Normal view

Received before yesterday

266. BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 14

ரஷ்யா. இன்றைய உலகின் மிகப்பெரிய நாடு. உடையாமல் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது இன்னும் மிகப்பெரிய நாடு. உலக வரைபடத்தை நீளவாக்கில் வைத்து 24 துண்டுகளாக வெட்டினால், ஒவ்வொரு துண்டையும் கடக்க சூரியன் ஒருமணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் Time zone என்று பெயர். இந்தியாவைச் சூரியன் கடந்துபோக 2 மணிநேரத்திற்கு மேலாகும். ரஷ்யாவைக் கடக்க 11 மணிநேரமாகும்! அதாவது ரஷ்யாவின் கீழைக் கடைசி குடிமகன் இரவு தூங்கப் போனால், மேலைக் கடைசி குடிமகன் காலையில் அப்போதுதான் கண்விழிப்பான். ஆசியா ஐரோப்பா என இரு கண்டங்களில் பரவிய பெரிய நாடு. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கஜகஸ்தான் நாட்டு எல்லைவரை செங்குத்தாக நீளும் உரல் (Ural) என்ற மலைத்தொடர் உண்டு. அதுதான் இவ்விரு கண்டங்களுக்கான வரப்பு. மேற்கே ஐரோப்பிய ரஷ்யா, கிழக்கே ஆசிய ரஷ்யா. சிந்து நதிக்கு அப்பால் உள்ளதெல்லாம் இந்தியா எனவும், சிரியாவுக்குத் தெற்கே இருப்பதெல்லாம் பாலஸ்தீனம் எனவும் அன்றைய உலகம் பெயரிட்டது போல, ரஷ்யா என்றால் பொதுவாக ஐரோப்பிய ரஷ்யா தான். ஆசிய ரஷ்யாவிற்குத் தனியே ஒரு குணமுண்டு, அதற்குச் சைபீரியா என்றொரு பெயருண்டு.

ஐரோப்பிய மாஸ்கோ நகரில் இருந்து, ஆசிய பசிபிக் கடற்கரை நகரான விளாடிவாஸ்டாக் வரை இரயிலால் இணைக்க அன்றைய ஜார் மன்னர்கள் ஓர் இரயில்பாதை திட்டம் கொண்டுவந்தார்கள். 9289 கிமீ. 8 time zones. அதாவது சூரியன் கடக்கவே 8 மணிநேரமாகும். மனிதன் இரயிலில் கடக்க இன்றைக்கு 8 நாட்களாகும். 26 ஆண்டுகள் கட்டினார்கள். கட்டி முடித்தபின் ரஷ்யப்புரட்சி வந்தது. உலகப்போரும் ஜார் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலும் சைபீரியாவின் குறுக்கே செல்வதால் Trans-Siberian railway என்று பெயர். இன்றுவரை மிகநீளமான இரயில்தடம் இதுதான். ஒரே இரயிலில் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய, உலகின் மூன்றாவது நீண்ட பயணமும் இதுதான். ஒருகாலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் முதல் விளாடிவாஸ்டாக் வரை ஓடிய இரயில் பயணம்தான் உலகின் மிக நீண்டது. மாஸ்கோ முதல் வடகொரியா தலைநகர் பியொங்யாங் வரை ஓடும் இரயில்தான் இரண்டாவது இடம். இவை இரண்டும் Trans-Siberian railway வழியேதான் போகின்றன. உலகில் மிக நீண்ட தூரம் போகும் இரயில்கள் எல்லாமே Trans-Siberian railway ஒட்டியவை.

Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து மங்கோலியா நாடு முழுவதும் ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Mongolian என்று பெயர். Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து சீனாவின் ஊடே ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Manchurian என்று பெயர். எனவேதான் உலகப்பயணிகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறது Trans-Siberian railway! பயணிகள் கவனத்திற்கு, கன்னியாகுமரி முதல் திப்ருஹர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட இரயில் பயணம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
ஆசிரியர்: Emma Fick
வெளியீடு: Harper Design
பக்கங்கள்: 236
—————————————————————————————————————————————————————————————————————————
நானும் ஓர் உலகப்பயணி என்பதால் Trans-Siberian railway பயணம் பற்றி புத்தகங்கள் தேடினேன். BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway. ஆசிரியர் Emma Fick. பீஜிங் முதல் மாஸ்கோ வரை Trans-Mongolianல் 26 நாட்கள் ஆசிரியர் பயணித்த கதைதான் இப்புத்தகம். பயணம் என்ற பெயரில் இன்று யூடியூபில் காணொளிகளாக வெறும் குப்பைகள். யூடியூப்பில் கம்போடியா / உஸ்பெகிஸ்தான் நாடுகளை விளக்கும் விதத்தில் நான் குப்பைகளை எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். இப்புத்தகம் அமைக்கப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டு எடுத்துவந்து விட்டேன். பயணத்தின் போது, டைரியில் குறிப்புகள் எடுப்பது போல, முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட படங்களாலும், கையால் எழுதி விளக்குவது போலவும் எழுதப்பட்ட புத்தகம் இது. சில பக்கங்கள் படிக்கவே தேவையில்லை, பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்தாலே போதும். படங்களே பெரும்பாலான பயணத்தின் கதையைச் சொல்கின்றன.


(www.amazon.com)

நிறைய குறிப்புகள் எடுத்திருக்கிறேன். சீன எல்லையில் தண்டவாள அகலம் மாறும்போது, இரயிலையே தூக்கி சக்கரங்களை மாற்றும் விசித்திரம் படித்தேன். பழைய பாஸ்போர்ட்டில் விசா இருந்தால் அனுமதிக்காத உலகின் மிகமிக சில நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்குள் ஆசிரியர் அனுமதிக்கப்படாமல், மீண்டும் மங்கோலியா திரும்பி புது பாஸ்போர்ட்டில் விசா வாங்கி பயணித்த கதையை மறக்கமாட்டேன். பெண்கள்தான் செயற்கரியன செய்து சமகாலத்தில் என்னை வியப்பூட்டுகிறார்கள். இதே தளத்தில் மோனிஷா ராஜேஷ், பமீலா வாட்சன், Emma Fick. நீங்களும் படியுங்கள். கலாச்சாரக் காவலர்கள் பண்பாட்டை அழித்தொழித்து தடயங்களை மாற்றி வைக்கும்முன் முதலில் இந்தியாவைச் சுற்றுங்கள், கூடவே உலகையும் சுற்றுங்கள். முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள், பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்!

