Normal view

Received before yesterday

வாகை மனம்

வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது.  வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது.  தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது.  கோல்டன் பாய்  வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார்.  அவர்  அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது.  இந்தப் பக்கம் அவர்  திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.

மூன்று கவிதைகள் : ரவி அல்லது

பார்ப்பதன் பிழைகள். அதிகமாகிக் கொண்டிருக்கும் அணுக்க தூரம் அருகாமையில் இருப்பதைப் போன்றதான சுவாசித்தலில் காட்சிகள் யாவையும் காண்பதென்னவோ நீதான். அறிவுப் போதாமையின் அலுப்பில் உணர்வுகளை மொழிபெயர்க்கும் சாத்தியமிருந்தால் காலமும் தூரமும் காட்சிப் பிழைதான் எப்பொழுதும் இணங்கிப் போன கூட்டுறவில். பைத்தியங்களென பார்த்துச்சென்ற பலதும் உணர்தலுக்குள் விழும்பொழுதில் புரியும். காதலுக்கு கண் இல்லைதான் மோகித்த இம்மௌனத்திற்கு முன்னாளென்பது. வழிமொழியப்படாத வலிகள். மனம் சிதைக்கும் மாய வேலைகள் நிகழ்கிறது மட்டுப்படாமல் பொழுதொரு வண்ணம் புதிதாக புத்திகள் தடுமாற. தொப்புள்க்கொடி உறவென்றாலும் […]

The post மூன்று கவிதைகள் : ரவி அல்லது appeared first on Nutpam.

❌