Normal view

Received yesterday — 7 June 2025
Received before yesterday

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 35

சேவல் கூவும் சத்தம் கேட்டும் தன்னவளை விட்டு விலக மனமில்லாமல் அணைத்துக்கொண்டே படுத்திருந்தான். இருவரின் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்சியது சில நொடிகள் முன்னே கூடல் முடிந்து அவன் மார்பில் படுத்திருந்தவள் உறக்கத்தை தழுவியிருந்தாள்.

நதியாவை விட்டு பிரிய மனமில்லாமல் அவளின் தூக்கம் கலையாமல் தலையணையில் படுக்க வைத்துவிட்டு கீழே கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குளிக்கச் சென்றான். அவனது முதுகில் தண்ணீர் படவும் அவள் நகம் பட்ட இடமெல்லாம் எரிந்தது.

“இராட்சசி எப்படி கீறி விட்டிருக்கா பாரு” என்று காதல் மனைவியை வசைப்பாடிக்கொண்டு குளித்து வெளியே வந்த போது நதியா மீன்குஞ்சு போல இதழ் பிளந்து உறங்குவதை கண்டு மென்நகை புரிந்தவன் வேஷ்டியை கட்டிக்கொண்டு கதவு திறந்து வெளியே போனவன் அதிர்ச்சியில் கண்ணை விரித்தான்.

ராயன் காரில் சாய்ந்து நின்றான். மாட்டுப் பண்ணையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருப்பான் போலும் பால்கறந்து முடித்து கேனில் நிரப்பி வைத்திருந்தனர். கோவிந்தன் கணக்கு நோட்டில் பால் அளவுகளை எழுதிக்கொண்டிருந்தான்.

“என்ன அதுக்குள்ள எழுந்துட்ட ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிட்டு டயர்ட்ல தூங்கியிருப்பனு நினைச்சு உனக்கு உதவி பண்ண வந்தேன்டா” என்று கொட்டாவி விட்டு தலைக்கு மேல் கையை தூக்கினான் ராயன்.

“என் மேல உனக்கு இத்தனை பாசமாடா மச்சான்” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டான் பாலாஜி.

“என்னடா பண்ணறது தங்கச்சியை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கேன் தங்கச்சி சந்தோசமா இருக்கணும்ல அதுக்காகத்தான்” என்றான் உதட்டு மடிப்பு சிரிப்புடன்.

“டேய் நீ இருக்கியே” என்று அவன் தோளில் போலியாக அடித்தான் பாலாஜி. பால்காரர்கள் வரவும் அவர்களுக்கு பாலை சப்ளை செய்து விட்டு ராயன் பக்கம் வந்தவன் “வாடா டீ குடிச்சிட்டு போகலாம்” என ராயனின் கையை பிடித்தான்.

“உன் கையால டீ குடிச்சு ரொம்ப நாள் ஆச்சு வரேன்டா” என்று நண்பனுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

குளித்து விட்டு வெளியே வந்த நதியாவோ ராயனை கண்டதும் “அண்ணா எப்போ வந்தீங்க?” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டாள்.

“இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்மா நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு அழைப்பு சொல்லிட்டு போயிடலாம்னு வந்தேன்டா இரண்டு பேரும் நேரமே வந்துடணும் இந்த முறை மாவிளக்கு மட்டும்தான் குழந்தை பிறந்ததும் கிடா வெட்டிக்கலாம்” என்றவனிடம்

“நான் நம்ம வீட்டுக்கு வந்தா அம்மா முகத்தை தூக்கி வச்சிப்பாங்க அண்ணா நான் கோவிலுக்கு மட்டும் வரேன்”

“நீ இந்த முறை வரும்போது அம்மா உங்களை வரவேற்பாங்க பாரேன்” என்று தங்கையை சமாதானம் செய்ய பார்த்தான்.

“அது நடக்காது அண்ணா இருங்க காபி போட்டு கொண்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டாள்.

காபியுடன் வந்த நதியாவை கண்ணெடுக்காமல் பார்த்தான் ராயன்.

“என்ன அண்ணா அப்படி பார்க்குறீங்க என்னடா இவ சமையல்கட்டு பக்கம் கூட போனதில்லை எப்படி காபி போடுறானா எல்லாம் உங்க மாப்பிள்ளை சொல்லிக்கொடுத்தாரு அண்ணா” என்றாள் பாலாஜியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

காபியை வாங்கி குடித்த ராயனோ “காபி சூப்பர் பாப்பா” என்றவனோ “டேய் மச்சான் நீ போடுற காபியை விட என் தங்கச்சி பிரமாதமா காபி போட்டிருக்கா” என்று கண்ணைச்சிமிட்டி சிரித்தான்.

அவனோ “உன் தங்கச்சிக்கு காபி போட சொல்லிக்கொடுக்கறதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்” என்றான் சலிப்பாக.

“அண்ணா சாப்பிட்டுத்தான் போகணும்” என்றாள் பிடிவாதமாக.

“இல்லம்மா முல்லையை ஹாஸ்பிட்டல் செக்கப் அழைச்சிட்டு போகணும் நான் கிளம்புறேன் மாப்பிள்ளை திருவிழாவுக்கு நேரமே வந்துடு” என்று பாலாஜியின் தோளை தட்டிவிட்டு “பாப்பா போய்ட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டான்.

தீபாவிற்கு வாமிட் அதிகம் இல்லை. அமுதாவிற்கு காய்கறிகள் நறுக்கிக்கொடுத்துவிடுவாள். பணக்காரி என்று திமிர்தனம் அவளை விட்டு காணாமல் போயிருந்தது. தோட்ட வேலைக்காரர்களிடம் சுள்லென்று விழுவதில்லை. கண்ணன் தன் மனைவியா இவள் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிவிட்டாள் தீபா.

கோமளமோ பிறக்க போகும் பேரன் சிவப்பாக பிறக்கவேண்டுமென இரவில் தீபாவுக்கு பாலில் குங்குமப் பூவை கலந்து கொடுத்தார்.

“என்னம்மா உங்க மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷலா பாலுல குங்குமப் பூ போட்டு கொடுக்குறீங்க எனக்கு இல்லையா?” என்றவனிடம்

“பையன் உன்னை போல கருப்பா பொறந்துட்டா அதான் குங்குமப்பூ கலந்து கொடுக்குறேன் என் பேரன் சிவப்பா பிறக்கட்டும்னு” என பெரும்மூச்சு விட்டார்.

“ஏன்மா பொண்ணு பொறந்தா ஏத்துக்க மாட்டீங்களா! எனக்கு பொண்ணு மேலதான் பிரியம்” என்றவனை

“வாயை பினாயில் போட்டு கழுவுடா அறிவுக்கெட்டவனே! உனக்கு பையன் பிறப்பான் ராயனுக்கு பொண்ணு பிறக்கும் நான் சொல்றது சத்தியவாக்கு மகனே” என்றார் அழுத்தமாக வார்த்தைகளுடன்.

தையல்நாயகியும் அழகம்மையும் சிரித்துக்கொண்டனர்.

“என்னங்கடி ரெண்டு பேரும் சிரிக்குறீங்க நான் சொல்றதுதான் நடக்கும்” என்றார் தெனாவெட்டாக.

அழகம்மையோ “புள்ளைபேரும் மழைபேரும் மகாதேவனுக்கு கூட தெரியாதாம் அண்ணி” என்றார் ராகமாக.

“பார்க்கலாம்டி” என்று முந்தானையை உதறிவிட்டுச் சென்றார்.

தென்னரசுவோ ஆர்கானிக் தோட்டத்தை பெரிதளவில் உருவாக்கி விட்டான். காய்கறிகள் வெளியூர்களுக்கு சப்ளை பண்ண திட்டம் போட்டிருந்தான். ஆர்டர்களும் குவிந்து விட்டது. பிஸினஸ்மேன் ஆகிவிட்டான் தென்னரசு.

பூங்கொடி மறுபடியும் கர்ப்பம் தரித்து விட்டாள்.

நீலகண்டனும் அழகம்மையும் மகளை பார்த்துவிட்டு “நீ வேணா நம்ம வீட்டுல வந்து இரேன்டி” என்றார் அழகம்மை.

“அத்தை இருக்காங்க பார்த்துப்பாங்க. அரசிக்கிட்டயும் தியா நல்லா ஒட்டிக்கிட்டாமா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நான் சந்தோசமாக இருக்கேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

முல்லைக்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியது.

முல்லையால் வயிற்றை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியவில்லை.

“கோமளம் அண்ணி சொன்னது போலவே பொண்ணாத்தான் இருக்கும் போலங்க” என்றார் அழகம்மை நீலகண்டனிடம்.

“என்ன குழந்தையா இருந்தா என்னடி நல்ல விதமா தாயும் பிள்ளையும் வந்தா போதும்” என்று அங்கலாய்த்தார் நீலகண்டன்.

“நீங்க சொல்றது சரிதான்ங்க” என பெரும்மூச்சு விட்டார் அழகம்மை.

“அழகு பூங்கொடி ஏழுமாசத்துலதான் நம்ம வீட்டுக்கு வந்தா ஆனா முல்லை கரு உண்டானது முதல் இப்ப வரை உன்கூடவே வச்சு பார்த்துக்கிற உன் மனசு தங்கம்டி நீ பொண்டாட்டியா கிடைக்க நான் தவன் பண்ணியிருக்கணும்டி” என்று அழகம்மையின் கையை பிடித்துக்கொண்டார் நீலகண்டன்.

“எனக்கு எல்லாம் தெரியும்ங்க” என்றதும் ஒரு நிமிசம் ஆடிப்போனார் நீலகண்டன்.

“என்ன அப்படி பார்க்குறீங்க நம்ம அமுதாவோட வீட்டுக்காரன் குழந்தை உருவானதும் வியாபாரத்துக்கு போனவரு திரும்பி வரவேயில்லையாம்ங்க அவனெல்லாம் மனுசனாங்க அமுதாவை பார்க்கும்போது பாவமாய் இருக்கு… நம்ம முல்லைக்கு அப்பா இல்லைங்கற வருத்தம் வரவே கூடாது அதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன் உங்களையும் அப்பானு கூப்பிட அனுமதி கொடுத்தேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

“ஆமாடி அமுதாவை பாதியில விட்டுப்போனவன் மனுசன் கிடையாது” என்றவருக்கு மனதில் பாரம் ஏறியது.

“அப்பா இடுப்பு வலிக்குது மச்சானை வரச்சொல்லுங்க” என்று வயிற்றை பிடித்துக்கொண்டு நடக்க முடியாமல் வந்தாள் முல்லை.

“இன்னும் நாள் இருக்கு முல்லை இது பொய் வலி கசாயம் வச்சு தரேன் குடி வலி நின்னுடும்” என்று அவளின் கையை பிடித்து நீலகண்டன் பக்கத்தில் உட்கார வைத்து “புள்ளையை பார்த்துக்கோங்க” என்று ஜாடை காண்பித்துச் சென்றார்.

“அப்பா அமுதா அம்மாவை விட அழகு அம்மா என்னை ரெண்டு மடங்கு பார்த்துக்குறாங்கப்பா இவங்க கிட்ட உண்மையை மறைக்கிறோம்னு குற்ற உணர்வா இருக்கு” என்றாள் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு.

“சில உண்மைகளை இரகசியமா வச்சிருக்கறதுல தப்பில்லடா கொஞ்ச நாள் முன்னாடி உண்மை தெரிஞ்ச உனக்கே இவ்ளோ கஷ்டம்னா என்னைய நினைச்சி பாரு கண்ணு நானெல்லாம் பாவம் செய்த மனுசன் எனக்கெல்லாம் நரகம்தான் கிடைக்கும்டா” என்றவரின் குரலில் அத்தனை வலி இருந்தது.

“நீங்க வேணும்னு எதையும் பண்ணலையேப்பா விடுங்க” அழகம்மையின் தலை தெரிந்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்.

“இந்த கசாயத்தை குடிமா” என்று முல்லையிடம் கசாயத்தை கொடுத்தார். கசாயத்தை குடித்ததும் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு வலி குறைந்திருந்து.

தையல்நாயகியோ இரவு ராயன் சாப்பிடும் நேரம் “ராயா திருவிழாவுக்கு நம்ம நதியா பாப்பாவுக்கு அழைப்பு சொல்லிட்டதானே?” என்றபடியே தோசையை தட்டில் வைத்தார்.

கோமளமோ “அவளுக்கு அழைப்பு சொல்லலைனு யார் அழுதாங்க அன்னிக்கு சும்மா அழுது கரைஞ்சு நகையை ஆட்டைய போட்டுட்டு போய்ட்டா இப்ப திருவிழாவுக்கு வந்தானா சும்மாவா போகப்போறா இல்ல நீங்கதான் அவளுக்கு சீர் கொடுக்காம அனுப்ப போறீங்களா!” என்றார் இழுவையாக.

“ஒத்த தங்கச்சியை வச்சிருக்கோம் அவளுக்கு நியாயமா சேர வேண்டியதை கொடுத்துடணும் இல்லனா அண்ணனுங்களுக்குத்தான் தோஷம் வருமாம் பெரியம்மா… நம்ம வீட்டு மருமகளுங்க ரெண்டு பேரும் மாசமா இருக்காங்க பிறக்க போற குழந்தைகளும் தோஷத்துல பிறக்கணுமா?” என சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவியவன் கோமளத்தின் பக்கம் வந்து உட்கார்ந்தான்.

“நான் இதை யோசிக்காம போயிட்டேன் ராயா அவளுக்கு கொடுக்க வேண்டிய பங்கை திருவிழா முடிஞ்சு போற அன்னிக்கு கொடுத்திறலாம் நம்ம பேரன்களுக்கு தோஷம் வரவேணாம்” என்றார் அச்சத்துடனே.

கோமளம் தன் மகன் வயிற்று பேரப்பிள்ளைக்குதான் மரியாதை கிடைக்கணும் பின் வரும் சந்ததியர் தன் பேரனை வழி தொடரணும்னு என்று சுயநலமாக ஆசைப்பட்டாரே தவிர மொத்த குடும்பத்துக்கு சாபம் வந்துவிடுமென்று அவர் யோசிக்கவில்லை.

“நீங்க சொன்னா அப்பீல் இல்லை பெரியம்மா நதியா பாப்பாவுக்கு என்ன என்ன கொடுக்கணும்னு நானே முடிவு எடுக்கட்டுமா இல்ல நீங்க முடிவு பண்ணி வச்சிருக்கீங்களா?” என்றான் கோமளத்தின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

“நீ உன் தங்கச்சிக்கு என்ன கொடுக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருப்பியே என்கிட்ட சும்மா ஒப்புக்குத்தான் கேட்ப உன் மனசுக்கு என்ன படுதோ அதை பண்ணிடு” எழுந்து சாப்பிடச் சென்றார் கோமளம்.

ராயன் சாப்பிட்டு நீலகண்டன் வீட்டு கேட்டை திறந்து உள்ளே போக முல்லையோ வயிற்றை பிடித்துக்கொண்டு போர்ட்டிக்கோவில் நடந்துக் கொண்டிருந்தாள்.

“என்ன புள்ள வாக்கிங்கா?”

“ஆமா நார்மல் டெலிவரி ஆகணும்னா நடக்கணும்னு டாக்டர் சொன்னது மறந்துட்டீங்களா மச்சான்” என்று நடக்கும் போது பேசமுடியாமல் மூச்சு வாங்கினாள்.

“புள்ள நின்னு பேசு” அவளது கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான்.

“நான் நடக்கணும் விடுங்க மச்சான்” என்று சிணுங்கியவளின் கையை விட்டு “போடி” என்று முகத்தை உர்ரென்று வைத்தான்.

“அச்சோ மச்சானுக்கு ரொம்பதான் கோபம் வருது” என்று அவனது மீசையை பிடித்து இழுத்து யாரும் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்துவிட்டு ராயனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் “இதுக்குதானே என்னை உட்கார வச்சீங்க மச்சான்” அவனது தோளில் சாய்ந்தாள்.

அவள் எங்கே தடுமாறி விழுந்துவிடுவாளோ என்று அச்சத்தில் அவளை தன் கை வளைவில் நிறுத்தி வைத்து “உன் அறைக்குள் வந்தாவே அழகு அத்தை ராயா வெளிய வானு மிரட்டுறாங்க என் பொண்டாட்டிக்கிட்ட ஒரு முத்தம் கூட வாங்க முடியலை” என்றான் வருத்தமாக.

“நமக்குள்ள ஏதாவது கசமுசா நடந்து எனக்கு ஆபத்து வந்துடும்னு பயப்படுறாங்க அழகு அம்மா” என்றாள் முல்லை நமட்டுச் சிரிப்புடன்.

“ஏன் டி எனக்கு என் பொண்டாட்டி மேல அக்கறை இல்லையா பார்த்து நடந்துக்க மாட்டேனா மாமியார்னாவே கொடுமைக்காரவங்களா இருக்காங்க நம்ம அறையில உன்கூட வந்து படுத்துக்குறாங்க நான் சோபாவுல படுத்துக்குறேன் என் மேல நம்பிக்கை இல்லையாடி” என்று பொருமினான் ராயன்.

“ஆமாடா நான் கொடுமைக்காரி தான்” என்று இடுப்பில் கையை வைத்து நின்றார் ராயன் முன்னே.

“அ.அத்தை நா.நான் சும்மா விளையாடினேன்” என்று மழுப்பினான்.

“சரி சரி மாசமா இருக்கற புள்ள ரொம்ப நேரம் முழிச்சிருக்க கூடாது போய் நீ படு முல்லை” என்றார் அதிகாரமாக.

“என் பொண்டாட்டியை என்னை விட்டு துரத்துறதுலயே குறியா இருக்காங்கப்பா” என்று சடைத்துக் கொண்டான்.

முல்லையோ “நான் தூங்கப்போறேன் மச்சான்” என்று அறைக்குள் சென்றாள்.

ராயனும் முல்லையின் பின்னே செல்ல “டேய் டேய் நில்லுடா நானும் வரேன்” என்று மருமகனின் பின்னால் சென்றார் அழகு.

“மாமா எல்லாம் என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசுறாங்க நீ என்னடானா மருமகனை வாடா போடா ராயானு பேசுற அத்தை” என்று அழகம்மையை முறைத்தான்.

“நான் தூக்கி வளர்த்த பையன் நீ! உன்னை வாங்க போங்கனு கூப்பிடணுமா நான் முல்லை அறைக்குள்ள போகாம நீ போகக்கூடாது சோபாவுல உங்க மாமா கூட உட்கார்ந்து டிவி பாரு நான் அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ராயனுக்கு கட்டளை போட்டுச் சென்றார்.

நீலகண்டனோ “மாப்பிள்ளை நீங்க உள்ள போங்க உங்க அத்தை வந்து கேட்டா உனக்கு தூக்கம் வருதுனு போய்ட்டனு சொல்லிடறேன்” என்று கண்ணைச் சிமிட்டினார்.

“தேங்க்ஸ் மாமா” என்று அடுத்த நொடி முல்லையின் அறைக்குள் இருந்தான்.

“அச்சோ மச்சான் அழகு அம்மா வரதுக்குள்ள நீங்க ஏன் வந்தீங்க திட்டப்போறாங்க முதல் நாள் உங்களை தெரியாம உள்ளே விட்டு எனக்கு அடுத்தநாள் இடுப்பு வலி வந்துடுச்சுல அதான் உங்களை உள்ள விட பயப்படுறாங்க ஆனா எனக்கு உங்க மேல சாய்ஞ்சு படுத்துக்கணும்னு இருக்கு” என்றாள் முகத்தை அப்பாவி பெண் போல வைத்து.

“அவ்ளோதானே புள்ள என் நெஞ்சுல தான் நீ தூங்கப்போற ஒரு நிமிசம் இரு வரேன்” என்று ஹாலுக்குச் சென்றவன் “மாமா அத்தையை உள்ளே வரவிடாம பார்த்துக்கோங்க என் பொண்டாட்டி கூட தனியா இருக்கணும் எனக்கு உதவி பண்ணுவீங்களா?”

“நீ போ மாப்பிள்ளை உங்கத்தை கிடக்குறா ஆனா பார்த்து இருக்கணும் முல்லைக்கு நிறைமாசம் கவனம்பா” என்று அழுத்தி கூறவும்

“என் மேல நம்பிக்கை இல்லையா மாமா?”

“உன் மேல நம்பிக்கை இல்லாமலா போயா உங்கத்தை வர்றதுக்குள்ள” என்றார் சமையல்கட்டை பார்த்துக்கொண்டே.

ராயனோ முல்லையின் அறைக்குள் வந்து கதவை அடைத்து ஒரு எட்டில் கட்டிலில் ஏறி அமர்ந்து முல்லையை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

முல்லையோ நெஞ்சில் சாய்ந்ததும் “மச்சான் பிரசவத்துல வலிக்குமாமே எனக்கு பயமா இருக்கு” என்றாள் அவனது நெஞ்சில் சுருள் முடியை விரலால் சுருட்டிக்கொண்டே.

“வலியில்லாம புள்ள பிறக்காதுடி அந்த நேரம் என்னை நினைச்சுக்கோ உனக்கு வலியே வராது புள்ள” என்றான் அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து.

“மச்சான் பிரசவ அறைக்குள்ள நீங்க வந்துடுங்களேன் நீங்க பக்கம் இருந்தா எனக்கு வலி இருக்காதுல” என்றவளின் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது.

“கண்டிப்பா நான் உன்கூட இருக்கேன் புள்ள தூங்கு” என்று மனைவியின் தலையை வருடிக்கொடுக்க உறங்கிவிட்டாள் முல்லை.

அழகம்மையோ சமையல்கட்டை சுத்தம் செய்து விட்டு பூங்கொடிக்கு போன் போட்டார்.

“என்னம்மா இந்த நேரம் போன் போட்டிருக்க என் ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்று கிண்டலாக பேசினாள் பூங்கொடி.

“என்னடி இப்படி கேட்டுபுட்ட மாசமா இருக்காளே புள்ள எப்படி இருக்கானு ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசலாம்னு போன் போட்டேன் பொசுக்குனு உன் ஞாபகம் எப்படி வந்துச்சுனு கேட்ப இதுதான் பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லுனு சொல்லுவாங்க” என்றார் புலம்பலாக.

“ம்மா நான் சும்மா ஏதோ சொன்னேன்மா உன்கிட்ட வம்பிழுக்கலாம்னு என்னை கவனிக்க குமுதா அத்தை அரசி உங்க மருமகன் எல்லாரும் இருக்காங்க எனக்கு என்ன கவலை நான் ராணி போல இருக்கேன்” என்றாள் சந்தோசமாக.

“நீ பேசறதை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன்டி நேரம் நேரத்துக்கு சாப்பிடு குமுதா அம்மா இருக்காங்கனு தியாவை அவங்க கிட்ட கொடுத்துட்டு தூங்காதே அப்படியே வீட்டுக்குள்ள சின்ன சின்ன வேலையெல்லாம் பார்த்துக்கிட்டே இருடி” என்றார் மகள் மேல் உள்ள அக்கறையில்.

“சரிமா நான் பார்த்துக்குறேன் முல்லையை கவனிச்சிக்கோங்க” என்று போனை வைக்கபோனவளை “ஒரு நிமிசம் இருடி நான் இன்னும் பேசி முடிக்கலை” என்றவரோ “திருவிழாவுக்கு நேரமே வந்துடு நேர்ல வந்து அழைப்பு சொல்லலைனு நினைக்காதே” என்றவுடன்

“அட அப்பா நேத்து மதியம் வீட்டுக்கு திருவிழாவுக்கு நேரமே வந்துடணும்னு அழைப்பு சொல்லிட்டு போனாரு. ராயன் மாமா போன் போட்டு கண்டிப்பா திருவிழாவுக்கு குடும்பத்தோட வரணும்னு சொல்லியிருக்காருமா நான் திருவிழாவுக்கு வராம இருப்பேனா?”

“வாடி வாடி எல்லாம் குடும்பமா சந்தோசமா இந்த திருவிழாவை கொண்டாடுவோம்” என்று மனநிறைவுடன் போனை வைத்தார் அழகு.

ஹாலுக்குச் சென்ற அழகுவோ முல்லை அறைக்கதவு மூடியிருப்பதை கண்டு “இவன் வேலையை காட்டிட்டான் பாரு… டேய் ராயா கதவை திற” என்று சத்தம் போட்டு கதவின் பக்கம் போனவரின் கையை பிடித்துக்கொண்ட நீலகண்டனோ “புருசன் பொண்டாட்டி அறைக்கதவை தட்டுறியே உனக்கு இங்கிதம் இருக்காடி” என்று சண்டைக்கு வந்தார் நீலகண்டன்.

“அட நீங்க வேற முதல் நாள் முல்லை அறைக்குள் ராயன் போய்ட்டு வந்ததுனால அடுத்தநாள் முல்லைக்கு இடுப்பு வலி வந்துடுச்சு இவன் முரட்டு ஆளு அந்த பொண்ணு தாங்கணும்ல உங்களை யாரு அவனை உள்ளே விடச்சொன்னது” என்று நீலகண்டனை முறைத்தார் அழகு.

“அட விடுமா ராயன் பார்த்துப்பான் வா நாம தூங்கலாம்” என்று மனைவியின் கையை பிடித்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டார்.

பாலாஜியோ வேக வேமாக மாடுகளுக்கு தீவனம் காட்டி முடித்து வீட்டுக்குள் சென்றான். நதியாவோ குளித்து விட்டு நைட்டியில் பவுடர் அடித்துக்கொண்டிருந்தவளை கண்டவனோ “நைட்டுக்கு ரெடியாகிட்ட போல சும்மா கும்முனு இருக்கடி உருண்டை” என்று அவளது கழுத்தில் முகம் புதைத்தான்.

“உருண்டைனு கூப்பிடாதீங்க மாமா” என்றாள் அவனை முறைத்து.

“அப்படித்தான் கூப்பிடுவேன் உருண்டை” என்று அவளது நைட்டியின் பட்டன்களை விடுவித்தான்.

“அச்சோ இப்ப கொஞ்ச நேரம் பேசலாம்”

“என்னத்த பேசறது வாயும் கையும்தான் பேசணும் வாடி” என்று நதியாவை தூக்கி கட்டிலில் போட்டு லைட்டை அணைத்தவன் நதியாவையும் அணைத்தான் பாலாஜி.

“கொஞ்சம் கூட பொறுமை இல்லையா மாமா நேத்து நைட் கடிச்சு வச்சி சிவந்து போச்சு” என்று காயப்பட்ட இடத்தை காண்பித்தாள்.

“நீயும்தான் கடிச்சிருக்க இங்க பாருடி காலையில உன் அண்ணன் என் கழுத்தை உத்து உத்து பார்க்குறான் எனக்கு வெட்கம் வந்து சட்டை காலரை இழுத்து விட்டுக்கிட்டேன்” என்றவனோ அவளை பேச விடாது இதழில் மூழ்கினான்.

கொஞ்ச நேரத்தில் நைட்டியும் அவனது லுங்கியும் ஒரு ஓரமாய் கிடந்தது. அவனது இதழ்களும் கைகளும் அவளது மேனியில் நாட்டியம் ஆடிக்கொண்டே இருந்தது. “இன்னிக்கு இப்படி” என்று அவளது காதில் ஏதோ இரகசியம் பேச “அய்யே சீ போடா நான் மாட்டேன்” என்றவளை “ஏய் ஏய் நதி ப்ளீஸ்டி” என்று அவன் கேட்டதை வாங்கிக்கொண்டே விட்டான். பெண்மையை மலர வைத்தான்.

என் இனிய ராட்சஷனே 17,18

அத்தியாயம் 17

 

சின்னப்பொண்ணு இளமதியின் கையை பிடித்து இழுத்து செல்ல 

“என் கையை விடு மா இந்த கிழிவியை இன்னைக்கு நான் உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்” என்று சிவகாமியை முறைத்துக் கொண்டே கூற “என்ன டி பண்ணுவ என்ன பண்ணுவ என் மகனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை இந்த வீட்டை விட்டே வெளியே துரத்திடுவான்” என்று எகிறி கொண்டே சிவகாமி அவள் அருகில் கோபத்துடனே வர. 

 

“கூப்பிடுங்க உங்க மகனை இன்னைக்கு என்ன பண்றாருன்னு பார்ப்போம்” என்றாள் அவளும் அவருக்கு சற்றும் குறையாத கோபத்துடன் தைரியமாக “மதி நீ இப்போ உள்ளே வர போறியா இல்லையா” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கூறியவர் அவளின் கைப்பிடித்து இழுக்க சிவகாமியை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் இளமதி. 

 

அறையின் உள்ளே வந்த இளமதி கோபத்துடன் படுக்கையில் அமர்ந்திருக்க “உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது பெரியவங்க பேசுனா நீயும் கூட கூட பேசுவியா சொல்லு டி” என்றார் கோபத்துடன் அவர். 

 

“அம்மா அந்த கிழவி பேசுனது எல்லாம் சரியா நீ என்னை மட்டும் கன்ட்ரோல் பண்ற” என்க அவள் அருகில் வந்து அமர்ந்த சின்னப்பொண்ணு “மதி மா நாம இந்த வீட்ல இருக்க வர அவங்களுக்கு அடங்கி தான் ஆகனும்” என்று கூறும் போதே அவரின் கண்கள் கலங்கியது. 

 

“அம்மா நாம இனிமே இந்த வீட்ல இருக்க தேவையில்லை” என்ற இளமதி தன் பையில் இருந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடுத்து அவர் கையில் கொடுத்தாள் “அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கு அதுவும் பெரிய ஐடி கம்பெனில மாசம் முப்பதாயிரம் சம்பளம்” என்றாள் மகிழ்ச்சியுடன். 

 

சின்னப்பொண்ணு ஒரு நிமிடம் அந்த பேப்பரை தன் கையில் வைத்து பார்த்து கண்ணீர் விட்டார் அடுத்த நிமிடம் 

“நீ என் தம்பி கூட வாழ வேண்டாமா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்று கேட்க

“மா என் வாழ்க்கைக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு” என்று அவள் கேட்க. 

 

“சம்மந்தம் இருக்கு நீ இங்கே இருந்து போய்ட்டா நந்தினியை கருப்பனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க 

நீங்க ரெண்டு பேரும் இன்னும் சேர்ந்து கூட வாழ ஆரம்பிக்கல”

 

“அம்மா மாமா அக்காவை கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாரு” என்றாள் 

இவள் மிகவும் தைரியமாகவும் உறுதியாகவும் “உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் ஒரு நாளாவது அவன் குடும்பம் நடத்திருக்கியா உன் வாழ்க்கை என்ன ஆகும்” என்றார் பயத்துடன். 

 

“மா நாங்க ஒன்னா வாழலைன்னு யார் சொன்னா” என்றாள் அவள் அவரின் முகம் பார்க்காமல் 

“என்ன சொல்ற மதி” என்று அவர் ஆச்சரியம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்க 

“அம்மா நாங்க வாழ ஆரம்பிச்சிட்டோம் அவரு கண்டிப்பா அக்காவை கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு இதுக்கு மேல என் கிட்ட எதுவும் கேட்க்காத” என்று அவள் சொல்லும் போதே அவளின் முகம் சிவந்து போனது அவளால் தாயின் முகம் பார்க்க முடியவில்லை எழுந்து வெளியே சென்றுவிட்டாள். 

 

சின்னப்பொண்ணுவுக்கு அனைத்தும் புரிவதை போல் இருந்தது அவருக்கும் இப்போது தான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது. 

 

இளமதி அங்கிருந்து வெளியே சென்றவள் நேரே தன் மாமனை தேடி ரைஸ் மில்லுக்கு சென்றாள் அவன் அங்கே இல்லை என்றவுடன் மீண்டும் வயலுக்கு தேடிப்போக அங்கே தான் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். 

 

அவனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்த மதி அவனுக்காக மரத்தடியில் சென்று அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தாள் அவள் மறைவாக அமர்ந்திருக்க கருப்பன் அவளை பார்க்கவில்லை அப்போது வானம் இருட்டிக் கொண்டு மழை வருவதை போல் இருக்க கருப்பன் சீக்கிரமே வேலையாட்களை அனுப்பி வைத்தான். 

 

இறுதியாக கருப்பன் மட்டும் தான் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன் வருவதற்க்குள் மழை பொழிய ஆரம்பிக்க மா மரத்தின் அடியில் சென்று மழைக்காக ஒதுங்கி நின்றான் மழையை வேடிக்க பார்த்து கொண்டு இருந்தவன் தன் பக்கத்தில் யாரோ ஒரு பெண் நிற்பதை உணர்ந்து திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த இளமதியை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அவளை பார்த்து முறைத்து வைக்க “என்ன மாமா என் மேல கோவமா” என்று கேட்க. 

 

அவனோ கண்டுகொள்ளாமல் மழை என்றும் பாராமல் நடந்து செல்ல “மாமா” என்று கத்திக் கொண்டே இளமதி அவன் பின்னே ஓடியவள் அவனின் கைப்பிடித்து இழுக்க 

சரியாக அவள் சேற்றில் காலை வைத்து விட கால் வழுக்கி விழ நிலைதடுமாறி அவள் விழ போக கருப்பன் அவள் விழுந்து விடாமல் பிடிக்க முயல இருவரும் ஒன்றாக சேர்ந்து கொட்டும் மழையில் சேற்றில் விழுந்தனர். 

 

கருப்பன் கீழே கிடக்க இளமதி அவன் மேலே கிடந்தாள் மழை பயங்கரமாக வெளுத்து கொண்டு இருக்க மின்னல் வேறு வெட்டி கொண்டு இருந்தது. 

 

இளமதி அவன் மேலே எக்கு தப்பாக விழுந்து கிடக்க அவள் தாவணி நழுவி அபாயகரமான பள்ளத்தாக்கு வெளியே தெரிய கருப்பனின் கண்கள் எதார்த்தமாக பார்க்க அவளின் இந்த நிலையை கண்டு வாயடைத்து போனான் ரத்தநாளங்கள் உடனே சுறுசுறுப்பாக ஆரம்பித்தது இரண்டு வார பிரிவு அவனை ஏதோ செய்தது அவன் ஆண்மை விழித்து கொள்ள பார்க்க உடனே அவளை தன்னில் இருந்து விலக்கியவன் தானும் எழுந்து நின்றான். 

 

கருப்பன் வேட்டி சட்டை என்று அனைத்தும் சேறாகி இருக்க இளமதியும் அதே நிலையில் தான் இருந்தாள்

“மாமா என் மேல கோவமா ஏன் என் கிட்ட பேச மாட்டேங்குறிங்க” என்று அவனிடம் கேட்க

“ஆமாம் டி கோவம் தான் பெரிய கலெக்டருக்கு படிக்கிறியா ஒரு நாள் என் கூட இருக்க உனக்கு உடம்பு நோவுது பெரிய இவள் மாதிரி பேசுன இப்போ எதுக்கு என் கிட்ட வந்த” என்றவன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு 

முன்னே நடந்து சென்றான். 

 

அவன் நடைக்கு இவளால் அவன் பின்னே ஓட தான் முடிந்தது “மாமா மாமா” என்று கத்தி கொண்டே வர அவன் கண்டுகொள்ளவேயில்லை மழை ஒரளவுக்கு குறைந்து விட பம்பு செட்டின் அருகில் சென்றவன் தன் ஆடையை கலைந்துவிட்டு தண்ணீர் தொட்டியில் இறங்கினான். 

 

சேற்றை சுத்தம் செய்ய தண்ணீரில் இறங்க அவன் பின்னே வந்த இளமதி 

‘இப்போ உன்னை என்ன பண்றேன்னு பாரு மாமா’ என்று மனதில் நினைத்தவள் அவளும் தண்ணீர் தொட்டியின் உள்ளே அவனுடன் இறங்கினாள். 

 

“ஏய் என்ன டி பண்ற” என்று கருப்பன் 

கத்த “உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு மாமா அதை சுத்தம் பண்ண வேண்டாமா” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“அதுக்கு ஒரு ஆம்பளை குளிக்கும் போது தண்ணீ உள்ளே வருவியா இறங்கு டி கீழ” என்றான் கோபத்துடன் கருப்பன் கூற. 

 

“நீங்க என் புருசன் தான உங்க கூட நான் குளிச்சா தப்பு இல்லை வேற ஆம்பளைங்க கூட குளிச்சா தான் தப்பு” என்றவள் தன் தாவணியை கழட்டி எறிந்தாள். 

 

கருப்பன் ஒரு கணம் அதிர்ந்தவன் “அடியேய் உன்னை வெளுக்க போறேன் ஒழுங்கு மரியாதையா கீழே இறங்கி போ” என்றான் “மாமா உங்களுக்கு என்னை பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க உடம்பெல்லாம் ஒரே சேறா இருக்கு ஒழுங்கா குளிக்க வேண்டாமா” என்றவள் தன் மேலாடையின் கொக்கியை கழட்ட முயற்சி செய்து கொண்டு இருந்தாள். 

 

‘அவளை பார்க்காத டா கருப்பா’ என்று தனக்கு தானே கடிவாளம் இட்டு கொண்டாலும் அவனால் அவனையே கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை தண்ணீரின் உள்ளேயே தடுமாற ஆரம்பித்தான். 

 

அவள் ஒவ்வொரு கொக்கியாக கழட்ட அவன் தன்னிலை இழந்து தவிக்க ஆரம்பித்தான் “அச்சோ மாமா வெட்ட வெளியா இருக்கே உங்க பின்னாடி மறைஞ்சு நின்னுக்கிறேன்” என்று கூறி அவன் பின்னே வர மாலை ஆறு மணி என்பதால் நன்றாகவே இருட்ட வேறு ஆரம்பித்து இருந்தது. 

 

“அய்யோ மாமா இந்த கடைசி கொக்கி மட்டும் கழட்ட வரலை நீங்களே கழட்டி விடுறிங்களா” என்று கருப்பனை தன் புறம் திருப்ப அவளின் ஈர ஆடையில் திமிறி பூத்து குலுங்கி கொண்டு இருந்தது இரட்டை ரோஜா அவற்றை பார்த்து எச்சில் விழுங்கியவன் முழுதாக தன் சுயத்தை இழந்தான். 

