Normal view

Received before yesterday

பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்

31 January 2025 at 18:41
தமிழில் இலக்கிய விமர்சன முன்னோடிகளில் ஒருவர் க.நா. சுப்ரமண்யம். அவர் வெவ்வேறு காலத்தில் பெண்ணெழுத்து குறித்து எழுதியவற்றின் தொகுப்பு இது. யதுகிரி அம்மாள், அநுத்தமா, கிருத்திகா, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி ஆகியோரைப் பற்றி எழுதியவை இத்தொகுப்பில் உள்ளன. இப்போதைக்குக் கிடைப்பவை இவை. க.நா.சு.வின் தொகுக்கப்படாத எழுத்துகளைத் தேடினால் இன்னும் கிடைக்கலாம். இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு எழுத்தளார் அம்பை. க.நா.சு. தொகுத்து 1978ஆம் ஆண்டு வெளியான தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் ஒரேயொரு பெண் எழுத்தாளரின் […]

ஹன்னா ஆரெண்ட் – சர்வாதிகாரத்தின் வேர் – சைதன்யா

31 January 2025 at 18:40
1941இல் நாசி ஜெர்மனியிலிருந்து தப்பி போர்ச்சுகல் வழியாக அமெரிக்கா சென்றடைந்த ஹன்னா ஆரெண்ட் இரு கேள்விகளை எதிர்கொண்டார். ஒன்று: நாசி வரலாற்றை, அதன் வளர்ச்சியை புரிந்துக்கொள்ள முயற்சிப்பதா? அல்லது அதை முழுவதுமாக தவிர்ப்பதா? இரண்டு: ஒரு தத்துவவாதியாக சிந்தனை (contemplation) என்னும் தளத்திற்குள் ஒடுங்கிவிடுவதா? அல்லது தொடர்ந்து பேரழிவுகள், படுகொலைகள் என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அக்காலகட்டத்துடன் உரையாட முயல்வதா?  பத்து வருடங்களுக்குப் பின் அவர் எழுதி வெளிவந்த Origin of totalitarianism (1951) என்னும் நூலின் முன்னுரையில் […]

எண்டபள்ளி பாரதி கதைகள்

(தமிழில்: அவினேனி பாஸ்கர்) எண்டப்பள்ளி பாரதி தெலுங்கு மொழி எழுத்தாளர். மார்ச் 22,1981 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே நிம்மனப்பள்ளி வட்டம், திகுவபுருஜு என்ற கிராமத்தில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலேயே தாயார் இறந்துவிட, பாட்டியால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். 25 ஆண்டுகளாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் ‘நவோதயம்’ என்ற பத்திரிகைக்கு  நிருபராகவும், இணையாசிரியராகவும் […]

பெண்மை எனும் முடிவுறாக் கதையாடல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) எலிஃப் ஷஃபாக் துருக்கியின் “முதன்மையான பெண் நாவலாசிரியர்” (உபயம்: Financial Times) ஆக அறியப்படுபவர். சொற்பமான பெண் படைப்பாளிகளே உலகளவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த தனித்துவமான குரல் அவர். மத்திய கிழக்கு நாடுகளில் துருக்கியே மிகவும் தாராளமயமானது என்றாலும் அங்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகுந்தே இருக்கின்றன. ஓரான் பாமுக்கும், அகமத் ஹம்தி தன்பினாரும் உலகை ஆட்கொண்ட பிறகே ஷஃபாக் ஆங்கில இலக்கிய உலகத்தால் அடையாளம் காணப்பட்டார். […]

விதையின் சிறகுகள் – கமலதேவி

31 January 2025 at 18:37
(மமங் தாய்-ன் கருங்குன்றம் நாவலை முன்வைத்து) காட்டுவாசிகளாக இருந்த நாம் இடம்பெயர்ந்து நகர்ந்து நகர்ந்து ஆற்றங்கரைகளோரம் குடியிருப்புகளை அமைத்து அவை ஊர்கள்  நகரங்களாகி, நாடுகளாகி, அரசுகள் உருவாகி வந்தது என்பது மானுட வரலாற்றின் அடிப்படையான சித்திரம். இதில் அதிகம் இடம்பெயராமல் நின்று போன சமூகங்கள் பழங்குடிகளாகவே இன்றும் கூட இருக்கிறார்கள். அதற்கு அடிப்படையான காரணம் இடபெயர்ச்சிக்கான வாய்ப்புகள். வெளியேறி செல்லமுடியாத நில அமைப்பும் மற்றவர்கள் ஊடுருவ முடியாத தன்மையும் எண்ணிக்கையில் குறைவான மக்களும், அவர்களின் மனநிலையும் இதற்கு […]

அஷிதாவின் பொய்கள் – சுசித்ரா

31 January 2025 at 18:36
[1] மறைந்த மலையாள எழுத்தாளர் அஷிதாவின் சிறுகதைகளை ஒரு தலைப்பில் தொகுக்க வேண்டுமென்றால் அவற்றை ‘பொய்க்கதைகள்’ என்று சொல்லலாம். எல்லா கதைகளும் பொய் தானே, அது என்ன பொய்க்கதைகள் என்றால், அவரது சிறுகதைகள் பொய்களையே பேசுபொருளாகக் கொண்டவை. பல கதைகளின் தலைப்பே ‘நுணகள்’ – பொய்கள் என்று உள்ளன. கதைசொல்லி சொல்லும் பொய்கள், கதைசொல்லியிடம் சொல்லப்படும் பொய்கள், கதைசொல்லி தன்னைச் சுற்றி அவதானிக்கும் பொய்கள், கதைசொல்லி தன்னிடமே சொல்லிக்கொள்ளும் பொய்கள் என்று பலவிதமான பொய்கள் அவர் கதைகளில் […]

