Normal view

Received before yesterday

What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words

27 May 2025 at 23:17
ப்ராம்ப்ட் எஞ்ஜினியரிங்-கில் தோற்றவர் யார்? அ) கும்பகர்ணன் – நித்தியத்துவம் ஆ) பஸ்மாசுரன் இ) பலராமன் ஈ) ஹிரண்யகசிபு எல்லாமே சரி. என்னையும் சேர்க்கலாம். நண்பர்களை சந்திக்கும் எவருமே கணி-அரட்டை பொறியியலில் இருந்து தப்பித்தவர்கள். சென்ற வாரம் தோழர்களை அழைக்கும் காலம். நல்விருந்துகளில் பிராம்ப்ட் என்பதை எவ்வாறு தமிழில் வார்த்தையாக்கலாம் என்னும் வினா எழுந்தது. Prompt … Continue reading

பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா

17 May 2025 at 17:31
த்ரிஷாவையும் நயன் தாரா போன்றோரை அழைப்பதை கிண்டல் செய்தது அந்தக் காலம்.துரை முருகனாரையும் நக்கீரன் கோபாலையும் அழைப்பதை எண்ணிக் கூனிக் குறுகுவது இக்காலம். நடிகைகளைக் கொண்டாடுவதில் நேர்மை இருக்கிறது.பதவியில் இருக்கும் தலைவரை வரவழைப்பதில் டிரம்ப் தனம் இருக்கிறது. இது டிரம்ப்பிஸ்தான்.உண்டியலும் அதிகாரமும் அமெரிக்கா.இலாவணமும் அரசியலும் தமிழர் தேசி? இன்றைய தேதியில் மாற்று சந்திப்புகள், மாபெரும் ஒருங்கிணைப்புகள், … Continue reading

ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்

ம.சோ.விக்டர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள நல்லேர் பதிப்பகம் செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார்.

ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.

இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி

( அகர வரிசையில் புத்தகங்கள் )

01.இசுலாம் - தமிழர் சமயம்
இசுலாம் - தமிழர் சமயம் இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.

02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

03.உலகளாவிய தமிழ்
உலகளாவிய தமிழ் பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
எபிரேயத்தின் தாய்மொழி தமிழேதமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.

05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

06.எல் - யாஎல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.

07.ககதமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.

08.குமரிக் கண்டம்குமரிக் கண்டம்கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.

09.சிந்துவெளி நாகரிகம்சிந்துவெளி நாகரிகம்குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.

10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.


11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 1இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 2அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.

14.தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது.

15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
பஃறுளி முதல் யூப்ரடீசு வரைகுமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.

16.வானியலும் தமிழரும்வானியலும் தமிழரும்வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.

17.Tamil and Hebrew
Tamil and Hebrew

18.The Babylonian ThamizhThe Babylonian Thamizh

19.தமிழர் எண்ணியல்

20.தமிழர் சமயம்

ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்

ம.சோ.விக்டர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள நல்லேர் பதிப்பகம் செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார்.

ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.

இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி

( அகர வரிசையில் புத்தகங்கள் )

01.இசுலாம் - தமிழர் சமயம்
இசுலாம் - தமிழர் சமயம் இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.

02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

03.உலகளாவிய தமிழ்
உலகளாவிய தமிழ் பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
எபிரேயத்தின் தாய்மொழி தமிழேதமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.

05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

06.எல் - யாஎல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.

07.ககதமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.

08.குமரிக் கண்டம்குமரிக் கண்டம்கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.

09.சிந்துவெளி நாகரிகம்சிந்துவெளி நாகரிகம்குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.

10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.


11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 1இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 2அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.

14.தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது.

15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
பஃறுளி முதல் யூப்ரடீசு வரைகுமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.

16.வானியலும் தமிழரும்வானியலும் தமிழரும்வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.

17.Tamil and Hebrew
Tamil and Hebrew

18.The Babylonian ThamizhThe Babylonian Thamizh

19.தமிழர் எண்ணியல்

20.தமிழர் சமயம்

சாரி டமில் மதர்

இவர், இவரது காமர்ஸ் ஆசிரியரால் 'படிக்கிற, வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்' என 'விளக்கும் வெளிச்சமும்' நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா) 

எனவே, புத்தகம் அனுப்பிவிட்டு, இவரையும் இவரைப்போல இலவசப் புத்தகம் பெற்றவர்களையும் FREE BOOK என்று பெயரிட்டு  ப்ராட்காஸ்ட் பட்டியலாக்கிக்கொண்டேன்.

இவர்களுக்கு இன்று மெட்ராஸ் பேப்பரில் வெளியான என் கதையின் சுட்டியைக் காலை 6:42க்கு அனுப்பிவைத்தேன். 

ஓசிங்கறதுக்காகதான வந்தோம் என்பதைப்போல, FREE BOOK கோஷ்டிகளில் பதில் போட்டதே ஓரிருவர்தான். அதிலொன்று இந்தப் பெண்.

Okei sir 9:11 AM

Story super sir 9:15 AM 

என்று வந்ததும் என்னது 1700+ வார்த்தைகள் கொண்ட கதையை நான்கே நிமிடத்தில் படித்துவிட்டதா என்று மிரண்டுபோனேன். பிறகுதான் உறைத்தது கதை முழுதாக வெளியாகியிருக்காதே என்பது. அப்புறம் எப்படி இந்தப் பெண் சூப்பர் என்கிறது என்று, 

மெட்ராஸ் பேப்பர் சந்தாதாரரா நீங்க 11:20 AM 

எனக் கேட்டேன் 

No sir 11:48 AM 

படிக்காமையே ஸ்டோரி சூப்பர் சாரா 12:32 PM 

என்று சொல்லிவிட்டு ஒரு வேளை நாம் அனுப்பிய புத்தகத்தைப் படித்துவிட்டு அதற்கு பதிலளித்திருக்குமோ. அதை நாம் தான் தவறாக ஓய்வுபெற்ற... கதைக்கு என்று எடுத்துக்கொண்டுவிட்டோமோ என்று நினைத்து,

நீங்க படிச்சுட்டேன்னு எதைச் சொல்றீங்க 12:53 PM 

என்று கேட்டு வைத்தேன். 

இதற்கிடையில் பாராவுக்கு போன் அடித்தால், 

'இப்ப பேச முடியாது. சாதம் வெச்சுக்கிட்டு இருக்கேன்' என்றார். 

'கதையை முழுசா போட்டுட்டீங்க' என்று பதறினால், 

'நீங்க லாகின்ல இருப்பீங்க. லாக் அவுட் ஆகிட்டுப் பாருங்க' என்றார்.

'இல்ல எனக்கு முழுசா தெரியுதே' என்றேன், பதற்றத்தில் லாகின் ஆகியிருப்பதை கவனிக்காமலே. 'நீங்க கம்பூட்டர்ல பாக்கறீங்க. நான் மொபைல்ல சொல்றேன்' என்றதோடு நில்லாமல் என் தரப்பை நிரூபிக்க படங்களாக எடுத்து அவருக்குப் போட்டுத் தாக்கினேன். 

அவரோ, 'அப்படியெல்லாம் தனித்தனியா கிடையாது. எல்லாத்துலையும் ஒரே மாதிரிதான் தெரியும். கோளாறு உங்க கிட்டதான். எங்கிட்ட சரியாதான் இருக்கு. மூணு பாராதான் தெரியுது' என்றார். 

Tabல் போய் லாகின் ஆகி, 'இங்கையும் தெரியுது பாருங்க' என்று டேபோடு ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டுத் திருப்பித் தாக்கினேன்.

'படிச்சா படிச்சிட்டுப் போகட்டும். அதனால என்ன இப்போ. இப்ப என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்பறம் பாத்துப்போம்' என்று சொல்லிவிட்டார் அவருக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில். 

அப்புறம் ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் பார்த்துத் தூங்கி எழுந்ததும் லாக் அவுட் பண்ணிவிட்டு லாகின் பண்ணாமல் பார்த்தால், மூன்றாவது பத்தி முடிவில்' முழுவதும் வாசிக்க...' இருந்தது. 

பாராவுக்கு, 

சாரி. உங்க சமையலைக் கெடுத்துட்டேன். லாகின் ஆகிப் படிச்சா முழுசாதான் தெரியும். தெரியலேன்னாதான் புகார் பண்ணணும். தெரியுதேனு கம்ப்ளெய்ண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்😂😂😂 1:03 PM 

என்று வாட்ஸப் செய்தேன். 

பதிலுக்கு பாரா 😡1:19 PMக்கு போட்டுக் கடுப்பைக் காட்டினார். 

சாப்பிட்டுவிட்டு மூன்று தோட்டங்களுக்கும் நீரூற்றிவிட்டு வந்தால் செல்வமுரளி, 

இப்போது சரியாக இருக்கிறது. செக் பண்ணிவிட்டேன் 1:35 PM

💐சாரி💐

இது முழுக்க முழுக்க என் சொதப்பல் மட்டுமே 1:35 PM 

பதிலுக்கு அவர், 

இல்லை சார் இந்த விழிப்புணர்வு. இருந்தால் மட்டுமே நம்மால் நிற்க முடியும்🙏🏻1:37 PM 

என்றார்.