 

“மாமா கழட்டி விடுங்களேன்” என்று அவள் மீண்டும் கேட்க சும்மா அவள் மேல் பைத்தியமாக திரிபவன் மொத்தமாக அவளை இந்த நிலையில் பார்க்க எத்தனை முறை பார்த்தாலும் அவனுக்கு புதியதாக தான் தோன்றியது ரோஜா குவியலை அள்ளி எடுத்து ருசி பார்த்து கடித்து மென்று சுவைத்து முகற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. 

 

தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவன் அவளை தன் அருகில் சேர்த்தணைத்தான் இளமதி மனதில் ‘எனக்கு தெரியாதா மாமா உங்களை பத்தி’ என்று நினைத்தாள். 

 

அவள் அருகில் வந்தவன் “ஏன் டி இப்படி தான் கண்டதை காட்டி தான் மனுசனை உசுப்பேத்துவியா” என்று அவளை தன்னோடு மேலும் இறுக்கி கொண்டே கருப்பன் கேட்க “உங்க அம்மா உங்களை நல்லவரு வல்லவருன்னு சொல்றாங்களே நீங்க நல்லவரான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன்” என்றாள் அவனை பார்த்து கொண்டே. 

 

“ஊர்ல எல்லாருக்கும் நல்லவன் ஆனா உன் ஒருத்திக்கு மட்டும் ரொம்ப கெட்டவன் டி” என்றவன் அவளின் இதழில் முத்தமிட்டு அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்

யாரும் இல்லாத தனிமை இருள் இருவரையும் உல்லாச உலகுக்கு அழைத்துச் சென்றது. 

 

அவளை தண்ணீரில் இருந்து தூக்கியவன் உள்ளே இருந்த பம்பு செட் அறைக்குள் தூக்கி சென்றவன் அவள் மேல் படர ஆரம்பித்தான் இத்தனை நாள் பிரிவை அவனை வாட்டி வதைத்து இருக்க அதிரடியாக தன் ஆட்சியை நிலை நாட்ட அவன் இடையில் காலை சுற்றி போட்டு கொண்டு அவளும் “ம்ம்ம்ஆஆஆ” என்று துடிக்க ஆரம்பித்தாள் 

அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் 

“மாமா பொறுமையா பிளீஸ் ம்ம்ம்” என்று அவள் கெஞ்ச “முடியாது டி இத்தனை நாள் என்னை தவிக்க விட்டல்ல அனுபவி” என்றவன் அவளுள் அசுரனாக இயங்க ஆரம்பித்தான் “ம்ம்மாஆஆ” என்று அவள் கத்தும் சத்தமும்

இருவரின் முத்தம் சத்தமும் அறையெங்கும் எதிரொலிக்க இனிதாக இல்லறம் நடந்து முடிந்தது. 

 

இரவு இருவரும் தனியே தனியே ஈர உடையுடன் வந்து சேர்ந்தனர் சிவகாமி 

வீட்டில் இல்லாததால் இருவரையும் யாரும் கவனிக்கவில்லை மறுநாளில் இருந்து திருவிழா வேலைகள் ஆரம்பிக்க இருவரும் அவ்வப்போது கள்ளத்தனமாக சந்தித்து கொண்டனர். 

 

நான்கு நாள் திருவிழாவில் இரண்டு நாட்கள் கருப்பனுக்கு ஜீரம் வந்தது மழையில் நனைந்ததால் மூக்கு வேறு அடைந்திருந்தது எங்கும் வெளியே செல்லாமல் இருந்து கொண்டான். 

 

கடைசி நாள் திருவிழாவுக்கு அவன் கோவிலுக்கு செல்ல அவனுக்கு ராஜமரியாதை வழங்கப்பட்டது நாகராஜனுக்கு அவனை பார்த்து பொறாமை பொங்க இவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான். 

 

 அத்தியாயம் 18

 

அன்று கடைசி நாள் திருவிழா என்பதால் ஊரே கூடி இருந்தது பெண்கள் அனைவரும் பொங்கல் கூடையை சுமந்து கொண்டு வனத்தின் நடுவே இருந்த மைதானத்திற்க்கு வந்து கொண்டிருந்தனர். 

 

கருப்பனும் தன்னவளை தான் அந்த கூட்டத்தில் தேடிக் கொண்டு இருந்தான் அவன் எதிர்பார்பை எல்லாம் பொய்யாக்காமல் பொங்கல் கூடையுடன் நடந்து வந்தாள் அவனின் மனைவி இளமதி அரக்கு நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்து  பட்டு புடவை கட்டி பளபளவென நடந்து வந்து கொண்டு இருந்தாள் நேற்று இரவு அவன் தான் இந்த புடவையை கொடுத்து கட்டிவர கூறியிருந்தான். 

 

அவளின் பால் வண்ண நிறத்துக்கு அந்த புடவை அத்தனை எடுப்பாக வேறு இருந்தது தன் நீளக் கூந்தலை தளர பின்னி அதில் மல்லிப்பூ சூடி அழகான பெரிய முட்டை கண்களுடன் அதில் கண் மை ஐ லைனர் தீட்டி இருக்க அவளின் மை தீட்டிய கண்களே அவனை கொள்ளை கொண்டது. 

 

தேவலோக ரதியே நேரில் இறங்கி வந்ததை போல் இருந்தாள் கருப்பனின் கண்கள் அவளை விட்டு இம்மி அளவு கூட விலகவேயில்லை பொங்கல் கூடயை தூக்கி சென்றவளின் இடையில் இருந்த புடவை விலகி எலுமிச்சை நிற இடை பளிச்சென்று தெரிந்தது அந்த இடையிலேயே கருப்பனின் கண்கள் நிலைத்து நின்றது. 

 

பெண்கள் அனைவரும் முன்னே செல்ல இறுதியாக சென்ற இளமதியை தடுத்து நிறுத்தினான் அவள் கணவன் 

“ஏய் ஒரு நிமிசம் நில்லு டி புடவை மடிப்பே சரியில்லை” என்ற கருப்பன் அவளின் கைப்பிடித்து தனியே ஒரு பெரிய ஆலமரத்தின் பின்னே அழைத்து சென்றான் ஆலமரம் பெரிதாக இருந்ததால் அதன் பின்னே யார் நிற்கிறார்கள் என்பது சரியாக தெரியாது. 

 

அவளின் இடையில் இருந்த புடவை கொசுவத்தை சரி செய்கிறேன் என்ற பெயரில் கையை ஆடையின் உள்ளே நுழைக்க இளமதி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து திணற ஆரம்பித்தாள். 

 

ஏனெனில் அவள் தலையில் பொங்கல் கூடை இருக்க இரு கையும் மேலே கூடையை பிடித்து கொண்டு இருந்தது அவனை அவளால் தடுக்கவே முடியவில்லை அவன் கை புடவையை சரி செய்யாமல் கொசுவத்தின் உள்ளே சென்று இன்னும் ஆழமாக பாதாளத்தின் உள்ளே நுழைந்தது “அய்யோ என்ன பண்ணுறிங்க மாமா” என்று தவிப்புடன் கேட்டு கொண்டே அவள் நெளிய ஆரம்பித்தாள். 

 

“ரொம்ப அழகா இருக்க டி” என்று அவளின் கீழ் உதட்டை பார்த்து கொண்டே கூறியவன் அடுத்த நொடி அவளின் பட்டு போன்ற ரோஜா இதழை இதழை தன் இதழால் கல்வி இழுத்து முத்தமிட அவன் கைகள் இன்னும் உள்ளே சென்று ஆழத்துளையின் உள்ளே விரல் நுழைக்க அவனின் செயலில் அவள் இன்னும் தடுமாற ஆரம்பித்தாள். 

 

அவன் இதழில் இருந்த தன் இதழை வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்தவள் “ம்ம்ம் மாமா விடுங்க யாராவது வந்துட போறாங்க” என்று மூச்சு திணற கூற

கருப்பன் தன் கையை உடனே எடுத்து கொண்டான் அவளின் புடவையை சரி செய்தவன் கீழே குனிந்து அவளின் நாபியில் முத்தமிட்டு மேலே வந்தவன் “நைட் மேல இருக்க ரூமுக்கு வந்துரு டி” என்று மையலுடன் அவள் இதழை தன் ஒற்றை விரலால் தடவிக் கொண்டே முகத்தை தாபத்துடன் பார்த்து கொண்டே கூற பதிலுக்கு அவளின் முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்து போனது “ம்ம்ம்” என்று இதழ் கடித்து அவளும் தலையை ஆட்டினாள் அதன் பின் அவளை அழைத்து கொண்டு மைதானத்துக்கு வந்தான் கருப்பன். 

 

மைதானத்துக்கு வந்தும் இளமதியை விட்டு விலகாமல் கருப்பன் அவளுடனே நின்றிருந்தான் நந்தினி பொங்கல் கூடையுடன் பொங்கல் வைக்க தன் தாய் பெரியப்பொண்ணுவுடன் அங்கே வந்தாள் கருப்பன்-மதி இருவரும் ஜோடியாக நிற்பதை பார்த்து முறைத்து வைக்க கருப்பன் அவளை கண்டு கொள்ளவேயில்லை. 

 

பெரியப்பொண்ணுவும் அவளை பார்த்து முறைத்து கொண்டே அடுப்பை பற்ற வைத்து பொங்கல் வைக்க இளமதிக்கு தான் அவர்களின் முன்னே நிற்க ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தது ஆனால் அவள் கணவன் மிகவும் சாதரணமாக தான் இருந்தான்

இளமதியுடன் வாழ ஆரம்பித்தது தெரிந்தால் தான் தன் அக்கா அவரின் மனதை மாற்றிக் கொள்வார் என்று நினைத்தான். 

 

“என் மகள் வாழ்க்கையை கெடுத்துட்டு எப்படி என் முன்னாடியே வந்து ஜோடியா நிக்குறா பாரு பாதகத்தி இவள் எல்லாம் நல்லா இருப்பாளா” என்று பெரியப்பொண்ணு புலம்பிக் கொண்டே கண்ணீருடன் பொங்கல் வைக்க 

“அம்மா நீ அழாத அவளுக்காக நான் ஒன்னு ரெடி பண்ணி வச்சிருக்கேன் இதை பாரு” என்று தன் போனில் இருந்த எதையோ காட்டினாள் நந்தினி அதை பார்த்தவர் அதிர்ச்சி குறையாமல் “இது எப்போ எடுத்தது” என்று கேட்க 

“அது நம்ம சுப்பையா மாமா பொண்ணு அதே காலேஜ்ல தான் படிக்குறா அவள் தான் எடுத்து கொடுத்தா இவளும் அந்த ஆளும் ரொம்ப நெருங்கி பழகுவாங்களாம் நேரம் வரும் போது நமக்கு இது உதவும்” என்றாள். 

 

“இப்போ தான் டி நீ என் பொண்ணுன்னு நிரூபிச்சிருக்க இது ஒன்னு போதும் அவளை துரத்த” என்றார் வன்மத்துடன் அதன் பின் அனைவரும் பொங்கல் வைத்து முடிக்க மாலை ஆனது பொழுது சாயும் வேளையில் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். 

 

இறுதியாக கருப்பன் இளமதியை தனக்கு தெரிந்தவர்களுடன் அனுப்பி வைத்துவிட்டு ஊர் பெரியவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தான் இரவு நேரம் அந்த காட்டுப்பாதையில்  வழியே நடந்து வந்து கொண்டு இருந்தவன் பின்னே ஒரு நால்வர் பின் தொடர்ந்தனர். 

 

முன்னே நடந்து சென்று கொண்டிருந்த கருப்பன் தன் பின்னே காய்ந்த சருகுகள் மிதி படும் சத்தத்திலேயே அறிந்து கொண்டான் தன் பின்னே யாரோ பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டான் இன்னும் பொறுமையாக கருப்பன் நடந்து சென்றவன் இருள் சூழ்ந்த ஒரு மரத்தின் அருகே செல்லும் போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது கருப்பன் அங்கே நின்று திரும்பியவன் சிங்கத்தை போன்று ஒரு பார்வை அவர்களை பார்க்க ஏற்கனவே வானம் இருட்டி இருக்க மழை தூர ஆரம்பித்தது. 

 

அந்த நால்வரும் அவனை சூழ்ந்து நின்று கொண்டனர் கருப்பன் அங்கிருந்த யாருக்கும் அஞ்சாமல் தன் வேட்டியை மடித்து கட்டியவன் முழுக்கை சட்டையை மடித்து விட்டு கொண்டு சண்டைக்கு தயாரானான். 

 

“யார்ரா நீங்க எல்லாம்” என்று கருப்பன் அவர்களை பார்த்து கேட்டுக் கொண்டே இருக்க “நாங்கெல்வாம் நாகராஜ் அண்ணா ஆளுங்க உன்னை கொன்னு புதைச்சுட்டு வர சொன்னாரு அண்ணன்” என்க கருப்பன் இன்னும் கோபத்துடன் அவர்களை பார்த்து முறைத்தான்.

 

“அந்த நாய் சொன்னுச்சுன்னு நீங்க எல்லாரும் என்னை கொல்ல வந்திங்களா உங்களை வெட்டி கல்லுப்பாறையில புதைக்குறதுக்குள்ள இங்கே இருந்து ஓடிப் போய்டுங்க” என்றான் கருப்பன் மீசையை முறுக்கி விட்டு கொண்டே கர்ஜனையான குரலில். 

 

அவனை பார்த்து பயந்து ஓடாமல் நால்வரும் அங்கேயே நிற்க அதில் ஒருவன் அருவாளுடன் கருப்பனை நெருங்கி வர 

கருப்பன் ராவணன் தன் எதிரிகளை வேட்டையாடுவதை போல சினத்தோடு அவன் அருகில் நெருங்கி அசால்ட்டாக அவனை தூக்கி தரையில் வேகமாக போட அவன் முதுகில் பலமாக அடி பட “அம்மா” என்று கத்தினான் மற்றவர்கள் கருப்பனை பார்த்து பயம் கொள்ள நரம்புகள் புடைக்க முகம் சிவக்க கோபத்துடன் நின்றிருந்தான். 

 

இரண்டாவதாக ஒருவன் கருப்பனை நெருங்கி வந்து அவன் மீது அருவாளை வீச போக அடுத்த நொடி கருப்பன் அவன் கையை பிடித்து வளைத்து அவன் முகத்தில் ஓங்கி குத்தினான் அவன் முகமே ரத்தமாக மாற மூன்றாவதாக இருந்தவன் பயந்து நடுங்க ஆரம்பித்தான். 

 

“அண்ணா எங்களை மன்னிச்சிடுங்க காசுக்காக ஏதோ தெரியாம வந்துட்டோம் 

பிள்ளைக் குட்டிக்காரன் அண்ணா நான் எங்களை மன்னிச்சி விட்டுருங்க” என்று அவன் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டு இருக்க கருப்பனின் பின்னே வந்த ஒருவன் தன் கையில் இருந்த பெரிய அரிவாளால் கருப்பனை வெட்ட பின்னிருந்து கையை ஓங்கி கொண்டு வர கருப்பன் திரும்பி பார்க்காமலேயே அவனின் கைப்பிடித்து தடுத்தவன் தன் காலை உதறிவிட்டு திரும்பி நின்று அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து அவனை மீண்டும் தாக்க ஆரம்பித்தனர். 

 

கருப்பன் அவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தான் இறுதியாக அனைவரையும் அடித்து வீழ்த்த மூலைக்கு ஒருவராக விழுந்து கிடந்தனர் அவன் பலத்துக்கு அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை தடுமாறினர். 

 

கருப்பன் அங்கிருந்து இறுதியாக நடந்து போக அவனின் பின்னே ஒருவன் ஓடி வந்து அவன் முதுகில் வெட்ட வலியுடன் திரும்பிய கருப்பன் தன்னை காத்துக்கொள்ள அவன் கையில் இருந்த அருவாளை பிடுங்கி அவன் கழுத்தில் ஓங்கி வெட்டினான் அவன் கழுத்தில் வெட்டு ஆழமாக விழுந்து விட ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்து துடித்தவன் அதே இடத்தில் இறந்து போனான். 

 

அந்த நேரம் அங்கு வந்த நாகராஜன் 

“அடப்பாவி கொலையே பண்ணிட்டியா” என்று ஊரை கூட்ட அனைவரும் அங்கே ஓடி வந்தனர் கருப்பன் கையில் அருவாளுடன் நிற்க இறந்து போனவனின் மனைவி தன் பிள்ளைக்களோடு அங்கு ஓடி வந்து கதறி அழ ஆரம்பித்தாள். 

 

நாகராஜன் போலீஸ்க்கு போன் செய்திருக்க கருப்பனின் கையில் விலங்கு மாட்டி அழைத்து செல்ல நாகராஜன் அவன் அருகில் வந்தவன்

“பங்காளி எனக்கு தெரியாதா நீ எவ்வளவு பெரிய பலசாலின்னு இப்படி எதாவது ஒன்னு நடக்கும் எனக்கு முன்னாடியே தெரியும் இனி இந்த ஊருக்கு தலைவர்ன்னா அது நான் ஒருத்தன் மட்டும் தான்” என்றான் சிரிப்புடன். 

 

போலீஸ் அங்கே எஞ்சி இருந்த மூவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க “ஜாதி வெறியில இந்த ஊர் தலைவர் வெட்டி கொன்னுட்டான் சார்” என்றான் அழுது கொண்டே ஒருவன் 

அவர்கள் அனைவரையும் ஜீப்பில் ஏற்ற இறுதியாக கருப்பனும் ஏறினான். 

 

இளமதி அவளின் தாய் கருப்பனின் தாய் தந்தை பெரியப்பொண்ணு நந்தினி என்று அனைவரும் விஷயம் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்திருந்தனர் கருப்பனுக்கு இளமதியை பார்க்கும் போது மிகவும் மனம் வலித்தது. 

 

ஜீப் அங்கிருந்து செல்ல “மாமா மாமா” என்று கத்தி அழுது கொண்டே அவளும் அவன் பின்னேயே ஓடினாள் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் தவிப்புடன் நின்றவள் தன் மாமனை அழுத விழிகளுடன் பார்த்து கொண்டே நிற்க 

கண்கள் சரியாக தெரியாமல் அனைத்தும் மங்கலாக தெரிந்தது அப்படி மயங்கி கீழே சரிந்தாள். 

 

இதை தூரத்தில் இருந்து பார்த்த சின்னப்பொண்ணு அவள் அருகில் ஓட அனைவரும் அவள் அருகில் வந்தனர் தண்ணீர் தெளித்து இளமதியை எழுப்ப 

அவளும் மெல்ல கண்ணை திறந்தாள். 

 

அந்த ஊரில் இருக்கும் மருத்துவச்சி ஒருத்தி அவளின் கைப்பிடித்து பார்த்தார் 

“எல்லாம் நல்ல விஷயம் தான் நம்ம மதி உண்டாகி இருக்காள்” என்றார் அதை கேட்ட இளமதியின் முகம் மலர்ந்தது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உலகமெல்லாம் வியாபாரிகள்

 (1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11 அத்தியாயம்-9 அடுத்தநாள்...

The post உலகமெல்லாம் வியாபாரிகள் appeared first on சிறுகதைகள்.

அருணோதயம்

 சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை.  அறையில் அமைதி.  கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள்,...

The post அருணோதயம் appeared first on சிறுகதைகள்.

அந்த ஒரு நாழிகை!

 மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி,...

The post அந்த ஒரு நாழிகை! appeared first on சிறுகதைகள்.

மருக்கொழுந்து மங்கை

 (1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15...

The post மருக்கொழுந்து மங்கை appeared first on சிறுகதைகள்.

அத்தியாயம் 36     திருவிழாவுக்கு ஒருநாள் முன்னமே தென்னரசு குடும்பத்துடன் ரா…

அத்தியாயம் 36
 
 
திருவிழாவுக்கு ஒருநாள் முன்னமே தென்னரசு குடும்பத்துடன் ராயனின் வீட்டுக்கு வந்துவிட்டான். பாலாஜியும் நதியாவும் அன்றிரவுதான் வீட்டுக்கு வந்திருந்தனர். கோமளமோ இன்று நதியாவையும் பாலாஜியையும் பார்த்து முகத்தை தூக்கவில்லை பாலாஜியை மட்டும் ஒரு பார்வை பார்த்தவர் அறைக்குள் சென்றுவிட்டார்.
 
“வாங்கனு கேட்டா இவங்க கிரீடம் இறக்கிடுமோ” என்று முகத்தை வெட்டிக்கொண்டாள் நதியா.
 
ராயனோ “வாங்க மாப்பிள்ளை, வாடா பாப்பா” என்று இருவரையும் கைகூப்பி வரவேற்றான்.
 
“என்னடா புதுசா வணக்கம் எல்லாம் வைக்குற நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டீஸ்” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டான்.
 
“நீ எங்க வீட்டு மாப்பிள்ளைல மரியாதை கொடுக்கணும்டா” என்றவனோ “பாப்பா ரெண்டு பேரும் சாப்பிட்டு உன்னோட அறைக்கு மாப்பிள்ளையை அழைச்சிட்டு போ காலையில கோவிலுக்கு போகலாம் நான் முல்லையை பார்த்துட்டு வந்துடறேன்” என்று சென்று விட்டான்.
 
கண்ணன் பால்பண்ணையில் வேலை இருக்க இன்னும் வீட்டுக்கு வரவில்லை.
 
தீபாவோ “வா நதியா, வாங்க பாலாஜி அண்ணா ஏன் நேத்து வரலை நீ வருவனு உன் ரெண்டு அண்ணன்களும் வாசலையே பார்த்துட்டிருந்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட உட்காருங்க” என்றாள் பாசம் தோய்ந்த குரலில்.
 
“இது நம்ம தீபா அண்ணியா இப்படியெல்லாம் கூட இவங்களுக்கு பாசமா பேசத்தெரியுமா” என்று சந்தேகத்துடன் சாப்பிட உட்கார்ந்தவள்  “நேத்து எங்க வீட்டுல மாடு கிடாரி கண்ணு போட்டுச்சு அதான் வரமுடியல” என்றபடியே சாப்பிட ஆரம்பித்தாள்.
 
“பாலாஜி அண்ணா சாம்பார் நான்தான் வச்சேன் எப்படியிருக்குனு சொல்லுங்க” என்று பாலாஜியின் தட்டில் பார்த்து பார்த்து பரிமாறினாள்.
 
நதியாவுக்கு தீபாவின் அனுசரிப்பு விதத்தை கண்டு தன் கண்களையே  நம்ப முடியவில்லை எப்படியோ நம்ம குடும்பத்துக்கு தகுந்தாப்பல மாறினா சரிதான் என்று பெரும்மூச்சு விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
 
அடுத்தநாள் காலையில் ராயன் குடும்பம் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். நடக்க போகும் விபரீதம் தெரியாமல். முல்லைக்கு வேறு இடுப்பு வலித்துக்கொண்டிருந்தது ஆனால் அவளது வலியை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றினார்கள் முல்லையும் தீபாவும்.
 
மாவிளக்கு தட்டுடன் முல்லையால் நடக்க முடியவில்லை. “தீபா அக்கா மாவிளக்கு நீங்க எடுத்துட்டு வரீங்களா?” தீபாவிடம் மாவிளக்கு தட்டை கொடுத்து “விளக்கு அணையாம பார்த்துக்கோங்க” என்றவளோ வலியில் பெரும்மூச்சு விட்டாள்.
 
“ஏய் முடியலனா வீட்டுல இருந்துக்க வேண்டியதுதானே?”
 
“அக்கா நான் வீட்டுல இருந்தா அழகு அம்மாவும் நீலகண்டன் அப்பாவும் என்னை பார்த்துக்கணும்னு என்கூடவே இருந்துடுவாங்க.. எனக்கும் சாமியை கும்பிட்டா மனசும் நிம்மதியா இருக்கும் பிரசவ நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் பயந்து வருது அக்கா” என்றாள்.
 
“பயப்படாதே ராயன் மாமா எல்லார்க்கும் நல்லது நடக்க வைக்குறாரு அவர்  நல்ல மனசுக்கு உனக்கு சுக பிரசவம் தான் நடக்கும் கவலைப்படாதே” என பயந்திருந்த முல்லைக்கு தைரியம் கூறினாள் தீபா. 
 
கோவிலுக்குள் பூஜை முடிந்து பரிவட்டம் ராயனுக்கு மட்டும்தான் கட்டுவார்கள் ஆனால் இந்த முறை மருமகன்களுக்கும் தென்னரசு கண்ணன் என்று அனைவருக்கும் பரிவட்டம் கொண்டு வர சொல்லியிருந்தான் ராயன்.  சொந்தத்திற்குள் பாகுபாடு வரக்கூடாதென.
 
மாவிளக்கு தட்டு யார் எடுத்து வருகிறார்கள் என்று தலையை எட்டி பார்த்தார் கோமளம். 
 
தீபா எடுத்து வருவதை கண்டு என் மருமக தான் எடுத்துட்டு வரா என்று பெருமை பட்டுக் கொண்டார். வீட்டு மூத்த மருமகள் தான் மாவிளக்கு எடுத்து வரணும் ராயன் குடும்ப வழக்கம். எனக்கு கிடைத்த மரியாதை முல்லைக்கு போக கூடாது என் மருமகள் தீபாவுக்கு தான் கிடைக்கணும் என்று சுயநலமாக யோசித்தார் கோமளம். 
 
சாமிக்கு முன்னால் வந்ததும் மாவிளக்கு தட்டை முல்லை கையில் கொடுத்து கோவில் பூசாரியிடம் கொடுக்க சொன்னாள். 
 
“நீங்க கொடுங்க அக்கா” என்றாள் முல்லை. 
 
“நீதான் நம்ம வீட்டு மூத்த மருமக நீதான் கொடுக்கணும்” என்றாள் மலர்ந்த முகத்துடன். 
 
‘இவளுக்கு அறிவே இல்ல கிடைச்ச மரியாதையை விட்டு கொடுக்குறா’ என்று தீபாவின் மேல ஆத்திரப்பட்டார். 
 
தையல்நாயகியோ “ரெண்டு பேரும் சேர்த்து கொடுங்கம்மா” என்றதும் கோமளத்திற்கு முகம் விழுந்து விட்டது. நாம என் இப்படி யோசிக்கல அவர் மனம் கொஞ்சம் வருத்தப்பட்டது.
 
முதலில் ராயனுக்கு பரிவட்டம் கட்டி முடித்து மற்றவர்களுக்கு கட்டி முடித்தனர். கோமளமோ தன் மகனுக்கு பரிவட்டம் கட்டிவிட்டார்கள் என்று பூரிப்பில் நின்றிருந்தார். முல்லையால் ரொம்ப நேரம் நிற்க முடியவில்லை “கண்ணா பார்த்துக்கோ நான் முல்லையை வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்” என்று அழைத்து வந்துவிட்டான் ராயன்.
 
முல்லையோ சோர்ந்து படுத்துவிட்டாள். “பெயின் இருக்காடி சொல்லு ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று மனைவியின் தலையை வருடினான்.
 
“இல்ல மச்சான் கொஞ்சமா வலி இருக்கு கொஞ்ச நேரம் படுத்து எழுந்தா சரியா போகும்” என்றவளை மடியில் படுக்க வைத்து அவளது முதுகை வருடிக்கொடுத்தான்.
 
முல்லையோ “மச்சான் சாய்ந்தரம் கோவிலுக்கு என்னையும் கூட்டிட்டு போங்க கடைத்தெருவை எல்லாம் சுத்தி பார்க்கணும்” என ராயனை நிமிர்ந்து பார்த்தாள்.
 
“கடைத்தெருவுல கூட்டமா இருக்கும் அடுத்த வருசம் திருவிழா கடையை பார்க்கலாம்டி” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
 
“மச்சான் என்னோட ஆசையை நிறைவேத்தமாட்டீங்களா?” என்றாள் சிணுங்கலாக.
 
“சரி உனக்கு வலி இல்லைனா கூட்டிட்டு போறேன் தூங்கு” என்றதும் சில நொடிகளில் உறங்கியும் இருந்தாள்.
 
ராயன் குடும்பத்தினர் மதியம் கோவிலில் சாப்பிட்டு ராயனுக்கும் முல்லைக்கும் சாப்பாடு எடுத்து வந்தனர்.
 
மதியம் எழுந்து சாப்பிட்டு முடித்த முல்லையோ  “சாய்ந்தரம் கண்டிப்பா கடைதெருவுக்கு போகணும் மச்சான்” என்றவளை முறைத்தவனோ “சொன்னா கேட்கமாட்ட புள்ள” என்று மிரட்டியதும் முல்லையின் முகம் வாடியது.
 
“சரி சரி கூட்டிட்டு போறேன் முகத்தை தூக்காதே” என்றவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
 
“முத்தம் கொடுத்து என்னை மயக்கிவிட பார்க்குற” என்றான் மந்தகாச புன்னகையுடன். 
 
“ஆமா நான் மயக்காம வேற யாரு உங்களை மயக்குவாங்க” என்று ராயனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் முல்லை.
 
மாலையானதும் மீண்டும் குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்றான் ராயன்.
 
கடைத்தெருவில் முல்லை கேட்பதெல்லாம் வாங்கிக்கொண்டிருந்தான். அவனது கண்கள் நாலாப்புறமும் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தது.
 
ராயன் கண்ணுக்கு ஒருவன் புதிதாக தெரிய தென்னரசுவிற்கு போன் போட்டு “டேய் யாரோ புது ஆள் திருவிழா கூட்டத்துக்குள்ள வந்துட்டானுங்க நம்ம குடும்பத்து ஆளுங்க மேல ஒரு கண்ணு வை கண்ணனையும் உசார் படுத்து நான் பாலாஜிக்கு போன் போடுறேன்” என்று எச்சரிக்கை செய்தான்.
 
“நான் பார்த்துக்குறேன் அண்ணா” என்றவனோ அடுத்த நிமிடம் கண்ணனுக்கு விசயத்தை சொல்ல அவனும் உஷாராக குடும்பத்தை கண்காணித்தான். தீபா கல் தடுக்கி விழப்போனவளின் கையை இறுக்கமாய் பிடித்த கண்ணனோ “ஹேய் கூட்டத்துல பார்த்து நடக்கணும்பா” என்று தீபாவின் தோளில் கையை போட்டுக் கொண்டான் கண்ணன்.
 
“சரிடா உன் முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு எனி ப்ராப்ளம்?” என்றாள் கண்ணை சுருக்கி.
 
“ஒண்ணுமில்லடி” தீபாவின் கையை பிடித்துக்கொண்டான் கண்ணன்.  
 
நதியாவோ கடைத் தெருவில் விற்கும் குல்ஃபியை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வந்தாள்.
 
முல்லை நடக்க முடியாமல் தடுமாற “நான் சொல்ற பேச்சை கேட்கலதானே இப்போ பாரு நடக்கவே கஷ்டப்படுற” என்று கோப முகத்தை  காண்பித்தான்.
 
திடீரென லைட் எல்லாம் அணைந்தது ராயன் ஏதோ சரியில்லையே என்று முல்லையை கையில் தூக்கிக்கொண்டான். அடுத்து பூம் என்று குண்டு வெடித்தது.  
 
மக்கள் கூட்டம் சிதறி ஓடியது. ராயனோ முல்லையை தூக்கிக்கொண்டு ஓடினான். 
 
“டேய் ராயா நில்லுடா என்னையவா ஊருக்குள்ள தலைகாட்ட முடியாத பண்ணின உன் குடும்பத்தை அழிக்கப்போறேன் பாரு” என்று நாராசமாய் சிரித்து ராயன் பின்னால் ஓடினார் ராஜமாணிக்கம்.
 
முல்லையை உட்கார வைத்து காரை லாக் பண்ணிவிட்டு வேஷ்டியை மடித்துக்கட்டி திரும்பினான் ருத்ர முகத்துடன். 
 
“டேய் உன் குடும்பத்தை வேரோடு அழிக்க போறேன்… என் ஆளுங்க உன் குடும்பத்தை பிடிச்சு வைச்சுருப்பாங்க எல்லாரும் ஒண்ணா கைலாசம் போங்கடா” என்று கையில் வைத்திருந்த கட்டையை தூக்கி ராயன் மேல் வீசினார் ராஜமாணிக்கம்.
 
“உன்னால ஒரு மயிரும் பிடுங்க முடியாதுடா கிழட்டு நாயே உன்னையெல்லாம் அப்போதே அடிச்சு கொண்டிருக்கணும் பாவம் பார்த்து விட்டேன் அது என் தப்பு தான்” என ஆத்திரப்பட்டு பேசியவன் கட்டை தன் பக்கம் வரும் நேரம் தள்ளி நின்றான்.
 
ராஜமாணிக்கத்தின் ஆட்கள் ராயனின் குடும்பத்தை சுற்றி வளைத்தனர். பெண்கள் அனைவர் முகத்திலும் திகில் பரவியது.
 
“நாங்க இருக்கோம் பயப்படாதீங்க” என்று மீசையை முறுக்கினார்கள் கண்ணன், தென்னரசு, பாலாஜி மூவரும்.
 
ராஜமாணிக்கத்தின் ஆட்களை அடி பின்னி எடுத்து தாக்கினார்கள்.
 
முல்லைக்கு பிரசவ வலி வந்து விட்டது. “மச்சான் இடுப்பு வலிக்குது” என்று கதறினாள். அமுதாவோ “என் பொண்ணை காப்பாத்துங்க” என்று கூக்குரலிட்டார்.
 
நீலகண்டனும் அழகுவும் எப்படியோ கூட்டத்தை தள்ளிக்கொண்டு ராயனின் காருக்கு பக்கம் போக “மாமா முல்லையை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போங்க இந்த நச்சு பாம்பை நசுக்கி போட்டு வரேன்” என்றவனை “மச்சான் வாங்க எனக்கு பயமா இருக்கு நீங்களும் வாங்க” வலியில் கத்தினாள் முல்லை.
 
அமுதாவோ “நானும் வரேன் அக்கா” என்று அழகம்மைக்கு முன்னே மகளுடன் காரில் ஏறினார். 
 
கார் கதவின் கண்ணாடியின் மேல் கட்டையை தூக்கிப்போட்டான் ஒருவன் முல்லையை மடியில் படுக்க வைத்துக்கொண்டார் அமுதா.
 
ராயனை தாக்க அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடிவந்தார் ராஜமாணிக்கம்.
 
“ராயா” என்று பதறினார்கள் தெய்வநாயகமும் தையல்நாயகியும்.
 
கண்ணனும் பாலாஜியும் மற்றவர்களை அடித்துக்கொண்டிருந்தனர். தென்னரசுவோ அரிவாளோடு ராயனை தாக்கப்போகும் முன் ராஜமாணிக்கத்தின் பின்னே சென்றவன் அவரின் தலையில் கட்டையால் ஓங்கி  அடித்தான். 
 
ராஜமாணிக்கத்தின் தலையில் இரத்தம் கொட்டியது தலையை பிடித்துக்கொண்டு அரிவாளோடு திரும்பி பார்த்து “நீயாடா என்னை அடிச்ச இந்த ராயன் என்னை பத்தி கட்டுகதை கட்டி உன்னை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான் இவனை சும்மா விடமாட்டேன் ராயனை வெட்டுறேன் பாருடா” என்று ராயனின் கழுத்துக்கு அரிவாளை கொண்டுச் செல்ல “ராயா” என்று அனைவரும் பதறினார்கள்.
 
தென்னரசு இனிமேல் இவரை விட்டு வைக்க கூடாதென்று ராஜமாணிக்கத்தின் முதுகில் கட்டையால் ஓங்கி அடிக்கவும் சுருண்டு விழுந்தார். 
 
“நீயெல்லாம் மனுசனா பொண்ணுங்களை போதை பொருளா பார்த்திருக்க வேலைக்கு வர பொண்ணுங்க கிட்ட அசிங்கமா பேசியிருக்க உன்னையெல்லாம் அப்பான்னு சொல்லிக்க கேவலமா இருக்கு… உன்னை  என்ன பண்ணனும் தெரியுமா” என்று ராஜமாணிக்கத்தின் அந்தரங்கத்தில் தாக்கி விட்டான் அவரால் இனிமேல் எந்த பொண்ணுக்கும் பாதிப்பு வராத வகையில்.
 
“தென்னரசுஊ” என்று ராஜமாணிக்கம் கண்ணை மூடினார். தென்னரசுவிற்கு வெறி அடங்கவில்லை இவன் இனிமே உயிரோட இருக்கவே கூடாது என்று அரிவாளை கையில் எடுத்ததும் அரிவாளை வாங்கி தூர போட்ட ராயனோ “பெத்த புள்ள கையில் நடு ரோட்டுல எப்போ அடி வாங்குனாரோ அப்பவே உன் அப்பா செத்த பாம்புக்கு சமம் உன் அப்பாவை வெட்டி நீ உன் கையை கறை ஆக்கிக்காதே”   என தென்னரசுவின் கோபத்தை  கட்டுப்படுத்திவிட்டு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து ராஜமாணிக்கத்தை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைத்தான் ராயன்.
 
அனைத்தும் முடிந்தது என்று நிம்மதியாக நின்றிருந்தனர் மக்கள். வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு கட்டி இருந்த கோவில் மாடு கயிறை அவிழ்த்துக் கொண்டு  தறிகெட்டுஓடியது.
 
கோமளம் பயந்து ஓட கோமளத்தை துரத்தியது அவரால் அவரது குண்டு உடலை தூக்கிக் கொண்டு ஓட முடியவில்லை. “யாராவது என்னை காப்பாத்துங்க” என்று சத்தம் போட்டவர் ஓட முடியாமல் கீழே விழப்போனவரை தாங்கிப்பிடித்தான் பாலாஜி.  
 
மாடு பாலாஜியின் முன்னே வந்து கொம்பை ஆட்டவும் “தம்பி பார்த்து” என்று பதறினார் 
 
“அத்தை நீங்க எழுந்து தள்ளி நில்லுங்க” என்று கோமளத்திற்கு கையை கொடுத்து தூக்கி விட்டான்.
 
கோமளமோ “தம்பி நீங்களும் தள்ளி வந்துடுங்க மாடு சீறி நிற்குது” என்றார் படபடப்புடன்.
 