அனுபந்தம்:
—————-
இரயில் பயணங்கள் பற்றி அடுத்து எழுத எந்தப் புத்தகம் வாய்ப்பு தருமென தெரியவில்லை. அதுவரை எனது சுயபெருமைகள் கேளுங்கள்:

  1. இந்தியாவை 7 நாட்கள் எங்கும் தங்காமல் இரவில் இரயிலில் பயணித்து, பகலில் ஊர்சுற்றி இருக்கிறேன். இரண்டு முறைகள்.
  2. தாய்லாந்து நாட்டின் ஒருகிளை தவிர மற்ற எல்லாவற்றிலும் இரயிலேயே பயணித்து 9 நாட்கள் சுற்றி இருக்கிறேன்.
  3. வியட்நாம் நாட்டை வடக்கில் இருந்து தெற்காக மொத்தமாக இரயிலேயே பயணித்து 11 நாட்கள் சுற்றியிருக்கிறேன்.
  4. இந்தோனேசியாவின் ஜாவா தீவைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
  5. உஸ்பெகிஸ்தான் நாடும் இரயில் பயணம் தான்.
  6. உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு இரயிலேயே 18 மணிநேரம் எல்லை கடந்திருக்கிறேன்.
  7. தைவான் நாட்டைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.

    இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து அடுத்து இரயிலில் பயணிக்க இப்போது எனது குறிப்புகளில் 9 நாடுகள் உள! வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

266. BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 14

ரஷ்யா. இன்றைய உலகின் மிகப்பெரிய நாடு. உடையாமல் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது இன்னும் மிகப்பெரிய நாடு. உலக வரைபடத்தை நீளவாக்கில் வைத்து 24 துண்டுகளாக வெட்டினால், ஒவ்வொரு துண்டையும் கடக்க சூரியன் ஒருமணி நேரம் எடுத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் Time zone என்று பெயர். இந்தியாவைச் சூரியன் கடந்துபோக 2 மணிநேரத்திற்கு மேலாகும். ரஷ்யாவைக் கடக்க 11 மணிநேரமாகும்! அதாவது ரஷ்யாவின் கீழைக் கடைசி குடிமகன் இரவு தூங்கப் போனால், மேலைக் கடைசி குடிமகன் காலையில் அப்போதுதான் கண்விழிப்பான். ஆசியா ஐரோப்பா என இரு கண்டங்களில் பரவிய பெரிய நாடு. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து கஜகஸ்தான் நாட்டு எல்லைவரை செங்குத்தாக நீளும் உரல் (Ural) என்ற மலைத்தொடர் உண்டு. அதுதான் இவ்விரு கண்டங்களுக்கான வரப்பு. மேற்கே ஐரோப்பிய ரஷ்யா, கிழக்கே ஆசிய ரஷ்யா. சிந்து நதிக்கு அப்பால் உள்ளதெல்லாம் இந்தியா எனவும், சிரியாவுக்குத் தெற்கே இருப்பதெல்லாம் பாலஸ்தீனம் எனவும் அன்றைய உலகம் பெயரிட்டது போல, ரஷ்யா என்றால் பொதுவாக ஐரோப்பிய ரஷ்யா தான். ஆசிய ரஷ்யாவிற்குத் தனியே ஒரு குணமுண்டு, அதற்குச் சைபீரியா என்றொரு பெயருண்டு.

ஐரோப்பிய மாஸ்கோ நகரில் இருந்து, ஆசிய பசிபிக் கடற்கரை நகரான விளாடிவாஸ்டாக் வரை இரயிலால் இணைக்க அன்றைய ஜார் மன்னர்கள் ஓர் இரயில்பாதை திட்டம் கொண்டுவந்தார்கள். 9289 கிமீ. 8 time zones. அதாவது சூரியன் கடக்கவே 8 மணிநேரமாகும். மனிதன் இரயிலில் கடக்க இன்றைக்கு 8 நாட்களாகும். 26 ஆண்டுகள் கட்டினார்கள். கட்டி முடித்தபின் ரஷ்யப்புரட்சி வந்தது. உலகப்போரும் ஜார் மன்னராட்சியும் முடிவுக்கு வந்தன. பெரும்பாலும் சைபீரியாவின் குறுக்கே செல்வதால் Trans-Siberian railway என்று பெயர். இன்றுவரை மிகநீளமான இரயில்தடம் இதுதான். ஒரே இரயிலில் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய, உலகின் மூன்றாவது நீண்ட பயணமும் இதுதான். ஒருகாலத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் முதல் விளாடிவாஸ்டாக் வரை ஓடிய இரயில் பயணம்தான் உலகின் மிக நீண்டது. மாஸ்கோ முதல் வடகொரியா தலைநகர் பியொங்யாங் வரை ஓடும் இரயில்தான் இரண்டாவது இடம். இவை இரண்டும் Trans-Siberian railway வழியேதான் போகின்றன. உலகில் மிக நீண்ட தூரம் போகும் இரயில்கள் எல்லாமே Trans-Siberian railway ஒட்டியவை.

Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து மங்கோலியா நாடு முழுவதும் ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Mongolian என்று பெயர். Trans-Siberian railwayல் இருந்து பிரிந்து சீனாவின் ஊடே ஓடி, சீனத் தலைநகர் பீஜிங் அடையும் பாதைக்கு Trans-Manchurian என்று பெயர். எனவேதான் உலகப்பயணிகளின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிறது Trans-Siberian railway! பயணிகள் கவனத்திற்கு, கன்னியாகுமரி முதல் திப்ருஹர் வரை ஓடும் விவேக் எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவின் மிகநீண்ட இரயில் பயணம்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway
ஆசிரியர்: Emma Fick
வெளியீடு: Harper Design
பக்கங்கள்: 236
—————————————————————————————————————————————————————————————————————————
நானும் ஓர் உலகப்பயணி என்பதால் Trans-Siberian railway பயணம் பற்றி புத்தகங்கள் தேடினேன். BORDER CROSSINGS: A Journey on the Trans-Siberian Railway. ஆசிரியர் Emma Fick. பீஜிங் முதல் மாஸ்கோ வரை Trans-Mongolianல் 26 நாட்கள் ஆசிரியர் பயணித்த கதைதான் இப்புத்தகம். பயணம் என்ற பெயரில் இன்று யூடியூபில் காணொளிகளாக வெறும் குப்பைகள். யூடியூப்பில் கம்போடியா / உஸ்பெகிஸ்தான் நாடுகளை விளக்கும் விதத்தில் நான் குப்பைகளை எளிதில் கண்டுபிடித்துவிடுவேன். இப்புத்தகம் அமைக்கப்பட்ட விதத்தில் ஈர்க்கப்பட்டு எடுத்துவந்து விட்டேன். பயணத்தின் போது, டைரியில் குறிப்புகள் எடுப்பது போல, முழுக்க முழுக்க கையால் வரையப்பட்ட படங்களாலும், கையால் எழுதி விளக்குவது போலவும் எழுதப்பட்ட புத்தகம் இது. சில பக்கங்கள் படிக்கவே தேவையில்லை, பக்கத்தில் உள்ள படங்களைப் பார்த்தாலே போதும். படங்களே பெரும்பாலான பயணத்தின் கதையைச் சொல்கின்றன.