அறமும் அறச்சீற்றமும் – மதுமிதா

31 January 2025 at 18:35
 (மகாஸ்வேதா தேவியின் ‘கவி வந்த்ய கட்டி காயியின் வாழ்வும் சாவும்’ நாவலை முன் வைத்து) பீமாதல் நாடு ரூப் நாராயண் ஆற்றின் உந்தி சுழியென அமைந்துள்ளது. என்னதான் பொல்லாத ஆறாக இருந்தாலும், ரூப் நாராயண் பீமாதல் நாட்டை சற்று கருணையோடே காத்து வந்தது. அதை ஆண்டு வந்த கர்க வல்லப மன்னர்களின் வரிசையில் அப்போது பூபால் கர்க வல்லப ராஜா அதை செம்மையாக ஆட்சி செய்து வந்தார். குறை என்றால், அவர் பிராமண, காயஸ்த சாதிக்கு கெடுதல் […]

அனுதாபத்தின் ஆப்பிள்கள் – சோனியா செரியன்

31 January 2025 at 18:34
(தமிழில்: கதிரேசன்) சோனியா செரியன் (லெப்டினன்ட் கர்னல்) (1973) கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். பல் மருத்துவராக ராணுவத்தில் பதினான்கு வருடங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர். சோனியா செரியனின் முதல் நூல் ”இந்தியன் ரெயின்போ” 2023-ல் மாத்ருபூமி பதிப்பகம் வெளியீடாக வந்தது. “memoirs” (நினைவுகள்) என்ற வகைமைக்குள் வைக்கப்பட வேண்டிய நூல். பதினான்கு வருட ராணுவ வாழ்க்கையில் சோனியா சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் சார்ந்த நினைவுகளை புனைவு மொழியில் எழுதப்பட்டதே இந்நூல்.  “மலையாளத்தில் முதன்முறையாக, ஒரு பெண்ணின் […]

திரிபுறும் தாய்மை – லாவண்யா சுந்தர்ராஜன்

சங்ககாலம் தொடங்கித் தற்காலம் வரை பெண், பெண்மை, பெண் பாலினம் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் பற்பல. மடமை, அடிபணிந்திருத்தல், கள்ளமின்மை இன்னபிற அவற்றில் சிலது. பல்வேறு பருவநிலைப் பெண்களும் அவற்றில் பிரயோகக் குணங்களும் என்ற தலைப்பில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை தேடி எடுத்து ஆராய்ச்சியே செய்யலாம். அதில் குறிப்பாகத் தாய்மையைப் பற்றிப் பேசத் தொடங்கினால் அது புனிதத்தின் உச்சம், தியாகப் பிம்பம், சுயநலமற்ற சுயரூபம் என்பது போன்ற குணாதியங்களைக் கொண்டு வரையப்பட்ட சித்திரம். […]

ஒரு காலகட்டத்தின் பெண்கள் – ஆனந்தாயி – ரம்யா

31 January 2025 at 18:32
(ப.சிவகாமியின் ஆனந்தாயி நாவலை முன்வைத்து) ”இந்தியப் பெண்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் முக்கியமான நாவல்களில் ஒன்று” என எழுத்தாளர் ஞானி ஆனந்தாயி நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார். உண்மையில் சாதி, மதம் சார்ந்த எந்த மட்டத்திலும் பெண்களின் நிலை ஒன்றாகத்தான் இருக்கிறது என்ற பட்சத்தில் இந்த மதிப்புரை சரியானதே. ஆனால் ஆனந்தாயி நாவலை வாசித்து முடித்தபின் இது அப்படி மட்டும் வரையறுக்கப்பட வேண்டியதல்ல என்று தோன்றியது. 2025-ல் நின்று கொண்டு 1992-ல் எழுதப்பட்ட ஆனந்தாயி நாவலைப் பார்க்கும் போது கடந்துவந்துவிட்ட […]

நடைநாய் (சிறுகதை) – சோஃபியா ஸமடார்

31 January 2025 at 18:31
2021, சிறுகதைகளை நான் அதிகம் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலம். அதற்கான தேடலில் கண்டடைந்தவைதான் சோஃபியா ஸமடாரின் கதைகள். சோஃபியா ஸமடாரின் கதைகள் முதல் வரியிலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்பவை. சமகாலத்தின் சூழலியல் மற்றும் உளவியல் சிக்கல்களை அறிவியல்பூர்வமாகப் பேசுபவை. பேசிக் கொண்டிருக்கையிலேயே உணர்வுவயமாகி, தன்னை மறந்த பித்துநிலைக்குச் சென்றுவிடுபவை. பின் மீண்டுவந்து நிதானமடைபவை. கடல் அலைகளை ஒத்த இந்தக் கலவையான தன்மை ஒரு கவிதையின் அம்சத்தை இவரது கதைகளுக்கு வழங்கிவிடுகின்றது. வாசிப்பே இனிதாகிவிடுகிறது. ‘பராமரிப்பாளர்’, ’நடைநாய்’ என்னும் […]
❌