலாறுகளும் வெறும் கதைகளாக எஞ்சிவிட்ட ஒரு நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்ட ஓர்மையைக் கொண்ட அபூர்வமாகிவிட்ட விமர்சனக் குரல் இவரது சிறுகதைகளில் கேட்கிறது.
லட்சியம் என்ற ஒன்று இருந்த ஞாபகத்தை வைத்திருப்பதால் இவர் கதைகளில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும், அதை நிகழ்த்துபவனுக்கும் ஒரு இடைவெளி இயல்பாகச் சாத்தியமாகிவிடுகிறது. நடைமுறைக்கும் விருப்பத்துக்கும் லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை உணரும் அபத்த உணர்வு இவர் கதைகளின் தொனியில் தோன்றிவிடுகிறது.ந. முத்துசாமி, ராஜேந்திர சோழன், எம்.டி.முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
சுஜாதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரனின் கச்சிதம், சுவாரசியத்தில் போர்ஹேவிய கதை சாத்தியங்களை பாலசுப்ரமணியன் பொன்ராஜில் எட்டமுடிகிறது.
வளமான தமிழ் சிறுகதை மரபுக்கு பாலசுப்ரமணியன் பொன்ராஜ் போல ஒரு ஸ்டைலிஸ்ட் இன்றும் தேவையாக மட்டும் அல்ல நிவாரணமாகவும் ஆறுதலாகவும் உள்ளார். இன்று பல தன்மைகளில், புலங்களில் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. ஆனால், செம்மையாக, இலக்கு பற்றிய பிரக்ஞையுடன் எழுதும் சிறுகதை ஆசிரியர்கள் அரிதாகிவிட்டனர். தமிழின் சிறந்த புனைகதையாளர்களில் ஒருவர் என்று சொல்லக்கூடியவரின் சிறுகதைகளை அவ்வப்போது படிக்கும்போது இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு எப்போது உத்தேசமோ அப்போது நீங்கள் கதையை விட்டு வெளியேறலாம் என்ற உத்தேசத்தில் அவர் கதை எழுதுகிறார். அவருக்குத் தனது கதை பற்றி குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். இங்கேதான் விமர்சன உணர்வு என்ற ஒன்றை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு அனுபவத்தை, ஒரு நிகழ்ச்சியை, ஒரு கதாபாத்திரத்தை கவிதையில், கதையில், நாவலில் எந்த விமர்சனமும் இல்லாமல், புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய ஒரு செம்மையான இலக்கிய மரபு நமது படைப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறதென்ற போதமில்லாமல் எல்லாவற்றையும் மகோன்னப்படுத்திவிடுவதைக் கலை என்று கருதும் காலத்துக்கு வந்திருக்கிறோம். அங்கே கலை பரட்டைத்தன்மையை அடைந்துவிடுகிறது.
இறந்த காலத்தையோ, வரலாற்றையோ, கருத்தையோ, காதலையோ, நவீனத்தையோ எதையும் மகத்துவப்படுத்தும் கதைகள் அல்ல பாலசுப்ரமணியன் பொன்ராஜூடையது.
கனகாம்பரம் அணியும் தமிழ் பெண்கள் பற்றி ஒரு வாக்கியத்தை ஒரு குறிப்பாக அருமையாக கடந்துவிடுகிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ். சில சிறுகதையாசிரியர்கள், சில கவிஞர்கள் கண்களில் கனகாம்பரம் தென்படக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். ஒரு முடிக்கவே இயலாத சிறுகதையாக கனகாம்பரம் ஆகிவிடும்.
கவிதை எழுதுபவனின் கூர்மையான அவதானங்களுடன், மிகச் சிக்கலானதையும், சங்கடமானதையும் துல்லியமாகச் சொல்லும் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழியும் நோக்கமும் வாசக அனுபவமும் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை சிறுகதைத் தொகுப்பை ஒப்பிடும்போது கூடுதல் மிருதுத்தன்மையை அடைந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே லா. ச. ராமாமிர்தம், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ந. முத்துசாமி போல காதாலும் வாசிக்கக்கூடிய உரைநடையாளர்களை இழந்துவிட்டோம். எம். டி. முத்துக்குமாரசாமி போன்ற சிலர் விதிவிலக்குகள். அவரது புனைவையும் கட்டுரையையும் காதாலும் வாசிக்க இயலும். இங்கே இயங்கும் மிமிக்ரி கலைஞர்களையும், ஜிம்னாஸ்டிக் வித்தைக்காரர்களையும் நான் இங்கே கருதவில்லை.கவிதை, சிறுகதை, நாவல் என்று அவர்கள் ஏராளமாக ஆக்கிரமித்திருக்கின்றனர், இடத்தை.
000
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் தொடர்ந்து வரும் பூனை சீமுர்க் தொகுப்பில் உள்ள ‘பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும்’ கதையில் நெகிழும் உருவகமாக மாறியிருக்கிறது. துரதிர்ஷ்டம் பிடித்த கதைத் தொகுதியில் விவரங்களின் கச்சாத்தன்மையில் நவீன பொருட்களை கதைகளுக்குள் அடுக்குவதில் உள்ள மோஸ்தரில் உணர்ந்த ஒரு இறுக்கமான அனுபவம் சிமூர்க்கில் நெகிழ்ந்திருக்கிறது.
நிகழ்ச்சிகளின் மீது விழிப்பும், அதை தனது கலைக்குள் நிகழ்த்துபவனின் நிதானமும் இணைந்திருக்கும் கதைகள் இவை.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் பூனையும் பெண்ணும் வசீகரமும் பேய்த்தன்மை கொண்டவர்களாகவும் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களின் உடைகள் வழியாக பாலசுப்ரமணியன் பொன்ராஜ் காலம் மாறுவதை அவதானிக்கிறார். மாறும் பாலியல் நடத்தைகளின் வழியாக நாகரிகங்களின் தடய எச்சங்களைப் பரிசீலிக்க முடியுமென்ற நம்பிக்கை கொண்டவன் நான்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பூனைகளின் தன்மைகள் அவர் படைத்த பெண்களிடமும் நீட்சியடைபவை. ரகசியம், அரூபம், தர்க்கத்துக்கு எட்டாத அவர்களின் ஆழம், அதற்கும் அடியிலுள்ள தனிமை, ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும் சேர்ந்து முயங்கி முரண்பட்டு தனித்து வாழ நேர்ந்திருக்கும் விசித்திரம் இவற்றை பாலசுப்ரமணியன் தீராமல் வியாக்கியானம் செய்தபடியிருக்கிறார்.
டால்ஸ்டாயிலிருந்து மௌனி வரை பாடாய்படுத்திய பெண்கள் பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் காலத்திலும், காலத்துக்கு அப்பாற்பட்ட வகையிலும் தொடர்ந்து தொந்தரவூட்டுகின்றனர்.
‘விடுமுறை தினத்தில் ஒரு அனார்கிஸ்ட்’ சிறுகதையில் வரும் ஆய்வுப் பேராசிரியரின் மனைவி ஒரு பூனையைப் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அந்த உரையாடல் நடைபெறும் வீட்டில் அவள் அவ்வப்போதே தோன்றினாலும் அவள் சுரீரென வீடு முழுவதும் படர்ந்திருக்கிறாள்.
காலம், கலாசாரத்தின் மாற்றங்கள் சகலவற்றையும் உட்கொண்ட அதிநவீன களம்தான் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் என்றாலும், அந்த மாற்றத்தின் திருப்பங்களில் வலிகளையும் உடைவையும் வாழ்க்கை முழுக்க துரத்தும் வடுக்களையும் அதனால் விளைந்த அச்சங்களையும் சுமப்பவர்கள் இவரது கதாபாத்திரங்கள். அந்த வகையில் டால்ஸ்டாய் எத்தனை நவீனமானவரோ, வள்ளலார் எத்தனை நவீனமானவரோ பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் அத்தனை நவீனமானவர் என்றே சொல்வேன்.
நீத்தார் சிறுகதை முழுமையாக உரைநடையில் எழுதியிருந்தாலும் கவிதை என்று எனக்குச் சொல்ல இயலும். பெட்ரோ ப்ரோமோ நாவலைப் போன்ற ஒரு காவியத்தன்மையை விவரணைகளின் வழியாக இக்கதைகளில் சாதிக்க முயன்றிருக்கிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.
000
பாலா ஒரு நாவலை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று இந்தச் சிறுகதைகளைப் பற்றி எழுதும்போது சங்கேதமாகத் தோன்றுகிறது.
அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில் (https://akazhonline.com/?p=8605) ‘சஜ்தாவில்
குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது.
மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி
பரவலாக கவனிக்கப் பெற்றது.
சின்ன ஆச்சரியம், விந்தையவிழ்ப்பு, ஆரஞ்சு மிட்டாய்,
பஞ்சு மிட்டாயின் வடிவம், தித்திப்பு கொடுக்கும் சிறிய திளைப்பிலேயே ஆழ்ந்து திருப்தியடைபவராக மதார் எனக்குத் தோன்றினார். தமிழில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட சாதனைகள்
தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு மதார் புதுமையாக இருக்கக்கூடும் என்றே நண்பர்களிடம்
தெரிவித்தேன்.
மதாரிடம் நான் சொன்ன அம்சங்களிலே சிறிய புதுமைகளையும் சிறிய சாதனைகளையும்
படைத்துவிட்டு, தேங்கி நின்ற கவிஞர் முகுந்த் நாகராஜன் என்று, இதற்கு முன்பு சொல்ல முடியும்.
ஜான்சன் பேபி சோப், ஹக்கீஸ், ஃபேரக்ஸ், செரிலாக், க்ரேயான் பென்சில் டப்பாக்கள் போன்ற
குழந்தைகள் உபயோகப் பொருட்களின் விளம்பரப் படங்கள், முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இடம்பெயர்த்துவிட்டன.
‘வெயில் பறந்தது’ தொகுதிக்குப் பிறகு மதார் அடைந்திருக்கும்
திருப்பம், வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் கவிதை ‘சஜ்தாவில் குழந்தை’, மதாரின் எளிமையிலிருந்து கிளைத்து உலகின் கனத்தை வரித்துள்ளது.
தொழத் தெரியாத குழந்தை, தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது
என்ற முதல் வரியிலேயே மௌனம் இறங்கிவிடுகிறது.
யுத்தம் தெரியாத குழந்தை, யுத்ததாரிகள் மோதும் களத்தில்
நிற்கிறது என்று இதை வெளியிலிருந்து பிரதிபலிக்கலாம்.
உலகம் வந்து சேர்ந்திருக்கும் உச்சபட்ச அறிவு, பகை மூர்க்கம்,
பிளவுவாதம், வெறுப்பின் யுத்த களத்தில் பரிதாபமாக இன்று நிற்பவர்கள் குழந்தைகள் தான்.
இந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தைதான் மதாரின்‘சஜ்தாவில் குழந்தை’ கவிதையில் தொழுகையில் பங்கேற்கிறது.
இந்த உலகம் செய்யவேண்டியதையெல்லாம் செய்யத் தேவையில்லாத
குழந்தைகள், அதைத் திரும்பச் செய்வது போல பள்ளிவாசலில் எல்லாவற்றையும் செய்கிறது மதாரின்
குழந்தை.
தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் அழுகையை
மட்டும் அந்தக் குழந்தைக்கு நடிக்கத் தெரியவில்லை.