(www.amazon.com)

நிறைய குறிப்புகள் எடுத்திருக்கிறேன். சீன எல்லையில் தண்டவாள அகலம் மாறும்போது, இரயிலையே தூக்கி சக்கரங்களை மாற்றும் விசித்திரம் படித்தேன். பழைய பாஸ்போர்ட்டில் விசா இருந்தால் அனுமதிக்காத உலகின் மிகமிக சில நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்குள் ஆசிரியர் அனுமதிக்கப்படாமல், மீண்டும் மங்கோலியா திரும்பி புது பாஸ்போர்ட்டில் விசா வாங்கி பயணித்த கதையை மறக்கமாட்டேன். பெண்கள்தான் செயற்கரியன செய்து சமகாலத்தில் என்னை வியப்பூட்டுகிறார்கள். இதே தளத்தில் மோனிஷா ராஜேஷ், பமீலா வாட்சன், Emma Fick. நீங்களும் படியுங்கள். கலாச்சாரக் காவலர்கள் பண்பாட்டை அழித்தொழித்து தடயங்களை மாற்றி வைக்கும்முன் முதலில் இந்தியாவைச் சுற்றுங்கள், கூடவே உலகையும் சுற்றுங்கள். முதலில் கூரை ஏறி கோழி பிடியுங்கள், பிறகு வானம் ஏறி வைகுண்டம் போகலாம்!

அனுபந்தம்:
—————-
இரயில் பயணங்கள் பற்றி அடுத்து எழுத எந்தப் புத்தகம் வாய்ப்பு தருமென தெரியவில்லை. அதுவரை எனது சுயபெருமைகள் கேளுங்கள்:

  1. இந்தியாவை 7 நாட்கள் எங்கும் தங்காமல் இரவில் இரயிலில் பயணித்து, பகலில் ஊர்சுற்றி இருக்கிறேன். இரண்டு முறைகள்.
  2. தாய்லாந்து நாட்டின் ஒருகிளை தவிர மற்ற எல்லாவற்றிலும் இரயிலேயே பயணித்து 9 நாட்கள் சுற்றி இருக்கிறேன்.
  3. வியட்நாம் நாட்டை வடக்கில் இருந்து தெற்காக மொத்தமாக இரயிலேயே பயணித்து 11 நாட்கள் சுற்றியிருக்கிறேன்.
  4. இந்தோனேசியாவின் ஜாவா தீவைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.
  5. உஸ்பெகிஸ்தான் நாடும் இரயில் பயணம் தான்.
  6. உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு இரயிலேயே 18 மணிநேரம் எல்லை கடந்திருக்கிறேன்.
  7. தைவான் நாட்டைப் 10 நாட்களில் இரயிலேயே வட்டமிட்டு இருக்கிறேன்.

    இந்தியாவையும் ரஷ்யாவையும் சேர்த்து அடுத்து இரயிலில் பயணிக்க இப்போது எனது குறிப்புகளில் 9 நாடுகள் உள! வேந்தர்க்கு வேண்டும் பொழுது!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

கேரள அரசுகளின் தபால்தலைகள்

2 June 2025 at 12:30

கொச்சின் அரசு (Kingdom of Cochin)  பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி, 12வது நூற்றாண்டில் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தன்னாட்சி பெற்றது. வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலகட்டத்தில், கொச்சி அரசு, சமோரின் அரசின்...

The post கேரள அரசுகளின் தபால்தலைகள் first appeared on Her Stories.

மன்னராட்சி அரசுகள் – ஹைதராபாத் 

27 May 2025 at 06:37

ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute...

The post மன்னராட்சி அரசுகள் – ஹைதராபாத்  first appeared on Her Stories.

பிரெஞ்சு இந்திய அஞ்சல்தலைகள்

19 May 2025 at 08:19

புதுச்சேரி இப்போது இந்தியாவின் யூனியன் பகுதிகளுள் ஒன்று. பீஜப்பூர் சுல்தான் கீழ்க் குறுநில மன்னனாக இருந்த ஷேர்கான் லோதி, பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் அரசாண்டு வந்தார். அவரிடமிருந்து புதுச்சேரியை பிரான்சுவா மார்ட்டின் தானமாகப் பெற்றார். பிரெஞ்சுக்...

The post பிரெஞ்சு இந்திய அஞ்சல்தலைகள் first appeared on Her Stories.

போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் தலைகள் 

12 May 2025 at 14:32

இந்தியாவிற்கு வரப் புதிய வழியைக் கண்ட போர்ச்சுகல் நாட்டின், வாஸ்கோட காமா, இன்றைய கேரளாவின் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் போர்த்துக்கீசியர் கைப்பற்றினர்.  போர்த்துக்கீசிய இந்திய அரசு 1505இல் கொச்சியில் தனது...

The post போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் தலைகள்  first appeared on Her Stories.

பயணம் எளிதாகும்

Google maps

பயணத் திட்டமிடலுக்காக எடுத்துவைக்கப்படும் திரைபிடிப்புப் (screenshot) படங்களை ஆய்வு செய்யும் அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் வரைபடங்கள் செயலி.

Google maps

கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, விடுமுறையைக் கழிக்க பல்வேறு சுற்றுலாத்தலங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடல் பயணக்கட்டுரைகள், யூடியூப் காணொளிகள், இன்ஸ்ட்டாகிராம் குறுங்காணொளிகள் எனப் பல வகைகளில் நீள்கிறது. ஒவ்வொருமுறையும் நாம் பார்க்கும் இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். ஒருவேளை அவற்றை திரைபிடிப்பு செய்துவைத்துக்கொண்டால் இந்த வேலை எளிதாகும் வாய்ப்புள்ளது.

