Normal view

Received before yesterday

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

சமைக்கக் கற்ற குரங்குகள்

18 April 2025 at 07:48

ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று  பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.  ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது.  சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர்.  மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது.  பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும்.  அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ  முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.

19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின்  தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது.  மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில்,  அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை.  சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.

சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.

சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள்.  ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள்.  வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார்.  நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக,  மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது?  அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார்.  சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது,  எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.

இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.

சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள்.  சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது.  அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும்.  மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள்  தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம்.  அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள்.  சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின.  தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது,  பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம்  இதுதான் காரணம்.  தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம்.  நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.

உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க,  சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின்  அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது.  ஆயுள் அதிகரித்தது.  உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான்.  தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.

267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham

நன்றி – உயிர்மை மார்ச் 2025

சமைக்கக் கற்ற குரங்குகள்

18 April 2025 at 07:48

ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று  பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.  ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது.  சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர்.  மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது.  பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும்.  அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ  முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.

19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின்  தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது.  மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில்,  அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை.  சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.

சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.

சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள்.  ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள்.  வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார்.  நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக,  மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது?  அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார்.  சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது,  எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.

இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.

சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள்.  சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது.  அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும்.  மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள்  தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம்.  அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள்.  சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின.  தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது,  பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம்  இதுதான் காரணம்.  தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம்.  நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.

உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க,  சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின்  அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது.  ஆயுள் அதிகரித்தது.  உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான்.  தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.

267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham

நன்றி – உயிர்மை மார்ச் 2025

இதற்காகத் தான்

அப்பாவும், மகளும் நீண்ட பயணம் செய்து என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். வெயிலின் கடுமை அவள் முகத்தில் அத்தனை களைப்பைக் காட்டியது.  பளீரென்ற வெளிச்சத்திலிருந்து அறையின் செயற்கை வெளிச்சத்திற்கு வந்ததில் அவளுக்கு கண்கள் கூசின போலும். கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். ஓரிரு கணங்களில் கண்கள் பழையபடி மின்னின. தகப்பனின் முகத்தில் வேறு விதமான களைப்பு. எந்த வெயிலும், மழையும், புயலும், பயணமும் ஏற்படுத்த முடியாத, என்றும் தீராத களைப்பு. பெண்குழந்தையின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனதே என்ற வேதனை தந்த, வாழ்வில் இனி ஒருபோதும் உற்சாகத்தை வரவிடாத நிரந்தரக் களைப்பு.

நான் கருப்பு அங்கி அணிய ஆரம்பித்த அந்த ஆரம்ப காலங்களில் விதவிதமான வழக்குகள் எங்கள் சட்ட அலுவலகத்திற்கு வரும். நிலத்தை மட்டுமே நம்பி நாட்டின் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலமது. எல்லாமே நிலத்தைச் சுற்றி எழுந்த வழக்குகள். ஒரு துண்டு நிலத்தையும் பங்காளியிடம் ஏமாந்தவர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகச் சொத்து இருந்தும், கஷ்டப்படும் உடன்பிறந்த தங்கைக்கு அரை ஏக்கர் நிலம் தர மனதில்லாதவர்கள், காதலித்து மணம் செய்து கொண்டான் என்பதற்காக மகனுக்கு எதுவும் தரமாட்டேன், சொத்து முழுவதும் கோவிலுக்குத் தான் என்று பிடிவாதம் பிடிக்கும் கிழவர்கள்,  பத்தடி அகலமும், நூற்றிநாற்பது அடி நீளமும் உள்ள பூர்வீக வீட்டை  ஐந்தடி அகலம் என்றாலும் பரவாயில்லை, அகலவாட்டில் தான் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வீம்பு பிடிக்கும் தம்பிகள் என எல்லாம் நிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்த வழக்குகள். இன்று அவையெல்லாம் அரசியல்வாதிகள், வட்டச் செயலாளர் வண்டுமுருகன்கள், தாதாக்களின் கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றங்களுக்குப் போய்விட்டன. இன்று பெரிய படிப்புகள், பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள், வெளிநாட்டு வாசம் என்று சிறுவயதிலேயே என் ஆயுள் முழுவதும் நான் சம்பாதித்ததை சில ஆண்டுகளில் சம்பாதித்து விடும் இளைய தலைமுறையின் திருமணச் சிக்கல்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வருகின்றன. உறவினர்கள், பெரியவர்கள் எவ்வளவு பஞ்சாயத்து செய்தாலும், நீதிமன்ற உத்தரவு என்று ஒன்று வேண்டியதாக இருக்கிறதே ! இன்றைய நவீன உலகில் வக்கீல்களுக்கு வரக்கூடிய ஒரே வழக்கு திருமண முறிவு என்றாகிவிட்டது !

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இந்த இளைஞர் பட்டாளம் திருமணம் முடித்து வெளிநாடு செல்ல ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  தாலி கட்டிய கையோடு பதிவாளரை மண்டபத்திற்கே அழைத்து வந்து திருமணத்தைப் பதிவு செய்யும் சடங்கும் திருமணச் சடங்கில் ஒன்றாக நடந்த காலம்.  அப்போது, உறவினர், நண்பர்களின் குழந்தைகளின் திருமணங்களுக்கு பதிவாளரை அழைத்து வந்து, பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வது என் பொறுப்பாக இருந்தது. எங்கள் உறவு, நட்பு வட்டத் திருமணங்களை நடத்தி வைக்கும் நாராயண சாஸ்திரிகள், முகூர்த்த வேளை நெருங்கும் போது, “பெரியவர்கள் எல்லோரும் மேடையில் இருக்கிறார்களா? வக்கீல் இருக்கிறாரா? ரிஜிஸ்ட்ரார் இருக்கிறாரா?“ என்று கேட்பார். ஒரு திருமணத்தில், சாப்பாட்டு வேளையில் என்னிடம், “அண்ணா, நம் இருவர் தொழிலும் ஒன்று தான். கல்யாணம் செய்து வைத்து, சாப்பிட்டுவிட்டு, தட்சணை வாங்கிக் கொண்டு செல்கிறோம்,“ என்றார் கிண்டலாக. நான் பதில் கூறாமல் இருந்திருக்கலாம். இயல்பான எனது வக்கீல் குணம் தலைதூக்கியது. “அண்ணா,  உங்கள் மந்திரத்தால் சோ்த்து வைக்க மட்டுமே முடியும். ஆனால்,  என் சட்டத்தால் பிரித்து வைக்கவும் முடியும்.  ஆகவே, இரண்டு தொழிலும் ஒன்றல்ல,“ என்றேன் சிரித்துக் கொண்டே.   தொடர்ச்சியாக இன்று தெரிந்தவா்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் டைவர்ஸ் என்று நீதிமன்ற வாசலில் நிற்கும் போது, அதுதான் நினைவுக்கு வருகிறது.

அவள் தன் கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். அறையின் ஏஸி சற்று ஆறுதல் தந்தது போலும். களைப்பு சற்றே குறைந்தது போல் தெரிந்தது. நீங்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் பார்ப்பீகளல்லவா, அந்த அதே சாதாரண முகம். வெளியே செல்வதற்காக அணியும் ஓரளவிற்கு பளிச்சென்ற சுடிதார். விசேஷ நாட்களில் சடையும் பின்னிக் கொள்ள ஏதுவாக  சுமாராக  வெட்டிக் குறைக்கப்பட்டு, குதிரைவால் கொண்டை போட்ட தலைமுடி, நெற்றியில் என் வயதான கண்களுக்கு  மட்டும் என்றில்லாது, எத்தகைய கூரிய பார்வை கொண்டவர் கண்களுக்கும்  தெரியாக புள்ளி போன்ற ஸ்டிக்கர் பொட்டு. வளையல் இல்லா கையில் வாட்ச் மட்டும்.  மிக மிகச் சாதாரண தோற்றம் கொண்ட, எந்த அதீத அழகும் இல்லாத, எந்த அலட்டலும் இல்லாத இந்த சாதாரணப் பெண் மீது அவனுக்கு ஏன் அத்தனை சந்தேகம்?

பெரியவர் பொதுத் துறை வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வாக்கிங் போவது, பாஸ் புக் எண்ட்ரி போடுவது, கல்யாணச் செலவிற்கு போதுமா? போதுமா? என்று கணக்குப் போடுவது, மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பது, சீனியர் சிடிசனுக்கு எங்கே அரை சதவிகிதம் வட்டி அதிகமாகத் தருகிறான் என்று தேடுவது,  என்று திரிந்த ஒரு சாதாரணர். மாப்பிள்ளை  இதே போன்ற மற்றொரு சாதாரணரின் மகன். ஒன்றாவதிலிருந்து பொறியியல் முதுகலை வரை முதல் மதிப்பெண் பெற்றவன். பொதுத் துறை மின்பொறியியல் நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பதவி. இன்னும், இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைவராக அவன் உயர்வான். அரசுப்பள்ளியில்  தமிழ்வழியில் படித்து அந்த நிறுவனத்தின் தலைவனாக அவன் பதவியேற்பது பற்றிய செய்தியை நீங்கள் நிச்சயம் பார்க்கப் போகிறீர்கள். ஆனால் படிப்பு என்பது வேறு, அறிவு என்பது வேறு அல்லவா?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. சந்தேகம்.. சந்தேகம்… சந்தேகம்.. குவார்டஸில் எதிர்வீட்டுக்காரரின் அப்பா என்னம்மா, ரொம்ப அழகா கோலம் போடுகிறாயே ! என்று பாராட்டியதைச் சொன்ன மறுநாள் நமக்கு இந்த குவாட்டர்ஸ் வேண்டாம் என்று அப்பார்ட்மெண்டுக்கு வீடு மாற்றி விட்டான். அங்கு செக்யூரிட்டி இரண்டு முறை இவளைப் பார்த்து இவர்களுக்கு வந்த தபாலைத் தந்தது பெரிய தவறாகிவிட்டது. அவன் ஏன் என்னிடம் கொடுப்பதில்லை? என்று வீடு மாற்றல். குரியர் தபால், தண்ணீர் கேன் போடுதல்,  போன்ற பணிகள் எல்லாம் இன்னும் ஆண்களின் பணியாகவே இருப்பதால் ஓராண்டில் இன்னும் நான்கைந்து வீடுகள் மாற நேர்ந்ததாம். இளம் பெண்களின் பல பிரச்சனைகளுக்கு திருமணம் என்பதைத் தீர்வாகச் சொல்வது போல், திருமணமான இளம் பெண்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும் என்பது சர்வ ரோக நிவாரிணி சைபாலாக இருக்கிறது.  அவள் கர்ப்பமானாள்.

வளைகாப்பிற்கு சற்று முன்னதாக ஒரு நாள் நடந்த கூத்துதான் அவளைப் பிரிந்து விடலாம் என்று முடிவெடுக்க வைத்தது. ஒருநாள் அவன் வழக்கம் போல் அலுவலகம் போய் விட்டான். இவள் குளித்து விட்டு வருகிறாள்.  துண்டை மார்பில் கட்டியபடி, படுக்கையறைக்கு வந்து உடை மாற்றுகிறாள்.  ஏதோ ஒரு சங்கட உணர்வு. தன்னை யாரோ பார்ப்பது போல் ஒரு குறுகுறுப்பு. சீ. இதெல்லாம் மனப்பிரமை… என்று அந்த எண்ணத்தை ஒதுக்கினாலும், என்னமோ மனதில் இனம் புரியாத ஒரு திகில். வீட்டில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.  சுற்றிச் சுற்றி வருகிறாள். நீங்கள் நினைத்தது சரிதான். அவன் கட்டிலுக்குக் கீழே படுத்திருக்கிறான்.  இவள் கூச்சல் எதுவும் போடவில்லை. என்னப்பா இதெல்லாம் ? என்கிறாள். ஜஸ்ட் ஃபார் ஃபன். நா இல்லாதப்ப நீ வீட்ல என்ன செய்யறன்னு பாக்கணும்னு ஒரு ஆசை என்கிறான். அவள் கோபமின்றி, இன்னிக்கி லீவ் போட்டாச்சா? என்கிறாள். இல்லை.. பெர்மிஷன் என்கிறான். தான் அலுவலகம் கிளம்பியவுடன்   (கிளம்பியதாக பாவ்லா காட்டியவுடன்)  வேறு யாரும் வீட்டிற்கு  வரவில்லை என்ற நிம்மதி ஒருபுறம். இப்படி மாட்டிக் கொள்ளாமல், இன்னும் சற்று அதிக நேரம் ஒளிந்திருந்தால் யாரேனும் ஒரு கள்ளக் காதலன் வந்திருப்பானோ? என்ற சந்தேகம் ஒருபுறம். ஆனால், வீட்டில் இருந்து அவள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அலுவலகம் செல்கிறான்.

நகை, பணம், தன் கல்விச் சான்றிதழ்கள், உடைகள், ஆதார், வருமான வரிக்கான நிரந்தர கணக்கு அட்டை என்று அவசியமானவற்றை எடுத்துக் கொண்டு அன்று கிளம்பி அப்பா வீடு வந்தவள்தான். குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆகிவிட்டது. அவன் திருமண உரிமையை மீட்டெடுக்க வழக்குத் தொடர்ந்திருக்கிறான். சட்டப் போர் ஆரம்பித்துவிட்டது. புராணப்படங்களில் அக்னியாஸ்திரத்திற்கு வருணாஸ்திரம், நாகாஸ்திரத்திற்கு கருடாஸ்திரம் என்று விடுவார்களே, அது போல்அவன் வழக்கிற்கு பதில் தரும் விதமாக,  நாங்கள் விவாகரத்து வழக்கு போட்டிருக்கிறோம். நீதிபதி வயதில் மூத்த பெண்மணி. கௌன்சலிங் நடந்து முடிந்துவிட்டது. சேர்ந்திருப்பதாக முடிவு செய்து விட்டார்களானால், பரஸ்பரம் வழக்குகளைத் திரும்பப்பெற்று விடலாம். அது பற்றிப் பேசத்தான் அப்பாவும், மகளும் வந்திருக்கிறார்கள்.

சற்றே ஆசுவாசம் அடைந்து விட்டார்கள். “என்ன முடிவு செஞ்சீங்க? என்றேன். பெரியவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். நான் சைகையால் அவரைத் தடுத்து, “பாப்பா சொல்லட்டும்,“ என்றேன்.

“கௌன்சலிங்லயும் பேசினோம் சார். அப்பறம் ஃபோன்லயும் பேசினோம். சேந்து இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,“ என்றாள் அவள். அவள் குரலில் இருந்து அவள் மகிழ்ச்சியாகச் சொல்கிறாளா, இல்லை வேறேதும் நிர்ப்பந்தமா என்று என்னால் கணிக்க முடியவில்லை.

“நல்லா யோசிச்சுட்டயாப்பா? இதுதான் முடிவுன்னு கிளியரா சொல்லிட்டீங்கன்னா, நா அதர் சைட் வக்கீல்ட்டயும் பேசி,எல்லாத்தையும் முடிச்சுறலாம்,“ என்றேன்.

“நல்லா யோசிச்சுட்டேன் சார். ஒண்ணும் பிரச்சனையில்ல,“ என்றான் அவள். இந்தக் காலக் குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. டைவர்ஸ்தான் என்று ஒற்றைக் காலில் நின்றவள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? அவன் ஃபோனில் ஓவராக சீன் போட்டுவிட்டானோ?

