தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்
பகுதி 2 - அகவயப்பயணம்
"நரகுலகின் ஆழத்திலிருந்து இரட்சிப்பின் குரல் வரும் என்பது தொன்மங்கள் வெளிப்படுத்தும் ஒரு விஷயம். இருள் மிகுந்த தருணம்தான் மாற்றத்தின் உண்மையான செய்தி வரும் தருணம். இருள் மிகுந்த தருணத்தில்தான் ஒளி தோன்றுகிறது"
மோயர்ஸ்: என்னிடம் ஒருவர் கேட்டார், "ஏன் இந்த தொன்மங்கள் உங்களை இழுத்துக்கொண்டன? ஜோசப் கேம்ப்பெல் சொல்வதில் இருந்து நீங்கள் எதை அறிந்துகொள்கிறீர்கள்?" என்று. நான் அதற்கு "எது உண்மையென்று நான் என்னுள் அறிந்திருந்தேனோ அதையே தொன்மங்கள் வெளிப்படுத்தி, அதன் மூலமாக அவை என்னுடன் உரையாடுகின்றன" என பதிலளித்தேன். தொன்மங்கள் ஏன் இவ்வாறு இருக்கின்றன? நான் உண்மையென்று என்னுள் அறிந்தவற்றையே இக்கதைகளும் சொல்வதாக ஏன் தோன்றுகிறது? எனது இருப்பின் அடிப்படையிலிருந்து அது தோன்றுகிறதா? அதாவது எனக்கு முன்பாக இங்கு தோன்றிய அனைத்திலிருந்தும் மரபார்ந்து நான் பெற்றுக்கொண்ட நனவிலியில் இருந்து அது தோன்றுகிறதா?