அழுகையை நடிக்கத் தெரியாத குழந்தையின் அந்த இயல்பு எனக்கு
இப்போது இன்று இக்காலகட்டத்தில் ஆறுதலாக இருக்கிறது.
ஏனெனில் எந்த நியாயமுமே இல்லாமல் குழந்தைகளை பெரியவர்கள்
உலகெங்கும் அழவைக்கும், அழித்தொழிக்கும் கையாலாகாத கொடுங்காலம் நம்முடையது.
மதாரின் கவிதையில் உள்ள குழந்தை, அழுகையைப் பாவனையாகக்கூடப்
பழக வேண்டாம் என்பதுதான் எனது இப்போதைய ஒரே பிரார்த்தனை.
மதாரின் புதிய கவிதை நூலான ‘மாயப்பாறை’ வரும் 18ஆம் தேதி வெளியீடு
காணும் தருணத்தில் அவருக்கு என்னுடைய பிரியம் நிறைந்த வாழ்த்து.
நேற்று கா.சிவத்தம்பியின் 'நவீனத்தவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். இந்நூல் தமிழில் எப்படி நவீனத்துவம்/பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பது மட்டுமில்லாது, காலனித்துவ காலத்தில் எப்படி இலக்கியம்/அரசியல் முகிழ்கிறது என்பது பற்றியும் பேசுகின்றது. அதில் சிவத்தம்பி கவனப்படுத்துப்படும் ஒரு விடயம், 'பிரம்மஞான சபை' (Theosophical Society). இதிலிருந்து இரண்டு வேறு
ஈசுவரஸ்மரணையிலேயேதன்ஸ்மரணையைஉலகைவிட்டுசுழலாமல்வாழ்வைநடத்திவந்தபரமஹம்ஸரைச்
சுற்றிசிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். பிற்காலம் உலகப் பிரசித்தி
பெற்ற நரேந்திரநாத தத்தர், உலகறியாத ஆனால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி, உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர், சாஸ்திரி சிவநாத பாபு, பிரதாப சந்திர முஜும்தார், வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி, நித்தியானந்தஸ்வாமி, வைத்தியரானசசாதரபண்டிதர், கோடீச்வரரானயதுநாதமல்லீக், ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர். இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள். அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை- அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள். அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. நினைத்துக்கொண்டு, இருந்தாற்போல் நிஷ்டை கலைவது வரையில் காத்திருப்பார்கள். நிஷ்டை நீடித்தால்-சில சமயம் நிஷ்டை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கலையாமல் இருந்தது உண்டு - கலைவது வரைக் காத்திருக்கவோ அல்லது மீண்டும் வருவதாகவோ தோதாபுரியிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.
இந்த தோதாபுரி-மகான் தோதாபுரியிடமிருந்து வேறுபட்டவர். இவரும் பரமஹம்ஸர் கூட்டத்தைச் சார்ந்தவர். தக்ஷிணேச்வரத்தில் சேட் கோவிந்தஜியின் பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்து வந்தார். அவர் மனைவிஒருபிள்ளையை - நவீனன், வயதுபதினாறு - வைத்துவிட்டு இறந்துவிட்டாள். தோதாபுரிக்குத் தன் மனைவி மீது அத்யந்த பிரேமை. ஏனென்றால் கல்யாணமாவதற்கு முன் அவர் கோலாகல புருஷராக இருந்து தீராத காசநோயைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் மனைவியின் தீவிர தெய்வபக்தியையும் தேவநிஷ்டைகளையும் பார்த்து மனம் மாறிவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் மனைவி தன் மகன் நவீனனைப் பார்த்துக் கொள்வது அவர் கடமை என்று சொல்லிவிட்டு உயிர்நீத்தாள். அதற்குப் பிறகு தோதாபுரி தன் மகன் மீது அதிகமாக வாஞ்சையைக் காட்டாது, ஆனால் அவனைக் கண்ணை இமைகாப்பது போல் காத்துவந்தார். அவர் மனைவி இறந்தபொழுது நவீனனுக்கு வயது பத்து இருக்கும். பரமஹம்ஸர் அவனுக்குப் பதிமூன்று வயதாகும்போது அவனைப் பார்த்துவிட்டு பையன் முகத்தில் வீசிய பிரம்மதேஜஸைக் கண்டு, அவனைத் தன் தேவிபூஜை காரியத்துக்கு மலர்பறித்தல், மாலைசூட்டல், துதிபாடல் உபயோகப் படுத்திக் கொண்டு வந்தார். இது தோதாபுரிக்குத் தெரியாது. நவீனன் ஒருநாள் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வராமலிருக்கவே தோட்டி குஞ்சன் மூலம் அவன் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று நவீனன் கெளரங்கஸ்வாமியிடம் பரமஹம்ஸர் செத்துவிட்டாரா என்று கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அவன் அதற்கு முன்னர் பரமஹம்ஸர் நிஷ்டையில் வீழ்வதைக் கண்டதில்லை. தோதாபுரி இரண்டுபட்ட மனதுடன் மகனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அன்று வீட்டிற்கு வந்ததும் அவர் மனம் நிலையில் இல்லை. அவர் போன அன்று ஆசிரமத்தில் யதுநாதமல்லிக்கும் மதுரபாபுவும் சாதுஜனங்களைவிட்டு வேறாக, மெதுவாகப் பேசிக் கொண்டும், பரமஹம்ஸரை அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். உபயஜீவியானதோதாபுரிக்குஅது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு மல்லிக்கும் மதுராபாவுவும் கொழுத்த பணக்காரர்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்துபோகும் விவரம் அவருக்குப் புரியவில்லை. ஊர் ஜனங்கள் பரமஹம்ஸர் மூலமாகத் தன் பணத்தை மல்லிக் இன்னும் அதிகமாக்க விரும்புகிறானென்றும், ஆனால் அந்தப் பைத்தியக்காரச்சாமி அதற்குச் சம்மதிக்கவில்லை என்று பேசி வந்ததும் அவருக்குத் தெரியும். எனினும் ஒருதடவை சென்றுவந்த தோதாபுரிக்கு அடிக்கடி ஆசிரமத்துக்குப் போகாமல் இருக்கமுடியவில்லை. இதன் பொருட்டு அவர் வெள்ளிக்கிழமைதோறும் காலை ஒருமணிக்கு முன் கடைக்கு வந்துவிட்டு இரவு எட்டுமணிக்குப் பரமஹம்ஸர் ஆசிரமத்திற்குப் போவதற்குச் சேட் கோவிந்தஜியிடம் அனுமதி வாங்கி இருந்தார். ஆசிரமத்தில் வந்த பிறகு ராமகிருஷ்ணரைப் பற்றிய அபிப்பிராயம் மேலோங்கி வந்தது. எந்தச் சமயத்தில் யார் அங்கு வருவார் என்பது நிச்சயமில்லை. சேட் கோவிந்தஜி சபையில் யாராவது பெரிய மனிதர் வந்தால் - அவிநாத சட்டர்ஜியோ, ராம பண்டித முக்கர்ஜியோ- அவர்களுக்கு விசேஷ மரியாதை நடக்கும். அவர்களை உபசரிக்கும் கடமையெல்லாம் சேட், தோதாபுரிக்கு விட்டுவிடுவார். தோதாபுரிக்கு அதைச் செய்வதில் பரம சந்தோஷம்.
அதைப் போலவே ஆசிரமத்தில் இவர் வந்திருக்கும் சமயத்தில் யாராவது பெரிய மனிதன் வந்தால் - சந்திரஸேனரோ, சசாதரபண்டிதரோ - பரமஹம்ஸர் இவரைப் பார்த்துச் சிரிப்பார். உடனே தோதபுரியும் அவர்களைக் கவனித்துக் கொள்வார். இது ஒரு மாமூலாகிவிட்டது. அங்கு வருபவர்களெல்லாம் இதைக் குறித்துத் தோதாபுரியைப் பரிகசித்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
தோதாபுரி பார்ப்பதற்கு நெட்டையாக, நன்றாக உணங்கிய கருவாடு நிறத்தை உடையவராக இருந்தார். தலை முழுவதும் ரோமம் வளர்த்துக் கொண்டு உச்சியில் மாத்திரம் ஒரு சிறுகடுகத்தனை குடுமி வைத்திருந்தார். மெல்லிய அழுக்கடைந்த மல்லைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அங்கவஸ்திரம் மாத்திரம் அணிந்து கொண்டிருப்பார். அவர் மடியில் ஒரு வெள்ளிப்பொடி டப்பி எப்பொழுதும் முளைத்திருக்கும். அவர் மனம் உணர்ச்சிப் பெருக்கு அடையும் பொழுதெல்லாம் அவர் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சுவார். இதைக்குறித்தும் ஆசிரமவாசிகள் அவரைப் பரிகசிப்பார்கள். ஆனால் தோதாபுரி கொஞ்ச நாட்கள் பரமஹம்ஸர், ஒரு திருஷ்டாந்தக் கதையில் எவ்வாறு தான் மூக்குப்பொடி போட்டுக்கொள்வதை, ஒரு திருஷ்டாந்தமாக உபயோகித்தார் என்று போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
இப்பொழுது தோதாபுரி ஆசிரமத்திற்கு வரத் தொடங்கி மூன்று வருடங்களாகி விட்டன. இந்த மூன்று வருடங்களும் அவர் மனதில் ஒரு உருத்தெரியாத ஆனால் கலவரப்படுத்தும் எண்ணம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை என்பதை அவரால் கூட நம்பமுடியவில்லை. இதைப் பற்றி நினைக்கையில் அவருக்கு ஒருதடவை பரமஹம்ஸர் தன் தாஸர்களிடை அவரால்(தோதாபுரியால்) பரமஹம்ஸரிடம் மூன்று வருஷம் நெருங்கிப்பழகிய பின்னும் ஒருமுறையாவது பொடிபோடுவதை நீக்க முடியவில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. நவீனனிடம் மாலை ஆசிரமத்தில் இருந்த அவன் ஸ்கூலில் இப்பொழுது இறுதி வகுப்புப் படித்துத் தேறிவிட்டான். திரும்பி வருகையில் தனக்குத் தினம் ஒரு அணாவுக்குப் பொடி வாங்கி வரச் சொல்வார். நவீனனும் ராமகிருஷ்ணர் கூறியபடி அவன் நல்ல பிள்ளை - அதை ஒழுங்காய்ச் செய்து வந்தான். அந்த நவீனன் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டான். அப்பொழுது கல்கத்தாவில் புதியதாக சர்வகலாசாலையைத் தொடங்கியிருந்தார்கள். தோதாபுரிக்குத் தன் மனைவி சொன்னது மாத்திரமல்லாமல் அவர் பொருட்டும் மேல்படிப்புக்குச் சென்று பெரிய பதவியில் வரவேண்டுமென்று ஆசை,இதற்கு அவர் ஆசிரமத்தில் முதல் தடவை வந்தபோதே அவருக்குத் தெரியாமலேயே ஆயத்தமாக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவருக்குக் கூட இப்பொழுதுதான் தெளிந்த மனதின் மேல்பரப்பில் சிந்தனை உருவாகத் திரண்டு வந்தது. ஏனென்றால் முதல் முறை அவர் ஆசிரமத்திற்கு வந்த அன்று, நிஷ்டையிலிருந்த பரமஹம்ஸரின் நினைவே அவருக்கு இல்லை. அவர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தவர்கள் மல்லிக்கும் மதுரபாபுவும்தான். பரமஹம்ஸரை நன்றாகப் பார்க்காமல் வந்ததைக் குறித்துக் கலவரப்பட்டார். ஆனால் அன்று ஆரம்பித்தது இன்று தன் மனதில் உருப்பெற்று கையும் காலும் பெற்றுவிட்டது என்று நினைத்ததும் அவருக்கு மீண்டும் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. எனினும் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு புறப்பட்டார். முதல் நாளே இன்றைக்கு அவர் சேட்டிடம் லீவ் வாங்கியிருந்தார்.