“சும்மா நில்லுங்க அத்தை” என்றான் அதட்டலுடன்.
 
வாயை பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல அமைதியானார் கோமளம்.
 
ராயனும் கண்ணனும் தென்னரசுவும் மாடு இருக்கும் இடத்திற்கு வந்தவர்கள் பாலாஜியின் முன்னே கோவத்துடன் சீறி நின்ற மாட்டை கண்ட ராயனோ “டேய் மூணு பேரும் சேர்ந்து மாட்டை சூதானமா பிடிங்கடா”  என்றான் மாடோ பின்னங்காலை உதறி மண்ணை கிளறியது.
 
பாலாஜியும் ராயனும் மாட்டை அடக்க முற்பட்டனர் மாடு இன்னும் சீறலாக இருக்க நால்வரும் சேர்ந்து மாட்டை பிடித்து கட்டி வைத்தனர். 
 
பயந்து நின்ற கோமளத்திற்கு தண்ணீர் குடிக்க கொடுத்தான் பாலாஜி.
 
தண்ணீரை வாங்கி குடித்த கோமளமோ “தம்பி நான் உங்களை ஒரு முறை கூட மதிக்காம தான் நடந்துக்கிட்டேன் உங்க மனசை காயப்படுத்தி பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசிட்டேன் நீங்க மனசுல எதையும் வச்சுக்காம என்னை மாட்டுகிட்டயிருந்து காப்பாத்திட்டீங்க மனுஷங்களை மதிக்காம இருந்ததுக்கு கடவுள் எனக்கு கொஞ்சம் நேரம் தண்டனை கொடுத்துட்டாரு” என்று கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டார் கோமளம்.
 
“அத்தை நீங்க பெரியவங்க என்னை பார்த்து கையெடுத்து கும்பிடணுமா நீங்க பேசினதை நான் பெருசா எடுத்துக்கல விடுங்க” என்று கோமளத்தின் கையை பிடித்துக்கொண்டான்.
 
“என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை” என மனதார மன்னிப்பு கேட்டார்.
 
“அத்தை என்ன மன்னிப்புனு பெரிய வார்த்தை பேசிக்கிட்டு நீங்க எனக்கு அம்மா மாதிரி” என்றான் உருக்கமான குரலில்.
 
“என் மூத்த மருமக முல்லையை பார்க்க போகணும் எல்லாரும் வாங்க போகலாம்”  என்று கோமளம் உரக்க பேசியதும் அனைவரும் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றனர்.
 
பிரசவ அறையில் “என் மச்சானை வரச்சொல்லுங்க டாக்டர் வலிக்குது” என்று கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தாள் முல்லை.
 
“சத்தம் போடக்கூடாதுமா தலை தெரியுது பாரு புஷ் பண்ணுங்க” என்றார் சிறு அதட்டலுடன்.
 
“என்னால வலி தாங்க முடியலை மச்சான்ஆ” என்று அவள் மீண்டும் கத்த ராயன் பிரசவ அறைக்குள் நுழைந்து விட்டான்.
 
ராயனை கண்டதும் “மச்சான் என்னால முடியல” என்று கதறினாள்.
 
அவளது தலையை வருடிக்கொடுத்து “டாக்டர் சொல்றதை கேளு கொஞ்சம் புஷ் பண்ணு புள்ள” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
 
“என்னால முடியல மச்சான்” என்றவளோ அடுத்த நொடி தன் பலத்தை திரட்டி மூச்சை இழுத்து விட்டு “மச்சான்” என்று சத்தம் போட்டாள் அடுத்த நிமிடம் ராயனின் மகன் பூமியில் பிறந்துவிட்டான்.
 
டாக்டரோ “பாய் பேபி ராயன்” என்றார் சந்தோசத்துடன்.
 
ராயன் முல்லையின் நெற்றியில் முத்தமிட்டதும் அவள் மெல்ல கண்மூடினாள். 
 
“டாக்டர்” என்று பதறினான்.
 
“ஒண்ணுமில்லை பதறாதீங்க சாதாரண மயக்கம்தான் குழந்தையை சுத்தம் பண்ணிக்கொடுப்பாங்க” என்ற டாக்டரோ முல்லையை சுத்தப்படுத்த துவங்கினார். 
 
முல்லையை நார்மல் வார்டுக்கு மாற்றியதும் 
குழந்தையுடன் ராயன் வெளியே வந்ததும் நீ நான் என்று போட்டி போட்டு குழந்தையை பார்த்தனர்.
 
“பெரியம்மா உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான்” என்றவுடன் “சந்தோசம் பா என்கிட்ட கொடு” என்று வாங்கிக் கொண்டார் கோமளம்.
 
“அப்படியே எங்க அப்பா ஜாடைல இருக்கான்ல  பெரிய அண்ணி” என்றார் அழகம்மை சந்தோசத்துடன்.
 
“ஆமா அழகு அப்படியே உரிச்சு வைச்சுருக்கான்” குழந்தையை பார்த்ததும் தன் கெட்ட குணம் எல்லாம் மறைந்து போனது அவருக்கு.
 
குழந்தை பசியில் வாயில் விரலை வைத்து சப்பியதும் 
 
“முல்லை கிட்ட கொடுங்க பசியாத்தட்டும்” என்று பக்கம் நின்ற அமுதாவிடம் கொடுத்தார்  கோமளம்.
 
கோமளம் எங்கே தன் பேரன் மேல் கோபத்தை காட்டுவாரோ என்று பயந்து இருந்தார் அமுதா. ஆனால் மாறாக கோமளம் தன் பேரனை  கொஞ்சியதும் அமுதாவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
 
முல்லையை நார்மல் வார்டுக்கு கொண்டு வந்ததும் அமுதா குழந்தையுடன் முல்லை இருந்த வார்டுக்குள் சென்று முல்லையிடம் குழந்தையை கொடுத்து பசியாற்ற வைத்தார்.
 
குழந்தை பசியாறியதும் கொட்ட கொட்ட முல்லையை பார்த்தான் ராயனின் மகன். அமுதா வெளியே வரவும் ராயன் மட்டும் முதலில் உள்ளே சென்றான். 
 
“மச்சான் அப்படியே உங்களை போலவே இருக்கான் பாருங்க கண்ணு பாருங்க உங்களை போலவே” என்று கண்ணைச் சிமிட்டினாள்.
 
“தேங்க்ஸ் புள்ள” என்று அவள் பக்கம் குனிந்து முல்லையின் நெற்றியில் முத்தமிட்டு மகனின் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமிட்டு “என் பொண்டாட்டியை கொஞ்சம் கஷ்டப்படுத்திட்ட தங்கம்” என்று மகனை செல்லமாய் மிரட்டினான்.
 
ராயனின் மகனோ அவனை உற்று பார்த்து சிரித்தான்.
 
“என்ன ராயா நீ மட்டும் உன் குழந்தையை கொஞ்சினா போதுமா நாங்களும் கொஞ்சுறோம் தள்ளி நில்லு” என்ற அழகம்மையோ முல்லையின் மடியில் இருந்த குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டார். 
 
“அத்தை மருமகனை என்கிட்ட கொடுங்க” என்று குழந்தையை வாங்கி “தங்கம் அத்தையை பாரு” என்று குழந்தையின் கன்னம் தொட்டு கொஞ்சினாள் நதியா.
 
“அடுத்த வருஷம் புள்ளையை பெத்து கொடு ராயன் மகனுக்கு ஜோடியா” என்று நதியாவின் தோளில் மெதுவாய் இடித்தார் அழகு.
 
“ஆமா பின்னே என் மருமகனை யாருக்கும் விட்டு தரமாட்டேன். எனக்கு பொண்ணு தான் பிறக்கும். என் மகளை என் மருமகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன். என் உரிமையை யாருக்கும் விட்டு தர மாட்டேன்” என அழுத்தி கூறியவள் கோமளத்தை பார்த்தாள். 
 
தீபாவோ “ஏன் நதியா என் மகனுக்கு உன் மகளை கொடுக்க மாட்டியா?” என்று கிண்டலாக கேட்கவும் 
 
“ரெண்டு பொண்ணு பெத்துப்பேன் அண்ணி நீங்க கவலைப் படாதீங்க” என்றவளோ  பாலாஜியை பார்த்தாள்.
 
அவனோ மானத்தை வாங்குறாப்பா என்று பெருமூச்சு விட்டான்.
 
கோமளம் அமைதியாக இருக்கவும் “ஏன்மா உங்க வீட்டு பேரனை என்வீட்டுப் பொண்ணுக்கு தரமாட்டீங்களா?” என்றாள்.
 
“உனக்கு இல்லாத உரிமையாடி புள்ளைய பெத்து போடு என் பேரன்களுக்கு நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன்” என்று வாயெல்லாம் பல் தெரிய சிரித்தார் கோமளம்.
 
தாயும் மகளும் சேர்ந்து விட்டனர். தாயின் கோபத்தையும் சாபத்தையும் மகளிடம் எத்தனை நாள் காட்டமுடியும். மகள் செய்த தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கோமளம்.
 
“அடுத்த வருசத்துல இருந்து குழந்தை பெத்துக்க ஆரம்பிக்குறேன் பாருங்க” என்றதும் “அதுக்குத்தானே பெரியவங்க இருக்கோம்” என்றனர் வீட்டு பெரியவர்கள்.
 
தென்னரசுவோ “நானும் பையன் பெத்து தரேன் பாலாஜி மச்சான் எனக்கு ஒரு பொண்ணை பெத்து கொடுத்துடு என் வீட்டுக்கு மருமகளா அழைச்சுட்டு போவேன்” என்றான்.
 
“உன் தங்கச்சிக்கு ஓகேனா எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல மச்சான்” என்றான் மகிழ்ச்சியாக.
 
“எனக்கு டபுள் ஓகே மாமா” என பாலாஜியை பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்.
 
முல்லையோ “அடுத்து நான் பொண்ணு பெத்து கொடுப்பேன் நதியா நீ பையனை பெத்து கொடு” என்றாள் அவள் பங்குக்கு.
 
“முல்லை ராயன் ஜாதகத்துல பையனுக்கு தான் வாய்ப்பு அதிகம் இருக்காம்” என்று அழகம்மை விளையாட்டாய் பேச 
 
“பொண்ணு பிறக்குற வரைக்கும் விடமாட்டோம் அத்தை” என்று கன்னக்குழி தெரிய சிரித்து  முல்லையை பார்த்து கண்ணைச் சிமிட்டினான்.  முல்லையும் கண்ணைச் சிமிட்டினாள். அங்கே சந்தோசம் நிறைந்திருந்தது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை… நாமும் சந்தோசமாய் விடைபெறுவோம் பிரண்ட்ஸ் அடுத்த கதையில் விரைவில் சந்திப்போம்.
 
நன்றி…
 
ஆறு வருடங்களுக்கு பிறகு …
 
ராயன் தனது பால்பண்ணை  உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தொழில் வட்டாரத்தை பன் மடங்கு பெருக்கி இருந்தான். கண்ணன் ராயனுக்கு துணையாக இருந்து கொண்டான். ராயனை கேட்காமல் ஒரு துரும்பை கூட அசைக்கமாட்டான் கண்ணன்.
 
ராயன் பாலாஜிக்கு தொழிலில் தோள் கொடுத்து தூக்கி விட்டான். ராயனிடமிருந்து சீர் பணம் ஒரு பைசா வாங்க மறுத்துவிட்டான் பாலாஜி. தன் சொந்த உழைப்பில்  பால்பண்ணையை புதியதாக ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தான்.
 
ராயன் வீடு முழுக்க குழந்தைகளாக  நிறைந்திருந்தனர். 
 
ராயன் முல்லை மகன்கள் ஆரவ், அகரன், அதியன், அபிநாத் நான்கு பேர்.
 
கண்ணன் தீபா மகள்கள் பவன்யா, அதிரூபா, அவந்திகா…
 
பாலாஜி நதியாவின் மகள்கள் ஆதிரை, ஆதர்ஷினி மகன் அபிஜித்.
 
“ரெண்டு பொண்ணு போதும் கண்ணா  பேமிலி பிளானிங் பண்ணிடலாம்” என்ற தீபாவை  “அடுத்து பையனா பிறக்கும் சும்மா இருடி  எனக்கு பையன் வேணும்” என்று தீபாவை  பேமிலி பிளானிங் பண்ண விடவில்லை. தீபாவுக்கு அடுத்தும் பெண் பிள்ளைதான் பிறந்தது. 
 
கோமளமோ “அடுத்தும் உனக்கு பொண்ணு தான் டி பிறக்கும் நீ இப்பவே பேமிலி பிளானிங் பண்ணிக்கோ” என்றிருந்தார் மனதில் மகனுக்கு பையன் பிறக்கவில்லை என்று கவலை இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை கோமளம். 
 
சொந்தக்காரர்கள் அடுத்தும் கண்ணனுக்கு பொண்ணா என்று சலித்துக் கொள்ள “எத்தனை பொண்ணு பொறந்தாலும் என் மூத்த மகன் ராயன் இருக்கும் போது நான் கவலை படமாட்டேன் அவன் பசங்களை விட என் பேத்திங்க மேலதான் உயிராய் இருக்கான்” என்று பெருமை பீத்தி கொண்டார்.
 
தென்னரசு மகன் தியா, அர்ஷன்.
 
தென்னரசு ஆர்கானிக் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக் கொண்டிருந்தான். ராஜமாணிக்கத்தை தோப்பு வீட்டில் படுக்க வைத்திருந்தான். அவரால் எழுந்து நடக்க முடியாது. ஒருத்தர் தயவு இல்லாமல் சாப்பாடு கூட சாப்பிட முடியாத நிலையில் இருந்தார். பண்ணிய பாவங்களுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தார். பெத்த கடனுக்காக ஒரு முறை பார்த்து விட்டு வருவான். மகனிடம் பேசுவதற்கு துடிப்பார் ராஜமாணிக்கம்.  அவரால் பேசவும் முடியாது தென்னரசு பேசவும் மாட்டான். ராஜமாணிக்கத்தை பார்த்துக்கும் ஆளிடம் மட்டும் பேசிவிட்டு வந்து விடுவான்.
 
பூங்கொடிக்கு மான்டிசரி ஸ்கூல் வைத்து கொடுத்து விட்டான் தென்னரசு. 
 
குமுதா தியா அர்ஷனை பார்த்துக்கொண்டார்.
 
ப்ரனேஷ் அரசி முகூர்த்தத்துக்கு மண்டபத்தில் ரெடியாகிக் கொண்டிருந்தனர் ராயனின் குடும்பம்.
 
குட்டிஸ்கள் அனைவரையும் பெரியவர்கள் குளிக்க வைத்து ரெடி பண்ணி மண மேடைக்கு அழைத்து வந்தனர்.
 
கண்ணன் தீபாவும் ரெடியாகி மணமேடைக்கு முதலில் வந்து விட்டனர். “அத்தை அம்மா எப்போ வருவாங்க?” என்று பாலாஜியின் கடைசி மகன் தீபாவிடம் கேட்கவும் 
 
“இதோ அம்மா வந்துட்டா பாரு செல்லம்” என்று அபியை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் தீபா.
 
பாலாஜியும் நதியாவும் மணமேடைக்கு வந்துவிட்டனர்.
 
அடுத்து தென்னரசுவும் பூங்கொடியும் வந்துவிட ராயனும் முல்லையும் மட்டும் மிஸ்ஸிங். 
 
குழந்தைகள் “ராயன் மாமா, முல்லை அத்தை இன்னும் வரலையே” என்று மண்டபத்தை சுற்றி பார்த்து தேடினார்கள்.
 
“விடுங்க மச்சான் இன்னும் புது மாப்பிள்ளைனு நினைப்பு புடவை மடிப்பு எடுக்க உதவி பண்ண சொன்னா அங்க இங்க கையை வைக்குறீங்க”  என்று செல்ல கோபம் கொண்டு அவன் கையை தட்டி விட்டாள் முல்லை. 
 
“வயித்துக்குள்ள புள்ளைய வைச்சுக்கிட்டு புடவை கட்ட சிரமப் படுறாளேன்னு உனக்கு உதவி பண்ண வந்தேன்டி ரொம்பத்தான் பண்ணுற” என்று அவளது கன்னத்தை பற்றியதும் “விடுங்க மச்சான் எல்லாரும் வெளியே இருக்காங்க சும்மா வம்பு பண்ணிக்கிட்டு” என்று சிணுங்கினாள்.
 
“நாலு குழந்தை பிறந்த பிறகும் புது பொண்ணு போல கன்னம் மின்னுது” என்று அவளது இதழில் முத்தமிட துவங்கினான்.
 
ராயனின் முத்தத்திற்கு இடைஞ்சல் பண்ண வந்தனர் குழந்தைகள் அனைவரும்…
 
“பெரியம்மா பெரியப்பா” என்றும் “அத்தை மாமா முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சுன்னு உங்களை வர சொன்னாங்க” என்று கதவு தட்டினார்கள் வாண்டுகள்.
 
இருவரும் மெல்ல விலகி “ஒரு முத்தம் கொடுக்க விடமாட்டாங்கபா” என்று சலித்தாலும் முல்லையின் சேலையை சரி செய்து விட்ட ராயன் கதவை திறந்ததும் “மாமா, பெரியப்பா” என்று குழந்தைகள் ராயன் காலை கட்டிக் கொண்டனர்.
 
கட்டிக் கொண்ட குழந்தைகளுக்கு கன்னம் கிள்ளி முத்தம் வைத்து “பசங்களா வாங்க போகலாம்” என்று அனைவரையும் கூட்டிக் கொண்டு மணமேடையில் ஏறினான். 
 
முல்லை வயிற்றை பிடித்துக் கொண்டு தேர் போல நடந்து வந்து ராயன் அருகே நின்றாள்.
 
பாலாஜியோ “டேய் இந்த முறையாவது உனக்கு  பொண்ணு பிறக்குமா?” என்றான் கிண்டலாக.
 
“இந்த முறை பொண்ணு பொறக்கலனா அடுத்து ட்ரை பண்ணுவோம் இல்ல புள்ள” என்று தன் பக்கம் நின்ற முல்லையை பார்த்துக் கண்ணடித்தான் ராயன்.
 
“சும்மா இருங்க மச்சான்” என்று ராயன் தோளில் சாய்ந்தாள் முல்லை.
 
“கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று ஐயர் சப்த மிட அரசி கழுத்தில் ப்ரனேஷ் தாலி கட்டினான். 
 
ப்ரனேஷ் அரசி நடுவில் அமர்ந்திருக்க பெரியவர்கள் மணமக்கள் இருபுறமும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். பெரியவர்கள் மடியில் குழந்தைகள் அமர்ந்துக் கொண்டனர் கண்ணன் தீபா, தென்னரசு பூங்கொடி, பாலாஜி நதியா, ராயன் முல்லை நாலு தம்பதிகளும் கையை கோர்த்து நின்றனர்.
 
“ஸ்மைல்” என்றார் போட்டோஃகிராபர்.
 
ராயன் குடும்பம் மொத்தமும் சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
 
நாமும் சந்தோச சிரிப்புடன் விடைபெறுவோம்.
 
வாழ்க வளமுடன் 
 
சுபம்
 
கதை எப்படி இருக்குனு சொல்லுங்க பிரண்ட்ஸ் 
 
 
 
 
 
 

வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ்

நான் அத்தகைய அற்பத்தனமான தேடுதலில் ஈடுபட்டிருக்காவிடில், கடந்த நான்கு வருடங்களாகத் தொடர்பில் இல்லாத டி.யை அன்றிரவு சந்தித்திருக்க முடியாது. டி.யைச் சந்தித்திருக்காவிடில் சிந்தியாவின் மரணத்தைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.

ஒரு வார காலக் கடும் பனிப்புயலுக்குப் பிறகான ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் மினுமினுவென்றும் கொஞ்சம் சொதசொதவென்றும் இருந்தது. நான் பிரெஞ்சு இலக்கியப் பேராசிரியராய் இருந்த பெண்கள் கல்லூரியை ஒட்டிய சிறிய மலைநகரத்தில், வழக்கமான பின்மதிய வேளை உலாத்தலின்போது, ஒரு வீட்டின் சாரல்தடுப்புப் பலகையில் வரிசையாய்த் தொங்கிய பனிக்கூரிகள்[1] என் கவனத்தை ஈர்க்க, நின்றேன். அவற்றுக்குப் பின்னாலிருந்த வெள்ளைப் பலகையில் அவற்றின் கூரிய நிழல்கள் தெள்ளந்தெளிவாய்த் தெரிந்தன. எனவே பனிக்கூரிகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளின் நிழலும் பார்க்கக்கூடியதாய் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை. மேற்கூரை வெளிப்பக்கம் அதிக தூரம் நீட்டிக்கொண்டிருப்பதால் இருக்கலாம் அல்லது நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம் அல்லது சரியான பனிக்கூரிலிருந்து விழும் சரியான துளியை நான் பார்க்காது தவறவிட்டிருக்கலாம். கண்கட்டு வித்தை போல, கூர்முனைகளில் நீர்த்துளிகள் மாறி மாறிச் சொட்டுவதில் காணப்பட்ட லயம், என்னை ஏமாற்றிப் பரிகசிப்பதுபோல் தோன்றியது. அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மேற்கூரை முனைகளில் தொங்கும் பனிக்கூரிகளைப் பார்வையிடும் ஆர்வம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக்கொண்டு கெல்லி சாலையில், சரியாக, சில வருடங்களுக்கு முன்பு டி. குடியிருந்த வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்தது. நான் பணிபுரியும் அதே பெண்கள் கல்லூரியில் பயிற்றுநராக அவன் பணியாற்றிய காலத்தில் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தான்.

அந்த வீட்டை ஒட்டியிருந்த கார் நிறுத்தத்தின் கூரை முகப்பில் நீலவண்ண நிழற்பின்னணியில் தெள்ளந்தெளிவான பனிப்படிகக் கூம்புகளை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, என் தேடலுக்கான பரிசாக ஒரு காட்சி கிட்டியது. ஆச்சர்யக்குறியின் அடிப்புள்ளி அதன் இடத்திலிருந்து சற்றுக் கீழே சறுக்கியது போல் – இளகிச் சொட்டும் துளியை முந்தும் நோக்கோடு அவசரகதியில் ஓடியது போல் – இருந்தது. அந்த இரட்டை மினுமினுப்பு மகிழ்ச்சி அளித்தது என்றாலும் முழுமையான திருப்தி ஏற்படவில்லை. மாறாக, ஒளி மற்றும் நிழல் சார்ந்த என் தேடலுக்கான பசியைக் கூடுதலாகத் தூண்டிவிட்டது. என் ஒட்டுமொத்த இருப்பும் உலகக் கிண்ணத்துக்குள் உருளும் ஒற்றை விழிப்பந்தாக என்னை மாற்றிவிட்டதைப் போன்ற உணர்வுநிலையில் நான் மெய்மறந்து நடந்துகொண்டிருந்தேன்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பின்புற வளைவில் தகதகக்கும் கதிரொளியின் வைரப் பிரதிபலிப்பைக் கண்ணுற்றேன். இளகும் பனி காரணமாக, அனைத்துப் பொருட்களிலும் தெள்ளிய சித்திரத் தோற்றம் தென்பட்டது. ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்திருந்த பனித் தோரணங்களிலிருந்து உருகிய நீர், சரிவான தெருவில் சிற்றோடை போல் ஓடி மெதுவாக அடுத்தத் தெருவுக்குத் திரும்பியது. கட்டிடங்களுக்கு இடையில் எப்போதும் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத குறுகிய நடைபாதைகள் இப்போது செங்காவி மற்றும் அடர்சிவப்பு வண்ணப் பொக்கிஷங்களைத் திறந்துகாட்டிக்கொண்டிருந்தன. வரிவரியாய் இருந்த பள்ளங்களில் பனி படர்ந்து அலங்கரித்திருந்த குப்பைத்தொட்டியையும், அதன் மூடியின் மையத்தில் தொடங்கி விளிம்பு வரை பரவியிருந்த உறைபனியின் அலைவரிகளையும் முதன்முறையாகப் பார்த்தேன். கடந்த வெள்ளிக்கிழமை பனி அகற்றும் வாகனத்தின் உலோகத் தடுப்பால் ஒதுக்கிவைக்கப்பட்ட பனிக்குவியல்கள், சாலையோரங்களில் வரிசைகட்டி நிற்கும் இளம் பெங்குவின்களைப் போன்று தோற்றமளித்தன.

மேட்டில் ஏறி, இறக்கத்தில் இறங்கி, மெதுவாய் மங்கிக்கொண்டிருக்கும் தொடுவானம் நோக்கி நேராக என நான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தேன். என் மொத்தக் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்த விஷயங்களின் தொடர்நிகழ்வு, இறுதியில் என்னை, வழக்கமாக நான் உணவருந்தும் இடத்தை விட்டு வெகு தொலைவில் அழைத்துச் சென்றிருந்தது. எனவே ஊர் எல்லையிலிருந்த, இதுவரை நான் உணவருந்தியிராத ஒரு உணவகத்தில் இரவுணவை முடிக்க முடிவு செய்தேன். உணவகத்தை விட்டு வெளியே வந்தபோது எந்த ஆரவாரமும் இன்றி இருள் கவியத் தொடங்கியிருந்தது.

ஈரப்பனித்தரையின் மீது விழுந்திருந்த வாகனத் தரிப்பிட மானி[2]யின்  மெலிந்து நீண்ட நிழல், விநோதமாய் ஒளிரும் சிவப்பு வண்ணத்தோடு, ஒல்லிப் பிசாசைப் போலத் தோன்றியது. நடைபாதை மீது ஒளிர்ந்துகொண்டிருந்த உணவகத்தின் அடையாள விளக்கின் சிவப்பு நிற ஒளி தெறித்துதான் அந்தத் தோற்றம் எனப் புரிந்தது. அதே போன்றதொரு விநோத நிழலை நீல நிற ஒளியில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அதே இடத்திலேயே அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்குப் பக்கத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து டி. போலியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடி இறங்கினான். ஆல்பனியிலிருந்து பாஸ்டன் செல்வதாகவும் போகும் வழியில், தான் முன்பு குடியிருந்த அந்த ஊருக்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

ஒருவருக்கு ஒரு ஊரில் வலியும் வேதனையும் தரக்கூடிய, துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்து, பிறகு அவர் அந்த ஊரை விட்டுப் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அவர் அந்த ஊருக்கு வரும்போது அவருடைய உணர்வுகள் எப்படி இருக்கும்? எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேதனை தருவதாக இருக்கும். பழைய நினைவுகள் அவரை வாட்டி வதைக்கும். ஆனால் தங்களது மீள்வருகையின் போது எதுவுமே நடக்காதது போல், எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் அங்கு வளைய வருபவர்களைப் பார்க்கும்போது எனக்கு வலியும் வேதனையும் உண்டாவதோடு தனிப்பட்ட முறையிலும் வெறுப்பும் எரிச்சலும் ஏற்படும். இதை என் வாழ்க்கையில் பல தடவை கண்டிருக்கிறேன்.   

அவன் என்னை உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். சற்று முன்பு நான் போன அதே உணவகம். மேம்போக்கான நல விசாரிப்புக்குப் பிறகு இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியாமல் கடுமையான மௌனம் நிலவியது. அந்த மௌனத்தைக் கலைப்பதற்காக, அவன் சம்பந்தா சம்பந்தமின்றி சொன்னான், “சிந்தியா வேய்னின் இதயத்தில் பிரச்சனை இருக்குமென்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அவள் போன வாரம் இறந்துவிட்டதாக என்னுடைய வழக்கறிஞர் சொன்னார்.”

2

அவன் இப்போதும் இளமையோடும், அதே திமிரோடும் அதே கபடத்தோடும் காணப்பட்டான். சிந்தியாவின் தங்கை சிபிலுடன் அவனுக்கு இருந்த மிக மோசமான உறவையோ, சிந்தியா என்னை அழைத்து பாஸ்டனுக்குச் சென்று டி.யைச் சந்தித்துப் பேசுமாறு என்னிடம் மன்றாடியதோ, சிபிலை அவன் சந்திப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அவன் மனைவியை விவாகரத்து செய்யவேண்டும், எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் அவனைக் கல்லூரியை விட்டே துரத்தவேண்டும் என்று சொன்னதோ, எதுவுமே அறியாத, அழகும் மென்மையும் கொண்ட அதே மனைவியோடும் அவன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தான். மிகையுணர்வுக்கு ஆளான சிபிலின் வெறித்தனமான பேச்சின் பரிமாணம் அவன் மனைவியை ஒரு அடங்காப்பிடாரியாக சித்தரித்திருந்தது. நான் அவனை உடனடியாகவே மடக்கிவிட்டேன். அவனோ, எங்களைக் கவலைப்படவேண்டாம் என்றும், சிபிலை விட்டு தான் போய்விட முடிவு செய்துவிட்டதாகவும், கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு ஆல்பனிக்குச் சென்று அவனுடைய அப்பாவின் பண்ணையில் வேலைபார்த்துப் பிழைத்துக் கொள்ள இருப்பதாகவும் சொன்னான். சிக்கலான பிரச்சனையாக உருமாறி வருடக்கணக்காக இழுபறியாக இருக்கக்கூடும் என்று அச்சுறுத்திய அந்த விஷயம், எங்களுடைய தொடர்ச்சியான இரகசியக் கலந்துரையாடலால் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மறுநாள் பிரெஞ்சு இலக்கியத்துக்கான அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய வகுப்பறையில் நான் என்னுடைய உயர்மேஜையில் அமர்ந்திருந்தேன். சிபில் உயர் குதிகாலணி அணிந்து கையில் பெட்டியுடன் வகுப்பறைக்கு வந்தாள். மற்ற மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளை வைத்திருக்கும் மூலையில் பெட்டியை வைத்தாள். தனது மெலிந்த தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிட்டிருந்த ரோம அங்கியை அவிழ்த்து மடித்து பெட்டிக்குள் வைத்துவிட்டு இன்னும் இரண்டு மூன்று மாணவிகளோடு சேர்ந்து என்னிடம் வந்து தேர்வு முடிவுகளை நான் எப்போது அவர்களுக்கு அனுப்புவேன் என்று கேட்டாள். எல்லா விடைத்தாள்களையும் வாசித்துத் திருத்த, ஒரு வார காலம் எடுக்கும் என்று சொன்னேன். டி. எடுத்திருந்த முடிவைப் பற்றி அவளிடம் ஏற்கனவே சொல்லியிருப்பானா என்று நான் சந்தேகப்பட்டதும் கூட நினைவுக்கு வந்தது. கடமை தவறாத என்னுடைய இந்தச் சின்னஞ்சிறு மாணவியை எண்ணி எனக்குப் பெரும் வருத்தமும் கவலையும் உண்டாயின. தேர்வு நடைபெற்ற இரண்டரை மணி நேரமும் நான் மீண்டும் மீண்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளைப் போன்று இறுக்கமாக அணிந்திருந்த சாம்பல் வண்ண ஆடை, அலையலையாக சுருட்டிவிடப்பட்ட கருங்கூந்தல், அப்போது பிரபலமாக இருந்த, சல்லாத்துணி மறைப்புடன் கூடிய, சிறிய, பூப்போட்டத் தொப்பி, அதற்குக் கீழே நவீன பாணி ஓவியம் போன்று தோல்நோயால் உண்டான தழும்புகளோடு கூடிய முகம், தோல்நோய் சிகிச்சைக்கான செயற்கை விளக்கொளியால் கருத்த தேகம் என அழகைக் குலைக்கும் அனைத்து அம்சங்களும் அவளிடம் காணப்பட்டன. எனவே செக்கச் செவேலென்று வெடித்துக்கிடக்கும் உதடுகளுக்கிடையில் வெளிறிக் காணப்பட்ட ஈறும் பற்களும், கருத்த இமைகளுக்குக் கீழே தென்பட்ட நீர்த்த மை நிற நீல விழிகளும் மட்டுமே அவளுடைய அழகை எடுத்துக்காட்டக் கூடியனவாக இருந்தன.

அடுத்த நாள், கன்னாபின்னாவென்று இருந்த நோட்டுப்புத்தகங்களை அகர வரிசைப்படி அடுக்கிவைத்து, குளறுபடியான கையெழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன். எப்படியோ தவறுதலாக வரிசை மாறி முன்னால் வந்துவிட்ட வாலேவ்ஸ்கி மற்றும் வேய்ன் இருவரின் நோட்டுப்புத்தங்களையும் கையிலெடுத்தேன். முதலாவது வெளிப்பகட்டு காட்டும் மிகத் தெளிவான கையெழுத்துடன் அழகாக இருந்தது. ஆனால் சிபிலுடையது எப்போதும் போல ஏகப்பட்டக் கிறுக்கல்களோடு பற்பல சாத்தான்களின் பிடியில் அகப்பட்டது போல கொடுமையாக இருந்தது. அவள் முதலில் வெளிறிய கடினமான பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தாள். அழுத்தி அழுத்தி எழுதியதில் தாள் முழுவதும் கருப்பு நிறமானதோடு பின்பக்கமும் அச்சு படிந்திருந்தது. நல்லவேளையாக, கொஞ்ச நேரத்திலேயே பென்சிலின் கூர் உடைந்துபோனது போலும். அடுத்து அவள் அழுத்தமாகவும் மொத்தமாகவும் எழுதக்கூடிய, கிட்டத்தட்ட கரிக்கட்டை போன்ற பென்சிலால் எழுதியிருந்தாள். அவ்வப்போது அதன் மழுங்கிய முனையை வாயில் வைத்து வைத்து எழுதிய காரணத்தால் காகிதத்தில் உதட்டுச்சாயக் கறையும் சேர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் அவளுடைய விடைத்தாள் மிக மோசமாக, அடிக்கோடுகள், வரிசை மாற்றுகள், தேவையில்லாத அடிக்குறிப்புகள் என அவநம்பிக்கையின் அனைத்துக் குறியீடுகளையும் பயன்படுத்தி, அவளால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் சரியாகச் செய்துமுடிக்க முயற்சி செய்ததைப் போன்று இருந்தது. அடுத்து அவள் மேரி வாலெவ்ஸ்கியின் மைப்பேனாவை இரவல் வாங்கி பிரஞ்சும் ஆங்கிலமும் கலந்து இவ்வாறு எழுதியிருந்தாள்: ‘இந்தப் பரிட்சை முடிந்ததும் என் வாழ்க்கையும் முடிந்துவிடும். விடைபெறுகிறேன், பெண்களே! மதிப்புக்குரிய பேராசிரியர் அவர்களுக்கு, தேர்வில் ‘டி’ வாங்குவதை விடவும் மரணம் சிறந்ததல்ல, ஆனால் டி. இல்லாத வாழ்க்கையை விடவும் மரணம் சிறந்தது என்று நான் சொன்னதாக என் அக்காவிடம் தயவுசெய்து சொல்லிவிடுங்கள்.’

நான் உடனடியாக சிந்தியாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாக – காலை எட்டு மணிக்கே எல்லாம் முடிந்துவிட்டதாகச் சொன்னாள். நான் அங்கு வரும்போது சிபில் எழுதியிருந்த குறிப்பை எடுத்துவரச் சொன்னாள். வழியும் கண்ணீரோடு குறிப்பை வாசித்த அவள், பிரெஞ்சு இலக்கியத் தேர்வோடு, சிபில் தன்னைத் தொடர்புபடுத்தி எழுதியிருந்த ஒப்புமை வரிகளில் இருந்த புத்திசாலித்தனத்தை வியந்தாள். சிபிலின் நோட்டுப் புத்தகத்தைக் கீழே வைக்காமலேயே இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பினாள். சோடா நீரோடு கண்ணீரும் சேர்ந்து தெறிக்க, மீண்டும் அந்தத் தற்கொலைக் குறிப்பை வாசிக்கலானாள். அப்போது அதிலிருந்த இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். சிபில் ‘பெண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரெஞ்சு வார்த்தைக்கு ‘வேசி’ என்ற பொருளும் இருப்பதால், மாணவிகள் தவறுதலாக அந்த வார்த்தையைப் பயன்படுத்த நேரிடும் என்று அமெரிக்க அகராதிகளில் ‘பெண்’ என்றே அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டேன். சுவாரசியமற்ற அந்த அற்ப விஷயங்கள் சிந்தியாவை துக்கத்தின் அடியாழத்திலிருந்து பெரும் திணறலோடு மேற்பரப்புக்குக் கொண்டுவந்து சற்றே இலகுவாக்கின. பிறகு தொய்ந்துபோன அந்த நோட்டுப் புத்தகத்தை, சொர்க்கத்திற்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு போல கையில் இறுக்கமாகப் பிடித்தவாறு, மாடியில் இருந்த சிறிய குளிர்ச்சியான படுக்கையறைக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த இரண்டு காலி மாத்திரைப் புட்டிகளையும், ஆதி முதல் அந்தம் வரை டி. அறிந்திருந்த அழகிய இளம் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, கீழே கவிழ்ந்து கிடந்த படுக்கையையும் ஒரு  போலீஸ்காரரிடம் அல்லது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்பான அயர்லாந்துக்காரரிடம் காட்டுவது போல் என்னிடம் காட்டினாள்.  

3

சிந்தியாவின் தங்கை இறந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, சிந்தியாவை நான் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் நான் பொது நூலகத்தில் துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அவளும் அப்போது அங்கு குடிபெயர்ந்திருந்தாள். ஏதோ ஒரு விநோதக் காரணத்துக்காக (கலையுணர்வு காரணமாக இருக்கலாம் என்பது என்னுடைய தெளிவற்ற யூகம்) குளிர்நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத மக்கள் வசிக்கும் ‘குளிர்ந்த நீர் குடியிருப்புகள்’ என்று சொல்லப்படுகிற, நகரத்தின் குறுகிய தெருக்களின் கீழ்த்தளக் குடியிருப்புகளுள் ஒன்றில் அவள் தங்கியிருந்தாள்.