“சரிம்மா, ” என்றேன் அவளிடம். பெரியவரிடம், “சார் ரெண்டு நாள்ல அதர் சைட்ல பேசி விபரம் சொல்றேன். வேற ஏதாவது கண்டிஷன் போடணும்னாலும்,  நாம  அந்த வக்கீல்கிட்ட பேசீறுவோம்,“ என்றேன்.

“நானே சொல்லணும்னு இருந்தேன் சார். இவ ஏழெட்டு மாசமா இங்கயே இருந்துட்டா. டெலிவரி வேற. இவளுக்கும், குழந்தைக்கும் மாத்தி மாத்தி ஆஸ்பத்திரி அது இதுன்னு ஏகப்பட்ட செலவு. இந்த ஏழெட்டு மாச செலவுக்கு ஒரு ஃபைவ் லாக்சோ, த்ரீ லாக்சோ தந்தாங்கன்னா நல்லா இருக்கும். அவங்க வக்கீல் கிட்ட கேட்டுப் பாருங்க,“ என்றார் அந்த அப்பாக்காரர்.

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். நான் ஏன் மீண்டும் அந்த நரகத்திற்குப் போகிறேன் என்பது புரிந்ததா? என்பது போல் பார்த்தாள் அவள்.

நன்றி – பேசும் புதியசக்தி -ஏப்ரல் 2025

இதற்காகத் தான்

அப்பாவும், மகளும் நீண்ட பயணம் செய்து என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். வெயிலின் கடுமை அவள் முகத்தில் அத்தனை களைப்பைக் காட்டியது.  பளீரென்ற வெளிச்சத்திலிருந்து அறையின் செயற்கை வெளிச்சத்திற்கு வந்ததில் அவளுக்கு கண்கள் கூசின போலும். கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். ஓரிரு கணங்களில் கண்கள் பழையபடி மின்னின. தகப்பனின் முகத்தில் வேறு விதமான களைப்பு. எந்த வெயிலும், மழையும், புயலும், பயணமும் ஏற்படுத்த முடியாத, என்றும் தீராத களைப்பு. பெண்குழந்தையின் வாழ்க்கை சரியாக அமையாமல் போனதே என்ற வேதனை தந்த, வாழ்வில் இனி ஒருபோதும் உற்சாகத்தை வரவிடாத நிரந்தரக் களைப்பு.

நான் கருப்பு அங்கி அணிய ஆரம்பித்த அந்த ஆரம்ப காலங்களில் விதவிதமான வழக்குகள் எங்கள் சட்ட அலுவலகத்திற்கு வரும். நிலத்தை மட்டுமே நம்பி நாட்டின் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலமது. எல்லாமே நிலத்தைச் சுற்றி எழுந்த வழக்குகள். ஒரு துண்டு நிலத்தையும் பங்காளியிடம் ஏமாந்தவர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீகச் சொத்து இருந்தும், கஷ்டப்படும் உடன்பிறந்த தங்கைக்கு அரை ஏக்கர் நிலம் தர மனதில்லாதவர்கள், காதலித்து மணம் செய்து கொண்டான் என்பதற்காக மகனுக்கு எதுவும் தரமாட்டேன், சொத்து முழுவதும் கோவிலுக்குத் தான் என்று பிடிவாதம் பிடிக்கும் கிழவர்கள்,  பத்தடி அகலமும், நூற்றிநாற்பது அடி நீளமும் உள்ள பூர்வீக வீட்டை  ஐந்தடி அகலம் என்றாலும் பரவாயில்லை, அகலவாட்டில் தான் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று வீம்பு பிடிக்கும் தம்பிகள் என எல்லாம் நிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்த வழக்குகள். இன்று அவையெல்லாம் அரசியல்வாதிகள், வட்டச் செயலாளர் வண்டுமுருகன்கள், தாதாக்களின் கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றங்களுக்குப் போய்விட்டன. இன்று பெரிய படிப்புகள், பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள், வெளிநாட்டு வாசம் என்று சிறுவயதிலேயே என் ஆயுள் முழுவதும் நான் சம்பாதித்ததை சில ஆண்டுகளில் சம்பாதித்து விடும் இளைய தலைமுறையின் திருமணச் சிக்கல்கள் மட்டுமே நீதிமன்றங்களுக்கு வருகின்றன. உறவினர்கள், பெரியவர்கள் எவ்வளவு பஞ்சாயத்து செய்தாலும், நீதிமன்ற உத்தரவு என்று ஒன்று வேண்டியதாக இருக்கிறதே ! இன்றைய நவீன உலகில் வக்கீல்களுக்கு வரக்கூடிய ஒரே வழக்கு திருமண முறிவு என்றாகிவிட்டது !

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இந்த இளைஞர் பட்டாளம் திருமணம் முடித்து வெளிநாடு செல்ல ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.  தாலி கட்டிய கையோடு பதிவாளரை மண்டபத்திற்கே அழைத்து வந்து திருமணத்தைப் பதிவு செய்யும் சடங்கும் திருமணச் சடங்கில் ஒன்றாக நடந்த காலம்.  அப்போது, உறவினர், நண்பர்களின் குழந்தைகளின் திருமணங்களுக்கு பதிவாளரை அழைத்து வந்து, பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வது என் பொறுப்பாக இருந்தது. எங்கள் உறவு, நட்பு வட்டத் திருமணங்களை நடத்தி வைக்கும் நாராயண சாஸ்திரிகள், முகூர்த்த வேளை நெருங்கும் போது, “பெரியவர்கள் எல்லோரும் மேடையில் இருக்கிறார்களா? வக்கீல் இருக்கிறாரா? ரிஜிஸ்ட்ரார் இருக்கிறாரா?“ என்று கேட்பார். ஒரு திருமணத்தில், சாப்பாட்டு வேளையில் என்னிடம், “அண்ணா, நம் இருவர் தொழிலும் ஒன்று தான். கல்யாணம் செய்து வைத்து, சாப்பிட்டுவிட்டு, தட்சணை வாங்கிக் கொண்டு செல்கிறோம்,“ என்றார் கிண்டலாக. நான் பதில் கூறாமல் இருந்திருக்கலாம். இயல்பான எனது வக்கீல் குணம் தலைதூக்கியது. “அண்ணா,  உங்கள் மந்திரத்தால் சோ்த்து வைக்க மட்டுமே முடியும். ஆனால்,  என் சட்டத்தால் பிரித்து வைக்கவும் முடியும்.  ஆகவே, இரண்டு தொழிலும் ஒன்றல்ல,“ என்றேன் சிரித்துக் கொண்டே.   தொடர்ச்சியாக இன்று தெரிந்தவா்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் டைவர்ஸ் என்று நீதிமன்ற வாசலில் நிற்கும் போது, அதுதான் நினைவுக்கு வருகிறது.

அவள் தன் கைப்பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். அறையின் ஏஸி சற்று ஆறுதல் தந்தது போலும். களைப்பு சற்றே குறைந்தது போல் தெரிந்தது. நீங்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் பார்ப்பீகளல்லவா, அந்த அதே சாதாரண முகம். வெளியே செல்வதற்காக அணியும் ஓரளவிற்கு பளிச்சென்ற சுடிதார். விசேஷ நாட்களில் சடையும் பின்னிக் கொள்ள ஏதுவாக  சுமாராக  வெட்டிக் குறைக்கப்பட்டு, குதிரைவால் கொண்டை போட்ட தலைமுடி, நெற்றியில் என் வயதான கண்களுக்கு  மட்டும் என்றில்லாது, எத்தகைய கூரிய பார்வை கொண்டவர் கண்களுக்கும்  தெரியாக புள்ளி போன்ற ஸ்டிக்கர் பொட்டு. வளையல் இல்லா கையில் வாட்ச் மட்டும்.  மிக மிகச் சாதாரண தோற்றம் கொண்ட, எந்த அதீத அழகும் இல்லாத, எந்த அலட்டலும் இல்லாத இந்த சாதாரணப் பெண் மீது அவனுக்கு ஏன் அத்தனை சந்தேகம்?

பெரியவர் பொதுத் துறை வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வாக்கிங் போவது, பாஸ் புக் எண்ட்ரி போடுவது, கல்யாணச் செலவிற்கு போதுமா? போதுமா? என்று கணக்குப் போடுவது, மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பது, சீனியர் சிடிசனுக்கு எங்கே அரை சதவிகிதம் வட்டி அதிகமாகத் தருகிறான் என்று தேடுவது,  என்று திரிந்த ஒரு சாதாரணர். மாப்பிள்ளை  இதே போன்ற மற்றொரு சாதாரணரின் மகன். ஒன்றாவதிலிருந்து பொறியியல் முதுகலை வரை முதல் மதிப்பெண் பெற்றவன். பொதுத் துறை மின்பொறியியல் நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பதவி. இன்னும், இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைவராக அவன் உயர்வான். அரசுப்பள்ளியில்  தமிழ்வழியில் படித்து அந்த நிறுவனத்தின் தலைவனாக அவன் பதவியேற்பது பற்றிய செய்தியை நீங்கள் நிச்சயம் பார்க்கப் போகிறீர்கள். ஆனால் படிப்பு என்பது வேறு, அறிவு என்பது வேறு அல்லவா?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. சந்தேகம்.. சந்தேகம்… சந்தேகம்.. குவார்டஸில் எதிர்வீட்டுக்காரரின் அப்பா என்னம்மா, ரொம்ப அழகா கோலம் போடுகிறாயே ! என்று பாராட்டியதைச் சொன்ன மறுநாள் நமக்கு இந்த குவாட்டர்ஸ் வேண்டாம் என்று அப்பார்ட்மெண்டுக்கு வீடு மாற்றி விட்டான். அங்கு செக்யூரிட்டி இரண்டு முறை இவளைப் பார்த்து இவர்களுக்கு வந்த தபாலைத் தந்தது பெரிய தவறாகிவிட்டது. அவன் ஏன் என்னிடம் கொடுப்பதில்லை? என்று வீடு மாற்றல். குரியர் தபால், தண்ணீர் கேன் போடுதல்,  போன்ற பணிகள் எல்லாம் இன்னும் ஆண்களின் பணியாகவே இருப்பதால் ஓராண்டில் இன்னும் நான்கைந்து வீடுகள் மாற நேர்ந்ததாம். இளம் பெண்களின் பல பிரச்சனைகளுக்கு திருமணம் என்பதைத் தீர்வாகச் சொல்வது போல், திருமணமான இளம் பெண்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாயிடும் என்பது சர்வ ரோக நிவாரிணி சைபாலாக இருக்கிறது.  அவள் கர்ப்பமானாள்.

வளைகாப்பிற்கு சற்று முன்னதாக ஒரு நாள் நடந்த கூத்துதான் அவளைப் பிரிந்து விடலாம் என்று முடிவெடுக்க வைத்தது. ஒருநாள் அவன் வழக்கம் போல் அலுவலகம் போய் விட்டான். இவள் குளித்து விட்டு வருகிறாள்.  துண்டை மார்பில் கட்டியபடி, படுக்கையறைக்கு வந்து உடை மாற்றுகிறாள்.  ஏதோ ஒரு சங்கட உணர்வு. தன்னை யாரோ பார்ப்பது போல் ஒரு குறுகுறுப்பு. சீ. இதெல்லாம் மனப்பிரமை… என்று அந்த எண்ணத்தை ஒதுக்கினாலும், என்னமோ மனதில் இனம் புரியாத ஒரு திகில். வீட்டில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்.  சுற்றிச் சுற்றி வருகிறாள். நீங்கள் நினைத்தது சரிதான். அவன் கட்டிலுக்குக் கீழே படுத்திருக்கிறான்.  இவள் கூச்சல் எதுவும் போடவில்லை. என்னப்பா இதெல்லாம் ? என்கிறாள். ஜஸ்ட் ஃபார் ஃபன். நா இல்லாதப்ப நீ வீட்ல என்ன செய்யறன்னு பாக்கணும்னு ஒரு ஆசை என்கிறான். அவள் கோபமின்றி, இன்னிக்கி லீவ் போட்டாச்சா? என்கிறாள். இல்லை.. பெர்மிஷன் என்கிறான். தான் அலுவலகம் கிளம்பியவுடன்   (கிளம்பியதாக பாவ்லா காட்டியவுடன்)  வேறு யாரும் வீட்டிற்கு  வரவில்லை என்ற நிம்மதி ஒருபுறம். இப்படி மாட்டிக் கொள்ளாமல், இன்னும் சற்று அதிக நேரம் ஒளிந்திருந்தால் யாரேனும் ஒரு கள்ளக் காதலன் வந்திருப்பானோ? என்ற சந்தேகம் ஒருபுறம். ஆனால், வீட்டில் இருந்து அவள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அலுவலகம் செல்கிறான்.

நகை, பணம், தன் கல்விச் சான்றிதழ்கள், உடைகள், ஆதார், வருமான வரிக்கான நிரந்தர கணக்கு அட்டை என்று அவசியமானவற்றை எடுத்துக் கொண்டு அன்று கிளம்பி அப்பா வீடு வந்தவள்தான். குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆகிவிட்டது. அவன் திருமண உரிமையை மீட்டெடுக்க வழக்குத் தொடர்ந்திருக்கிறான். சட்டப் போர் ஆரம்பித்துவிட்டது. புராணப்படங்களில் அக்னியாஸ்திரத்திற்கு வருணாஸ்திரம், நாகாஸ்திரத்திற்கு கருடாஸ்திரம் என்று விடுவார்களே, அது போல்அவன் வழக்கிற்கு பதில் தரும் விதமாக,  நாங்கள் விவாகரத்து வழக்கு போட்டிருக்கிறோம். நீதிபதி வயதில் மூத்த பெண்மணி. கௌன்சலிங் நடந்து முடிந்துவிட்டது. சேர்ந்திருப்பதாக முடிவு செய்து விட்டார்களானால், பரஸ்பரம் வழக்குகளைத் திரும்பப்பெற்று விடலாம். அது பற்றிப் பேசத்தான் அப்பாவும், மகளும் வந்திருக்கிறார்கள்.

சற்றே ஆசுவாசம் அடைந்து விட்டார்கள். “என்ன முடிவு செஞ்சீங்க? என்றேன். பெரியவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். நான் சைகையால் அவரைத் தடுத்து, “பாப்பா சொல்லட்டும்,“ என்றேன்.

“கௌன்சலிங்லயும் பேசினோம் சார். அப்பறம் ஃபோன்லயும் பேசினோம். சேந்து இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்,“ என்றாள் அவள். அவள் குரலில் இருந்து அவள் மகிழ்ச்சியாகச் சொல்கிறாளா, இல்லை வேறேதும் நிர்ப்பந்தமா என்று என்னால் கணிக்க முடியவில்லை.

“நல்லா யோசிச்சுட்டயாப்பா? இதுதான் முடிவுன்னு கிளியரா சொல்லிட்டீங்கன்னா, நா அதர் சைட் வக்கீல்ட்டயும் பேசி,எல்லாத்தையும் முடிச்சுறலாம்,“ என்றேன்.

“நல்லா யோசிச்சுட்டேன் சார். ஒண்ணும் பிரச்சனையில்ல,“ என்றான் அவள். இந்தக் காலக் குழந்தைகளின் மனதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. டைவர்ஸ்தான் என்று ஒற்றைக் காலில் நின்றவள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? அவன் ஃபோனில் ஓவராக சீன் போட்டுவிட்டானோ?