நல்ல உச்சிவேளை, வெயில் எரித்துக் கொண்டிருந்தது. போவதற்கு முன் தன் மன உளைச்சலை நிறுத்த ஒரு சிட்டிகை நல்ல பொடியை உறிஞ்சிவிட்டு, தன் தலையை அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டு, போதமில்லாமல் என்று சொல்லும்படியாக நடந்தார். நடந்து செல்லும் பொழுதே தான் செல்லும் காரியத்தைப் பற்றி நினைக்கக் கூடாது என்று நினைத்தும், அதைப் பற்றி நினைக்காமலிருந்தும் மீண்டும் அதைக் குறித்துத் தாவ, அவஸ்தைப் பட்டுக் கொண்டே நடந்த வேகத்தில், அவர் ஆசிரமத்தை விட்டு நாலு அடி தாண்டிய பின்னர், உணர்வு மீண்டும் தன்னைப் பின்னிழுக்க ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.
அவர் நினைத்தபடி ஆசிரமத்தில் ஒருவருமில்லை. ராமகிருஷ்ணர் மாத்திரம் இருந்தார். ஹிருதயன் கூட இல்லை. அவர் நிஷ்டையில் இல்லை என்பதை அறிந்ததும் அவருக்கு ஒரு நிம்மதி. பிறகு தன் மேல் துண்டால் முகத்தை விசிறிக் கொண்டுவிட்டு. ஆசிரமத்தில் உள்ள கிணற்றை நோக்கிச் சென்றார். இவையெல்லாவற்றையும் அவர் வேண்டுமென்றே மெதுவாகச் செய்தார்.
பிறகு, பரமஹம்ஸரிடம் வந்து அவரை வணங்கிட பின்னர், வாளாஉட்கார்ந்திருந்தார். இதைப் பார்த்த பரமஹம்ஸர் சிரித்த வண்ணம்,
"என்ன தோதா, இன்று கடை இல்லையா?'' என்றுகேட்டார்.
“இருக்கு''
''எஜமானருக்கு உடம்பு சரியாக இல்லையா?''
"அவரும் சௌக்கியம்தான்."
"நவீனனைத் தேடிக் கொண்டு வந்தாயா? அவன் இப்போது சிறு பிள்ளை இல்லை என்றாலும், அவனைத் தேடிக் கொண்டு வருவாயா, என் மூளை துருப்பிடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்தக் காலத்திலேயே அண்ணா சொன்னதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் கல்கத்தா சென்று சர்வகலாசாலையில் சேர்ந்திருந்தால் இந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கமாட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார். இதைக் கேட்ட தோதாபுரி உள்ளம் மேலும் கலவரமடைந்தது.
இருந்தாலும் முகத்தில் ஒரு பிடிவாதத்தின் சாயைபடர, வெள்ளிடப்பியிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக் கொண்டு விட்டு மெள்ளப் பேசத் தொடங்கினார்.
“நவீனன் விஷயமாக வந்தேன்.''
“நவீனன் நல்ல பிள்ளை.”
"என்னுடன் நீங்கள் ராய்மஹாசயர் வீட்டிற்கு வரவேண்டும்."
"எனக்குஅவரைத்தெரியாதே."
''உங்களுக்குத் தெரிய வேண்டாம் எனக்குத் தெரியும். அவர் மதுரபாபுவின் சிநேகிதர்.'
''ஏன், இன்னும் நவீனனுக்கு வயதாகவில்லையே" என்று சொல்லி பரமஹம்ஸர் சிரித்தார்.
"அதற்கில்லை, ராய் மஹாசயர் கோடீஸ்வரர். ஆனால் அவருக்குப் புத்திர பாக்கியம் கிடையாது நவீனனைப் பற்றிக்கூட அவர் என்னிடம் கடைக்கு வருகையில் பராபரியாக விசாரிப்பார். நவீனன் மேல்படிப்புக்குப் போகவேண்டுமென்று முன்னுக்கு வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என்னுடைய நிலையில் அவனுக்கு இந்த உதவி செய்யமுடியாது. அதனால்தான் அவரிடம் சென்று இதற்காகப் பொருள் உதவியையும் அவருடைய ஆதரவையும் கோரவேண்டும். நவீனன் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.''
"ஆனால்?''
“க்ஷமிக்க வேண்டும். நான் சொல்லி முடித்து விடுகிறேன். நவீனன் பெரியவனாகி பெரிய பதவியில் அமர்ந்து சிஷ்யனாக இங்கே வர நானே அவனை உபசரித்து எதிர்கொண்டு அழைக்க வேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை."
"ஆனால் நான் என்ன செய்யமுடியும்?"
"நீங்கள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவேண்டாம். என்னுடன் வந்து உட்கார்ந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு தோதாபுரி ஒரு ஆர்வத்துடனும், ஆவலே உருவாகவும் அவர் முகத்தைப் பார்த்தார்.
பரமஹம்ஸர் அவரை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. கொடியில் போட்டிருந்த தன் ஒற்றை மேல் துண்டைக் கையில் பிடித்துக் கொண்டு அவருடன் வெளியே இறங்க ஆயத்தமானவர், திரும்பித் தோதாபுரியிடம் “உங்கள் வெள்ளி டப்பியில் போதிய பொடி இருக்கிறதா" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வேறு நினைவில் மூழ்கியிருந்த தோதாபுரியிடமிருந்து "இருக்கிறதே" என்ற பதில் வந்தது. இதன்பின் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு நாலு தெரு தாண்டி ராய்மஹாசயர் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பொழுது ராய்மஹாசாயர் தன் வீட்டு வாசலில் விசிறியால் தனக்குத்தானே விசிறிக்கொண்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தோதாபுரியைத் தெரிந்ததும் அவரை வரவேற்காமல் நின்று கொண்டிருந்தார்.
தோதாபுரியே வலிந்து அவரைக் கும்பிட்டு அவரிடம் சென்றார். அவராகவே வலிந்து, சற்று எட்டி நின்று கடுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பரமஹம்ஸரைச் சுட்டிக் காட்ட ராய் மஹாசயர் அவர்கள் இருவரையும் உள்ளே வரச் சொல்லி தான் முன்னே போனார்.
உள்ளே சென்றதும் கூடத்தில் சார்த்தி வைத்திருந்த இரு பலகைகளில் ஒன்றைத் தரையில் வைத்து, அதில் பரமஹம்ஸரை அமரும்படி தோதாபுரி வேண்டிக்கொண்டார். பரமஹம்ஸர் அவ்வாறே செய்தார். அவர் தன் மேல் துண்டை இப்பொழுது மடியில் வைத்துக்கொண்டார். தோதாபுரி பேச ஆரம்பித்தார்.
''நீங்கள் சில நாட்கள் முன் கேட்ட குங்குமப்பூ கடையில் வந்திருக்கிறது."
“என்ன கதையாக இருக்கிறது, தோதாபுரி! இதைச் சொல்லவா இந்தப் பட்டை உரிக்கும் வெயிலில் இந்தக் கிழவனையும் அழைத்துக் கொண்டு வந்தாய்.''
தோதாபுரிக்குக் கலவரம் கூடியது. திரும்பிப் பார்த்தார். பரமஹம்ஸர் சுவரில் சாய்த்த பலகையைப் போல அரையாக மூடிய கண்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் தன்னைத் தைரியப்படுத்திக் கொள்ள ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சி விட்டுச் சற்றுத் தயங்கிவிட்டு, க்ஷமிக்கணும் இதற்காக நேற்றுக் கடைக்குக் கல்கத்தாவிலிருந்த ரோஜாமணி அம்மையார் ஆள்விட்டிருந்தார்கள்."
இதுகாறும் அசட்டையாக இருந்த ராய்மஹாசயர் எழுந்து உட்கார்ந்தார். தாசிரோஜாமணியுடன், தன் மனைவி இறந்த பிறகு அவர் நிரந்தரமான தொடர்பு வைத்திருந்தும், அவள் தேவைகளை இவர் கணக்கில் எழுதிக் கடையிலிருந்து அனுப்புவதும் தோதாபுரிக்குத் தெரியும்.
"???" இவ்வாறு ராய்மஹாசயர் அவர் பேச்சைத் தொடர எதிர்பார்த்தார்.
"குங்குமப்பூ இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்று தகவல் கிடைத்தது. நான் இன்று லீவ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நவீனன் மூலம் உங்களிடமே கொடுத்தனுப்பலாம் என்றுதான் நினைத்தேன். இன்று சேட்டும் கடையைச் சீக்கிரமாக அடைத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."
ரோஜாமணியின் பெயரைக் கேட்டதால் சந்தோஷமடைந்திருந்த ராய்மஹாசயர் "நவீனன் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அவன் யார்? கடைவேலைக்காரனா?"
"இல்லை அவனுக்கு உங்கள் அனுக்கிரகம் வேண்டும்.''
ராய்மஹாசயர் பரமஹம்ஸரைப் பார்த்துக்கொண்டே “என்னுடைய அனுக்கிரகமா" என்றார். பரமஹம்ஸர் இன்னும் அதே நிலையில் வீற்றிருந்தார்.
“நல்லபையன். என் ஒரே புத்திரன், ஆசிரமத்தில் புண்ணிய கைங்கரியம் செய்கிறான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டான். அவன் மேலே படிக்க வேண்டுமென்றும் பெரிய பதவியில் அமரவேண்டும் என்றும் என் ஆசை. இந்த சிந்தனை உதித்தவுடன் உடனே இங்குவந்தேன்.''
இப்பொழுது ராய்மஹாசயர் தோதாபுரியைத் தனியே வேறு அறைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். தோதாபுரியும் மூன்று வருஷத்திற்கு முன் தன் உள்ளத்தில் எற்பட்ட அதே ஒரு உருத்தெரியாத உணர்ச்சியுடன் அவரைப் பின் தொடர்ந்தார். கூடத்தில் பரமஹம்ஸர் பலகையைப் போல் உட்கார்ந்திருந்தார்.
"தோதாபுரி, நான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நாம் இருவரும் மனைவியை இழந்தவர்கள். இருவரும் நிறைய லோகானுபவம் நிறைந்தவர்கள். நான் பரமஹம்ஸர் ஆசிரமம் பக்கமே போவதில்லை என்பது உனக்கு தெரியும். நீயும் மூன்று வருஷங்களாக அங்கு போய் பழகிக் கொண்டிருந்தவன். இன்று அவரையும் அழைத்துக் கொண்டு என்னிடமும் வந்திருக்கிறாய்."
இதைக் கேட்டுக் கொண்டேயிருந்த தோதாபுரி மேலே அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தால், அவரைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சிவிட்டு, தன்மூக்கைத் துடைத்துக்கொண்டு அவரைத் தொடரச் சொன்னார்.