ஆனால் அதிகமான இடங்களை திரைபிடிப்பு செய்துவைத்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்த்து நமது பயணத் திட்டமிடலை எளிமைப்படுத்த புதிய அம்சம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் வரைபட செயலி. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எடுத்த திரைபிடிப்பு படங்களை ஆராய்ந்து அதில் உள்ள இடத்தை குறித்துவைத்துக்கொள்ள முடியும்.

இதனைப் பயன்படுத்தக் கூகுள் வரைபட செயலிக்குள் சென்று, அதில் உள்ள “நீங்கள்” பக்கத்தைத் தொடவேண்டும். அதில் திரைப்பிடிப்புகள் என்ற பக்கம் காணப்படும். அதனைத் தொட்டால் இந்த அம்சம் செயல்படும் விதம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். அதனைப் பார்க்கும்பொழுது இந்த அம்சத்தைப் பற்றிய எளிமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

காணொளியைப் பார்த்தபிறகு கூகுள் வரைபட செயலி உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கும். நீங்கள் அனுமதியளித்துவிட்டால் போதும். அடுத்த முறை நீங்கள் செய்யும் பயணம் தொடர்பாக திரைபிடிப்பு செய்தால் அந்த படத்தைக் கூகுள் வரைபடங்கள் ஆராயத் தொடங்கிவிடும். அந்த படமானது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

படம் ஆராய்ந்து முடிக்கப்பட்ட பிறகு மறுபார்வை (Review) என உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதைத் தொட்டால் நீங்கள் விரும்பிய இடத்தைப் பற்றிய தகவல்கள் தோன்றும். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதனைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இவை அனைத்துமே தானாகவே நடக்கும். ஒருவேளை உங்கள் திரைபிடிப்பு படங்களைக் கூகுள் ஆராய்வதை நீங்கள் விரும்பாவிட்டால் அதற்கும் வழி இருக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் திரைப்பிடிப்புகளை மட்டும் கூகுள் வரைபட செயலியில் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம்.

இது பற்றிய மேலதிகத் தகவல்களைக் கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.

கூகுள் வலைப்பக்கம்

The post பயணம் எளிதாகும் appeared first on செல்லினம்.

அஞ்சல் தலை – ஓர் அறிமுகம்

5 May 2025 at 07:06

அன்னம் ஒன்று தூதாய்ப் போகும் இலக்கியத்துக் காதல் என்ற பாடலில் வருவது போல, மனித வரலாற்றில் பலவிதமாக அஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. புறாக்கள் இவற்றுக்கென்றே பழக்கப் படுத்தப்பட்டுள்ளன. குதிரை வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அரசு  ஒரு...

The post அஞ்சல் தலை – ஓர் அறிமுகம் first appeared on Her Stories.

பயண இலக்கியம்

By:Para
4 May 2025 at 07:54

Pa Raghavan

குலசேகரபுர க்ஷேத்திரமென்னும் குரோம்பேட்டையிலிருந்து தெற்கே பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டாங்குளத்தூர் என்னும் தலத்துக்கு, பாலிய சிநேகிதன் ஒருவனது குமாரத்தியினுடைய கலியாண நிமித்தம் சென்று வர வேண்டியிருந்தது. முன்னொரு காலத்தில் வேதாசலபுரமென்றும் பின்னொரு காலத்தில் மறைமலை நகரென்றும் அழைக்கப்பட்ட காட்டாங்குளத்தூருக்கு சாலை மார்க்கமாக அல்லாமல் மின்சார இரயில் வண்டி மார்க்கமாகப் பயணப்பட முடிவு செய்தேன்.

இந்நாள்களில் புறநகர் இரயிற் பயணங்களை மேற்கொள்வதென்பதே எனக்கு அரிதாகிப் போய்விட்டது. எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்திலோ ப்ளெசரிலோ செல்லும் வழக்கம் உண்டான பின்பு புறநகர் இரயிற் பயணம் நினைவை விட்டே அகன்றுவிட்டிருந்தது. ‘நீங்கள் அவ்வாறு இருத்தல் ஆகாது. மக்களோடு மக்களாகப் பயணஞ்செய்து திரும்புவதன் சந்தோஷத்தினை இழக்கின்றீர்கள். தவிர பிரயாண நெரிசலில் சிக்காது சென்று வரவும் அதுவே சரியான உபாயமுமாகும்’ என்று மனையாளும் பரிந்துரைத்தபடியினாலே காட்டாங்குளத்தூர் கலியாண வைபவத்துக்கு இரயில் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானஞ் செய்துகொண்டேன்.

விடிகாலை சூர்யோதயத்துக்கு மிகவும் முன்னால் ஐந்து மணி அளவிலேயே எழுந்து ஸ்நானபானஞ்செய்து, ஐந்தே முக்காலுக்குத் தயாரானேன். என் மனையாளே இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்று இரயிலடியில் இறக்கிவிட்டார். முன்னொரு காலத்திலே நான் குரோம்பேட்டை என்னும் குலசேகரபுரத்தின் இரயிலடிக்கு நாடோறும் படியேறி இறங்குபவனாக இருந்ததெல்லாம் நினைவைக் கவ்வி ஆக்கிரமித்துக் குதியாட்டம் போடத் தொடங்கியது. மூன்று பத்தாண்டுகள் கழிந்த பிற்பாடும் ரயிலடியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் காண அதிசயமாயிருந்தது. இடப்புறமொன்றும் வலப்புறமொன்றுமாக இரண்டு நடைமேடைகள் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. ஜனங்கள் விண்ணளாவிய படிகளில் ஏறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவதிப்படாதிருக்கும் பொருட்டு சர்க்கார் எப்போதோ தானியங்கி மின்சாரப் படிக்கட்டுகளைக் கட்டுவித்திருக்க வேண்டும். அதை நமது கலாசாரப்படிப் பயன்கொள்ளத் தகாததாக உருமாற்றிக் கழட்டி வைத்திருந்தனர். நான் நீண்ட பெரும் படிகளேறி மேலே சென்று பயணச் சீட்டு வாங்குமிடத்தை அடைந்தேன்.

காட்டாங்குளத்தூருக்குச் சென்று திரும்பும் விதமான சீட்டொன்றைக் கோரி, நூறு உரூபாத் தாளினைச் சீட்டுப் பணியாளரிடம் நீட்டியபோது, ‘சில்லறையாக இருபது உரூபா இருந்தால் கொடுங்கள்’ என்று சொன்னார். இது எனக்குச் சிறிது வியப்பையும் மேலதிகக் குழப்பத்தையும் விளைவித்து, ‘எத்தனை உரூபா?’ என்று கேட்டு உறுதி செய்துகொள்ளப் பார்த்தேன்.