“சரிம்மா, ” என்றேன் அவளிடம். பெரியவரிடம், “சார் ரெண்டு நாள்ல அதர் சைட்ல பேசி விபரம் சொல்றேன். வேற ஏதாவது கண்டிஷன் போடணும்னாலும்,  நாம  அந்த வக்கீல்கிட்ட பேசீறுவோம்,“ என்றேன்.

“நானே சொல்லணும்னு இருந்தேன் சார். இவ ஏழெட்டு மாசமா இங்கயே இருந்துட்டா. டெலிவரி வேற. இவளுக்கும், குழந்தைக்கும் மாத்தி மாத்தி ஆஸ்பத்திரி அது இதுன்னு ஏகப்பட்ட செலவு. இந்த ஏழெட்டு மாச செலவுக்கு ஒரு ஃபைவ் லாக்சோ, த்ரீ லாக்சோ தந்தாங்கன்னா நல்லா இருக்கும். அவங்க வக்கீல் கிட்ட கேட்டுப் பாருங்க,“ என்றார் அந்த அப்பாக்காரர்.

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். நான் ஏன் மீண்டும் அந்த நரகத்திற்குப் போகிறேன் என்பது புரிந்ததா? என்பது போல் பார்த்தாள் அவள்.

நன்றி – பேசும் புதியசக்தி -ஏப்ரல் 2025

வானில் 146 நாட்கள்

18 March 2025 at 06:31

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் தருணத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் இது தொடர்பாக நான் உயிர்மையில் எழுதிய கட்டுரை…..

அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று வசனம் பேசி உலகைச் சுற்றுவதற்கு பதிலாக அம்மா, அப்பாவைச் சுற்றி வந்த கதையை அறிந்தவனான எனக்கு விண்வெளியில் தங்கி146 நாட்களுக்கு  உலகை தினமும்  16 முறை சுற்றி வந்தவரான  கிரிஸ் ஹாட்ஃபீல்டின் அனுபவங்களைப் படித்த போது மனித சக்தியின், முயற்சியின், அறிவியலின், கற்பனைக்கு அப்பாற்பட்ட   வளர்ச்சியை அறிந்து வியப்பும், பெருமையுமாக இருந்தது. An Astronauts Guide To Life On Earth  என்ற Chris Harfieldன் அனுபவங்கள் உலகில் 244 சாதனையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தவை.

விண்வெளி வீரர் என்பவர் ஏதோ சாகசக்காரர் அல்ல. வீரதீரச் செயல் செய்வதற்காகப் பிறந்தவர் அல்ல. இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிலிருந்து ஏராளமான தேர்வுகளின் மூலம் சல்லடை போட்டு சலித்துச் சலித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோடிக்கணக்கான டாலர் செலவில், மிக மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு. அந்த பயிற்சியின் பலனாக கடுமையான சூழல்களில், மிக நுட்பமான, கடினமான ஆய்வுகளை அறிவியலின் பல்வேறு துறைகளிலும் செய்து, தரவுகளை, முடிவுகளை அறிவியல் உலகிற்கு அளிக்கக் கூடிய ஒரு அரசு ஊழியர்.  அரசு ஊழியர் என்பதை மிக அழுத்தமாகவே சொல்ல வேண்டும். சொகுசுப் பேர்வழிகள், ஓசிச் சம்பளம் என்ற பல்வேறு அவதூறுகளை ஒட்டு மொத்தமாகச் சுமக்க நேரிடும் ஊழியர்களின் கடின உழைப்பை, அறிவை, விடாமுயற்சியை விண்வெளியிலிருந்து உலகிற்குப் பறைசாற்றும் ஒரு அரசு ஊழியர்.

விண்வெளி வீரராக உருவாக முதலில் ஒருவர் போர் விமானியாக, ஒலியின் வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செல்லும் போர் விமானத்தை இயக்குபவராக இருக்க வேண்டும். அசாத்திய உடல் வலிமை இருக்க வேண்டும்.  போர் விமானம் ஓட்டும் விமானி கிட்டத்தட்ட ஒரு அறிவியல் முனைவர் அளவிற்கு, ஆய்வாளர் அளவிற்கு அறிவியல் படித்தவராக இருக்க வேண்டும்.             ஹார்ஃபீல்ட் விமான அமைப்பியல் பற்றி உயர்கல்வி கற்றவர்.  32 வகை போர் விமானங்களை ஓட்ட அறிந்தவர்.   இப்படிப்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஆய கலைகள் அறுபத்தி நான்கும் கற்றுத் தரப்படும். எங்கள் அலுவலகத்தில் தீப்பிடித்து விட்டால், தீ.. தீ.. என்று கத்தியபடி, வெளியே ஓட வேண்டும் என்று ஆங்காங்கே பெரிய பெரிய போஸ்டர் ஒட்டி வைத்திருப்பார்கள். விண்கலத்தில் தீப்பிடித்தால் வெளியே எங்கே ஓட முடியும்? ஒரு தீயணைப்பு வீரருக்குத் தரப்படும் அத்தனை பயிற்சியும் தருவார்கள். பல்வலி, நெஞ்சுவலி, கை, கால் எலும்பு முறிவு என்றால் விண்வெளியில் ஏது மருத்துவர்? ஒரு மருத்துவருக்கான அத்தனை பயிற்சியும் தருவார்கள். மாக்கட்டு போட, பல் பிடுங்க கற்றுத் தருவார்கள்.  நம் அலுவலகங்களில் கணினியில் சின்ன கோளாறு என்றாலும். ஒரு முறை அணைத்து விட்டுப் போடுவோம். அப்படியும் வரவில்லை என்றால்,  ஒர்க் பண்ணல்ல என்று அடுத்தவரை உதவிக்கு அழைப்போம். இரண்டு பேர், மூன்று  பேர் மட்டுமே போகும் விண்வெளிப் பயணத்தில் கம்ப்யூட்டர் ரிப்போ், எலக்ட்ரிகல் வேலை, பிளம்பிங் எல்லாம் சொந்தமாகத்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பயிற்சி. எல்லாவற்றிற்கும் ஹோம் ஒர்க். பள்ளி, கல்லூரியில் படித்து வந்த ஹாட்ஃபீல்டின் மூன்று குழந்தைகளும். “என்ன அப்பா, எங்கள விட உங்களுக்கு            ஹோம் ஒர்க் ஜாஸதியா இருக்கு?“ என்று கேலி செய்வார்கள்.  கணினி அறிவியல். நிலவியல், ரோபோடிக்ஸ்,  ஆர்பிட்டல் மெக்கானிக்ஸ், வானிலையியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று பாடங்கள் ஒரு புறம் நடக்க, மறுபுறம் மிக விலை உயர்ந்த , துல்லியமான கேமரா மூலம் படம் எடுக்கக் கற்றுத் தர உலகக் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் வேறு பாடம் நடத்துவார்களாம். விண்வெளியில் யானை, குதிரை எல்லாம் கிடையாது என்பதால் யானையேற்றம், குதிரையேற்றம் மட்டும் சிலபஸில் கிடையாது. மற்றபடி, உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் கற்றுத் தந்து அனுப்புவார்கள்.  என் போன்றோர் மதுரையிலிருந்து சென்னை செல்லவே அத்தனை முன்னேற்பாடுடன் செல்லும் போது, 62 மில்லியன் மைல் பயணம் என்றால் சும்மாவா?

புவியீர்ப்பை மீறிச் செல்ல வேண்டும் என்பதால் முதல்நாளிலிருந்தே சாப்பாடு கட். போதாதற்கு எனிமா வேறு கொடுத்து விடுவார்கள்.  பேம்பர்ஸ் மாட்டிவிடுவார்கள். உடலில் சத்தே இல்லாமல், 62 மில்லியன் மைல் பயணத்தில் கண் முன் இருக்கும் ஆயிரக்கணக்கான கருவிகளை கவனமாகக் கண்காணித்தபடி பயணிக்க வேண்டும். சிறு தவறு என்றாலும் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.  ஓரிரு வினாடிகள் தாமதம் என்றாலும். லட்சக்கணக்கான மைல் தூரம் பாதை விலகிவிடும். போக வேண்டிய இடத்திற்கு பதிலாக நெப்ட்யூனில் போய் இறங்க வேண்டியதுதான் ! எனவே அசாத்திய உடல் பலத்திற்குத் தயாராக வேண்டும். அசாத்திய மூளை பலத்திற்கும்.  கிடைக்கும் நேரம் எல்லாம் பயிற்சி, பயிற்சி, பயிற்சி. இத்தனை பயிற்சிகளின் காரணமாக விண்வெளிப் பயணத்தில் பிரச்சனைகளே வராமல் போய்விடாது என்கிறார் ஹாட்ஃபீல்ட்.  வரும் பிரச்சனைகளைக் கண்டு, பதட்டப்படாது, உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து, சட்டென்று  செய்வதற்கான தயார் நிலையை இந்த பயிற்சிகள் அளிக்கும், அவ்வளவுதான் என்கிறார் அவர்.

புவியீர்ப்பு இல்லாத இடத்தில் நாம் அன்றாடம் மிக எளிதாகச் செய்யும் வேலைகளும் கடினமானவைகளாக இருக்குமாம்.  ஒரு போல்ட்டை குரங்கு ஸ்பானர் வைத்து கழற்றுவது பனித்தரையில், பனிச்சறுக்கு காலணிகள் அணிந்து, எலக்ட்ரீசியன் போட்டுக் கொள்ளும் பெரிய கையுறை அணிந்து கொண்டு, டிராக்டர் ஒன்றுக்கு டயர் மாற்றுவது எவ்வளவு கடினமோ, அந்த அளவிற்குக் கடினமாக இருக்குமாம். மற்றொரு புறம், ஒரு ஆளுயர பிரிட்ஜை, சுண்டுவிரலால் எளிதாக நகர்த்தி விடவும் முடியும். எந்த வேலை கடினம், எது எளிது என்பதைப் புரிந்து கொள்வதே பெரிய பிரச்சனை.

ஹாட்ஃபீல்டும், அவரது சகாக்கள் இருவரும் 146 நாட்கள் வான்வெளியில் International Space Station  எனப்படும் வான்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கூடத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்து திரும்பியிருக்கிறார்கள். கோடிக்கணக்கான மில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற சில நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அறிவியல் அற்புதம் அது. எந்த நாடு எவ்வளவு முதலீடு செய்துள்ளதோ. அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் அந்த நாட்டின் விண்வெளி வீரர்கள் அங்கு சென்று தங்கி ஆராய்ச்சி செய்து திரும்புவார்கள். ஹாட்ஃபீல்ட் கனடா நாட்டுக்காரர். அவர்களது நாட்டின் முதலீடு குறைவு. எனவே கனடா நாட்டினர் அதிகம் அங்கு போக முடியாது.  அது கிட்டத்தட்ட ஒரு கால்பந்த மைதானத்தின் அளவு இருக்கும். ஐந்து பிஹெச் கே வீடு போன்றது.  சுவர் முழுக்க வெல்க்ரோ வைத்திருப்பார்கள். மிதந்து செல்லும் பொருட்கள் அதில் ஒட்டிக் கொள்ளும். பல் தேய்த்தால் வாய் கொப்பளிக்கக் கூடாது. நாம் துப்புவது மிதந்து சென்று சக வி.வீரர் முகத்தில் போய் அப்பும். என் பேரன் போல் அப்படியே முழுங்கி விட வேண்டியதுதான். மூச்சா, ஆய் போவதற்கெல்லாம் தனி வகுப்பு நடத்தி சொல்லித் தந்திருப்பார்கள்.  அது எப்படி என்பதை பக்க அளவு கருதி நான் விவரிக்கவில்லை. மூல நூலில் படித்துக் கொள்ளுங்கள் ! அந்த விண்வெளி வீட்டில் எப்போதுமே  மெத்து மெத்து என்று மிதந்து கொண்டே தான் இருப்போம் என்பதால் படுக்க மெத்தை, தலையணை தேவையில்லையாம்.  படுத்தால் ஏதோ வெண்பஞ்சு மேகத்தில் படுத்திருப்பது போல் இருக்குமாம்.  புரண்டு புரண்டு படுத்து, ஒரு வசதியான பொசிஷனை தேர்வு செய்ய வேண்டிய வேலை கிடையாது.  புவியீர்ப்பு இல்லாததால் நடப்பதே சிரமம். எனவே அங்கு நடப்பதற்கு தெம்பு வேண்டும் என்பதற்காக, எலும்பு, தசைகளை வலுவாக்க, தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். பூமிக்கு வந்த பிறகு பல நாட்களுக்கு இரண்டு காலில் சாதாரணமாக எழுந்து நின்றாலே கால் வலி பின்னி எடுத்துவிடுமாம்.  பூமிக்கத் திரும்பி  வந்த பிறகு,  எழுந்து நின்று நடக்கவே பல நாட்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

இத்தனை சிரமப்பட்டு விண்வெளி சென்று அங்கு செய்த ஆய்வுகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார் ஹாட்ஃபீல்ட்.  அவை எல்லாம் தேர்ந்த அறிவியலாளர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய உயர் அறிவியல் என்பதால், இங்கு அவை பற்றி விவரிக்கவில்லை. வாசக சுவாரஸ்யம் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே பகிர்ந்துள்ளேன்.

சமீபத்தில், சந்திரயான் அறிவியலாளர்கள் திருப்பதி கோவில் சென்று வழிபடுவது பற்றியெல்லாம் பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன. அறிவியல் உலகில் இது போன்ற நம்பிக்கைகளுக்கு குறைவே இல்லை.  இதை கவனிக்காமல் விட்டுவிட்டதால், பிரச்சனை வந்துவிட்டது, பல ஆண்டுகள் பல பில்லியன் டாலர் செலவு செய்து உழைத்தது வீணாகி விட்டது என்று ஆகிவிடக் கூடாது என்ற அறிவியல், ஆன்மீகம், நம்பிக்கை என்று எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் செய்து விடுபவர்களாகத் தான் அவர்கள் இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு இன்று வரை விண்வெளி வீரர்கள் ரஷ்யாவிலிருந்து தான் ராக்கெட்டில் கிளம்புகிறார்கள். அது தான் பக்கம் போலும் ! கிளம்பும் போது கவனிக்க வேண்டிய அறிவியல் அம்சங்களோடு  இது போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயங்களையும் விட்டுவிடாது இன்றளவும் கடைப்பிடிக்கிறாா்கள்.   கிளம்புவதற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விண்வெளி வீரர்களை தனிமைப்படுத்தி அறையில் அடைத்துவிடுவார்கள். ராக்கெட் ஏறும் சமயம்தான் வெளியே வரவேண்டும். வரும்போது, அந்த அறையின் கதவில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒரு சடங்கு.  அந்த தங்கும் இடத்திலிருந்து ஹாட்ஃபீல்டும், மற்ற இருவரும் ஒரு வேனில் ஏறி, ராக்கெட் லாஞ்ச் மையத்திற்குச் செல்கிறார்கள். பதினைந்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு டிரைவர் வண்டியை ஓரம் கட்டி நிறுத்துகிறார்.  எல்லோரும் இறங்கி வேனின் பின்பக்க வலது டயரில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறார். ஹார்பீஃல்ட் எதற்கு? என்கிறார். யூரி காகாரின் முதன்முறையாக விண்வெளி சென்ற போது, வேனில் கிளம்பிய பதினைந்தாவது நிமிடத்தில், இப்படி வண்டியை நிறுத்தி, பின்பக்க வலது டயர் மேல் மூச்சா அடித்தார். நல்லபடியாக திரும்பி வந்தார். அதிலிருந்து இந்த சம்பிரதாயம் தொடர்கிறது என்கிறார் டிரைவர் பணிவாக. பெண் விண்வெளி வீராங்கனைகள் என்ன செய்வார்கள்? என்று ஹாட்ஃபீல்ட் கேட்க,  “வரும்போது பாட்டில்ல பிடிச்சுட்டு வரச் சொல்லிடுவோம். இங்க வண்டிய நிப்பாட்டி, டயர்ல ஊத்திடுவோம்.“ என்கிறார் டிரைவர் சீரியஸாக.  சோவியத் யூனியன் என்ன, ஸ்ரீஹரிகோட்டா என்ன, எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்ற கவலை ஆதார மனித குணம் தானே !