வெறுப்பூட்டும் அவளுடைய நடவடிக்கைகளோ, மற்ற ஆண்களின் கண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரியும் அவளது தோற்றமோ என்னைத் துளியும் ஈர்க்கவில்லை. அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் பெரிய நீலநிறக் கண்கள். அவளுடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு இடைப்பட்டப் பகுதியும் மூக்குத்துவாரத்தின் இருபக்கப் புடைப்புகளும் எப்போதும் மினுமினுவென்று காணப்பட்டன. அவளுடைய தோல் சொரசொரவென்று ஆண்களுடையதைப் போன்று இருந்தது. வண்ணமீன் தொட்டியைப் பார்ப்பது போன்று குறுகுறுவென்று அவள் நம்மைப் பார்க்கும்போது அந்த ஓவியக்கூடத்தின் துல்லியமான விளக்கொளியில் அவளுடைய முப்பத்திரண்டு வயது முதிர் முகத்தின் குழிகளைக் காணமுடியும். அவளுடைய தங்கையைப் போன்றே அவளுக்கும் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் பெரும் விருப்பம். ஆனால் அதில் அவ்வளவு நேர்த்தி இருக்காது. அசிரத்தை காரணமாக அவளுடைய பெரிய முன்பற்களில் உதட்டுச்சாயத்தின் சிவப்புக் கறை படிந்திருக்கும்.

அவள் வசீகரமான அடர்நிறத்தில் இருந்தாள். மோசம் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஓரளவு நன்றாகவும் விதவிதமாகக் கலந்துகட்டியும் உடுத்தினாள். நல்ல உடல்வாகு என்று சொல்லும்படியும் இருந்தாள். ஆனால் யாவற்றிலும் ஏனோதானோவென்ற ஒரு அலட்சியம் இருந்தது. அவளுடைய மெத்தனத்தை நான் அரசியலில் இடதுசாரிக் கோட்பாடுகளோடும், கலையில் மேம்பட்ட கொச்சைத்தன்மையோடும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தினேன். எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. அவளுடைய சுருள் கேசத்தை நடுவகிடு எடுத்து ஓரளவு படியவைத்து பின்னால் சிறு கொண்டையாக உயர்த்தி முடிந்திருக்காவிட்டால், பார்ப்பதற்கு பரட்டையாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். அவள் பளீரென்ற நிறத்தில் விரல் நகங்களில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ஆனால் நகங்கள் மிக மோசமாகக் கடிக்கப்பட்டிருந்ததோடு தூய்மையாகவும் இல்லை.

மிகவும் அமைதியான சுபாவமுடைய, திடீரென்று சிரிக்க ஆரம்பித்திருந்த ஒரு இளம் புகைப்படக் கலைஞனும், தெருவில் சிறிய அச்சுக்கூடம் வைத்திருந்த, வயது மூத்த இரண்டு சகோதரர்களும் அவளுடைய காதலர்களாக இருந்திருக்கின்றனர். கண்ணாடிக்குக் கீழே படியவைக்கப்பட்டிருக்கும் பொருளின் அறிவியல் துல்லியத்துடன், வெளிறிய முழங்கால்களுக்குக் கீழே மெல்லிய நைலான் காலுறையின் ஊடே காணப்படும் கரடுமுரடான கருப்பு முடிகளைப் பயமும் பதற்றமுமாக இரகசியப் பார்வை பார்க்கும்போது அல்லது அவளுடைய ஒவ்வொரு அசைவின்போதும், அவள் பூசியிருக்கும் மட்டமான வாசனைத் திரவியங்கள் மற்றும் களிம்புகளோடு, குளிக்காத அவள் உடலிலிருந்து வீசும் மோசமான வாடையை நுகர நேரும்போது, அவளுடைய காதலர்களின் ரசனையை எண்ணி எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

அவளுடைய அப்பா, அவர்களுக்கென்று இருந்த ஓரளவு சொத்தில் பெரும்பகுதியை சூதாடித் தொலைத்தவர். அவளுடைய அம்மாவின் முதல் கணவர் ஸ்லாவ்[3] வம்சாவளியைச் சேர்ந்தவர். மற்றபடி சிந்தியா வேய்ன் ஒரு நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். இன்னும் பின்னோக்கி ஆய்ந்தால் ஏதேனும் தீவாந்தரத்தின் அரசர் அல்லது கணியர் வம்சத்தைச் சார்ந்தவளாக இருக்கலாம் என்பது என் யூகம். புதிய உலகத்தில், அற்புதமான இலையுதிர் மரங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பில் காலூன்றிய அவளது வம்சத்தின் ஆரம்ப கட்டத்தில் தூய திருச்சபைகளை நிறைத்தனர் விவசாய பக்தர்கள். அவர்களைத் தொடர்ந்து வியாபாரத்தில் கைதேர்ந்த வியாபாரிகளும், கல்வியிற் சிறந்தவர்களும் உருவாயினர். லெக்சிங்டன் நீராவிப்படகில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரும், சிந்தியாவின் சுழல்மேஜைக்கு அடிக்கடி வருகை தருபவருமான டாக்டர் ஜோனாத்தன் வேய்ன் (1780-1839) அவர்களுள் ஒருவர்.

நான் எப்போதும் மரபியல் வரிசையைத் தலைகீழாகப் பார்க்கவே முனைவேன். இங்கு வேய்ன் பரம்பரையை ஆராயும் வாய்ப்பு கிடைத்தபோது கடைசி வாரிசான சிந்தியா மட்டுமே கவனத்துக்கு உரியவளாக இருந்தாள். அதாவது, அவளுடைய கலைத்திறன், அற்புதமான, அழகான ஆனால் அவ்வளவாக விலைபோகாத, அவளுடைய நண்பர்களின் நண்பர்கள் எப்போதாவது வாங்கும் ஓவியங்கள், முக்கியமாக அவளுடைய வரவேற்பறையை அலங்கரித்த அற்புதமான மற்றும் கவித்துவமான ஓவியங்கள் அவளுடைய இறப்புக்குப் பிறகு என்னவாகும் எங்கே போகும் என்று தெரிந்துகொள்ள பெரிதும் விரும்பினேன். மிக நுணுக்கமாகத் தீட்டப்பட்டிருந்த உலோகப் பொருட்களின் ஓவியங்களுள் எனக்கு மிகவும் பிடித்தது, வாகன முகப்புக் கண்ணாடியின் ஒரு பக்கம் ஏடு போல் படிந்திருக்கும் உறைபனியும், கற்பனையான வாகனக் கூரையிலிருந்து வடிந்தோடும் நீர்த்துளிகளும், தெளிவான மறுபக்கத்தின் வழியாக நீலச்சுவாலை போல் ஒளிரும் வானமும் பச்சையும் வெள்ளையுமான தேவதாரு மரங்களும் தீட்டப்பட்டிருந்த, ‘வாகன முகப்புக் கண்ணாடி வழியே’ என்ற ஓவியம்.  

4

சிபிலின் காதலை சிந்தியாவும் நானும் சேர்ந்து முறியடித்துவிட்டது தற்போது சிபிலுக்குத் தெரிந்துவிட்டதாகவும் அதனால் சிபில் தன்மீது கோபமாக இருப்பதாகவும் சிந்தியாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொல்வழக்கப்படி சிபிலின் ஆன்ம சாந்திக்கான சில பரிகாரங்களை (சிபிலுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு) அவள் செய்யத் தொடங்கினாள். சிபிலின் கல்லறையை குறைந்த வெளிச்சத்தில் படம்பிடித்து அந்தப் புகைப்படங்களை டி.யின் அலுவலக முகவரிக்கு ஒழுங்கற்ற கால இடைவெளியில் அவ்வப்போது அனுப்பிவைத்தாள். சிபிலின் தலைமயிரைப் போன்றே இருக்கும் தன்னுடைய தலைமயிர்க் கற்றையை நறுக்கி அதைத் தபாலில் அவனுக்கு அனுப்பினாள். அக்டோபர் 23-ம் தேதி, நண்பகல் வேளையில், இளஞ்சிவப்பும் பழுப்புமான வனாந்திரத்தின் சாலையோர விடுதியொன்றில் டி.யும் சிபிலும் தங்கியிருந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக நியூ இங்கிலாந்து மாகாணத்தின் வரைபடத்தில் அவ்விடத்தை குறுக்குவெட்டுக் கோடுகளால் குறிப்பிட்டு அந்தப் படத்தை அவனுக்கு அனுப்பினாள். பாடம் செய்யப்பட்ட ஸ்கங்க்கை[4]  இரண்டு முறை அனுப்பினாள்.

எதையும் தெள்ளந்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசத் தெரியாமல் வளவளவென்று உரையாடக்கூடியவளான அவளால், தனக்குள் வியாபித்திருக்கும் விநோதமான ஆன்ம ஒளிவளையத்தைப் பற்றி முழுமையாக விவரிக்க இயலவில்லை. உண்மையில் அது தனிப்பட்ட வகையில் அவளுக்கு மட்டும் நேரும் புதிய விஷயமல்ல. பொதுவாகவே, ஒருவரின் மரணத்துக்குப் பிறகு அந்த ஆன்மா, அமைதியான ஆவியுலகில் ஏற்கனவே இறந்துபோனவர்களின் ஆன்மாவோடு போய் சேர்ந்துகொண்டு, அவ்வப்போது தனக்குப் பிடித்தவர்களைச் சுற்றிச் சுற்றி வருவதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும். இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இயல்பான அந்த நுண்பொருள் கோட்பாட்டியலுக்குள் சிந்தியா சில விநோதமான நடைமுறைக் கூறுகளைப் புகுத்தினாள். 

அநாதையாய்த் திரியும் பூனைக்குட்டியை பள்ளிச்சிறுமி ஒருத்தி தூக்கி, கன்னத்தோடு கன்னம் இழைத்துக் கொஞ்சி, தன்னோடு எடுத்துச் சென்று, ஏதாவதொரு புறநகர்ப் பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக விட, அதை அந்த வழியாகச் செல்லும் யாரோ ஒருவர் எடுத்து, அன்போடு தடவிக்கொடுப்பதைப் போலவோ அல்லது இளகிய மனம் படைத்தப் பெண்மணி யாராவது, தன்னுடைய வீட்டுக்குக் கொண்டுசெல்வதைப் போலவோ, தன் விதியை இறந்துபோன நட்புகளின் ஆன்மாக்களே வழிநடத்துகிறார்கள் என அவள் உறுதியாக நம்பினாள்.

சில மணிநேரம் அல்லது தொடர்ந்து பல நாட்கள், சில சமயம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் மாதக் கணக்காகவோ, வருடக் கணக்காகவோ சிந்தியாவுக்கு ஏற்படும் எதுவும், இறந்துபோன நட்பு அல்லது உறவின் பழக்க வழக்கம் மற்றும் மனநிலை சார்ந்தது என்பது சிந்தியாவின் எண்ணம். அந்த நிகழ்வு ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய அளவுக்கு அசாதாரணமாக இருக்கும் அல்லது ஒருவரது வழக்கமான நாளில் கவனிக்கத்தக்க விஷயமாக இருந்து, நாளடைவில் ஒளிவளையம் மங்கி மறைய, அற்ப விஷயமாக மாறிவிடக்கூடிய, சின்னச் சின்ன சம்பவங்களாக இருக்கும். விளைவு நல்லதோ, கெட்டதோ, ஆனால் மூல ஆன்மா எதுவென்று கட்டாயம் அடையாளங்காண முடியும். ஒரு மனிதனின் ஆன்மாவுக்குள் ஊடுருவிச் செல்வதைப் போன்றது அது என்றாள் சிந்தியா.

எல்லாராலும் எல்லா ஆன்மாக்களையும் அடையாளங்காண இயலாது என்பதால் அவளால் அவளைத் தொடர்பு கொள்ளும் சரியான ஆன்மாவைக் கண்டறிவது சாத்தியமில்லை என வாதிட்டு அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். கையொப்பம் இடப்படாத கடிதங்களையும் கிறிஸ்மஸ் பரிசுகளையும் யார் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ‘வழக்கமான நாள்’ என்று சிந்தியா குறிப்பிடுவது பலவீனமான ஆன்ம ஒளிவளையங்களின் கலவையாக இருக்கலாம் அல்லது காவல் தேவதையின் வழக்கமான செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கலாம். கடவுளைப் பற்றி என்ன சொல்வது? சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியை மண்ணில் வெறுக்கும் மக்கள், சொர்க்கத்திலும் அதே போன்ற ஒருவரை எதிர்பார்ப்பார்களா? மேலும் போர்கள் பற்றி? எவ்வளவு பயங்கரமான விஷயம்! இறந்த போர்வீரர்கள் உயிருடன் இருப்பவர்களுடன் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்களா? தள்ளாடும் வயோதிகர்களின் வாழ்க்கையைக் கட்டுப்படுத்திக் கைப்பற்ற ஆவிக் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்குமா?

ஆனால் சிந்தியா பொதுவிதிகளுக்கும் தர்க்க எல்லைகளுக்கும் அப்பாற்பட்டிருந்தாள். ‘தளபுள’ என்று கொதிக்கும் சூப்பைப் பார்த்தால் “ஐயோ, அது பால் (Paul)” என்பாள். அறக்கொடை நிறுவனத்தின் லாட்டரியில் அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட, நல்ல தரமான வாக்யூம் க்ளீனர் கிடைத்தால், “அன்புக்குரிய பெட்டி பிரவுன் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்” என்பாள். 

என்னுடைய பிரெஞ்சு மூளையை அதிகம் எரிச்சலடைய வைத்தது எதுவென்றால் பெட்டி பிரவுனும் பாலும் உயிரோடு வாழ்ந்த காலத்துக்கே அவள் மானசீகமாகச் சென்றுவிடுவதுதான். நல்ல எண்ணத்துடன் அவர்கள் தனக்கு விதவிதமான, விநோதமான, ஏற்றுக்கொள்ள இயலாத பரிசுப்பொருட்களை அள்ளி அள்ளித் தந்தார்கள் என்றும் மூன்று டாலர் காசோலையுடன் கூடிய பழைய பர்ஸை தெருவில் கண்டெடுத்து, அதை உரியவரிடம் (இங்குதான் நடக்க இயலாத, முதிய பெண்மணி பெட்டி பிரவுன் வருகிறார்) சேர்ப்பித்ததில் ஆரம்பித்து, தன்னுடைய முன்னாள் காதலன் (இங்குதான் பால் வருகிறான்) அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் தத்ரூபமான ஓவியங்களாய்த் தீட்டுவதற்கான நியாயமான தொகைக்கு பதில் அடிமட்டத் தொகை பேசி அவமானப்படுத்தியது வரை சொல்வாள். இவை எல்லாமே சிந்தியா குழந்தையாய் இருந்தபோது, எடுத்ததெற்கெல்லாம் அறிவுரை கூறி அவளைப் பாடாய்ப்படுத்திய திருமதி பேஜ் என்னும் நல்ல மனம் படைத்த முதிய பெண்மணியின் மரணத்துக்குப் பிறகே ஆரம்பித்தன. 

சிபிலின் குணாதிசயங்கள், வானவில்லின் விளிம்பைப் போல தெளிவற்றவை என்றாள் அவள். சிபிலை நான் கொஞ்சமாவது புரிந்து வைத்திருந்தால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சிந்தியாவின் வாழ்வில் சின்னச் சின்ன நிகழ்வுகளாக, அவ்வப்போது அவளைச் சூழ்ந்துகொள்ளும் அந்த ஒளிவளையத்தில் சிபிலின் ஆன்மா இருப்பதை என்னால் எளிதில் உணர்ந்துகொண்டிருக்க முடியும் என்றாள்.

சிந்தியாவின் அம்மா இறந்ததிலிருந்தே, அவளும் சிபிலும் தங்களுடைய பாஸ்டன் வீட்டை விட்டுவிட்டு, நியூயார்க் நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட விரும்பினார்கள். நியூயார்க்கில் சிந்தியாவின் ஓவியங்களுக்கு நல்ல விலையும் அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய பழைய வீடு தன் மென்கரங்களால் அவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டுவிட்டது. சிபில் தன் மரணத்துக்குப் பிறகு, அந்த வீட்டை சுற்றுப்புறத்திலிருந்து தனிமைப்படுத்தினாள். வீடு என்ற உணர்விலிருந்து அது சிதைந்து அழியத் தொடங்கியது. குறுகிய தெருவின் எதிர்ப்பக்கம் சாரங்களால் சூழப்பட்டு, இரைச்சலுடன், எரிச்சலூட்டும் ஒரு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதே வருடம் வசந்த காலத்தில் அந்தப் பகுதியில் பிரசித்தமான இரண்டு நெட்டிலிங்க மரங்கள் பட்டுப்போய் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு போல நின்றன. அறுபது வயதில் ஓய்வு பெற்ற, கால் நூற்றாண்டு காலத்தை நத்தைகள் பற்றிய ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்த திரு. லீவர் அவர்களின் காலைநேர நடைக்குப் பழகிய, ஏப்ரல் மாத மழையில் நனைந்து வித்தியாசமான கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், அழகிய செஞ்சாந்து நிற நடைபாதைக் கற்கள் பணியாட்களால் பெயர்த்தெடுத்து அகற்றப்பட்டன. முதியவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இறப்புக்குப் பிறகு, உயிரோடு இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் ஆதரவும் இடையூறும் சில வேளைகளில் வேடிக்கையாக இருக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

சிந்தியா ஒரு தடவை, போர்லாக் என்ற கிறுக்குத்தனமான நூலகரோடு நட்பாக இருந்தாள். அவர் ‘hither’ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது h-க்கு பதிலாக i என்பது போல் விநோதமான எழுத்துப்பிழைகளோடு அச்சாகியிருந்த பழைய புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே, தூசு படிந்த தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தைக் கழித்தார். சிந்தியாவுக்கு மாறாக, தெளிவற்ற யூகங்களால் உண்டாகும் புளகாங்கித உணர்வால் அவர் ஈர்க்கப்படவில்லை. அவர் தேடியவையெல்லாம் திட்டமிட்டதைப் போல் தோன்றும் தற்செயல்கள் மற்றும் இடைவெளிகளைப் போல் தோற்றமளிக்கும் பிளவுகள் போன்ற முரண்விநோதங்களை மட்டுமே. ஒழுங்கற்ற அல்லது இலக்கண விதிகளுக்கு மாற்றாக இணைக்கப்பட்ட வார்த்தைகள், சிலேடைகள், மாற்றெழுத்துப் புதிர்கள், வார்த்தை விளையாட்டுகள் இன்ன பிறவற்றில் விடாப்பிடியான ஆர்வக்கோளாறுடன் இருந்த சிந்தியா, அந்த பரிதாபத்துக்குரிய கிறுக்கு நூலகருக்கு உதவுவதற்காகக் கொடுத்த உதாரணங்களை, நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்த்தபோது, சுத்தப் பைத்தியக்காரத்தனமாகவே எனக்குத் தோன்றியது.

நூலகர் இறந்துபோன மூன்றாம் நாள், அவள் ஒரு சஞ்சிகையை வாசித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அழியாக் கவிதையொன்றின்[5]  (மற்ற அப்பாவி வாசகர்களைப் போலவே அவளும் அதை உண்மையிலேயே கனவில் இயற்றப்பட்டக் கவிதையென நம்பினாள்) வரிகளைக் கண்ணுற்றதாகவும், அதிலிருந்த ‘Alph’ என்னும் வார்த்தை, Anna Livia Plurabelle (மற்றொரு கற்பனைக் கனவிற்குள் ஓடும் அல்லது அதைச் சுற்றிக்கொண்டு ஓடும் மற்றொரு புனித நதியின் பெயர்) என்பதன் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு தீர்க்கதரிசனம் காட்டுவதாகவும் அதில் கூடுதலாக இருக்கும் h என்ற எழுத்து, திரு.போர்லாக்கை வசியம் செய்திருந்த அந்த வார்த்தைக்கு வழிகாட்டும் அறிகுறி போல இருப்பதாகவும் அவள் சொன்னாள்.

எனக்கு சரியாக நினைவில்லை, ஏதோ ஒரு புதினமோ, சிறுகதையோ (யாரோ ஒரு சமகால எழுத்தாளருடையதுதான் என்று நினைக்கிறேன்), அதன் ஆசிரியரே அறியாத, கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை சிந்தியா முறைப்படுத்தினாள். அவளுடைய பொருள்விளக்கப்படி, அது அவருக்கு, இறந்துபோன தாயாரிடமிருந்து வந்திருந்த செய்தி.

5

துரதிர்ஷ்டவசமாக, சிந்தியா இந்த சாதுர்யமிக்கக் கற்பனைகளில் திருப்தியுறாமல் ஆவியுலகக் கோட்பாட்டின் மீது முட்டாள்தனமான வேட்கையைக் கொண்டிருந்தாள். கட்டணம் பெற்றுக்கொண்டு ஆவியுலகோடு தொடர்பு கொள்பவர்களின் அமர்வுகளுக்கு நான் அவளோடு செல்ல மறுத்தேன். மற்ற ஆதாரங்களின் மூலம் இதுபோன்ற விஷயங்களை அவர்களை விடவும் சற்றுக் கூடுதலாகவே நான் அறிந்திருந்தேன். எனினும், சிந்தியாவும், அச்சுக்கூடத்தைச் சேர்ந்த, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாத முக அமைப்புக் கொண்ட, அவளுடைய இரு நண்பர்களும் நடத்தும் கேலிக்கூத்துகளில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.

அவர்கள் பொறுமைசாலிகளாகவும், கண்ணியமாகவும், வயதில் மூத்தவர்களாகவும் அதே சமயம், சற்றே அச்சுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். ஆனால் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சினாலும் நாகரிகமான நடத்தையினாலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு சிறிய கனமில்லாத மேஜையைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருப்போம். மேஜையில் எங்கள் விரல்நுனி பட்டதுமே அது கிடுகிடுவென அதிர்ந்து நடுங்கத் தொடங்கும். தங்களைப் பற்றி ஆர்வத்துடன் மளமளவென்று சொல்ல முன்வந்த பற்பல ஆவிகளோடு நான் உரையாடினேன். இருப்பினும், நான் எதையாவது தவறாகப் புரிந்துகொண்டுவிட்டால் அவ்வளவுதான், அவை மேற்கொண்டு தங்களை வெளிப்படுத்த மறுத்துவிடும். ஆஸ்கார் வைல்ட் வந்து, வேகமாகவும் தப்பும் தவறுமாகவும் பிரெஞ்சுமொழியில், வழக்கமான ஆங்கிலவாத வார்த்தைகளோடு, எதற்காகவோ சிந்தியாவின் இறந்துபோன பெற்றோரைக் குற்றம் சாட்டினார். சுருக்கெழுத்தில் அதை ‘கருத்துத்திருட்டு’[6] எனக் குறிப்பிட்டேன். குறுக்கே புகுந்த ஒரு ஆவி, ஜான் மோர் என்ற பெயருடைய தானும், வில் என்ற தன் சகோதரனும் சுரங்கத் தொழிலாளிகள் என்றும் 1883-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலராடோவில் ‘க்ரெஸ்டட் பியூட்டி’ என்ற இடத்தில் ஏற்பட்ட சுரங்கச் சரிவில் மாண்டதாகவும், நாங்கள் கேட்காமலேயே முன்வந்து தகவல் சொன்னது. இந்த விளையாட்டில் அனுபவசாலியான ஃப்ரடரிக் மையர்ஸ் நான் ஓரளவு எழுதியிருந்த கவிதையை வேகவேகமாக ஒப்பித்தான். (சிந்தியா இயற்றும் சிறு பாடல்களைப் போன்று விசித்திரமான ஒற்றுமை இருந்தது)

என்ன இது? சாதுர்யமான கண்கட்டு வித்தையா?

அல்லது குறைபாடுள்ள ஆனால் மெய்யான ஒளிக்கீற்றா?

எது இந்த ஆபத்தான வழக்கத்தை உடைத்து

துன்புறுத்தும் கனவைக் கலைக்கக்கூடும்?

இறுதியாக, பயங்கரமான உறுமலுடன், மேஜை தடதடக்க, லியோ டால்ஸ்டாய் எங்கள் குழுவிற்கு வருகை புரிந்தார். அது அவர்தானா என்று மண்ணுலகில் அவரது தினசரி வாழ்வின் தனித்துவ அம்சங்களால் அவரை உறுதிப்படுத்தச் சொன்னபோது, ரஷ்யாவின் மரக் கட்டுமான வகைகளைப் பற்றியோ அல்லது வேறு ஏதோ (பலகையில் உருவங்கள் – மனிதன், குதிரை, சேவல், மனிதன், குதிரை, சேவல்) எழுத்தால் எளிதில் எழுத இயலாத, புரிந்துகொள்ளக் கடினமான, சரிபார்ப்பு சாத்தியமில்லாத சில சிக்கலான விவரணைகளைத் தந்தார்.

மேலும் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் பங்கேற்றேன். எல்லாமே முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தபோதும், அவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ரசிக்கவும், சிந்தியாவின் இத்தகு கொடுமையான வீட்டுக் கொண்டாட்டங்களின்போது தரப்படும் மதுவை அருந்தவும்தான் (போட்ஜியும் புட்ஜியும் மதுவருந்தும் பழக்கம் இல்லாதவர்கள்) நான் அவற்றில் கலந்துகொண்டேன் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அவளுடைய வீட்டின் வரவேற்பறை எப்போதும் அழுக்காக, கழுவப்படாத பழைய, வண்ணக்கலவைத் தட்டைப் போல இருந்தது. எனவே அவள், அவளுடைய வீட்டை அடுத்த, திரு.வீலரின் வசதியான வீட்டில், அவளுக்கே உரிய மையவிலக்கு மனோபாவத்துடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். 

பண்பற்ற, நாகரிகமற்ற, சுகாதாரமற்ற, கேவலத்திலும் கேவலமான வழக்கமாக, விருந்தினர்கள் அப்போதுதான் அவிழ்த்த, உடற்சூடு இன்னும் குறையாத அவர்களது மேல் கோட்டுகள், அமைதியான, வழுக்கைத் தலையரான பாப் வீலரால், அவரது தூய்மையான, அந்தரங்கமான படுக்கையறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரும் அவர் மனைவியும் படுக்கும் படுக்கையின்மீது குவித்துவைக்கப்பட்டன. மேலும் விருந்தினர்களுக்கான மதுபானங்களைக் கோப்பைகளில் அவர் ஊற்றிக் கொடுக்க, இளம் புகைப்படக் கலைஞன் அவற்றைப் பரிமாற, சிந்தியாவும், திருமதி வீலரும் ரொட்டிகளைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

தாமதமாக வருபவர்கள், ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரண்டு கண்ணாடிகளுக்கு இடையிலான நீலச்சாம்பல்நிறக் கூடத்தில் தேவையில்லாமல் கூடிக் கூச்சலிடும் ஒரு கூட்டத்தையே பார்ப்பார்கள். சிந்தியா வழக்கமாக அழைப்பு விடுக்கும் பெண்மணிகள் அனைவருமே, திருமணமானவர்களோ, இல்லையோ, ஆனால் அலைபாயும் நாற்பதுகளில் இருந்தார்கள். ஒருவேளை, அங்கு இருப்பவர்களிலேயே தான்தான் இளையவளாக இருக்கவேண்டும் என்று சிந்தியா விரும்பியிருக்கலாம். சிலர் அவர்களுடைய வீட்டிலிருந்தே டாக்சிகளின் மூலம் வரவழைக்கப்படுவார்கள். வரும்போது முழுமையான ஒப்பனையுடனும் அழகான தோற்றத்துடனும் காணப்படும் அவர்கள், நிகழ்ச்சியின் முடிவில் எல்லாவற்றையும் இழந்திருப்பார்கள். 

வார இறுதிக் கொண்டாட்டங்களில் வழக்கமாகக் கலந்துகொள்ளும் சிநேகபாவம் மிக்க குடிகாரர்கள், தங்கள் அனுபவத்தால், உடனடியாகவும், மிகத் துல்லியமாகவும் போதையின் பொதுப்பகுவெண்ணைக் கண்டறிந்து, அதன் அடுத்தக் கட்டத்துக்கு முன்பு அனைவரும் ஒருவருக்கொருவர் பூரண விசுவாசத்தோடு ஒன்றிணைந்து கூட்டாக இறங்குவது, என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

இணக்கமாகப் பேசிய பெண்மணிகளின் பேச்சில் தெனாவெட்டும், இறுக்கமான ஆண்களிடத்தில் சூலுற்றப் பெண்மையின் நாணமும் தென்பட்டன. வந்திருந்தவர்களுள் சிலர் ஏதாவது ஒரு வகையில் கலையோடு தொடர்புடையவர்களாக இருந்தனர். எனினும் எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் இல்லை, மலர்க்கீரீடம் அணிந்த தலைகள் இல்லை, முக்கியமாக, குழலூதும் பெண்கள் இல்லை.

ஒன்றிரண்டு இளைஞர்களோடு, வெளிறிய தரைவிரிப்பின் மீது கரையொதுங்கிய கடற்கன்னியைப் போன்ற தோரணையோடும், வார்னிஷ் பூசியது போல பளபளவென்று, வியர்வை பூத்த முகத்தோடும் அமர்ந்திருக்கும் சிந்தியா, ஏதேனும் ஒரு கட்டத்தில் பருப்புகள் அடங்கிய தட்டை ஒரு கையில் கவனமாக ஏந்தியவாறே ஊர்ந்து சென்று, மறு கையால் வெண்சாம்பல் நிற சோபாவில் உற்சாகமும் துடிப்புமான இரண்டு பெண்மணிகளுக்கு நடுவில் வசதியாக அமர்ந்திருக்கும் காக்கரன் அல்லது கார்க்கரன் எனப்படுகிற கலைப்பொருள் விற்பனையாளரின் திடகாத்திரமான காலில் பட்டென்று தட்டுவாள். அடுத்த கட்டத்தில், மகிழ்ச்சியும் ஆரவாரமும் வரம்பு கடந்து பெரும் களேபரமாக வெடிக்கும். கார்க்கரன் அல்லது காரன்ஸ்கி, சிந்தியாவை அல்லது அந்தப் பக்கமாகப் போகும் வேறு ஏதாவதொரு பெண்ணை தோளைப் பற்றி, அறையின் மூலைக்கு அழைத்துச் சென்று, பல் இளித்தபடி, ஆபாசமான நகைச்சுவைகளையோ, அந்தரங்கமான கிசுகிசுக்களையோ சொல்வான். அவளும் தலையாட்டிச் சிரித்தபடி அங்கிருந்து அகன்று செல்வாள். அதற்குப் பிறகு அங்கு பால்பேதமற்ற நெருக்கங்களும், கோமாளித்தனமான சமரசங்களும் சுழன்றடிக்கும். ஒருத்தியின் கணவனை (அவன் அறையின் நட்ட நடுவில் நின்றுகொண்டிருப்பான்) இன்னொருத்தியின் கொழுத்த கை வளைத்திருக்கும் அல்லது யாரோ யாரிடமோ செல்லக் கோபம் காட்டுவார்கள் அல்லது யாரோ யாரையோ விளையாட்டாய்த் துரத்துவார்கள். இவ்வளவுக்கும் மத்தியில் பாப் வீலர் அமைதியான அரைப் புன்னகையோடு, நாற்காலிகளுக்குக் கீழே காளான் முளைத்ததுபோல் ஆங்காங்கே, விருந்தினர்கள் குடித்துவிட்டு வைத்திருக்கும் காலி மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டிருப்பார்.

அதுபோன்றதொரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சிந்தியாவுக்கு, சாதாரணமாக, ஆனால் நல்ல மாதிரியாக ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய விருந்தினர்கள் சிலரைப் பற்றி அதில் விளையாட்டாய்க் கேலி செய்திருந்தேன். மேலும் அவளுடைய விஸ்கியைத் தொடாததற்கு மன்னிப்பும் கோரியிருந்தேன். பிரெஞ்சுக்காரனாகிய எனக்கு தானியத்தை விடவும் திராட்சையே பெரும் விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, பொது நூலகத்தின் படிக்கட்டில் அவளைச் சந்தித்தேன். மேகமூட்டத்துடன் லேசான தூறலும் இருந்தபோது, கக்கத்தில் இரண்டு புத்தகங்களை இடுக்கிக்கொண்டு, அவளுடைய அம்பர் வண்ணக் குடையை விரிக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு நொடி அந்த இரண்டு  புத்தகங்களையும் நான் வாங்கிக்கொண்டு அவளுக்கு ஆசுவாசம் அளித்தேன். ஒன்று ராபர்ட் டேல் ஒவன் எழுதிய ‘இன்னொரு உலகின் எல்லையில் காலடித்தடங்கள், மற்றொன்று ‘ஆவியுலகும் கிறிஸ்தவமும்’ போல் ஏதோ ஒன்று.

என் தரப்பிலிருந்து எந்தத் தூண்டுதலும் இல்லாமல், திடீரென்று உணர்ச்சிக் கொந்தளிப்புடன், வக்கிரமான, விஷம் தோய்ந்த வார்த்தைகளால் அவள் பாட்டுக்கு என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். நான் ஒரு போலி பகட்டுக்காரன் என்றும் நயவஞ்சகன் என்றும் வெளித்தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் கொண்டே மனிதர்களை எடைபோடுகிறேன் என்றும், அந்த கார்க்கரன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் இருவேறு கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருந்த இரண்டு பேரைக் (தற்செயல் ஒற்றுமையாக இருவரது பெயருமே கார்க்கரன்) காப்பாற்றியவன் என்றும், கூச்சலும் கும்மாளமுமாய் இருந்த ஜோன் வின்டருக்கு பார்வைக் குறைபாடுள்ள சிறிய பெண் குழந்தை இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அவள் முற்றிலும் பார்வை இழந்துவிடுவாள் என்றும் நான் அன்று காரணமின்றி அவமானப்படுத்திய பச்சை உடையணிந்து, மார்பில் கரும்புள்ளிகளைக் கொண்டிருந்த பெண்மணி, 1932-ஆம் ஆண்டு தேசிய அளவில் அதிக விற்பனையான புதினத்தை எழுதியவள் என்றும் சொன்னாள்.

என்னவொரு விநோதமான சிந்தியா! யாரை அவள் அதிகம் நேசிக்கிறாளோ, யார் மீது மரியாதை வைத்திருக்கிறாளோ, அவர்களிடம் அவள் மிகக் கடுமையாக நடந்துகொள்வாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தருணத்தில் இருவருக்கும் இடையில் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது அவசியம். ஏற்கனவே அவளுடைய ஆர்வக்கோளாறான ஒளிவளையங்களைப் பற்றியும் மற்ற முட்டாள்தனங்களைப் பற்றியும் ஓரளவு நான் அறிந்திருந்ததால் அதன் பிறகு அவளைப் பார்ப்பதை முற்றிலும் கைவிட்டேன்.

6

சிந்தியா இறந்துவிட்ட தகவலை டி. என்னிடம் தெரிவித்த அன்று இரவு பதினொரு மணிக்குப் பிறகு நான் வசித்த, இரண்டுதளக் குடியிருப்புக்குத் திரும்பினேன். ஒரு தளத்தில் நானும் மற்றொரு தளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரின் விதவை மனைவியும் குடியிருந்தோம். தாழ்வாரத்தை அடைந்ததும், தனிமைப் பயம் பீடிக்க, அடுத்தடுத்து இருந்த இரண்டு ஜன்னல்களின் ஊடாக இரண்டு வகையான இருட்டைக் கண்டேன். ஒன்று இல்லாமையின் இருண்மை. மற்றொன்று தூக்கத்தின் இருள். 

முதலாவது இருட்டைப் போக்க என்னால் ஏதாவது செய்ய இயலும். ஆனால் இரண்டாவது குறித்து எதுவும் செய்ய இயலவில்லை. என்னுடைய படுக்கை எனக்குப் பாதுகாப்பான உணர்வைத் தரவில்லை. அதன் சுருள்வில் அதிர்வுகள் என்னை மேலும் நடுக்கமுறச் செய்தன. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களுள் மூழ்க முனைந்தேன். முட்டாள்தனமாக என் கவனமெல்லாம் பாடல் வரிகளின் முதல் எழுத்துகளைக் கொண்டு அவை உருவாக்கும் சங்கேத வார்த்தைகள் என்னென்ன என்ற தேடலில் ஈடுபட்டது.

70-ஆம் பாவில் FATE, 120-ஆம் பாவில் ATOM, இருமுறை 88 & 131-ஆம் பாக்களில் TAFT[7] என்ற வார்த்தைகளும் என் கண்களுக்கு அகப்பட்டன. என் அறையிலிருந்த பொருட்களின் தன்மையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டேன். திடீரென்று அங்கே ஒரு வெடிகுண்டு விழுந்தால் கூட, சூதாட்டக்காரனின் ஆர்வக்களிப்பை விடவும் அதிகமாகவே அதை நான் எதிர்கொள்வேன் (அது எவ்வளவு பெரிய நிம்மதி) என்றும் அதே சமயம், என் அறையின் அலமாரிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய புட்டி, துளி அங்குலம் நகர்ந்தால் கூட என் இதயம் வெடித்துச் சிதறிவிடும் என்றும் நினைக்கும்போது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

எங்கிருந்து வருகிறது என்று அறியவியலாத நுட்பமான ஒலி கூட பெரும் அதிர்ச்சியைத் தரும் வகையில், யாரோ வேண்டுமென்றே பின்னணியில் உருவாக்கியதைப் போன்று சந்தேகத்துக்கிடமான வகையில், அறையின் அமைதி மிக அடர்த்தியாக இருந்தது. போக்குவரத்து சந்தடிகள் ஓய்ந்துபோயிருந்தன. பெர்கின்ஸ் தெருவில் ஏதேனும் கனரக வாகனம் செல்லும் சத்தத்துக்கான என் பிரார்த்தனையும் பயனின்றிப் போயிற்று. மேல்தளத்தில் வசிக்கும் பெண்மணி வழக்கமாய், பெரிய குதிகால் காலணியை அணிந்துகொண்டு டொக் டொக் என்று நடக்கும்போது அந்தச் சத்தம் என்னை எரிச்சலடையச் செய்யும். (அவள் குள்ளமாய் குண்டாய் எப்போதும் சோகம் இழையோடும் முகத்துடன் பார்ப்பதற்கு, பதப்படுத்தப்பட்ட சீமைப் பெருச்சாளியைப் போன்று காணப்படுவாள்) ஆனால் இன்று, கழிவறைக்குச் செல்லும் பொருட்டு இப்போதும் அப்படி நடந்திருந்தால் நிச்சயம் அவளை ஆசீர்வதித்திருப்பேன். விளக்கைப் போட்டும் அணைத்தும், தொண்டையைச் செருமியும், எனக்கு நானே பல முறை சத்தமெழுப்பிக் கொண்டேன். தொலைதூர வாகனம் ஒன்றில் மனக்கண்ணால் ஏறிப்  பயணிக்கத் தொடங்கினேன். ஆனால், கண்கள் சொக்கும் முன்பே அதிலிருந்து இறங்க நேர்ந்துவிட்டது. திடீரென்று ஏதோ காகிதம் கசங்கும் சத்தம் (இறுக்கமான இரவுப்பூவொன்று மலர்வதைப் போன்று கசங்கிய தாள் விரிவதாக கற்பனை செய்தேன்) குப்பைக் கூடையிலிருந்து கேட்டது. என்னுடைய படுக்கையை ஒட்டிய மேஜையில் சின்னதாக டிக் என்ற சத்தமும் கேட்டது. சிந்தியாவின் ஆவி, தன்னுடைய மட்டமான விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்று தோன்றியது. நான் சிந்தியாவை எதிர்த்து நிற்க முடிவு செய்தேன்.