‘போகப் பத்தும் திரும்பி வருவதற்குப் பத்துமென ஆக மொத்தம் இருபது உரூபா’ என்று சீட்டுப் பணியாளர் மீண்டும் சொல்லவே, இருபது உரூபாக்களை எண்ணிக் கொடுத்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரயில் வண்டி வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி இறங்கத் தொடங்கினேன்.

கால மாற்றத்தில் விலைவாசி எல்லாம் ஆகாசத் தொலைவினை நோக்கிச் சென்றுவிட்டிருந்தாலும் சாமானிய மக்கள் செலவுச் சுமையின்றிப் பயணஞ் செய்வதன் பொருட்டு இரயிற்பாதைக் கட்டணத்தை மட்டும் பெரிய அளவினிலே உயர்த்தாது விட்டு வைத்திருக்கும் சர்க்காரின் பெரிய மனத்தினை எண்ணிச் சிலாகித்த வண்ணம் இரயில் வருவதற்காகக் காத்திருக்கலானேன்.

சில மணித்துளிகளில் சென்னை கடற்கரையிலிருந்து திருக்கச்சி மாநகர் வரை செல்லும் இரயில் வண்டியொன்று வந்து நின்றது. ஏறியதும் சன்னலோர இருக்கை சித்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு சன்னலோர இருக்கையில் அமர்ந்து இரயிற் பிரயாணஞ்செய்து நெடுங்காலமாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். காலைச் சூரியனின் முதற் கிரணங்கள் படரத் தொடங்கிவிட்டிருந்தன. புள்ளினங்கள் வானில் விரைய, சில்லென்ற காற்று மேனியில் மோத, இரயிற் பயணம் ஆரம்பமானது.

வண்டி சானடோரியம், தாம்பரம் என்கிற இரண்டு நிறுத்தங்களைக் கடந்து பயணப்படத் தொடங்கியபோது, காலை நேர ஆரோக்கிய உணவெனச் சொல்லி அவித்த நிலக்கடலை விற்றுக்கொண்டு வந்தார் ஒரு நாரி. முன்பெல்லாம் பழைய செய்தித் தாளில் பொட்டணம் மடித்துத் தருவார்கள். இன்றோவெனில் காகிதக் கிண்ணத்தில் அவித்த நிலக்கடலையைக் குவித்துத் தருகிறார்கள். அந்த விடிகாலைப் பொழுதினிலும் அவித்த கடலையை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதைக் கண்டு மனத்தின்கண் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணமே புஷ்பங்கள் விற்கும் பெண்களும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் பென்சில், பேனாக்களை விற்போரும் கூவி விற்றுச் சென்றதைக் கண்டேன். அவர்களைப் பொருட்படுத்தாது, பெட்டியிலிருந்தோர் அவரவர் கைப்பேசியில் கண்ணுங்கருத்துமா யிருந்ததையுங் கண்டேன்.

இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது. (இதனைத் திரித்து, சோழர்கள் ஆண்ட காலத்திலே பெரிய குளமொன்று இந்த இடத்தினில் இருந்தபடியினாலே இது பெருங்குளத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அது மருவி பெருங்களத்தூரானதாகவும் சொல்வர். ஆயினும் அதற்கு சரித்திர சாட்சியங்கள் கிடையா. சரிதான், பல்லவ-சோழ யுத்த களேபரத்துக்கேனும் சரித்திர சாட்சியம் உண்டாவென்பீரானால் அதுவும் கிடையா.) ஆனால் இந்த ஊரினையும் கமலகாசன் என்னும் கலாவிற்பன்னர் உருக்கொண்ட களத்தூரினையும் போட்டுக் குழப்பிக்கொள்ளல் ஆகாது. வெறும் களத்தூர், முதுகளத்தூர், பெருங்களத்தூர், சிறுகளத்தூர் என மாகாணமெங்கும் பல போர்களின் நினைவாகக் களப்பெயர் பூண்ட தலங்கள் உண்டு.

பெருங்களத்தூரினின்று புறப்பட்ட இரயில் வண்டி அடுத்தபடியாக வண்டலூர் நிறுத்தத்தில் நின்றது. சுற்றிலும் வனம் அடர்ந்த மலைகளும் சிறியதொரு நதியும் ஓடிய பிராந்தியமாகப் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் இத்தலம் திகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு வனம் சுருங்கி, மலைகள் நாலாபுறமும் பெயர்க்கப்பட்டு, நதி சேர்த்த வண்டலெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கென்று எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, நதியும் தீர்ந்துபோய் விடவே, சிறியதொரு கானுள்ள பிராந்தியமாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டது. கால மாற்றத்தில் இவையெல்லாம் தவிர்க்க இயலாததன்றோ? இருப்பினும் நமது சரித்திரம் வேர் கொண்ட புவியியலினை முற்றிலுமாக மறந்துவிடுதல் தகாதென்ற எண்ணத்தில் சர்க்கார் இந்தத் தலத்தினிலே கானுயிர்களுக்கென ஒரு பூங்கா அமைத்துச் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களிலிருந்து நாய் பூனை போன்ற மென்மிருகங்கள் ஈறான ஐயறிவினங்கள் இந்தப் பூங்காவிலே சௌக்கியமாக வாசஞ்செய்து வருகின்றன.

வண்டலூர் நிறுத்தத்தினை அடுத்து வந்தது ஊரப்பாக்கம் இரயில் வண்டி நிறுத்தம். இது காலத்தால் மிகவும் பிற்பட்ட குடியிருப்புப் பிராந்தியமென அறியப்படுவது. மக்கட்தொகைப் பெருக்கம் மிகத் தொடங்கி, வடக்கே சென்னை மாநகரமும் தெற்கே செங்கற்பட்டு மாநகரமும் இடுப்பூதிப் போக ஆரம்பித்தபோது இரு பெரும் நகரங்களுக்கு இடைப்பட்ட மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பரப்பும் கானிழந்து ஆங்காங்கே மேகத் திட்டுகளைப் போலே கான்கிரீட்டெனும் கவின்மிகு கற்கோலம் பூணத் தொடங்கியதன் விளைவாக உற்பத்தியான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனையடுத்த கூடுவாஞ்சேரி என்கிற இரயில் நிறுத்தப் பிராந்தியமும் அப்படியே உருவானது என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கது. இப்புதிய நகரங்களின் இறுதியொட்டாக வருகின்ற பாக்கம், சேரி போன்ற பதங்களைக் கூர்த்து நோக்குவோமானால் ஆதியிலே இவ்விடங்கள் எவ்விதமாக இருந்தனவென்பது தெள்ளெனப் புலப்படும்.