ஹாட்ஃபீல்ட் இது மாதிரி மூன்று முறை விண்வெளி சென்று தங்கியிருக்கிறார்.  அதிகபட்சமாக 146 நாட்கள்  தங்கல். அந்த முறைமட்டும் அவர் பூமியை 2336 முறை வலம் வந்திருக்கிறார். விண்வெளி பற்றி ஏராளமான தரவுகளைத் திரட்டித் தந்திருக்கிறார். அவற்றிற்கெல்லாம் உடனடிப் பயன் என்ன என்று எனது சிற்றறிவிற்குத் தெரியவில்லை. ஆனால் அறிவே ஆயுதம் என்ற பொதுவான புரிதலில் ஹாட்ஃபீல்டின்  கிடைத்தற்கரிய அனுபவம் பற்றிய இந்த புத்தகம் எனக்கு மிகப் புதிய வெளிச்சத்தைத் தந்தது.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்குவதை ஒன்பது வயதுச் சிறுவனாக கறுப்பு வெள்ளை டிவியில் கலங்கலாகப் பார்த்து, நாமும் விண்வெளி வீரராக ஆகவேண்டும் என்று நினைத்ததாக அவர் குறிப்பிடுகிறார். இந்த புத்தகம் எழுதும் போது படிப்பவர்களக்கு தன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரவேண்டும் என்பதற்காக இப்படி அள்ளி விட்டதாகத் தெரியவில்லை. மெய்யாகவே நினைத்திருக்கிறார். அதற்காகப் பாடுபட்டிருக்கிறார்.  15வது வயதில் கிளைடர் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். 16வது வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி. பின்னர் கனடா விமானப் படையில் பணி. எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் அப்பா, அம்மாவுடன் வயக்காட்டு வேலை பார்த்தவர். ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி முன்னேறியவர்.  விண்வெளியிலிருந்து இந்த பூமியை 146 நாட்களுக்கு தினமும் பார்த்தது,  மிகப் பெரிய அறிவாளிகளான , பலசாலிகளான சக வீரர்கள் இருவரோடு ஒத்துழைத்து, அநத 146 நாட்களும் ஒவ்வொரு நாளிலும் ஏற்பட்ட சோதனைகளைச் சமாளித்து, எடுத்த காரியத்தை நல்லபடியாக முடித்து, பூமிக்குத் திரும்பியது அவரை ஒரு புது மனிதனாக எவ்விதம் மாற்றியது என்பதையும் புத்தகம் முழுக்கச் சொல்லிச் செல்கிறார்.   இந்த உலக வாழ்க்கைக்கான ஒரு விண்வெளி வீரனின்  கையேடு என்றுதான் தனது அனுபவங்களுக்குத் தலைப்பிட்டிருக்கிறார்.

பார்க்கப் போனால், இந்தத் தொடரில் நான் குறிப்பிட்ட  ஒவ்வொரு புத்தகமுமே இந்த உலக வாழ்க்கைக்கான ஒரு கையேடு என்றுதான் தோன்றுகிறது !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – AN ASTRONAUTS GUIDE TO LIFE ON EARTH BY CHRIS HADFIELD

யானைகளோடு பேசுபவன் ச.சுப்பாராவ் உயிர்மை பதிப்பகம் பக்கம் 165 விலை ரூ220

இராட்சதர்களின் வீழ்ச்சி

6 February 2025 at 06:41

            அயல்மொழி அலமாரி தொடரில் இரா.நடராசன் ஒரு முறை குறிப்பிட்டதிலிருந்து கென் ஃபாலெட்டின் (Ken Follett –  இவரை சிலர் கென் ஃபாலே என்றும் கூறுகிறார்கள்) ஃபால் ஆஃப் ஜெயண்ட்ஸ் (Fall of giants)  நாவலைத் தேடிக்கொண்டே இருந்தேன்.  சமீபத்தில்தான் கிடைத்தது.  20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை மூன்று பாகங்களாக எழுதத் திட்டமிட்டு ஃபாலெட் எழுதிய முதல் பாகம் இது. (இரண்டாவது பாகமும் இப்போது வந்துவிட்டது)  1913லிருந்து 1925 வரையில், அதாவது முதல் உலகப் போர் துவங்கும் சூழலிலிருந்து, அது முடிந்த பிறகான பின்விளைவுகள் ஏற்படுத்திய தாக்கம் வரை விறுவிறுப்பாகச் சொல்லும் 985 பக்க நாவல்.  லண்டனில் ஒரு பிரபுக் குடும்பம், வெல்ஷ் பகுதியின் ஒரு சுரங்கத் தொழிலாளியின் குடும்பம், ரஷ்யாவில் ஒரு எளிய தொழிலாளியின் குடும்பம், அமெரிக்காவில் ஒரு செனட்டரின் குடும்பம், ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா குடியேறிய ஒரு தாதாவின் குடும்பம், ஜெர்மனியின் ஒரு உயர்குடிக் குடும்பம் என ஆறு குடும்பங்களின் வாயிலாக உலகின் சரித்திர மாற்றங்களை விவரிக்கும் நாவல்.  ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களும் உலகப்போரின் போது ராணுவ சேவையில் ஈடுபட, குடும்பங்களின் கதை உலகநாடுகளின் கதையாக, உலகப்போரின் கதையாக உருமாறுகிறது.  103 கற்பனைப் பாத்திரங்களும், 23 உண்மைப் பாத்திரங்களும் உலவும் நாவல்.  லெனினும், டிராட்ஸ்கியும், உட்ரோ வில்சனும், சர்ச்சிலும், லாயிட் ஜார்ஜ்ஜும், ஜெர்மனியின் கெய்சரும் எடுக்கும் முடிவுகள் சாமான்ய மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கூறுகிறது இக்கதை.  நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான கர்சன் பிரபுகூட ஓரிரு இடங்களில் வந்து போகிறார்.  முதல் உலகப்போரின்போது அவர்தான் பிரபுக்கள்சபையின் சபாநாயகர்.

            வரலாற்றுப் புனைவு எழுதுவது கடினம்.  அதுவும் சமீபகால நிகழ்வுகளை வைத்து எழுதுவது மிகமிகக் கடினம்.  நம் இந்தியா போல் ஆவணங்கள் சரிவர இல்லாத நாடாக இருந்தாலும் ஏதாவது கற்பனையாக எழுதி ஒப்பேற்றலாம்.  ஆனால், சர்ச்சில் போன்ற, லெனின் போன்ற உலகத் தலைவர்களின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஆவணங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு வரியையும் கடுமையான ஆய்வுக்குப் பின்னரே எழுதமுடியும்.  ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சர்ச்சில் யாரைச் சந்தித்தார், என்ன பேசினார் என்பதற்கு ஆவணம் உள்ளது.  அந்த ஆவணத்தை வைத்துக்கொண்டு, அந்தப் பேச்சிற்கு தொடர்புடையது போல கதையில் ஒரு காட்சியை உருவாக்கவேண்டும். அதில் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நடமாட விடவேண்டும்.  சர்ச்சில் அந்த சந்தர்ப்பத்தில் பேசியவற்றிற்கு ஏற்றாற்போல் கற்பனைப் பாத்திரங்களைப் பேசவைக்க வேண்டும்.  இந்தப் பேச்சுக்கள் கதையை அடுத்த காட்சிக்கு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லவேண்டும்.  எத்தனை கடினமான படைப்புச் சவால் !! கென் ஃபாலெட் இதில் பெரிய வெற்றி பெற்றுள்ளார்.  நாவலை எழுதி முடித்ததும், கதைக்களமான நாடுகளின் எட்டு மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களிடம் பிரதியைக் கொடுத்து, வரலாற்றுத் தகவல்ரீதியாக தவறுகள் எதுவும் இல்லை என்று உறுதிசெய்துகொண்ட பின்னரே, அச்சுக்கு அனுப்பியதாக ஃபாலெட் ஒரு பேட்டியில் கூறுகிறார்.

        தலைவர்களின் பார்வையில் எழுதப்பட்டிருந்தால், இது ஒரு வறண்ட வரலாற்று நூலாக மாறியிருக்கும்.  சாமானிய மக்களின் கதையாக இது வளர்வதால், பிரமிப்பூட்டும் மக்கள் வரலாறாக மாறுகிறது.  பதிமூன்று வயதுச் சிறுவன் முதன்முதலாய் சுரங்கவேலைக்கு பூமிக்கு அடியில் நுழைவதில் துவங்கும்  நாவல், சுரங்கம், தொழிலாளர், அவர்கள் ஊர், வாழ்க்கைமுறை என்று முழுமையாய் அதைச் சுற்றிச்சுற்றி வருகிறது.  சின்னச்சின்ன விஷயங்களுக்கான அவர்களது போராட்டம், சோவியத் யூனியன் எழுச்சி அவர்களுக்கு ஏற்படுத்தும் நம்பிக்கை எல்லாம் நாம் இதுவரை எங்கும் படிக்காத விஷயங்கள்.  மறுபுறம் சோவியத் யூனியனின் கதை.  1905 எழுச்சியில் கொல்லப்பட்ட ஒரு போராளித் தாயின் இரு குழந்தைகள் ஜார் அரசின் ரயில்வே தொழிற்சாலையில் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இருவரில் ஒருவன் அமெரிக்கா சென்று அங்குள்ள ரஷ்ய தாதாவின் மாப்பிள்ளையாகிறான்.  மற்றவன் சிறிதுசிறிதாக உணர்வு பெற்று, லெனினின் நம்பிக்கைக்குரிய உதவியாளனாகிறான்.  ரஷ்யாவின் மாற்றம் இங்கிலாந்திலும் வந்துவிடுமோ என்று சர்ச்சில் போன்றோர் கலவரமடைகிறார்கள். இங்க்கிலாந்தில் சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் காரணமான ஆடைத் தயாரிப்புத் தோழிலில் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரம்.  அவள் வழியே பெண் வாக்குரிமைக்கான போராட்டம், அது எப்படி வெற்றி பெற்றது என்பது நாவலில் மிக இயல்பாக வருகிறது.  ஜெர்மனியின் ஆதிக்கவெறியும், அதன் தோல்வியும், தோற்ற அதன் செல்வங்களை ஏகாதிபத்திய நாடுகள் பேராசையோடு பங்குபோட்டுக் கொள்வதும், ஜெர்மன் மக்கள் போருக்கு முன்னும், பின்னும் எப்போதும்போல் கஷ்டப்படுவதும் கதையோடு ஒட்டி வருகின்றன.

        நாவலின் மிகப்பெரும் பலம் அது சாமானிய மக்களின் மனவோட்டத்தை துல்லியமாக, நேர்மையாகப் பதிவு செய்வதுதான்.  இங்கிலாந்தின் ஒரு பிரபுக் குலத்தில் பிறந்து, ஜெர்மனியின் ஒரு உயர்குடிப் பிரபுவை மணந்து, போரின் சீரழிவில்  இரவுவிடுதி ஒன்றில் (மாமனார், மாமியாருக்குத் தெரியாமல்) பியானோ வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் ஒரு சீமாட்டியும், இங்கிலாந்தின் சுரங்கங்களில் சொல்லமுடியாத அளவு துன்பத்தில் வேலை பார்த்து, உலகப் போரின்போது ராணுவத்தில் சேர்ந்து, ஜெர்மன் குண்டுகளுக்கு அஞ்சிப் பதுங்குகுழியில் ஒண்டிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை சுரங்கத் தொழிலாளியும் இங்கிலாந்து நாட்டவர் உலகையே ஆள கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்ற நினைப்போடு வாழும் முரணை மிக இயல்பாக, சரியாகக் காட்டும் இந்த நாவல் முடியும் இடம் மிக அழகானது.

        நாவலின் ஒரு முக்கியக் கதாபாத்திரம் ஒரு பிரபு வீட்டுப் பணிப்பெண்.  பிரபு எதிரில் வந்தால், அவள் சுவரை ஒட்டிக் கொண்டு,  தலைதாழ்த்தி நிலம் பார்த்து நிற்கவேண்டும்.  அவர் பேசினால்தான் பதில் கூறவேண்டும்.  இப்பெண் பெண்வாக்குரிமைப் போராட்டத்தில் சேர்கிறாள்.  பத்திரிகையில் பணியாற்றுகிறாள்.  தொழிலாளர்கட்சியின் முக்கியமான நிர்வாகியாகிறாள்.  பெண்கள் வாக்குரிமை பெறும்போது, தொழிலாளர்கட்சியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.  பாராளுமன்றத்தில் பிரபுக்கள்சபை உறுப்பினரான முன்னாள் எஜமானரை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பத்தில், தலை நிமிர்த்தி, அவருக்கு ஹலோ சொல்கிறாள்.  இவள் செல்வதற்கு  வழிவிட்டு சுவரோரமாக நிற்கிறார் அந்தப் பிரபு.  நம் செம்மலர் கதைகளில் வருவது போன்ற இந்த அற்புதமான காட்சியோடு முடிகிறது இந்த நாவல்.

        தி ஐ ஆஃப் தி நீடில் (the eye of the needle) துவங்கி,  புகழ்பெற்ற ஏராளமான நாவல்கள் எழுதியவர் கென் ஃபாலெட்.  அவரது பல நாவல்கள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளன.  பெருமளவு பணமும், புகழும் சேர்த்தபின், இலக்கிய உலகில் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என்ற பேரவாவினால் அவர் இந்த மூன்று நாவல் தொடரினை எழுதத் திட்டமிட்டார் என்று கருதலாம்.   பணத்திற்கும், புகழுக்கும் மீறிய ஒரு ஆசை படைப்பாளனின் மனதில் வரும்போதுதான் இப்படிப்பட்ட படைப்புகள் உருவாகின்றன. அப்போது  ஒரு ஏகாதிபத்திய எழுத்தாளன் தன்னையறியாமல் மக்கள் எழுத்தாளனாகிறான்.  நம் தமிழ்கூறு நல்லுலகின் எழுத்தாளர்களும் இதுபோன்ற ஆசைகளை மனதில் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

பின்னி​ணைப்பு

ஆசிரியரின் பிற நூல்கள்

​கென் ஃபா​லெட் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்.  புத்தகப் பதிப்பாளராக இருந்தவர்.  பிரிட்டிஷ் ​தொழிலாளர் கட்சியின் தீவிர உறுப்பினர்.  ம​னைவி பார்பரா ​தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மூன்று மு​றை இருந்தவர்.  கார்டன் பிரவுன் மந்திரிச​பையில் கலாச்சாரத் து​றை அ​மைச்சராக இருந்தவர்.