"நான் அங்கு வராவிட்டாலும் எனக்கும் பரமஹம்ஸரைத் தெரியும். மல்லிக் முதலியவர்கள் ஏன் அவரைச் சுற்றி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. எனக்கு வம்பு பேசுவதில் வெறுப்பு. ஆனால் ஒன்று. நான் அதிகமாகப் படித்ததில்லை. பரமஹம்ஸரும் படிக்கப் பிடிவாதமாக மறுத்தவர் என்பது உனக்குத் தெரியும். ஆனால் எங்கள் நிலையென்ன, உண்மையான ஞானம் பதவியெல்லாம் வேண்டுமென்றால் அதற்கு மேல்படிப்பு வேண்டாம். என்ன, நான் சொல்வதைக் கேட்கிறாயா?''
வரும் அழுகையை அடக்கிக் கொள்வதாலும், வரம்புமீறிய உணர்ச்சியால் கட்டுண்டபோதும் மக்கள் பெறும் ஒரு உணர்ச்சியால், தோதாபுரி தன் வாய் வலித்ததால், வாய்பேச முடியாமல் தலையை அசைத்தார். மீண்டும் அவர் உள்ளத்தின் உருத்தெரியாத வெளியில் தன் மனைவியின் உருவமும், கூடத்தில் நிர்விசாரமாக உட்கார்ந்திருந்த பரமஹம்ஸர் உருவமும் வீட்டிலிருந்த களங்கமற்ற நவீனன் உருவமும் ஒருசேர மின்னிப் பாய்ந்தன.
''எனக்குத்தெரியும். நீ உலகம் தெரிந்தவன். எனக்கு நவீனன் என்ற பெயர் பிடித்திருக்கிறது. எனக்கும் அவனுக்கு உதவிபுரிந்து அவனை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனால் அவனை நான் படிப்பினால் வீணாக்க விரும்பவில்லை. அவனுக்குக் காரியத்திறமையையும், பொருள் சேகரிப்பு முறையையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - நீ சம்மதித்தால்."
மோர் மீது திரண்டு வரும் வெண்ணெயைப் போல் தன் உள்ளத்தில் மிதந்து தன் மென்னியைப் பிடிக்க உயர்ந்து எழும்பி வரும் ஒரு பயத்தினால் தோதாபுரி மீண்டும் தலையை அசைத்தார்.
'பரமஹம்ஸரைப் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் பெண்களைப் பற்றிச் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் தோதாபுரி, விந்துவை ஒரு பொழுதும் விரயமாக்கக் கூடாது என்று அந்தப் பேயனே வந்து சொன்னாலும் நம்மால் முடியுமா, தோதாபுரி? ரோஜாமணியைப் பற்றி நான் பராபரியாகப் பல கேள்விப்படுகிறேன். நானும் சட்டவரம்புக்குட்பட்டவன் தான். என் மனதைச் சாந்திப்படுத்த ஒருவன் இருந்தால் இந்த அவஸ்தையில்லை. உன்னிடம் நான் சொன்னது பொய், எனக்கு நவீனனைத் தெரியும். அவன் மிகவும் நல்ல பையன் என்றும், பிரம்மதேஜஸ் உடையவன் என்றும் என்னிடம் மதுரபாபு சொல்லியிருக்கிறான். நவீனன் ரோஜாமணி வீட்டில் அவள் வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டு என்னுடைய ஆளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவனைப்பற்றி நீ ஒன்றுக்குமே கவலைப்பட வேண்டாம். தோதாபுரி, அவன் காரியத்தை என்னிடத்தில் விட்டுவிடு. என்ன சொல்கிறாய்?''
தோதாபுரி உருத்தெரியாத தனது உள்ள வெளியிலிருந்து எழுந்த சூறைக்காற்றைப் போன்ற கோபத்தை அடக்க வெகுவாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு அவரிடம் "நாளை வருகிறேன்" என்று எழ “நன்றாக யோசித்து முடிவுக்கு வா" என்று சொல்லிக்கொண்டே அவரும் அவனைப் பின்தொடர, இருவரும் கூடத்திற்கு வந்ததும், அதுகாறும் வீற்றிருந்த பரமஹம்ஸர் எழுந்திருந்ததும் ஒரே சமயத்தில் நடந்தது.
இருவரும் பரமஹம்ஸரும் தோதாபுரியும் மௌனமாக நடந்து, ஆசிரமத்திற்கு வந்ததும் விடை பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்ற தோதாபுரியைப் பார்த்து பரமஹம்ஸர், "தோதாபுரி, நீ ஒன்றும் சொல்லவேண்டாம். இந்த மூன்று வருஷங்களில் நீ என்னிடம் கற்றுக்கொண்டதைவிட, கற்றுக் கொள்ளத் தவறியதை, ராய்மஹாசயர் உனக்கு மூன்று மணி நேரத்தில் கற்றுக் கொடுத்திருப்பார். நாம் இருவரும் அவரை வணங்குவோம். இப்பொழுது நான் உன்னுடன் வந்ததின் தாத்பரியம் உனக்குப் புரிந்திருக்கும்"என்று சொல்லிப் பரமஹம்ஸர் அவருக்கு விடைகொடுத்தனுப்பினார்.
அடுத்த நாள் காலையில் தக்ஷிணேசுவரத்தின் காளி கோயிலில் நவீனன் அர்ச்சகனாகிவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட ராய்மஹாசயர் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.
நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.
எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.
‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே
நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’
இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.
எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை
எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
எதன் பொருட்டும் நீ பலியாவதை
நான் விரும்புவதில்லை என்று
அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்
அது அழுதது; நான் சிரித்தேன்.
அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.
பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.
நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.
நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.
தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது.
றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ்.
தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.
மைத்துனன் நம்பி
சூதனா சற்று சும்மா இரு
கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்
முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு
நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்
நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.
சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;
எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.
தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.
சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.
குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.
அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.
யாருமில்லையா உனக்கு மந்தி
உன் மந்தை எங்கே
அது என்னைப் போலவே
என்னோடு பேசாமல் பார்க்கிறது.
கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.
றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.
‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.
விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?
இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும், மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.
சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.
போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார்.
இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.
மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது.
மூளை நரம்பியல் துறை 21ஆம் நூற்றாண்டில் பெருமளவு வளர்ந்துள்ள சூழலில், இன்றும் உலகின் தீர்க்கமுடியாத புதிர்களில் ஒன்றாக இருக்கும் மனித மூளைக்குள் உள்ள ரகசியங்களை, போர்ஹெஸ் சென்ற நூற்றாண்டில் சிறுகதைகள் வாயிலாக தொட்டுச் சென்றிருக்கிறார் என்று நரம்பியல் விஞ்ஞானி ரோட்ரிகோ குயின் ஆச்சரியப்படுகிறார். நினைவு, மறதி என்பதை தனது படைப்பின் முக்கியமான விவகாரமாக்கிய போர்ஹெஸ், தனது “funes the memorius” கதையின் மூல கதாபாத்திரம், தனக்கு நடப்பது எல்லாவற்றையும் சித்திரம் போல ஞாபகம் இருப்பதால் எதையும் மறக்க இயலாமல் அவதிப்படும் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தால் அரூபமான கருத்துருவங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. விஞ்ஞானி குயினும் மூளை பற்றிய தனது ஆராய்ச்சியில் இதே இடத்துக்குத்தான் வந்து சேர்கிறார். மனித மூளையில் உள்ள நியூரான்கள் அரூப கருத்துருவங்களால் தூண்டப்படுகின்றன. ஆனால் விவரங்களை விட்டுவிடுகின்றன என்று போர்ஹெஸ் எழுதிய இடத்துக்கு வந்துசேர்கிறார். மூளை நரம்பியலில் பிற்காலத்தில் அறியப்பட்ட ஒரு விஷயத்தை போர்ஹெஸ் கனவாக தனது புனைகதையில் கண்டுள்ளார்.
அந்த அடிப்படையில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’, ராபர்ட்டோ கலாஸோவின் நாவலான ‘க’, எம். வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’, சம்பத்தின் ‘இடைவெளி’ எல்லாம் ஒரு புனைவு மட்டும்தானா? பஷீரையும் காஃப்காவையும் சாதத் ஹசன் மண்டோவையும் ஹாருகி முராகமியையும் வெறும் புனைவெழுத்தாளர்கள் என்று மட்டும் யாராவது சொல்ல முடியுமா?
தத்துவம், மெய்யியல் சிந்திக்கும் பாதையில் செல்வதுபோலச் சென்று, மினுங்கித் தோன்றி மறையும் கணத்தோற்றங்கள் என்று புனைவின் கண்டுபிடிப்புத் தருணங்களை நாம் வகுத்துப் பார்க்கலாம். ஜே. கிருஷ்ணமூர்த்தி சத்தியத்துக்கு ‘பாதையற்ற பாதை’ என்ற படிமத்தை வரையறுப்பதிலிருந்து கடன்வாங்கி புனைவின் வழிகளைப் பாதையற்ற பாதை என்று சொல்லிப் பார்க்கலாம்.
சீமுர்க் கதையில் பெயரில்லாமல் ஒட்டகத்தில் அலையும் அந்த ஞானி உறக்கத்தில் விழுந்த ஆழமான குளம்தான் புனைவு என்று கருதுகிறேன். விரைகளால் உருவான அன்றாடத்தின் உலகம் ஒன்றிருக்கிறது. சிமூர்க் கதையில் வரும் அந்த ஞானியோ புனைவென்னும் கனவின் விதைகளை, அன்றாடம் தந்த தனது உடலிலும் தனது ஒட்டகத்திலும் புதைத்து அதிலிருந்து ஒரு உலகத்தை உருவாக்குகிறான்.
இந்த உலகம் அழிந்தபிறகும், அதை மறுபடைப்பு செய்வதற்கான உயிர்கள், தாவரங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் நோவா கப்பல்தான் புனைவு.
000
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, சீமுர்க் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்த வகையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் என்ற சிறுகதை எழுத்தாளனின் இடம் என்ன என்ற கேள்வியை எனக்கு நான் கேட்டுக் கொண்டு ஒரு தூண்டிலைப் போட முயல்கிறேன்.
அதற்கான பதில் ‘எத்திசை செலினும் அத்திசை சோறே’ என்ற கதையில் இருக்கிறது. சிந்திக்கிற காலத்தை எட்டி, அதன் வியர்த்தத்தையும் உணர்ந்து பாடல்களின் காலத்தில் நுழைந்துவிட்ட பிரக்ஞையைக் கொண்ட சிறுகதை எழுத்தாளர் இவர் என்று தோன்றுகிறது.
லட்சியம் நழுவிய காலத்தில், சிந்தனைகளும், ரத்தம் தோய்ந்த வரலாறுகளும் வெறும் கதைகளாக எஞ்சிவிட்ட ஒரு நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்ட ஓர்மையைக் கொண்ட அபூர்வமாகிவிட்ட விமர்சனக் குரல் இவரது சிறுகதைகளில் கேட்கிறது.
லட்சியம் என்ற ஒன்று இருந்த ஞாபகத்தை வைத்திருப்பதால் இவர் கதைகளில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும், அதை நிகழ்த்துபவனுக்கும் ஒரு இடைவெளி இயல்பாகச் சாத்தியமாகிவிடுகிறது. நடைமுறைக்கும் விருப்பத்துக்கும் லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை உணரும் அபத்த உணர்வு இவர் கதைகளின் தொனியில் தோன்றிவிடுகிறது.ந. முத்துசாமி, ராஜேந்திர சோழன், எம்.டி.முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
சுஜாதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரனின் கச்சிதம், சுவாரசியத்தில் போர்ஹேவிய கதை சாத்தியங்களை பாலசுப்ரமணியன் பொன்ராஜில் எட்டமுடிகிறது.