ஏழு மணி ஆவதற்கு எட்டு மணித்துளிகள் இருந்தபோது ஒரு வழியாக இரயில் வண்டி காட்டாங்குளதூர் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தது.

இறங்கும்போதே காட்டாங்கொளத்தூர் என்ற பிழைபட்ட பெயர்ப்பலகை கண்ணில் தென்படவே, சிரித்துக்கொள்ளும்படியானது. பெருங்களத்தூரைப் பெருங்குளத்தூராக்கியதைப் போலவே காட்டாங்குளத்தூரைக் காட்டாங்கொளத்தூராக்கிவிட்டிருக்கின்றார்கள்!

முன்னொரு காலத்தில் இந்த ஊரின் சிறப்பைச் சொல்வதற்குச் சிவானந்த குருகுலம் எனும் ஓர் ஆசிரமம் இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பெருங்காடாக மட்டுமே இருக்கும். மாலைப் பொழுதில் நரிகளைப் பார்வையிடலாம். சற்று உள்ளடங்கிச் சென்றால் வேறு சில காட்டு மிருகங்களும் காணக் கிடைக்கும் என்றாலும் மிருகங்களைத் துன்பப்படுத்தலாகாது என்னும் எண்ணத்தில் நான் சென்றதில்லை. பிற்பாடு மக்கள் இங்கெல்லாம் குடியேறத் தொடங்கிய பின்பு வீடுகளும் சாலைகளும் விளக்குகளும் வணிக வளாகங்களும் கலாசாலைகளும் இதர நவீனங்களும் ஆமைபோலப் புகுந்து நிறைந்துவிட்டிருக்கின்றன. மிருகங்கள் இருந்த இடமும் தெரியாமல், சென்ற இடமும் தெரியாமல் போய்விட்டன.

காணாத காட்சியெல்லாம் கண்டு ரசித்த வண்ணம் இரயில் நிலையத்தினின்றும் வெளியேறிச் சாலையை அடைந்தேன்.

கண்ணெட்டும் தொலைவிலேயே நான் போகவிருந்த கலியாண மண்டபம் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதனை எட்டிப் பிடித்து, வைபவத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, பாலிய நண்பர்களையெல்லாம் சந்தித்துச் சிறிது நேரம் சல்லாபித்துக்கொண்டிருந்தேன். பிரிய மனமின்றிப் பிரிந்து மீண்டும் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதாகியிருந்தது. செங்கற்பட்டிலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் செல்லும் இரயில் வண்டி வந்ததும் ஏறிக்கொண்டேன்.

ஒன்றரை நாழிகைப் பொழுதுக்குள் குரோம்பேட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்துவிட முடிந்தது. பேசி வைத்திருந்தாற்போலே மனையாள் மீண்டும் இரு சக்கர வாகனத்துடன் இரயிலடிக்கு வந்து காத்திருந்தாள். எனவே அதிலேறி இல்லம் வந்தடைந்து, சென்று வந்த சங்கதிகளையும் க்ஷேமலாபங்களையும் அவளிடம் சொல்லிக் களித்தேன். குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு அவளொரு முத்தாய்ப்பு வைத்தாள். அதுவாவது:-

‘இருவது ரூவாய்ல மேட்டர் முடிஞ்சதுல கிளுகிளுப்பாகி இவ்ள பேசுற. இதே கார் வெச்சிகிட்டுப் போயிருந்தேன்னா ஆயிர்ருவா பழுத்திருக்கும். அப்ப இந்த வாயி திறக்கும்?’

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 13

3 January 2025 at 07:22
காலையிலேயே மேற்கு ஏரிக்குப் புறப்பட்டோம். இதைச் சீனாவின் அழகிய இதயம் எனக் குறிப்பிடுவதால் இதயத்தைக் காண ஆவலாக இருந்தது. இயற்கை அழகு, கலாசார முக்கியத்துவம், வரலாற்று முக்கியத்துவம் ஆகியவற்றால் கவனம் பெற்ற ஏரி இது. அஸ்ரின் அங்குள்ள வாடகை வண்டி பிடிக்கும் செயலியைத் தறவிரக்கம் செய்திருந்ததால் காலை 9 மணிக்கெல்லாம் அவ்விடத்தை அடைந்தோம். காலைக் காற்று புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ஏரியைச் சுற்றி மலைகள். மலைகள் ஏரியில் பிரதிபலித்தன. மூங்கில் ரகத்தைச் சேர்ந்த ஒருவித மரம் ஏரியைச் சுற்றி […]

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 12

2 January 2025 at 11:44
காப்பி இதமான இருந்தது. நடுங்கி உதறச் செய்த குளிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது. பால்கனிக்குச் செல்லும் தைரியம் எழவில்லை. முன்னறைக்குச் சென்று சாய்ந்து அமர்ந்தேன். தூரமாகக் கிடந்த சிவப்பு நிற அட்டை பயமுறுத்தியது. அதில் ‘சிப்’ இருக்கலாம் என விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் ‘இருக்கலாமோ’ என இப்போது தோன்றியது. அறையைச் சுத்தம் செய்யும் கிழவி ஒரு விசையை அழுத்தி நான் யார் என உறுதிப்படுத்திக்கொண்டதும் அமரும் இடம் தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் என் இருப்பை ஏற்பாட்டுக்குழு உறுதி […]

சீனப்பயணம்: அறியப்படாத நூறு மலர்கள் – 11

1 January 2025 at 10:19
எதிர்பார்த்ததைவிட இரவு குளிர்ந்தது. கையுறையால் விரல்களில் ஏற்படும் குளிர்வலியில் இருந்து தப்ப முடிந்தது. நாங்கள் குளித்திருக்கவில்லை. நேரத்தை விரையம் செய்ய வேண்டாமென குளிராடையை உடுத்திக்கொண்டு அவசரமாக வெளியேறி இருந்தோம். அந்த அவசரத்தில் எங்களிடம் கொடுத்த சிவப்பு நிற அட்டையும் உடன் வந்தது. எங்குச் சென்றாலும் அந்த அட்டையை அணியச் சொன்னது நினைவுக்கு வந்தது. கழுத்தில் இருந்ததை சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். நானும் அஸ்ரினும் தொடர்ந்து மலேசிய இலக்கியச் சூழல் குறித்து பேசிக்கொண்டே வந்தோம். மலேசியாவில் குறிப்பிடத்தக்க மலாய் […]