அவரது மற்ற நாவல்க​ளைப் பற்றிப் ​பேச​வே முடியாதபடி சமீபத்திய ​சென்சுரி ட்​ரைலாஜி நாவல்கள் அ​மைந்துவிட்டன.  இரண்டாவது பாகமான winter of the world ஸ்பானிய உள்நாட்டுப் ​போர், இரண்டாம் உலகப் ​போ​ரை விவரித்தது.  மூன்றாவது பாகமான edge of eternity இந்த ​செப்டம்பர் மாதம் தான் ​வெளியானது. சமீபகாலத்தில் இப்படி​யொரு அற்புதமான நாவல் வர​வேயில்​லை என்று ​சொல்லலாம்.  பனிப் ​போர் காலத்தில் ஆரம்பித்து ஒபாமா பதவி​யேற்​போடு முடிகிறது. ​பெர்லின் சுவர் கட்டப்படுவது, கியுபா ஏவுக​ணைப் பிரச்​னை, வியட்நாம் ​போர், வாட்டர்​​கேட் விவகாரம், ​சாலிடாரிடி இயக்கம், ​சோவியத் யூனியன் சிதறியது, ​பெர்லின் சுவர் இடிப்பு என்று 1960களுக்குப் பின்தான் எத்த​னை எத்த​னை நிகழ்வுகள். இத்த​னையயும் ​தொட்டுத் ​தொட்டுச் ​சென்றாலும், இந்த பாகத்தின் அடிநாதமாக இருப்பது கறுப்பின மக்களின் எழுச்சி, அவர்களுக்கு ஆட்சியாளர்கள் சிறிது சிறிதாக​வேனும் நன்​மை ​செய்​தே ஆக​வேண்டிய கட்டாயம்தான்.  மார்டின் லூதர் கிங் ஜூனியரின் எனக்​கொரு கனவு இருக்கிறது என்ற ​உ​ரை நாவலில் வரும் இடத்தில் நம் கண்ணில் கண்ணீர் வரும்.  அ​மைதியாகப் ​போராடிய அந்த மக்கள் சந்தித்த அடக்குமு​​றைகள் அத்த​னை ​கொடு​மை. ​போலீஸ் நாய்க​ளை விட்டு ​போராட்டக் காரர்க​ளைக் கடிக்க விடும் ​கொடு​மை​யெல்லாம் நடக்கும்.  க​டைசியில் ஒபாமா பதவி​யேற்பின் ​போது அந்தப் ​போராளிகள் வடிக்கும் ஆனந்தக் கண்ணீ​ரோடு நம் கண்ணீரும் கலக்கும்.

மற்​றொரு முக்கியமான விஷயம் 1960களுக்குப் பிறகான அ​மெரிக்க அதிபர்க​ளைப் பற்றிய ஃபா​லெட்டின் வார்த்​தைகள். ​கென்னடியிலிருந்து புஷ் வ​ரை பல​ரையும் திருடன், ​பொய்யன், ​கொ​லைகாரன் என்று பல இடங்களில் ​நேரடியாக​வே திட்டுவார். நம் ஊராக இருந்தால் ​கொடும்பாவி எரிப்பது, அவர் படத்​தை ​செருப்பு, விளக்குமாறு ​வைத்து அடிப்பது, த​டை ​செய்ய வழக்கு என்று ஒரு ​பெரிய ​கோஷ்டி கிளம்பியிருக்கும். 

ஒரு புறம் அரசியல் வரலாற்று நாவல்க​ளை எழுதிய அவர் மறுபுறம் 11, 12ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சர்ச் கட்டுவ​தை ​வைத்து அரு​மையாக இரு நாவல்கள் எழுதியிருக்கிறார்.  Pillars of the earth, world without end என்ற அந்த இரு நாவல்களில் சர்ச் கட்டுவ​தைப் பின்னணியாக ​வைத்து அன்​றைய இங்கிலாந்தின் நிலப்பிரபுத்துவ சமூகம் எளிய மக்க​ளை எப்படி​யெல்லாம் ​கொடு​மைப்படுத்தியது என்ப​தை இங்கிலாந்தின் வரலாறு, சர்ச்சின் வரலாறு ஆகியவற்​றோடு இ​ணைத்து எழுதியிருப்பார்.  இந்த நாவல்களில் அவர் வர்ணிக்கும் சர்ச் ஸ்​பெயினின் விட்​டோரியா நகரில் உள்ள சான்டா மரியா சர்ச். பில்லர்ஸ் ஆஃப் தி எர்த்தின் ஸ்பானிய ​மொழி​பெயர்ப்பு ​வெளியான முதல் மாதத்தில் 2,75,000 பிரதிகள் விற்றது.  இ​தைவிட ஆச்சரியமான ஒரு தகவல் இருக்கிறது.  அந்த ஊர் மக்கள் அந்த சர்ச் வாசலில் ​கென் ஃபா​​லெட்டிற்று ஆளுயர ​வெண்கலச் சி​லை ​வைத்திருக்கிறார்கள்.  ​கென் ஃபா​லெட் தன் சி​லை​யைத் தா​னே திறந்து ​வைத்தார்.  எந்த ஒரு எழுத்தாளனுக்கும் உலகில் இதுவ​ரை கி​டைத்திராத மரியா​தை இது.  ஆனால், இந்த மரியா​தைக்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்பதில் சந்​தேக​​மே இல்​லை. 

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

தமிழ் நாடக முன்னோடிகள்

15 January 2025 at 14:50

வாசிப்பின் நோக்கம் புதிய விஷயங்களை அறிதல் என்று ஆழமாக நம்புபவன் நான்.  சில புத்கங்களை வாசிக்கும் போது முழு புத்தகத்திலும் ஒரே ஒரு புதிய தகவல் கிடைக்கும். சில புத்தகங்களிலோ பக்கத்துக்குப் பக்கம் ஒரு புதிய தகவல் வந்து நம்மை திகைப்பில் ஆழ்த்தும். அத்தகைய ஒரு புத்தகம் தான் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி – நாடக உலக முன்னோடிகள் என்ற ஒரு அருமையான புத்தகம்.  பின் அட்டையின் உட்புறத்தில் காணப்பட்ட 1918ல் வெளிவந்த ஒரு நாடகத்திற்கான நோட்டீசைப் பார்த்து ஈர்க்கப்பட்டு வாங்கிய இந்தப்  புத்தகம் என்னை ஏமாற்றவில்லை. உபாத்தியாயர் பி.ஆர். வெங்கட்டராமய்யர் அவா்களின் சிறந்த மானேஜ்மென்டுக்குட்பட்ட  பார்ஸி பால மனமோகன நாடகசபா கம்பெனியின் பார்ஸி பால சதாரம் என்னும் சரித்திரத்தைக் காண அழைக்கும் நோட்டீஸ் அது.

பம்மல் சம்பந்த முதலியார்

நூலாசிரியர் ராதாகிருஷ்ணன் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் இருந்த நாடக சபாக்களில் நடித்தவரோ என்று நினைத்தேன். இல்லை. அவர் ஒரு அரசு வங்கி ஊழியர். 1970களில் சென்னையில் அம்பத்தூர் கல்சுரல் அகடமி என்ற சபாவை ஆரம்பித்து நாடகங்கள் நடத்தியவர். போன நூற்றாண்டின் துவக்கத்தில் நாடகங்களில் நடித்த பல மூத்த கலைஞர்களை அவர்களது வயோதிக காலத்தில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவர். நீண்ட கால ஆய்வு, உழைப்பின் மூலம் ஏராளமான தகவல்கள் திரட்டி இந்த நூலை எழுதியிருக்கிறார்.

டி.வி.ராதாகிருஷ்ணன்

 மொத்தம் 67 கட்டுரைகள் . அவற்றில் 5 பொதுவான கட்டுரைகள். 8 பெண் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள். எஞ்சியவை ஆண் கலைஞர்கள் பற்றியவை. அதில் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார், டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள் என்று நாம் அறிந்தவர்கள் பற்றியும் உள்ளன. சின்ன பொன்னுச்சாமி படையாச்சி, கே.பி.கேசவன், சி.எஸ்.பாண்டியன், எஸ்.டிசுந்தரம், பி.டி.சம்பந்தம், எம்.எஸ்.எஸ்.சிபாக்கியம் என நாம் அதிகம் அறியாத பல ஆளுமைகள் பற்றியும் உண்டு.

கே.பி.சுந்தராம்பாள்
டி.எஸ்.துரைராஜ்
ஆர்.எஸ்.மனோகர்

நவாப் ராஜமாணிக்கத்திற்கு நவாப் பட்டம் வந்த கதை, முதன்முதலாக ஒரே ஊரில் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்ட திரைப்படமான சந்திரகாந்தா,  பம்மல் சம்பந்த முதலியாரின் குழுவில் சமஸ்கிருத நாடகங்களில் நடித்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ( இவர் பின்னாளில் மனோகராவில் மனோகரனாகவும் நடித்தாராம்), சமஸ்கிருத நாடகங்களில் நடித்த மற்றொரு பிரபல நடிகரான ஆர்.எஸ்.மனோகர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை சக்தி நாடக சபாவில் சேர்த்துவிட்ட  டி.எஸ்.துரைராஜ். தேவர் ஜாதி அமைப்பின் மாநாட்டுக்கு வர மறுத்த பாஸ்கரதாஸ், அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது, தினமும் அவரைப் பார்க்க வந்து அவருக்கு கோவில் பிராதமாக குங்குமம் வைத்து விட்ட கே.சாரங்கபாணி, நண்பரின் மனம் புண்படக்கூடாதே என்று அதை அழிக்காமல் வைத்துக் கொண்ட அண்ணாவின் நட்புக்குணம்,  எஸ்.எஸ்.ஆரின் நாடகம் பார்த்து, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி, பின்னர் அவரது நாடகத்தில் கதாநாயகியாகவும் ஆன நடிகை ஷீலா,  ரத்தக் கண்ணீர் மட்டுமல்லாது, திருஞான சம்பந்தர் என்ற நாடகத்தையும் எழுதியிருக்கும் திருவாரூர் தங்கராசு, அன்றைய நாடகங்களில் நாயக, நாயகிகளின் வாதப் பிரதிவாதங்களில் சம்பந்தப்பட்டவரின் ஜாதியை வைத்து கிண்டலாகப் பேசும் போக்கு என்று எத்தனை எத்தனையோ விஷயங்கள்.  படிக்கப் படிக்க கால இயந்திரத்தில் ஏறி, நாம் பிறக்காத அந்த பெட்ரோமாக்ஸ் லைட், மாட்டுவண்டி காலத்திற்குப் பயணித்து விடிய விடிய நாடகங்களைப் பார்த்த ஒரு அற்புதமான அனுபவம்.

தமிழ் நாடகங்களின், தமிழ் திரைப்படங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராயும் ஆய்வு மாணவர்களுக்கும், பொதுவான கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தகவல் சுரங்கம்.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி – நாடக உலக முன்னோடிகள்

டி.வி.ராதாகிருஷ்ணன்

நாதன் பதிப்பகம்

பக்கங்கள் – 226  விலை – ரூ 240

நன்றி – புதிய புத்தகம் பேசுது – டிசம்பர் 2024

கதை நிஜமான கதை

20 December 2024 at 14:28

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு குட்டி நாடு.  ஏராளமான கனிமவளம் கொண்டது. அங்கு ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி.  அவருக்கு எதிரணியில் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மற்றொரு வருங்கால சர்வாதிகாரி.  அவரை ஆட்சியில் அமரவைத்து, கனிமவளங்களை மொத்தமாகச் சுரண்டத் திட்டமிடும் ஒரு பன்னாட்டு ஏகபோகநிறுவனம். தானே ஒரு ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி, தனது ஆளை ஆட்சிக்குக் கொண்டுவந்தால், காலாகாலத்தில் சுரண்டலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும் அந்த நிறுவனம் ஒரு கூலி ராணுவப் படையை (mercenary army) ஏற்பாடு செய்கிறது.  கோடிக்கணக்கில் செலவு செய்து புரட்சியும் நடக்கிறது.  கூலிராணுவப்படையின் தளபதி கடைசியில்[i] இரு சர்வாதிகாரிகளையும் கொன்றுவிட்டு, சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஒரு மிதவாத மக்கள் தலைவரை அதிபராக்கிவிடுகிறார்  .கைக்காசைச் செலவழித்த நிறுவனம் செய்வதறியாது திகைத்துநிற்க சுபம் !

      மேற்படி 10-20 வரிக்கதை மிக நுட்பமாக எழுதப்பட்ட, பிரும்மாண்டமான நாவலான ‘தி டாக்ஸ் ஆஃப் வார் ( the dogs of war) என்ற நாவலின் மிக மோசமான சுருக்கம். தி டாக்ஸ் ஆஃப் வார் என்பது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய வரி. இந்த நாவலை எழுதியவர் தனது 27ஆவது வயதில் ‘டே ஆஃப் தி ஜகால்’ என்ற நாவலை எழுதி புகழின் உச்சிக்குச் சென்ற ஃபிரடெரிக் ஃபார்சித்.  டே ஆஃப் தி ஜகால் எட்வர்ட் ஃபாக்சின் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் திரைப்படமாகவும் வந்து சரித்திரம் படைத்தது. மேற்படி தி டாக்ஸ் ஆஃப் வாரும்கூட ஓரளவு மூலக்கதை சிதையாது, திடைப்படமாக வந்தது.  கூலி ராணுவப்படைத் தளபதியாக கிறிஸ்டோபர் வாக்கன் மிகச்சிறப்பாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருந்தார்.

      ஃபார்சித் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் அங்குலம் அங்குலமாக நுணுக்கமாக எழுதுபவர்.  டே ஆஃப் தி ஜகாலில் அவர் போலி பாஸ்போர்ட் எடுக்கும்முறை பற்றி விவரிப்பது அற்புதம்.  1970களில் அவர் சொல்லும் சட்ட ஓட்டைகளை பல வருடங்கள் ஆராய்ந்து 2003ல் தான் பிரிட்டிஷ் அரசு சரிசெய்தது.  அதுபோலவே ராஜீவ்காந்தி படுகொலையில் பயன்படுத்தப்பட்ட மனிதவெடிகுண்டு முறை அவரது தி நெகொஷியேட்டர் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.

      இந்த நாவலை எழுத ஃபிரடெரிக் ஃபார்சித் உலகெங்கும் உள்ள தலைசிறந்த கூலிராணுவப்படை தளபதிகளைச் சந்தித்து, தாம் ஒரு நாட்டில் ராணுவப் புரட்சிக்கு ஏற்பாடு செய்துவருவதாகக் கூறி, பேச்சுவார்த்தைகள் நடத்தி, விஷயங்களைச் சேகரித்தார். கூலிராணுவத்தினரைத் தொடர்ந்து கண்காணித்து வரும் சி.ஐ.ஏ, கே.ஜி.பி, மொஸாத், எம்.ஐ.6 போன்ற உளவு நிறுவனங்கள் ஃபார்சித்தை தீவிரவாதி பட்டியலில் வைத்துக் கண்காணித்தன.  தி டாக்ஸ் ஆஃப் வார் நாவல் வெளிவந்ததும், சே! இதற்குத்தானா என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. கூலிராணுவப்படையை உருவாக்கி ஒரு நாட்டில் திடீர்புரட்சியை (coup)  ஏற்படுத்துவது எப்படி ( நம் ஊர் சமையல் குறிப்பு புத்தகம் போல!) என்பதை விளக்கமாக விவரிக்கும் ஹவ் டு ஸ்டேஜ் அ மிலிட்டரி கூப் என்ற நூலின் ஆசிரியர் கென் கானர் தி டாக்ஸ் ஆஃப் வார் நாவலைத்தான் கூலிராணுவப்படைகளுக்கு பாடநூலாகப் பரிந்துரை செய்கிறார்!