திரும்ப ஹவ்ஸ் எம்டி கொஞ்சம் நெட் கொஞ்சம் என மேய்ந்து வெட்டி முறித்த களைப்பில் தூங்கி எழுந்திருக்கும்போது மணி 8 PMஐ நெருங்கிக்கொண்டிருக்கவே, சஸ்கா மஸ்கா பிஸ்கெட் பாக்கெட்டை காலி பண்ணிவிட்டு காபி பண்ணிக்கொண்டு ஹாலில் உட்கார்ந்து போனை பார்த்தால், 

நான் அனுப்பிய கதையின் லிங்கை போட்டு 

This one sir 6:55 PM என்று சொல்லியிருந்தது மதுரை தியாகராயர். 

'முழுவதும் வாசிக்க...' வரையிலான ஸ்கிரீன்ஷாட்டைப் போட்டு 

இவ்வளவுதான படிச்சிருப்பீங்க 8:02 PM 

என்றேன். 

Yes sir 8:32 PM 

என்று பதில் வந்தது. 

இது சும்மா சாம்ப்பிள். ஜஸ்ட் மூணு பாராதானே. இதைப் படிச்சிட்டா கதை படிச்சிட்டேன்னு சொல்றீங்க😂😂😂

உங்களுக்கு நான் அனுப்பின புக்கு புரிஞ்சிதா 8:36 PM 

Innu complete pannala sir 8:38 PM 

Going on 8:38 PM 

என்ன புக்கு 8:38 PM 

But kjm confuse aa iruku but I'm reading 8:38 PM 

Vilakum velichamum 8:39 PM 

வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் என்று ஒரே ஒரு பையனைத் தவிர பட்டியல் முழுக்கப் பெண்கள் பெயர்களாய்க் கொடுத்துமாணவர்களைப் படிக்க ஊக்குவித்துக்கொண்டிருப்பதாய் கூறிக்கொண்டு - 'வாசிப்பை நேசிப்போ'மில் பாராவின் பதிவைப் பார்த்து இலவசத்திற்கு வந்த அந்தக் கல்லூரி ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் - மூன்று பத்திகளைப் படித்துவிட்டுமுழுவதும் வாசிக்க என்பதுகூடப் புரியாமல் கதையைப் படித்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்ணை பட்டியலில் சேர்த்திருக்கிறீரே பட்டியல் மொத்தமும் இந்த அளவில்தான் படிப்பு வாசனை இருக்கிறதா என்று கேட்க. 

வாசிப்புப் பழக்கம் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. வாசிக்கிற பழக்கம் உள்ளவர்களில்கூட எல்லோருக்குமானதில்லை இலக்கியம்.

'படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்என்று ஆசிரியர், (அவரும் வணிகவியல் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியர் அன்று என்பது முக்கியம். புலவர் பண்டிதர்களாக இருந்த காலத்திலிருந்தே தமிழைய்யாக்களுக்கும் நவீனத்துக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. அப்புறம்தானே தற்காலத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு நவீன இலக்கியத்தின் வாசனை தெரிய) தேர்ந்தெடுத்த மாணவியே முழுவதும் வாசிக்க... என்று போட்டிருந்தும் இப்படி மூன்று பாராக்களையே முழு கதையாக  நினைப்பவராக இருந்தால், அஜித் விஜய் உதய்னா திமுக திராவிடம் பெரியார் பகுத்தறிவு என்று பேஸ்புக்கில் திரிந்துகொண்டிருக்கும் பசங்களை என்ன சொல்வது. 

இன்னும் பத்திருபது ஆண்டுகளில் புத்தகம் என்கிற வஸ்து இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

சாரி டமில் மதர்.

கதவைத் திற, காற்று வரட்டும்

14 November 2023 at 07:26

பாடப் புத்தகங்கள் சொல்லாத பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இந்தியா சுதந்திரம் பெற்று மிகச் சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் முதல் பிரதமருக்கும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவருக்கும் இடையே முரண்பாடுகள் முற்றி, ‘இந்தச் சட்டம் இயற்றப்பட்டால் நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று குடியரசுத் தலைவர் சொல்கிற அளவிற்குச் சென்றது என்பதும் ஒன்று. இன்னொரு புறம், அதே கால கட்டத்தில், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், ‘பிரதமரிடம் நேர்மை இருக்கிறது ஆனால் துணிவு இல்லை’ எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது இன்னொரு நிகழ்வு.

இங்கு குறிப்பிடப்படும் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேட்கர். குறிப்பிடப்படும் சட்டம், ஹிந்து கோட் பில் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஹிந்து சட்ட முன்வடிவு. இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களின் மீதான உரிமை, திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல் போன்றவற்றில் பெரும் திருத்தங்களை முன் மொழிந்தது இந்தச் சட்ட முன்வடிவு.

துல்லியமாகச் சொல்வதானால் இந்த முன்வடிவு குறித்து ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்குமிடையேயான மோதல், ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே, இந்தியா சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே, தொடங்கி விட்டது. இந்த சட்ட முன்வடிவு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அவையின் முன் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வைக்கப்பட்டது. அதை முன் மொழிந்தவர் நேரு. அப்போது சுதந்திரமடைந்து ஓராண்டு கூட ஆகியிருக்கவில்லை. அந்த சமயத்தில் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவராக இருந்த, ராஜேந்திர பிரசாத். இது குறித்த விவாதங்களின் போது அவையைத் தானே தலைமையேற்று நடத்துவது என்பதில் உறுதியாக இருந்தார். சட்டம் நிறைவேறவில்லை. மாறாக அது செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. நேரு ஏமாற்றமடைந்தார்

அதன்பின் நேரு ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக விரும்பவில்லை. மாறாக ராஜாஜியை குடியரசுத் தலைவராக்க விரும்பினார். அதற்காக நேரு உண்மையை மறைத்து அதற்கு மாறாகவும் செயல்பட்டார்.1949ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, நேரு ராஜேந்திர பிரசாத்திற்கு எழுதிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துத் தான் படேலிடம் பேசிவிட்டதாகவும், ராஜாஜியை வேட்பாளராகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். ராஜேந்திர பிரசாத் இதற்குக் கடுமையான மறுமொழி அளித்து அதன் நகலை படேலுக்கும் அனுப்பினார். இதைச் சற்றும் எதிர்பாராத நேரு திகைத்துப் போனார். உடனடியாக பிரசாத்திற்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில் நான் எழுதியதற்கும் படேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பற்றி படேலுக்கு எதுவும் தெரியாது” என்று அதில் கூறினார்.

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த 489 இடங்களுக்கு நடைபெற்ற 1952 தேர்தலில், காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலங்களிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. அதையடுத்து நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜேந்திர பிரசாத் நிறுத்தப்பட்டார். ராஜாஜியை கட்சி ஏற்கவில்லை பிரசாத் மிகச் சுலபமாக வென்றார். நேருவிற்கு இரண்டாம் முறையாக ஏமாற்றம் அந்தத் தேர்தலில் 65 எம்.பிக்களும், 479 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மீண்டும் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரசாத் நிற்பதற்கு முட்டுக்கட்டை போட முயன்றார் நேரு.அந்தத் தேர்தலில் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணனை ஜனாதிபதியாக்க முனைந்தார், ஆனால் மெளலானா ஆசாத் போன்றவர்கள் அந்த யோசனையை ஆதரிக்கவில்லை. கட்சியும் அதை ஏற்கவில்லை. ஏமாற்றமடைந்த ராதாகிருஷ்ணன், தன் ராஜினாமாவை சமர்ப்பித்தார். அந்தத் தேர்தலிலும் ராஜேந்திர பிரசாத் மீண்டும், ஜனாதிபதியானார். நேருவிற்கு மீண்டும் ஏமாற்றம். ராதாகிருஷ்ணனை மறுபடியும் துணை ஜனாதிபதியாக்கி அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

ராஜேந்திர பிரசாத்திற்கும் நேருவிற்கும் ஏற்பட்ட மோதல்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் அம்பேட்கருக்கும் நேருவிற்கும் இடையே முரண் ஏற்பட்டு, அவர் அமைச்சரவையிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி காணும் நிலையும் இந்தச் சட்ட முன்வடிவால் ஏற்பட்டது. ராஜேந்திரப் பிரசாத்தைப் போலன்றி அம்பேத்கரும் நேருவும் கருத்தியல் ரீதியாகப் பெரிதும் முரண்பட்டவர்கள் அல்ல.நவீனமான, முற்போக்கான, இந்தியாவைக் கட்டமைக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குக் கருத்தொற்றுமை இருந்தது. ஆனால் அவர்கள் முரண்பட்டுப் பிரிவதும் நடந்தது.

அரசமைப்புச் சட்ட அவையின் செலக்ட் கமிட்டிக்கு சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டதல்லவா, அந்தக் குழுவின் தலைவராக அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேட்கர் நியமிக்கப்பட்டார். அவர் அதில் பல திருத்தங்களை முன்மொழிந்திருந்தார். பலதார மணத்திற்குத் தடை, பாரம்பரியச் சொத்தில் மகனுக்கு உள்ளதைப் போன்றே விதவையான அவன் மனைவிக்கும் உரிமை, கலப்புத் திருமணம், மணவிலக்கு போன்ற திருத்தங்கள் இடம் பெற்றிருந்தன.

