Normal view

Received before yesterday

Mannai Maasupaduthum Navina Ethiri|Dr.N.Dharmaraj

Abstract         
           

         On the other side of the science to grow, it should be approached with caution. When we approach science naturally, we have seen the traumatic events in front of us when we arise against nature due to civilized maturity. Some people in the world have tried to take control of their natural control because we do not know that part of nature is a part of nature. This earth is called the mother of the world, if so, if the mother of all of us is extinct. We are dead but if we are destroyed, we have no way to exist. We must all live in immortality, the only earth that everyone has.


“மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரி”

ஆய்வுச் சுருக்கம்         

        அறிவியல் வளர வளர அதன் இன்னொரு பக்கம் எச்சரிக்கையோடு அணுகப்பட வேண்டும் என்பார் இறையன்பு. அறிவியலை இயற்கைக்கு இணக்கமாக்கி அணுகும் போது பாதிப்பில்லை நாகரீக முதிர்ச்சியால் இயற்கைக்கு எதிராக நாம் எழும்போது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நம் முன்னால் நிகழ்வதை கண்டு கொண்டுதான் இருக்கிறோம் நம்மிடையே ஏற்பட்டுள்ள அறிவியல் தாக்கத்தாலோ கலாச்சார மாற்றத்தாலோ சிதைக்கப்படுவது சுற்றுச்சூழல் மட்டுமே என்பதை இக்கட்டுரையில் காண்போம்.


முன்னுரை
         

        இயற்கையோடு இணையும் போது தான் மனித வாழ்க்கை அத்தப்படுகிறது.நாம் இயற்கையின் ஒரு பாகம் என்பது தெரியாத காரணத்தால் உலகத்தில் சிலர் இந்த இயற்கை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று முயற்சித்தார்கள் ஆகையால் இயற்கை மோசமாகி சீரழிந்துள்ளது. இந்த பூமியை உலகம் முழுவதும் அம்மா என்று அழைக்கிறது அப்படி என்றால் நம் எல்லோருக்கும் இருக்கும் அம்மா அழிந்தால் நாம் இல்லை. நம்மைப் பெற்ற தாய் இறந்தாள் நாம் இருக்கிறோம் ஆனால் பூமித்தாய் அழிந்தால் நாம் இருப்பதற்கு வழியே இல்லை. எல்லோருக்கும் இருக்கும் ஒரே பூமித்தாயை நாம் எல்லோரும் சேர்ந்து அழியாமல் வாழ வைக்க வேண்டும்.
         

      எந்த வளர்ச்சியும் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு அமைய வேண்டும் சுற்றுச்சூழல் பாதிக்கும்போது வளர்ச்சி தானாகவே தடைப்பட்டு போகும். இந்த நூற்றாண்டில் மனிதன் நன்கு வாழ வேண்டும் என்ற சிந்தனையை தவிர்த்து அடுத்த தலைமுறையினரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். இன்று மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத போது வருங்கால சந்ததிகளின் நிலை என்னவாகும் என்ற கவலை ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் இது மிகவும் அவசியமானதாகும். இன்றைய காலகட்டத்தில் மண் மாசு படுவதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் நெகிழிப் பயன்பாடு நெகிழிப் பயன்பாட்டால் பூமி வெப்பமடைவதை கட்டுரை விளக்குகிறது.


          நெகிழிப் பயன்பாடு அனைத்து துறைகளிலும் முக்கிய பங்காற்று வருகிறது நகரத்தில் சேரும் கழிவுகளில் நெகிழி கழிவு பொருட்கள் மட்டும் 50% விழுக்காட்டிற்கு மிகுதி என்ற செய்தி நெகிழியின் பயன்பாட்டை உறுதி செய்கிறது. ஒருபுறம் நெகிழிப் பொருள்களின் தேவை மிகுதியாகி வருகிறது மறுபுறம் எதிர்ப்பு பெருகி வருகிறது. இந்த எதிர்ப்புக்கு காரணம் நெகிழியினால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் பாதிப்புகளே. ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் நெகிழிப் பொருட்களால் சூழல் மிகுதியாக பாதிக்கப்படுகிறது.
 மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக நெகிழி திகழ்வதை பழனி பாரதி மிக அழகாக கூறியுள்ளார்.


“அதிகாலையில்

வாசலில் வந்து விழுந்த

பால்காரனின்குரல்

எடுத்து பேசியது

பால் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் பை

காய்கறி மளிகை என்று

வேலைக்காரியின் கைகளோடு

வீட்டுக்குள் நுழைகின்றன

நான்கைந்து பிளாஸ்டிக் பைகள்

குழந்தைகளின் உணவு சட்டி

தண்ணீர் குவளைஎல்லாம் பிளாஸ்டிக் “..!
         

     என்ற வரிகளில் விவரிக்கின்றார் இப்பைகளை பயன்படுத்துவதாலும் பயன்படுத்திய பிறகு தூக்கி எறிவதாலும் ஏற்படும் இன்னல்களை மனித இனம் உணர்வதில்லை. இயற்கையை மனிதனே சீரழிக்கின்றான்.நாளைய உலகம் நெகிழிப் பைகளாக காட்சியளிக்கும். வருங்கால தலைமுறையினர் மண் எப்படி இருக்கும் என்று அறியாமலேயே இறக்க நேரிடும் மண்ணோடு மண்ணாக சிதைவடைய 10 லட்சம் மில்லியன் ஆண்டுகள் கால அளவு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


நெகிழி மோகம்
         

    மக்களிடையே மிகுந்து வரும் நெகிழி மோகத்தையும் அதற்கு அடிமையாகி விட்டதையும் சோ. இராஜேந்திரன் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்.


காய்கறி வாங்க

எடுத்துச் சென்ற மஞ்சள் பை

இறைச்சி வாங்க

எடுத்துச் சென்ற ஓலைப்பை

எண்ணெய் வாங்க பாதுகாத்த கண்ணாடி குப்பி

தண்ணீருக்கு இல்லாத

தனிமனம் தரும்

பித்தளை சொம்பு 

அத்தனையும் தொலைத்து

உயிர் வாழ தொடங்கி விட்டோம்

பிளாஸ்டிக் இதயத்தோடு..
        

    என்று சுட்டிக் காட்டுகிறார்.பல்வேறு காரியங்களுக்கும் நெகிழியை பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள் மனிதர்கள். ஆகவே நெகிழிக்கு அடிமையாகாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றார் கவிஞர் இராசேந்திரன்.


நெகிழி – மண் மாசு
         

பண்டைய காலத்தில் வளமான மண்ணை கொண்டு காட்சி அளித்தது நிலம்.எனவே ஐவகை நிலப் பாகுபாடுகளின் வழியே தமிழர்கள் வாழ்க்கையை உணர்த்தினர். இப்பொழுது மண்ணினைக் காண முடியாத அளவுக்கு நெகிழி நிரப்பி காணப்படுகிறது இதனால் நிலம் தனது தன்மையிலிருந்து மாறி வருகின்றது.


“ நெகிழி குப்பைகள் மூடஇறந்து கொண்டே இருக்கும் நிலம் “
 

என்று செழியன் கூறுகின்றார் மாணவர் எக்ஸ்னோரா ஆலோசகர் முத்துகிருஷ்ணன்


“ நல்ல நிலம் கெட்டுப் போகுது பிளாஸ்டிக்காலே

மழை பேஞ்ச தண்ணியும் தான் பூமியிலே சேறாதுங்க

பூமியிலே       சேறாதுங்க

மண்வளம் கெட்டுப்போகும் மண்புழுவும் செத்துப்போகும்

மண்புழுவும் செத்துப் போகும்

முந்நூறு ஆண்டு ஆனாலும் பிளாஸ்டிக் மக்காதுங்க..