      அதன்பிறகு ஃபார்சித் இரண்டாம் உலகப்போர்க்குற்ற நீதிமன்றத்திலிருந்து தப்பி தலைமறைவாக வாழும் நாஜிதளபதிகள் பற்றிய நாவலான ‘தி ஒடிஸ்ஸா ஃபைல்’, வளைகுடா போர் பற்றிய நாவலான ஃபிஸ்ட் ஆஃப் காட், சோவியத் யூனியன் சிதறுண்ட பின், அங்கு எழுந்த மாஃபியா அட்டகாசம் பற்றிய தி ஐகான், பனிப்போர் கால நாவலான தி டெவில்ஸ் ஆல்டர்னேடிவ் (பனிப்போர் காலத்திய நாவல்களில் அமெரிக்காவுடனான ஒரு சிக்கலில் ரஷ்யா ஜெயிப்பது மாதிரி முடியும் ஒரே நாவல் இதுதான்) என்று பல நாவல்கள் எழுதி ஏராளமான ரசிகர்களின் ஆதர்ச எழுத்தாளரானார்.  நம் கட்டுரை அதைப் பற்றியல்ல.

      எத்தனை நாவல் வந்தாலும் டாக்ஸ் ஆஃப் வாரின் தாக்கம் குறையவில்லை. ஒரு படைப்பாளனின் கூற்று பொய்யாகலாமா? கம்பனின் கூற்றை மெய்ப்பிக்க சரஸ்வதிதேவி கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாய் வந்த கதை போல,  தி டாக்ஸ் ஆஃப் வாரை உண்மையாக்க ஒரு பெரிய இடத்துப் பிள்ளை முடிவு செய்தார்.

      நாவலில் கூறப்படும் ஆப்பிரிக்கநாடு என்று விமர்சகர்கள் சந்தேகிக்கும் ஈக்வடோரியல் கயானா உண்மையாகவே கனிமவளம் நிறைந்த நாடு.  மேற்சொன்ன பெரிய இடத்துப் பிள்ளையின் பன்னாட்டு நிறுவனம் அதை விழுங்க ஆசை கொண்டது.  அந்தநாட்டில் ஹெலிகாப்டர் மூலம் ஆம்புலன்ஸ் சேவை நடத்தும் ஒரு டுபாக்கூர் கம்பெனி அங்கு துவங்கப் பட்டது  கம்பெனிக்கு வந்துசெல்லும் ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டன.  கூலிராணுவப்படை ஏற்பாடுகள் முடிந்தன.  திடீரென இந்தப்படை அந்தநாட்டில் நுழைந்து, அதிபரைக் கொன்று, கம்பெனிக்கு வேண்டப்பட்ட பொம்மையை அதிபர் நாற்காலியில் உட்கார்த்திவிட்டால், நாடே கம்பெனி கையில் ! கம்பெனி நாள் நட்சத்திரம் பார்த்துக் குறித்த சுபயோக சுபதினத்தில் 64 கூலிராணுவப்படையினர் ஜிம்பாப்வேயின் ஹாராரே விமானநிலையத்தில் விமானத்தில் ஏறியபோதே, எப்படியோ விஷயம் கசிந்து, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, ஈக்வடோரியல் கயானா ஆகிய மூன்று நாடுகளின் உளவு மற்றும் கமாண்டோ கூட்டுப்படை 64 பேரையும் சிறு சிராய்ப்புகூட இல்லாமல் கைது செய்தது.

கூலிப்படையினருக்கு தலா ஆயிரம் டாலர்கள்தான் கூலி பேசியிருந்தார்களாம்.  வேலை முடிந்து புதுஅதிபர் வந்ததும் அவரது மெய்க்காவலாளர் பதவி – மாதம் 10000 டாலர் சம்பளம் என்று ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.  கடைசியில் எல்லோரும் சிறையில்.  விசாரணையில் கூலிப்படையின் தளபதி சைமன் மான் தங்களை வேலைக்கு அமர்த்தியவர் பெயரைச் சொன்னதும் ஆப்ரிக்கக்கண்டமே அதிர்ந்தது.  தென் ஆப்ரிக்காவில் உல்லாசமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரையும் கைது செய்து இழுத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். வழக்கின் முடிவில் கூலிப்படையின் தலைவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை. மற்றவர்களுக்கு ஓராண்டு சிறைவாசம்.  ஏற்பாடு செய்தவரின் அம்மா உலகளாவிய செல்வாக்கு உடையவர். அவர் தலையீட்டால் பிள்ளைக்கு 30 லட்சம் ராண்ட் அபராதமும், மூன்றாண்டு சிறைத்தண்டனையும்.  அதுவும் அவரது நன்னடத்தைக்காக (!) தள்ளுபடி செய்யப்பட்டது.

      தி டாக்ஸ் ஆஃப் வாரைப் படித்து, அதே நாட்டில், அதே போல ராணுவப்புரட்சி ஏற்படுத்தி, நாட்டையே பிடிக்க நினைத்த அந்தப் பெரிய இடத்துப் பிள்ளை ஸர். மார்க் தாட்சர்.  அவரது அம்மா இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் திருமதி. மார்க்கரெட் தாட்சர். இதன் முழுவிபரங்கள் பிபிசி செய்தித்தொகுப்பாக வந்தன.  இன்றும் நாம் இணையத்தில் இதன் விபரங்களைக் காணலாம். நூறுசத லாபம் என்றால் ஏகாதிபத்தியம் எதை வேண்டுமானாலும் செய்யும் என்று மார்க்ஸ் கூறியது எத்தனை சத்தியமான வார்த்தைகள் !

      நம் ஊர் அரசியல்வாதிகள், வாரிசுகள், தொழிலதிபர்கள் இது போன்ற ஆங்கில நாவல்களெல்லாம் அதிகம் படிக்காமல் இருப்பதும் ஒருவகையில் நன்மைதான் போலும் !    


பின்னி​ணைப்பு

இந்த மார்க் தாட்சரின் ​ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கம்​பெனியுல் முதலீடு ​செய்தவர்களில் முக்கியமானவர் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்.  அவ​ரைப் பற்றிய தனிக் கட்டு​ரை ஒன்று பின்னால் இருக்கிறது.

ப​டைப்புகளின் பட்டியல்

The Afghan  9/11 தாக்குதலுக்குப் பின் நடக்கும் க​தை. க​தையில் பின்​லேடனும் ஒரு பாத்திரமாக வருவார்.

Avenger ​  ​போஸ்னியப் ​போர் பற்றிய க​தை. ​போஸ்னியப் ​போ​ரையும், வியட்நாம் ​போ​ரையும் பற்றி மாற்றி மாற்றிச் ​சொல்லிச் ​செல்லும் இந்தக் க​தை 2001 ​செப்டம்பர் 10ம் ​தேதி அற்புதமாக முடியும்.

The Cobra

The Day of the Jackal – தி​ரைப்படமாக வந்தது.  இந்த நாவலுக்காக அவர் எட்கர் ஆலன் ​போ பரி​சைப் ​பெற்றார். இக்க​தையின் ​மோசமான தழுவலான ஆகஸ்ட் 1 என்ற ம​​லையாளத் தி​ரைப்படம் ​வெற்றிகரமாக ஓடியது.  மம்முட்டியும், ​கேப்டன் ராஜூவும் பிரமாதமாக நடித்த படம் இது.  பின்னர் , இதன் அடுத்த பாகமாக ஆகஸ்ட் 15 என்ற படம் கூட வந்ததாக ஞாபகம்.

The Deceiver   பனிப் ​போ​​ரை மிகமிக நுட்பமாகக் காட்டிய க​தை.

The Dogs of War  தி​​ரைப்படமாக வந்தது.

The Fist of God  சதாம் உ​சேன் முக்கிய பாத்திரமாக வரும் இந்த நாவல்       வ​​ளைகுடா ​போர் பற்றிய அரு​மையான பதிவு.  எனக்குத் ​தெரிந்து ஒ​ரே பதிவு என்றுகூடச் ​சொல்லலாம். 

The Fourth Protocol   தி​ரைப்படமாக வந்தது

Icon

The Kill List

The Negotiator

The Odessa File   தி​ரைப்படமாக வந்தது. நாஜி ​ஜெர்மனி பற்றி, உலகப் ​போர் முடிந்தபின் பல முக்கியமான நாஜி அதிகாரிகள் எப்படி ​போர்க்குற்ற விசாரண​கைளிலிருந்து தப்பி, ​வேறு ​பெயர் அ​டையாளங்க​ளோடு, ​வெவ்​வேறு இடங்களில் ​செல்வாக்காக வாழ்ந்தார்கள் என்ப​தைச் ​சொல்லும் க​தை.

The Phantom of Manhattan

The Shepherd, பிரிட்டிஷ் ​போர் விமானி​யைக் கதாநாயகனாக ​வைத்து எழுதிய குறுநாவல். பிரடரிக் ஃபார்சித் ​போர் விமானியாகப் பணியாற்றியவர். நா​மே ​போர் விமானத்​தை ஓட்டுவது ​போன்ற அனுபவத்​தைத் தருவார் – சுஜாதாவின் பதினான்கு நாட்கள் நாவ​லைப் ​போல.

இ​வை தவிர no comebacks, the avenger என இரு சிறுக​தைத் ​தொகுப்புகளும் உண்டு.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் என்ற எனது தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை.

மொழிபெயர்ப்புக் கொடுமைகள்

27 November 2024 at 13:23

எல்லாத் துறைகளிலும் கடினமான வேலைகளை எளிதாக்க இயந்திரங்களின் வருகை நிகழ்கிறது. அந்த இயந்திரங்களின் வேலைகளை மேலும் எளிதாக்க கணினிகள் வருகின்றன. கணினிமயத்தையும் மேலும் எளிதாக்க, செயற்கை நுண்ணறிவு வருகிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும், அந்த வேலை எளிதாகச் செய்யப்படுவது மட்டுமின்றி, உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் தரமும் மேலும், மேலும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது. ஆனால், ஒரே ஒரு விசேஷமான துறையில் மட்டும் இந்த மாற்றங்கள் தலைகீழாக மாறிக்கொண்டு வருகிறது. இலக்கிய வகைமைகளில் மிகக் கடினமானதும், அதே சமயம் அதிகம் கவனிக்கப்படாததுமாகிய மொழிபெயர்ப்பு வகைமைதான் அது.

மொழிபெயர்ப்பு என்பது துவக்ககாலத்திலிருந்தே கடினமான ஒன்றுதான்.  ஏதோ திடீரென்று மனதில் ஒன்று தோன்றியது. உடனடியாக கையில் கிடைத்த பேப்பரில் எழுதி இலக்கியம் படைத்து முடித்துவிடுவதாக இல்லை இது.  உங்கள் முன் மூலநூல் நந்தி போல் நிற்கிறது. மூல ஆசிரியன் நந்தியின் எஜமானனாக எப்போதும் நிற்கிறான். எனது படைப்பை என்ன செய்து தொலைக்கப் போகிறாய்? என்ற கவலையோடு மொழிபெயர்ப்பாளனை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.  மற்ற வகைமை எழுத்துகளை விட மொழிபெயர்ப்பிற்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் கூடுதலாகவே இருக்கின்றன.  மொழிபெயர்ப்பு எதுவும் செய்யாத பெருந்தகைகள் பலரும் கூட எப்படி மொழிபெயர்ப்பது என்று பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.

மூல ஆசிரியன் சுதந்திரப் பறவையாக இருக்கிறான். மொழிபெயர்ப்பாளன் கூண்டுப் பறவையாக இருக்கிறான். அவனுக்கு சொந்த நடை கிடையாது. மூல ஆசிரியனின் நடையைத்தான் நடக்க வேண்டும்.  அவனுக்குத் தரப்படும் அறிவுரைகளைப் பாருங்கள்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒவ்வொரு சொல்லாகப் பெயர்த்து எழுதுவதல்ல, என்கிறார் ஒருவர்.

மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு மொழிக்கும் இருக்கும் அதற்கே உரித்தான மரபைப் பேண வேண்டும் என்கிறார் ஒரு அறிஞர்.

மொழிபெயர்ப்பு என்பது சீமை ஓட்டைப் பிரித்து விட்டு. கீற்று வைக்கும் வேலை என்கிறார் கு.ப.ராஜகோபாலன்.

மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் என்று பெயர்த்துத் தருவதன்று என்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அந்த மொழி புழங்கப்படும் பகுதியின் பண்பாடு, கலாச்சாரத்தை புரிந்து கொண்டு சொற்களைப் போட வேண்டும் என்கிறார் அவர். சரிதான். Meenakshi Temple Car Festival  என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் படிக்கும் போது எனக்கு மீனாட்சியின் பிரும்மாண்டமான தேர் ஆடி ஆடி, அசைந்து, அசைந்து வருவது தெரிகிறது. ஒரு அமெரிக்கர் படித்தால், அவர் கண் முன் வரிசையாக கார்கள் அல்லவா வந்து போகும்? அவருக்கு கற்பு என்பதை எந்த ஆங்கிலச் சொல்லால் நான் புரியவைக்க முடியும்?

மொழிபெயர்ப்பாளன் தன் மொழிக்கு முற்றிலும் புதிதான ஒரு விஷயத்தை மொழிபெயர்க்கும் போது, புதிய புதிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாகவும் இருக்கிறது.  இப்படிக் கண்டு பிடிக்கப் பட்ட அத்தனை புதிய சொற்களும் காரணப் பெயர்கள்தான். மிளகு போன்று காரம் கொண்ட ஒரு காய் மிளகாய் ஆனது. புகைக்கப் பயன்பட்ட இலை புகையிலை ஆனது. வள்ளிக் கிழங்கு போல் நீள நீளமான கிழங்குகளை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு அந்நியன் உருண்டை உருண்டையாகக் கொண்டு வந்த கிழங்கைப் பார்த்ததும் உருளைக் கிழங்கு என்று பெயர் வைக்கத் தோன்றியது. நுனியில் துளையின்றி தலையில் சிறு குண்டைச் சுமந்து கொண்டிருந்த ஊளி குண்டூசி ஆனது. சவுக்கால் விரட்டி ஓட்டிய வண்டிக்கு பதிலாக காலால் மிதித்து ஓட்டும் வண்டி வந்த போது மிதிவண்டி என்று பெயர் பெற்றது.