மசோதா கடும் எதிர்ப்பிற்குள்ளாயிற்று. இந்தத் திருத்தங்களை எதிர்த்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாடாளுமன்றத்திற்கு முன் கூடி, அடையாள பூர்வ எதிர்ப்பாக நேரு அணிவதைப் போன்ற காந்திக் குல்லாய் அணிந்து சென்று, அதை எரித்தனர். காங்கிரசின் பெண் தலைவர்களும் கூட இதை ஆதரிக்கவில்லை. இந்த மசோதாவைத் திரும்பப் பெறவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சரோஜினி நாயுடு அறிவித்தார். அரை மனதான மசோதா, இதனால் பிரயோசனமில்லை என்றார் சுசேதா கிருபளானி. ராஜேந்திரப் பிரசாத், “ புதிய கருத்தியல்கள், புதிய எண்ணங்கள், இந்துச் சட்டத்திற்கு அன்னியமானவை மட்டுமல்ல, அவை ஒவ்வொரு குடும்பத்தையும் சீர் குலைத்துவிடும். நான் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன், இந்தச் சட்டம் குறித்து கட்சியின் காரியக்கமிட்டியிலோ, பொதுக்குழுவிலோ விவாதிக்கப்படவில்லை. இது போன்ற பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் முன் அவற்றை மக்கள் முன் வைத்து அவர்களின் ஆணையைப் பெற வேண்டும். அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இதை தேர்தல் அறிக்கையில் வைத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பின் பரிசீலிக்கலாம்” என்று கடுமையான கடிதம் ஒன்றை 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி எழுதினார்.

சட்டம் நிறைவேறுவதற்கான சூழல் இல்லை என்பதாலும் தேர்தல் வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்று கருதிய நேரு சட்டம் நிறைவேறுவதைத் தள்ளிப் போட்டார்.

அதில் அம்பேட்கர் கடும் கோபமடைந்தார். அவர் தான் எழுதிய அரசமைப்புச் சட்டங்களுக்கு நிகரானவை இந்தச் சீர்திருத்தங்கள் என்று கருதினார். அவற்றைச் சட்டமாக நிறைவேற்றிக் கொடுப்பது நேருவின் கடமை, பொறுப்பு என்று எண்ணினார். “இதில் நான் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும், இதை நிறைவேற்ற என் சக்திக்குட்பட்டது அனைத்தையும் செய்வேன்” என்று 1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நேரு கடிதம் மூலம் அவருக்கு உறுதி அளித்திருந்ததால் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அதில் நேரு போதிய அக்கறை காட்டவில்லை என்பது அவருக்கு சினமூட்டியது. இது, ”நகைப்பிற்குரியது,கோழைத்தனமானது, அவமானப்படுத்துவது” என்று சாடிய அவர், “சாணிக் குவியலின் மேல் மாளிகை எழுப்ப முடியாது!” என்று சொல்லி, 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர் சொன்னது: “பிரதமர் நேர்மையானவர். ஆனால் போதுமான துணிவு இல்லாதவர்”.

நேருவின் துணிவை கேள்வி கேட்ட இன்னொருவர், நிர்மல் குமார் சட்டர்ஜி. ஹிந்து மகாசபையின் தலைவர்களில் ஒருவர் (இவர் மகன் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று) நிர்மல் குமார் சட்டர்ஜி கேட்டார், “பொது சிவில் சட்டம் இயற்றலாம் என அரசமைப்புச் சட்டத்தில் கூறியிருக்கிறதே, அப்படியிருக்க ஏன் இந்து மதத்தை மட்டும் குறி வைத்து இந்தச் சட்டம்? இந்த அரசுக்கு முஸ்லீம் சமூகச் சட்டங்களைத் தொடத் துணிவுண்டா?”

நேருவின் துணிவின்மையையோ, அல்லது பலவீனங்களையோ அல்லது அவரே படலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல, ‘நான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன், நம் எம்.பிகளே என்னுடன் இல்லை” என்ற ஆற்றாமையையோ மட்டும் ஹிந்து சட்ட முன்வடிவு வெளிப்படுத்தியதாக நான் கருதவில்லை. அரசியல் நெருக்கடி காரணங்களாலோ அவரது- இன்னும் சொல்லப்போனால் நம் மதிப்பிற்குரிய பல தலைவர்களின் -இரட்டை நிலையை அது வெளிப்படுத்தியது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

அரசமைப்புச் சட்ட அவை 1948ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியே “இந்தியா முழுவதுமுள்ள குடிமக்களுக்காக பொது சிவில் சட்டம் இயற்ற அரசு முயற்சிக்கும்” என்ற அரசமைப்புச் சட்டத்தின் 35ஆவது பிரிவை  நிறைவேற்றி விட்டது. அது நேரு அரசிற்கு பொது சிவில் சட்டம் இயற்றும் வாய்ப்பைக் கொடுத்தது. எனினும் எல்லா மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்றும் முயற்சியில் அவர் இறங்கவில்லை. மாறாக  அதன் பின்னும் 1951 வரையிலும் இந்துக்களுக்கான சட்டத்தில் மட்டும். திருத்தங்கள் செய்வதில் தீவிரமாக இருந்தார்

அரசமைப்புச் சட்ட அவையில் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய முஸ்லீம் உறுப்பினர்கள், முஸ்லீம் தனிச் சட்டம் (Muslim Personal Law) நாடு முழுக்க ஒரே சீராக இருக்கிறதென்றும், நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அதைச் செயலற்றதாக்க முடியாதென்றும் பேசினார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய அம்பேட்கர், 1935 வரை வடமேற்கு எல்லை மாகாணத்தில் முஸ்லீம் தனிச்சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்துச் சட்டமே நடைமுறையில் இருந்தது என்றும், அங்கு மட்டுமல்ல, மத்திய மாகாணம், ஐக்கிய மாகாணம், மும்பை மாகாணம் ஆகிய மாகாணங்களிலும் வாரிசுரிமை விஷயத்தில் 1935வரை இந்துச் சட்டமே பின்பற்றப்பட்டதென்றும் ஷரியத் சட்டம் அல்ல என்றும் சுட்டிக் காட்டினார். வடக்கு மலபாரில் அமலில் உள்ள மருமக்கள்தாயம் என்ற சட்டம் இந்துக்கள் முஸ்லீம்கள் எல்லோருக்குமானது என்றும் அங்கு முஸ்லீம்கள் மருமக்கள்தாயத்தையே பின்பற்றி வருவதாக கருணாகர மேனன் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டினார். எனவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்ற கூற்று ஏற்கத்தக்கதல்ல என்றும் சொன்னார். அதை விட அவர் சொன்ன இன்னொரு கருத்து முக்கியமானது. “ ஒருவேளை, அவர்கள் மதம் எதுவாக இருப்பினும், எல்லாக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சிவில் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்திற்குத் தேவைப்படுமெனில், இந்துச் சட்டத்தின் சில பகுதிகள் அதில் சேர்க்கப்படும். அதற்குக் காரணம் அவை இந்துச் சட்டம் என்பதால் அல்ல, அவை மிகப் பொருத்தமானவை என்பதால்” என்றார் அம்பேட்கர்.

இது 1948 நவம்பர் 23ஆம் தேதி.

ஆனால் அதே அம்பேட்கர், அதே அவையில், பத்து நாட்களுக்குப் பிறகு. அதாவது 1948ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, பேசுகிற போது,”முஸ்லீம் சமூகம் கிளர்ந்தெழும் வகையில் எந்த ஓர் அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது. அப்படிச் செய்தால் அது ஓர் பைத்தியக்கார அரசாங்கமாகத்தான் இருக்கும்.” என்றார்.

ஹிந்துச் சட்டமுன்படிவு நிறைவேற்றப்பட்டால் அதற்கு நான் ஒப்புதல் அளிக்க மாட்டேன்,என்று சொன்ன ராஜேந்திர பிரசாத், 1956-57ல், அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை நான்காகப் பிரித்து நான்கு சட்டங்களாக நாடாளுமன்றம் இயற்றிய போது அதற்கு ஒப்புதல் அளித்தார்

**

ண்மையில் போபாலில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோதி எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சீரான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசியிருப்பதால் இப்போது அது குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. அந்த விவாதத்தில் முன்பு, இந்து சட்ட முன்வடிவு விவாதத்தில் கேட்ட அதே வாதங்கள் மீண்டும் ஒலிப்பதைக் கேட்ட போது ஞாபகத்தில் எழுந்த வரலாற்றை மேலே நினைவு கூர்ந்திருக்கிறேன். அதே வாதங்கள், அதே குரல்கள், ஆனால் பாத்திரங்கள்தான் வேறு. ஹிந்து சட்ட முன்வடிவு விவாதத்தில், மதம் மனிதர்களுடைய தனிப்பட்ட விஷயம், அதில் அரசு தலையிடக் கூடாது, பல நூறாண்டு காலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்களை மாற்றக் கூடாது, இது சட்டமாக இயற்றப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்ற வாதங்கள் இந்து அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டன. அதே வாதங்கள் இப்போது முஸ்லீம் அமைப்புகளால் வைக்கப்படுகின்றன.