வளமான தமிழ் சிறுகதை மரபுக்கு பாலசுப்ரமணியன் பொன்ராஜ் போல ஒரு ஸ்டைலிஸ்ட் இன்றும் தேவையாக மட்டும் அல்ல நிவாரணமாகவும் ஆறுதலாகவும் உள்ளார். இன்று பல தன்மைகளில், புலங்களில் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. ஆனால், செம்மையாக, இலக்கு பற்றிய பிரக்ஞையுடன் எழுதும் சிறுகதை ஆசிரியர்கள் அரிதாகிவிட்டனர். தமிழின் சிறந்த புனைகதையாளர்களில் ஒருவர் என்று சொல்லக்கூடியவரின் சிறுகதைகளை அவ்வப்போது படிக்கும்போது இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு எப்போது உத்தேசமோ அப்போது நீங்கள் கதையை விட்டு வெளியேறலாம் என்ற உத்தேசத்தில் அவர் கதை எழுதுகிறார். அவருக்குத் தனது கதை பற்றி குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். இங்கேதான் விமர்சன உணர்வு என்ற ஒன்றை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு அனுபவத்தை, ஒரு நிகழ்ச்சியை, ஒரு கதாபாத்திரத்தை கவிதையில், கதையில், நாவலில் எந்த விமர்சனமும் இல்லாமல், புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய ஒரு செம்மையான இலக்கிய மரபு நமது படைப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறதென்ற போதமில்லாமல் எல்லாவற்றையும் மகோன்னப்படுத்திவிடுவதைக் கலை என்று கருதும் காலத்துக்கு வந்திருக்கிறோம். அங்கே கலை பரட்டைத்தன்மையை அடைந்துவிடுகிறது.
இறந்த காலத்தையோ, வரலாற்றையோ, கருத்தையோ, காதலையோ, நவீனத்தையோ எதையும் மகத்துவப்படுத்தும் கதைகள் அல்ல பாலசுப்ரமணியன் பொன்ராஜூடையது.
கனகாம்பரம் அணியும் தமிழ் பெண்கள் பற்றி ஒரு வாக்கியத்தை ஒரு குறிப்பாக அருமையாக கடந்துவிடுகிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ். சில சிறுகதையாசிரியர்கள், சில கவிஞர்கள் கண்களில் கனகாம்பரம் தென்படக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். ஒரு முடிக்கவே இயலாத சிறுகதையாக கனகாம்பரம் ஆகிவிடும்.
கவிதை எழுதுபவனின் கூர்மையான அவதானங்களுடன், மிகச் சிக்கலானதையும், சங்கடமானதையும் துல்லியமாகச் சொல்லும் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழியும் நோக்கமும் வாசக அனுபவமும் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை சிறுகதைத் தொகுப்பை ஒப்பிடும்போது கூடுதல் மிருதுத்தன்மையை அடைந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே லா. ச. ராமாமிர்தம், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ந. முத்துசாமி போல காதாலும் வாசிக்கக்கூடிய உரைநடையாளர்களை இழந்துவிட்டோம். எம். டி. முத்துக்குமாரசாமி போன்ற சிலர் விதிவிலக்குகள். அவரது புனைவையும் கட்டுரையையும் காதாலும் வாசிக்க இயலும். இங்கே இயங்கும் மிமிக்ரி கலைஞர்களையும், ஜிம்னாஸ்டிக் வித்தைக்காரர்களையும் நான் இங்கே கருதவில்லை.கவிதை, சிறுகதை, நாவல் என்று அவர்கள் ஏராளமாக ஆக்கிரமித்திருக்கின்றனர், இடத்தை.
000
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் தொடர்ந்து வரும் பூனை சீமுர்க் தொகுப்பில் உள்ள ‘பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும்’ கதையில் நெகிழும் உருவகமாக மாறியிருக்கிறது. துரதிர்ஷ்டம் பிடித்த கதைத் தொகுதியில் விவரங்களின் கச்சாத்தன்மையில் நவீன பொருட்களை கதைகளுக்குள் அடுக்குவதில் உள்ள மோஸ்தரில் உணர்ந்த ஒரு இறுக்கமான அனுபவம் சிமூர்க்கில் நெகிழ்ந்திருக்கிறது.
நிகழ்ச்சிகளின் மீது விழிப்பும், அதை தனது கலைக்குள் நிகழ்த்துபவனின் நிதானமும் இணைந்திருக்கும் கதைகள் இவை.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் பூனையும் பெண்ணும் வசீகரமும் பேய்த்தன்மை கொண்டவர்களாகவும் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களின் உடைகள் வழியாக பாலசுப்ரமணியன் பொன்ராஜ் காலம் மாறுவதை அவதானிக்கிறார். மாறும் பாலியல் நடத்தைகளின் வழியாக நாகரிகங்களின் தடய எச்சங்களைப் பரிசீலிக்க முடியுமென்ற நம்பிக்கை கொண்டவன் நான்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பூனைகளின் தன்மைகள் அவர் படைத்த பெண்களிடமும் நீட்சியடைபவை. ரகசியம், அரூபம், தர்க்கத்துக்கு எட்டாத அவர்களின் ஆழம், அதற்கும் அடியிலுள்ள தனிமை, ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும் சேர்ந்து முயங்கி முரண்பட்டு தனித்து வாழ நேர்ந்திருக்கும் விசித்திரம் இவற்றை பாலசுப்ரமணியன் தீராமல் வியாக்கியானம் செய்தபடியிருக்கிறார்.
டால்ஸ்டாயிலிருந்து மௌனி வரை பாடாய்படுத்திய பெண்கள் பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் காலத்திலும், காலத்துக்கு அப்பாற்பட்ட வகையிலும் தொடர்ந்து தொந்தரவூட்டுகின்றனர்.
‘விடுமுறை தினத்தில் ஒரு அனார்கிஸ்ட்’ சிறுகதையில் வரும் ஆய்வுப் பேராசிரியரின் மனைவி ஒரு பூனையைப் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அந்த உரையாடல் நடைபெறும் வீட்டில் அவள் அவ்வப்போதே தோன்றினாலும் அவள் சுரீரென வீடு முழுவதும் படர்ந்திருக்கிறாள்.
காலம், கலாசாரத்தின் மாற்றங்கள் சகலவற்றையும் உட்கொண்ட அதிநவீன களம்தான் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் என்றாலும், அந்த மாற்றத்தின் திருப்பங்களில் வலிகளையும் உடைவையும் வாழ்க்கை முழுக்க துரத்தும் வடுக்களையும் அதனால் விளைந்த அச்சங்களையும் சுமப்பவர்கள் இவரது கதாபாத்திரங்கள். அந்த வகையில் டால்ஸ்டாய் எத்தனை நவீனமானவரோ, வள்ளலார் எத்தனை நவீனமானவரோ பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் அத்தனை நவீனமானவர் என்றே சொல்வேன்.
நீத்தார் சிறுகதை முழுமையாக உரைநடையில் எழுதியிருந்தாலும் கவிதை என்று எனக்குச் சொல்ல இயலும். பெட்ரோ ப்ரோமோ நாவலைப் போன்ற ஒரு காவியத்தன்மையை விவரணைகளின் வழியாக இக்கதைகளில் சாதிக்க முயன்றிருக்கிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.
000
பாலா ஒரு நாவலை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று இந்தச் சிறுகதைகளைப் பற்றி எழுதும்போது சங்கேதமாகத் தோன்றுகிறது.
அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில் (https://akazhonline.com/?p=8605) ‘சஜ்தாவில்
குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது.
மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி
பரவலாக கவனிக்கப் பெற்றது.
சின்ன ஆச்சரியம், விந்தையவிழ்ப்பு, ஆரஞ்சு மிட்டாய்,
பஞ்சு மிட்டாயின் வடிவம், தித்திப்பு கொடுக்கும் சிறிய திளைப்பிலேயே ஆழ்ந்து திருப்தியடைபவராக மதார் எனக்குத் தோன்றினார். தமிழில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட சாதனைகள்
தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு மதார் புதுமையாக இருக்கக்கூடும் என்றே நண்பர்களிடம்
தெரிவித்தேன்.
மதாரிடம் நான் சொன்ன அம்சங்களிலே சிறிய புதுமைகளையும் சிறிய சாதனைகளையும்
படைத்துவிட்டு, தேங்கி நின்ற கவிஞர் முகுந்த் நாகராஜன் என்று, இதற்கு முன்பு சொல்ல முடியும்.
ஜான்சன் பேபி சோப், ஹக்கீஸ், ஃபேரக்ஸ், செரிலாக், க்ரேயான் பென்சில் டப்பாக்கள் போன்ற
குழந்தைகள் உபயோகப் பொருட்களின் விளம்பரப் படங்கள், முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இடம்பெயர்த்துவிட்டன.
‘வெயில் பறந்தது’ தொகுதிக்குப் பிறகு மதார் அடைந்திருக்கும்
திருப்பம், வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் கவிதை ‘சஜ்தாவில் குழந்தை’, மதாரின் எளிமையிலிருந்து கிளைத்து உலகின் கனத்தை வரித்துள்ளது.
தொழத் தெரியாத குழந்தை, தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது
என்ற முதல் வரியிலேயே மௌனம் இறங்கிவிடுகிறது.
யுத்தம் தெரியாத குழந்தை, யுத்ததாரிகள் மோதும் களத்தில்
நிற்கிறது என்று இதை வெளியிலிருந்து பிரதிபலிக்கலாம்.
உலகம் வந்து சேர்ந்திருக்கும் உச்சபட்ச அறிவு, பகை மூர்க்கம்,
பிளவுவாதம், வெறுப்பின் யுத்த களத்தில் பரிதாபமாக இன்று நிற்பவர்கள் குழந்தைகள் தான்.
இந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தைதான் மதாரின்‘சஜ்தாவில் குழந்தை’ கவிதையில் தொழுகையில் பங்கேற்கிறது.
இந்த உலகம் செய்யவேண்டியதையெல்லாம் செய்யத் தேவையில்லாத
குழந்தைகள், அதைத் திரும்பச் செய்வது போல பள்ளிவாசலில் எல்லாவற்றையும் செய்கிறது மதாரின்
குழந்தை.
தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் அழுகையை
மட்டும் அந்தக் குழந்தைக்கு நடிக்கத் தெரியவில்லை.
அழுகையை நடிக்கத் தெரியாத குழந்தையின் அந்த இயல்பு எனக்கு
இப்போது இன்று இக்காலகட்டத்தில் ஆறுதலாக இருக்கிறது.
ஏனெனில் எந்த நியாயமுமே இல்லாமல் குழந்தைகளை பெரியவர்கள்
உலகெங்கும் அழவைக்கும், அழித்தொழிக்கும் கையாலாகாத கொடுங்காலம் நம்முடையது.
மதாரின் கவிதையில் உள்ள குழந்தை, அழுகையைப் பாவனையாகக்கூடப்
பழக வேண்டாம் என்பதுதான் எனது இப்போதைய ஒரே பிரார்த்தனை.