1848-ஆம் ஆண்டு நியூயார்க்கின் ஹைட்ஸ்வில் என்னும் உட்கிராமத்தில் தட்டுதல் மூலம் இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொள்வதில் தொடங்கி, கேம்ப்ரிட்ஜ்ஜின் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற கோரமான தோற்றப்பாடுகள் வரை நவநாகரிக யுகத்தின் ஆவி மற்றும் அமானுஷ்யம் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மனதுக்குள் மதிப்பாய்வு செய்தேன். கணுக்கால் எலும்புகளையும் இன்ன பிற மூட்டுகளையும் பயன்படுத்தி ஆவிகளோடு தொடர்பு கொண்ட (பஃபல்லோ பல்கலைக்கழக அறிஞர்களின் கூற்றுப்படி) ஃபாக்ஸ் சகோதரிகள்; பண்டைய பெரு நாட்டில் ஏற்பட்டது போலவே எப்வர்த் அல்லது டெட்வர்த்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உண்டான ஒரே மாதிரியான மர்மமான மனநோய்[8]; புனிதமான இசையொலிக்கு ரோஜாக்கள் வீழும், அக்கார்டியன் இசைக்கருவிகள் மிதக்கும் விக்டோரியா காலத்து வெறியாட்டங்கள்; எக்டோபிளாசத்துக்கு[9]  பதிலாக ஈரமான பாலாடை வடிகட்டும் சல்லாத்துணியைப் பயன்படுத்தும் தொழில்முறை மோசடிப் பேர்வழிகள்; ஆவியுலக ஊடகப் பெண்மணி ஒருவரின் மதிப்புக்குரிய கணவரும், சோதனைக்கு உட்படுத்தியபோது, தான் அழுக்கான உள்ளாடை அணிந்திருந்ததைக் காரணமாய்க் கூறி சோதனைக்கு உடன்பட மறுத்தவருமான திரு.டங்கன்; பாஸ்டனில் ஒரு ஓய்வுநேரப் பிரார்த்தனையின்போது, வெற்றுக்கால்களும் துளையிடப்படாத காதுமடல்களுமாய் கண்முன் நின்ற வெள்ளை உருவத்தை, திரைச்சீலை இடப்பட்ட மூலையில் சற்று முன்பு தான் பார்த்தபோது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த, கருப்பு உடையும் இறுக்கமான பாதணிகளும், தோடுகளும் அணிந்திருந்த பணிப்பெண் மிஸ் குக்தான் என்பதை நம்ப மறுத்த அப்பாவி இயற்கை ஆர்வலர் ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ்; யூசாப்பியா[10]  என்ற பெரிய, பருத்த உருவம் கொண்ட, சகிக்கவியலாத, வீச்சம் அடிக்கும் முதிய பெண்மணியைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபோதும் கூட, தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட, குள்ளமாகவும், நோஞ்சானாகவும், ஆனால் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருந்த இரண்டு புலனாய்வாளர்கள்; குளியல் அங்கி அணிந்திருந்த நிலையில், கண்ணை மூடிக்கொண்டு, இடப்பக்கக் காலுறையைத் தடவிக்கொண்டே தொடைவரை செல்லுமாறு இளம்பெண் மார்கரியின் இனிமையான குரல் வழியே அவரை வழிநடத்திய ஆவி மூலம் அதைச் செய்து, கதகதப்பான தொடை மீது கொழகொழப்பான குளிர்ச்சியான, சமைக்கப்படாத பச்சை ஈரலைத் தொட்ட உணர்வடைந்த, அவமானத்துக்கு ஆளான, ஆவியுலக நம்பிக்கையற்ற மாயவித்தைக்காரர் என வரிசையாக நினைவுகூர்ந்தேன்.

7

உடலற்ற என் இருப்புக்கான சாத்தியத்தை மறுக்கவும் தோற்கடிக்கவும் என் சதைப்பிண்டத்திடம்[11], அதன் குற்றங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். ஐயோ! இந்த உச்சாடனங்களே சிந்தியாவின் அமானுஷ்யத்தன்மையின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்தன. விடியற்காலையில் மீண்டும் பழைய அமைதி திரும்பி, நான் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, ஜன்னல் வழியாக செம்பழுப்பு நிறக் காலைக் கதிரொளி, சிந்தியாவால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த என் கனவை ஊடுருவித் துளைத்தது. 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பகல் வெளிச்சம் என்னும் பாதுகாப்பான கோட்டைக்குள் இருக்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் கனவு நீடித்திருக்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். பிரகாசமான, மிகத் துல்லியமான ஓவியங்களை வரையக்கூடிய சிந்தியா இப்போது அவளே உருவற்றவளாக, தெளிவற்றவளாக இருக்கிறாள். படுக்கையில் படுத்தபடி, வெளியிலிருந்து வரும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, நான் கண்ட கனவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

மனிதர்கள் பேசுவதை ஒலிப்பதிவு செய்து, பின்னோக்கி ஓடவிட்டால் கீச் கீச் என்று சத்தம் கேட்பது போல, ஒருவேளை இந்த சிட்டுக்குருவிகளின் கீச்சுச் சத்தத்தை ஒலிப்பதிவு செய்து பின்னோக்கி ஓடவிட்டால், மனிதர்களின் பேச்சு போல, வார்த்தைகளை வெளிப்படுத்துமோ என்னவோ? யாருக்குத் தெரியும்? நான் என்னுடைய கனவை மறுபடி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினேன். முன்னாலிருந்து பின்னால், பின்னாலிருந்து முன்னால், குறுக்குவாக்கில், மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக என பல பரிமாணங்களில், சிந்தியாவைப் போன்ற ஏதாவது ஒன்று, விநோதமாக, விசித்திரமாகத் தென்படுகிறதா என்று கடும் பிரயத்தனத்தோடு அதற்குள் தேடினேன்.        

என்னால் கொஞ்சம்தான் ஆராய முடிந்தது. மஞ்சள் நிறத்தில் மேகமூட்டம் போல் சூழ்ந்து என்னை எதையும் யோசிக்கவிடாமல் செய்தது. எல்லாமே தெளிவற்று மங்க ஆரம்பித்தன. சிந்தியாவுடைய கத்துக்குட்டித்தனமான வார்த்தை விளையாட்டுகள், பசப்பும் பாசாங்குமான ஏமாற்றுவித்தைகள், ஆன்மீக வெறியாட்டங்கள் என நினைவடுக்கில் வந்த யாவும் ஏதோ மர்மமான பொருளைத் தருவதுபோல் தோன்றின. எல்லாமே மஞ்சளாகி, மங்கி, மாயமாகித் தொலைந்து போயின.

பின்குறிப்பு – மூலக்கதையான ஆங்கிலத்தில் கடைசி பத்தியின் முதல் எழுத்துகளை வரிசைப்படுத்தும்போது ‘பனிக்கூரிகள் சிந்தியாவால், தரிப்பிட மானி என்னால் – சிபில்!’ என்பதாக இருந்தது அது.


[1] பனிக்கூரிகள் (icicles) – கூரையின் மேற்பரப்பிலிருந்து உருகிச் சொட்டும் நீர்த்தாரைகள் உறைந்த நிலையில் ஒன்றிணைந்து, கூரான கத்திகளைப் போன்று தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும்.

[2] வாகனத் தரிப்பிட மானி – Car parking meter

[3] ஸ்லாவ் மக்கள் – மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்களுடைய மொழி ஸ்லாவோனிக் மொழி.

[4] ஸ்கங்க் (skunk) – தமிழில் முடைவளிமா எனப்படும் கருப்பு வெள்ளை நிற விலங்கு. ஆபத்து நேரத்தில் எதிரியின் மீது அது பீச்சும் திரவத்தின் முடை நாற்றம் கடுமையாக, சகிக்கமுடியாததாக இருக்கும்.

[5] அழியாக் கவிதை – கனவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘குப்ளா கான்’ (அல்லது கனவுக்காட்சி) என்ற கவிதையை எழுதியவர் கவிஞர் சாம்வேல் டெய்லர் கோல்ரிட்ஜ். 1797-ஆம் ஆண்டு ஒருநாள் இரவு தூங்கும்போது (அபின் போதையில் இருக்கும்போது என்றும் சொல்லப்படுகிறது) கவிஞருக்கு இக்கவிதை வரிகள் தோன்றியதாகவும் மறுநாள் அவ்வரிகளை நினைவிற்கொண்டுவந்து கவிதையை இயற்றிக் கொண்டிருக்கும்போது, பக்கத்து ஊரான போர்லாக்கிலிருந்து எதிர்பாராமல் வந்த ஒருவரால் எழுத்து தடைபட்டு பிறகு வரிகள் நினைவுக்கு வராமல் கவிதை முற்றுப்பெற இயலாமலேயே போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது. அதனால் விறுவிறுப்பானப் படைப்பாற்றலுக்கு இடையூறு தருபவர்களை ‘போர்லாக்கின் ஆள்’ அல்லது ‘போர்லாக்’ என்று அங்கதமாகக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.

[6] கருத்துத்திருட்டு – ஆஸ்கார் வைல்ட் எழுதி 1890-ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ‘The Picture of Dorian Gray’. சிபில் வேய்ன் என்ற கதாபாத்திரம் அதில் இடம்பெற்றுள்ளது.

[7] வில்லியம் ஹோவார்ட் டஃப்ட் – ஐக்கிய அமெரிக்காவின் 27-வது குடியரசுத் தலைவராக 1909 முதல் 1913 வரை பதவி வகித்தார். பின்னாளில் 1921-1930 வரை ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதியாக இருந்தார். இரண்டு பதவிகளையும் வகித்த ஒரே ஆளுமை என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

[8] 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்னமெரிக்காவை (கொலம்பஸால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கா) இன்கா பழங்குடிப் பேரரசு ஆட்சி புரிந்தது. இன்கா மக்கள் அனைவருக்கும் பொதுவான, காரணம் புலப்படாத மனநோய் இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இன்கா மக்களை மட்டுமன்றி அரச குடும்பத்தையும் இந்நோய் பீடித்ததாகத் தெரிகிறது. தாவரங்களும் தாதுக்களும் அதற்கான சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.

[9] எக்டோபிளாசம் – அமானுஷ்யக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிசுபிசுப்பான, அருவருப்பான, மர்மமானப் பொருளைக் குறிக்கும்.

[10] யூசாப்பியா பல்லாடினோ – பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஆவியுலகத் தொடர்பாளர். அவரது அமானுஷ்ய நிகழ்வுகள் யாவும் ஏமாற்றுவித்தைகளே என்று நிரூபிக்க முயன்ற பல மாயவித்தைக்காரர்களும் தந்திரவாதிகளும், இறுதியில் யூசாப்பியா ஒரு புத்திசாலி தந்திரி என்ற முடிவுக்கு வந்தனர். 

[11] தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன், மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். – பரிசுத்த வேதாகமம், கலாத்தியர் அதிகாரம் 6.8

மூல ஆசிரியர் குறிப்பு:

விளாதிமிர் நபகோவ் (1899-1977)

ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், மற்றும் பூச்சியியல் வல்லுநர். முக்கியமாக வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிய இவரது ஆய்வுக் குறிப்புகளும் உலகளாவிய வண்ணத்துப்பூச்சிகள் சேகரிப்பும் இன்றும் விஞ்ஞானிகளால் வியப்புடன் பார்க்கப்படுகின்றன. இவர் தன் எழுத்து மூலம் கிடைத்த வருவாயை வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிக்காகவே செலவழித்தார்.

1919-ஆம் ஆண்டு அவரது குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. நபகோவ் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஸ்லாவிக் மற்றும் ரோமானிய இலக்கியங்களில் பட்டம் பெற்றார். அதன்பின் குடும்பம் பெர்லினில் குடியேறியது. ஒரு பதிப்பகத்தாரின் வேண்டுகோளின்படி ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் கதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புதான் இவருடைய முதல் படைப்பு.

இவரது ‘லோலிடா’ நாவல் மிகப் பிரசித்தமானது. ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் பல படைப்புகளை அளித்துள்ளார். விளாதிமிர் சிரின் என்பது இவரது புனைபெயர். 

1951-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘வேய்ன் சகோதரிகள்’ கதையை New Yorker பத்திரிகை வெளியிட மறுத்து, திருப்பி அனுப்பிவிட்டது. நபகோவ் அதன் எடிட்டருக்கு அக்கதையின் கட்டமைப்பைப் பற்றியும் மறையெழுத்துப் புதிர் பற்றியும் விளக்கி எழுதினார். கடைசி பத்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டு கதையின் முடிச்சை அவிழ்ப்பது, ‘இலக்கியத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு The Hudson Review பத்திரிகையில்தான் முதன் முதலாக இக்கதை வெளியானது. 1961-ஆம் ஆண்டு நபகோவும் அவர் மனைவியும் சுவிட்சர்லாந்தின் மாண்ட்ரியூ நகருக்குச் சென்று தங்கினர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அங்கேயே எழுத்திலும் வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியிலும் கழித்த நபகோவ், தனது 78-வது வயதில் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

The post வேய்ன் சகோதரிகள்-விளாதிமிர் நபகோவ் first appeared on கனலி.

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 34

தாய்மையின் பூரிப்பில் புது தாமரைப்பூவாய் மலர்ந்த முல்லையை பட்டு வேஷ்டி சட்டையில் கையை கட்டி நின்று இரசித்துக்கொண்டிருந்தான் வல்லவராயன். 

“மாப்பிள்ளை எல்லாரும் நலங்கு வச்சாச்சு நீங்க வந்து நலங்கு வைங்க” என்றார் நீலகண்டன்.

அவனோ முல்லையின் பக்கம் நின்ற நதியாவின் கையை பிடித்து வந்தவன் “முல்லை நதியாவுக்கு வளையல் போட்டு விடு” என்றவுடன் அங்கிருந்த பெண்கள் கூட்டம் “அட நமக்கு  கூட இந்த யோசனை தோணலையே” என்று பேசி சிரித்தனர்.

முல்லை நதியாவுக்கு வளையலை போட்டு “அடுத்த வருஷம் உனக்கும் வளைகாப்பு நடக்கும்டி” என கன்னக்குழி தெரிய சிரித்தாள். 

நதியாவுக்கோ கை நிறைய வளையல் போட்டதும் தானும் கூடிய விரைவில் தாய்மை அடைய போகிறோம் என்ற சந்தோசம் பூரிப்பில் கையை தூக்கி வளையல் ஓசையை இரசித்தவள் தன்னவன் எங்கே நிற்கிறான் என்று கூட்டத்தை சுற்றிப்பார்த்தாள். 

பாலாஜி ராயன் பக்கம்தான் நின்றிருந்தான்..  பாலாஜி மட்டும் தனியே நிற்க அவனுடன் சென்று பக்கத்தில் நின்றவள் “என் கைக்கு கண்ணாடி வளையல் நல்லாயிருக்கா மாமா?” என்றாள் கண்களை உருட்டி.

“உன் அண்ணன் வாங்கி கொடுத்த வளையல் நல்லாயிருக்காமலா இருக்கும் நல்லாயிருக்கு ஆனா இன்னிக்கு நைட் இந்த வளையல் எல்லாம் உடைஞ்சிடுமே” என்றான் கூட்டத்தை சுற்றிப்பார்த்தபடியே கன்னத்தின் உள்ளே நாக்கை சுழட்டியபடி.

நதியா முதலில் கணவன் கூறியது புரியாமல் விழித்தவள் அவன் சிரிப்பில் கள்ளம் இருக்க அடுத்த நொடி அவன் சிரிப்பிற்கான காரணம் புரிந்து அவனை செல்லமாய் முறைத்தவளின்  கன்னம் செங்காந்தள் மலராக மலர்ந்தது.

கோமளமோ இருவரின் செயலை கண்டு “இத்தனை சொந்த பந்தங்கள் கூடி இருக்கற  இடத்துல நின்னுக்கிட்டு ரெண்டும் சேர்ந்து அலப்பறை பண்ணுதுங்க எல்லாம் கலி காலம்” என்று மகளை முறைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். மகள் மருமகனிடம் சந்தோசமாக இருக்கிறாளென்று ஆனந்தப்படாமல் பொங்கிவிட்டுச் சென்றார். இன்னும் பாலாஜியை அவரால் மருமகனாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

பாக்கெட்டில் வைத்திருந்த முத்து பதித்த வளையலை முல்லைக்கு போட்டு விட்டு அவளது கன்னத்தில் சந்தனத்தை தடவிவிட்டு யாரும் அறியாமல் இதழ் குவித்து முத்தமிட்டான் ராயன்.

“ம்ம் எல்லாரும் இருங்காங்க மச்சான்” என்று அவளது செர்ரி பழ உதடுகள் அசையவும் அவளது இதழ்களை கவ்விக்கொள்ள ஆசைப்பட்ட மனதை அடக்கிக்கொண்டு எழுந்து நின்றான்.

ராயனுக்கும் முல்லைக்கும் வளைகாப்பு சாப்பாடு முதலில் பரிமாறிவிட்டு சொந்தங்களுக்கு சாப்பாடு பரிமாறினார்கள்.

தென்னரசுவும் பாலாஜியும் பந்தியை கவனித்தனர். சாம்பார் ஊற்றிக்கொண்டு வந்த பாலாஜியோ கோமளம் அமர்ந்து சாப்பிடுவதை கண்டு பக்கத்து இல்லைக்கு சாப்பாடு வைத்துக்கொண்டிருந்த தென்னரசுவின் தோளில் இடித்ததும் “சொல்லுடா” என்று திரும்பினான் தென்னரசு. 

“என் மாமியார் என்னை பார்த்ததும் எழுந்து போய்டுவாங்க நீ குழம்பு ஊத்துடா” என்று தென்னரசுவிடமிருந்து சாப்பாடு பாத்திரத்தை வாங்கிக்கொண்டான் பாலாஜி.

“சீக்கிரம் குழந்தை பெத்து பெரியம்மா முகத்துல உச்சா போக வைடா அதுக்கப்புறம் பாரு மாப்பிள்ளை மாப்பிள்ளைனு உன்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடுவாங்க” என்றான் கிண்டலுடன்.

“அட போடா உங்க பெரியம்மாவுக்கு இந்த ஜென்மத்துல முதல் எதிரி நானாத்தான் இருக்கும் அங்க பாரு என்னை பார்த்து எப்படி முறைக்குறாங்க என்ன என்னை ஒன்னுமில்லாதவன்னு சொல்லும் போது கஷ்டமாத்தான் இருக்கு! பட் எனக்கு அவங்க ஒதுக்கத்தால முன்னேறணும்னு ஒரு உத்வேகம் வருது. என்னை மோட்டிவேட் பண்ணுறாங்க ஒருவகையில சந்தோசம்தான் என் நண்பன் ராயனுக்காக என்னை யார் என்ன பேசினாலும் நான் சகிச்சுக்கிட்டு இருப்பேன்டா” என்றான் கண்ணைச்சிமிட்டி.

“நீ நல்லவன்டா உன்னை பெரியம்மா ஏத்துப்பாங்க காலம் வரும்டா பந்தியை கவனிப்போம்” என்று வேலையை பார்த்தனர் இருவரும்.

வளைகாப்பில் ஒரே இடத்தில உட்கார்ந்ததில் முல்லை சோர்ந்து போய் விட்டாள். வளைகாப்பு முடித்ததும் “ரெஸ்ட் எடுமா” என்று அழகம்மை அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.

சொந்தங்களை வழியனுப்பி வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தான் ராயன். நகைகளை கழட்டிக்கொண்டிருந்தவளின் கையை பிடித்து “நீ ஸ்டெய்ன் பண்ணிக்காதே புள்ள நான் உதவி பண்ணுறேன்” என்று அவளது கழுத்தில் போட்டிருந்த நகைகளை அகற்றி விட்டு “சேலையை மாற்றிவிட உதவட்டுமா?” என்று அவளது காதில் மீசையை உரசினான்.

“மச்சான் நம்ம வீடு முழுக்க சொந்தம்  நிறைஞ்சு இருக்காங்க என்ன பண்ணுறீங்க நதியாவும் பாலாஜி அண்ணாவும் கிளம்பணும்னு சொல்லிட்டிருந்தாங்க அவங்கள வழி அனுப்பி வச்சிட்டு வந்து வைச்சுக்கலாம் நம்ம ரொமான்ஸை” என்றாலும் அவனது தாடையை பிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“இந்த முத்தம் உன் மச்சானுக்கு பத்தாதுடி” என்று அவளது கன்னத்தோடு கன்னம் இழைந்தவன் அவளது இதழில் அவளுக்கு வலிக்காவண்ணம் முத்தாடினான்.

ராயன் போன் சிணுங்கவும் “கொஞ்சம் நேரம் முத்தம் கொடுக்க விடமாட்டானுங்களே கரடி போல வந்துடுவாங்க” என்ற சலிப்புடன் மனைவியின் இதழை விட்டு பிரிந்தவன் “ரொம்ப பண்ணுறாங்கடி” என்று பெரும்மூச்சுவிட்டு “சொல்லு மாப்பிள்ளை” என்றான் கோபத்தை விட்டு.

“நா.நாங்க கிளம்புறோம்டா” என்ற பாலாஜியை

“இப்ப என்ன அவசரம் கிளம்புறேனு பறக்குற… பால்கறக்க நம்ம பண்ணையிலிருந்து ரெண்டு ஆளை அனுப்பி வச்சிருக்கேன் நைட் கிளம்பலாம்” என்று பேசிக்கொண்டே கதவு திறந்து வந்தான்.

நதியா தையல்நாயகி கொடுத்த பலகாரப் பையை கையில் வைத்து ரெடியாக நின்றாள்.

“பாப்பா நைட் இருந்துட்டு காலையில கிளம்பலாம்” என்று அவளது கையிலிருந்து பையை வாங்கினான் ராயன்.

“அண்ணா நாங்க கிளம்பறோம் என்வீட்டுக்காரருக்கு மரியாதை இல்லாத இடத்துல என்னால ஒரு நிமிசம் இருக்க முடியாது” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“உன் மேல இருக்க கோபம் போகணும்னா நீ அடிக்கடி வந்து போக இருக்கணும் பெரியம்மா  மனசு மாறிடுவாங்க… சும்மா கத்துவாங்களே தவிர மனசுல எதையும் வச்சிக்கமாட்டாங்கடா ஒருநாளைக்கு அண்ணா கூட இருக்க மாட்டியா” என்றான் பாசக்குரலில் தங்கையின் தலையை வருடிக்கொண்டே.

“ம்க்கும் போறவங்களை ஏன் இழுத்து பிடிச்சு வைப்பானேன் போகட்டும் விடு ராயா” என்றார் அடக்கமாட்டாமல் கோமளம்.

“இதுக்கு மேல இங்க இருக்கணுமா அண்ணா நாங்க ஒண்ணும் இல்லாதவங்க கிடையாது நீங்களெல்லாம் மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும்படி நாங்களும் உயரத்துக்கு வருவோம்… உங்களை விட பெரிய பால்பண்ணையா வைப்போம்… இப்போ நாக்கு மேல பல்லை போட்டு எங்களை கேலி பேசறவங்களெல்லாம் அப்போ எங்க முகத்தை கொண்டு வச்சிப்பாங்கனு பார்க்குறேன்” என்று பொரிந்து தள்ளி விட தன்னை விட்டுக்கொடுக்காத மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த பாலாஜியின் கையை பிடித்து “வாங்க போகலாம்” என்று நாயகி கொடுத்த பலகாரப்பையையும் வாங்காமல் வைத்து விட்டுச் சென்றாள் கோபத்துடன்.

“ஏன் அக்கா இப்படி பேசுனீங்க வீட்டு புள்ளை மனம் நோக அனுப்பக்கூடாது” என்று ராயன் கையில் இருந்த பலகாரப் பையை வாங்கிக் கொண்டு ஓடினார் தையல்நாயகி. அழகம்மையும் கோமளத்தை முறைத்து விட்டு நாயகி பின்னே சென்றார்.

ராயனோ “இப்போ திருப்தியா பெரியம்மா நம்ம வீட்டுப் பொண்ணை நாமளே மதிக்கலைனா எப்படி!” என்று கடுப்பாக பேசியவன் வாசலுக்குச் சென்றான்.

பாலாஜி காரில் ஏறிவிட்டான் கார் கதவை வேகமாக திறந்தவளின் கையை பிடித்து நிறுத்தி விட்டான்.

தையல்நாயகியோ “பாப்பா உனக்கு பிடிக்குமேனு அதிரசமும், ரவாலட்டும், இனிப்பு சீடையும் செஞ்சு வைச்சிருக்கேன். உன் கோபத்தை தள்ளி வைச்சுட்டு சித்தி செய்த பலகாரங்களை வாங்காம போனா என் மனசு தாங்காது தங்கம்” என்று மகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் நாயகி.

அழகம்மையோ “அண்ணி இவ்ளோ தூரம் சொல்லும்போது நீ பலகாரப் பையை வாங்காம இருக்க நதியா… இதுதான் எங்களுக்கு நீ கொடுக்கற மரியாதையா?” என்று சிடுசிடுக்கவும் 

“என்னை மன்னிச்சிடுங்க அத்தை இந்த வீட்டு ராஜமாதா எங்களை மதிக்காம பேசுறாங்க.   எப்படி இந்த பலகாரத்தை கொண்டு போறது.  ஏதோ எங்ககிட்ட ஸ்வீட் வாங்க காசு இல்லாத மாதிரி இருக்கு இந்த பலகாரத்தை எடுத்துட்டு போறது போல இருக்கு அத்தை” என்று மூச்சு வாங்க பேசினாள் நதியா.

ராயனோ “நல்லா பேசக் கத்துக்கிட்ட பாப்பா இப்போ பையை வாங்க போறியா இல்லையா?” என்று அதட்டல் போட்டதும் பாலாஜியை  பார்த்தாள் நதியா.

“வாங்கிட்டு வா” என உதடசைத்தான் பாலாஜி.

“ஓ மெயின் ஸ்விட்ச் அங்க இருக்கா..? உங்க வீட்டு விசேஷம் வரும்ல அப்போ நானும் இதே போல நடந்துக்குறேன்” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“அச்சோ அண்ணா நான் சும்மா ஏதோ பேசிட்டேன் எனக்கு உன்னை விட்டா யாரு ண்ணா சொந்தம்னு இருக்காங்க அம்மா பேசினதும் கோபம் வந்துருச்சு” என்று ராயன் நெஞ்சில் சாய்ந்து விசும்பினாள்.

“அத்தையோட இயல்பு குணம் உனக்கு தெரியும்தானே நதியா எங்க வீட்டு இளவரசி இப்படியே அழுதுக்கிட்டே இருந்தா எப்படி” என்று கட்டைப்பையில் பழங்களை கொண்டு வந்து பாலாஜியின் காரில் வைத்தாள் தீபா.

“நான் பலகாரமே வேணாம்னு சொல்றேன் நீங்க என்ன அண்ணி இத்தனை பழங்களை கொண்டு வந்து வைக்குறீங்க?” என்று முகத்தை தூக்கினாள்.

“ரொம்ப பண்ணாதடி நாங்க பாசமா கொடுக்கறதை ஒழுங்கா வாங்கிட்டு போ” என்று செல்ல கோபத்துடன் வயிற்றை பிடித்துக்கொண்டு நடந்து வந்தாள் முல்லை. 

முல்லையை பார்த்ததும் கோபம் குறைந்து நதியாவின் முகத்தில் லேசாக சிரிப்பு வந்தது.

கண்ணனோ கையில் நகைப்பெட்டியுடன் வந்தவன் “பாப்பா உனக்கு அண்ணாவோட கிஃபிட்” நகைப் பெட்டியிலிருந்து செயினை தங்கையின் கழுத்தில் போட்டு விட போக “நான் சாப்பிடற பொருளையே வேணாம்னு சொல்லுறேன் நீங்க தங்கத்துல செயினை போட்டு விடுறீங்க அண்ணா… எனக்கு உங்க அன்பு ஒண்ணே போதும். நம்ம குடும்பத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தின எனக்கு இன்னும் பாசத்தை குறையாம அள்ளிக்கொடுக்குறீங்க… எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினேனோ தெரியல” என்றாள் கண்ணனின் கையை பிடித்துக்கொண்டு கண்கள் கலங்கினாள் நதியா.

“அழுது சீன் போட்டு நகையை ஆட்டைய போட்டுட்டு போறா பாரு” என்று ஹாலுக்குள் அமர்ந்துக் கொண்டு பொருமினார் கோமளம்.

“மாப்பிள்ளை காரை விட்டு இறங்கி வாங்க” என்றார் தெய்வநாயகம்.

காரை விட்டு இறங்கி வந்த பாலாஜியோ தெய்வநாயகம் பக்கத்தில் சென்றவன் “அப்பா என்னை மாப்பிள்ளைனு மரியாதை கொடுத்து பேசாதீங்க… வழக்கம் போல பேரு சொல்லியே கூப்பிடுங்க” என்றான் சங்கோஜத்துடன்.

“ராயன் நண்பனா இருக்கும்போது பேரு சொல்லி கூப்பிடலாம் தப்பில்ல…  இப்போ எங்க வீட்டு மருமகனை வா போனு கூப்பிட முடியாதுப்பா” என்று சிரித்தவரோ ராயனை பார்த்தார்.

அவனோ பாக்கெட்டில் வைத்திருந்த டாலர் செயினை எடுத்து “வாசல்ல வைச்சு கொடுக்குறேனு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை என் தங்கச்சி வீட்டுக்குள்ள நிற்கமாட்டேன்குறா வாசலில் வச்சு உங்களுக்கு சீர் பண்ணுறோம்” என்று ராயனின் குரல் வருத்தப்பட்டு வந்தது.

“என்ன ராயா இப்படியெல்லாம் பேசற உன் பாசம் எனக்கு எப்போதும் போதும் நகையெல்லாம் வேணாம் அப்புறம் நகைக்கு ஆசைப்பட்டுத்தான் நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிட்டதா ஆகும்” என்றவனின் குரல் கரகரத்தது.

“இப்போ நாங்க ஆசையா எங்க வீட்டு மருமகனுக்கு சீர் பண்ண நினைக்குறோம் நீ மறுக்காம வாங்கணும் இது என்னோட அன்புகட்டளை” என்று சொல்லியதோடு அல்லாமல் பாலாஜியின் கழுத்தில் ஐந்து பவுன் பட்டை செயினை போட்டு விட்டான் ராயன்.

கண்ணனோ “மாப்பிள்ளை இது என்னோட சீர்” என்று பாலாஜியின் கையை பிடித்து கைகாப்பை போட்டு விட்டான் பாலாஜிக்கு கண்கள் கலங்கியது.

“யாரும் இல்லாத அனாதை பயலுக்கு பார்த்து பார்த்து சீர் பண்ணுறீங்க” என்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது. 

“அடேய் மாப்பிள்ளை என்ன அழுதுக்கிட்டு இனிமே நாம எல்லாம் சந்தோசமா இருக்கப்போறோம் இனிமே ஒவ்வொரு விசேஷமும் நீயும் தங்கச்சியும் இல்லாது எங்க வீடு நிறையாது ரொம்ப நேரம் ஆச்சு கிளம்புங்க” என்றவனோ சந்தோச முகத்துடன் பாலாஜியை அணைத்துக்கொண்டான்.

“ரொம்ப நன்றிடா நண்பா” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.

“நீ என் தங்கச்சியை லவ் பண்ணவே இல்லைனு எனக்கு தெரியும்டா என் குடும்ப மானம் போகக்கூடாதுனு உன் மேல பழியை போட்டுக்கிட்டேல்ல உன்னை நண்பனா அடைய நான்தான் பாக்கியம் பண்ணி இருக்கணும்டா” என்று இருவரும் பேசிக்கொண்டேயிருந்தனர்.

“ராயா மாப்பிள்ளை கிளம்பட்டும் நேரமாச்சு” என்று தெய்வநாயகம் கூறவும்

“கிளம்புடா நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் அடுத்த வருசம் என்னை மாமன் ஆக்கணும் உங்க பிள்ளையை என் மடியில வச்சு காது குத்தணும்” என்றான் முகம் முழுக்க புன்னகையுடன்.

பாலாஜிக்கு வெட்கச் சிரிப்பு வந்துவிட்டது. சந்தோசமாக சிரித்தபடியே காரில் ஏறினான்.

தென்னரசுவோ “எனக்கு எந்த செயினும் இல்லையா அண்ணா” என்று வந்து நின்றான் ராயன் பக்கத்தில் தியாவை தூக்கிக்கொண்டு.

“உனக்குத்தான் என் அத்தை பொண்ணு பூங்கொடியை தங்கமாட்டம் தாரை வார்த்துக்கொடுத்திருக்கேன்லடா” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து வைத்துக்கொண்டு.

“ஆமா ஆமா சொக்கத்தங்கம் அண்ணா” என புன்னகைத்தவன் “நாங்களும் கிளம்பறோம்” என்று காரில் ஏறினான்.

குமுதாவும் அரசியும் காரில் ஏற பூங்கொடியின் கையில் பலகாரப் பையை கொடுத்தார் தையல்நாயகி. “உனக்கு பிடிச்ச லட்டும் குலோப்ஜாமூனும் வச்சிருக்கேன்மா” என்றார் சிரித்த முகத்துடனே.

தென்னரசு கார் கிளம்பியவுடன் பரமசிவமும் மங்களமும் “நாங்களும் கிளம்பறோம் ராயன் மாப்பிள்ளை” என்றதும்

கலகலப்பாக இருக்கும் பிரனேஷின்  முகம் களையிழந்து போயிருந்தது. அமைதியாக கையை கட்டி தலைகுனிந்து நின்றிருந்தான்.

“மாப்பிள்ளை ஊருக்குள்ள பல தவறை பண்ணிட்டு நல்லவன் வேஷம் போட்டு சுத்துறாங்க நீ தப்பே பண்ணாம தலைகுனிஞ்சு நிற்கக்கூடாது உன் கம்பெனியை அடுத்த லெவலுக்கு கொண்டு போ… வீடியோவை எல்லாம் டெலீட் பண்ண வச்சிட்டேன் பேசறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்கப்பா… பிஸ்னஸ்ல கவனம் செலுத்து காலம் எல்லாத்தையும் மாற்றும்”  என்று பிரனேஷின் தோளில் தட்டிக்கொடுத்தான் ஆதரவாக.

“தேங்க்ஸ் மாமா” என்று ராயனை அணைத்துக்கொண்டான் பிரனேஷ்.

பரமசிவமும் ராயனின் கையை பிடித்து “ரொம்ப நன்றி மாப்பிள்ளை” என்று கண் கலங்கினார்.

“நீங்க பிரனேஷ்க்கு துணையா இருங்க மாமா” என்றான் இதழ் விரிப்புடன்.

காரில் ஏறிய பரமசிவமோ ‘உனக்கு துரோகம் நினைச்சேன் ராயா… படுக்குழியில விழப்போன என் குடும்பத்தை கரை ஏத்தி விட்டிருக்க நீதான் உயர்ந்த மனிதன்’ என்று மனதில் எண்ணியவர் ராயனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தீபாவை பார்த்து கண்ணசைத்து காரை எடுத்தார். மங்களமோ வரேன் பார்த்துக்கோ என்று கையசைத்தார்.

கார் கிளம்பினதும் “முல்லை நம்ம வீட்டுக்கு போகலாமா?” என்றார் நீலகண்டன்.

“அது வந்துங்கப்பா” என்று முந்தானையை திருகிக்கொண்டு ராயனை பார்த்தாள் தயங்கியபடியே.

அவனோ “போய்ட்டு வா வளைகாப்பு முடிச்சா அப்பா வீட்டுக்கு போகணும் தானே என்னை பார்க்குற” என்றான் மந்தகாச புன்னகையுடன்.

‘என்னை போகவிடாம தடுப்பாருனு பார்த்தேன் போக சொல்லுறாரு’ என்று ராயன் பேசியதில் சிறு கோபம் கொண்டு “சரிங்கப்பா கிளம்பலாம் வாங்க” என்று நீலகண்டனின் கையை பிடித்துக்கொண்டாள்.

கண்ணனோ “அண்ணி வாசலை தாண்டினா அழகு அத்தை வீடு என்னமோ ஊரு தாண்டி போறது போல பேசுறீங்க” என்று கேலி செய்து சிரித்தான்.

அழகம்மையோ “டேய் கண்ணா என்னோட வீட்டை பக்கத்துல வச்சிக்கிட்டு நான் ஒரு நாள் கூட முழுசா இருந்தது இல்லை இனி மூணுமாசம் என்னோட வீட்டுல என் பொண்ணுகூட சேர்ந்து இருக்கப்போறேன்டா நீ அதை கெடுக்காதே” என்று ஆனந்த புன்னகையுடன் முல்லையின் கையை பிடித்து அழைத்துச் சென்றார்.

முல்லையோ பல மைல் தூரம் கணவனை விட்டுச் செல்பவள் போல விசனத்துடன் ராயனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.

