Normal view

Received before yesterday

முத்தமிழும் உள்ள கலை தெருக்கூத்து மட்டும் தான் - புரிசை கண்ணப்ப சம்பந்தன் நேர்காணல்

12 January 2025 at 11:01
    

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமம் தெருக்கூத்திற்காக புகழ்பெற்றது. இங்கு "கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடகக் கலை விழா” நடைபெறுகிறது. 2024ம் ஆண்டில் அக்டோபர் 5, 6 தினங்களில் ‘புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்’ சார்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நாடக கலை விழா மறைந்த புகழ்பெற்ற தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரான் பெயரில் நடைபெறுகிறது. கண்ணப்ப தம்பிரான் மற்றும் அவரது (பெரியப்பா மகன்) மூத்த அண்ணன் நடேச தம்பிரான் காலத்தில் தான் புரிசை தெருக்கூத்து குழு பெரியளவில் வெளியே தெரிய ஆரம்பித்தது. நா.முத்துச்சாமி ‘கூத்துப்பட்டறை’யை உருவாக்க ஒருவிதத்தில் காரணமாக இருந்தவர் கண்ணப்ப தம்பிரான்.

❌