வாதங்கள் எதுவாக இருப்பினும் ஒரேசீரான சிவில் சட்டம் நிறைவேற்றப்படுமானால் அது வரவேற்கத் தக்கது. ராஜேந்திர பிரசாத் சொன்னதைப் போல இது மக்கள் முன்னால் தேர்தல் அறிக்கையில் வைத்து அவர்களது ஆணை பெறப்பட்டுள்ளது.பாஜக 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தனது தேர்தல் அறிக்கையில் இதை முன்வைத்துள்ளது. எனவே அது இதை நிறைவேற்றக் கடமைப்பட்டது.

இதன் பின்னுள்ள அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இது பாலின சமத்துவத்திற்கு வழிகோலும் என்ற ஒரு காரணமே இதை வரவேற்க எனக்குப் போதுமானது.

அனேகமாக மதங்கள் எல்லாமும் பெண்களை உயர்வாகப் பேசுகின்றன, ஆனால்  குழந்தை மணம், சதி, பலதார மணம், விதவைகளை அலங்கோலப்படுத்தல், வரதடசிணை, பாரம்பரியச் சொத்தில் பெண்களுக்கு உரிமை மறுப்பு,, முத்தலாக், மணவிலக்கு மறுப்பு, பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்று பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் யாவும் மதங்களின் பெயரால் நடத்தப்பட்டன என்பதும் வரலாறு.  

இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன. என்னுடைய தில்லி நண்பர் சொன்னது இது:

பர்வீனுக்கு இரண்டு சகோதரிகள். உடன் பிறந்த சகோதரர் யாரும் இல்லை. அவரது பெற்றோர் பெற்றெடுத்தது மூன்று மகள்களை மட்டுமே. உயில் ஏதும் எழுதி வைக்காமல், அவரது தந்தை இறந்து போனார்.பணத் தேவைகளுக்காகப் பர்வீன் தனது பூர்வீக வீட்டை விற்க ஆனால்  முடியவில்லை. காரணம், அவர் அந்தப் பூர்வீக வீட்டை, அவர் ஆண் வாரிசு இல்லாததால்,  அவரது தந்தையின் சகோதரர்களின் சம்மதம் இல்லாமல் விற்கமுடியாது எனச் இஸ்லாமியச்  சட்டம் கூறுகிறதாம். “அவர் ஆணாகவோ அல்லது வேறு மதத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு இந்தப் பிரசினை இருந்திருக்காதல்லவா? அவர் எந்த மதத்தில் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை அவரா தீர்மானித்தார்?” என்று நண்பர் கேட்டார். என்னிடம் பதில் இல்லை.

இன்னொரு சம்பவம்: ‘வீட்டை விட்டு வெளியே போ, உனக்கு சொத்தெல்லாம் தரமுடியாது’ எனச் சகோதரர் சொன்னபோது, மேரிக்குத் திகைப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனால் கணவனை இழந்திருந்த அவர் தனது மகள் அருந்ததி, மகன் லலித் ஆகியோருடன் ஊட்டியிலிருந்த அவரது பூர்விக வீட்டிலிருந்து வெளியேறினார். அப்போது அவர் ஒரு சட்டப் புரடசிக்கு வித்திடப் போகிறோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்.

கோட்டயத்தில் உள்ள தங்கள் குடும்பத்தின் பூர்வீகச் சொத்தில் தனக்குப் பங்குதர வேண்டும் என அவர் கோரினார். சட்டப்படி கொடுக்க வேண்டியது ஏதும் இல்லை என்றார் அவர் சகோதரர். அவர் சொன்னது சட்டப்படி சரிதான். 1911ஆம் ஆண்டு இயற்றப்பட்ட திருவாங்கூர் கிறிஸ்துவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் உயிலெழுதி வைக்காமல் இறந்து போனால், அவரது சொத்து முழுவதும் மகனுக்குரியது. பெண்களுக்கு சீதனம் கொடுத்து விட்டால் அவர்களுக்கு உரிமை கிடையாது. சீதனம் ரூ 5000க்கு மேல் இருக்கக் கூடாது

இந்தச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் மேரி.1986ஆம் ஆண்டு நீதிபதி பகவதி தலைமையிலான அமர்வு திருவாங்கூர் கிறிஸ்துவ வாரிசுரிமைச் சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.அப்போதும் கூட ஆணும் பெண்ணும் சமம் என அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு சொல்கிறதே, அந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியாவுடன் இணைந்த பின்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற தொழில்நுட்பக் காரணத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு அது அளிக்கப்பட்ட முந்தைய காலங்களுக்கும் பொருந்தும் எனச் சொல்லிற்று. அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. உச்ச நீதி மன்றத் தீர்ப்பில் இருந்த இந்த அம்சத்தைச் செயலற்றுப் போகும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பி.ஜே. குரியன் ஒரு மசோதா கொண்டு வந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. பின்னர் இதே விஷயத்தை முன்னிறுத்தி கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை. அதை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அங்கு அது தள்ளுபடியானது.

இந்த மேரி ராய்தான் அருந்ததிராயின் தாய். அவரது சட்டப் போராட்டத்தின் காரணமாக கேரள கிறிஸ்துவப் பெண்களுக்கு இருந்த ஒரு தடை தகர்ந்தது.

சாதிகளின் அடிப்படையில் பாரபட்சம் கூடாது என்பதில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ அதே நியாயம், மதங்களின் அடிப்படையிலும், பாலினங்களின் அடிப்படையிலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதிலும் உண்டு. எல்லாம் சரி, ஆனால் சீரான பொது சிவில் சட்டம் வந்துவிட்டால் மட்டும், மறுநாளே பாலின சமத்துவம் ஏற்பட்டுவிடுமா எனக் கேட்டால், சட்டம் மட்டும் சமூகத்தைத் திருத்திவிட முடியாது என்பதுதான் பதில். ஆனால் சட்டம் நீதி கோர வழி வகுக்கும். அதுவுமில்லையேல் அந்த வாய்ப்புக் கூட இராது.     

19 Sep, 2023

The post கதவைத் திற, காற்று வரட்டும் appeared first on Maalan.

சங்ககாலம்: இலட்சிய கனவு சமூகவெளி

அண்மையில் எல்லி க்ரிஃப்ஃபின் (Ellie Griffin) எனும் அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய நியூஸ்லெட்டரில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்.  தற்காலச் சூழலில் அச்சுப்புத்தகங்கள் பதிப்பிப்பதன் சிக்கல்களைப் பற்றியதொரு நீண்ட கட்டுரை.  அதில் இருக்கும் பல சிக்கல்கள் நமக்குப் புதியனவை அல்ல.  புத்தக பதிப்பித்தல் என்பது ஒரு சில நிறுவனங்களின் தொழிலாக இருந்ததிலிருந்து, இன்றைய ஃபேஸ்புக் டிஜிட்டல் கண்டென்ட் காலம்வரை, வெற்றிப்பெற்ற புத்தகங்கள் என்பது மாயமானைத் துரத்துவது போன்றதொரு சவாலான செயல்தான்.  தற்காலத்தில், பெரும்பாலும் வம்புகளும், வல்லடிகளும், திரிபுவாதங்களும் நிறைந்த இணைய திரட்டில், அறிவுத்தளத்தில் நின்றோ, படைப்பூக்கம் மிகுந்த பித்துநிலை கொண்டோ, பக்கசார்புகளற்ற விவாதக் களங்களைக் கொண்டோ, காலத்தில் நின்று எதிர்செல்லும் வல்லமை கொன்ண்ட படைப்புகளை கண்டறிவது மிகவும் கடினமானது.  

மொழியைக் கையாள்வதற்கான திறன், எழுதுவதற்கான தளம், வாசகரிடம் கொண்டு சேர்வதற்கான நுட்பம், கருத்து பரிமாற்றங்களுக்கான வேகம் என்று பல சாதக அம்சங்கள் கொண்ட இக்காலத்தில் ஒரு படைப்பை உருவாக்குவது சுலபம்.  அது நிலைபெற்று நிற்பதில்தான் சவால்கள் அதிகம்.  

ஒரு 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு மொழியைக் கற்றுத்தேர்வதற்கே கடினமான சூழல் இருந்திருக்கின்றது. மொழித்திறன், கவித்துவம், இசைக்கலை, இலக்கியம் போன்ற தளங்கள் ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு முதன்மையானதாக இருந்ததில்லை.  ஓரளவிற்கு பதிப்பகத் தொழில் பரவலாக பயனிற்கு வந்ததே பொயு 13ம் நூற்றாண்டு எனலாம்.  அதற்கு முன்பாக படைப்பிலக்கியம் என்பது பெரும்பாலும் பக்தி சார்ந்த போற்றுதல்களுக்கும், அரசு சார்ந்த ஆவணங்களுக்குமாகத்தான் இருந்திருக்கிறது.  ஆனால் பொயு முதலாம் இரண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படும் சங்கத் தமிழ் இலக்கியத் திரட்டு என்பது அறம், பொருள், காதல், அரசு முறைமை, மக்கள் பயன்பாடு என்று பலவகையில் அன்றைய காலத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.  இது தமிழ்மொழிக்கான ஒரு பெருமைமிகு அடையாளம் என்பதை நாம் மறுக்கவியலாது.