மண்ணோடு மண்ணாக ஒன்னாவே சேராதுங்க 

ஒன்னாவே சேராதுங்க…
        

       என்று குறிப்பிடுகின்றார். நிலத்தில் கிடக்கும் நெகிழிப் பைகள் மண்ணிற்குள் காற்று போகாமல் தடுக்கின்றன. மண்வளத்தை கெடுக்கின்றன.தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. மண்ணின் பிடிமானத்தை குறைத்து நிலச்சரிவு ஏற்படும் சூழலை உருவாக்குகின்றன. நிலத்திற்கு போர்வையாக நெகிழிகள் அமைந்துவிட்டால் நுண்ணுயிர்கள் இன்மையால் மண்புழுக்கள் அழிந்து விட்டன. மட்கும் தன்மையற்ற நெகிழிகளால்  நிலங்கள் அழிந்து வருவதை “இறப்பு “என்று சுட்டிக் காட்டுகின்றார். மண்ணுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றால் நெகிழிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் நிலம் அழிந்துவிடும் நிலம் அழிந்துவிட்டது என்றால் உணவுக்கு என்ன செய்வது பணத்தையே உணவாக உண்ண முடியுமா? ஆகவே இயற்கைக்கு தீங்கு இழைக்காதீர்கள் என்று கவிஞர் வருந்துகின்றார்.


நெகிழி மண்ணுக்கு இழைக்கும் கொடுமை
         

     செயற்கை பொருள்களான நெகிழிப் பைகள் மேல் மண்ணுக்கும் கீழ் மண்ணுக்கும் இடையில் ஒரு கண்ணாடி சுவர் போல நீரோ காற்று உள்ளே செல்ல வழி விடாது மண்ணை மூச்சு திணற செய்கிறது.அதனை மீறி எந்த விதையும் முளைப்பதில்லை. மேலும் நுண்துளைகள்.நீர் பிடிப்பு தன்மை. மண்ணில் இயற்கை தன்மையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன நெகிழி பயன்பாட்டால் மண்ணில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை..
 நெகிழி கழிவு பொருட்கள் நிலத்தில் எரியப்படுவதால் அவை மற்ற உயிர்மக் கழிவுப் பொருட்களை போல மண்ணோடு மண்ணாக மடக்குவதில்லை. அவை நிலத்தில் வெப்ப அழுத்தத்தினால் வேதியில் மாற்றத்திற்குள்ளாகி நிலத்தின் தன்மையை நஞ்சாக்குகிறது. அதனால் மண்வளத்தை காக்கும் பல பூச்சி இனங்கள் அழிக்கப்படுகின்றன. மண்ணின் மூலம் நிலத்தடி நீரையும் நஞ்சாகுகிறது மேலும் அப்பொருட்கள் செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து விட்டாலோ வேர்களுக்கு கிடைக்கும் காற்றோட்டம் தடைபட்டு செடிகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது. அதேபோல நிலத்தின் காற்றோட்டத்திற்கு தடை ஏற்படுத்துவதால் நிலம் கட்டிப் படுவதுடன் மண்வளம் குறைந்து நிலங்கள் பயிரிட தகுதியற்றவையாக மாறிவிடுகின்றன. என்று பூரணச் சந்திரன் கூறுகிறார்.
          இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நிலை இன்று முற்றிலும் மறைந்து விட்டது. தெய்வமாக விளங்கிய இயற்கையும் இன்று மாறிவிட்டது.இயல்பாக நிலத்தில் வளரும் தாவரங்களை செயற்கையாக வளர்க்கின்றனர் இதனை கலாபிரியா


“ வாசலில் பதியன்கள்

தின்று வளர

மண் திணித்து

மச்சுத் தோட்டத்தில்

மண் தின்ன முடியாத

பாலத்தீன் பைகள் ‘’
         

       என்று விளக்குகிறார். மண்வாசனையை நுகராதவர்கள் அதன் பெருமையை அறியாதவர்கள். நிலத்தில் வளரும் தாவரங்களைப் பைகளில் மண்ணிறப்பு வளர்க்கின்றனர் ஆடம்பர வாழ்க்கையின் எதிரொளிப்பான அழகிய வீடுகளில் மண் இருப்பதை இழிவாக கருதுகின்றனர் எனவே நெகிழிப்பைகளில் செடிகளை வளர்க்கின்றனர் இயற்கையாக கிடைக்கும் நுண்ணுட்ட சத்துக்களை உந்து வளர்கின்ற தாவரங்களை செயற்கையாக வளர செய்கின்றனர் இதனால் மண்ணோடு மனிதருக்கு உறவு இல்லாமல் போகின்றது.எனவே நிலத்தின் காற்றோட்டத்தை தடுக்கும் நெகிழிகள் பெருகிவிட்டது அழிக்க முடியாத பொருளை உருவாக்கி அல்லலூரும் சமுதாயத்தை கண்டு வருந்துகிறார் கவிஞர் கலாப்ரியா
         

       மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரிகளில் நெகிழி முதன்மையானது மண்ணின் உறிஞ்சும் தன்மையை தடுப்பதோடு மண்ணோடு செரிமானமாகாமல் நீண்ட தொல்லையாய் உள்ளன நெகிழி உருவாக்கத்தின் போது அதிலுள்ள நச்சு கழுவுப் பொருட்கள் நிலத்தை மாசடைய செய்கின்றன இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மண்ணைக் காண முடியாத நிலை ஏற்படும் என்பதை  செந்தமிழ் இனியன்


“குப்பைகளில் நாளைய தலைமுறைகள் நெகிழியில் நெளியும்”
         

என்று சுட்டிக் காட்டுகிறார். நெகிழிக் குப்பைகளின் மிகுதியால் எதிர்கால தலைமுறைகள் தவழ்ந்து விளையாட மண் இருக்காது. ஐம்பெரும்புதங்களில் முதலிடம் வகிக்கும் நிலம் எதுவென்று கேட்டால் விடை தெரியாமல் திகைப்பர். நிலத்தின் மேல் போர்வை போல் நெகிழி குப்பைகள் படிந்து காணப்படுவதால் மழை நீர் உட்புக முடியவில்லை அதனால் மண் வெப்பமடைகிறது. மண் வெப்பம் அடைவதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது மனித சமுதாயம அழிவதற்கு காரணமாகவும் நெகிழி அமைகிறது. பூமியில் மண்ணுக்கு பதிலாக நெகிழி பரவினால் மண்ணின் தன்மை குறைந்து வெப்பம் அதிகரிப்பதை கண்களால் காண முடிகிறது.


சான்றெண் விளக்கம்

1.கவிஞர் பழனி பாரதி, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப – 40


2.இராசேந்திரன், சூழலியல் தமிழ் ப-90


3.செழியன் தீட்டெனக் கழியும் ப -18


4.முத்துக்கிருஷ்ணன் நெகிழிக்கு டாட்டா சொல்லுவோம் ப – 51


5.சத்தியமோகன், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப -41


6.வைகைச் செல்வி, நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே ப – 43


7.ரவிச்சந்திரன் கே, மேலது ப –  44


8.பூரணச்சந்திரன், அறிவியல் கட்டுரைகள் ப -43,44


9.கலாப்ரியா சூழலியல் தமிழ் ப 90


10.செந்தமிழ் இனியன், தற்கால கவிதைகள் ஒரு பார்வை ப- 68



ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ந.தர்மராஜ்

இணைப் பேராசிரியர்


செயின்ட் ஜோசப் கல்லூரி( கலை மற்றும் அறிவியல்)


கோவூர், சென்னை.