தமிழில் புதுச் சொல் கண்டுபிடிக்கத் தெரியாத போது, அவசரத்திற்கு வடமொழியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முடிந்த போது அதற்கு தமிழிலும் சொல்லை உருவாக்கினார்கள். முதன்முதலில் census  என்பது இப்படித்தான் குல ஸ்திரி புருஷ பால விருத்ய ஆயவ்யய பரிமாண பத்திரிகை என்று ஏதோ அமாவாசை தர்ப்பண மந்திரத்தின் சாயலில் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள்தொகை கணக்கெடுப்பானது. ஸர்வகலாசாலையாக  இருந்த University பின்னர் பல்கலைக்கழகமானது.  உப அத்யட்சகராக இருந்த  Vice Chancellor இப்போது துணைவேந்தராகி இருக்கிறார்.  உ.வே.சாவும், வையாபுரிப் பிள்ளையும் லெக்சரர் என்று குறிப்பிட்ட Lecturer இன்று விரிவுரையாளராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு என பல காலம் விவாதித்து விவாதித்து கலைச்சொற்கள் புதிது புதிதாய் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனாலும், மொழியின் இந்த நுட்பங்கள், இந்த விதிகள் எல்லாம் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் கூட, அவற்றை அக்கறையோடும், கவனத்தோடும் கடைப்பிடிப்பதில்லை. மனிதர்களின் நிலையே இப்படி என்றால், கணினியும், செயற்கை நுண்ணறிவும் என்ன செய்யும்? எல்லாமாகச் சேர்ந்து  மொழிபெயர்ப்புகளை, மொத்தத்தில் தமிழ் மொழியைக் குதறிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

This is a flower  என்றால் இது ஒரு மலர்.

This is a dog என்றால் இது ஒரு நாய்.

This is my father என்றால் இவர் என் அப்பா.

இந்த இடத்தில் This என்பது இது என்பதற்குப் பதிலாக இவர் என்று மாற வேண்டும் என்பது தமிழ் அறிந்தவனுக்கு இயல்பாகவே தெரியும். ஆனால் இயந்திரத்திற்குத் தெரியாது. நாம் அதற்குக் கற்றுத் தர வேண்டும். அப்படிக் கற்றுத் தராமல் அது சொல்வதை அப்படியே எழுதுவதுதான் இன்று மொழிபெயர்ப்புகளில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது.  I have 50 rupees என்பதை நான் ஐம்பது ரூபாய் வைத்திருக்கிறேன் என்று சொல்லும் கணினி, I have a house at Chennai  என்பதை அதே போல் நான் சென்னையில் ஒரு வீடு வைத்திருக்கிறேன் என்கிறது. சென்னையில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது என்றால் ஒரு பொருள். ஒரு வீடு வெச்சுருக்கேன் என்றால் வேறொரு பொருள் என்பதை அது அறியாது.  You ought to take practice, you must take medicine  போன்ற வரிகளை எல்லாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும், மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கணினி சொல்லிச் சொல்லி நமது அன்றாட பேச்சிலேயே அது சகஜமாகி விட்டது. பயிற்சியை செய்ய வேண்டும்.  மருந்தை, உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிட வேண்டும்.

மொழியின் பயன்பாட்டில் இப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று வரக்கூடிய பெரும்பாலான மொழிபெயர்ப்புகளில் இயல்பாகவே வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள் and என்று மூலநூலில் வரும் இடங்களில் எல்லாம் மற்றும் என்று போடுகிறார்கள். தமிழில் உம் என்பதும் இருக்கிறது, உம்மைத் தொகையும் இருக்கிறது என்பதே தெரியவில்லை.. அல்லது மறந்து விட்டது.

அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் என்ற அபுனைவு மொழிபெயர்ப்புகளை விட புனைவுகளின் மொழிபெயர்ப்பில்தான் மொழிவதை அதிகமாக நடக்கிறது. ( விதிவிலக்குகளும் உண்டு. அது பின்னர்) காரணம் புனைவுகளில் பாத்திரங்கள், தங்களது கலாச்சாரம், பண்பாடு சார்ந்த மொழியில் உரையாடுகிறார்கள். அதை கணினியும், மொழிபெயர்ப்பாளர்களும் இயந்திர கதியாக மொழிபெயர்க்கிறார்கள்.  இப்படி இயந்திரகதியில் மொழிபெயர்த்து மொழிபெயர்ப்பாளர்கள் மொழிக்கும், நமக்கும் செய்யும் கொடுமை கொஞ்சநஞ்சமல்ல.. நண்பர்கள் சிரிக்கவும், அதே சமயம் வேதனைப்படவும் இங்கே அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் மிகப் புகழ்பெற்ற நாவல் அது.  இரண்டாம் உலகப் போர் பற்றிய மிக முக்கியமான நாவல். திரைப்படமாகவும் அந்தக் காலத்தில் வந்தது.  உளவாளிகளை ஆங்கிலத்தில் Agent  என்பார்கள் அல்லவா? நம் மொழிபெயர்ப்பாளர் அதை தரகர் என்றே நாவல் முழுக்க மொழிபெயர்த்திருப்பார்.  ஓரிடத்தில்  Can’t avoid telling  என்று வரும். அது தமிழில்  ‘சொல்லிவிடுவதை தவிர்க்க முடியாதவரானார்‘ என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கும்.  நாவலில் ஓரிடத்தில், Took some digging to find him என்பார்கள். நம் நண்பர் அதை  ‘தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஆள், கொஞ்சம் பள்ளம் தோண்டி வேட வேண்டியதாச்சு‘ என்று எழுதியிருப்பார்.  தன்னை காதலிக்கும் பெண்ணிடம் நாயகன் You are seventeen. I am very old thirty five என்பான். தமிழில் இது ‘நீ பதினேழு. நான் மிகவும் கடந்த முப்பத்தியைந்து‘ என்று வரும்.  He let me think he was still in the army  என்பதை ‘இன்னும் அவர் ஆர்மிலதான் இருக்கார் எனும் பதிவை அவர் எனக்குள்ளே நிலை நிறுத்தினார்‘ என்று மொழிபெயர்த்தால் நான் எப்படிப் படிப்பேன்?  உச்சபட்டசமாக ஒரு கொடூர மொழிபெயா்ப்பைச் சொல்கிறேன். Even if the Rangers search the area, they won’t bother with the beach, because, the signs say it is mined  என்ற இந்த வரி ‘ரேஞ்சர்கள் தேடுதல்ல ஈடுபட்டாலும், அவங்க பீச்சைப் பற்றி பொருட்படுத்த மாட்டாங்க.  ஏன்னா, அது சுரங்கப் பகுதியா மாறியிருக்குன்னு குறிப்பு இருக்கு‘ என்று எழுதப்பட்டிருக்கிறது.

மற்றொரு புகழ்பெற்ற ஆங்கில  பெண் மர்மநாவல்ஆசிரியையின் நாவல் ஒன்றின் மொழிபெயர்ப்பு படுபயங்கரமாக இருக்கும். Weather is not going to present difficulties. It looks as though it had set in fine  என்பதை ‘வானிலை எந்த தொந்தரவும் தரப்போவதில்லை. அது கோவையாக அமைந்து விட்டது‘ என்று மொழிபெயா்த்துள்ளார்கள். அது ஏன் எனது மதுரையாக அமையவில்லை? என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம் !

……….. sat down on the edge of the bed. It was not, he, thought like anyone else sitting on your bed. It was as unsubstantial as though a fairy had poised itself for a minute  என்பதை ‘அவள் அப்படி அமர்வது வேறு யாரோ போல் இல்லாது, சூட்சுமப் பொருளாய்க் காணப்படும் ஏதோ ஒரு தேவதை வந்தமர்ந்தாய்ப் பொருள் கொண்டார்‘ என்று மொழிபெயர்த்திருப்பார்கள்.

இதைவிடக் கொடுமை மற்றொரு புகழ்பெற்ற நாவல் கம் திரைப்படத்தின் மொழிபெயர்ப்பு.  திரைப்படத்தின் தமிழ் வசனங்கள் எவ்வளவோ அற்புதம் என்று சொல்லலாம்.  அதிலிருந்து ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். நாவலில், There existed only one person on earth to whom he could pass the torch. மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மனிதர் தனது பொறுப்பை அடுத்து ஒருவரிடம் ஒப்படைப்பது பற்றி நினைப்பது பற்றிய வரி இது. மொழிபெயர்ப்பாளர் அவர் அந்த ரகசிய விளக்கை ஒரே நபரிடம்தான் தர முடியும் என்று எழுதிவிட்டார். பின்னே, Torch என்றால் விளக்கு இல்லாமல் வேறு என்னவாம்?

அபுனைவுகளிலும் இப்படி அவ்வப்போது,  நடக்கவே செய்கிறது. புகழ்பெற்ற ஒரு அபுனைவு நூல்.  கதைசொல்லி தன் காதலனை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்கிறாள். அந்த சந்திப்பின் போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொள்கிறார்கள். மூல நூலில் They met in a hotel room. They decided to get married in that meeting  என்று இருந்திருக்கக் கூடும். தமிழ் மொழிபெயர்ப்பில், அந்தக் கூட்டத்தில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தார்கள் என்று வருகிறது. காம்ரேடுகளுக்கு Meeting  என்றாலே கூட்டம், தீர்மானம் தானே !

பல ஆண்டுகளுக்கு முன் ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்த பட்டாம்பூச்சி நாவலின் அணிந்துரையில் சுஜாதா Traffic was paralysed  என்பதை போக்குவரத்திற்கு பக்கவாதம் ஏற்பட்டது என்று சொல்லக் கூடாது என்று எழுதியிருப்பார். ஆனால், இன்று மொழிபெயர்ப்புகளுக்கு எல்லாப் பக்கங்களிலும் வாதமாகிவிட்டது !

செய்திப் பத்திரிகைகளின் கொடுமை அதற்கு மேல் ! இப்போது கிரிக்கெட் செய்திகளில் எல்லாவற்றிலும் இலக்கு துரத்தப்பட்ட போது என்கிறார்கள். சர்க்கரை நோய் பற்றிய கட்டுரையில் ஒரு பெரிய மருத்துவர் சர்க்கரை நோயைப் பராமரித்தல் என்கிறார். Maintaining the diabetes  என்பதைச் சொல்ல வருவதாக நான் புரிந்து கொண்டேன். தமிழில் இதை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க என்று எழுத வேண்டும். பராமரித்தல் என்பது ஒன்றை அக்கறையாக கவனித்து மேம்படுத்துதல் என்ற பொருளில் பயன்படுத்த வேண்டிய சொல். தோட்டத்தை பராமரித்தால் அது செழித்து வளரும். நூலகத்தைப் பராமரித்தால், நூலகம் சிறப்பாக வளரும். சர்க்கரை நோயை பராமரித்தால் அது வளருமேயன்றி, குறையாது !

நந்தனார் படத்தில் நடித்த ஒரு துணை நடிகர் பற்றிய குறிப்பில் அப்படத்தின் credits ல் அவர் வேலாயுதம் என்று குறிப்பிடப்படுவதாக சொல்ல வரும் கட்டுரையாளர் அவர் அப்படத்தில் வேலாயுதம் என்று வரவு வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ! நான் நவீன சீத்தலைச் சாத்தனாராக என் பேனாவால் தலையில் குத்திக் கொள்கிறேன் !

மொழித் தூய்மையை விட கருத்துத் தெளிவிற்குத் தான் முக்கியத்துவம் தரவேண்டும். மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமே என்றெல்லாம் எத்தனையோ சப்பைக்கட்டுகள் சொல்லலாம். ஆனால், இயந்திரகதியான இத்தகைய மொழிபெயர்ப்புகளில் மொழி, கருத்து எல்லாமே சிதைக்கப்படுகிறது.  மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி வேண்டும் என்பது போய் ஏதேனும் ஒரு மொழி அரைகுறையாகத் தெரிந்தால் போதும், மற்றதை செயற்கை நுண்ணறிவு பார்த்துக் கொள்ளும் என்று ஆகிவிட்டது.  அப்படி அது பார்த்துக் கொள்வது மிக மிகக் கேவலமான வகையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு நம் தமிழறிவு போய் விடுமோ என்று மெய்யாகவே எனக்கு அச்சமாக இருக்கிறது !

அரசு அலுவலகங்களில் எல்லா வேலைகளையும் கணினியில் ஒரு முறை செய்து விட்டு,  வழக்கமான பழைய பாணியிலும் ஒரு முறை செய்யும் நடைமுறை இன்றும் இருக்கிறது. அது போல, மொழிபெயர்ப்பையும் கணினி துணையோடு செய்தாலும், ஒரு முறை  நேரடியாக நம் மொழியறிவின் துணையோடும்  செய்தால்தான் சரிப்படும் என்று தோன்றுகிறது.

ஆனால், அதற்கு நாம் நிறைய உழைப்பைப் போட வேண்டும் !  மன்னிக்கவும்…. உழைக்க வேண்டும் !

சிற்றுளி அக்டோபர் – டிசம்பர் 2024 இதழில் வெளியான கட்டுரை.

அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரட்டும் !

19 November 2024 at 13:46

      உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது.  அதற்கு முன்னால்  நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை.  அதன் பெயர் புசானன் மேஜை.  இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது.  ‘அதில் உட்காருங்கள்.  அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர்.  அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு.  எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை.  மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.

      வாலஸ் மெல்ல அமர்கிறார்.  எதிரே பிரும்மாண்டமான மேஜை.  அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு.  அதிபரின் குடும்பப் படங்கள்.  ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள்.  விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது.  மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.

      பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள்.  எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி.  அருகே இரண்டு  சாதா கறுப்பு தொலைபேசிகள்.  அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.

      நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ்.  அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது.  பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார்.  இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு.  அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள்.  ஒரு கடற்போர் சித்திரம்.  அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி.  அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம்.  இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.

      நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி.  அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள்.  வெளியே பாதுகாவலர்கள்.  நிற்கும் அறை.  அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம்.  அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.

      ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்?  அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம்.  அந்த நாள் 1963 செப்டம்பர் 16.

      அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது.  இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார்.  பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள்.  ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார்.  நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !

      மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது.  தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ்.  ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ;  கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).

      நேரம் முடிந்துவிட்டது.  அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ்.  உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும்   நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி.  ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!

      நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ்.  டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது  கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது.  வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.

      நாவல் வெளியாகிவிட்டது.  வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது.  கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ்.  பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த  நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.

      பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார்.  அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,

      ஒரு தட்டில்

      பழங்களும், பிரார்த்தனைகளும்

      வைக்கப்பட்டன.

      பழத்தைத் தின்றார் கடவுள்.

      பழுக்கட்டும் என்று

      விட்டு வைத்தார்

      பிரார்த்தனைகளை.

என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது.  ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !

பின்னி​ணைப்பு

இது ஒரு நாள் சம்பவமல்ல.  பத்து நாட்கள் இது​போல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வ​ரை ​கென்னடி ஓய்​வெடுக்கும் ​போது அவரது அலுவலக அ​றையில் இது ​போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.

இர்விங் வாலஸின் பு​னைவுக​ளைப் ​போல​வே அவரது கட்டு​ரை நூல்களும் மிகமிக முக்கியமான​வை.  இக்க​ட்டு​ரை அவரது சண்​டே ​ஜெண்டில்​மேன் என்ற கட்டு​ரைத் ​தொகுப்பிலிருக்கிறது – ஆம், ​வே​றெரு கட்டு​ரையில் நாம் ஏற்கன​வே பார்த்தது ​போல அவர் ஞாயிற்றுக்கிழ​மைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்பு அது.  1965ல் ​வெளிவந்த இந்தத் ​தொகுப்பில் அவர் அ​மெரிக்கா ​தொடர்பாக எழுதிய​வை, ​வெளிநாடு ​சென்று பார்த்த​தை எழுதிய​வை என இரு ​பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார்.  இந்தக் கட்டு​ரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகா​கோவின் புகழ் ​பெற்ற எவர்​​லே விடுதி​யை நடத்திய ​இரு பெண்கள் பற்றிய கட்டு​ரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.

இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னு​ரை மிகமிக முக்கியமானது.  புகழ்​பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உ​ழைப்​பைப் ​போகிற​போக்கில் ​சொல்வார்.  பத்திரி​கைகளில் ​வே​லை பார்த்துக் ​கொண்டு முதலாளி ​சொன்ன​தை எழுதிக் ​கொண்​டே ஞாயிற்றுக்கிழ​மைகளில் அவர் எழுதிய கட்டு​ரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் ​பெற்றுவிடவில்​லை.  அவரது புகழ் ​பெற்ற ப​டைப்புகளின் எண்ணிக்​கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட ப​டைப்புகளும் உண்டு. அவர் ​சொல்வ​தை அப்படி​யே தருகி​றேன் – பாருங்கள்.

என் பதி​னேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளு​மைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டா​ரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீ​ரோஸ் ஆஃப் டு​டே என்று ஒரு நூல் எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பதி​​​னெட்டாவது வயதில் மக்களின் ​பொதுவான மூடநம்பிக்​கைக​ளை ​வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பத்​தொன்பதாம் வயதில் ​ஹோண்டூராஸ் காடுகளில் நான் ​மேற்​கொண்ட சாகசப் பயணம் பற்றி ​​மை அட்​வென்சர் டி​ரெய்ல் என்று ஒன்று எழுதி​னேன்.  நிராகரிப்பு.  ​டேனியல் ​டெஃ​போவின் வாழ்க்​கை வரலாற்​றை தி சண்​டே ​ஜென்டில்​மேன் ( அதுதான் ஒரிஜினல் ​போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது.  இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்​கை வரலாற்​றை ​ரோமன் ஹாலி​டே என்று ஆரம்பித்து பாதி எழுதி நா​னே நிறுத்திவிட்​டேன்.  அப்​போது பல பத்திரி​கைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டு​ரைக​ளை திருத்தி எழுதி புத்தகமாகத் ​தொகுத்​தேன்.  அது பிரசுரமாகவில்​லை.  இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நி​னைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் ​மெய்ன் காம்ஃப் ​என்று ஒன்​றை எழுதி​னேன்.  நிராகரிப்புதான்.   இருபத்தி​யேழாவது வயதில் நான் ​பத்திரி​கை வாழ்வில் பேட்டி கண்ட ஆளு​மைக​ளைப் பற்றி வித் ​​தெயர் ​பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல்.  பிறகு ​கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்தி​லே​யே அ​ரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் ​தோல்விதான். முப்பத்தி​யேழாவது வயதில் பத்திரி​​கை ​வே​லை​யை விட்டுவிட்டு சீரியஸாக முழு​நேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதிய​போதுதான் முதல் புத்தகம் வந்தது.

பிரசுரமாகாத இந்த நூல்க​ளை யாராவது ​தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்​றேனும் ஒரு நாள் அ​வை பிரசுரமாகும் என்ற நம்பிக்​கை எனக்கு இருக்கிறது.

எப்படி எழுத​வேண்டும் என்ப​தை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சி​யோடு எழுத​​வேண்டும் என்ப​தையும் நாம் இர்விங் வாலஸிடம் ​சேர்த்துக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

சோதனைக்குழாயில் டைனாசோர் !

4 October 2024 at 12:16

இணையத்தில் சமீபத்தில் கிடைத்த ஒரு ரத்தினம் The science of Michael Crichton என்ற மின்னூல்.  அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பத்துபேர் சேர்ந்து, மைக்கேல் கிரைட்டனின் விஞ்ஞான நாவல்களில் எத்தனை சதம்  விஞ்ஞானம் எத்தனை சதம் கதை என்று மிகக் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து எழுதிய நூல். பத்து கட்டுரைகள். 184 பக்கங்கள்.

      நூலைப்படித்தும், என்னையறியாமல் அப்படியே அவரது ஜுராசிக் பார்க் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் படமாக வந்து இன்றும் ஏதேனும் ஒரு சானலில்   நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே ஜுராசிக் பார்க்தான்.  ஒரு காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞான நாவலாக என்னைக் கவர்ந்த அதே ஜுராசிக் பார்க்.     அதில் விஞ்ஞானம் மிகவும் குறைவு,கதைதான் அதிகம் என்று 27 ஆண்டுகள் எம்பிரியானிக் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ள டாக்டர் சான்டி பெக்கர் 40 பக்கத்திற்கு கட்டுரை எழுதிய பிறகு, கிரைட்டனின் தீவிர ரசிகன் என்றபோதிலும், அதை ஏற்பதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஆனாலும் மறுவாசிப்பில் மைக்கேல் கிரைட்டன் என்னை வேறுவிதமாக ஈர்த்தார்.

      6’9” உயர உருவத்தின் காரணமாக இருந்த கூச்சசுபாவத்தால் யாரிடமும் பேசிப் பழகாத தனிமை விரும்பியான கிரைட்டன் இயல்பாகவே ஒரு படைப்புமனம் கொண்டவராக இருந்தார்.  தொழிலால் மருத்துவர் என்றாலும் ஒருகட்டத்தில் முழுநேர எழுத்தாளரானார்.  திரைப்பட இயக்குனரானார்.  சக மருத்துவரான, சகஎழுத்தாளரான ராபின் குக் எழுதிய கோமா என்ற மருத்துவ திகில் படத்தை இயக்கினார்.  19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் கொள்ளையை வைத்து, தான் எழுதிய தி கிரேட் டிரைன் ராபரி என்ற நாவலை அதே பெயரில் படமாக எடுத்தார். இதில் சீன் கானரி நடித்திருக்கிறார். ஜுராசிக் பார்க்கில் கிழவர் ஹாமாண்ட் பாத்திரத்தில் அற்புதமாக  நடித்தவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் கிரைட்டன்.  அதிலும் வெற்றிதான்.  1994ல் அமெரிக்காவின் டாப் திரைப்படமாக ஜுராசிக் பார்க்கும், டாப் தொலைக்காட்சி தொடராக ஈ.ஆர் தொடரும், டாப் நாவலாக டிஸ்குளோசர் நாவலும் வெகுகாலத்திற்கு இருந்தன.  மூன்றுமே கிரைட்டனின் படைப்புகள்.  இவரைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் இந்த சாதனையை இன்றுவரை செய்யவில்லை. ஆனாலும் அடிப்படையில் மருத்துவரான அவரது மனம் விஞ்ஞானப் புனைகதைகளில்தான் இருந்தது.

அவர் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஆய்வுகளை,  மாற்றங்களை வைத்துத் தன் நாவல்களைப் புனைந்தார்.  அவர் தமது நாவல்களில் கூறும் அறிவியல் ஆய்வுகளுக்கு, போக்குகளுக்குத் தரும் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருக்கும். செயற்கையாக டைனாசோர்களை உருவாக்கும் ஜுராசிக் பார்க்காக இருக்கட்டும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளின் சில அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் லாஸ்ட் வேர்ல்ட்டாக் இருக்கட்டும், ( இதைத்தான் ஸ்பீல்பெர்க் டைனாசோரின் தாய்ப்பாசத்தைக் காட்டும் ஆங்கில அன்னை ஓர் ஆலயமாகக் கெடுத்தார்),காலயந்திரப் பயணத்தையும், 13ம் நூற்றாண்டு ஐரோப்பா வரலாற்றையும் அற்புதமாக இணைத்து எழுதிய ‘டைம்லைன்’, மனிதர்களைப் போல் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த மனிதக்குரங்கினை மையமாக வைத்து எழுதிய காங்கோ ( இது இதே பெயரில் திரைப்படமாகவும் வந்தது. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு சானலில் அது ஓடிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது இன்று மனிதக்குரங்குக​ளை ​​வைத்து வந்துள்ள பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் தி​ரைப்பட வரி​சைக்கு இந்த காங்​கோதான் முன்​னோடி) புவி வெப்பமயம் என்பதே ஒரு ஏகாதிபத்திய சதிதான் என்ற கருத்தில் ஏகப்பட்ட வ​​ரைபடங்கள், புள்ளிவிபரங்க​ளோடு எழுதப்பட்டு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான தி ஸ்டேட் ஆஃப் ஃபியர், என எல்லா நாவல்களுமே வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான தகவல்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு எழுதப்பட்டவை.  அவரவர் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்ற, 25,30 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உள்ள அறிஞர்கள் ( இவர்களும் கிரைட்டனின் தீவிர ரசிகர்கள்தான்)  கிரைட்டனின் நாவல்களை வரிவரியாக ஆராய்ந்து மேற்கூறிய நூலை எழுதிய பிறகுதான் கிரைட்டனின் நாவல்களில் 20 சதம்தான் விஞ்ஞானம், 80 சதம் கதைதான் என்று தெரிகிறது.    நம்  நாட்டில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மாயக்கலவையான வசீகரஎழுத்து.

விஞ்ஞானக்கதையில் விஞ்ஞானத்தின் சதவிகிதம் குறைந்தால் என்ன?   கிரைட்டன் கதைகளில் அறிவியல் அடிப்படையில் கதை எழுதினாலும், அதையும்தாண்டி, கதையின் ஆதாரமாக அறிவியலின் நோக்கத்தை வைத்திருப்பது  இந்த மறுவாசிப்பில் தெரிந்த்து.  ஜுராசிக் பார்க்கில் கேயாஸ் கொள்கை பேசும் பேராசிரியர் டாக்டர் மால்கம் கிரைட்டன்தான். மால்கமின் குரலில் கிரைட்டன் அறிவியல் ஆராய்ச்சிகள் யாரால் செய்யப்படவேண்டும், ஆராய்ச்சிகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம், ஆராய்ச்சிகளுக்கு யார் செலவு செய்வது, ஆராய்ச்சிகளின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவா? சாதாரண மக்களின் நல்வாழ்விற்காகவா ? என்றெல்லாம் பேசுகிறார்.  ஜெனிடிக் இஞ்சினீயரிங், பரிணாமத் தத்துவம் என்றெல்லாம் போகும் கதையில் நடுநடுவே, மால்கம் குரலில்  கிரைட்டன்  ‘லேசர், டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், போலியோ சொட்டு மருந்து,ஹோலோகிராம்,கணினி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இவை எல்லாமே தனியார் ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. அரசுப் பல்கலைக்கழகங்களில் புதிய ஆய்வுகளுக்கு எவ்வித ஊக்குவிப்பும் கிடையாது,’  ‘இத்தனை முன்னேற்றத்திற்குப் பிறகும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள் வந்தபின்னும் கூட 1930களிலிருந்து இன்று வரை வீட்டுவேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் குறையவே இல்லை’, விஞ்ஞானிகள் தங்களை இயற்கையை வென்றவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் படகு செய்யலாம். ஆனால் கடலைச் செய்யமுடியாது.  அவர்களால் விமானத்தைச் செய்ய முடியலாம். ஆனால் காற்றைச் செய்யமுடியாது, என்றெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார். அவரது கோபம் விஞ்ஞானத்தின் மீதல்ல.  விஞ்ஞானத்தின் வர்த்தகமயத்தின் மீதுதான்.  அவரது நாவல்களில் விஞ்ஞானிகள் தீராத அறிவியல்தாகத்தோடு, அந்த  முயற்சியில் எத்தகைய இடையூறு வந்தாலும் ஏற்கத் தயாரானவர்களாக இருக்க, அவர்கள் ஆய்வு நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் லாபத்திற்காக எத்தகைய மோசமான செயலையும் செய்பவர்களாக  கவனமாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிவியல் புனைகதைகளை வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள், விண்வெளிப் பயணம் என்பதைத் தாண்டி முதலாளித்துவ உலகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கடும்விமர்சனமாகத் தனது  நாவல்களை எழுதியவர் என்பதால் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு  ஜொலிப்பவர்   கிரைட்டன். 

எது படித்தாலும் தமிழ்ச்சூழலில் என்ன நிலமை என்று யோசிக்கும் என் மனம் இப்போதும் அதேபோல் யோசித்தது.  விஞ்ஞானக்கதைகளை ஓரளவு எழுதியவர் சுஜாதா மட்டுமே. இவ்வகைக்கதைகள் தமிழில் இல்லாததற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யானத் தூக்கம், நினைவுத்திரைகள் பின்னோக்கிச் செல்வது, சமயலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு, என்றும் மாறாத காதல், இது போதும் என்கிற பொன் செய் மனோபாவத்தால்தான் முக்கியமான இவ்வகைக் கதைகள் தமிழில் வரவில்லை என்கிறார் சுஜாதா.  தமிழின் ஒரே விஞ்ஞான எழுத்தாளரான சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் கதை எவ்வளவு ? விஞ்ஞானம் எவ்வளவு ? என்ற ஆய்வு இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.  நண்பர் இரா. நடராசன் மனம் வைப்பாரா?

பின்னி​ணைப்பு

ப​டைப்புகள் பட்டியல்

Airframe

The Andromeda Strain   தி​ரைப்படமாக வந்தது

Binary

A Case of Need

Congo (novel)  தி​ரைப்படமாக வந்தது

Dealing: or the Berkeley-to-Boston Forty-Brick Lost-Bag Blues

Disclosure   தி​ரைப்படமாக வந்தது

Drug of Choice

Easy Go

Eaters of the Dead  தி​ரைப்படமாக வந்தது

Grave Descend

The Great Train Robbery  தி​ரைப்படமாக வந்தது

Jurassic Park (novel)  தி​ரைப்படமாக வந்தது

The Lost World (Crichton novel) தி​ரைப்படமாக வந்தது

        Micro

Next

Odds On

Pirate Latitudes

Prey

Rising Sun   தி​ரைப்படமாக வந்தது

Scratch One

Sphere   தி​ரைப்படமாக வந்தது

State of Fear

The Terminal Man

Timeline   தி​ரைப்படமாக வந்தது

The Venom Business

Zero Cool

Nonfiction

Electronic Life

Five Patients

Jasper Johns

Travels

​மைக்​கேல் கி​ரைட்டனின் ப​டைப்புகள் பற்றி வந்துள்ள நூல்கள்

The science of Michael crichton by Kevin R.Grazier

இது மிக முக்கியமான நூல். ​மைக்​கேல் கி​ரைட்டனின் முக்கிய நாவல்கள் அ​னைத்தும் பற்றி எழுதப்பட்ட கட்டு​ரைகளின் ​தொகுப்பு. 1) The andromeda strain, 2) Virtual reality and man-machine interface in disclosure and the terminal man, 3)Shock to the system, 4)Neanderthals and werdols, 5)Primate behaviour and misbehaviour in Michael Crichton’s congo, 6)crichton’s travel in time. 7)Artificial life in Michael Crichton’s prey, 8)Be afraid. Be very afraid : Michael Crichton’s state of fear, 9) Science comes second in next என்று ஒவ்​வொரு நாவலிலும் உள்ள விஞ்ஞான, கற்ப​னை கல​வை பற்றி ​பெரிய விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் இந்தக் கட்டு​ரைகளின் த​லைப்புக​ளைப் பார்த்தா​லே​யே அவர் எத்த​னை ​பெரிய விஞ்ஞான ​எழுத்தாளர் என்பது ​தெரியும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

❌