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் மற்றும் கொடையைப் பற்றி விரித்து சொல்லப்படும் சித்திரங்கள் புறநானூற்றில் சிறு சிறு தொகுப்புகளாக நமக்குக் கிடைக்கின்றன.  இதில் புலவர் பெருஞ்சித்திரனார் என்பவர், பாடாண் திணையில், முதிர மலைநாட்டு தலைவன், குமணனைப் பற்றிப் பாடிய சில பாடல்கள் நமக்கு, வள்ளல்தன்மை சார்ந்த அரசு முறைமைப் பற்றி ஒரு பார்வையை அளிக்கின்றது.  



பரிசில் கடாநிலை:

இந்தப் பாடல்கள், 'பரிசில் கடாநிலை' துறையைச் சார்ந்தன என தமிழ்ச்சான்றோர்கள் வரையறுக்கின்றனர்.  காவுதல் என்றால் சுமத்தல்.  தூக்குதல். பெறுதல் எனலாம்.  'கா'வுதலிலிருந்து பிறந்த சொல்தான் காவடி.  அது போல, 'கடாவுதல்' என்றால் கோருதல். இரத்தல் என்று பொருள்.  புறம் 158வது பாடலில், தமிழ் சங்கத்திரட்டில் குறிப்பிடப்படும் கடையெழு வள்ளல்களைப் பற்றி ஒரு முழுமையான குறிப்பை அளிக்கின்றார்.  பறம்பு மலையின் கோமான் பாரி.  கொல்லி மலை கோமான் வல்வில் ஓரி,  மலையமான் திருமுடிக் காரி,  தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி என்னும் எழினி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி, முதலான வள்ளல்கள் மாய்ந்து போன பின்னர், தன்னைப் போன்ற புலவர்கள் தேடி வருவது முதிரமலை அரசனைத்தான் எனப் பாடுகிறார்.

அன்றைய முதிரமலை இன்றைய பழனியைச் சார்ந்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.  பலா மரங்கள் செறிந்த அந்த மலையில், முள் தோல் போர்த்திய அந்தப் பழங்களை அகழ்ந்து, அதன் இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன்கள் (ஆண் குரங்கு),  அதைத் தன் துணைக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்கிறார்.  ஒரு வள்ளலைப் போற்றிப் பாடத் தொடங்கும்போது, அங்கிருந்த நிலத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகங்களை உருவகமாக ஏற்றிச் சொல்வது குறிப்பிடத்தக்கது.  

முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
(புறநானூறு - 158)

கொள்ளேன்! கொள்வேன்!

அடுத்தடுத்து பாடல்களில் தன்னுடைய வறுமைநிலையை பலவாறாக எடுத்து வைக்கிறார் பெருஞ்சித்திரனார்.  வறிய தோற்றத்தில் இருக்கும் அன்னை, பிள்ளைகளுக்கு பாலூட்ட இயலாது வாடிய நிலையில் மனைவி என்று குறிப்பிடுபவர், அரசனிடம் இருந்து தான் பரிசு பெறுவதற்கென ஒரு கடப்பாடும் முன்வைக்கிறார்.

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
(புறநானூறு - 159)

உயர்ந்திருக்கும் தந்தங்களைக் கொண்ட,  (கொல்லும்) வலிமையுடைய யானையைப் பெற்றாலும், நீ பாராமுகமாக அளிப்பாயானால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  மனம் உவந்து சிறிய (குன்றி) அளவில் பரிசு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்கிறார்.  

இந்தப் பாடலின் பொருளுக்கு ஒரு பின்னணி கதையும் இருக்கிறது.  குமணன் போன்ற மற்றொரு அரசன் வெளிமான் என்பான், பெருஞ்சித்திரனாரிடம் மனம் நோகும்படி நடந்து கொண்டு விட்டிருக்கிறான்.  பெரியதாக ஒன்றுமில்லை.  பெருஞ்சித்திரனார், வெளிமானிடம் பரிசில் வேண்டிச்  சென்ற போது, அவருக்கு சரியாக முகங் கொடுக்காமல், தன் இளவலை (தம்பி) விட்டு பரிசுளித்துவிட்டான்.  மோப்ப குழையும் அனிச்சம் மலர் போல, புலவர், வெளிமானின் புரத்தலை மறுத்து திரும்பிவிடுகிறார்.

இன்மை துரத்த, வள்ளமை வரவேற்க

புலவரின் வீட்டு நிலையோ வறுமையில் மிகவும் மோசமாக இருக்கின்றது.   அடுத்த பாடலில் அதை விரிவாக விவரிக்கின்றார்.
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழுஞ் சோறுங் கடைஇ யூழின்
உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு
மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும்
நொந்தனளாகி நுந்தையை யுள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
(புறநானூறு - 160)

அன்னையிடம் பெற பாலில்லை. அடுக்களை பாத்திரத்தில் கூழும் இல்லை.  பசியில் அழும் பிள்ளையை, 'புலி வந்து அடித்து விடும்' என மிரட்டியும், 'அம்புலி பார்' என்று வேடிக்கைக் காட்டியும் நொந்து போயிருக்கிறாள்.  எதற்கும் மசியாத அக்குழவியிடம், 'உன் தந்தையை எண்ணி, கோப முகம் காட்டுவாயே, பார்க்கலாம்" என்கிறாளாம், அவருடைய இல்லாள். 

அதற்கு மேல் வறுமை துரத்த, குமணனின் வள்ளமைப் பற்றிய புகழ் அவரை ஈர்க்க, காடு மேடு கடந்து, பலகாலம் பயணித்து முதிர மலைக்கு வருகிறார்.

வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
(புறநானூறு - 161)

தன் திறனும் வலிமை மிக்கது அல்லது குறைந்தது என்றாலும், தன் திறன் அளவை விட  குமணனது (வள்ளமைத்) திறனுக்கு ஏற்ற பரிசில், அவன் அளிக்க வேண்டும்.  பிற அரசர் நாண, பெரும் யானை மீது நீ அளித்த செல்வத்தைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்கிறார். 

படு மோசமான வறிய நிலையிலும், தன்னுடைய கல்வித்திறன் மீது ஐயம் கொண்ட நிலையிலும், அவருக்கு அரசனது வள்ளல்த்தன்மை மீதான நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது.

இரவலர் உண்மையும், ஈவோர் உண்மையும்

பரிசில் கோரி வள்ளலைப் புகழ்ந்து பாடி, பெரும் செல்வம் பெற்றபின்னும், பெருஞ்சித்திரனார் தனக்கு ஒரு முக்கிய கடமை இருப்பதாக அடுத்த பாடலில் கூறுகிறார்.  முன்பு தன்னிடம் பாராமுகமாக இருந்த அரசன் வெளிமான் நாட்டிற்கு சென்று, அங்கே குமணன் தனக்கு அளித்த யானையை நிறுத்தி, 'இரவலரும், புரவலரும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும்" என்கிரார்.   

இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையுங் காண் இனி இரவலர்க்
ஈவோர் உண்மையுங் காண் இனி நின்னூர்

கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
கடுமான் தோன்றல், செல்வம் யானே
(புறநானூறு - 162)

தன்னுடைய வறுமைநிலையைப் போக்கக் கோரி, வள்ளலிடம் சென்று பாடல் பாடி இரப்போராக இருந்தாலும் அதற்கென கண்ணியமான கடப்பாடுகள் கொண்டிருப்பதையும், அந்த வள்ளல்களின் பெருமையைப் பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையையும் அக்கால புலவர்கள் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.  

 வல்லாங்கு வாழ்தும் என்னாது எல்லோர்க்கும் கொடுமதி

இந்த வள்ளல்கள்-புலவர்கள் பிணைப்பின் முக்கிய கண்ணியாக அடுத்த பாடல் காணப்படுகிறது.  தான் பெற்ற பரிசில் அத்தனையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை உதறி, அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை நயமாக உரைக்கின்றார்.  

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,

கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.
(புறநானூறு - 163)

தன் மனைவியை நோக்கி, "நீ விரும்புபவர்க்கும், உன்னை விரும்புபவர்க்கும், வறுமையில் உதவி புரிந்தோர்க்கும், இன்னின்னார் என்றில்லாமல், என்னையும் கூட ஆலோசிக்க வேண்டியல்லாது, அரசன் குமணன் அளித்த இந்த செல்வங்களை, அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்கிறார். 