 

The post Mannai Maasupaduthum Navina Ethiri|Dr.N.Dharmaraj appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலை|குமாரவேலு டனிஸ்ரன்

ஆய்வுச் சுருக்கம்

          நாட்டிய சாஸ்திரம் என்பது பாரத நாட்டியத்திற்கான அடிப்படை நூலாக கருதப்படுகிறது. இது பரத முனிவரால் எழுதப்பட்டதாகும். இந்நூல் நடனம், அபினயம், இசை, ராகம், தாளம் மற்றும் இதர பல கலைகளை உள்ளடக்கியது. நாட்டியத்தில் இசைக்கலையின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இசை இல்லாமல் நாட்டியம் முழுமையாக இருக்க முடியாது. இப்படி பட்ட இசைக்கலை  நாட்டிய சாஸ்திரத்தில் எவ்வாறு கையாளப்படுகின்றது? அது பெறும் இடம் எத்தகையது? போன்ற கேள்விகள் இவ்வாய்வின் பிரச்சினைகளாக உள்ளன. இந்த அடிப்படையில் இவ்வாய்வானது  நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலையின்  பங்கு, அதன் அம்சங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து விரிவாக ஆராய்வதை நோக்கமாக கொண்டு  அமைகின்றது. மேலும் இந்த ஆய்வானது பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு, வரலாற்று ஆய்வு  எனும் ஆய்வு முறையில்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

திறவுச் சொற்கள் : கலைகள், நாட்டிய சாஸ்திரம், இசை, நடனம், சமூகம்

அறிமுகம்

          இந்திய கலாச்சாரத்தில் நாட்டியம் என்பது அழகியலில் ஒரு உயரிய கலை வடிவமாகப் போற்றப்படுகிறது. இதன் வேர்கள் வேதங்களில் உறைந்துள்ளன. நாட்டியம் என்பது வெறும் உடல் அசைவுகள், நடன வடிவங்கள் மட்டுமல்ல; உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த வடிவமாகும்.1 இது உடல்மொழி, முகபாவங்கள், கைமுத்ரைகள், இசை மற்றும் கதை சொல்லும் பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியது. இவற்றில் இசை மிக முக்கியமான கூறாக விளங்குகிறது.  பரத முனிவரால் எழுதப்பட்ட “நாட்டிய சாஸ்திரம்” என்ற நூலில் இசையின் பங்கு மிக விரிவாக விவரிக்கப்படுகிறது.

நாட்டிய சாஸ்திரத்தின் வரலாறு

          பரத முனிவர் இயற்றிய “நாட்டிய சாஸ்திரம்” என்பது இந்திய பாரம்பரிய நடனக் கலைக்கு அடித்தளமாக விளங்கும் நூல் ஆகும். இது சுமார் கி.மு. 200–300 காலத்தில் எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. இந்த நூலில் 36 அதிகாரங்கள் உள்ளன.2 அதில் இசை, நடனம், வாத்யங்கள், நவரசங்கள், அபிநயங்கள் போன்றவை விரிவாக சொல்லப்பட்டுள்ளன.

          இந்த நூலின் தனிச்சிறப்பு என்னவெனில் இது நான்முக வேதங்களில் உள்ள அறிவின் சாரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது ரிக் வேதம் – பாடல், யஜுர் வேதம் – செயல், சாம வேதம் – இசை, அதர்வ வேதம் – உணர்வுகள் என்பவற்றின் தொகுப்பே நாட்டிய சாஸ்திரம். இவ்வாறு இசை என்பது இதன் ஆழ்ந்த கூறாகவே அமைந்துள்ளது.

இசைக்கலையின் அடிப்படை அம்சங்கள்

இசை என்பது ஸ்வரங்கள், ராகங்கள் மற்றும் தாளங்களால் ஆனது. நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் இசையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1.வாயல் இசை (வாக்கிக இசை)

வாயால் பாடப்படும் இசை. இதில் பாடல்கள், பாடல் இசை, சாத்திர ஒலி ஆகியவை அடங்கும். இது குறிப்பாக சோளோகங்கள் மற்றும் பதங்களின் உச்சரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.

2.வாசன இசை (துவனிக இசை)

இது வாத்தியங்கள் மூலம் உருவாகும் இசை. இது நாட்டியத்தின் பின்நிலையிலும், அழுத்தங்களை காட்டவும் பயன்படுகிறது. பக்கவாத்தியங்கள், மெல்லிசை வாத்தியங்கள் இதில் அடங்கும்.

3.அங்க இசை (ஶாரீரிக இசை)

இது உடலின் இயக்கங்களின் வாயிலாக வெளிப்படும் இசை. இது கண்கள், கரங்கள், கால்கள், முகபாவங்கள் ஆகியவற்றின் ஒழுங்கிய இயக்கத்திலிருந்து தோன்றும். ஸ்வரங்கள் (ச, ரி, க, ம, ப, த, நி) என்பது நாட்டியக் கலைஞர்களின் நடையில் சீரான ஒழுங்கை ஏற்படுத்த உதவுகின்றன. ஒவ்வொரு ராகமும் ஒரு உணர்வை பிரதிபலிக்கிறது. உதாரணமாக, “பைரவி” ராகம் ஒரு சிறிய துக்க உணர்வை ஏற்படுத்தும், “ஹம்சத்வனி” ராகம் மகிழ்ச்சி தரும்.3

நாட்டியத்திற்கும் இசைக்கும் உள்ள தொடர்புகள்

நாட்டிய சாஸ்திரம் முழுவதும் இசையுடன் இணைந்துள்ளது. பரத நாட்டியம் மூன்று முக்கிய கூறுகளை கொண்டுள்ளது:

1.ந்ருத்தம் (Nritta) – சுத்தமான உடல் அசைவுகளின் தொகுப்பு

2.ந்ருத்தியம் (Nritya) – இலக்கணத்துடன் கூடிய நடனம்

3.நாடியம் (Natya) – கதையொன்றை கூறும் நடனம்

இந்த மூன்று கூறுகளும் இசையுடன் ஒன்றிணைந்திருக்கும். நாட்டிய சாஸ்திரம் இசையை முக்கியமாகக் கருதி அதன் விதிமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறுகிறது.

நாட்டிய சங்கீதத்தின் முக்கிய அம்சங்கள்

1. ஸ்வரம்

இசையில் உள்ள ஏழு முக்கிய ஸ்வரங்கள் (ச, ரி, க, ம, ப, த, நி) நாட்டியத்திலும் பிரதிபலிக்கின்றன. இவை நாட்டியத்தின் தாளம் மற்றும் ராகத்துடன் பொருந்தி நடனத்தின் அழகினை அதிகரிக்கின்றன.

2. ராகம்

நாட்டிய இசையில் ராகம் என்பது நுண்ணிய உணர்வுகளைத் தூண்டும் இசை அமைப்பாகும். நாட்டிய சாஸ்திரத்தில் பல்வேறு ராகங்களும், அவற்றின் உணர்வும் (ரசமும்) விவரிக்கப்படுகின்றன. நாட்டியத்திற்கான பாடல்களுக்கு ஏற்பவே ராகங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ராகத்திற்கும் தனித்துவமான உணர்வுகள் உள்ளன:

பைரவி – பக்தி உணர்வுகளை தூண்டும்

கம்போதி – வீர உணர்வை வெளிப்படுத்தும்

தோடி – சங்கட உணர்வுகளை வெளிப்படுத்தும்

மோகனம் – சந்தோஷ உணர்வுகளை தூண்டும்

கரஹரப்ரியா – மென்மை மற்றும் அமைதியை வெளிப்படுத்தும்

3. தாளம்

          தாளம் என்பது இசையின் அளவுக்கட்டுப்பாடாகும். நாட்டிய சாஸ்திரத்தில் தாளங்கள் மிகவும் சிறப்பிடம் பெறுகின்றன. நாட்டியத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் தாளங்கள்:

ஆதி தாளம் (8 மட்டிரம்)

ரூபக தாளம் (6 மட்டிரம்)

மிஸ்ரா சாபு (7 மட்டிரம்)

த்ரிஷ்ரா ஏகம் (3 மட்டிரம்)

கண்டா சாபு (5 மட்டிரம்)

4. லய ஒழுங்கு

          நாட்டியத்தின் ஒழுங்கு முறையான இயக்கங்களை இசையின் லய ஒழுங்குடன் இணைக்க வேண்டும். நாட்டிய சாஸ்திரத்தில் லய ஒழுங்கு காட்சியினை இன்னும் விளக்கமாக வெளிப்படுத்த உதவுகிறது.

6. நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் வாத்தியங்களின் வகைகள்

நாட்டிய சாஸ்திரம் எடுத்துரைக்கும் இசைக்கலையில் வாத்தியங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. பரத முனிவர் வாத்தியங்களை மூன்று வகைப்படுத்துகிறார்.4

1. தத வாத்தியம் – தாள வாத்தியங்கள் (மிருதங்கம், பக்கவாத்தியம்)

2. அவனத்த வாத்தியம் – வாசிப்பதற்கான வாத்தியங்கள் (வீணை, பன்சுரி)

3. கண வாத்தியம் – தாள ஒலி உள்ள வாத்தியம் (டபிலா, மணி)

நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

மிருதங்கம் – தாளத்திற்காக

வீணை – மெல்லிசை வழங்க

வயலின் – பின்னணி இசைக்காக

மத்தளம் – அதிக லய உணர்வு கொண்ட பாடல்களுக்கு

நாதஸ்வரம் –  இன்னிசை எழுப்புவதற்கு

கஞ்சீரா – சிறப்பு தோடகங்களுக்கு

ஊதுக்குழல் – மென்மையான சங்கீதத்திற்காக

தவில் – சத்தமிக்க லய ஒழுங்குகளுக்கு

நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் சங்கீதத்தின் முக்கிய பாணிகள்

நாட்டியத்திற்காக இசை பல பாணிகளில் பிரிக்கப்படுகிறது:

மெளன சங்கீதம் – மெதுவாக தொடங்கும் இசை

தானம் சங்கீதம் – விதவிதமான லயங்களைக் கொண்ட இசை

க்ருதி – பாடல்களை அடிப்படையாகக் கொண்ட இசை

பதம் – கதையினை வெளிப்படுத்தும் பாடல்கள்

நாட்டியத்திற்கும் சங்கீதத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

நாட்டியமும் சங்கீதமும் இரண்டும் நவரசங்களை வெளிப்படுத்த பயன்படுகிறது.

நாட்டியத்தின் அபினயம் இசையின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது.

இசையின் உச்சம் நாட்டியத்தின் உச்ச கட்டத்தை உருவாக்க உதவுகிறது.

நாட்டிய சங்கீதம் பாரம்பரிய ராகங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நாட்டியத்திற்காக எழுதப்பட்ட பாடல்களில் பெரும்பாலும் தெய்வீக உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

நாட்டியத்தில் இசையின் பங்கு

          நாட்டியம் ஒரு முழுமையான கலை வடிவமாக இருப்பதற்கு இசை அவசியம். இசை இல்லாமல் நடனம் ஒரு ஓட்டமற்ற உரையாடலாகவே தோன்றும். ஒரு நாட்டிய கலைஞரின் உடல்நடை, முகபாவம், கைமுத்ரைகள் அனைத்தும் இசையின் ஓட்டத்தோடு பின்னப்பட்டிருக்கும்.

          நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது – “ந்ருத்யம் கீர்த்தியதம்விநா ந ரம்யம்”. இதன் பொருள், “இசை இல்லாமல் நடனம் அழகாக இருக்க முடியாது”.5

          இசையின் உதவியுடன் கதை சொல்லும் பாங்கு மேம்படுகிறது. குறிப்பாக அபிநய தர்பணம் என்ற பகுதியில் இசையின் மேன்மையை விளக்கும் விதமாக ஒவ்வொரு ராகமும் எந்த உணர்வை வெளிப்படுத்த முடியும் என்பதை நாட்டிய சாஸ்திரம் விளக்குகிறது.

இசை கருவிகள் உருவாக்கும் தாக்கங்கள்

          நாட்டிய நிகழ்வுகளில் பல்வேறு இசைக்கருவிகள் பயன்படுகின்றன இசை கருவிகள் ஒவ்வொன்றும் தனித்தனி பாங்கில் நாட்டியத்தில் இசையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. கருவி இசை என்பது நவரசங்களை (அனந்தமான ஒன்பது உணர்வுகள் – சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரௌத்திரம், வீரர், பயம், பீபத்ஸம், அத்புதம், சாந்தம்) வெளிப்படுத்த உதவுகிறது.6

நாட்டியத்தில் பயன்படுத்தப்படும் பாடல்களின் வகைகள்

          நாட்டிய இசையில் பின்வரும் பாடல் வடிவங்கள் காணப்படுகின்றன:

1.வர்ணம் – ஆரம்பத்தில் நிகழும்; நடை மற்றும் லய பாணிகளை அமைக்கிறது.

2.ஜவளி – லய விரைவு, அபிநயத்திற்கு ஏற்றது.

3.பதம் – நகைச்சுவை, காதல் போன்ற உணர்வுகளை வெளிக்கொணரும்.

4.தில்லானா – தாளங்களின் வளத்தை காட்டும்.

5.அஸ்தபதிகள், தேவாரங்கள் – ஆன்மீக உணர்வை கூட்டும்.

நாட்டிய இசையின் உளவியல் தாக்கங்கள்
         

நாட்டியத்தில் இசை என்பது வெறும் கேட்பதற்கான உவகை அளிக்கும் கலை மட்டும் அல்ல; அது மனதிற்குள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். இசையின் மூலம் ஒரு நாட்டிய கலைஞர் பார்வையாளர்களின் உணர்வுகளை எழுப்ப முடிகிறது.7 இவ்வாறு இசை உணர்வுகளை உந்துவதால் தான் அது மனநலனுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. உதாரணமாக இராகங்கள் ஒவ்வொன்றும் மனநிலைகளை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தவை. “தோடி”, “சந்திரகௌள”, “ஷண்முகப்ரியா” போன்ற இராகங்கள் தனித்துவமான உளவியல் நிலைகளை உருவாக்கும். இது நாட்டியத்தில் இசையின் மௌனமான பேசுதலாகும்.


இசை பயிற்சி மற்றும் நாட்டியக் கலைஞரின் பயணம்
         

ஒரு நாட்டியக் கலைஞர் தனது பயணத்தில் இசையின் மீது வலுவான பிடிப்புடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஸ்வரங்களின் துல்லியம், தாளங்களின் பரிசுத்தம், ராகங்களின் உணர்வுபூர்வ வெளியீடு ஆகியவை நாட்டியத்தின் சிறப்பான வெளிப்பாட்டுக்கு ஆதாரம். இசை பயிற்சி இல்லாமல் நாட்டியக் கலைஞர் முழுமையான அபிநயத்தை வெளிக்கொணர இயலாது. அதனால் தான் பாரம்பரிய குருக்கள் நாட்டியம் மற்றும் சங்கீதம் இரண்டையும் இணைத்து கற்றுத் தருகிறார்கள். இதுவே பரம்பரையான “குருகுல” முறையின் சிறப்பாகும்.


பரத நாட்டியத்தில் இசையின் சிறப்பு
         

பரத நாட்டியம் என்பது நாட்டிய சாஸ்திரத்தின் மீது தழுவிய ஒரு முக்கியமான நடனக் கலைவடிவமாகும். இதில் “நட்டுவங்கம்” எனப்படும் இசை ஓர்மையுடன் நடனம் வழங்கப்படும். 8 இசையின் ஒலி, தாள ஒழுங்குகள் மற்றும் பாடல்களின் வரிகள் அனைத்தும் நேரடி முறையில் நாட்டிய கலைஞரின் இயக்கங்களைத் தீர்மானிக்கும். மேலும் பரத நாட்டிய பாடல்கள் பெரும்பாலும் தேவாரம், திருப்புகழ், பதம், கீர்த்தனை, தில்லானா போன்ற பாரம்பரிய பாடல்களைக் கொண்டு இயங்குகின்றன. இந்த பாடல்களும் இசையும் கலாசாரத்தின் சுவையை வெளிப்படுத்துகின்றன.


இசை, நாட்டியம் மற்றும் தத்துவங்கள்
         

நாட்டிய சாஸ்திரத்தில் இசை மட்டும் அல்லாமல் அதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவக் கூறுகளும் குறிப்பிடத்தக்கவை. “ரஸா” என்ற உணர்வு பாங்குகள் ஆன்மீக பரிசுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இசையால் வெளிக்கொணரப்படுகின்றன. அதாவது “ரசாநுபூதி” எனப்படும்  சக்தி இசையின் மூலம் உருவாகும் போது தான் நாடக கலை முழுமையாக நிறைவேறுகிறது என சாஸ்திரம் கூறுகிறது. இங்கே ராகம், ஸ்வரம், மற்றும் தாளம் அனைத்தும் ஒருங்கிணைந்து அதிசயமான அனுபவத்தைக் கொடுக்கின்றன.