263. ESPRIT DE BATTUTA (ALONE ACROSS AFRICA ON A BICYCLE)

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 11

ஆப்பிரிக்கப் பெருங்கண்டம். காலனியாதிக்கம் செய்யாததாலும், இயற்கையாகவும் மிகமிக சொற்ப தீவுகள் கொண்ட பெருநிலம். பிரமிடுகளால் எகிப்து தெரியும். பஞ்சத்தால் எத்தியோப்பியா சோமாலியா தெரியும். கிரிக்கெட்டால் தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே கென்யா தெரியும். இடிஅமினால் உகாண்டா தெரியும். மடகாஸ்கர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததென தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க ஜனாதிபதிகளால் லிபியா தெரியும். கடவுளின் தூதர்கள் நேரடியாக ஆட்சி செய்யும் நாட்டின் சில குடிமக்களுக்கு, பரமாத்மாக்கள் பறந்து போய் கையசைப்பதால் இன்னும் சில நாடுகள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. நன்னம்பிக்கை முனை. சூயஸ் கால்வாய். ஆப்பிரிக்க நிலம் பற்றி நமது சொற்ப அறிவு இவ்வளவுதான். இன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் 54 நாடுகள் உள்ளன. இப்பெருநிலத்தை அறிய இதுபோன்ற புத்தகங்கள்தான் உதவுமென எடுத்துவந்துவிட்டேன்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: ESPRIT DE BATTUTA (ALONE ACROSS AFRICA ON A BICYCLE)
ஆசிரியர்: Pamela Watson
வெளியீடு: Hardie Grant books
பக்கங்கள்: 512
—————————————————————————————————————————————————————————————————————————
ESPRIT DE BATTUTA (IN THE SPRIT OF BATTUTA). ALONE ACROSS AFRICA ON A BICYCLE. இபின் பட்டுடா பற்றி இத்தளத்தின் சில பதிவுகளில் படித்திருப்பீர்கள். மார்கோ போலோ, மெகஸ்தனிஸ், யுவான் சுவாங் போல உலகப் பயணங்களின் முன்னோடிகளில் ஒருவர். பட்டுடாவின் நினைவில் ஆப்பிரிக்காவின் குறுக்கே தனியாக சைக்கிளில், என்பதுதான் புத்தகத் தலைப்பு. பமீலா வாட்சன் ஆசிரியர். ஆஸ்திரேலியா சொந்த நாடு. அப்போது லண்டனில் வசிக்கிறார். அப்போது முப்பதைத் தாண்டிய வயது. அக்டோபர் 1992 முதல் ஏப்ரல் 1994 வரை 18 மாதங்கள். மொத்தம் 17 நாடுகள். 1750கிமீ படகில், 14527கிமீ தனியாக சைக்கிளில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய ஆப்பிரிக்கா வழியே கிழக்கு ஆப்பிரிக்கா என ஆப்பிரிக்காவின் குறுக்கே பயணித்த கதைதான் இது!

முப்பதாண்டுகள் கடந்துவிட்டன. நிறைய மாற்றங்கள். சூடான் அல்ஜிரியாவிற்குப் பிறகு மிகப்பெரிய நாடு ஜெயிரே என்று புத்தகத்தில் சொல்கிறார். இன்று தெற்கு சூடான் என்ற நாடு உருவாகி அவ்வரிசையை மாற்றிவிட்டது. கினியா என்ற பெயரில் மட்டும் ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகள். பப்பூவா நியூ கினியா என்றொரு நாடு ஆசியாவில் இருக்கிறது. காங்கோ என்ற பெயரில் இரண்டு நாடுகள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. ஏதாவதொரு அமெரிக்க ஜனாதிபதி தனது குடிமக்களுக்கு உலகறிவு புகட்ட, இடம் மாற்றி அணுகுண்டோ வரியோ போட்டுவிடக் கூடாதென புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஒருபக்கம் ஒதுக்கி இரண்டு காங்கோகள் பற்றி தனி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அவர் சைக்கிளோட்டிய நாடுகளின் வரிசை இது:
1. செனெகல்
2. காம்பியா (ஆப்பிரிக்கக் கண்டத்திற்குள் மிகச்சிறிய நாடு. வெளியே சிசெல்ஸ்)
3. கினியா கொனார்க்ரி (பிரெஞ்சு கயானா என வரலாற்றில் படித்திருப்போம்; எபோலா வைரஸ் காலத்தில் படித்திருப்போம்; சிறுமிகளின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த மதத்தின் பெயரால், பெண்ணுறுப்பின் நரம்புக்குவியல் கொண்ட பாகத்தை வெட்டியெடுத்து சேதப்படுத்தும் கொடூர வழக்கத்தில் படித்திருப்பீர்கள்)
4. மாலி
5. புர்கினா பாஸோ
6. கானா (கோபி அனன் நாடு)
7. டோகோ
8. பெனின்
9. நைஜீரியா (அதிக மக்கள் கொண்ட ஆப்பிரிக்க நாடு; போகோ ஹரம் படித்திருப்பீர்கள்)
10. கேமரூன்
11. நிலநடுக்கோட்டு கினியா (நாட்டின் ஒருபகுதிகூட நிலநடுக்கோட்டின் மேல் கிடையாது; கினியா பிசாவு என மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் பெயரில் கினியா உண்டு)
12. காபான்
13. காங்கோ குடியரசு
14. காங்கோ ஜனநாயக குடியரசு (ஜெயிரே என்று சுருக்கமான பெயர்; அல்ஜீரியா சூடான் பிறகு மிகப்பெரிய ஆப்பிரிக்க நாடு)
15. ருவாண்டா
16. புருண்டி
17. தான்சானியா (பூமியின் தென்துருவத்தில் அதிக மக்கள் கொண்ட நாடு; கிளிமஞ்சாரோ இங்குதான் இருக்கிறது)


(https://pamelawatson.com/)