இந்த பெரிய வீட்டில் மகளுக்கு கிடைத்த அங்கீகாரத்தில் அமுதாவின் கண்கள் பனித்து போனது. 

இரவு முல்லை சாப்பிட்டு முடித்து அழகம்மையின் மடியில் படித்திருந்தவள் “அம்மா மச்சான் இங்க வருவாரு தானே?” என்று கேட்டவளிடம் “அம்மா வீட்டுக்கு வந்துட்டா மருமகன் வரமாட்டாங்கடா உன்னையும் ராயனையும் சேர விடக்கூடாது அதான் இந்த ஏற்பாடு” என்றார் நமட்டுச் சிரிப்புடன் முல்லையின் கன்னத்தை கிள்ளி.

“மச்சானை பார்க்கணும் போல இருக்கு!” என எழுந்து உட்கார்ந்து விட்டாள் முல்லை.

“இந்த வீட்டுக்கு வந்ததுலயிருந்து மச்சான் மச்சான்னு நூறு முறை சொல்லியிருப்ப முல்லை பேசாம தூங்கு” என்று அவளது தலையை வருடிக்கொடுத்தார் அழகம்மை.

‘யோவ் மச்சான் நான் உன் நினைப்பாவே இருக்கேன் நீ என்ன பண்ணுற என்னை பார்க்க வரமாட்டியா?’ என்று சோக முகத்துடன் ராயனை கடிந்துக் கொண்டிருந்தாள்.

நேற்று இரவு தன் நெஞ்சில் சாய்ந்து படுத்திருந்தவள் இன்று பக்கம் இல்லையென்றதும் ராயனுக்கு உறக்கம் வரவில்லை. இப்பவே போயிரலாம் என்னால என் பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியாது என்று எழுந்தவனோ விறு விறுவென அழகம்மையின் வீட்டின் கதவை தட்டினான்.

முல்லை உறங்கியதும் அழகம்மையும் நீலகண்டனும் சாப்பிட்டு ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர். கதவு தட்டும் ஓசையில் “உன் மருமகன் வந்துட்டான் பொண்டாட்டிய விட்டு ஒரு நிமிசம் கூட இருக்க முடியல போல” என்று ராயனை கேலி செய்து புன்னகைத்தார்.

அழகம்மையோ “நீங்க என்னோடவே இருந்துட்டீங்க அதான் பிரிவோட அருமை தெரியலை” என்று கணவனை முறைத்துவிட்டு கதவை திறந்ததும் 

“அத்தை முல்லை தூங்கிட்டாளா மாத்திரை போட்டாளானு தெரியல பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்றான் தயக்கத்துடனே.

“மாத்திரை எல்லாம் போட்டாச்சு மருமகனே நீ கிளம்பு” என்றார் சிரிப்பை அடக்கிக்கொண்டு.

“வந்தது வந்துட்டேன் முல்லையை பார்த்துட்டு போயிடறேன்” 

“அடியே புள்ளை பொண்டாட்டியை பார்க்க வந்திருக்கான் உள்ளே அனுப்பறதை விட்டு சும்மா வம்பு இழுத்துக்கிட்டு இருக்கா நீங்க வாங்க மாப்பிள்ளை” என்று அறைக்கதவிற்கு பக்கம் சென்று ராயனை வரவேற்றார் நீலகண்டன்.

அடுத்த நொடி வீட்டுக்குள் ராயன் வந்ததுதான் தெரியும் முல்லை இருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.

“மருமகன் எல்லாத்துலயும் ஸ்பீடுதான்” என்றார் நமட்டுச் சிரிப்புடன் நீலகண்டன்.

முல்லைக்கு தூக்கம் வரவில்லை பேசாம மச்சான் கிட்ட போயிடலாம் என்று எழுந்து உட்கார்ந்தாள் ராயனை கண்டதும் “மச்சான் வந்துட்டீங்களா?” என்று சந்தோசமாக கேட்டவள் கட்டிலை விட்டு இறங்க சிரமப்பட “ஏய் புள்ள இரு நான் வரேன் அவசரப்படாதே”  என்று ஒரே எட்டில் நடந்து வந்தவன் அவள் பக்கம் அமர்ந்து அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் ராயன்.

“மச்சான் நீங்க இல்லாம எனக்கு தூக்கமே வரலை” என்றாள் சோகம் வழிந்த குரலில்.

“எனக்கும்தான் புள்ள” என்று அவளை மெதுவாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டதும்

“ஆஆ உதைக்குறான் உங்க பையன்” என்று சிணுங்கினாள் முல்லை.

“அப்படியா” என்று முல்லையின் வயிற்றில் கையை வைத்தான் குழந்தை அசைந்தது. 

“உங்க குரல் கேட்டதும் வயித்துக்குள்ள சும்மா துள்ளி குதித்து வருவான்” என்றாள் கண்ணைச்சுழட்டி

“என் மகன் என்னை போல ஸ்பீடா இருப்பான்டி” என்று மீசையை முறுக்கினான் ராயன்.

“அச்சோ அழகு மச்சான் இந்த மீசை உங்களுக்கு அழகு” என்று மீசையை பிடித்து இழுத்தாள்.

“வலிக்குது புள்ள” என்று போலியாக நடித்தான் ராயன். இருவரும் கொஞ்சிக்குலாவினர் காதல் கிளிகளாக.

பாலாஜி காரில் போகும் போது “ஏன் டி இத்தனை கோபம் மூக்குக்கு மேல வருது?” என்றான் ரோட்டில் கவனம் வைத்து நதியாவின் முகம் பார்க்காமல்.  

“பின்ன உங்களை குறைச்சு பேசினா என்னால பார்த்துட்டு இருக்க முடியாது குத்து கல்லாட்டம் பொண்டாட்டி இருக்கேன் உங்களை சும்மா அனாதை பயல் ஒன்னும் இல்லாதவன்னு குத்தி குத்தி காட்டி பேசினா சாமியாடாம இருப்பேனா எங்கம்மா இனி வாயை திறக்கட்டும் அப்புறம் இருக்கு சங்கதி” என்று காருக்குள்ளும் சாமி ஆடினாள் நதியா.

தனக்காக ராயன் மட்டும்தான் இருக்கிறான் என்றிருந்தவனுக்கு நதியாவின் காதல் முதலில் பாகற்காயாய் கசந்தாலும் அவளின் வெள்ளை உள்ளம் கொண்ட காதலை கண்டு மனம் மாறி அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள மனம் இறங்கிவிட்டான் பாலாஜி.

காரிலிருந்து இறங்கியதும் பாலாஜியின் பார்வை மாறியிருந்தது. கோபக் கண்களுடன் தன்னை பார்ப்பான் இன்று அவனது கண்கள் காதல் கதை பேசியது. நதியாவுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

பக்கத்து வீட்டு பாட்டி கார் சத்தம் கேட்டு வந்தவர் “வளைகாப்பு விருந்து முடிஞ்சுதா புள்ள முகத்துல இருக்க சந்தோசத்தை பார்த்தா எல்லாம் ராசி ஆகிட்டீங்க போல” என்று பால் பாத்திரத்தை திண்ணையில் வைத்தார். 

“அம்மாவை தவிர எல்லாரும் ராசிதான் பாட்டி” என்றவளோ வீட்டுத்திண்ணையில் பலகாரப் பையை வைத்தவள் அதிலிருந்த கொஞ்சம் பலகாரங்களை எடுத்து “இந்தாங்க பாட்டி தாத்தாவும் நீங்களும் சாப்பிடுங்க” என்று கொடுத்தாள் மலர்ந்த முகத்துடன்.

“வயசான காலத்துல இதெல்லாம் சாப்பிட்டா ஜீரணம் ஆகாது கண்ணு இருந்தாலும் பாசமா கொடுக்குற கோவிந்தவனுக்கு இனிப்புனா ரொம்ப பிடிக்கும்” என்று அவள் கொடுத்த பலகாரத்தை வாங்கிக்கொண்டு “நாளைக்கு காலையில உனக்கு பிடிச்ச சுண்டல் குழம்பு வைக்குறேன் நீ காலையில குழம்பு வைக்க வேணாம்… விருந்து அலுப்பு இருக்கும் வாசலும் நானே தெளிச்சு பெருக்கிடறேன்” என்றார் பொக்கை வாய் சிரிப்புடன்.

“நானே எழுந்து வாசல் தெளிச்சு பெருக்குறேன் நீங்க சிரமப்படவேணாம்” என்றவளிடம் சிரித்து விட்டுச்சென்றார் பாட்டி.

“எதுக்கு பாட்டி என்னை பார்த்து சிரிக்குறாங்க” என்று குழம்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள் நதியா.

பாலாஜியின் கண்கள் பலாப்பழத்தை மொய்க்கும் ஈ போல நதியாவை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு தான் சிரித்துச் சென்றார் பாட்டி.

அறைக்குள் சென்றவள் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த பொருட்களை சமையல்கட்டில் அடுக்கி வைத்து பாட்டி கொண்டு வந்த பாலை காய்ச்சி விட்டு அலுப்பாக இருக்கவும் பெட்ரூமிற்குள் வந்தாள். 

பாலாஜி குளித்து விட்டு இடுப்பில் துண்டோடு வெளியே வந்தவன் நதியாவின் முகத்தருகே வந்து தலையை சிலுப்பி விட்டு தலையை துண்டால் துவட்டினான்.

“மாமா என்ன இது” என்றவளை மோகமாய் பார்த்தான். 

“என்ன இது ரொமான்டிக் லுக் இந்த லுக் சரியில்லையே!” என்று இடுப்பில் கையை வைத்து முறைத்தாள்.

“ம்ம் உன் அண்ணனுக்கு அடுத்த வருசம் மருமக வேணுமாம் அப்போ ரொமான்டி லுக் விடணும்ல டெய்லி உன்கூட சண்டை போட்டு இருக்கேன் போரே அடிச்சு போச்சு… இனிமே அப்படியில்ல ஒரே லவ்ஸ்தான் நீ காட்டின லவ்வை நான் உனக்கு காட்டப்போறேன்டி என்னோட லவ்வை நீ பார்த்தது இல்லையே!” என்று உதடு கடித்தான்.

அச்சோ நான் காண்பது கனவா இல்லை நனவா என்று அவள் கையை கிள்ளிப்பார்த்தாள்.

சட்டென்று நதியாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் பாலாஜி.

பெண்ணவளின் கண்கள் சாசர் போல விரிந்தது.

“முட்டை கண்ணை விரிக்காதடி குளிச்சிட்டு வா மாமன் வெயிட்டிங்” என்று அவளை இறுக்கினான்.

“அண்ணா சொன்னதுக்காக என்கூட” என்றவளை முறைத்தான்.

“இங்கபாரு டி நதி உன் மேல லவ் ஆரம்பத்துல இல்ல. ஆனா என் பின்னாலயே பொமேரியன் நாய்க்குட்டி போல லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்னு சுத்திக்கிட்டே இருந்த ஒரு கட்டத்துல உன் மேல காதல் வந்துச்சுத்தான் ஆனா என் நட்பு முன்னால காதல் காணாம போயிடுச்சு உன்னை பார்ப்பதை தவிர்த்தேன்டி! உன்கிட்ட எரிஞ்சு விழுந்தேன். ஏன் அடிக்கவும் கூட செய்தேன்… அதிகப்படியா   அவமானமும் படுத்தினேன். ஆனா உன் காதல் உண்மையாக இருக்க நீ ஜெயிச்சிட்ட உன் மேல இன்னமும் கோபத்தோடத்தான் இருக்கேன்டி. மண்டபத்துல முட்டாள் போல என் முன்னால சேலையை கழட்டி போட்டு நிற்குற வேற யாராவது இருந்தா எதாவது செய்துட்டு ஓடி போயிருந்தா என்னடி பண்ணுவ நீ அறிவுக் கெட்டவளே” என்று அவளை இப்போதும் திட்டினான் பாலாஜி.

“நீ ராயா அண்ணாவோட ப்ரண்ட் பாலாஜி. அண்ணா துரோகம் பண்ணுறவங்களை பக்கத்துல கூட சேர்க்க மாட்டாரு உன் மேல எனக்கு நம்பிக்கை நீ என்னை கைவிடமாட்டனு கடைசி வரை போராடி உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன். நான் என் காதலை அடைஞ்ச விதம் வேணா முறை இல்லாம இருக்கலாம் உன் மேல வச்சிருக்க காதல் தாய்ப் பாலை விட சுத்தம்… அதுல  பொய் கிடையாதுடா” என்று பாலாஜியை தாவி அணைத்துக்கொண்டு அவன் முழுக்க முத்தம் கொடுத்தாள் நதியா.

அவள் கன்னத்தை பற்றி “என் நண்பனை யாரும் அனாதைனு சொல்லக்கூடாது நான் இருக்கேன்னு ராயன்தான் சொல்லுவான் அவனுக்கு பிறகு எனக்கு என் பொண்டாட்டி இருக்கா இனிமே நான் அனாதை கிடையாதுடி” என்றான் நெகிழ்ச்சியானவனின் கண்கள் கலங்கவும்

“மாமா நான் இருக்கேன்டா உனக்கு” என்று அவள் இதழ்கள் நடுங்கியது.

நடுங்கிய இதழ்களை கவ்விக்கொண்டான் ஆணவன்.

அவளை கையில் ஏந்திக்கொண்டு கட்டிலுக்குச் சென்றவன் “எனக்கு இருக்க ஆசையில் இப்பவே எல்லாம் பண்ணனும்னு தோணுது கொஞ்சம் காதலிச்சுட்டு முழுசா எடுத்துக்குறேன் இப்ப கொஞ்சமா மினி மில்ஸ் சாப்பிடுறேன் “என்று அவளது இதழைக் கவ்வினான்.

இதழ் முத்தம் மட்டும் போதவில்லை அவனுக்கு. கழுத்தில் மீசையை உரசியவன் “முழு மீல்ஸ் கிடைக்குமா என்னால முடியல பப்ளிமாஸ்” என்றவனின் கைகள் அவளது மாராப்பு சேலையை விலக்கியது.

“நான் உனக்கு சொந்தம்டா இப்பவே எடுத்துக்கோ என்கிட்ட கேட்கணுமா” என்று அவனை அணைத்துக்கொண்டாள்.

அவளது கண்களை பார்த்தவன் “ஐ லவ் யு டி” என்றவன் அவளது இதழ்களை முற்றுகையிட்டவன் “இனிப்பு ரொம்ப சாப்பிட்டியா ஒரே தித்திப்பா இருக்கு” என்று அவளது சோளிகளுக்கு விடுப்பு கொடுத்ததும் அவளுக்கு வெட்கம் வந்து சட்டென்று முதுகுகாட்டி படுத்துக்கொண்டாள். 

“ஏய் என்னடி வெட்கம்” என்று அவளை பின்னிருந்து அணைத்தான். அவனது கைகள் அவளது மென் அங்கங்களில் பட்டு விட அவள் தேகம் சிலிர்த்து அடங்கியது. 

“திரும்புடி” என்றான் மோகமாய்.

அவளோ “மாட்டேன் வெட்கமா இருக்கு மாட்டேன்” என்று சிணுங்கினாள்.

“இப்போ திரும்பலைனா மாமா எழுந்து போயிடுவேன் போகவா?” என்று அவன் பேசி முடிக்கவில்லை அவன் புறம் திரும்பி படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது இமைக்குடைகளுக்கு முத்தம் கொடுத்தான் மெதுவாய் கண்ணை விரித்தாள்.

“பேசுடி வாய் ஓயாம பேசுவ” என்றான்.

“இந்த நேரத்துல யாராவது பேசுவாங்களா?” என்றாள் உதடு கடித்து.

“விவரம்தான்டி நீ” என்றவனின் கரங்கள் அவளது தேகத்தை வீணையாய் மீட்டியது. இதோ அவளது மேடு பள்ளங்களில் உதடுகள் கொண்டு விளையாடினான். ஆணவனின் ஒவ்வொரு தொடுதலிலும் மெய் சிலிர்த்தாள் மங்கை. இருவரும் ஒரே போர்வைக்குள் வியர்வையால் குளித்தனர். அவனது இதழ்கள் அவளது மேனியில் நத்தையாய் ஊர்ந்தது. அவளது அழகுகளை கண்டு எச்சில் விழுங்கினான் காளையவன். அவளோ “மாமா” என்று மோகமாய் பிதற்றியதும் அவள் மார்புக்குழிக்குள் முகம் புதைத்தான். அவனது அணைப்பினில் பாகாய் உருகினாள் மங்கையவள். அவனது வேகம் கண்டு அச்சப்பட்டு அவளுக்கு கண்ணீர் கண்களில் உருண்டோடியது.

“ரிலாக்ஸ்டி” என்று அவளது இதழில் முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தி பெண்ணவளை களவாடினான். விடியும் வரை அவ

என் இனிய ராட்சஷனே 16

அத்தியாயம் 16

 

தனக்கு இது போன்று வெளியில் சந்திப்பது பிடிக்கவில்லை என்று இளமதிக்கு தன் மாமனிடம் கூறவும் முடியவில்லை அதை உள்ளேயும் வைத்து கொள்ளவும் முடியவில்லை அவனுக்காக தன் மனதில் தோன்றிய எதையும் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து பூட்டி கொண்டாள். 

 

மறுநாள் காலை இளமதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட கருப்பனும்  தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய மகனை வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்க ஆரம்பித்தார் சிவகாமி “எங்க டா போன ராத்திரியெல்லாம் ஏதோ பத்து லோடு மூட்டையை தூக்கி போட்டவன் மாதிரி களைச்சு போய் அசதியா வர” என்று கேட்க “மா நேத்து மில்லுல லோடு வந்துச்சு அதை இறக்கி வச்சுட்டு வந்தேன் அதான் அசதியா இருக்கு” என்றான். 

 

“ஏன் டா லோடு இறக்க தான் ஆளுங்க இருக்காங்கலே உனக்கு என்ன அப்படி ஒரு அசதி” என்று கேட்க “அம்மா சும்மா கேள்வி மேல கேள்வி கேட்க்காத எனக்கு தூக்கம் வருது வழியை விடு” என்றவன் உள்ளே சென்று தன் அறையில் படுத்து உறங்க ஆரம்பித்தான். 

 

சிவகாமி அவனை ஆச்சிரியமாக பார்த்து கொண்டே நின்றிருந்தார் 

எப்போதும் பகலில் உறங்காத தன் மகன் இன்று பகலில் உறங்குவதை பார்த்தவருக்கு ஆச்சரியமாக தான் இருந்தது கருப்பன் நேற்று இரவு முழுவதும் இளமதியுடன் இருந்ததால் அவன் நேற்று இரவு ஒரு நேரம் கூட கண் மூடவேயில்லை  அதனால் தான் பகலில் உறங்கி கொண்டு இருந்தான். 

 

அதே நேரம் கல்லூரியில் தன் வகுப்பறையில் அமர்ந்து இருந்த இளமதி பாடம் நடக்கும் வேளையில் பாடத்தை கவனியாமல் உறங்கி விழுந்து கொண்டே இருந்தாள் பாடம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியர் இதை பார்த்துவிட “இளமதி” என்று அந்த வகுப்பே அதிரும் படி கத்தினார். 

 

இளமதி அவர் கத்திய சத்தத்தில் அடித்து பிடித்து கொண்டு எழுந்து நின்றாள் அவள் “நான் என்ன டாப்பிக் எடுத்துட்டு இருக்கேன் சொல்லு” என்று அவர் தன் கையை கட்டிக் கொண்டு அவளிடம் கேள்விக் கேட்க அவளோ பதிலுக்கு ஒன்றும் தெரியாமல் திருதிருவென விழிக்க “நீயெல்லாம் எதுக்கு படிக்க வர உனக்கு படிக்க விருப்பம் இல்லைன்னா வீட்லயே இருந்துக்க வேண்டியது தான நீ தூங்கி வழிய இது என்ன உன் வீட்டு பெட் ரூமா இங்கே வந்து தூங்கி எதுக்கு ஒரு சீட்டை வெஸ்ட் பண்ற இடியட் வெளியே போ” என்று திட்ட வகுப்பில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் அவளை வேடிக்கை பார்க்க அவளுக்கு ஒரே அவமானமாக இருந்தது அழுது கொண்டே வெளியே ஓடினாள். 

 

அந்த வகுப்பு முடியும் வரை வெளியே தான் நின்றிருந்தாள் இளமதி அழுது கொண்டே நின்றிருக்க பேராசிரியர் வெளியே வந்தவர் “இளமதி என்னோட ரூம்க்கு வா” என்று கூறிவிட்டு சென்றார். 

 

இளமதியும் அவரின் பின்னே கண்களை துடைத்து கொண்டே வந்தவள் வாசலில் நின்று “எக்ஸ்கியூஸ் மீ மேம்” என்றாள்

“கம் இன்” என்றார் அந்த பேராசிரியர் 

அவளும் அவரின் முன்னே வந்து தலை குனிந்து நின்றாள். 

 

அவளை ஒரு முறை பார்த்தவர் “உனக்கு என்ன தான் ஆச்சு இளமதி நீ நல்லா படிக்கிற ஸ்டூடன்ட் கிளாஸ் டாப்பர் லாஸ்ட் செமஸ்ட்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு பட் உன் கவனம் படிப்புல சுத்தமா இல்லை கிளாஸ்ல தூங்கி வழியுற இன்டர்ன்ல்ஸ் மார்க் கூட ரொம்ப லோவா இருக்கு இப்படியே போனா நீ கண்டிப்பா டிகிரி வாங்க மாட்ட உனக்கு என்ன பிராப்ளம்ன்னு என்கிட்ட சொல்லு” என்றார். 

 

இளமதி அவரிடம் எப்படி என்ன சொல்வது என்று தெரியாமல் தவிப்புடன் நின்றிருந்தாள் அவளின் கணவனுடன் இருந்த இந்த கொஞ்ச நாட்களில் தான் அவளால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை இரவு முழுவதும் அவனுடன் கழித்தவள் பகலில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாள் அதை எப்படி அவரிடம் கூறுவது என்று தெரியாமல் தவித்தவள் “சாரி மேம் இனிமேல் இப்படி நடக்காது” என்றாள் அழுத விழிகளுடன். 

 

அவளை ஒரு முறை பார்த்த அந்த பேராசிரியர் “உனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான முதல் நாள் இந்த காலேஜ்க்கு வந்து சேரும் போது உன் அம்மா என் கிட்ட வந்து பேசுனாங்க என் பொண்ணு ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணுன்னு சொன்னாங்க அதை சொல்லும் போது அவங்க கண்ணுல அப்படி ஒரு பெருமை அவங்களை ஏமார்த்திடாத போய் ஒழுங்கா படி” என்று அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார். 

 

இளமதி அழுது கொண்டே வெளியே வந்தவளுக்கு தன் தாயின் நினைவு வந்தது அவர் அவமானப்பட்டு நின்ற நாட்கள் அனைத்தும் கண்ணில் வந்து போனது தன் தாய்க்காகவாது நன்றாக படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள். 

 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவளின் அறை தோழி ஊருக்கு கிளம்பி இருந்தாள் இதை முன் கூட்டியே இளமதி கருப்பனிடம் கூறியிருக்க அவனும் எப்போதும் போல இரவு பன்னிரெண்டு மணிக்கு அவள் அறையின் கதவை தட்டினான். 

 

இளமதி படித்து கொண்டு இருந்தவளுக்கு கதவை தட்டும் சத்தத்திலேயே தெரிந்து போனது அது தன் மாமன் தான் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்து கதவை திறந்தாள் அடுத்த கணம் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் கைகளில் தூக்கியவன் கதவை காலால் எட்டி உதைத்து மூடினான்.

 

இளமதி கன்னத்தில் முத்தமிட்டவன் “தங்கம் என்ன டி ரொம்ப நேரமா மாமனுக்காக காத்துக்கிட்டு இருந்தியா ” என்று கேட்க அவளோ பதிலுக்கு எந்த வித எதிர்வினையும் காட்டாமல் தன் இடையில் இருந்த அவன் கையை எடுத்து கொண்டாள். 

 

அவள் திடீரென தன்னிடமிருந்து விலக கருப்பனின் முகம் வாடியது “என்னாச்சு கண்ணு மாமா மேல கோவமா” என்று கேட்க இளமதி அவனிடம் எப்படி கூறுவது என்று தடுமாறியவள் “மாமா நான் படிக்கனும்” என்றாள். 

 

கருப்பன் அவளின் கைக்கொடுத்து மீண்டும் அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன் “இவ்வளோ தானா அப்புறமா படிக்கலாமே” என்று கூறிக் கொண்டே அவளின் இதழின் அருகில் நெருங்கி வர “மாமா நான் படிக்கனும் பிளீஸ் எனக்கு எக்ஸாம் இருக்கு” என்றாள். 

 

“நாளைக்கு படிச்சிக்கலாம் டி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சரியா” என்று அவள் அருகில் அவன் நெருங்கி வர அவனை பிடித்து தள்ளினாள் இளமதி “மாமா நான் படிக்கனும் பிளீஸ் என் கிட்ட வராதிங்க” என்றாள் இளமதி அவனை தடுத்து நிறுத்தி. 

 

“சரி நீ படி நான் கிளம்புறேன்” என்றவனின் முகம் வாடிப் போனது அவன் அங்கிருந்து செல்லும் போது அவள் போகதே என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

 

கருப்பன் அங்கிருந்து செல்வதை இளமதி மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தாள் அதன் பின் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன 

இளமதி அவன் கொடுத்த போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துவிட்டாள் தன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் இறுதி தேர்வை நல்லபடியாக முடித்தாள் ஆனால் கருப்பன் அவள் இன்றி கவலைக் கொள்ள ஆரம்பித்தான். 

 

இளமதி இறுதி வருடத்தில் இருந்ததால் கல்லூரிக்கு வந்த கேம்ப்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி இருந்தாள். 

 

இந்த நிலையில் அவர்கள் ஊரின் இஷ்ட தெய்வமான முள்ளையூர் அம்மன் கோவில் திருவிழா நாளும் வந்தது

முழு கிராமமும் களைக்கட்டிது நாதஸ்வரம், தப்பாட்டம், மலர் தூவி பூஜைகள் நடந்தது ஊரில் அனைவரின் வீட்டிலும் சொந்த பந்தங்கள் வந்திருந்தனர் சப்பாத்தி, இடியாப்பம், கோழி குழம்பு வாசனை என்று ஊரே மணம் வீசியது காப்பு கட்டி முடிக்க சின்னப்பொண்ணுக்கு தன் மகளின் நினைவாக இருந்தது. 

 

இளமதியை ஊருக்கு வர சொல்லி சின்னப்பொண்ணு அழைக்க அவளும் வந்திருந்தாள் பஸ்சில் இருந்து இறங்கியவள் தெருவில் பையை எடுத்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். 

 

அவள் வரும் வழியில் எதிரே நந்தினி தன் தங்கையுடன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் இளமதியை பார்த்த நந்தினி கண்களாலேயே எரிப்பதை போல் பார்த்துவிட்டு முறைத்து கொண்டே செல்ல பதிலுக்கு அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாள். 

 

இளமதி வீட்டின் உள்ளே வர சின்னப்பொண்ணு அவள் கையில் இருந்த பையை வாங்கி கொண்டவர் “தங்கம் எப்படி இருக்க” என்று அவளை வாசலிலேயே வரவேற்றார் 

இளமதி பதிலுக்கு “ம்ம் நல்லாருக்கேன் மா” என்று சோர்வுடன் கூறியவளின் கண்கள் தன் மாமனை தான் முதலில் தேடியது அவன் எங்கே என்று கண்களால் வீடு முழுக்க தேட அவனோ அங்கே இல்லாமல் வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்தான். 

 

அப்போது சிவகாமி தன் அறையின் உள்ளே இருந்து வந்தார் “இந்தா டி நீ எப்போ வந்த” என்று அவள் அருகில் வந்து கேட்க. 

 

“இப்போ தான் பாட்டி வந்தேன்” என்றாள் பதிலுக்கு இளமதி “ஆஊன்னா கிளம்பி வந்துடுறியே உனக்கு காலேசுல படிக்குற வேலையே இல்லையா என் மவன் பின்னாடியே தான் அலையுவியா” என்று கேட்க “அம்மா என்ன பேசுற நீ” என்று சின்னப்பொண்ணு கோபத்துடன் கத்த “என்ன டி ரோஷம் பொத்துக்கிட்டு வருதோ நான் உண்மையை தான சொன்னேன் ஏற்கனவே ஊரே இவளை பார்த்து சிரிச்சது போதாது இன்னும் திருவிழாவுக்கு வேற இவள் வந்து இவளை பார்த்து சிரிக்கனுமா இவள் என்ன முறையாவா கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு வந்தா முறை கெட்டு வந்தவள் தான” என்று கேட்டார். 

 

இளமதிக்கு உடனே கோபம் வந்து விட

“இல்லையே பாட்டி மாமா முறையா தான என் கழுத்துல தாலி கட்டுனாரு நான் பண்ணுனது தப்புன்னா உங்க மகன் அன்னைக்கு என் கூட இருந்ததும் தப்பு தான” என்று கேள்வி கேட்டாள் முகத்தில் அடித்ததை போல. 

 

“இந்தா டி இந்த மாதிரியெல்லாம் பேசிக் கிட்டு இருந்த உன் காலை உடைச்சு அடுப்புல வச்சிருவேன் என் மகன் எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன்” என்று சிவகாமி கோவப்பட சின்னப்பொண்ணு இளமதியை சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதிரா இரவு – சுருளி காந்திதுரை

காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு… பேச்சுத் தோரணை… இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள்… அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர்.

சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு.

கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு. உலகப் பேச்சு… சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயிக் குளிச்சிட்டுச் சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய வர்றதுதான் டிவியில வரும்.

வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு.

மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும்.

ஆனா, வீட்ல பெத்தப்பெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும். ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும். மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்கத் ‘திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு…?’ வெளிய சொல்ல முடியுமா?”

தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கனும். பெத்த பெருமாள் ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்குயில்ல?ன்னு முனங்கினார் பல நேரம்.

யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை. உனக்கு எப்படி அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும்… நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும்.

வா… வா… நம்ம எல்லார் கதையும் ‘ஒரே மாவுலச் சுட்ட இட்லி’ போலத்தான்னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லோரும் தன்னை மறந்து சிரித்தார்கள்.

நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன.

அறுபத்தைக்கும், எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். ‘நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு, பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல? ராஜேந்திரன் சொல்லுயா’ன்னு அய்யனாரைக் கேட்க.

‘பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல?’

‘போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா. அப்படித்தான் சொல்லுவார்!’ ஒரே சிரிப்பொலி….. எதிரொலித்தது.

***

பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது.

இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கானச் சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும், தென்றல் காத்தும், கனமான இதயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு போனது. எல்லோரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது.

என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்ல கடிச்சுக்கிட்டு சுகத் துக்கங்களை மறைத்து, மறந்து பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள்.

பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை? மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள்.

ஜங்சன் இருக்கு. ஆனால், ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல?

ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகை நட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்?

எல்லோருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு, இவர்களின் உலகம் இலையுதிர் காலத்து மரம் போல… எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள்… என ‘உறவுகள்’ இருக்கிறார்கள். ‘கோலார் தங்கச் சுரங்கம் போல.’ ஆனால், மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் ‘குருவியின் கூடு பறந்து போனதைத் தேடும் குருவி போல…’ உறவுகளைத் தேடுகிறார்கள். இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே… யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது… இளைப்பாறுதல் இல்லா மனநிலையில்…? முதியோர்களின் பயணம்…

என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா? ஏன்ட்ட ஏன் கேட்குறீங்க…

நீ தானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்…

சும்மா இருக்க மாட்டீங்க புலவரே?

அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க…

கேரளாவும், கர்நாடகாவும்… நல்ல பாம்பு அது; விரியன் பாம்பு இவுக.

நமக்கு பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டாப் பகுதிக்குத் தேவைப்படும்போது தண்ணியத் தர மாட்டாங்கா? ஆனா, அங்க மழை பெய்யட்டும்…! மழை ச்சக்கப்போடு போடட்டும்…! அய்யோ “டேமப் பாதுகாக்கிறோம்ன்னு” “டேம் உடைகிற” மாதிரியா வரும்போது சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால், தண்ணியத் தொரந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.

புலவரே, ஆனா, பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேராக் கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான்.

என்ன இஞ்சினியர் சார். நம்ம, “ஆம்பளப் பிள்ளையும், பொம்பளப் பிள்ளையும்… கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க?

எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க.

என்ன வம்புள மாட்டி விடுறீக. இதயராஜ் சொல்லவும்,

பெத்த பெருமாள், புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அவுக நிலை. இது நம்ம நிலைமை. கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போனது. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார். நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?

யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்…

அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க! மாணிக்கம்.. நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு; அய்யனார் நீங்கப் போயிட்டு வாங்கன்ன… முடித்தார்.

என்ன எல்லாப் பிள்ளைகளுக்கும், அம்மாவைப்பி டிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்குப் பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்திலத் தொங்குறாங்க.

இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க.

பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம்.

பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி… தானா விலகிறவுகளும் இருக்காங்க. “முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும்.”

பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு, இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனாப் பலர் பித்துப்பிடித்துப் போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்கப் பெரும் பேச்சு. நோயும், மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. ‘மருந்து’ நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா?… மாத்திரைக்கும் டக்டருக்கும் வெளிச்சம்.

எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும்… சிரிப்ப வில கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. “அவுககிட்டக் காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க.. ஆனா, சிரிப்பு வரணுமே..

மதுரை திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது.

மாதா கோயில் மணி அடித்தது. நேரம் சரியாக ஆறுமணி. “எல்லோரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன். (யாத்தி.23-26). ஆமேன்… ஆமேன்…

பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சுருக்குப் புறப்பட ஆரம்பித்தது… மீண்டும் ஹாரன் சத்தம்…ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு ரயில் புறப்பட்டுவிட்டது.

அய்யனார் சார், என்னய்யா, மணி ஆறாச்சு இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கேம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.

பழைய பி.ஆர்.சி.யில செக்கார இருந்தவர் பெத்த பெருமாள்.

சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது.

எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது. உங்களுக்கு… என்ன?

ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும்.

நான், என்னங்க சார் கொசு கடிக்காதான்னு கேட்டேன்.

அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார்.

பேரப்பிள்ளைக தராத முத்தத்தக் கொசுவாவது கொடுக்கட்டும்னு சொல்லவும். எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க எனக்கு ஏன்டாக் கேட்டோம்ன்னுப் போச்சு.

டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக் கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு.

மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக வயதான அப்பா, அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்ட மாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு.

காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் கலைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின.

பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒண்ணாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம்.

நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக்கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா? மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில… வாழ்க்கை; பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள்.

ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா, சேராது. தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா, பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னுத் தவளைத் தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி இல்ல வா மேட்டுக்குன்னுத் தவளயக் கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு.

“தண்ணி தவளைக்கும் ஓந்தி மேடுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.”

 “தயிர்பானையில விட்ட மத்தாட்டம். எல்லோர் நாவும் உறவுகளை உச்சரிக்கத் தொடங்கினா? ஆனால், யாரு வெண்ணை எடுக்கல…” வெயில் ஏறிப் போனால் மோர் பானையில வெண்ண திரளாது. அப்படித்தான் உறவுகளிடம் சுயநலம், கர்வமும், பணத்தாசையும் வரும்போது வெறும் நீர்மோராக உறவுகள் மாறிப்போயின…

மக வீட்டுக்குப் போன அப்பாக்கள், தன்னை மாமனார்ன்னு நினைக்காம.. மருமகன மகனா நினைச்சு ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டாப் போச்சு. வெறும்பயலா இருந்தாலும் மருமகன், அவனுக்குப் பெண்ணும் கொடுத்து.. ஆண்டவன் அறுபதும் சீதனமாக் கொடுத்திருப்பாரு. மாப்பிள்ள, எதாயிருந்தாலும் ஆத்துலப் போட்டாலும் அளந்து போடுங்க இதுதான் சொல்லியிருப்பாரு… இங்க வந்தமா சாப்பிட்டமான்னு போகச்சொல்லு… எனக்கு புத்தி சொல்ல வர்றாரு… என்ன அவ்வளவு அறிவாளியா உங்க அப்பா? எங்க அப்பா பேச்சையே நான் கேட்டதில்ல மருமகன் எகிறுவாக.

மக வேப்பில இல்லாம சாமியாடுவா?

யம்மா, உம் புருஷன் வந்த வாயா வச்சுட்டு சும்மா இருந்தாத்தானே… என் விட்டுக்காரர்ட்ட என்னத்தயாவது சொல்ல. அவர் மனுசன், என்னை ராத்திரி கொண்டு எடுக்கிறார். தூங்கவிடாமா?

இதெல்லாம் நமக்கு எதுக்குங்கன்னா கேட்டாத்தானே அவரு அம்மா.

அம்மாவும்… மகளும்… அப்பனுக்கு குற்றப்பத்திரிகை வாசிக்க? வரட்டும் அவருக்குத் தேவையா? வந்தம்மா இருந்தம்மான்னு இருந்துட்டுப் போறத விட்டுட்டு…

வந்தமா பேசுனமா? இருந்தம்மானு போகவேண்டியது தானே. எதையாவது சொல்ல வேண்டியது. போயி, உங்க மருமகட்டச் சொல்லி பாக்கச் சொல்லும்மா உம் வீட்டுக்காரர? அங்க உங்கப் பருப்பு வேகாது. யார் அப்புராணி எம் புருஷன்தானே கிடைச்சாரா?

ஏன்டி, மரியாதையில்லாம பேசுற? நாங்க எல்லாம் அப்படியில்ல.

யம்மா, உங்க காலக்கதைய யார் கேட்டா? ஏதாவது கேட்ட மட்டும் பேசுங்க? தேவையில்லாம பேசாதீங்க.

அந்த மனுசன் இன்னும் உலகமே தெரியாம இருக்காரு…

சரிம்மா, நா போனு போடும் போதுச் சொல்லி வைக்கிறேன்.