இந்தப் பாடல் தொகுப்புகளில், பண்டையக்கால தமிழ் அரசர்களின் கொடைத்திறன் பற்றி மட்டுமல்லாது, அந்த வள்ளல்தன்மை எவ்வாறு ஒரு நாட்டின் அரசு முறைமையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் காண முடிகிறது.  மக்களிடம் இருந்து வரிபெற்று ஆட்சி நடத்தும் வழக்கத்திற்கு, ஈடாக, அரசுக் கருவூலத்திலிருந்து கற்றோர் வழியே அதே மக்களுக்கு அந்தச் செல்வம் சென்று சேரும் ஒரு சுழற்சி பொருளாதாரத்தை, அதன் பயனாக வேந்தர்கள் மக்கள்பால் கனிவான அரசை செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை, மற்றும் கற்றறிந்த சான்றோர் தங்கள் நிலை தாழாது கண்ணியத்துடன் நடத்தப்படுவதை முதன்மை நோக்காக கொண்டிருந்தார்கள் என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

புலவர் பெருஞ்சித்திரனாரின் பாடல் தொகுப்பிற்கு அடுத்து, பெருந்தலை சாத்தனார் என்பவரின் பாடல்களிலும் குமணனது வள்ளத்தன்மை போற்றப்பட்டிருக்கின்றது.  

தன்னுடைய அரசு பறிபோன நிலையிலும், தன் தலையைக் கொடுத்தாவது தன்னை நம்பி வந்தவர்களின் துயர்தீர்க்கும் பண்பு கொண்டிருந்தான் என்பது அந்தப் பாடல்களில் பாடப்பட்டிருக்கும் அரிய பண்பு.  இந்தப் பாடலை ஒட்டி இக்கால தமிழறிஞர் சிலர் குமணனின் வள்ளல் மான்பை நாடக இலக்கியமாக எழுதியிருக்கின்றனர்.

சங்கப்பாடல் திரட்டு என்பது இது போன்ற பண்டைக்கால வாழ்வியல் சித்திரங்களை நாம் ஒன்றுகூட்டி அமைத்துக் கொள்ளும் சிறப்பு கொண்டிருக்கிறது.  அதிலிருந்து ஒரு துளியை நாம் சுவைத்துப் பார்க்க, ஓர் உடோபிய சமூகத்தின் பெருவெளியாக அது நம்மிடையே விரிந்து பரவுகிறது.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

வைகறை வாசகன் பதிவுகள் – கனிவான கலங்கரை விளக்கம்

டாக்டர் சங்கர சரவணன் குறித்து எழுதுகையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை. எனக்கும், பல நூறு மாணவர்களுக்கும் வாழ்வளித்த ஆசிரியர் அவர். நான் எட்டாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது, சுட்டிவிகடனுடன் தரப்பட்ட இணைப்பிதழில் பல்வேறு பல்சுவை, பொது அறிவுக்குறிப்புகள் வரிசை கட்டிநின்றன. அவை எனக்கிருந்த மிகக்குறைந்த வாசிப்பிற்கு அப்பாற்பட்டதாகத் தெரிந்தது. 90% செய்திகளை முதன்முறையாக அப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்கிற அளவுக்கு நிலைமை. ஆசிரியரான என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாள் கோடை விடுமுறையில் என்னை ஓயாமல் அந்த ‘கையளவு களஞ்சியத்தை’ படிக்க வைத்தார். மீண்டும், மீண்டும் கேள்விகள் கேட்டு பயிற்றுவித்தார். இத்தனை வதைகளுக்கும் விதை போட்ட அந்த நூலின் ஆசிரியரை தேடினேன், ‘டாக்டர் சங்கர சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  முதலில் கடுமையான கோபம் இருந்தாலும், அந்நூல் என்னைப் புடம் போட்டது. அறிவுத்தாகத்தை வளர்த்தெடுத்தது. சுட்டி விகடனின் ‘சுட்டி குவிஸ் விஸ்’ போட்டிகளில் இருமுறை அரையிறுதி போகும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. வேறெந்த தயாரிப்பும் இல்லாமல், ஒரே ஒரு கையளவு களஞ்சியத்தைக் கொண்டு வாள் சுழற்றி தோற்றுத் திரும்பினோம். 

காலங்கள் உருண்டோடின. குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவனாக முதல் முறை மோசமான முறையில் தோற்றுப்போய் இருந்தேன். துவண்டு போய், திக்கற்று அமர்ந்திருந்த காலம். என்னுடைய ஏதோவொரு கட்டுரையை படித்துவிட்டு டாக்டர் சங்கர சரவணன் சார் என்னோடு பேச விரும்புவதாக சொன்னார்கள். தமிழிலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்த எனக்கு உற்ற ஆசிரியராக அவரே இருப்பார் என்று அதிகாரிகள் வழி சொன்னார்கள். அவரின் உதவி நாடி சென்றேன். என்னைப்பற்றி ஓரளவிற்கு கேட்டுத் தெரிந்து கொண்டார். வினாடி வினா வல்லுநரான இவர் நம்மை கேள்விகளால் துளைக்கப்போகிறார் என்று அஞ்சினேன். அதற்கு மாறாக, அப்படியே அரவணைத்துக் கொண்டார்.

ராணிப்பேட்டையில் ஆராய்ச்சி அலுவலராக இருந்த அவர், காலையில் எனக்கு மட்டும் தனியாக தமிழ் இலக்கிய வகுப்புகள் எடுப்பார். பின்தங்கியிருந்த என்னை கைதூக்கி விடுவதற்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளும் 6:30 மணிக்கு காலையில் வகுப்பெடுப்பார். சில மாதங்கள் இப்படியே சென்றது. பின்னர் அவருடைய பொதுவான தமிழ் வகுப்புகளில் என்னை மாணவனாக இணைத்துக்கொண்டார். ஒருநாள் கூட கட்டணம் என்று ஒரு ரூபாயை கூட அவர் கேட்டதில்லை. கைம்மாறு கருதாத கடப்பாடு என்பதன் உண்மைப்பொருளை அவரிடமே கண்டேன். 

உடல்நலம் குன்றி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில்லாமல் நேரடியாக கேட்டதையும், நினைவில் இருந்ததைக் கொண்டும் தேர்வை அணுகினேன். தமிழ் விருப்பப்பாடம் முதல் தாளினை இயன்றவரை எழுதி முடித்திருந்தேன். 50 மதிப்பெண்களுக்கான பதில்களை தரமுடியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிய வெவ்வேறு பதில்கள் தவறானவை என்பதை பிறரோடு நிகழ்த்திய உரையாடலில் புரிந்துகொண்ட போது  அழுதுகொண்டே தேர்வை எழுத வேண்டாமென தோன்றியது. சரியாக சார் அழைத்தார். என்னுடைய மனநிலையைப் புரிந்து கொண்டார். சற்றுகூட கடுமை காட்டாமல், நான் தவறாக எழுதிய பதில்களையும் சரியென நம்பவைத்து இறுதிக்கோட்டை தொட்டுவிட்டு வா என ஊக்கப்படுத்தினார். அவர் அன்றைக்கு பேசிய அந்த அரைமணி நேரம் என் வாழ்வின் திருப்புமுனை. இன்றைக்கு நான் ஆட்சிப்பணியில் இருப்பதற்கு முழு முதன்மையான காரணம் அவரன்றி வேறு யாருமில்லை. 

டாக்டர் சங்கர சரவணன் சாரோடு வெவ்வேறு காலங்களில், பணிகளில் அருகே இருந்து கற்றுக்கொள்ளும் பேறு கிடைத்திருக்கிறது. ‘பிரமிப்பு’ என்பது கூட போதுமான சொல் அன்று. விகடன் இயர் புக்கை எந்த பொருட்பலனும் எதிர்பாராமல் போட்டித்தேர்வு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்று ஒற்றை மனிதராக பல ஆண்டுகள் இயற்றி அளித்தார். உறக்கமின்றி, இற்றைப்படுத்தி மிக நேர்த்தியாக, மாணவர்களின் தேடலுக்கு தீனி போடும் வண்ணம் அப்படைப்புகள் இருக்கும். இளைஞர், மூத்தோர் பட்டாளம் உடன் இவரே தனி மனித இராணுவம் போல பல்வேறு புனைபெயர்களில் கட்டுரை வரைவார். போட்டித்தேர்வு சார்ந்து தேர்வு பாகுபாடு இன்றி  பல்வேறு தரப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார். உலகத்து செல்வமெல்லாம் தமிழிற்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் அவர் செய்து கொண்டிருக்கும் பணிகள் தமிழ் அறிவியக்க வரலாற்றில் தன்னேரில்லா பக்கங்கள். உருவான பல்வேறு நூல்களின் மொழியாக்கம், செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரின் பங்கு அளப்பரியது. தமிழ்மொழியின் பழமைக்கும், நவீனத்துக்கும் என்று இரண்டுக்கும் ஈடுகொடுத்து அவரளவிற்கு கற்றறிந்தவர்கள் இல்லை என்றே துணிந்து எழுதுவேன். கால்நடை மருத்துவராக இருப்பது தாஜ்மகாலின் முதல் கதவு போலத்தான். உள்ளே செல்ல செல்ல அவரின் ஆளுமை பரந்து, விரிந்து கொண்டே சென்று ஆச்சரியப்படுத்தும். 