சமூக மற்றும் ஆன்மீக தாக்கம்
         

நாட்டிய இசை என்பது ஒருபக்கம் கலைக்கான பயிற்சி என்றாலும், மறுபக்கம் ஆன்மீக சாதனையாகவும் பரிணமிக்கிறது. பக்தியுடன் கூடிய பாட்டு, ராகம் மற்றும் அபிநயங்கள் பார்வையாளர்களை புனித அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்றனசமூக நோக்கிலும் நாட்டியம் மற்றும் இசை கலாசார பரம்பரையை பாதுகாக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது. சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு இசை மற்றும் நாட்டியம் பயிற்சியளிப்பது நாகரிகப் பண்பாட்டை பாதுகாக்கும் வழியாகிறது.


நவீன பார்வை
         

இன்று நாட்டிய சாஸ்திரத்தின் இசை கூறுகள், நவீன மேடைகளில் சில மாற்றங்களுடன் புழக்கத்தில் உள்ளன. கலைஞர்கள் பலர் இசையில் சிருஷ்டியைச் செய்து நவீன இசைத்தொணிகளுடன் பாரம்பரிய நடனங்களை இணைக்கிறார்கள். இதுவே பாரம்பரியம் மற்றும் புதுமையின் சந்திப்பு ஆகிறது. மேலும் சினிமா, நாடகம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட நாட்டிய இசையின் கூறுகள் இடம்பெரும். இது மக்கள் மத்தியில் இசை மற்றும் நாட்டிய சாஸ்திரத்திற்கான ஆர்வத்தை வளர்க்கிறது.


உலகளாவிய தளத்தில் நாட்டிய இசையின் தாக்கம்
         

இன்றைய உலகளாவிய காலப்போக்கில் இந்திய நாட்டிய இசை உலக நாடுகளில் பரவியுள்ளது. அதற்கான அடிப்படை நாட்டிய சாஸ்திரத்தின் இசைக் கூறுகள் தான். ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் பாரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களுக்கு இசையின் பின்னணி விளக்கமும் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த வகையில் இந்தியாவின் இசைக் கலையின் விஞ்ஞானத்தன்மை மற்றும் கலாசாரத்தில் உரையாடும் திறன் உலகையே வியப்படைய வைக்கிறது. இது “சாஸ்திர” மற்றும் “அனுபவ” என்பவற்றின் இணைவைச் சுட்டிக்காட்டுகிறது.

முடிவுரை

          நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இசை இல்லாமல் நாட்டியம் என்பது முழுமை பெறமுடியாது. நாட்டிய சாஸ்திரத்தில் இசை என்பது ஒரு உயிர் சக்தியாகவே இருக்கிறது. இசை இல்லாத நாட்டியம் ஒரு உடல் அசைவின் கலையாக மட்டுமே இருக்கும். அதனால் தான் இசையின் மூலம் நாட்டியம் உயிர் பெறுகிறது. இசையின் ராகம், தாளம், லயம் ஆகியவை நாட்டியத்தின் உணர்வுகளை பிரதிபலிக்க உதவுகிறது. இதுவே மனங்களை உருக்கும் புனித அனுபவமாக மாறுகிறது. அதனாலேயே நாட்டியமும் சங்கீதமும் ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்துள்ளன. நாட்டிய சாஸ்திரம் இசைக்கலையின் அடிப்படையான விதிகளை பராமரித்து, பாரம்பரிய கலையை பாதுகாக்கும் ஒரு அறிவுசார்ந்த கலைநூலாக இன்றும் சிறப்புடன் திகழ்கின்றது. நாட்டியம் மற்றும்  சங்கீதத்தின் மூலம் பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவம் சமகாலத்தில் இன்னும் அதிகரிக்கிறது. இந்த புனித இணைவை நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும் நமக்கே உரியதாகும்.

அடிக்குறிப்புக்கள்

1.பரத முனிவர்., (2001) ,  நாட்டிய சாஸ்திரம், ப. 18-29

2.ராமா தேசிகன், ஸ்ரீ.,   பரதநாட்டிய சாஸ்திரம், ப. 75-89

3.Macleod, WilliamT., (1985), New Collin’s The saurus, oxford. P.115,179

4.பத்ம சுப்பிரமணியம், (2016), பரதக்கலை(கோட்பாடு),ப.21

5.சோமசுந்தரம், அ.நா பிரம்ம ஸ்ரீ, மிருதங்க சங்கீத சாஸ்திரம், ப. 144, 155

6.பத்ம சுப்பிரமணியம், (2016), பரதக்கலை(கோட்பாடு),ப.41

7.இராகுராமன், சே., (2006) தமிழர் நடனவரலாறு,ப.55

8.பத்ம சுப்பிரமணியம், பரதக்கலை(கோட்பாடு), ப. 111

உசாத்துணை நூல்கள்

1.பரத முனிவர்., (2001),  நாட்டிய சாஸ்திரம் , உலக தமிழாராய்சி நிறுவனம், சென்னை

2.ராமா தேசிகன், (2001),  ஸ்ரீ.,   பரதநாட்டிய சாஸ்திரம், ப. 77-79

3.பக்கிரிசாமி பாரதி, கே.ஏ., (2004), திருக்கோயில் நுண்கலைகள்

4.பத்ம சுப்பிரமணியம், (2016), பரதக்கலை(கோட்பாடு),வானதி பதிப்பகம்

5.இராகுராமன், சே., (2006) தமிழர் நடனவரலாறு, நந்தினி பதிப்பகம்

6.சோமசுந்தரம், அ.நா பிரம்ம ஸ்ரீ, மிருதங்க சங்கீத சாஸ்திரம்

7.Macleod, WilliamT., (1985), New Collin’s The saurus, oxford

8.More R.J, (1979), Tradition and Politices of South Asia, New Delhi

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

குமாரவேலு டனிஸ்ரன்,

மானிப்பாய், இலங்கை.

Kumaravelu Danistan,

Manipay, Srilanka.

The post நாட்டிய சாஸ்திரத்தில் இசைக்கலை|குமாரவேலு டனிஸ்ரன் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

Makizhilvitthu Makizhilnthiruppom|Dr.J.Jesi

 Abstract                    

The creature can live on the ground only if it is associated with each other.  Each of the creatures is looking for a situation and set up a habitat accordingly.  Not only lives, but all the fifties are dependent on. Water, land, air, air polluting is only because man is only looking for self -interest.  That is why the toxins are mixed in the resulting products. Our ancestors planted trees in the fields. When small birds sit in trees, they use small insects that are harmful to crops. The diet of the food chain is also excellent.


“மகிழ்வித்து மகிழ்ந்திருப்போம்”
 

      (நிலம்-பூமி, விசும்பு-ஆகாயம், வளி-காற்று, தீ-நெருப்பு, நீர்-தண்ணீர்) மண்ணை நிறைந்து வைத்திருக்கும் நிலமும், நிலத்தை ஏந்துகின்ற ஆகாயமும், ஆகாயத்தை வருடும் காற்றும், காற்றினால் மேலெழும் நெருப்பும், நெருப்பை அணைக்கும் நீர் என இயற்கையின் தன்மையை


மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்

விசும்பு வைதரு வளியும்

வளி தரைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல (புறம் 2,16)

அறிவியலோடு எடுத்தியம்பியுள்ள புறநானூற்றுப்பாடல் சிறப்பிற்குரியது.


தனித்து வாழ இயலாது
 

       ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே நிலத்தில் உயிரினம் வாழ முடியும்.  உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கேற்ற சூழ்நிலையை தேடி, அதற்கு தகுந்தாற்போல வாழ்விடத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றன.  உயிர்கள் மட்டுமல்லாது ஐம்பூதங்கள் அனைத்தும் சார்ந்து இயங்கக் கூடியதாகவே உள்ளன.


      இதில் மனிதன் மட்டும் சுய நலத்தை தேடியதால் தான் நீர், நிலம், ஆகாயம், காற்று மாசடைகின்றன.அதனாலேயே விளைப்பொருட்களிலும் நச்சு கலக்கின்றன.  விவசாயம் தமிழகத்தில் முதன்மை ஆதாரம். விவசாயம் செய்யும் பகுதிகளை வயக்காடு என்பர்.  ஏனெனில் வயலும், ஆங்காங்கே சிறு காடுகளும் இருக்கும்.  இப்பொழுது காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு வெறும் வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன.
         