இப்படிப் பலரும் பல நினைவுகளை அசைபோட்டு வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா.

டிபன் கேரியர்ல நாலு எருவாட்டியச் சப்பாத்தின்னு இருக்கும்.

பணம் கட்டியாச்சு, அவன் வைக்கிறதச் சாப்பிட்டாகனும்.

“வாய்க்கும் வௌங்காது, வந்தாரச் சிந்தாது.” தின்னதுபோக மிச்சத்தத் தூக்கி நாய்க்குப் போட்டா?

“நாய் மோந்து பாத்துட்டு… காலத் தூக்கிட்டுப் போகும்.”

மாணிக்கத்தின் மனத்திரையில் வந்துபோனது. எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து உக்காந்து, பேரன் பேத்தி எல்லாட்டையும் பேசிச் சிரிச்சு… சாப்பிட்ட நாட்கள் இனி வருமா, வரும்? ஏதாவது விசேஷகக் காலம்ன்னா?

வீட்ல போயி என்னத்தச் சாப்பிட.. அய்யோ கடவுளே! காலாகாலத்தில காப்பாத்துட்டா…! இந்த தனிமையில இருந்து காப்பாத்து உனக்குப் புண்ணியமா போகட்டும்…

பெத்தப்பெருமாள் மாதிரியான மனிதர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமில்லா மனநிலையில் பூமியைத் தேடிப் பூ நாளும் வாடிக் கிடக்கின்றனர். ஒவ்வொரு இரவும் முதிரா இரவாக…. ஆயிரம் பெத்தப் பெருமாள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். முதுமையை,

“கரையான் கட்டுனப் புத்துலக் கருநாகம் குடியேறுனது கணக்கா…” மெத்தையிலப் படுத்தாத் தூக்கம் வரமாட்டேன்னுது நாம வாங்கிய வரம்…

இராத்திரி ஒம்பது மணிக்குப் படுத்துப் பெறண்டு பெறண்டு படுத்தே தூக்கம் வர எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகும். ஆனா, டான்னுக் காத்தால மூன்றரைக்கு முழிப்பு வந்திரும். அதுக்கு மேலத் தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.

வெருக்கு வெருக்குன்ன ஒத்தக் கொரங்கா இருக்க வேண்டியிருக்கு.

இரவு நீண்ட இரவாப் போச்சுன்னு பெத்த பெருமாள் தனக்குத் தானே மெல்ல மனசுக்குள் பொலம்புறார்……

[email protected]

The post முதிரா இரவு – சுருளி காந்திதுரை appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

பெயராடல் – அசோக்

என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால் ஒருவரின் பெயரை ‘பெயர்’ என்ற அடையாளத்துடன் நிறுத்த விருப்பமில்லை. கூடவே அதில் ஒரு மஜாவும் இருக்கிறது. நான் அப்படி அழைக்கையில் அவர்களுக்கு நிறைய பெயர்கள் என ஆகி விடுகிறது. எப்போதும் வலது கையால் முகம் கழுபவரா நீங்கள்? இம்முறை இடக்கையால் கழுவிப் பாருங்கள். புது முகம் சிக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் ஒரிஜினல் தவிர மற்ற அனைத்து நாமத்தாலும் அழைப்பேன். ‘ஹலோ.. இல்லயில்ல. என் பேரு முருகேசன்ங்க’ என நீங்கள் என்னைத்திருத்தும்போது ஒரு புன்சிரிப்புடன் எதிர்கொள்வேன். மாறாக நீங்கள் சீற்றம் கொண்டால் அதில் உள்ள வேடிக்கையை இழப்பீர்கள்.

இதை நான் என் நட்பு வட்டாரத்தில் எனக்கான தனிக்குணமாகவே வைத்து இருந்தேன். கில்லி படத்தில்கூட பிரகாஷ்ராஜ் ‘சிவசுப்பிரமணியன்’ என்ற போலிசின் பெயரை ‘கோயிந்தசாமி’ என விளிப்பார். அவர் கோபம் கொள்ள, “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற?“ என்பார். அது என்னுள் ஆழ விதைந்துவிட்டதோ என்னவோ? அப்படி அடிக்கடி நான் பயன்படுத்தும் பெயர்கள் பார்த்தசாரதி, மகா கணபதி, திருச்செல்வம், யோகராஜ் போன்றன.

தமிழ் என்றொரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் தமிழரசன். சற்று பெருத்த உடல். முழுக்கை சட்டை மட்டுமே அணிவான். உளுந்து மூட்டையை மேலும் ஒரு சாக்கு கொண்டு சுற்றியது போல் இருப்பான். அவனை நிறைய பேர் உருவக்கேலி செய்வார்கள். நான் அப்படியில்லை. அவனுக்கு இதன்பால் என்னிடமும், என் இந்த பெயராடல் விசயத்திலும் பெரிய அன்பு மற்றும் கிரேஸ் இருந்தது. அவனின் நண்பர்களை நான் விசாரிக்கும்போதும் அவ்வாறே செய்தேன்.

‘ஒஹ்ஹ் நம்ம ராஜேஷா?’ என்பேன். உண்மையில் அவன் பெயர் சரவணனாக இருக்கும்.

‘ஜீ இப்ப நம்ம செல்வம் வருவான்,எதாச்சும் பேர் போட்டுவிடுங்க’ என வாலண்டியராக குதூகலிப்பான் தமிழ்.

சரி. இப்போ அதுக்கு என்ன? என்றால் ஒருமுறை எங்கள் சொந்த ஊர் சென்றபோது சுப்புராஜ் மாமா என்னை பார்த்து ‘என்னப்பா பாண்டி? என்ன பண்ற?’ என்றார். சொல்லில் ஒரு நக்கல். நானோ கிராமத்தில் கார்கோ க்ராக்ஸ் என கெட்டப்பில் இருந்தேன். சுற்றிலும் பார்த்து என்னைத்தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொ ண்டேன்.திக் என்று இருந்தது. நம்மை அடிக்க சில விபூதிகள் காத்துக்கொண்டுதான் இருக்கும்போல்.

‘சொன்னேன் – எம் பேரு அசோக்கு.’

‘திருப்பரங்குன்றத்துல குளத்துல தவறி விழுந்த பின்னால நைட்டு நைட்டு எந்திரிச்சி எங்காச்சும் ஒடபோறேன் ஒடபோறேனு அரட்டிகிட்டே இருப்ப. வெளக்கமாத்தால ரெண்டு போட்டதுக்கு அப்புறம்தான் தூங்குவ. அப்ப உங்க தாத்தா வச்ச பேருதான் பாண்டி. பாண்டி சாமியோட பேரு. அந்த பேரு கொஞ்ச நாள்ல காணாமப் போயி வந்ததுதான் இந்த சோக்கு எல்லாம்’ – நீண்ட விளக்கம் கொடுத்து சுப்புராஜ் மாமா பீடியை காலால் போட்டு அமத்தையில் என் மஜா எல்லாம் அணைந்துவிட்டது போன்ற ஒரு நெருடல். ஆனாலும் இந்த பாண்டிக்கு முருகேசன்கள் எல்லாம் திருச்செல்வம்கள்தாம். யோகராஜ்கள்தாம். பெயரில் என்ன இருக்கிறது?

தமிழ்தான் ஒருமுறை கேட்டான் – ‘ஏன்ஜி என்ன மட்டும் அப்படி பேர் மாத்தி கூப்பிட மாட்றீங்க?’

‘செவ்வாழைகள் கிட்ட நா வச்சிக்கிறது இல்ல’ – என்றேன். ‘கூடவே இருக்கிற’ என்பதைப் போட்டு புரிந்து கொண்டான் தமிழ் என்கிற பரிகாசன். சின்னஞ்சிறு விசயங்களில் கூட பகடி தேடுவான். சில சமயங்களில் தானே ஒரு பகடியாக மாறுவான்.

‘ஜி, இந்த கேஸ்க்காரன் வேற இன்னைக்கு என்னப் பாக்க வாரானாம்’ -தமிழ்

‘எதுக்கு?’ – நான்

‘வேற எதுக்கு கேஸ் போடத்தான்’ – தமிழ்

மேலும், ‘நேத்துதான் அஞ்சு லட்சம் செக் பாஸ் பண்ணேன். ஒத்த ரூவாகூட கைல இல்ல’ – என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவான். அவனின் பீடிகையைப் புரிந்து கொண்டு எனக்குள்ளும் ஜிபேயிலும் ஒரு பரிமாற்றம் நிகழும்.

‘யோவ் கேஸ்க்கு கொடுக்க காசு வேணும்னு கேக்கலாம்ல?’ என்றால், ‘அதுல ஒரு ஜாலி இருக்காது ஜி’ என்பான். பின்பு ஒருமுறை பார்க்கையில், ‘ஜி, அன்னைக்கு கேஸ்க்காரன் வந்தானா, அவன பார்த்தவுடன் உங்க ‘பிட்ட’ போட்டேன்’

புரியாமல் ‘என்ன?’ என்றேன். ‘ரெண்டு மாடி ஏறி களப்பா வந்து எறக்கி வச்சான். வச்ச அடுத்த செக்கண்டு என்ன பூங்குன்றன் இந்த வாட்டி லேட்டுன்னேன்.அவன் சிரிச்சிட்டே சொன்னான்.என் பேர் கண்ணன் ஸார். ஓ அப்டியான்னேன். களப்புலாம் கலைஞ்சி போன மாதிரி தெரிஞ்சான் ஜி அவன். அந்த நேரத்துல அவன் ஒருவாட்டியாச்சும் பூங்குன்றனா இருந்திருப்பான்லஜி?’

தமிழுக்கு இனமறியா குதூகலம். ‘ஆஆ…கண்டிப்பா’ என்றேன். கண்ணன்கள் பூங்குன்றன்கள் ஆவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிடப் போகிறது?

‘நீங்க அங்க இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க?’ என்றான். ‘அந்த நேரத்துல மனசுக்குள் என்ன தோணுதோ அதுதான் சொல்லியிருப்பேன்’ என்றேன்.இதை திட்டம் போட்டு செய்ய முடியாது. அது ஒருவித வன்முறை. ஒருவரின் பெயர் தங்கள் பெற்றோர்களால் ருசித்து வைக்கப்பட்டது. எனக்கெல்லாம் என் அப்பா அசோக் லேலண்டு லாரியில் பார்த்து ‘குமார்’ சேர்த்து வைத்தாராம். அதை உடைத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் சாம்ராஜ்யத்தையே தகர்ப்பது போன்றது. சிறு போர் போன்றது. அந்த போருக்கு ஒரு சிறு நகைச்சுவை உணர்வும், கடந்து செல்லும் குணமும், சிறு கணமும் போதுமானது. ஒரு பாலகனிடம் இருக்கும் மிட்டாயை படக்கென பறித்து அதே நொடியில் படக்கென இன்முகத்துடன் திருப்பி அவனிடமே கொடுப்பதைப் போன்றது. சிறுவனுக்கும், அதனைப் பிடுங்கிய நமக்கும் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம்தான் அந்த போரின் வெற்றி. நிறைய இடங்களில் பார்த்து இருப்போம்.

ஒருவரின் பெயரை மற்றவர்கள் எழுதுகையில் தவறு இருப்பின் அதை செவ்வனே திருத்தும் நபர்கள் உண்டு. கார்த்திக்கை ‘கார்த்தி‘ என்று எழுதினாலே குற்றம். பெயர் ஒரு அடையாளம். பெயருக்குள் ஒரு நபரின் உடல், குணம், அங்கீகாரம், நகை நட்டு, ஜாதி மதம், முடியில் எடுக்கும் வகுடு முதற்கொண்டு கலாச்சாரம், கத்திரிக்காய் என எல்லாமே அடங்கும். பெயரே அவராக இருக்கிறார்.

தமிழை சொல்லாமல் இக்கதை முடியாது. சில வருடங்கள் அவனைக் காண முடியவில்லை. ஓடும் பேருந்தின் இருபுறமும் சிதறும் செத்த இலைகள்தானே நாம். ஒருநாள் ஓர் இரவில் சர்ச் அருகில் வரச்சொன்னான். சீரான படுக்கைப்பட்டைகள் இருந்த புளு நிற ட்ஷிர்ட் போட்டிருந்தான். முழுக்கைச்சட்டைகள் எங்கே போயின? ஆனால், அதே உடல்.

சூடான இரவு. ஆனாலும், சூடான டீ குடித்தோம். ஏனோ மனுஷனுக்கு சூட்டில்கூட சூடுதான் கேட்கிறது. வினோதமானது மனசு மட்டும்தான்.

கழுத்தில் ட்ஷர்ட் மறைவில் ஒளியும் சிலுவை, சர்ச் வாசல் என இருந்தவனை கேட்டேன்.

‘ஆமா ஜி ஒன்னும் முடியல, இந்தப் பக்கம் வந்துட்டேன். ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. அம்மா உள்ளதான் வேல செய்றாங்க’ என சர்ச்சைக் காட்டினான். அந்நேரம் மணி ஒலித்தது. நிறைய பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்சம் கேட்டுக் கொண்டே இருந்தேன். பேச்சுக்கள் எங்கே இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த இடமே உடலின் புனித ஸ்தலம். வாய்ல இருக்கு வார்த்த – என சொல்வாள் கோட்டையூரில் மெஸ் நடத்தும் மாமி.

‘ஜி, ஒன்னு தெரியுமா… இந்த ஏரியால நான்தான் இப்போ குட்டி அசோக். அதான்ஜி நீங்க. இங்க வந்த புதுசுல பெக்கேன்னு வேலை வீடு காசுன்னுதான் இருந்தேன். காசு இல்லாதப்ப போர் அடிக்கல. இப்போ காசிருக்கு. ஆனா, ஒரு துடிப்பே இல்ல. அதான் பார்த்தேன். உங்க ‘பிட்ட’ போட்டேன். ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆச்சி. ரெண்டு பொண்ணுங்களையே இப்போ கரெக்ட் பண்ணிருக்கேன் ஜி’ என்றானே பாருங்க தமிழ் என்னும் ‘டைசன் சேவியர்’.

ஆளையும் வாழ்வையும் மாற்றியிருக்கிறது பெயர். அப்படியென்றால் பெயரில் என்னதான் இருக்கிறது தேவையை விடவும்? என்றே எனக்குத் தோன்றியது. போரில் தோற்பவனும் வெற்றியை பெறுகிறானோ? எது தேவையோ அதுவே தர்மம் – என்று அச்சிட்ட காலண்டரை முன்பு ஒருமுறை தமிழ் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அதில் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு இருந்தார். இங்கே பின்புறம் மாதா அழகிய புன்னகையுடன் நிற்கிறார். இருவரின் சிரிப்பையும் எந்தப்பெயர் பிரிக்கும்?

பேசிக்கொண்டே இருக்கையில் கடந்து செல்லும் ஒருவனை பார்த்து தமிழ் சொன்னான். ‘என்ன செந்தூரப்பாண்டி,வேளைக்கு வர நேரமா இது?. அவனோ, ‘யோவ்.. போய்யா!’ என சிரிப்பளித்தான்.

‘அவர் சர்ச் வாட்ச்மேன் ஜி. பேரு ஆரோன். அவருக்கு நா டெய்லி இப்டி ஏதாச்சும் சொல்லி கூப்டனும். அப்படியே சிரிச்சிட்டே உள்ள போவாரு.’ என்றான் தமிழ். எப்போதும் தமிழ்தான் எனக்கு.

பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு, ‘சரி ஜேக்கப்… வரட்டுமா?’ என்றேன்.

‘ஜீஈஈஈஈஈ..!’ என்றான்.

குளிர்ந்து மாறியது இரவு.

[email protected]

The post பெயராடல் – அசோக் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கன்னக்குழி – ஜெயநதி

மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின் பொருட்டு…

தானிழைத்த பெரிய தவறுக்காக ஒரு மன்னிப்பைக் கோரி நின்றவளை தாய் மன்னித்து வீட்டில் சேர்த்திருக்கலாம். ரதியும் படிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

தொலைபேசி எண்ணை ஆன் செய்ததும் தொடர்ச்சியாய் தவறின அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து விழுந்தவண்ணமிருக்கிறது.

வந்தவைகளில் மஞ்சுவின் குறுஞ்செய்திதான் அதிகம். மஞ்சுநாதனை அழைத்தாள்.

‘”என்ன?” என்றாள்.

“எனக்குத் தெரியும் ரதி. மூனு   நாளைக்கு தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு.. ராஜ்மதன்னு புதுசு. நீதான் வேணும்னு காத்திட்டிருக்கான். இன்னைக்கு முடியுமா?”

“ம்ஹூம், முடியாதுப்பா…!” என்றாள்

“அப்ப நாளைக்கு.?….

“ம்..”

அந்தப் பக்கம் அவன் இளிப்பது தெரிந்தது.

காரைக் கிளப்பினாள். கண்ணாடியில்       முகம் பார்த்தாள். சாயமில்லாத உதடு வெளிறி இருந்தது. ரெடிமேட் மூக்குத்தி முகத்தின் வாட்டத்தை மறைத்து மின்னியது.

குதிரைவால் பின்னலை வளைத்து கொண்டையாக மாற்றியிருந்தாள். இளமையின் மீது விழுந்த நகக்கீறல்களாய் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய். இன்னும் மெலிதான இரத்தப் புள்ளிகள் நாப்கினை நனைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு சரியாகிவிடும்.

அப்புறம் கனஜோராய் தொழில் ஆரம்பித்து விடும். விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து நுகர்வதும், கசங்குவதும், கசப்பதுமான இடிபாடுகளிடையே நொறுங்கிவிடாது

நகர்ந்து வருவது பெரும்பாடு.

ஏதாவது ஒரு முகம்

ஏதாவது ஒரு தருணம்

அழுவாச்சிக் காட்டி ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கும். ஆனால், சென்டிமெண்ட்டெல்லாம் தொழில் தர்மமில்லையே!

காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்தாள்.

உலகத்தை எத்தி எத்தி பின்தள்ளி

முன் நகர்கிற இந்த தள்ளாட்டம் அவளுக்கு சுகமோ சுகம்..

வீட்டினுள் நுழைந்து கதவடைத்தாள்.

செருப்பைக் கழற்றியதும் அவளுக்காக காத்திருந்த பூனைக்குட்டி மெத்தென்று உரசி கால்களை நக்கியது.

எங்கிருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவது அவனுக்காகத்தான்..

“ச்சிலியோப்பா”… சீட்டா, லியோ, பேன்தர் மூன்றையும் கலந்து வைத்த பெயர்…அவள்பாட்டிலைத் திறக்கிற கண்ணாடி கோப்பைகள் உரசுகிற சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் ஆஜராகி விடும்.. அதற்கு மதுவை நக்குகிற பழக்கம்… அவளுடன் கட்டிலில் மல்லாந்து விடும். அவளுக்கு மனசு சுணங்கியிருக்கும்போது அதற்கு எப்படியோ தெரிந்து விடும். அவளை விட்டு விலகாது உரசிக்கொண்டு கூடவேஇருக்கும்…

“குட்நைட்…ச்சிலியோப்பா”…..என்றாள்.

வாயிலிருந்து குழறலாய் பனிப்புகை கிளம்பியது.

ஜெர்மனியின் பனிச் சூழ்ந்த மரப்பலகை வீட்டின் படுக்கையறை

ஹீட்டரில் கதகதப்பாயிருந்தது.

இந்த கசிகிற மெல்லிய வெளிச்சத்தில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருப்பது நன்றாய்த்தானிருக்கிறது.

சில மெழுகுவர்த்திகள் நின்று எரிகிறது. சீக்கிரத்தில் அணைவதில்லை. அதன் தடிப்பு குறைவதுமில்லை….

அரக்கு ஒழுக்கி ஒட்டிய கடிதத்தை முனை கிழியாமல் பிரிப்பதும், அதில் ஏதும் சுவாரஸ்யம் இருக்குமாவென படித்துப் பார்க்கையில் ஒரு மண்ணுமில்லை என கசக்கிப் போடுவதுமாய்

வாழ்க்கை….!

“போங்கடா”….

நொறுங்கிவிடாது இவ்வளவு தூரம் வந்திருப்பதே விஷயம்தான்…

கொஞ்சம் வீறல்…

கொஞ்சம் விரிசல்…

ஆனாலும் எதை ஊற்றினாலும் கசிய விடாத

கண்ணாடிக் குவளை.

இன்னும்

மவுசு இருக்கிறது. போகிறவரை போகட்டுமே….

மறுநாள் விடுதியை அடைந்தபோது வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தான். வாயெல்லாம் பற்கள்.. சட்டைப்பை நல்ல கனத்திலிருந்தது. பெரியவருமானமாய் இருந்தால் மஞ்சு நேரிலேயே வந்துவிடுவான். இல்லையெனில் அலைபேசியிலேயே வியாபாரத்தை முடித்துவிடுவான். இன்று நல்ல வேட்டைதான்போல..

அறைக்கதவை தட்டிக்கொண்டு போனபோது, உள்ளே இருந்தவர் கதவோரம் இருந்த இருக்கையிலேயே அமரும்படி சைகை செய்துவிட்டு வீடியோ காலில் அசையாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் எதிரில் பேசிக்கொண்டிருப்பது அனேகமாய் மனைவியாய் இருக்கக்கூடும்.

இந்த ஆண்களுக்கு மனைவியிடம் நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி..

பேசி முடித்ததும் அருகில் வந்து அமரும்படி சைகைசெய்தார்.

“நேர்ல இன்னும் அழகாஇருக்கே…!”

சிரித்தாள்..

“ஒகே…கே…நான் நிஜத்தை சொன்னேன்…!” அவரும் சிரித்தார்.

“ஏதோ இருக்கு உன்கிட்டே… புகைப்படத்தைப் பாத்தப்பவே கணிச்சேன்.. இன்னைக்கு ஊர்ஜிதமாயிடுச்சு.. உன்கிட்ட ஏதோ வசியம் இருக்கு…ஹா…ஹா…”

“பெரிய மனுஷ தோரணையெல்லாம் படுக்கையில உதவாது.வா..வந்து இங்க உட்கார்” என்றபடி தொடர்ந்து, “ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” எனக் கேட்டார்.

“ம்.”..

“என்ன சொல்லட்டும்?”

“ஷாம்ப்பெய்ன்.. சப்பாத்தி.. மட்டன் கசண்டி”…- என்றாள்.

“ஆஹா ஜோர்…எனக்கும் இது ரசிக்கும். முதல்ல சாப்பிட்டு சவகாசமா பேசிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்…” என்றார்.

ரசனைக்காரன் தான்.

இன்று எல்லாப் பசிக்கும் தீனி கிட்டலாம்..

“ரதி…ஏதாவது பேசேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்?”

என்ன கன்றாவிடா இது…

ஏதாவது கவிஞன் எழுத்தாளனிடம் வந்து சிக்கிக்கொண்டுவிட்டேனா என்ன?…

வேலை முடிந்ததா அனுப்பி வைப்போமா என்றில்லாது, பைத்தியக்காரன்

“அதுவந்து”..

அவரே பேசினார்..

“எனக்கும் அலுப்பாயிருக்கு… நிறைய பாத்தாச்சு.. இன்னைக்கு அமைதியா பிடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, பேசிகிட்டு, ரூமுக்குள்ளேயே கதகதப்பா இருக்கத் தோணுச்சு. பாத்த போட்டோக்கள்ல நீதான் இதுக்கு சரியா வருவேன்னுபட்டுச்சு. அதுவும் இந்த சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ விழுகிற கன்னக்குழி….”

ஆழமாய் பார்த்தார்.

வெகுநேரம் ஓடிக்கொண்டிருக்கிறபோது மிகப் பிடித்த இடத்தைக் கடக்கையில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைப்போல

திரில்லாக இருந்தது ரதிக்கு..

வித்தியாசமானவனாய் இருக்கிறான்.

“ம்… என்ன கேட்டீர்கள்? சரியாக கவனிக்கவில்லை” என்றாள்.

“காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன? நீ லவ் பண்ணியிருக்கையான்னு கேட்டேன்?”

காதலன் இருந்தான். அவன்தான் காதலைச் சொல்லி படிப்பதிலிருந்து காதலுக்கு நகர்த்தி.. காதலிலிருந்து கர்ப்பத்திற்க்கு நகர்த்தி.. பின் கருக்கலைப்புக்கு நகர்த்தி.. ஆயிரம் சத்தியம் செய்து மறுபடியும் இன்னுமொரு கர்பத்திற்கு நகர்த்திவிட்டு ஒருநாள் அவனுக்கே அத்தனை சத்தியங்கள் சலித்திருக்கும் போல… ஓடிவிட்டான்.. திருட்டு ராஸ்கல்….இதுவரை எந்தத் தகவலுமில்லை.இவளும் தேடவில்லை..விட்டது சனியன் என்று..

இவனிடத்தில் எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்…

“அது வந்து… காவியக் காதல் பண்ற அளவுக்கு யோக்கியமானவனை இதுவரைக்கும் நான் பாக்கவுமில்ல. காவியக் காதலியா இருக்கிற யோக்கியதை எனக்குமில்ல… பத்தொன்பது வயசுலயே இந்த லைனுக்கு வந்துட்டேன். சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்ல..

அப்புறம் ஒரு கால்கேர்ள் கிட்ட காதலைப் பத்தி விசாரிக்கிறிங்கன்னா நீங்க சுவரஸ்யமான ஆள்தான்.. காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?….”

கூர்மையானாள்.

“எனக்கு இப்ப வயசு அறுபத்தி ரெண்டு. இருபத்தி மூனு வயசுல ஒருத்திய பாத்தேன். ப்ரபை அவளுடைய பெயர். அவளாக வைத்துக் கொண்ட பெயர். தமிழ்நாட்ல ஒரு நூலக வாசல்ல… யாருக்கோ காத்திட்டிருந்தா..அப்பப்ப என்னைப் பாத்துசிரிச்சா.. கன்னக்குழிவிழ… எனக்கு முதல் பார்வையிலயே ரொம்ப பிடிச்சிருச்சு..போய்ப் பேச பயம்.. ஒரு கார் வரவும் கிளம்பிப்போயிட்டா. மறுநாள் அதே நேரத்துக்கு அந்த நூலகத்துக்கு போய் ரொம்ப நேரம் காத்திருந்திட்டு ஏமாந்து திரும்பி வந்தேன். அவ கன்னக்குழி சிரிப்ப மறக்க முடியல.சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ குழி விழுகிற சிரிப்பு… மனசு எதுலயும் ஒட்டல. அதன்பிறகு எதேச்சையா ஒருநாள் ஒரு உணவகத்துல பார்த்தேன். முன்பைவிட இன்னும் அழகாயிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கிட்டிருக்கிறதை கவனிச்சு அவளே என்கிட்ட வந்து லேண்ட்லைன் எண்ணைத் தந்துவிட்டு மறைஞ்சுட்டா.

அந்த எண்ணுக்கு கூப்பிட்டபோது.. ரேட் இவ்வளவு என்று பேசினாள். எனக்கு முதலில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளை மறக்கமுடியாமல் திரிஞ்சேன். சில தினங்களுக்குப் பிறகு என் காதலைத் தாங்க முடியாமல் சொன்னபோது திக்குமுக்காடினாள்… குதூகலித்தாள். நிறைய பேசினோம். அவள் அதிபுத்திசாலி. கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஜான்மில்டன் பற்றி பேசுவாள். ஷெல்லி பற்றி பேசுவாள். பாரதியைப் பற்றியும் பேசுவாள். வரலாறு, புரட்சி எதைப்பற்றியும் பரவலான அறிவிருந்தது அவளிடம். முக்கியமாய் பரதம்…. சுழன்றாடினாள்…

என்னை ஸ்திரமாய் நம்பினாள்.

நம்பவைத்தேன்.

சில நாட்களில் என் அண்ணனுக்கும் பின் அம்மாவுக்கும் எல்லாமும் தெரிஞ்சு போனது.. அம்மா அடித்துக் கொண்டு அழுதாள். அரிவாள் மனையை கழுத்தில் அழுத்திக் கொண்டு அறுத்துக் கொள்ளப் போவதாய் மிரட்டினாள்.

வேற வழியில்லாம அவளை தவிர்த்தேன். பாவம் ப்ரபை.. ஆனால், அதிபுத்திசாலியல்லவா.. நான் கைவிட்டதை புரிந்து கொண்டாள்.

பின்னாளில் எனக்கு கல்யாணமும் முடிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு அவளை ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் பாத்தேன். ஒரு ஆணுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே

என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என்னை மன்னித்துவிட்டதாய் காட்டிக் கொண்டாள்… குற்ற உணர்வுடன் நான் திரும்பி விடக் கூடாதென்கிற அக்கறையோடு கன்னக்குழி விழ சிரித்துக்கொண்டே கடந்து போனாள். மனதாலும் அவ்வளவு அழகானவளை அப்புறம் பார்க்க நேராததுதான் அவளோடு இணைந்திருந்து குறுகிய நாட்களை அற்புதமான கவிதை வரியாக மாற்றியிருந்தது வாழ்வு.. ஜிகினா காகிதத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான பழுப்புக் கவிதை .

ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

உணவகத்திலிருந்து வெளியே வந்த போது மிக மெல்லிய காற்றுக்கே அங்கிருந்த போகன்வில்லா மரம் காகிதப்பூக்களை என் மீது ரோஸ் நிற வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றி மொய்க்கச் செய்தது.

அவள் மன்னித்துவிட்டாள்.

தெருவோரப் பைத்தியக்காரி ஒருத்தி என் முகத்தில் ஆசையாய் தடவிய விரல்களை அழுக்கு உதட்டில் வைத்து முத்தினாள்.

சத்தியமாய் ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை உணர்ந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இன்றுவரை எனக்கு மன்னிப்பே கிடைகக்கவில்லை…

பிறகு மனம் நோகிற போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்துவிடுவேன்… இரண்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இன்று அவளை லைப்ரரியில் முதன்முதலில் பார்த்த தினம்..

அதைக்கொண்டாட அவளைப் போலவே ஒரு விலைமாதைத் தேடினேன்.  

எனக்கு வந்த புகைப்படங்களிலேயே நீதான் பழைய இடதுக் கன்னக் குழியோடு புது சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தாய்!”

[email protected]

The post கன்னக்குழி – ஜெயநதி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில் நிறுத்தலாமென்றால், ரோட்டில் இருந்த மரத்தையெல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டியதால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரங்களே இல்லை.

முதல் கேட்டினுள்ளே நுழைந்தால் வலது புறம் பெரிய ஆலமரம், விழுதுகள் ஊன்றி நிழல் அளித்ததைக் கண்டு அதன் எல்லையில் நிறுத்தினான் திருப்பதி, அதற்குள்ளாக செல்போன் அழைப்பு நின்றிருந்தது.

செல்போனை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தால் புதிய எண்ணாக தெரிந்தது. இதற்கு முன்பு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக நினைவில் இல்லை. பொதுவாக அழைப்புகள் வரும் எண்களையும் பேசுபவர்கள் குரலையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவது வழக்கம். அந்த எண்ணிற்கு அழைத்தான் பிசியாக இருந்தது. சரி காத்திருப்போம் என அமேசானில் உலாவி புதியதாக வந்திருக்கும் டூல்ஸ்களை பார்வையிட்டான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சார், அதிர்ஷ்டம் கடையில ஒங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க திருப்பதிதான? வாசிங் மிஷினுக்கு சரியா தண்ணீ வரமாட்டேங்குது. தொவக்க லேட்டாவுது. வந்து என்னான்னு பாக்க முடியுமா? இப்போ வர முடியுமா?”

“ஓகே பத்துடலாம். டேங்குல தண்ணீ ஃபுல்லா இருக்கா?”

“பார்த்துட்டேன் சார். மோட்டார போட்டு தண்ணிய ஃபுல்லா ஏத்தியும் பாத்துட்டேன். ரெம்ப கம்மியா வருது போல. தொவக்க ரெம்ப நேரம் ஆவுது. இதுக்கு முன்னாடி இது மாறி ஆனதில்ல. கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வெளிய போகனும்”

“சரி, அட்ரச சொல்லுங்க. வந்துர்றேன்.”

“அருளானந்த அம்மாள் நகர், புஷ்பம் காலனி, ஆறாவது தெரு, மொத மாடி வீடு, கத்தரி பூ கலர்ல பெயிண்ட் பண்ணது.”

“மெடிக்கல் காலேஜ் ரோட்டுல இருக்கேன். நேரா அங்கதான் வரனும் வந்துர்றேன்.”

தினமும் தஞ்சாவூரையே சுற்றி வருவதால் முகவரி நன்றாகத் தெரிந்தது. மனதிற்குள் அதற்குள் போக வேண்டிய பாதை வரைபடமாக விரிந்து வழிகாட்டியது. ஞாபக அடுக்குகளில் தெரு, கடைகள், திருப்பங்கள் எல்லாம் எப்படி பதிகிறது.. திரும்பவும் எடுக்கப்பட்டு பயன்படுகிறது என மனதின் வன்மையை நினைத்து வியப்படைத்தான்.

வாகனத்தை மெதுவாக இயக்கி பண்ணிரெண்டு நிமிடத்தில் புஷ்பம் காலனி ஆறாவது தெருவையடைந்தான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. தெருவின் முதல் வீடே அவர்களதுதான், வாகனத்தை நிறுத்திவிட்டு டூல்ஸ் பையுடன் கேட்டின் கதவருகே நின்று உள்புறமாக அழைத்தான்.

“சார், சார். வீட்டுல நாயிருக்கா?”

“இதோ வர்றேன் சார்” – என்றபடி முப்பத்தியைந்து வயதுடைய பெண் நைட்டியில் வந்தார்.

“வாங்க சார், நாய் கிடையாது. பயப்படாம வாங்க.”

“ஒகே, ஒகே. ரெண்டு மூனு தடவ கடி வாங்கி ஊசி போட்டதுல கொஞ்சம் பயம். அதான் கேட்டுக்கிட்டேன். வாசிங் மிஷின் எங்க இருக்கு?

“மொதல் மாடியில் இருக்கு. வாங்க காட்றேன்”

போர்டிகோவை ஒட்டி ஏறிய மாடிப்படியின் வழியே முதல் மாடியில் வலது புறம் இருந்த மிகப்பெரிய அறையைக் காட்டினார். “இதுல இருக்கு. நீங்க பாருங்க. நா காலேஜ்க்கு போவனும். டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவருக்கு நல்ல திருத்தமான முகம். மேக்கப் இல்லாமலே அழகாக இருந்தார். நன்றாகப் படிய வாரிய தலைமுடி பின்னால் பின்னி இடுப்புவரை தொங்கியது. நைட்டியிலேய உடலின் வளைவுகளும் திண்மையும், இளமையும் தெரிந்தது. சாந்தமான முகமும் புன்னகையும் ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க முடியாத வன்னமிருந்தது. கழுத்தில் தாலியும், காலில் மெட்டியுமில்லை. கற்பனையில் மனம் பறந்தது.

வாசிங் மிஷின் அறையில் உள்ளே அதன் அட்டாச்சுடு பாத்ருமை ஒட்டி நன்றாக வழிவிட்டு வெளியே இருந்தது. முதலில் மிஷினுடன் இணைந்த  குழாயின் வால்வை மூடிவிட்டு ஹோசை கழற்றினான். மீண்டும் வால்வைத் திருகினான். தண்ணீர் நன்றாக வேகமாக வந்தது. ஹோசின் மறுமுனை, மிஷினின் பின்புறம் இருந்ததைக் கழற்றிப் பார்த்த போது, சிறிய வலையில் அதிக அளவில் காய்ந்த தேக்குமரப் பூக்கள் நிறைய வடிகட்டும் வலையில் சிக்கி அடைத்திருந்தால் தண்ணீர் கொஞ்சமாத்தான் செல்லும். சுத்தமாக சிறிய வட்ட வலையை கழுவி சரியாகப் பொருத்தி பழையபடி ஹோசை மாட்டிவிட்டு வால்வைத் திறந்த போது நல்ல வேகமாகத் தண்ணீர் வந்தது. மிஷினை ஆன் செய்து பார்த்தான்.

தண்ணீர் உடனே வேகமாகப் பாய்ந்ததால் மிஷின் பழையபடி வேலை செய்தது. இப்போது விரைவாகத் துணிகளை துவைத்துவிடும் . பாத்ரூமில் கைகால்களை கழுவி வெளிவந்து டூல்ஸ்பையை எடுத்து சரிபார்த்து அறைக்கு வெளிய வந்தான்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகே அழைத்த பெண் மாடிக்கு வந்தார்.

மிகப்பிரகாசமான ஒளிபரவ குறுகிய கால எளிய மேக்கப்பில் ஜொலித்தார். நெருங்கிய உறவினரைப் பார்பது போல தெரிந்தது. பெண்ணுக்கேயுரிய உடல் அமைப்பும் அதற்கேற்றார் போல உடையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“என்ன சார், சரியா இருக்கா இப்ப? என்னாச்சி என்ன காரணம் தண்ணீ சரியா வராததுக்கு?”

மேல இருக்குற தண்ணீர் டேங்க்குல, காஞ்ச தேக்குமர பூ கொட்டுறது உள்ள விழுந்து கீழ வர்ற பைப்பு வழியா வந்து, வாசிங் மிஷின்ல பில்டர்ல அடைச்சிகுது. அதுனால தண்ணீ உள்ள வேகமா வராம துணிய தொவைக்க ரெம்ப லேட்டாவது. அதான் காரணம்.”

“ஓ அப்டியா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? மாடியில இருக்கும் டேங்க்க பார்த்துட்டு சொல்லுங்க. சுத்தப் படுத்திடலாம்.”

ஒரு வினாடி யோசித்தவன், “சரி, ஏறி பாத்துடுவேன். ஆனா, கிளீன் நா பண்ண மாட்டேன்.”

“ம். ஓகே சார்.”