மதாரின் புதிய கவிதை நூலான ‘மாயப்பாறை’ வரும் 18ஆம் தேதி வெளியீடு
காணும் தருணத்தில் அவருக்கு என்னுடைய பிரியம் நிறைந்த வாழ்த்து.
இவர்,இவரது காமர்ஸ் ஆசிரியரால்'படிக்கிற,வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்'என'விளக்கும் வெளிச்சமும்'நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா)
எனவே,புத்தகம் அனுப்பிவிட்டு,இவரையும் இவரைப்போல இலவசப் புத்தகம் பெற்றவர்களையும்FREE BOOKஎன்று பெயரிட்டுப்ராட்காஸ்ட் பட்டியலாக்கிக்கொண்டேன்.
இவர்களுக்கு இன்று மெட்ராஸ் பேப்பரில் வெளியான என் கதையின் சுட்டியைக் காலை 6:42க்கு அனுப்பிவைத்தேன்.
ஓசிங்கறதுக்காகதான வந்தோம் என்பதைப்போல, FREE BOOKகோஷ்டிகளில் பதில் போட்டதே ஓரிருவர்தான். அதிலொன்று இந்தப் பெண்.
Okei sir 9:11 AM
Story super sir 9:15 AM
என்று வந்ததும் என்னது 1700+ வார்த்தைகள் கொண்ட கதையை நான்கே நிமிடத்தில் படித்துவிட்டதா என்று மிரண்டுபோனேன். பிறகுதான் உறைத்தது கதை முழுதாக வெளியாகியிருக்காதே என்பது. அப்புறம் எப்படி இந்தப் பெண் சூப்பர் என்கிறது என்று,
மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரரா நீங்க 11:20AM
எனக் கேட்டேன்
No sir 11:48 AM
படிக்காமையே‘ஸ்டோரி சூப்பர் சாரா’12:32PM
என்று சொல்லிவிட்டு ஒரு வேளை நாம் அனுப்பிய புத்தகத்தைப் படித்துவிட்டு அதற்கு பதிலளித்திருக்குமோ. அதை நாம் தான் தவறாக ஓய்வுபெற்ற... கதைக்கு என்று எடுத்துக்கொண்டுவிட்டோமோ என்று நினைத்து,
நீங்க படிச்சுட்டேன்னு எதைச் சொல்றீங்க 12:53PM
என்று கேட்டு வைத்தேன்.
இதற்கிடையில் பாராவுக்கு போன் அடித்தால்,
'இப்ப பேச முடியாது. சாதம் வெச்சுக்கிட்டு இருக்கேன்'என்றார்.
'இல்ல எனக்கு முழுசா தெரியுதே'என்றேன்,பதற்றத்தில் லாகின் ஆகியிருப்பதை கவனிக்காமலே.'நீங்க கம்பூட்டர்ல பாக்கறீங்க. நான் மொபைல்ல சொல்றேன்'என்றதோடு நில்லாமல் என் தரப்பை நிரூபிக்க படங்களாக எடுத்து அவருக்குப் போட்டுத் தாக்கினேன்.
அவரோ, 'அப்படியெல்லாம் தனித்தனியா கிடையாது. எல்லாத்துலையும் ஒரே மாதிரிதான் தெரியும். கோளாறு உங்க கிட்டதான். எங்கிட்ட சரியாதான் இருக்கு. மூணு பாராதான் தெரியுது'என்றார்.
பதிலுக்கு பாரா😡1:19PMக்கு போட்டுக் கடுப்பைக் காட்டினார்.
சாப்பிட்டுவிட்டு மூன்று தோட்டங்களுக்கும் நீரூற்றிவிட்டு வந்தால் செல்வமுரளி,
இப்போது சரியாக இருக்கிறது. செக் பண்ணிவிட்டேன் 1:35PM
💐சாரி💐
இது முழுக்க முழுக்க என் சொதப்பல் மட்டுமே 1:35PM
பதிலுக்கு அவர்,
இல்லை சார் இந்த விழிப்புணர்வு. இருந்தால் மட்டுமே நம்மால் நிற்க முடியும்🙏🏻1:37PM
என்றார்.
திரும்ப ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் நெட் கொஞ்சம் என மேய்ந்து வெட்டி முறித்த களைப்பில் தூங்கி எழுந்திருக்கும்போது மணி 8PMஐ நெருங்கிக்கொண்டிருக்கவே,சஸ்கா மஸ்கா பிஸ்கெட் பாக்கெட்டை காலி பண்ணிவிட்டு காபி பண்ணிக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து போனை பார்த்தால்,
நான் அனுப்பிய கதையின் லிங்கை போட்டு
This one sir 6:55 PMஎன்று சொல்லியிருந்தது மதுரை தியாகராயர்.
'முழுவதும் வாசிக்க...'வரையிலான ஸ்கிரீன்ஷாட்டைப் போட்டு
இவ்வளவுதான படிச்சிருப்பீங்க 8:02PM
என்றேன்.
Yes sir 8:32 PM
என்று பதில் வந்தது.
இது சும்மா சாம்ப்பிள். ஜஸ்ட் மூணு பாராதானே. இதைப் படிச்சிட்டா கதை படிச்சிட்டேன்னு சொல்றீங்க😂😂😂
உங்களுக்கு நான் அனுப்பின புக்கு புரிஞ்சிதா 8:36PM
Innu complete pannala sir 8:38 PM
Going on 8:38 PM
என்ன புக்கு 8:38PM
But kjm confuse aa iruku but I'm reading 8:38 PM
Vilakum velichamum 8:39 PM
வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்று ஒரே ஒரு பையனைத் தவிர பட்டியல் முழுக்கப் பெண்கள் பெயர்களாய்க் கொடுத்து, மாணவர்களைப் படிக்க ஊக்குவித்துக்கொண்டிருப்பதாய் கூறிக்கொண்டு - 'வாசிப்பை நேசிப்போ'மில் பாராவின் பதிவைப் பார்த்து இலவசத்திற்கு வந்த அந்தக் கல்லூரி ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் - மூன்று பத்திகளைப் படித்துவிட்டு, முழுவதும் வாசிக்க என்பதுகூடப் புரியாமல் கதையைப் படித்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை பட்டியலில் சேர்த்திருக்கிறீரே பட்டியல் மொத்தமும் இந்த அளவில்தான் படிப்பு வாசனை இருக்கிறதா என்று கேட்க.
வாசிப்புப் பழக்கம் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. வாசிக்கிற பழக்கம் உள்ளவர்களில்கூட எல்லோருக்குமானதில்லை இலக்கியம்.
'படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்' என்று ஆசிரியர், (அவரும் வணிகவியல் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியர் அன்று என்பது முக்கியம். புலவர் பண்டிதர்களாக இருந்த காலத்திலிருந்தே தமிழைய்யாக்களுக்கும் நவீனத்துக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. அப்புறம்தானே தற்காலத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியத்தின் வாசனை தெரிய) தேர்ந்தெடுத்த மாணவியே முழுவதும் வாசிக்க... என்று போட்டிருந்தும் இப்படி மூன்று பாராக்களையேமுழு கதையாகநினைப்பவராக இருந்தால், அஜித் விஜய் உதய்னா திமுக திராவிடம் பெரியார் பகுத்தறிவு என்று பேஸ்புக்கில் திரிந்துகொண்டிருக்கும் பசங்களை என்ன சொல்வது.
இன்னும் பத்திருபது ஆண்டுகளில் புத்தகம் என்கிற வஸ்து இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
இலக்கியம் கடந்த காலத்தை சாம்பல் புழுதிகளிலிருந்து வெளியே எடுத்துவரும் வல்லமை உடையது. ஆகவேதான் அதிகார வர்க்கம், எழுதுபவர்களை எப்போதும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால், அவர்களை அடையாளப்படுத்தும் ஆவணங்களை அழிக்கவேண்டுமென, அன்றைய பேரரசுகளிலிருந்து இன்றைய நவீன அரசுகள் வரை முயல்கின்றன. காலனித்துவத்திலிருந்து விடுபட்ட இலங்கையில், தமிழர்கள் தாம்
1.<!--[if gte mso 9]>
<![endif]-->
'போர் உலா' 1990களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மலரவன் என்பவரால்
எழுதப்பட்ட ஒரு நூல். ஆங்கிலத்தில் இது 'War Journey' என மொழியாக்கம் செய்யப்பட்டு பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 1990ம் ஆண்டு மாங்குளத்தில் இருந்த சிங்கள இராணுவ முகாமைத்
தகர்ப்பதற்காய் மணலாற்றிலிருந்து செல்கின்ற போராளி அணியின்
அண்மையில் எழுதிய 'அறமெனப்படுவது யாதெனில்' என்ற கட்டுரைக்கு நண்பரொருவர் தனிப்பட்டு 'I
have a mixed different perspective on the topic you've written, but it's good
to read your post to have an idea of other side' என்று
சொல்ல, அது குறித்து நம்மிடையே ஓர் சிறு உரையாடல் போயிருந்தது. இறுதியாக நான்
சொன்னது, 'இது ஒரு சிக்கலான உரையாடல். எவரும் இதுதான் சரியான பக்கம் என்று
அவ்வளவு எளிதாகத்
சமகாலத்தில் எழுதும் முன்னோடி படைப்பாளிகளில் அனைத்துப்
படைப்புக்களையும் வாசித்திருக்கின்றேன் என்றால் ரமேஷ் பிரேதன், எஸ்.ராமகிருஷ்ணன்
போன்ற ஒரு சிலரின் பெயர்களைச் சொல்வேன். எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், நெடுங்குருதி,
யாமம், துயில் போன்ற நாவல்களுக்குப் பிறகு வந்தவை அவரின் தொடக்க கால
நாவல்களுக்கு இணை வைக்கக்கூடியவை அல்ல என்பது வாசிப்பு. ரமேஷ்-பிரேம்
இரட்டையர்களாக இருந்து எழுதும்போது
‘Tea Time With Terrorists’ என்கின்ற சுவாரசியமான
தலைப்புடன் இருந்த ஈழம் பற்றிய நூலை அண்மையில் வாசித்தேன். 2001 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு அமெரிக்கருக்கு ‘தீவிரவாதிகள்’ பற்றி அறியும் ஆவல்
வருகின்றது. தீவிரவாதிகளை நேரடியாக அறிவதன் மூலம் ஏதேனும் ஒருவகையில் தீவிரவாதத்தை
அறியவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர்
நினைக்கின்றார். இத்தனைக்கும் அவர்
இயந்திரவியலில் பணியாற்றிவர்.
ஹருகி முரகாமியின் 'Novelist
as a Vocation' ஒரு சுவாரசியமான நூல். இதில் முரகாமி எவ்வாறு
தான் எழுத வந்தேன் என்பதிலிருந்து எப்படி ஒரு முழுநேர எழுத்தாளனாக முப்பத்தைந்து
ஆண்டுகளுக்கு மேலாக இருக்க முடிகின்றது என்பதுவரை பேசுகின்றார். இது மட்டுமில்லாது
எழுதும் பிரதியின் அசல்தன்மை, இலக்கியப் பரிசுகள், விமர்சனங்களுக்கு எப்படி முகங்கொடுப்பது,
எதைப் பற்றி எழுதவேண்டும், எவ்வகையான பாத்திரங்களை ஒரு
யுவான் ரூல்ஃபோவின் 'தங்கச் சேவல்' (The Golden
Cockerel)
*********************
1.