          நம் முன்னோர்கள் வயல்வரப்புகளில் மரங்களை  நட்டு வைத்திருந்தனர். சிறு பறவைகள் மரங்களில் அமர வரும்போது பயிர்களுக்குத் தீமை விளைவிக்கும்  சிறு பூச்சிகளை தனக்கு உணவாக பயன்படுத்தி கொள்ளும்.  இதனால் பயிர்கள் சேதமின்றி, தானியங்கள் நல்ல விளைச்சல் கிடைத்தன.
 தற்போது மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் பறவைகள் தங்குவதற்கு ஆன சூழ்நிலை இல்லை.  இதனால் பயிர்களை சேதப்படுத்தும் புழுக்கள் மட்டுமின்றி, பல வகையான பூச்சிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்கின்றன.  இதற்கு தீர்வாக (செயற்கை) இரசாயன மருந்து தெளித்து வருகின்றனர்.   இதனால் மண்வளம் கேள்வி குறியாகின்றது.
          இன்றைய சூழல் மாசுபாட்டினால் நன்மை தரும் புழுக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக மண்புழு இனம் அழிந்து வருகின்றது.  மண்ணிற்குள் நண்டு, எலி, தேள், பூரான் ஆகியவை ஏற்படுத்தும் வளையின் வழியாக தண்ணீர் உள் இறங்கும்.  நுண்ணுயிர் பெருகும்.
         

       ஒரு கைப்பிடி மண்ணில் பல லட்சத்திற்கு மேல் நுண்ணுயிர்கள் இருக்கின்றன.  இந்த நுண்ணுயிர்கள் இருக்கும் மண்ணில்தான் மண்புழு இருக்கும். மண்புழு எப்போதும் மண் சுரங்கம் தோண்டி கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் மண் சுரங்கமும், மண்புழுக்களினால் மண்வளம் மேம்பட்டு சிறப்பாக  இருந்துள்ளன.  உணவுச் சங்கிலி முறையிலுள்ள உயிரினங்களின் உணவு முறையும் சிறந்தோங்கிய நிலையில் இருந்துள்ளன.

உணவு முறைகள்
         

       கோழியின் உணவு குப்பையிலுள்ள புழுக்கள். கொக்கு, வாத்துகளின் உணவு மீன்களும் மீன்முட்டைகளும்.  பயிர்கள், விலங்கு மற்றும் தாவரங்களின் மட்கிய   கழிவுகனை  உள்வாங்கி வளர்ந்தன.  மாட்டின் சாணியைக் கோழி கொத்தித் தின்றன, கோழி எச்சத்தை மண்புழு உண்பதற்கு முன்பாக நுண்ணுயிர்கள் பல உண்ணும்.
 மண்புழுவின் எச்சத்தைப் பயிர்கள் தின்னும்.  பயிர்களின் விளைச்சலை மனிதர்கள், விலங்குகள் உண்டு வாழ்வதை உணவு வளையம் அல்லது உணவு சங்கிலி என்று கூறுவர்.  இதில் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மனித இனம் வாழத் தடுமாறும் என நம்மாழ்வாரின் கூற்று சிந்தனைக்குரியது.


        பொதுவாக மண்ணில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் வேறொரு உயிர்களை சார்ந்தே வாழ்கின்றன.   ஓரறிவு புல்பூண்டு முதல் ஆறறிவு மனிதன் வரை  இயற்கையோடு இணைந்து சார்ந்து வாழும் வாழ்க்கையே சிறப்பானது.  எந்திரங்களை சார்ந்து எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதை மனித இனம் புரிந்து கொண்டால் மனித வாழ்வு சிறப்படைய முடியும்.


காட்டு விலங்குகளின் உணவு

       விலங்குகளின் வாழ்வின் முக்கிய ஆதாரமாக யானை இருந்துள்ளது.   யானையின் செயல்பாடுகளாக மரக்கிளையை ஒடித்தல் பற்றி சங்க இலக்கியங்களில் பரவலாக பாடல்கள் பாடப் பெற்றுள்ளது. காடுகளில் யானைகள் பெரிய படர்ந்த மரங்களின் கைக்கெட்டும் மரக்கிளைகளை ஒடித்துப் போடுவதும், முறித்துப்போடுவதும் உண்டு.  மூங்கில் காடுகளுக்குள் நுழைந்து மூங்கில் கிளைகளை யானைகள் முறித்து தான் உண்பதுமுண்டு.  ஆனால் இவ்வாறு செய்வது நமக்கு பாதிப்பாக இருந்தாலும் அதில் பல உயிரினங்களின் வாழ்வதாரம் அடங்கியுள்ளன.


    யானை இப்படி செய்யும்போது கீழே விழும் ஒடிந்த கிளையின் இலைதழைகளை உண்பதற்கு மான்கள், கரடி, காட்டுப்பன்றி, முயல், காட்டு எருது ஆகியன காத்திருப்பதையும் மற்ற உயிரினங்கள் உணவாக்கி கொள்வதையும் அறிய முடிகின்றது. மேலும் அடர்ந்திருந்த படர் இலைகளை யானைகள் முறிப்பதால் சூரிய ஒளி அடர்ந்த காட்டிற்குள் புகுந்து வளர்ச்சியை உண்டாக்கும.  மற்ற உயிர்களுக்கு இரையாக கிடைக்கின்றது. இந்நிகழ்வானது, தாவர உண்ணி அதிகரிக்கும்போது அவை ஊன்உண்ணிகளுக்கு போதுமான உணவாகின்றது.


      யானைகள் மரக்கிளைகளை முறித்து போட்டும் புதர்களை மிதித்துப் போட்டும் சில இடங்களைப் புல்வெளிகளாக மாற்றுகின்றன.  இதனால் பல உயிரினங்களுக்கு வாழிடமாக மாறுகின்றன. காடுகளில் இறந்துபோகும் உயிரினங்களின் சடலங்களை பிணந்தின்னி கழுகு, நரி, கழுதைப்புலி மற்றும் பூச்சிகள் நுண்ணுயிர்களுக்கு உணவாகும் மறுசுழற்சி ஏற்படுகின்றது.
          பொதுவாக பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் செயல்பாடுகளால் மற்றொரு உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில  நேரங்களில் பிற உயிரினத்தின் வாழ்வதாரம் ஆகின்றது.  சில நேரங்களில் பிற உயிரினத்தால் தீங்கு நிகழும்போது அவ்வுயிரினத்தையே அழிக்க எண்ணுவது தவறானது.  அவ்வாறு செய்வதன் விளைவாக பெரும் பாதிப்புக்குள்ளாவது மனித இனமேயாகும்.


காடு வளர்ப்பின் பயன்

🌴இயற்கையான நல்ல காற்றை சுவாசிக்க முடியும்


🌴பிராண சக்தி அதிகரிக்கச் செய்யும்


🌴நோய்கள் நீங்கும்


🌴நலமாய் வாழ வழிவகுக்கும்

🌴வெப்பநிலை குறையும்


🌴மழை பொழியும்


🌴நிலத்தடி நீர்மட்டம் உயரும்


🌴பல்லுயிர் வாழும் இடமாகி, விலங்கு பறவைகள் சரணாலயங்களாகும்.


        என்ற உயர்ந்த சிந்தனையோடு  காடுகள் வளர்ப்போம்.  காடுகளை வளர்த்து காற்றையும், மழையையும் உணவையும், தந்து மனிதர்களை வாழவைக்கும்  பிற உயிர்களையும் பாதுகாப்போம்.


பறவைகளின் முக்கியத்துவம்

     இயற்கைச்சூழலைப் பாதுகாப்பதிலும், வேளாண் தொழிலுக்கும் உற்றத்தோழனாக இருப்பதிலும் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.   பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.  இப்பூமியானது  உலகளாவிய பறவை இனங்களைக் கொண்டு, பல்லுயிர்த் தன்மையை காத்து வருகின்றது.  மனிதனின் வாழ்வின் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றி பறவை இனங்கள் வாழ்வது மிக முக்கியம்.
         

        பறவைகள் எளிதில் இடம் பெயரக் கூடியவை.  சதுப்புநிலங்கள், பெரும்பாலும் பறவைகள் வாழ்வதற்குரிய சூழலைத் தருகின்றன.  வானிலையை முன்கூட்டியே அறியும் ஆற்றலுடையது.  தாங்கள் செல்லும் வழியில் அபாயம் இல்லை எனத் தெரிந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளும்.  பகலில் சூரியன் திசையைக் கொண்டும், இரவில் நட்சத்திரங்களை அடையாளமாக கொண்டும், பூமியின் காந்த அலைகள், மற்றும் தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளை வைத்து பாதையை அமைத்துக் கொள்ளும் தன்மையுள்ளது.
         

     பறவைகள் இனப்பெருக்கமும், இடம் பெயர்தல் இல்லையெனில், பூமியில் தாவரங்கள் பொய்த்து போய்விடும்.  தாவரங்கள் நன்கு வளர்வதற்கு முதல் ஆதராமே பூச்சிகளும், பட்சி இனங்களுமே.


கற்பிக்கும் பறவையினங்கள்
         

      பல வண்ண பறவைகளைக் காண்பது கண்களுக்கு இனிமை. பறவைகளின் குரலொலி கேட்பது காதுகளுக்கு இன்னிசை. பறவைகளின் குரலோசையை நாம் எழுப்பினால் நமது குரல் வளம் இனிமையாகும்.
          பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், அவை தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.
         

      பறவைகளோ  விலங்குகளோ அல்லது புழு பூச்சிகளோ இல்லையென்றால் மனிதர்கள் சிறப்பாக பூமியில் வாழ்வதற்கு வழியில்லை.  வேம்பு, அத்தி, அரசமரம், ஆலமரம், புளிய மரம் போன்ற பல தலைமுறைகள் தாண்டி வளரும் மரங்கள் பறவைகளின் எச்சங்களால் தானாக வளர்கின்றன.
 உழவுத்தொழிலை மனிதன் பறவைகளின் வாயிலாக கற்றுக்கொண்டான்.  பறவைகள் வயல்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழ்வதன் மூலம் பயிர்களுக்கு தீமைகள் விளைவிப்பது குறைவே.  செடிகளுக்கு இடையே மகரந்தச் சேர்க்கைக்கு  உதவும். பறவைகளின் எச்சங்கள் உரமாகின்றன.  இறந்த விலங்குளை உண்பதால் சுற்றச்சூழலைத் தூய்மையாக்குகின்றன.


என் தனிமைக்கு துணையானாய்

உன் மெல்லிசையால் மகிழ்வித்தாய்

தானுண்ட மீதியால் பசியாற்றினாய்

இந்த கிளை முறிந்தாலென்ன

வேறொரு கிளை
         

       காலுண்டு கையிண்டு பிழைக்க வழியுண்டு என வழிகாட்டுவது பறவையினம்


பறவைகளுக்காகப் பயிரிடுதல்
         

      உயர்ந்த குணமுடைய பறவைக்கென சோளம், கம்பு, கேழ்வரகு என பலவகை தானியங்களை பறவைகள் உண்பதற்காகவே பயிரிடலாம்.  வானில் பறந்து செல்லும் பறவைகளே தோட்டத்திற்கு வந்து செல்.  உனக்கு பிடித்ததை உண்டு மகிழ், காலார உட்கார்ந்து கவிதை பாடிவிட்டு போ என்று கூறுவதைப் போலவும், உன் எச்சங்கள் என் பயிர்களுக்கு உரம். என் தலைமுறை வாழ நல்ல விதைகளை வித்திட்டு போ என்ற நோக்கில் பறவைகளுக்கென கொட்டாச்சியில் உணவு, தண்ணீர் என மரங்களிடையே சிறுசிறு  ஊஞ்சல் என ஏற்பாடு செய்து அதில் பறவைகள் வந்தமர்ந்து  பயன்பெறுவதைப் பார்க்கும்போது மனதிற்கு இன்பமும் உற்சாகம் கிடைக்கின்றது. இக்காட்சியானது பல மனநோய்களுக்கு மருந்தாகும்.
          பறவைகளுக்கும் பிற உயிர்களுக்கும் உணவிடுதால் மனித இனம் தழைத்தோங்கும்.  ஒவ்வொரு உயிரினங்களும் தன்னால் இயன்ற நன்மையை மனித இனத்திற்கு செய்து விட்டு செல்கின்றது.  இதனால் சூழல் மாறுபாட்டிற்கு தீர்வுகாண முடியும்.  வனங்கள் பெருகும் வாய்ப்பு உண்டாகின்றது.  நல்ல மழை பொழியும்.


விழிப்புணர்வுச் செய்திகள்

🌴இன்றைய வாழ்வில் சூழலோடு, பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பறவைகள் பாதுகாப்புக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


🌴மாசுக்கட்டுப்பாடு, நீர்சேமிப்பு, சுகாதாரம் பற்றி குழந்தைகளின் பாட நூல்களில் விழிப்புணர்வு செய்திகள் இடம்பெறுவது போன்று பறவைகள் பாதுகாப்பு பற்றிய  விழிப்புணர்வு செய்திகள் இடம் பெற வேண்டும்


🌴பறவைகள் அதிகம் நிறைந்து காணப்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு பறவைகளின் இயற்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வாழும் நிலை குறித்து விழிப்புணர்வு நிகழ்த்த வேண்டும்.


🌴வலசைக்காக வந்து செல்லும் பறவைகள் அதிகமுள்ள ப குதியைக் கண்டறிந்து, அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்க வேண்டும்.


🌴வேட்டையாடுதல், நீர் நிலைகளில் எண்ணெய் கழிவுகளை ஏற்படாதிருத்தல், விளைநிலங்களில் உயரக பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாதிருத்தல் வேண்டும்.


🌴உயர்கோபுர விளக்குகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் பறவைகளை அச்சுறுத்தாத வகையில் அமைக்கப்பெற வேண்டும்

🌴பனை, வேம்பு, ஆலமரம், அரசமரம், போன்ற மரங்களை  வளர்க்க வேண்டும். இம்மரங்களில் அமரும்போது எழும்பும் ஓலிகள் நம் மனதிலுள்ள கவலைகளை மறக்கச் செய்யும்.  பறவைக் கூட்டங்களைக் காணும்போது புத்துணர்வு பெறுவோம். 


🌴இம்மரங்களின் கனிகளை உண்ண வரும் பலவகை பறவைகளுக்கு தங்க இடமும் உணவும் கிடைக்கும்.


🌴தோட்டங்களில், வயல்வெளிகளில் வளரும் களைகளுக்கும், பூச்சிக்கொல்லிகளுக்கும் செயற்கை உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.


🌴பலவகையான கனிதரும் மரங்களை வளர்க்க வேண்டும். தானிய பயிர்களை வளர்க்கும் போது பறவைளுக்கும்  உணவாகும்.


🌴பறவைகள் கூடு கட்டி வாழும் தன்மைக்கேற்ப மனித சமூகம் தங்கள் வாழ்விடங்களை அமைக்க வேண்டும். நம்மால் இயன்றவரை தொந்தரவு கொடுக்காமல் அன்பு செய்யும் பழக்கத்தையும், தண்ணீர் உணவு கொடுக்கும் வழக்கமும் வேண்டும்.


🌴தன் அன்றாட பணிகளை செய்யும்போது, பறவைகளுக்குத் தொல்லை கொடுக்கும் செயல்களைத் தவிர்க்கலாம்.


🌴காடுகளை அழிப்பதைத் தவிர்க்கலாம்.    மனிதர்கள் படைக்கப்பட்ட நாளிலிருந்து, பல தலைமுறைகளைக் கடந்து  வாழ்வதுபோல, விலங்குகளும்,  பறவைகளும், தாவரங்களும் பல தலைமுறைகளைக் கடந்து  வாழ  படைக்கப்பட்டவை  என்பதை உணர வேண்டும்


🌴அமாவாசை நாளில் மட்டும் காக்கைக்கு உணவிடுவதைத் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் வீட்டினருகே வரும் பறவைகளுக்கு உணவிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.