இவரின் பயணம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலானவர்கள் போல் சுற்றுலாத் தலங்களுக்கும், கேள்விப்பட்ட இடங்களுக்கும் இவர் சைக்கிளோட்டவில்லை. யூடியூபர்கள் போல் ஆதிவாசிகள் குடியிருப்புகளுக்குப் போய் நடனமாடவில்லை, கண்டதைத் தின்னவில்லை. ஆங்கிலம் பிரெஞ்சு என காலனிப்படுத்திய நாட்டின் மொழி கொஞ்சம் பேசும் மக்கள். புரியாத அவர்களின் தாய்மொழி. காலநிலை, உணவு, சுகாதாரம், பணம், பணமதிப்பிழப்பு, அந்நிய மண், கருப்புத் தோலுடைய மனிதர்களுக்கு இடையில் தனித்துக்காட்டும் வெள்ளைத்தோல், மலேரியா, உட்கார்ந்து போகும் கழிவறை, கொசு, வெயில், நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி, பாம்பு, காட்டு விலங்குகள், கொள்ளையர்கள். Can I rest with you? You are mrs or miss? Are you married? Shall we marry? என்று பயணம் முழுவதும் ஆண்களின் கேள்விகள். பயணம் முடித்து வீடு திரும்பியவுடன், ‘உன்னை யாராவது வன்புணர்ந்திருப்பார்கள், அல்லது கொன்றிருப்பார்கள்’ என நினைத்ததாக ஒரு நண்பர் சொல்கிறார்.

பெரும்பாலான இடங்களில் சிறுவர்கள் விரட்டுகிறார்கள். காசு கேட்கிறார்கள். படகில் போனால் ஆண்கள் எல்லாம், சர்ரென்று ஓரமாக சிறுநீர் கழிக்கிறார்கள். இவள் அடக்கிவைக்கிறாள். ஆற்றில் குளித்தால், ஆண்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். புத்தகத்தில் மூன்று இடங்களில் கடுமையாக தாக்கப்படுகிறாள். சிம்பன்சி குரங்குகள் இருக்கும் ஒரு பண்ணைக்குப் போகிறார். முதன்முதலில் வெள்ளைத்தோலைப் பார்த்த 8 குட்டிகள், பால்குடிக்க ஆசிரியரின் மாரைத் தடவுகின்றன. ஒரு கிராமத்து சந்தையில் அவரைச் சுற்றி கும்பல் கூடுகிறது. எல்லார் முன்னிலையில் ஒரு கிழவன் இவரின் மாரைத் தடவுகிறான். கும்பல் சிரிக்கிறது. ஏற்கனவே படகு போய்விட்டதாகவும் அடுத்த ஊரில் பிடித்துவிடலாம், பைக்கில் அமருங்கள் என்றொருவன் சொல்ல, இவளும் அமர, இன்னொருவன் திடீரென பின்னால் அமர, விருட்டென்று பைக் சந்துபொந்தென யாருமற்ற பகுதிகளில் பறக்கிறது.

10 வாரங்கள் படகு இல்லாமல் சைக்கிளோட்ட முடியாமல் ஓரிடத்தில் மாட்டிக்கொள்கிறாள். புதிதாக வீடியோ கேசட் நுழைந்த ஓர் ஊரில் இவளும் நுழைகிறாள். அதை இயங்கவைக்க இவளை அழைக்கிறார்கள். I never watched video என்கிறாள். டெக்னாலஜி தெரியாத ஒரு வெள்ளைக்காரியா என திட்டுகிறார்கள். ரஜினிகாந்த் தனது ஆட்டோவிற்குப் பெண் பெயர் வைத்து அழைப்பது போல், இவள் தனது சைக்கிளை ஆணாகப் பாவிக்கிறாள். புத்தகம் முழுவதும் அழகு ஆண்களைச் சைட் அடிக்கிறாள். எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே டீ குடித்துக் கொண்டு, பிள்ளைவரம் கொடுக்கும் ஆண்களை as hopeless as men என புத்தகம் முழுவதும் கிண்டல் செய்கிறாள். பக்கெட்டில் நீர் இறைப்பது, பழைய துணிகளை அமுக்கி தலையணை செய்வது, கொப்பரைகளில் தானியங்களை வேகவைப்பது, ஆண் பெண் என கிராமங்களில் தனித்தனி திறந்தவெளிக் கழிப்பிடங்கள், விலையுயர்ந்த நாப்கின்கள் என எல்லாவற்றையும் பழகிக் கொள்கிறாள்.


(https://pamelawatson.com/)

We prefer freedom in poverty, to riches in slavery. ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் சொல்கிறாள். ஆப்பிரிக்காவின் எல்லா சர்வாதிகாரிகளும் தனது சொந்த குடிமக்களை நம்பாமல், இஸ்ரேல் அல்லது மொராக்கோ நாட்டினரை மெய்க்காப்பாளர்களாக வைத்திருப்பார்களாம். அங்கும் ஒரு நாட்டில் டெல்டாவில் எண்ணெய் எடுக்கிறார்கள். அங்கும் ஒரு நாட்டில் பணமதிப்பிழப்பு செய்கிறார்கள். இவள் பயணிக்கும் போதுதான் இரண்டு நாட்டுத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகப்பெரும் இனப்படுகொலை ஒரு நாட்டில் ஆரம்பிக்கிறது. இவளின் இப்பயணத்தைக் கண்டவர்கள் வழியெங்கும் ‘நீயொரு பெண்ணில்லை ஆண்’ என்று சொல்வதாக அமையும் புத்தகம், So you are a woman then என முடிகிறது. இப்புத்தகத்தின் மிகப்பெரிய பலமே ஆசிரியரும், அவர் சந்திக்கும் பெண்களும்தான். விறகு சேகரிப்பவள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பாலியல் தொழிலாளிகள் என பலர். அவர்கள்தான் குடும்பத்தை, சமூகத்தைக் கட்டமைக்கிறார்கள். பிறக்கும் இடமும், குருட்டு அதிர்ஷடமும் அவர் சந்திக்கும் பெண்களைவிட தன்னை எப்படி ஒரு பாதுகாப்பான வாழ்க்கைமுறையில் வைத்திருக்கிறது என அவரே ஓரிடத்தில் நொந்துகொள்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மிகவும் ரசித்துப் படித்து, பல குறிப்புகள் எடுத்த புத்தகம் இது. பயணம் சைக்கிள் ஆப்பிரிக்கா என்று உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாத விடயங்கள் சொல்லும் புத்தகம் இதுவென்றாலும், விசு சொல்வது போல் வீட்டிலும் நாட்டிலும் புரட்சிகரமான செயல்களைச் செய்யத் தொடங்கி வைப்பவள் பெண்தான்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)

போவோமா ஊர்கோலம்

7 April 2025 at 14:45

கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி...

The post போவோமா ஊர்கோலம் first appeared on Her Stories.

’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்  

கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன
❌