டாக்டர் சங்கர சரவணன் சாரிடம் எனக்கும், பலருக்கும் நெருக்கத்தை தருவது அவரின் பாகுபாடுகளற்று பழகும் பண்பு. மேலும், நம்மை கனிவாக, நேர்மையாக ஆற்றுப்படுத்தும் ஆளுமை. உழைப்பிற்கும், வாசிப்பிற்கும், அறிவு ஊக்கம் மிக்க ஆக்கங்களுக்கு அஞ்சாத ஆள்வினை உடைமை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குறளின் மீது பெரும்பற்று கொண்ட வைகறை வாசகர். 

சாரின் இணையர் உஷா அம்மா என்னைப்போல் பலருக்கு இன்னொரு அம்மா. சாரின் பொருள் நாடா அறவாழ்விற்கு அருந்துணை. எனக்குத் தெரிந்து போட்டித்தேர்விற்குத் தயாராகும் மாணவருக்காக வீட்டின் மேல்பகுதியை ‘எவ்ளோ நாள் வேணும்னாலும் இருந்து படிக்கட்டும்’ எனச்சொல்கிற உஷா அம்மாவின் ஒப்புரவிற்கு இணையுண்டா? மாணவர்களுக்காக தன் நேரம் அனைத்தையும் தரும் டாக்டர் சங்கர சரவணன் சாரிற்கு அம்மாவை விட உற்ற துணை யாருமில்லை.

பல்வேறு பார்வைகளை ‘ஊரு சனம் தூங்கிருச்சு’ காலத்தில் வைகைறைப்பொழுதில் எழுதிய அவரின் ‘வைகறை வாசகன் பதிவுகள்’ 2k kids-ஐ மனதில் வைத்து எழுதப்பட்டது. ஒரே மூச்சில் படித்தல் ஒரு சுவை. எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம் என்கிற அளவிற்கு ஒவ்வொரு கட்டுரையும் சுருக்கமும், நெருக்கமும் மிக்கவை. போலியான பிம்பங்கள், முகமூடிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தது, தன்னை பீடித்தது என்று அனைத்தையும் அள்ளித்தருகிறார். 

தன்வரலாற்று பக்கங்களாக சில கட்டுரைகள் அமைகின்றன. அவற்றில் மென்மையான நகைச்சுவையும், சமயங்களில் அழவைக்கும் சோகமும் இழையோடுகிறது. வயது வந்தோருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வார்த்தையை குறுக்கெழுத்துக்காக தந்தையிடம் கேட்டறிந்ததை சொல்லும் கட்டுரை ஒரு சான்று. அதுவரை குலுங்க, குலுங்க சிரிக்கும் நம்மை ஒரே வரியில் சோகமயமாக மாற்றிவிட்டுப் போய்விடுகிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் மீது சத்தியம் செய்து சில செய்திகளை சொல்கிறார். கீர்த்தி சுரேஷின் அன்னை குறித்து தேடுகிறார். ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் வரும் ‘சின்ன c ஆ, பெரிய C ஆ’ ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு இந்நூலில் சார் நிகழ்த்தும் ‘C’ மாயத்தை நீங்கள் படித்துதான் பரவசமடைய முடியும். 

‘கலைச்சொல்லாக்கம்’ குறித்த  ஏழு கட்டுரைகள் தமிழால் முடியும் என்பதை ஆழமாகவும், தர்க்கப்பூர்வமாகவும், தெளிவோடும் எடுத்து வைக்கும் கட்டுரைகள். ‘Mutation’ என்பதற்கு இணையான கலைச்சொல்லை கண்டடைய கந்த சஷ்டி கவசம், தாவரவியல் நூல்கள், நீலாம்பிகை அம்மையாரின் வடசொற்றமிழ் அகரவரிசை விரைவு என வைகறை வாசகன் நிகழ்த்தும் தேடல் நெகிழவைக்கிறது. ஆலங்குடி வங்கனாரும், ஆண்டன்  செக்காவும் ஜெர்மனியில் ஜோதிகா, அதிதி ராவை சந்தித்த கதை இந்நூலில் நமக்காக காத்திருக்கிறது. 

இந்நூலில் தோல்வியில் துவண்டு, நைந்து போகிறவர்களை கரைசேர்க்கும் உண்மைக்கு நெருக்கமான சம்பவங்கள் அணிவகுக்கின்றன. இலக்கிய படைப்பாளிகள் குறித்து வெவ்வேறு சிந்தனைச் சிதறல்களை அள்ளி வழங்கும் ஆசிரியரிடம் குறுங்குழு மனப்பான்மையோ, தூய்மைவாத கண்ணாடியோ இல்லாமல் இருப்பது நிறைவளிக்கிறது. 

அம்மா குறித்த பதிவுகள் ஆன்மாவில் இருந்து எழுதப்பட்டவை. மகளிர் உரிமைத்தொகை ஆனது உரியவருக்கு சென்று சேர வேண்டும், தகுதியில்லாதவர்கள் பயன்பெற்றுவிடக்கூடாது, விடுபட்டுப்போனவர்களின் குறைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்று சங்கர சரவணன் சாரின் அம்மா காட்டும் அக்கறை அம்மாக்களுக்கே உரியது. சமயங்களில் இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ என்று ஏங்க வைக்கும் வண்ணம் சில பதிவுகள் நின்றுவிடுகின்றன.

திருக்குறள் குறித்து நூலில் வழங்கிவருபவை கண்மூடித்தனமான வழிபாட்டுப் பரணிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, மாறிவரும் அறிவுக்கு அழுத்தம் தராமல், மாறாத மெய்யறிவுக்கு அதிக அழுத்தம் தந்து இலக்கியல், இயங்கியல் ஆகிய இரண்டையும் முதன்மைப்படுத்தி எழுதியதால் தான் குறள் காலம், இடம் ஆகிய பரிமாணங்களைக் கடந்து வாழும் வள்ளுவமாக இருக்கிறது என்கிற வா.செ. குழந்தைசாமியை கருத்தை நினைவுக்கூர்வது ஒரு சான்று. திருக்குறளில் நேர்நிலை இயல், இருத்தல் இயல், பின்நவீனத்துவம், பெண் விடுதலை, மரண தண்டனை, நிர்வாகத்தில் ரகசிய காப்பு ஆகியவை பல்சுவைக்கதம்பம் மட்டுமல்ல, பன்முகப்பார்வையும், புதுமை நோக்கும் கொண்டவை. 


இந்நூலின் ஆகப்பெரிய வெற்றி என்பது, “எனக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது பார்!” என்கிற பெருமிதப் பூச்சு எங்கும் இல்லவே இல்லை. ‘அன்புத்தோழமையே! உன்னோடு பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுவைகூட்டி பரிமாற சங்கதிகள் உண்டு. மனதோடு உரையாட நூல்கள் சில கண்டேன். பிடித்திருந்தால் சேர்ந்து தேடுவோம். கண்டடைவதை எனக்கும் தெரிவிக்கவும். அறிவுக்கடல் எங்கும் அன்போடு மூழ்கி முத்தெடுப்போம்’ என்கிற நெருக்கமும், பிணக்கமும், அறிவினை விரிவு செய்யும் பொதுமை நோக்கும் மிளிர்கிறது. வைகறை வாசகனின் பதிவுகள் விடியல்களை நமக்களிக்கும் அறிவுப் பெருவிருந்து. 

வைகறை வாசகன் பதிவுகள் 

விகடன் பிரசுரம் 

முதல் பதிப்பு 

பக்கங்கள் : 352

விலை : 375 ரூபாய்  

மீன் தொட்டி

13 June 2024 at 15:49
தான் யாருக்கும் இரையாகிவிடுவோமோ அல்லது தனக்கு உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமே இல்லாத மீன்தொட்டியில் வாழும் மீனுக்கு என்னதான் கவலை வந்துவிடப் போகிறது?

அழையா காதல்

2 March 2024 at 17:14
காதலுக்கு விதிகள் கிடையாது. அது யாருடைய விதியையும் மாற்றக்கூடும். இருவரின் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப்போட்ட ஒரு காதலைப் பற்றிய சிறுகதை இது.

அகக்கண்ணாடி

8 October 2022 at 15:16
கல்லூரியில் படிக்கும் இரு நண்பர்களின் வாதமே கதையாகிறது. ஒருவனுடைய புது தயாரிப்பு அவனுக்கே நிறைய பாடம் கற்றுக்கொடுக்கிறது.

முடிவிலி

30 August 2021 at 05:20
வாழ்க்கையின் முடிவை நோக்கி இருக்கும் இருவர் எதிர்பாராமல் பேசிக்கொள்ளும் ஓர் உரையாடல் தான் இந்தக் கதை.

அரிசியின் கதை

14 January 2019 at 17:20
உணவை வீணடிக்கக்கூடாது என்பதற்காக சிறுவர்களுக்கு சொல்ல வேண்டிய கதை. சில நேரங்களில் அகவையில் வளர்ந்தாலும் சிலருக்கு இந்தக் கதை தேவைப்படலாம்!