எனது சிறுவயதுகளில் எங்களின் மாமா ஆட்டுக் கிடாய்களை வளர்த்துக்
கொண்டிருந்தார். அவை என்னை விட உயரமாகவும், திடமாகவும்
மட்டுமின்றி, கிட்டே போனால் அதன் கொம்புகளால் என்னை முட்டி வீழ்த்திவிடும்
மூர்க்கத்தோடு இருக்கும். இந்தக் கிடாய்கள் கோயில் வேள்விகளுக்கு வெட்டுவதற்கென
வளர்க்கப்பட்டன என்பதை பிறகான காலங்களில்
ஷர்மிளா ஸெய்யத்தின் 'சிவப்புச் சட்டை சிறுமி'**************மரணத்துடன் ஒரு புனைவு தொடங்குவதை வாசிப்பது அந்தரமாக இருக்குமல்லவா? அப்படித்தான் ராணி என்கின்ற மர்ஜானி தனது இறப்பைப் பற்றிப் பேசுவதுடன் ஷர்மிளாவின் 'சிவப்புச் சட்டை சிறுமி' நாவல் தொடங்குகின்றது. வெவ்வேறு காலத்தில், ஒருபோதும் சந்தித்திருக்காத மர்ஜானி மற்றும் அய்லி என்கின்ற இரண்டு சிறுமிகளினதும் கதைகள் இதில் சொல்லப்படுகின்றன.மர்ஜானி,
அனோஜனின் 'தீக்குடுக்கை'****************************ஈழப்போராட்டப் பின்னணியை முன்வைத்து சமகாலத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கு, அவை தாண்டி வரவேண்டிய ஒரு பெரும் சவால் இருக்கின்றது. ஏற்கனவே இந்தப் பெரும்யுத்தத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புனைவும்/புனைவல்லாத நூல்களிலிருந்து விலத்தி எப்படி தனித்துவமாக அதை எழுதுவதென்பதாகும். ஏனெனில் ஒரு வாசக மனதானது எவ்வாறானாயினும் ஏற்கனவே வாசித்த
எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ வெளியாகி ஏறத்தாழ ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அவற்றுக்கு இப்போதும் வாசிப்பு கடிதங்கள் வருவது ஒருபக்கம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய தொகுப்பிற்கு நாவலுக்கும் அதே அளவு கவனம் கிடைக்கவில்லை என்பது எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். சரத்குமார் அனுப்பிய வாசக குறிப்பை வாசித்தபோது நிறைவாக உணர்ந்தேன். நன்றி.
நான் சமீபத்தில் படித்த மிக திருப்தியளித்த தொகுப்பு இது. தத்துவமும், யோகமும், அறியிவியலும் தொன்மங்களையும் கொண்டு தனது அனுபவங்களையும் தேடல்களையும் கேள்வியாகவும் கதைகளாகவும் மாற்றியிருக்கிறார். மொழியின் கூர்மையும் தேர்ந்திருக்கும் வடிவமும் கதையை இன்னும் ஆழமாக மாற்றியிருக்கிறது. என்னுடைய வாசிப்பில் இத்தகைய ஆழம் கொண்ட சிறுகதைகள் மிக மிக அரிதானவை. மிக முக்கியமான புத்தகத்தின் வழியே தன் வருகையை வலுவாக அறிவித்திருக்கிறார் சுனில். அபாரமான மொழி ஆளுமை வெளிப்படுகிறது, அவரது விவரணைகள் மிக கூரியவையாக வாசிப்பவருக்கு உணர்வுகளை ஆழமாக கடத்தி விடுகிறது.
வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் காண்பது மரபிலிருக்கும் வாசுதேவ உருவகத்தின் பொருளான பிரபஞ்ச லீலையினை நேரில் காண்பது போல் அமைந்திருக்கிறது. விடையில்லா அந்த மரணத்தினை இப்போது அவனால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.
காளிங்க நர்த்தனம் சிறுகதை, புராணத்தை யோக முறையில் மாற்றி கையாளுகிறது. மாணிக்கத்தினது அரைகுறை யோக பயிற்சியால் தோன்றும் சைக்கிளின் பின் அமர்ந்திருக்கும் பெண் உருவம் அவனை கடிக்க வருவதையும், முறுக்கு சாமியின் புராண தலைகீழ் ஆக்கத்தையும் அவர்களது பயிற்சியின் விளைவாக எழும் காமம் விஷமாக மாறி வெளிப்படுவது போல் தோன்றுகிறது. அதனை அடக்குதலை பாம்பின் தலையில் ஏறி நடனமிடும் கிருஷ்ணனில் முறுக்குசாமி காண்கிறார். மாணிக்கத்தின் கனவில் வரும் பாம்பின் தலை வரை ஏறி சறுக்கும் காந்தியையும் ஏற முயற்சித்து தோற்கும் பிற மனிதர்கள் யாவரையும் அந்த யோக பாதையின் வழிகளில் இருப்பவர்களாக காண முடிகிறது. கிருஷ்ணனை பார்த்து தானும் சின்ன வயசிலேயே ஏறி இருக்கணும் என்று சொல்வது, வயதானவர்களை பாம்பின் அல்லது குண்டலினியின் தலை மேல் ஏறுவதில் இருந்து தடுப்பது எது என சிந்திக்க தூண்டுகிறது. சாபம் அடையும் குடும்ப பின் கதை எந்த வகையில் இந்த கதைக்கு வலு சேர்க்கிறது என்பது தெரியவில்லை. குண்டலினியிலிருந்து எழும் காமம் எவ்வாறு அத்தனை மனிதர்களையும் சுழித்து இன்மையில் கரைக்கிறது என்பதாக புரிந்து கொண்டேன்.
குருதி சோறு இந்த தொகுப்பின் மிக முக்கியமான கதை. இதன் முக்கியத்துவத்திற்கு காரணம் இது எழுதப்பட்ட வடிவம் தான் என்று தோன்றுகிறது. காளி கோயிலில் நடக்கும் வருட திருவிழாவில் அனைவரது வீட்டிலிருந்து அரிசி கொண்டு வருவதும், மருளாலியின் ஆடலும், பலியும் சடங்குகளும் நடைபெறுகிறது. சுடலையால் அந்த ஆட்டத்தில் இரண்டற கலக்க முடிவதும் அதே நேரத்தில் சபரியால் கலந்து கொள்ள முடியாது போவதும் மிக முக்கியமான ஒன்று. பின்பு பாலாயியின் பஞ்ச கால வாழ்க்கையும் இறப்பும் சொல்லப்படுகிறது. அதன் மேலடுக்காக அவள் எவ்வாறு அன்ன சௌரக்ஷாம்பிகை புராணமாக மாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியரின் வீட்டில் கூறப்படும் கதையாடலில் சொல்லப்படுகிறது.
இந்த அடுக்குகள் ஒன்றோடொன்று பொருந்தி ஒரு அபாரமான சமூக இயங்கியலை வெளிப்படுத்துகிறது. பாலாயியை கடவுளாக மாற்றி அவளது உக்கிரத்தில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபடும் சுடலையின் சமூகம் ஒருபுறம். அதில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட முடியாமல் சபரியை தடுக்கும் பெருந்தெய்வ வழிபாடுடைய சமூக அமைப்பு மற்றோரு பக்கம். பாலாயியை காளியாக மாற்றி ரத்தத்தையும் அன்னத்தையும் படையிலிடும் நாட்டாரியல் வழிபாடும் அந்த திருவிழாவின் இறுதி நாளில் வைத்தியரின் வைதீக குடும்பத்தின் பங்கேற்பும் இணைந்ததாக அது உருமாறியிருக்கும் விதம் மிக முக்கியமானது.பாலாயியை வைதீகம் தனது புராணங்களின் வழி அவளை அன்னலக்ஷ்மியாக்கி திருமகளின் வழியே திருமாலுடன் பிணைக்கிறது. எவ்வாறு ஒரு நாட்டாரியல் தெய்வம் புராண மேல்நிலையாக்கத்தின் வழியே பெருந்தெய்வ மரபோடு இணைக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. மருலாளியின் பூர்வீகம் தெரியாமல் அவனை பூசாரியாக ஏற்க மறுப்பதை வைத்தியரின் கனவில் தான் அம்மன் வந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறாள்.
பாலாயியின் வரலாற்றில் இருக்கும் அவளுடைய அடையாளம் புராணத்தில் களையப்படுகிறது. பாலாயியின் வாழ்வில் நடந்தேறிய அவளது பிள்ளைகளின் இறப்பும் அவளது மரணமும் தியாகமாக மாற்றப்படுகிறது. வைத்தியரின் குடும்பத்தின் தெய்வமாகும் பாலாயியின் சந்ததியின் தொடர்ச்சியினை கதைவழியாகவும், சடங்கின் வழியாகவும் பேணும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளது என ஒரு அமைப்பின் இரு பக்கமும் ஒன்றை ஒன்று நிரப்பி செயல்படுவதன் சித்திரம் முழுமையடைந்துள்ளது. இந்த சிக்கலான சமூக இயங்கியல் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இந்த கதையின் சமூக இயங்கியலின் மறு பக்கமாக ஜெயமோகனின் மூத்தோள் கதையை வாசிக்க முடியும்.
அம்புப்படுக்கை சிறுகதையில் ஒவ்வொரு அம்பாக தப்பிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆனா ரூனா செட்டியார் இறுதி படுக்கையில் இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரது இறப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். நாடி பிடித்து பார்க்க அழைக்கும் சுதர்சன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் செட்டியாரின் நாடியைப் பார்க்க சம்மதிக்கிறான். நாடி பிடித்து பார்ப்பதில் அவரது நாடி மெல்ல அடங்குவதை உணர்ந்து கொள்கிறான்.
ஆனா ரூனாவின் இயல்பை அவருக்கும் தனது தாத்தாவிற்கும் இடையேயிருக்கும் பழக்கத்தினால் நன்கு உணர்ந்திருக்கும் சுதர்சன் அவர் எதிர் பார்க்கும் ஓரு பதிலை அளிக்கிறான். தான் விரும்பும் போது உயிர் பிரியும் என்ற பீஷ்மரது அம்பு படுக்கையை போல் ஆனா ரூனா வும் சுதர்சனின் பதிலில் திருப்தியடைந்து உயிரை விட சம்மதிக்கிறார் என்று தோன்றுகிறது.
பொன் முகத்தை காண்பதற்கும் என்கிற கதையில் சமகால சிக்கல் பேசப்படுகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ள மட்டுமே உதவும் பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த ஊரினை விட்டு விலகி நகரத்தில் அடைந்து கிடக்கிறார்கள். சிறு குழந்தையின் அன்பில் மட்டுமே தன் இருப்பின் பிடிப்பினை கொண்டவர்கள். ஒரு அவசர நேரத்தில் அவர்கள் சொந்த வேலைக்காக பிரிந்து செல்ல நேரிடும் போது நகர வாழ்வில் உருவாகும் நெருக்கடி. அதனை தொழில் நுட்பத்தை கொண்டு வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக எண்ணும் நகர மனிதர்கள். தான் இல்லாமலே குழந்தை உறங்க பழகிக் கொண்டதால் தனது இருப்பை சந்தேகிக்கும் பெரியவர்.
இன்னும் சமூகத்தின் கறை படியாத இளம் குழந்தை மனித உறவின் ஆழத்தை அர்த்தப்படுத்தும் நொடியில் தனது வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்வது தான் கதை.