மொட்டை மாடியில், வீடு கிழக்கு பார்த்த வாசல் என்பதால் இடது புறம் மூலையில் டேங்க் சிமெண்ட் செங்கல் , கலவையில் கட்டப்பட்டிருந்தது. பின் கட்டில் இடமிருந்ததால். நிறைய தேக்குமரங்கள் இருந்தன, இரண்டு மாடி தாண்டி வளர்ந்தவை. டேங்கின் மேல் ஏறிப் பார்த்தான். பிளாஸ்டிக் மூடியாததால் உடைந்திருந்தது. பாதிக்கும் மேல் திறப்பாக இருந்த பகுதி வழியே பூக்களும் இலைகளும் விழுந்து தண்ணீரில் குப்பையாக, அழுக்காக இருந்தது. கீழே வந்து. அப்பெண்ணிடம், “டேங்க் மூடி ஒடஞ்சிருக்கு. அத மாத்தனும், தொட்டிய சுத்தம் செய்யனும். ஒடஞ்ச பக்கமா தேக்குமர பூவும் இலையும் கொட்டி குப்பையா இருக்கு” என்றான்.

“ஒரு உதவி செய்யுங்க. நீங்க கிளீன் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க” என்றார்.

“ஸாரி, அந்த வேலை என்னால முடியாது. வேற தெரிஞ்ச ஆள் இருக்கு நம்பர் அனுப்புறேன். சொன்னீங்கன்னா வந்து கிளீன் பண்ணிட்டு மூடியும் புதுசா போட்டு குடுத்துட்டுப் போவாரு. இந்த தடவ இரும்பு மூடியா போட்டுங்க.” என்றபடி நம்பரை அனுப்பினான்.

“சரிங்க நம்பர் தாங்க. பேசிக்குறேன். உங்களுக்கு ஜீபே இருக்கா? இருந்தா நல்லது. உடனே பணம் அனுப்பிடுவேன். கேஷ் வச்சிகிறது இல்ல, ஸாரி” என்றார்.

“அதபத்தி பேசுனா அரசியலாய்டும். பொதுவா நா பணம்தான் வாங்குவேன் .முடியலன்னா ஜீ பே பண்ணுங்க. உங்க பேர சொல்லுங்க. பணம் வந்துட்டா செல்லிர்றேன்” என்றபடி கூலித் தொகையையும் சொன்னான்.

“ஒகே, நீங்க நோட் பண்ணிக்குங்க. எம்பேரு அனுஸ்ரீ” என்று சொல்லியடி போனிலிருந்து பணம் அனுப்பினார்.

கேட்ட தொகையை அனுப்பியிருந்தார்.

“பணம் வந்துடிச்சிங்க. தாங்க்ஸ். அனுப்பின நம்பர்ல கூப்பிட்டு தொட்டிய பாத்துட்டு ,கூலிய பேசிட்டப்புறம் வேலை பாக்க சொல்லுங்க. அதான் நல்லது. சரி நா கெளம்புறேன்.”

“ஓகே, நானும் காலேஜிக்கு போனும்” என்று கீழிறிங்கினார். திருப்பதியும் பின்னால் இறங்கினான். ஏதோ உறுத்தலாகவே உணர்ந்தான். வீட்டின் வாசலில் வைத்த வாகனத்தை எடுக்கும் போது சிமெண்ட் கலர் குவாலிஸ் அர்பன் குருஸ்னர் வந்து நின்றது. அதிலிருந்து மாநிறத்தில் குள்ளமான நபர் இறங்கி திருப்பதியை பார்தபடி வீட்டினுள் போனார்.

“யாரு வந்துட்டுப் போறது? நா இல்லாத போது கண்ட ஆளெல்லாம் கூப்புடாதேன்னு எத்தன தடவ சொல்றது?” என்ற சப்தமாகப் பேசுவது கேட்டது. லேசாக மனதிற்குள் வெம்மையை உணர்ந்தான்.

“வாசிங்மிஷின் ரிப்பேர்னு சொல்லி ஒரு வாரமாவுது. நீங்க பாக்குற மாறி தெரியல. அதான் அதிர்ஷ்டம் கடையில் அவரோட நம்பர குடுத்தாங்க. வரச் சொல்லி சரி பண்ணினேன். அதுக்கு இப்ப என்னா? நீங்க செய்ய மாட்டீங்க.. செஞ்சா குத்தம் சொல்றது. சரி, எனக்கு நேரமாவுது” என்ற கோபக் குரலும் கேட்டது. ‘இது குடும்ப வெவகாரம். நாம தலையிடக் கூடாது’ என ஒன்றும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் திருப்பதி.

மூன்று நாட்களுக்கு பிறகு அனுஸ்ரீ போன் செய்தார்.

“சார், நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். சிவானந்தம்னு வந்தாரு. டேங்க்க நல்லா சுத்தம் பண்ணதோட, புது இரும்பு மூடிய வாங்கிட்டு வந்து சிமெண்டால பூசி குடுத்துட்டுப் போனாரு. ரெம்ப தேங்க்ஸ்” என்றார்.

“அதுக்கு ஏங்க தேங்க்ஸ்? எங்க வேலையில் அதுவும் ஒன்னு.. அவ்ளோதான். உங்களுக்கு திருப்தினா சரிதான்”

“ஒகே சார். வச்சிடுறேன் பை” என்றார்.

அப்போதே  வாட்சப்பில் பூங்கொத்தும், ஸ்மைலியும் , ஹார்ட்டும் தேங்க்ஸும் வந்தது. அன்றிலிருந்து  தினமும் காலை வணக்கமும் , இரவு வணக்கமும் பத்து நாட்களுக்கும் மேலாக அனுப்பியிருந்தார். திருப்பதிக்கு உறுத்தலும், தவிப்பும் ஏற்பட்டு ஒரு மாதிரியானான். பதிலுக்கு எதுவும் அனுப்புவதில்லை.

கடையிலும், வெளியிலும் வேலையில்லாத நேரம். அம்மாதிரியான காலத்தில் புத்தகம் படிப்பதில் இறங்கும் பழக்கம். நாஞ்சிலாரின் இடமோ வலமோ தொகுப்பை படிக்கத் தொடங்கினான் திருப்பதி,

தவசிப்பிள்ளை, கும்பமுனியை வைத்து நகைச்சுவையுடன் நிதர்சனமான உண்மையைக் கலந்து தரப்பட்ட பதிவுகள். பாதிக்கும் மேல் படித்துவிட்டான். முகம் முழுவதும் புன்னகையுடனும் மனமும் நிறைத்திருந்தது. செல்போன் அழைப்பு வந்தது , சற்றே சலிப்புடன் போனை எடுத்தான். அழைத்தது அனுஶ்ரீ. மணி பன்னிரெண்டாகியிருந்தது

“சொல்லுங்க , என்னாச்சி?”

“வீடு முழுக்க எல்லா பைப்பிலும் தண்ணீர் வர மாட்டேங்குது. கொஞ்சம் அவசரம். உடனே வர முடியுமா?”

“எல்லா பைப்பிலும் வரலியா? பத்து நாளுக்கு முன்னாலதானே சுத்தம் பண்ணோம். திடீர்னு வரலயா?” என்றான்.

“ஆமாங்க காலையில கூட பாத்திரம் கழுவினேன். அப்பல்லாம் வந்ததே! வாசிங் மிஷின்ல துணிய தொவச்சி மாடியில காயப்போட்டேனே.” என்றார்.

“சரிங்க. ஒடனே வர்றேன்”

டூல்ஸ் பையுடன் வாகனத்தில் ஏறி உடனே அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

வீட்டை நெருங்கி வாகனத்தை சுற்றுச் சுவரின் அருகே பெரிதாக வளர்ந்திருந்த புங்க மரத்தினடியில் நிறுத்தி பூட்டினான். புங்க மரத்தின் நிழலும், பசுமையும், பச்சை வாசனையும் அற்புதமான குளுமையுடன் பரந்து விரிந்திருந்தது. தெருவில் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. ஹாலைக் கடந்து இடது புறமிருக்கும் படுக்கையறைக்கும் சாமி அறைக்கும் நடுவில் நின்று மீண்டும் அழைத்தான். பதிலில்லை, படுக்கையறையிலிருந்து பிளாஸ்டிக் வாளியை நகர்த்தும் சப்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

மீண்டும் குரல் கொடுத்தான்.

படுக்கையறைக் கதவை மெதுவாக தயக்கத்துடனே தள்ளித் திறந்தான். அறையில் யாரும் இல்லை. பெரிய அறை. அலங்காரமான தேக்கு கட்டிலும் தலைப்பக்கம் விளக்குகள் வைத்து பிளஸ்டிக் பூக்களால் அலங்கரித்து அழகுடன் இருந்தது. ஒரு அடி உயரமுள்ள ஸ்பிரிங் மெத்தை மேலே காட்டன் போர்வையால் போர்த்தியிருந்தது. படுக்கையின் எதிரே ஐம்பத்தி மூன்று இஞ்ச் டிவியும் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்ட மையத்தில், முன்னும் பின்னும் இழுத்தும் ,சுவரில் சமமாக வைக்கும் விதத்தில் மாட்டியிருந்தனர். அறையின் இடது புற சுவரின் நடுவில் ஏசியும், மூன்று புற சுவரின் நடுவில் வண்ணமயமான விளக்குகளும் , வித்தியாசமான வடிவமைப்பில் சீலிங் பேனும் இருந்தது. வலது மூலையில் பாத்ருமின் கதவு லேசாகத் திறந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மேலும் உள்ளே நுழைவதற்குள் பாத்ரும் கதவு திறக்கப்பட்டு முழங்கால் மூட்டு தெரிய தூக்கி மார்புப் பகுதி வரை கட்டியிருந்த உள் பாவாடையும், தோள் மேல் போர்த்தியிருந்த பெரிய தேங்காய் பூ துண்டுடன் அனுஸ்ரீ வெளியே வந்தார். திருப்பதியை பார்த்ததும் புன்னகைத்து, “வாங்க, பாதி குளிக்கும் போது திடீர்னு தண்ணீ வரல.. அதான் போன் பண்ணேன்” என்றார்.

வெட்கமும் பதற்றமுமடைந்த திருப்பதி திகைத்தான்.

“ஸாரி, கூப்பிட்டு பார்த்தேன். பதிவில்லை. அதான் உள்ளார வந்துட்டேன்.”

“அது பராவாயில்ல. என் தப்புதான். வெளியே இருந்துக்கனும். நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல”

“வேலையில்லாம சும்மா புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அதான் உடனே வந்துட்டேன்.”

“புத்தகமெல்லாம் படிப்பீங்களா?”

“ம் , படிப்பேன். சரி, வந்த வேலைய பாக்கலாமா?”

கலகலவென சப்தமாகச் சிரித்தார்.

“ஓ..சாரி. வாங்க.. வந்த வேலைய பாருங்க” என்று பாத்ரூமுக்கு வழி விட்டார்.

பாத்ருமிற்குள் புகுந்து குழாய்களைத் திருகிப் பார்த்தால் சுத்தமாக தண்ணீரே வரவில்லை. சரி மாடி டேங்கில் தான் பார்க்க வேண்டுமென முடிவுக்கு வந்து திரும்பும் போது, தேங்காய்ப்பூ துண்டில்லாமல், மார்புப் பகுதியில் கைவைத்து முடிச்சிட்ட பாவடையை அவிழ்த்து கால்கள் வழியே நழுவ விட்டு அனுஸ்ரீ நிர்வாணமாக நெருங்கினார். சாதாரணமாக நல்ல உடையணிந்தாலே அழகாகத் தெரிவார். உடையில்லாமல் தினசரி பயிற்சி செய்த உடல் வனப்புடனும் ஈர்ப்புடனும் இருந்தார். எந்த ஆண்மகனும் தடுமாறும் நிலையில் மாசு மருவற்ற துல்லியமான, அருவருப்பில்லாத முழு உடல். சட்டென்று முதல் நாள் வேலைக்கு வந்த போது உறுத்தலாக உணர்ந்தது ஞாபகம் வந்தது. கண்கள் இரண்டும் வெகு ஆழமான, உறுதியான, சோகம் கலந்த அழைப்பு விடுத்ததை மனம் அறிந்தது வெளிப்பட்டது.

அந்நிலையில் திருப்பதியை கட்டிப் பிடித்தார்

ஒரு கணம் சபலம், மறுகணம் பதற்றமும் பயமும் தொற்றியது , திண்மையான மதர்த்த உடலின் அருகாமையும், ஹாமாம் சோப்பும் ஒருவித உடலின் வாசனையும் கலந்து தினறடித்தது, கைகளில், உடலின் உணர்ச்சியின் எழுச்சியால், உணர்ந்த திண்மையால் பாலுணர்வு தூண்டப்பட்டாலும் சில நொடிகளில் மனதை கட்டுப்படுத்தினான்

“விடுங்க.. என்ன இது? இப்படி உங்க வீட்டுக்காரர் பாத்தாருன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். எனக்கு கெட்டபெயரும் வந்துடும். கடைக்குத் தெரிஞ்சா வேலைக்கும் ஆபத்து, விட்டுங்க” என உதறினான். உதறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. நல்ல பலமான பிடியாகத் தெரிந்தது. கைகளை உயர்த்தி விட்டுவிடும் படி கெஞ்சினான். ஒரு நிமிடம் வரை அவரின் இறுகிய பிடி விலகாமலிருந்தது. கையைத் தூக்கியபடியே திருப்பதியும் வெகு அமைதியாக நின்றான்.

என்ன நினைத்தாரோ சட்டென்று முற்றிலும் விலகியவர், கண்ணீருடன் பெரும் குரலெடுத்து அப்படியே பாத்ரும் தரையில் அமர்ந்து உடல் குலுங்க தலை குனிந்து அழுதார்.

“பிளிஸ்.. எனக்கு உதவி செய்யுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!” என அழுதபடி இருந்தார்.

வெளியே போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான் திருப்பதி . வெளியே வந்தவன் ஒரு முடிவெடுத்தான். போர்வையை எடுத்துக கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்து அனுவை முழுக்க போர்த்தி எழுப்பி ஆறுதலாக தட்டிக் கொடுத்து படுக்கையறைக்குள் மெத்தையில் அமரவைத்து, “நா வெளியே ஹால்ல சேர்ல உக்காத்திருக்கேன். டிரஸ் போட்டுகிட்டு வாங்க” என படுக்கையறையை விட்டு வெளியேறி ஹாலில் சேரில் அமர்ந்து என்னவாயிருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடத்திற்குள் பெரிய பூப்போட்ட இறுக்கமான நைட்டியில் முகத்தை துடைத்தபடி வெளிவந்தவர், “உங்களுக்கு டீ யா, காபியா?” என்றார்.

“இப்பவா.. ம், சரி காபி போடுங்க. ப்ளாக் காபியா போடுங்க. சக்கரை பாதியா இருக்கட்டும்” என்றான்.

ஹாலிலிருந்து சமையலறை தெளிவாகத் தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. காபி போடுவதற்காக ஆயத்தம் செய்து கொதிக்கும் நீரை மௌனமாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஆவி பறந்து முகத்தில் படிவதும் சில் அவுட் ஆக போட்டோ ப்ரேம் போலத் தெரிந்தது. ஆவி பறக்கும் காபியோடு வந்து முன்னாலிருந்த டீபாயில் வைத்து எனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கும் ப்ளாக் காபியா போட்டுகிட்டேன். இன்னிக்கு குடிச்சி பாக்குறேன். டேஸ்டு எனக்கு ஓகேன்னா இனி ப்ளாக் காபிதான்” என்றார்.

சங்கடமான புன்னகையுடன், “கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழகிட்டம்னா நல்ல பலன் தரும். பால் கலக்காத காபி ரெம்ப நல்லது” என்றான்.

சற்றே கலகலப்பான சூழ்நிலை உருவானது . மெல்ல பேச ஆரம்பித்தார்

“நீங்க நெனக்கிறது போல அவர் என்னாட புருஷன் இல்ல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறோம். அஞ்சி வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில சென்னையில வேலை பாத்தோம். புடிச்சி போய் எங்களுக்குள்ள பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். கல்யாணம், குழந்தைங்க வேணாம். சேர்ந்து வாழலாம். நமக்குள்ள தோனுனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேருக்கும் சென்னை புடிக்கல. வேலை நேரமும் முன்னாடி பின்னாடி இருந்திச்சி. அவரோட சொந்த ஊர் மன்னார்குடி. இங்க தஞ்சாவூர்ல அவருக்குத் தெரிஞ்சவங்க காலேஜ்ல எனக்கு வேலையும், அவரு ஒர்க் ப்ரம் ஹோமும் வாங்கிகிட்டு மூனு வருசத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் வந்தோம்.

வந்த புதுசுல ஒன்னும் பிரச்சன இல்ல. நல்லாத்தான் இருந்தாரு. இப்ப கொஞ்சநாளா எம்மேல சந்தேகப்படுறாரு. கல்யாணமும் , குழந்தையும் வேணாம் கடைசி வரை இப்படியே இருப்போம்ன்னு சொல்றதோட, சில சமயம் கடுமையா செயல்படுறாரு. வர வர நம்பிக்கை இழந்துட்டேன். நீங்க வேலைக்கு வந்துட்டு போன நாளா என்னோட போன எடுத்து பாக்குறாரு. அன்னக்கும் எனக்கும் அவருக்கும் சண்டை. சொல்லிப் பாத்தேன். நம்பவே இல்ல. நா என்னா பண்றது? அப்பா அம்மாவ விட்டுட்டு இவர நம்பி வந்துட்டேன். ரெம்ப கஷ்டம். இவரோட இனி இருக்க முடியுமான்னு தெரியல. அவரு பாக்கனும்னுதான் தெனம் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். சென்னைக்கு போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும்.”

“சரி, அதுக்கு எங்கிட்ட ஏன் இப்படி நடத்துக்கனும்? போன்ல கேட்டுருக்கலாம், வாட்சாப்புல மெசேஜ் போட்டுருக்கலாம்” என்றான்.

“செஞ்சிருக்கலாம். ஆனா, நீங்க வந்துட்டு போனதும் ஏற்பட்ட சண்டையும் , நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதமும் புடிச்சிப் போச்சி. பத்து நாளா உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்க வயசு, வீடு, பொண்டாட்டி , புள்ளங்க எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். உங்க முழு விவரமும் இப்ப எனக்குத் தெரியும். பழைய கம்பெனிக்கும் பேசிட்டேன் வேலை தர்றேன் சொல்லிட்டாங்க. அவருக்குத் தெரியாம ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

அதுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு யோசிக்கிறது தெரியுது.

நா உங்ககிட்ட கேக்க போறது ஒன்னே ஒன்னுதான். கொஞ்ச நாள்ல வெளியூர் போய்டுவேன். உங்கள உட்பட யாருக்கும் தெரியாத ஊருக்கு. எனக்குத் தேவை வாழ்க்கையில ஒரு நல்ல பிடிப்பும் வாழ வேண்டிய உத்வேகமும் தர்ற நல்ல விஷயம். சரி, புருவத்த சுருக்கி மண்டை காய வேண்டாம். பத்துநாளுக்கு மேலா யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். உங்க மூலமா எனக்கு குழந்தை வேணும், குழந்தை உருவானவுடனே நா கெளம்பிடுவேன். அப்புறம் ஒங்க கண்ணுலயே படமாட்டேன். இது உறுதி. ஒரு தடவ பண்ண தப்ப இன்னொரு தடவ செய்ய மாட்டேன். உங்களயும் பிரச்சனையில இழுத்து வுடமாட்டேன்” என்றார். பெருமூச்சு விட்டபடி சேரில் சாய்ந்து ஆசுவாசமாக தளர்ந்து கண்ணை மூடினார். மனதிலிருந்தவைகளை கொட்டியதால் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. எதிர்பார்ப்புடன் நிறைவாக, புன்னகையுடன் இருந்தது.

ஆழ்ந்து அனுவை பார்தபடி காபியை குடித்து முடிந்து டீபாயில் வைத்து கைளை கோர்த்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒன்றுமே சொல்லாமல் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை ரசித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.

மெல்ல தலை நிமர்ந்தவன் அனு அவனயே பார்த்தபடி இருந்ததை கண்டு வெட்கமடைந்து எழப்போனான்.

“இருங்க.. எங்க கெளம்புறீங்க? ஒடனே பதில் சொல்லனும்னு இல்ல. ரெண்டு நாள் கழிச்சி சொன்னாலும் போதும். சமயத்த பயன்படுத்தாத ஆண்பிள்ள நீங்கதான். வேற யாராவது இருந்தா இந்நேரம் வேல முடிஞ்சி போயிருப்பாங்க. உங்க திடமான மனசும் உடலும் எனக்கு ஒரே ஒரு தடவை போதும். வாழ்நாள் முழுக்க வாழ்த்துடுவன். நல்ல முடிவா சொல்லுங்க. மூணு நாள் காத்திருப்பேன். அப்புறம் நீங்க நெனச்சாலும் என்ன பாக்க முடியாது..!”

“சரி, நா கெளம்புறேன்” என்றபடி டூல்ஸ் பையுடன் வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து மணி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. பசியே அப்போதுதான் தெரிந்தது. மனதின் யோசனையாலும் அனுவின் பேச்சைக் கேட்டதாலும் ஒடுங்கியிருந்தது முழு வீச்சாய் கிளம்பியது. வீட்டிற்கு வண்டியைத் திருப்பி வந்து சாப்பிட்டான். மனம் மட்டும் போராட்டத்தில் இருந்தது. மனைவி கூட, “என்ன பலமான யோசனை.. சாப்பிடுங்க” என்றாள்.

என்ன சொல்வது, எப்படி சொல்வது புரியாமல் தவித்தான். இரண்டு நாட்கள் இருக்கிறதே பார்ப்போம் என்று நினைத்தான்.

மூன்று மாதம் கழித்து அனுவிடமிருந்து போன் வந்தது. “வெளியூர் கிளம்புறேன். என்னால தெந்தரவு நிச்சயமா இருக்காது. குழந்தை பிறந்ததும் நல்லா வளர்த்து படிக்க வைப்பேன். நீங்கதான் அப்பான்னு சொல்ல மாட்டேன். உங்க மனவிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். அவங்களோட சம்மதம்தான் எனக்கு ஆசிர்வாதம். இந்த நம்பர் இனி வேல செய்யாது. பை”

ஆழ்ந்த மெளனத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தான், அதுவும் நல்லதே என மனதை திடப்படுத்த ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான் திருப்பதி .

[email protected]

The post கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் கிரிதர்.

“எங்க அம்மா அப்பாவுக்கு இந்த பித்தளை டபரா டம்ளர் செட் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே ராதா தள்ளிக் கொண்டிருந்த வண்டியில் அந்த பொருட்களைச் சேர்த்தார் கிரிதர். சற்று நேரம் பொறுத்து, “யார்ட்லி பவுடர் எடுத்திருக்கேன். போன முறை அப்பா நம்ம வீட்டுக்கு வந்தபோது நல்லா இருக்குன்னு சொன்னாரு” என்று ஒரு டப்பாவையும், “என்சூர் எடுத்திருக்கேன். எங்க அம்மாவுக்கு முட்டி வலி இருக்குல்ல, இது குடிச்சா நல்லதாம்” என்று மற்றுமொரு டப்பாவையும் அந்த வண்டியில் சேர்த்தார்.

“ஏம்பா, அவங்க கல்யாண நாளுக்கு ஏற்கனவே புடவை வேஷ்டி எடுத்தாச்சு, இதெல்லாம் எதுக்கு? சரி, என்சூர், யார்ட்லி பரவாயில்லை, அவங்க வீட்டுல இல்லாத டபரா டம்ளரா?” என்று கேட்டார் ராதா.

“இதோ பாரு, அவங்க கிட்ட இருக்கா இல்லையாங்கறது பிரச்சனை இல்ல, நம்ம அவங்களுக்கு நிறைய செய்யுறோமா என்பதுதான் அவங்க எதிர்பார்ப்பு. உனக்கு அது புரியாது” என்று கிரிதர் ராதாவிடம் விளக்கினார். அவர்கள் திருமணமான புதிதிலிருந்து அம்மா அப்பாவின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார் கிரிதர். அவருக்குத் திருமணமாகி இருபது வருடம் ஆகப்போகும் தருவாயில், இன்றும் ஒரு சிறிய குழந்தை போல, மதர்ஸ் டே துவங்கி, ஆங்கிலப் பிறந்த நாள், நட்சத்திர பிறந்த நாள், திருமண நாள், என்று அனைத்திற்கும் வாழ்த்துகளும் பரிசுகளுமாய் போய் நிற்கிறார் கிரிதர்.

“டேய் ரகு, நாங்க போய் தாத்தா பாட்டிய பார்த்துட்டு வந்துடறோம். ரெண்டு நாள்தான். உனக்கு எக்ஸாம் இருக்கறதால உன்ன இங்க விட்டுட்டுப் போறோம். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணக் கூடாது என்ன?”

“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். கவலைப்படாம போயிட்டு வாங்க! நான் என்ன குழந்தையா? அம்மா, ஹாவ் ஃபன்” என்று ராதாவை அணைத்து வழியனுப்பி வைத்தான் ரகு. கல்லூரிக்குச் செல்லும் மகன் இருந்தும், மாமியார் மாமனார் வீட்டிற்கு செல்வதென்றால் ராதாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சேர்ந்திருந்த அவர்கள், கிரிதருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தனர். பல வருடங்கள் கழித்து சென்னை வந்த போது, மாமனார் வீட்டருகில், அதே சுற்றுவட்டாரத்தில், வேறு ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகள் முன்னதாக, திருச்சியில், ஓய்வூதியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் சகல வசதிகளுடன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே சென்று விட்டனர் ராதாவின் மாமியாரும் மாமனாரும்.

திருச்சியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் திருமண நாளன்று வாழ்த்து கூறி ஆசிகள் பெற கிரிதரும் ராதாவும் திருச்சியை நோக்கி காரில் பயணித்தனர்.

“குட் மார்னிங் மா! திருச்சி போயிட்டு இருக்கோம். ரகு தனியாதான் இருக்கான். அடச்சே… மறந்தே போயிட்டேன் பாரேன். ஹேப்பி பர்த்டே மா!” என்று தனது அம்மாவை வாழ்த்தினாள் ராதா.

“ஆண்டி பர்த்டேவையே மறந்துட்டியா நீ? வழக்கமா பொண்ணுங்கதானே இதெல்லாம் மறக்காம இருப்பாங்க? நீ ஏன்தான் இப்படி இருக்கியோ!” என்றார் நக்கலாக கிரிதர்.

“இதுல கூட ஆம்பளை, பொம்பளையா? நான் மறந்தா என்ன, என் அம்மாவே என்னை கால் பண்ணி உரிமையா அவங்க வாழ்த்தை வாங்கிக்கிட்டாங்க. உங்க அம்மா மாதிரி அடுத்த நாள் ஃபோன் பண்ணி திட்டல. அது என்ன உங்க அம்மா அப்பாவுக்கு கல்யாண நாளா இருந்தாலும் நம்மதான் முதல்ல வாழ்த்து சொல்லணும், நமக்கு கல்யாண நாளா இருந்தாலும் நாமளே கால் பண்ணி ஆசி வாங்கணும்? இந்த லாஜிக் எனக்குப் புரியல!”

“பெரியவங்களுக்கு, குறிப்பா, ஆண் குழந்தைகளை பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மேல அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அவங்கள நாங்க எப்போதும் தாங்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எல்லா இடங்களிலும் அவங்கள முதன்மைப் படுத்தணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நம்ம பிள்ளையாரை எல்லா பூஜைகளிலும் முதன்மையா வெச்சு வழிப்படறோமோ அந்த மாதிரி. என் அம்மா அப்பாதானே, செய்துட்டு போறேன் விடு!”

“அது இல்லைங்க… நீங்களும், உங்க அண்ணனும், உங்க பெத்தவங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க! இருந்தாலும், அவங்க இன்னும் செய், எங்களுக்கு பாத பூஜை பண்ணு, இது உன் கடமை அப்டிங்கறது மாதிரி மிடுக்கா இருக்காங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா சுதந்திரம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பென்ஷன் நிறைய வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, தன் சொந்த பசங்க, பேரன் பேத்தி மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாம எப்படி இப்படி அவங்களால இருக்க முடியுது? அப்பப்போ வந்து ஐநூறு, ஆயிரம்னு பாக்கெட் மணி கொடுத்தா போதுமா?”

“இதெல்லாம் ரொம்ப யோசிக்காத ராதா! என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நான் செய்துட்டுதான் இருப்பேன். என் வருத்தமே, அவங்க உரிமையா என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க அப்டிங்கறதுதான். நீ இப்போ இப்படி பேசற, நாளைக்கு ரகு கிட்ட எப்படி நடந்துக்கப் போறேங்கறத நானும் பார்க்கத்தானே போறேன்.”

“நான் ரகுவை இப்போ எப்படி நடத்தறேனோ அப்படியேதான் அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடத்துவேன். ஒரு வருத்தம்னா உடனே பேசித் தீர்த்துப்பேன். மனசுலயே வெச்சு புழுங்க மாட்டேன். அன்பையும் எப்போதும் போலதான் காட்டுவேன். ஐம்பது வயசானாலும் ரகு என் புள்ளதானே? என் புள்ள ஆறு வயசுல அவன் கைப்பட செய்து ஒரு பர்த்டே கார்டு கொடுத்தான், அதை இன்னும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். அஞ்சு வருஷம் கழிச்சு அவன் எனக்கு வைரத்தோடு போட்டா சந்தோஷப்படுவேன்.. இல்லன்னு சொல்லல. ஆனா, குறைந்தபட்சம் என் பிறந்த நாளை அவன் ஞாபகம் வெச்சுகிட்டு ஒரு ஃபோன் கால் பண்ணினாலும் சந்தோஷப்படுவேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அவன் கிட்ட கிடையாதுங்க. ”

“ரொம்பப் பேசற… எல்லாத்தையும் நானும் பார்க்கத்தான் போறேன். சரி, சரி, வீட்டுக்கு வந்துட்டோம், அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத, நான் பேசிக்கறேன். அமைதியா இரு!” என்று வழக்கம்போல அறிவுரைகள் கொடுத்துவிட்டு, ஒரு திரை விழுந்தது போல தன்னை உள்ளிழுத்துக் கொண்டார் கிரிதர்.

வீட்டிற்கு சென்றவுடன் இருவருக்காகவும் வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து ராதாவும் கிரிதரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்தனர். “அம்மாவுக்கு அபிவாதயே சொல்லுடா! புள்ள அம்மாவுக்கு சொல்லலாம், உனக்கு தெரியும்ல?” என்று அபிவாதயே கேட்டு வாங்கிக் கொண்டார் கிரிதரின் அம்மா . “இந்த என்சூர் ரொம்ப நல்லதாமே, எனக்கு மாசா மாசம் ஒண்ணு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக் கொடுத்திடு,” என்று சற்று உரிமையாக அவரது தாயார் கேட்டவுடன் கிரிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘எங்க அம்மா எப்படி கேட்கறாங்க பார்த்தியா!’ என்பது போல ராதாவைப் பார்த்துச் சிரித்தார் கிரிதர். “அடேங்கப்பா, நல்ல வாசனைடா இந்த பவுடர்!’ என்று அப்பாவும் அவர் பங்கிற்கு பவுடரை எடுத்து போட்டுக்கொண்டார். அதே சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பித்தளை டபரா டம்ளர்களில் சூடாக காபி எடுத்து வந்தார் கிரிதரின் அம்மா.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க, “ராதா, உன் தம்பி சேகர் லண்டன்லதானே இருக்கான்? எப்படி இருக்கான் அவன்?” என்று ஆரம்பித்தார் கிரிதரின் அம்மா.

“நல்லா இருக்காம்மா. PR வேற கிடைச்சிடுச்சு அவனுக்கு.”

“ம்… ஆமாம், நீ எப்போ லண்டன் போற?”

“நான் ஏன் லண்டன் போகப் போறேன்?”

“யார் கிட்ட பொய் சொல்ற? நீ கூடிய சீக்கிரம் லண்டன் போயிடுவ, கிரிதர் உன்ன கூட்டிட்டுப் போயிடுவான். கல்யாணம் ஆன அன்னிக்கு உன் பக்கம் சாஞ்சவன்தானே அவன்? இன்னும் நிமிரவே இல்லயே! நீ ஆசைப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான் அவன்” என்றார் கிரிதரின் அம்மா.

ராதா அதிர்ந்து போனாள். இன்றும் அவளை புதிய மருமகள் போல அவர்கள் நடத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் உன் பக்கம் சாஞ்சுட்டான் போன்ற வார்த்தைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது.

“என்னம்மா இது.. உன்கிட்ட சொல்லாம லண்டன் போவேனா என்ன? இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத பேசற?” என்று இடைமறித்தார் கிரிதர்.

“எனக்குத் தெரியும். நீங்க தாஜ் மகால் பார்கல? ஜெய்பூர் போகல? உங்க ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகல? என்ன உங்க கூட கூட்டிட்டு போனீங்களா என்ன? எனக்கு எல்லாம் தெரியும், நான் என்ன லூசா?” என்று திடீரென பல நாள் தேக்கத்தை வெளியே கொண்டு வந்து சீறினார் கிரிதரின் அம்மா.

“அம்மா, ஹனிமூனுக்கு உன்ன கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரி, அதை விடு, நீ கூட சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா , கைலாஷ் எல்லாம் போயிருக்க, என்ன கூட்டிட்டு போனியா என்ன? அண்ணா கூட நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கார், அவன ஏதாவது கேட்டியா?” என்றார் கிரிதர் சற்று பொறுமையிழந்து.

“நாங்க ரிடயர் ஆகி எங்க பணத்துல போயிட்டு வந்தோம். நீ ஒண்ணும் எங்கள அழைச்சுட்டு போகல! இப்போ உன் அண்ணனைப் பத்தி பேசாத, நான் உன் கூடதானே பேசிட்டு இருக்கேன்!” என்றார் காட்டமாக கிரிதரின் அம்மா.

“அது எப்படி பேசாம இருக்க முடியும்? நாங்க லோக்கல்ல டிரிப் போனா உங்களுக்கு கோபம் வருது. அவர் வெளிநாடு போனா கூட உங்களுக்கு கோபம் வர மாட்டேங்குது, என்ன நியாயம் இது?” என்று தன்னையும் மீறி கேட்டார் ராதா.

“கொஞ்சம் சும்மா இருக்கியா லட்சுமி! இத பத்தி பேசற நேரமில்லை இது!” என்று கிரிதரின் அப்பா சற்று குரலை உயர்த்தவும், மற்ற மூவரும் கூட்டத்தை கலைத்து நகர்ந்தனர். ராதாவிற்கு படபடப்பு அடங்கவில்லை. அந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் அலைபேசியில் ரகு அழைத்தான்.

“ரகு, பாருடா, எதிர்பார்த்த மாதிரியே உங்க பாட்டி பிரச்சனை பண்ணிட்டாங்க!” என்று நடந்ததை ரகுவிடம் கூறினார் ராதா.

அவன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “உன்ன நான் போகாதன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல. அப்பா மட்டும் போயிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது தெரியுமா?” என்றான்.

“அப்பா வருத்தப்படுவாருன்னுதான் போனேன். அவங்க அப்படி பேசினது கூட எனக்கு கஷ்டமா இல்ல ரகு. அப்பா மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் சொல்லு? அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு கொழந்தை மாதிரி, எங்க அப்பாவுக்கு, எங்க அம்மாவுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கினார். கிட்ட தட்ட நானூறு கிலோ மீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்த அந்த மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாமே ஒரு அங்கீகாரம்தானே ரகு? அது கூட கிடைக்காட்டி எப்படி சொல்லு?”

“அம்மா, இப்படி யோசி, நம்ம படிச்ச ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ்க்கு எல்லாம் நம்ம மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு இருபது வருஷம் கழிச்சு, அந்த ஸ்கூலுக்கு அவங்க எதிர்பார்க்காத ஒரு துறைல சாதிச்சுட்டு போனா அதை அவங்களால ஏத்துக்க முடியுமா சொல்லு? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும், அந்த சாதனையை மனசார அங்கீகரிக்க முடியுமா? நிச்சயமா முடியாது.

அது மாதிரிதான் உங்க உறவும். கல்யாணம் ஆன புதுசுல அவங்க உன்னை எடை போட்டு வெச்சிருப்பாங்க. இருபது வருஷத்துல நீ என்ன தான் மாறினாலும் அவங்ககிட்ட இருந்து அங்கீகாரம் கிடைக்கிறது சிரமம். அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. அப்புறம், அப்பாவ நினைச்சு ரொம்ப கவலைப்படாத, ஹீ வில் பீ ஆல்ரைட். நீயும் நானும் போடாத சண்டையா? அதனால நான் என்ன மனசுடஞ்சா போயிட்டேன்? அப்பா இப்போ பாட்டி கையால தோசை சாப்டுட்டு இருப்பார். நீயும் பக்கத்துல உள்ள கிருஷ்ணா பவன்ல சாப்டுட்டு, கோபமா ராத்திரி படுத்துட்டு, சந்தோஷமா கார்த்தால எழுந்துக்கோ,” என்று தொண்டுக் கிழவன் போல அசாத்தியமான அறிவுரை கூறினான் ரகு.

அப்போது அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்க, “கடவுளே! அவர் அம்மா அப்பா கிட்டேயிருந்து கிரிதர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அவருக்கு சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று ஒரு பிராத்தனையை வைத்த வண்ணம் கிருஷ்ணா பவனை நோக்கி முகமலர்ச்ச்யோடு நடந்தார் ராதா.

[email protected]

The post அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!

 டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும் அந்தக்...

The post வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..! appeared first on சிறுகதைகள்.

இரும்புக்கை மனிதன்

 (1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 அத்தியாயம்-36 தெள்ளவன்...

The post இரும்புக்கை மனிதன் appeared first on சிறுகதைகள்.

புரிதல்

 இரவு 1 மணிக்கு மேல் , நல்ல அயர்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி , தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள். பக்கத்தில்...

The post புரிதல் appeared first on சிறுகதைகள்.

அன்னையர் உலகம்

 பொதுவாக மார்கெட் வேலைக்கெல்லாம் ரமணி போக மாட்டாள். வெளிவேலை களையெல்லாம் அவள் கணவன் சிங்காரமே பார்த்துக் கொள்ளுவான். காலை வேளையில்...

The post அன்னையர் உலகம் appeared first on சிறுகதைகள்.

❌