செல்லினம் செயலி பதிப்பு 5.5

29 March 2025 at 13:30
SELLINAM

செல்லினம் செயலியில் தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கும் பயனர்களின், வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த புதிய பதிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

SELLINAM

அஞ்சல் மொபைல் என்ற பெயரோடு அறிமுகமாகி பின்னர் செல்லினம் என்ற புதிய பரிமாணத்தைப் பெற்று, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து வருகிறது செல்லினம். தமிழில் தட்டச்சு செய்வது கடினமாக இருந்த காலத்திலேயே செல்பேசிகளில் பயனர்கள் தமிழில் தட்டெழுதும் அனுபவத்தை எளிமைப்படுத்தியது செல்லினம். அதன் பிறகும் தொடர்ந்து ஐஓஎஸ், ஆண்டிராய்டு என எல்லா இயங்குதளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு தமிழில் தட்டெழுத உதவுகிறது..

தமிழ் தட்டெழுத்துடன் நின்றுவிடாமல், உலக அரங்கில் தொழில்நுட்ப உலகில் நடக்கும் செய்திகளை பயனர்களுக்குத் தருவதையும் நோக்கமாகக் கொண்டது செல்லினம். பொதுவாகத் தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கென தனியாக தளங்களைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றுதான். அதனைக் கருத்தில் கொண்டும், பயனர்கள் பிற தொழில்நுட்பங்களை எளிதில் பயன்படுத்த உதவும் வகையிலும் செல்லினம் செயலியில் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதற்குப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொரு கருத்துகளும் செல்லினம் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்நிலையில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாகவும், அதனால் வாசிக்கச் சிரமமாக இருப்பதாகவும் பயனர்கள் தங்கள் சிக்கலைப் பகிர்ந்துள்ளனர். அதனைச் சரி செய்வதற்காக, முதற்கட்டமாக ஐபோன் மற்றும் ஐபேடில் செல்லினம் 5.5 என்ற புதிய பதிப்பைக் கொண்டுவந்துள்ளோம்.

இனிமேல் நீங்கள் கட்டுரைகளை உற்றுநோக்கி வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிளின் பிஞ்ச் சைகையைப் பயன்படுத்தி பயனர்கள் உரை அளவை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ மாற்றிக்கொள்ளும் அம்சம் புதிய பதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களின் அளவைப் பெரிதாக்கிப் பார்ப்பதைப் போலவே கட்டுரைகளையும் பார்க்கலாம். நீங்கள் ஒரு முறை விரும்பிப் பயன்படுத்திய அளவை நினைவில் வைத்து, அதே அளவில் அடுத்தடுத்த கட்டுரைகளைக் காண்பிக்கும். சிறந்த வாசிப்பு அனுபவத்திற்காக முகப்புப் பக்கத்தில் காட்டப்பட்டுள்ள தலைப்புகளின் அளவையும் அதிகரித்துள்ளோம்.

செல்லினம் செயலியின் பயனர்கள், தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தமிழில் படிப்பது குறித்து நேர்மறையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். இக்கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றிய உள்ளடக்கங்களை தரத்துடன் வழங்குவதென உறுதிபூண்டுள்ளோம். குறிப்பாக நம் அன்றாட வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் செய்திகளை உடனுக்குடன் தர முயல்கிறோம்.

தற்போது சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய அம்சம் அனைவருக்கும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என நம்புகிறோம்.

The post செல்லினம் செயலி பதிப்பு 5.5 appeared first on செல்லினம்.

அர்வி – அரபுத் தமிழ்

16 March 2025 at 13:30
Arwi

எழுத்துருக் கலைஞர் தாரிக் அஸீஸ் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் அரபுத் தமிழ் பற்றிப் பதிவிட்டிருந்தார். செல்லினம் பயனர்களுக்காக அத்தகவலை இங்கே பதிவிடுகிறோம்.

தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளுடன் அரபு நாடுகளுக்கு இருந்த வணிகத் தொடர்பு பற்றி நாம் அறிவோம். தமிழ் மொழியுடன் அரபு மொழியும் இணைந்து உருவான அர்வி மொழி பற்றி நம்மில் சிலருக்கே தெரிந்திருக்கும். இன்றைய தலைமுறையினர் ஆங்கில எழுத்துகளைக் கொண்டு தமிழை எழுதும் தங்கிலிஷ் வழக்கு அதிகரிக்கிறது. அதைப்போல அக்காலத்தில் அரபு எழுத்துகளைக் கொண்டு தமிழை எழுதுவார்கள். அதுவே அர்வி எனப்படுகிறது.

Arwi

எழுத்துகள் அரபு மொழியாக இருந்தாலும் உச்சரிப்பது தமிழ் சொற்களைத்தாம். இப்படி அரபு வரிவடிவத்தைப் பயன்படுத்தி மலாய் மொழியை எழுதுவதை ஜாவி என்று அழைப்பார்கள். அதைப் போலவே Arwi – அர்வி – அரபுத் தமிழ்.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், இலங்கையிலும் பயன்பாட்டில் இருந்தது இவ்வரிவடிவம். பிபிசி செய்தியொன்று, ஆங்கிலேயர்களிடமிருந்து தங்கள் வணிக ரகசியத்தைக் காப்பாற்றக் கூட இந்த மொழி பயன்பட்டதாகச் சொல்கிறது. தற்காலத்தில் இது மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. தமிழ்நாட்டின் காயல்பட்டினம் பகுதியில் இன்றும் அர்வி மொழியில் எழுதும் வழக்கம் இருக்கிறது. காவியங்கள் சிலவும் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தாரிக் அஸீஸ், மவ்லித், தப்சிர், கிதாப் பிரார்த்தனை நூல்களில் அர்வி பயன்படுகிறது என்கிறார். எழுத்துருக் கலைஞரான இவருடைய ஆக்கங்கள் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பெருநிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.

காயல்பட்டினத்தில் உருவாகி கொழும்பு வரைக்கும் பரவி இருந்தது அர்வி. பதினோராம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இம்மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு கீழக்கரையில் உள்ளது. 28 அரபு மொழி எழுத்துகளை அப்படியே எடுத்துக் கொண்டதோடு, 12 எழுத்துகளை தமிழ் ஒலிக்கு ஏற்றவாறு மாற்றிப் புதிதாக உருவாக்கியுள்ளனர். 18 அரபு எழுத்துகளுக்கு இணையான தமிழ் எழுத்து கிடையாது. போலவே தனித்துவமான 12 தமிழ் உச்சரிப்பு ஒலிகளுக்கு ஏற்ற எழுத்துகள் அரபு மொழியில் கிடையாது. எனவே அரபு எழுத்துகளில் சில புள்ளிகளையும் குறியீடுகளையும் இணைத்து புதிய 12 எழுத்துகளை உருவாக்கியுள்ளனர். எழுதும்போது வலமிருந்து இடமாகவே எழுதப்படுகிறது. இத்தகவல்களைத் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவாக இட்டுள்ளார் தாரிக் அஸீஸ்.

அர்வி தற்போது யூனிகோட் எழுத்துருவாகவும் உள்ளது. பயன்படுத்துவோர் அதிகமானால் அழியாமல் காக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

The post அர்வி – அரபுத் தமிழ் appeared first on செல்லினம்.

நினைவுகள் கரைந்திடும் மாயம்

 

மரத்தில் பூத்த கதிர் மலர்
காமபாணம் கொண்டது
நிலத்தில் பூத்த கவி மலர்
காதல்நாணம் கொண்டது
குளத்தில் பூத்த பதுமமோ
இதழ்விரியச் சிரித்தது மின்
தளத்தில் பூத்த பதிவிலோ
தமிழும் பொழியச் சிவந்தது

இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
விழித்ததும் மறைந்து போகும்
உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
முதிர்வினில் மறந்து போகும்
பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
பிணியினில் மறத்து போகும்
பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
இறப்பில் எரிந்து போகும்

பயணம் முடிந்த தருண மெல்லாம்
சீட்டை கிழித்திடும் நாளும்
அயனம் மாறிடும் உதய மெல்லாம்
ஏட்டைப் புரட்டிடும் மேலும்
சயனம் நிரந்தர மாகிடுமேனி
சடலம் என்றவர் காணும்
நயனம் பெருகிடும் நீராற்றில்
நினைவுகள் கரைந்திடும் மாயம்

 

 

குடியரசு பாரதம் 26 01 2025

குடியரசு பாரதம் 26 01 2025
சத்தியமணி

வந்தே மாதரம்
வாழிய பாரதம்
தங்கும் பொன்னே
தாய் மண்ணே !!
எங்கே அறமும்
அங்கே திறமும்
இங்கே பிறந்தோம்
தரம் விண்ணே !! ()

வண்ணம் காட்டும் மயிலைப் போல்
பண்பாடை காட்டும் பாரதம்
கண்ணம் காட்டும் மகளைப் போல்
தர்மம் காட்டும் பாரதம்
அண்ணம் காட்டும் நளினம் போல்
தூய்மைக் காட்டும் பாரதம்
இன்னும் காட்டும் தெய்வீகம் போல் கும்பம் காட்டும் பாரதம் ()

விண்ணில் ஏவும் கணைகள் மூலம்
வீரம் காட்டும் பாரதம்
எண்ணில் அடங்கா எழிலால் நாளும்
தீரம் காட்டும் பாரதம்
கண்ணில் தோன்றும் கருணை ஊற்றை
வாழ்வில் ஊட்டும் பாரதம்
மண்ணில் வளரும் தேசம் யாவும்
வாழ்த்தும் உயர்வில் பாரதம்.

❌