2016 சிறுகதை 1984 நாவலின் வின்ஸ்டன் கதாபாத்திரத்தின் இன்றைய முக்கியத்துவம் உணரப்படும் கதை.
முற்றிலும் சுதந்திர சிந்தனையை அனுமதிக்காத வின்சென்ட் வாழ்ந்த நாட்டின் சூழலில் இருக்கும் அம்சத்தை, புரட்சி இல்லாத குடியரசு நாட்டில் வாழும் மக்கள் தங்களது சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்து கொள்ளும் போது அவரை மீள் கண்டடைவு செய்கிறார்கள்.
கடைசியாக நரோபா வெளியேறும் போது இன்னொரு மேசையில் உட்கார்ந்திருக்கும் வின்ஸ்டனையும் அவரை தேடி வந்திருக்கும் ஆப்பிரிக்கா அமெரிக்கரையும் காண்பது வின்சென்ட் உருவகிக்கப்படும் சூழல் ஆர்வெல் கற்பனை செய்தவாறு உலகம் துண்டுப்படாமலாகியும் தொடர்ந்து அவர் எவ்வாறு கண்டடையப்படுகிறார் அல்லது தேவைப்படுகிறார் என்பதைக் காட்டுவதாக தோன்றுகிறது.
பேசும் பூனை ஒரு கிளாசிக் ஆவது முதன்மையாக அதன் மொழியினால் நிகழ்கிறது என்று தோன்றுகிறது.
வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் தனித்திருக்கும் பெண்களின் தீர்க்கப்படாத ஏக்கம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதே நேரத்தில் இன்றைய குடும்பத்தில் இருக்கக் கூடிய ஆண் பெண் உறவின் முதிர்ச்சியற்ற தன்மை.
ஆணின் தீராத காமமும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் மனம். சமூகத்தால் உருவாகியிருக்கும் பெண்ணின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளும் தன்முனைப்பும்.
அந்த இடைவெளியில் நுழையும் பூனை பதிவேற்றாத எண்ணிலிருந்து வரும் அழைப்பின் வழியே அந்தரங்கங்களை திருடுகிறது. அவளுக்கு பிடித்த பாடல்கள், தகவல்கள் மற்றும் அக்கறையின் வழியே தனது இருப்பை நிலை நிறுத்துகிறது. விதவிதமான சேலைகளை கட்டி அவள் பூனைக்கு காண்பிப்பது என்பது உண்மையில் அவள் மீது அவளே கொண்ட கிளர்ச்சியாகவே தோன்றுகிறது. அவளுடைய ஏக்கம் தணிக்கப்பட்ட பின்பு அவளுக்கும் கணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் சுமூகமாக முடிகிறது.
அவளது குடும்ப செலவுகளை நிர்வகிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக் அவளது தேவைகளை பூனை முடிவு செய்கிறது. பொருட்களை வாங்கி குவிக்கிறது. தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை உணர்ந்து தன்னிடம் சொல்லிவிட்டு இனிமேல் வாங்கு என்று சொல்லியதற்கு கோவித்துக் கொள்கிறது. அவளது தன்முனைப்பையும் ஏக்கத்தையும் பூர்த்தி செய்யும் பூனையின் திடீர் மறைவு அவளை குழந்தை பெற்றதற்கு அடுத்ததாக அழ வைக்கிறது.
பின்பும் அவளால் பூனையின் ஆதிக்கத்திற்கு மறுப்பு சொல்ல முடியாது கட்டுண்டிருக்கும் அவள் நிலை என்பது அவளது மன ஆசைகளுக்கும் தன்முனைப்பிற்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலை தான் என்று தோன்றுகிறது. அவளது மகள் தாயின் அதீத போக்கின் காரணத்தை உணர்ந்து பூனையை அடிக்கும் போது.. அவளை வெறி கொண்டு அடித்து மயங்கச் செய்கிறாள். உன்னால் எனது மகளை அடிக்க நேர்ந்தது என்று சொல்பவளிடம் பூனை சாதாரணமாக அவள் என்னை எத்தனை முறை அடித்தால் தெரியுமா.. ஒரு முறை அடித்ததற்கு இப்படி கவலை படுகிறாயே என்று கேட்குமிடம் மிக வலுவான தாக்கத்தை வாசிப்பவரிடம் உண்டு செய்கிறது. பூனை வெறும் விளையாட்டு என்பதிலிருந்து அவள் வந்து சேர்ந்துள்ள பூனையை தவிர்க்க முடியாத இடமும், அதனது கண்காணிப்பும் அவளை தற்கொலையை நோக்கி தள்ளுகிறது.
ஆரம்பத்தில் அவள் முணுமுணுக்கும் சுவர்ணலதா பாடலின் வரி பாடகியின் குரலில் கேட்கிறது. பின்பு தொலைபேசியில் வரும் நிறுவனத்தின் அழைப்பில் கேட்கும் பாடலில் பூனையின் குரல் ஊடுருவியிருக்கிறது. இறுதியாக அவளது அக மொழியிலே பூனை ஊடுருவி இருப்பதன் முடிவு தீவிரமாக அமைந்துள்ளது.
அறிவியல் புனைவு கதையான திமிங்கிலம் இன்னொரு முக்கியமான கதை. கற்பனை உலகத்தில் தொழில் நுட்பத்தின் சிக்கலை தீவிரப்படுத்தி அணுகும் கதை. அவனுக்கும் அவனது முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலே கதையின் மையம்.
மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்கும் உலகம் வாழ வேண்டும் என்பதற்குமான முரண். மனித மைய வாதத்திற்கும் பிரபஞ்ச ஒட்டு மொத்த பார்வைக்குமான போர். அதில் மனித தன்முனைப்பின் சிக்கலும் பிரபஞ்சத்தை ஒட்டு மொத்தமாக பார்க்க தவறுவதன் விளைவும் தீவிரமாக விவரிக்கப்படுகிறது.
மக்களில் செயல்படும் வாழ்வதற்கான விழைவு அவர்களை கீழ்மை நோக்கி செலுத்தும் விதமும் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும் போது குற்ற உணர்விற்கு ஆளாகி அதன் பழியை ஆராய்ச்சியாளனின் மீது சுமத்துவதும் வெவ்வேறு நிகழ்விற்கும் பொருத்தி பார்க்க கூடியது.
ஆராய்ச்சியாளனுக்கு இருக்க வேண்டிய அறத்திற்கும் அறிவியலின் கண்டுபிடித்தலில் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயான சிக்கல் இறுதியில் கூர் கொள்கிறது. இந்த கேள்வியின் இன்னொரு வடிவம் தான் விஷக்கிணறு குறு நாவலாக விரிவடைந்துள்ளது.
மனிதன் இந்த உலகில் மற்ற எதையும் சார்ந்திராமல் வாழ்வதற்கான சோதனையை மேற்கொண்டு அவன் வெற்றியடைகிறான். ஆனால் அவன் அவ்வாறு தனியாக வாழும் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதே அவனுடைய இயல்பு என்று தோன்றுகிறது. அதற்காக சமைக்கப்பட்டதே நாகரிகமும் பண்பாடும்.
அதன் எல்லையை அல்லது வெறுமையை உணரும் அவன் தான் உருவாக்கிய அனைத்தையும் நேர் செய்ய முடியுமா என்று நினைக்கிறான். ஜெமீமாவை நெருங்க அவனுள் இருக்கும் அழியா தேடல் அவன் தன்னை இவ்வுலகில் அரக்கனாக எஞ்சியிருக்க கூடாது என்று நினைக்க வைக்கிறது. அந்த கடற்கரையில் அவன் ஓடும் பாத தடங்களை அழித்துக் கொண்டே திரும்பும் போது புது காலடிகள் உருவாகியிருப்பதை உணர்ந்து கொள்கிறான். உண்மையில் இங்கு உருவாக்கும் எதையுமே அழித்து விட முடியாது. ஒன்று உருவாகிவிட்டால் அதனை காலத்தில் பின் சென்று அழிப்பது சாத்தியமற்றது. அதனால் இறந்து போன திமிங்கிலத்தின் எலும்பினை இழுத்துக் கொண்டு கடலில் சென்று மரிக்கிறான் என்று தோன்றுகிறது. தேவைக்கு அதிகமாக தின்று அழிக்கும் திமிங்கிலத்தின் தேவை மக்களுக்கு அவ்வப்போது அவனது எல்லையை நினைவில் நிறுத்திக் கொள்ள அவசியமானது தான் போல.
கூண்டு சிறுகதை ஒரு மிகுபுனைவு.. அந்த கூண்டின் உருவாக்கமும் அதன் நோக்கமாக கதையில் சொல்லப்படுவதும் சேர்ந்து என்னை சிறிது பரவசத்திற்கு உள்ளாக்கி விட்டது. கூண்டு அதுவே குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டும் என்பதும், கூண்டினை செய்த கொல்லனின் மீசையற்ற ஆயிரக்கணக்கான வருட புன்னகையும் அந்த கூண்டிணை பிரபஞ்சத்தோடு என் மனம் ஒப்பிட்டு கொண்டது. அங்கு நிகழும் மனிதர்களின் தவிர்க்க முடியாத வாழ்வு அவர்களின் தண்டனை என்ற அளவில் சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கதையின் முடிவு கீழிறக்கியது. எந்த தவறும் செய்யாத ஒருவன் அல்லது சமூகத்தில் சொல்லப்படும் லட்சிய உருவகத்தில் வாழும் ஒருவனின் நிலையை காட்சி படுத்துகிறது.
சமூகம் ஒரு நேரத்தில் தனது உண்மை நிலையினை ஏற்றுக் கொண்டு கூண்டிற்குள்ளேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது, எந்த குற்றமும் செய்யாத ஒருவன் இரக்கத்தொடு பார்க்கப்படுகிறான். அவனும் அந்த கூண்டிற்கு செல்ல தனக்கு இருக்கும் காரணங்களை கற்பனை செய்து கூண்டின் தவறால் வெளியிலிருப்பதாக எண்ணிக் கொள்கிறான். சமூகத்தின் அழுத்தம் எந்த அளவிற்கு தனியர்களின் மீது செயல்படுகிறது என்பதும் அவனுக்கு தேவைப்படும் ஆத்ம பலத்தின் தேவையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆரோகணம் தருமனின் இறுதி பயணத்தை போல் காந்தியின் இறுதி பயணத்தை படைக்க முயலும் கதை. இந்த கதையை நான் மிக ரசித்தற்கு காரணம் ஒன்று காந்தியை தொன்மமாக்கும் மிக முக்கியமான கதை.
காந்தியின் மனம் யதார்த்தத்தில் செயல்படும் விதத்தை மெல்லிய நூல் போன்ற கதைகளில் அணுகி அறிய முயன்ற முயற்சிகளில் இருந்து இது வேறுபடும் விதம் சிறப்பானது.
இரண்டாவதாக மரபில் இருந்து ஆத்ம சுத்திகரிப்பை அடைய வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டிருந்த மனிதர் மரபினால் சொல்லப்படும் சொர்க்கத்தை தனது இயல்பினாலேயே நிராகரிப்பது. இது முக்கியமான மீறல் என்று தோன்றுகிறது.
மிக அற்புதமான கதைகள். தமிழில் இத்தகைய கதைகளை எழுதும் சுனில் நிச்சயமாக முதன்மையான எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை.