Normal view

Received before yesterday

கங்கைகொண்ட சோழபுரம்

 

நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான  கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.
இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றவன்.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். 250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

60 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.
முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றது.  சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில், இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரசுவதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.
கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 

 

Marxism in Indian Sculpture|Kumaravelu Danistan

Abstract
               

      Sculpture is an important art form that reflects the history of human society and the culture. In India, sculptures often have secular domination, but they reveal social class organizations and the lives of working people. At the Marxist Perspective, the Indian sculptures can see the classes, reflections of labor, and the release of the oppression. According to Marxist theory, art is an expression of society’s economic base. What kind of Indian sculptures do the Magician attributes? What is the place where they get in the community? Such questions are the problems of this study. Therefore, the purpose of this study is to examine the Indian sculptures from the Marxist angle and make clear the social classes, the role of working people and the dominance of the bureaucracy. The study is carried out based on analysis, description research, and historical research systems.


இந்திய சிற்பங்களில் மார்க்சியம்

முன்னுரை
         

     சிற்பக்கலையானது மனித சமூகத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான கலை வடிவமாகும். இந்தியாவில் சிற்பங்கள் பெரும்பாலும் மதச்சார் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தாலும் அவை சமூக வர்க்க அமைப்புகளையும், உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் வெளிப்படுத்துகின்றன. மார்க்சியக் கோணத்தில் (Marxist perspective) பார்க்கும் போது இந்தியச் சிற்பங்களில் வர்க்கப் பிரிவுகள், உழைப்பின் பிரதிபலிப்புக்கள், அடக்கு முறையிலிருந்து விடுதலை போன்ற அம்சங்களை காண முடிகின்றது. மார்க்சியக் கோட்பாட்டின்படி கலை என்பது சமூகத்தின் பொருளாதார அடிப்படையின் வெளிப்பாடாக விளங்குகிறது. இதன் வழி இந்திய சிற்பங்கள் எவ்வகையான  மாக்சிய கற்பிதங்களை முன்வைக்கின்றன? அவை சமூகத்தில்  பெறும் இடம் எத்தகையது? போன்ற  கேள்விகள் இவ்வாய்வின் பிரச்சினைகளாக உள்ளன. எனவே இந்திய சிற்பங்களை மார்க்சிய கோணத்தில் ஆய்வு செய்து சமூக வர்க்கப்பிரிவுகளையும், உழைக்கும் மக்களின் பங்கு,  அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை தெளிவாக புரியவைப்பது இவ்வாய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வானது பகுப்பாய்வு, விபரண ஆய்வு, வரலாற்று ஆய்வு முறையியல்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.


திறவுச் சொற்கள் : கலைகள், மார்க்சியம், சிற்பங்கள், சமூகம்,சமயம்

மார்க்சியம் மற்றும் கலைவடிவங்கள்

         கார்ல் மார்க்ஸ் (Karl Marx) மற்றும் ஃபிரெட்ரிக் எங்கல்ஸ் (Friedrich Engels) முன்வைத்த மார்க்சிய கோட்பாட்டின்படி சமூக வளர்ச்சி பொருளாதார அடிப்படையில் நிகழ்கிறது. கலை, சிற்பம் போன்றவை ஆட்சி வர்க்கத்தின்  ஆதிக்கத்தையும், உழைக்கும் வர்க்கத்தின் நிலைமையையும் பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் சிற்பக் கலையின் அடித்தளத்தைப் புரிந்துகொள்வதற்கு அதன் வரலாற்று வளர்ச்சியை அலச வேண்டியது அவசியம் ஆகும். இந்திய சிற்பங்கள் பெரும்பாலும் மதம், அரசியல், மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்துள்ளன. சிந்து நாகரியத்தின் மோஹெஞ்சோதாரோ மற்றும் ஹரப்பா கால சிற்பங்கள் சிவில் சமூகங்களில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள், தொழிற்சாலைகள், மற்றும் அன்றாட உபயோக பொருட்களை பிரதிபலிக்கின்றன. சிந்துவெளி நாகரிக சிற்பங்களில் அரசியல் அதிகாரத்தின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது.1 வர்த்தகர்கள், உழைப்பாளர்கள் மற்றும் சிற்றொழில் தொழிலாளர்களின் இருப்பு வலியுறுத்தப்படுகிறது. இந்த கால சிற்பங்கள் ஒரு சமத்துவ சமூகத்தைக் குறிக்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதிகாரம் மற்றும் சொத்துச் சுரண்டல் வந்துவிட்டன.


          மௌரியர் மற்றும் குப்தா கால சிற்பங்களில் அஸோக மையந்திகள், சாஞ்சி ஸ்தூபி போன்றவை மிகப்பெரிய அரசியல் மற்றும் மத ஆதிக்கத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. இவற்றில் அரசியல் அதிகாரம் மற்றும் மத ஆட்சியின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. ஆனால் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறிய சிற்பங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
   மத சிற்பங்களில் பிராமணிய ஆதிக்கத்தின் வெளிப்பாடு பாரம்பரியமாக காணப்படுகின்றது. 2 இந்தியாவின் முக்கிய மதங்களான  இந்து, புத்த, சமண ஆகியன சிற்பக் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மதங்களின் சிற்பங்களே பிற்கால இந்தியாவின் மார்க்சியவாத கருத்தியல்களை பிரதிபலித்து நின்றன.


1.வர்க்கத் தொடர்புகள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரதிபலிப்புக்கள்


     மார்க்சிஸ்ட் கோணத்தில் ஒவ்வொரு காலத்திலும் உழைக்கும் மக்களின் நிலை சிற்பங்களில் எவ்வாறு பிரதிபலிக்கப்படுகிறது என்பது இங்கு முக்கியமான ஆய்வுப் பொருளாக அமைகின்றது. பூமிபுத்திரா சிற்பங்களில் பெரும்பாலும் அரசர்கள், மதத்தலைவர்கள் காணப்படுகிறார்கள். 3 அத்தோடு  கிராமப்புற உழைப்பாளர்களின் திறமையை சில சிற்பங்கள் உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் பண்பலைக் கோவில் சிற்பங்களில் கலைஞர்களின் உழைப்பும், தொழிலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
கிராமிய மற்றும் சிறுபான்மை சமூகங்களின் சிற்பங்கள் என்ற கட்டமைப்பில் ஆராய்யும் போது பழங்குடியினர் மற்றும் பிற பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த மக்கள் தங்களது சிற்பங்களை இயற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளனர். 4 அவை அதிகார வர்க்கத்தின் சிற்பங்களை விட நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் மிளிர்கின்றன. மார்க்சிஸ்ட் பார்வையில் இவை ஒரு “சமூகவியல் வரலாற்று ஆவணமாக” கருதப்படும்.

சமூக வர்க்கப் பிரிவுகள் மற்றும் அதிகாரத்தின் பிரதிபலிப்புக்கள்

     இந்தியக் கலையின் பெரும்பாலான பகுதி அரசின் ஆதிக்கத்தையும், மத மரபுகளையும் காட்டி உருவானது. 5 இந்திய அரசியல் அமைப்புகளில் கட்சி, வர்க்கம், குடும்பம், மதம் ஆகியவை ஒன்றாக கூடி இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளன. இதனையடுத்து பெரும்பாலான சிற்பங்கள் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தைக் காட்டுகின்றன.


(a)கோயில் சிற்பங்கள் – ஆட்சியாளர்களின் கலாச்சார ஆயுதம்

     பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசு ஆகிய ஆட்சியாளர்களின்  இந்திய சிற்பங்கள் முக்கிய வரலாற்றுக் கட்டங்களை கொண்டுள்ளன. இந்தக் கோயில்களின் கட்டமைப்புகள் மற்றும் சிற்பங்கள் பெரும்பாலும் அரசியலின் மத ஆதிக்கத்தை பிரதிபலிக்கின்றன.


பல்லவர் சிற்பக்கலை

        பல்லவ கால சிற்பங்கள் பெரும்பாலும் கோயில்களை மையப்படுத்தி இருந்தன. பல்லவரின் மாமல்லபுரம் சிற்பங்கள், இரதக் கோயில்கள், அருச்சலேஸ்வரி கோயில்கள் மற்றும் “அர்ஜுனா பபிர்தி” போன்ற சிற்பங்கள் அரசியல் கருத்துக்களையும் மத ஆட்சியையும் பிரதிபலிக்கின்றன.


சோழர் சிற்பக்கலை

      சோழர் காலத்தில் அரசின் பெருமை மற்றும் தெய்வீக ஆட்சியையும் குறிக்கும் சிற்பங்கள் பல உருவாக்கப்பட்டன.  பெருநகரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கோயில் சிற்பங்கள் மதத் தலைவர்களும், அரசர்களும் ஒத்திசைவாக உருவாக்கிய சிற்பங்களை காட்டுகின்றன. சோழர்களின் அரச ஆட்சியை வெளிப்படுத்தும் விதமாக சிற்பங்களில் தெய்வங்களை பிரதிபலிப்பது மிக முக்கியமாக இருந்ததுள்ளது.


விஜயநகரப் பேரரசின் சிற்பங்கள்

       விஜயநகரப் பேரரசின் காலத்திலும் கோயில்களில் சிற்பங்கள் முக்கியமான பகுதியாக இருந்தன. ஹம்பி கோயில்கள் உள்ள விஸ்வரூபம் போன்ற சிற்பங்கள் அரசின் கலை ஆக்கங்களை மற்றும் அந்தக் காலத்தின் சமூக நிலைகளைக் காட்டுகின்றன. அரசின் ஆதிக்கம் மற்றும் தெய்வங்களின் வியாபகம் இங்கு பிரதிபலிக்கப்படுகின்றன.


(b) புத்த, சமண சிற்பங்களில் சமய சமத்துவத்தின் வெளிப்பாடுகள்

     புத்த மற்றும் சமண தத்துவங்கள் பரபரப்பான சமூக மாற்றங்களுக்கான அடிப்படை கொள்கைகளாக இருந்தன. இவை அரச ஆட்சியின் மாற்றத்தையும், சமத்துவத்தின் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன. 6

அஜந்தா மற்றும் எலோரா குகைச் சிற்பங்கள்

       இந்த சிற்பங்கள் பொதுவாக சமய சமத்துவத்தை பிரதிபலிக்கின்றன. இந்தக் குகைகளில் அரசர்கள் அல்லாத மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கப்படுகின்றன. இதில் மனிதர்கள் உழைக்கும் நிலைகளை மற்றும் கலாச்சார வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவான சிற்பங்கள் மக்களுக்கான ஒரு குறியீடாக விளங்குகின்றன.


சமண மற்றும் புத்தர் சிலைகள்

    புத்த மற்றும் சமண மதங்களில் சமூக சமத்துவம் முன்னிலை வகிக்கின்றது. சமண சிலைகளில் மிகுந்த மனதிலான இருதயத்தை (Ahimsa) பிரதிபலிக்கும் வகையில் சிற்ப வேலைப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமணர்களின் வாழ்வு மற்றும் அவற்றின் சமூக ஒழுங்கை பிரதிபலிக்கும் சிற்பங்கள் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.


(c) சிந்துவெளி நாகரிக சிற்பங்கள் – ஒரு சமத்துவ சமூகத்தின் நினைவுகள்

      மோகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரிகங்களின் சிற்பங்கள் பெரும்பாலும் அரசர்களின் ஆதிகத்தை குறிப்பிடவில்லை. ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றன. பஞ்ச் மார்க் சிலைகள் உழைக்கும் மக்களின் நெறிமுறைகளையும், மனிதர்களின் பரிமாற்றங்களையும் பிரதிபலிக்கின்றன. 7 இதில் பொதுமக்களின் வாழ்வை வெளிப்படுத்தும் வகையில் பல சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


2.இந்திய சிற்பங்களில் உழைக்கும் மக்களின் பங்களிப்பு மற்றும் மறைக்கப்பட்ட வரலாறுகள்

       இன்றுவரை இந்திய சிற்பங்கள் பெரும்பாலும் அரசர்கள் மற்றும் மத ஆட்சியாளர்களால் மதிக்கப்பட்டுள்ளன. ஆனால் உழைக்கும் மக்களின் பங்களிப்பை மறைத்து விடுகின்றன.


(a)கோயில் தொழிலாளர்களின் மறைக்கப்பட்ட கதைகள்
         

    சில கோயில்கள் மிகப்பெரிய பணியாற்றுதல்களையும், தொழிலாளர்களின் பங்களிப்பையும் மறைத்து நிற்கின்றன. பரபரப்பான கோயில்களை உருவாக்கிய தொழிலாளர்கள் முக்கியமான பங்காற்றினாலும் வரலாற்றில் அவர்களின் பெயர்கள் அதிகமாக குறிப்பிடப்படவில்லை. 8 இது வரலாற்றின் அதிகார மையங்களால் மக்களுக்கு உணர்த்தப்படாத உண்மைகள் ஆகின்றன.


3.உழைக்கும் மக்களின் சிற்பக் கலைகள்

உழைக்கும் மக்களின் வாழ்வு மற்றும் அவர்களின் மகத்துவத்தை விளக்கும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திரம், நாட்டுப்பற்று, வேளாண்மை மற்றும் கிராமிய வாழ்வு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக சிற்பங்களில் மக்கள் களைப்புடன் இணைந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


(a)அடக்குமுறைக்கும் எதிராக உருவான சிற்பங்கள் மற்றும் புரட்சியியல் சிந்தனைகள்

சிற்பங்கள் அடக்குமுறை மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக உருவான ஒரு புரட்சி முறையாகக் கூட விளங்குகின்றன. புரட்சியியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள், சமூகத்தில் உள்ள அந்தஸ்து மாற்றத்திற்கு ஒரு கருவி ஆக இருந்துள்ளன. குறிப்பாக பாண்டிய மன்னர்களின் சிற்பங்கள் தன்னம்பிக்கை,வீரம், இலட்சிய பயணம் போன்ற விடயங்களை பிரதிபலிக்கின்றன.


(b)இந்திய விடுதலைப் போராட்ட சிற்பங்கள்


   இந்திய விடுதலைப் போராட்டத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் பெரும்பாலும் மக்கள் போராட்டத்தை வெற்றியுறுத்தும் சின்னங்களாக இருந்து வருகின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய சின்னங்களாக விளங்கிய வ. உ. சிதம்பரம்பிள்ளை,  வீரமங்கையர் ராணி வேலுநாச்சியார் போன்றவர்களின் சிற்பங்களை மக்கள் உருவாக்கினர். 9 இவை அரசின் அதிரடிகளுக்கு எதிராக மக்களின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சிற்பங்களாக சிறப்பு பெறுகின்றன. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோரின் சிற்பங்கள் காலனித்துவத்தின் எதிர்ப்பு, மக்கள் விடுதலை மற்றும் பிரம்மாண்ட சமூகவியல் மாற்றங்களை காட்டும் வடிவங்களாக அமைந்துள்ளன.


4.சமகால அரசியலில் மார்க்சியக் கோட்பாடுகளின் தாக்கம்

       மார்க்சியக் கோட்பாடு இந்தியாவில்  சாதாரணமாக சமகாலத்தில்  விரிவடையவில்லை என்றாலும் அது சில பகுதிகளில் குறுகிய வரம்பில் வலுவடையப் பெற்றது. திரிபுரா, கொல்கத்தா போன்ற இடங்களில் மார்க்சிய சமூகத்தில் தத்துவங்களை வெளிப்படுத்தும் சிலைகள் மற்றும் சிற்பங்கள் காணப்படுகின்றன. 10 இவை சமூகப் புரட்சிக்கு வழிவகுத்துள்ள சிற்பங்கள் ஆகின்றன. குறிப்பாக பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் மற்றும் தலித் சிற்பங்கள் ஒரு வர்க்கமிகுதி சமூகத்திற்கான எதிர்ப்பாக உருவாகின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்புக்கள் கலை வடிவங்களாகவும் சில சிற்பங்களாகவும் உருவாகின்றன.


5.வர்த்தகமும் சிற்ப வளர்ச்சியும்

(a) சிற்ப தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்களின் நிலை

     வரலாற்று ரீதியாக சிற்பத் தொழிலாளர்கள் பின்தங்கிய சமூகமாகவே காணப்பட்டனர். அவர்கள் பணம் சம்பாதிக்க முடியாத நிலையில் அரசர்களின் அரண்மனைகளுக்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்பட்டனர். 11  மார்க்சிய கோணத்தில் இது ஒரு தொழிலாளர் வன்முறையின் சிறந்த எடுத்துக்காட்டாகக் காணலாம்.


(b) சமகால சிற்பக் கலையில் பொருளாதார மாற்றம்

     இன்று சிற்பக் கலை ஒரு வணிகரீதியாக மாறிவிட்டது. இது கலைஞர்களைச் சந்தையின் வசமாக மாற்றுகிறது. ஆனால் சில கலைஞர்கள் மக்கள் குரலாகவும், சமூக மாற்றத்திற்கான கருவியாகவும் செயல்படுகிறார்கள்.


நிறைவுரை

      இந்தியச் சிற்பங்களை மார்க்சிய கோணத்தில் பார்க்கும் போது வர்க்கப் போராட்டம், உழைக்கும் மக்களின் பங்கு, ஆட்சி வர்க்கத்தின் ஆதிக்கம் போன்றவை தெளிவாக வெளிப்படுகின்றன. பெரும்பாலான சிற்பங்கள் ஆட்சி வர்க்கத்தையும், மதநிலையையும் ஆதரிக்கும் விதமாக இருந்தாலும் சில சிற்பங்கள் சமூக நியாயத்தையும், மாற்றங்களையும் ஒட்டியுள்ளன. இன்று இந்த சிற்பக் கலையின் வாயிலாக வர்க்கச் சுரண்டலை வெளிப்படுத்தவும், சமூகவியல் மாற்றங்களை தூண்டவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய சிற்பங்கள் வெறும் அழகியல் மட்டுமல்ல ஒவ்வொரு காலத்திலும் சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கியக் கருவியாகவே திகழ்கின்றது.


அடிக்குறிப்புக்கள்

1.சேதுராமன்,கு., தமிழ்நாட்டு சமுதாயப் பண்பாட்டுக் கலை வரலாறு, பக் 234


2.வீரபாண்டியன், சிற்பி கோ. தமிழர் சிற்பக்கலை, பக் 91-99


3.ஏகாம்பரநாதன்,ஏ., தமிழகச் சிற்ப, ஓவியக் கலைகள், பக் 45


4.இராசமாணிக்கனார், மா., தமிழகக் கலைகள், பக் 29


5.Sethuraman,G., Facts of Indian Art and Culture,  p 78


6.அம்பை மணிவண்ணன், கோயில் ஆய்வும் நெறிமுறைகளும், பக்117


7.மேலது நூல், பக் 129


8.மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்,


9.வீரபாண்டியன், சிற்பி கோ. தமிழர் சிற்பக்கலை,  பக் 89


10.மேலது நூல், பக் 133


11.பசுபதி, ம.வே., செம்மொழித்தமிழ், பக். 81


உசாத்துணை நூல்கள்


1.மஜும்தார்,R.C., ராய் சசௌத்ரி, H. C., தத்தா,K., (1965), இந்தியாவின் சிறப்பு வரலாறு (முதற் பகுதி), தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை


2.இராசமாணிக்கனார், மா., (1980), தமிழகக் கலைகள், பாரிநிலையம் 184.பிராட்வே சென்னை 600001


3.வெங்கடேசன்,க., (2014), இந்திய வரலாறு (சிந்து முதல் பிளாசி வரை கி.மு. 3000 முதல் கி.பி. 1757 வரை), வி.சி.பப்ளிகேசன்ஸ், இராஜபாளையம்


4.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, (1989), இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், சென்னை புக்ஸ்


5.கந்தன், கி., (2017),  தமிழகச் சிற்பக் கலை வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு 427

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

குமாரவேலு டனிஸ்ரன்

மானிப்பாய், இலங்கை

 

The post Marxism in Indian Sculpture|Kumaravelu Danistan appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

ஜி.டி.நாயுடு பற்றி அறிஞர் அண்ணா பேச்சு

1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற ஜி.டி.நாயுடு 75ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

❌