🌴முந்தைய நாட்களில் வாசலின் முற்றத்தில் அரிசி மாவில் கோலம் போடும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.  அதனால் பல நுண்ணுயிர்கள் வாழும்.
பறவைகளைக் கூண்டுக்குள் வளர்ப்பதை தவிர்த்தல் நல்லது. வெட்டவெளியில் தனித்து இயங்கினால் சமூகத்திற்கு நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும்.


🌴வீட்டினருகே பெருமரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும், சிறு தானிய பயிர்களை வளர்த்தால் பறவைகளுக்கு உணவாகும்.


🌴வீட்டு மாடிகளில் சிறு வேர்களையுடைய சிறுதானிய பயிர்களை வளர்க்கலாம்.  பறவைகளுக்கென்று குடிநீர் வசதியை ஏற்படுத்தலாம்.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிகள்( பிளாஸ்டிக ஒழிப்பு)
         

🌴நமது வாழ்க்கை முறையை மாற்றிப்போட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
         

🌴பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதில் கண்ணாடிப் பொருட்களோ, எவர்சில்வர் பாத்திரங்களையோ பயன்படுத்த வேண்டும்.
 

🌴துணிக்கடை, உணவகங்கள், மளிகை கடை, மாமிச விற்பனை கடைகள், வீட்டு விசேஷங்கள் பழச்சாறு மற்றும் இனிப்பகங்கள், பூக்கடைகள், தேநீர்கடைகள் போன்ற நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடுகளைக் குறைத்து, பேப்பர் கவர், துணிப்பைகள், பேப்பர் கப், பேப்பர் தட்டுகள், சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.
         

🌴விளம்பர பேனர்களுக்கு மாற்றாக துணி, மரப்பலகை, தகரம் சுவர்கள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.


பள்ளிக்குழந்தைகள்
         

     பள்ளிக்குழந்தைகளுக்கு, பிளாஸ்டிக் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுக்காமல், பாதிப்புகளைக் கூறி சில்வர் பொருட்களில் உணவு, தண்ணீர் கொடுத்தனுப்ப வேண்டும்.
  விளையாட்டுப்பொருட்கள்  பனை, தென்னை,மரம், மண் ஆகியவற்றில் ஆன விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கலாம்.  மின்சாதன பொருட்களோடு அல்லது தனியாக விளையாடாமல் இயற்கையோடும், பலரோடுக் கூடி விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

கோவில்
         

    வழிபாட்டிற்கு செல்லும்போது வழிபாட்டிற்குரிய பொருட்களை துணிப்பையில் கொண்டு செல்லலாம்.  வாழை இலையிலோ, பேப்பர் கவரிலோ, பாத்திரங்களில் கொண்டு செல்ல வேண்டும்.


பயணங்கள்
         

      பேருந்து மற்றும் இரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்வோர் தங்களுக்குரிய உணவை எடுத்துச்செல்லவோ, அல்லது பெறவோ சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.  தனிநபர் தங்களுக்குரிய பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
         

சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் நம் பாவங்களில் ஒன்று

இயற்கையைப் பாதுகாப்பது புண்ணியங்களில் ஒன்று


     ஏனென்றால் நம் தலைமுகைளுக்கு பாதுகாப்பான வாழ்க்கைச்சூழலை உண்டாக்கி கொடுப்பது நம் கடமையென அனைவரும் உணர வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள்

🌴பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வெளியேறும் நச்சுப்புகையால் ஒவ்வாமை நோய்கள் மற்றும் காற்று மாசுபாட்டை தவிர்ப்போம்


🌴வாய்க்கால் போன்ற நீர் வழிகளை அடைப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயங்கள், நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.


🌴பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதித்து மரணிக்கின்றன.


🌴வேளாண் நிலங்கள் பாதிக்கின்றது


🌴கடலில் எறியப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களினால் கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் தடுக்கப்படுகின்றது.


🌴பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களினால் உடலுக்கு கேடு விளைவிக்கின்றது
         

🌴பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகக்கேடுகள், நோய்கள், நீர்நிலைகள் பாதிப்பு, காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு என நம்மைச் சார்ந்த உயிரினங்கள் (விலங்கு, பறவை, நுண்ணுயிரிகள்) அனைத்தும் பாதிக்கப் படுவதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.


மாற்று வழிகள்

🌴திரவப்பொருட்கள் வாங்க பாட்டில்களோ பாத்திரங்களோ பயன்படுத்தலாம்
எங்கு போனாலும், துணிப்பை எடுத்துச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.


🌴பிளாஸ்டிக் உறைகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்ப்போம்.


நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வழிகள்
         

       நன்னீரில் வாழக்கூடிய கொசு இனங்களைஅழிக்க இரசாயனம் கலந்த கொசு மருந்துகள் பயன்படுத்தும்போது, நீர் வாழ் பிற உயிர்கள் அழிந்துவிடுகின்றன. நன்னீரில் உள்ள சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை முறையில் கொசுக்கள் உற்பத்தியைக் குறைக்கலாம்

மீன் வளர்ப்பு
         

      மீன்களின் முட்டை உணவு கொசுக்களின் முட்டைகள். மீன்கள் மீன் முட்டைகளை உண்பதால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை. கொசுக்களை அழிக்க அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குளம், குட்டைகளில் கம்பூசியா அஃபினிஸ் மீன் வளர்க்கப்படுகின்றது.(கு.கணேஷ் 2017 அக்18 கொசுக்களுடன் ஒரு பனிப்போர் கட்டுரை தி இந்து இதழ்)


தவளை வளர்ப்பு

     
குளிக்கும் நீர் முழுவதும் மரஞ்செடிகளுக்கு பயன்படும்.  சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பதால் தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகின்றது.  துணி துவைக்க வேப்பங்கொட்டையால் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள், தவளைகள் வந்து அழுக்கை உண்ண வரும்.
  சீயக்காய், அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தலைக்குக் குளிக்கும் போது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.  பாத்திரங்கள் கழுவ சாம்பல்தூள், இலும்பைத்தூள் பயன்படுத்தும்போது சாக்கடையில் வாழும் தவளைகள் ஆயிரக்கணக்கில் உருவாகும். கொசுக்களை உண்டு வாழ்ந்தன.
           மனிதனை காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றின.  தவளைகள், கொசுக்களின் பெருக்கத்தினையும், கொசுமுட்டைகளையும், முட்டைப்புழுக்களையும், தலைப்பிரட்டைகளையும் உட்கொள்வதால் கொசுக்களின் பெருக்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தலாம்.


தட்டான்பூச்சி
         

       தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம்  கொசுக்களைத் தின்று விடும்.  இப்பொழுது தட்டான் இனமே அழிந்து விடும் சூழலில் உள்ளது. இது பறக்கும் நிலையியேயே தன் உணவை வீழ்த்தும் தன்மையுடையது.  பிற சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்வதால் கொன்றுண்ணி பூச்சி என்ற அழைக்கப்படுகின்றது.
   பொதுவாக மனிதன் பெருந்தொற்று நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ரசாயனங்கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றோம்.  இயற்கையை மீட்டெடுப்போமானால் மட்டுமே மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியும்.


முடிவாக
 

நல்ல இயற்கையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டுமெனில்
  

1.பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து பிணமாவதைத் தடுப்போம்.
         

2.நீர்நிலைகளைச் சேமித்து நிம்மதி அடைவோம்.
         

3.காடுகளை வளர்த்து மனக்காயங்களைப் போக்குவோம்.


4.இயற்கையை நேசித்து இன்பமாய் வாழ்வோம்.
         

5.பறவைகளைப் பராமரித்துப் பாராளுவோம்.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஜெ.ஜெஸி,

உதவிப்பேராசிரியர்,

எம் .ஏ. எம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்,

சிறுகனூர், திருச்சி.

 

The post Makizhilvitthu Makizhilnthiruppom|Dr.J.Jesi appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

❌